Friday, November 6, 2009

பிடித்ததும், பீடித்ததும் -எனது பார்வையில்

பிடித்தவர்கள், பிடிக்காதவர்களை பற்றிய தொடர் பதிவுக்கு அன்பின் நண்பர் ஜீவன் என்கிற தமிழ் அமுதன் அழைத்திருந்தார். இது ஒரு போட்டு வாங்கும் செயலாகவோ அல்லது மல்டி லெவெல் மார்க்கெட்டிங் என்றோ எடுத்துக்கொள்ளாமல், நம்மையும் மதித்து அழைப்பு அனுப்பியவருக்கு பெருமை சேர்க்கும் விதத்தில் எனது பதிவில் பிடித்தவர்களையும்,பீடித்தவர்களையும்(பிடிக்காதவர்களையும்) எனது பார்வையில் தர முயன்றிருக்கிறேன்.

எனக்கு யாரையும் நூறு விழுக்காடு பிடிப்பதில்லை நூறு விழுக்காடு பிடிக்காமலும் இருப்பதில்லை. அப்படி நூறு விழுக்காடு இவரை எனக்குப் பிடிக்கும் என்று சொல்கிறவர்களை, இவர்கள் ஒப்பனையாகத்தான் சொல்கிறார்கள் என்று சொல்ல முடியும்.


தலைவர்

எனக்கு பிடித்த தலைவர்கள் இருவரின் மறைவும் இன்னும் உறுதிப்படுத்தப் படவில்லை.
மற்றவர்களைப் பார்ப்போம்.

பிடித்ததும், பிடிக்காததும்

மன்மோகன் சிங் :

பிடித்தது: இந்தியாவில் புதிய பொருளாதாரக் கொள்கையை அறிமுகப்படுத்தி செயல்பட்டவர்.

பிடிக்காதது: அணு ஒப்பந்தத்தை நிறைவேற்றுகிறேன் என்று இந்தியாவை ஒட்டுமொத்தமாக அமெரிக்காவிடம் அடகு வைத்தது. நல்லது கெட்டது எதுவாக இருந்தாலும் சோனியா சொன்னால் தலையாட்டுவது. பேசாம சோள கொல்லையில நின்னா காக்கா, குருவி, நரி எதும் வராது. இரை(றை)யாண்மை மேம்படும். இலங்கை இனப்படுகொலைக்கு பொய் சொல்லிக்கொண்டே ஆயுதம் உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் செய்து அந்த கோர நிகழ்வுகளுக்குக் காரணகர்த்தாவாக இருந்தது.

கருணாநிதி :

பிடித்தது: வசனங்களில் தனது தமிழ் வல்லமையைத் தமிழ் உலகுக்குக் காட்டி தமிழ் மக்களின் இதயத்தில், அண்ணாவின் இரவல் இதயத்துடன் குடிபுகுந்தவர், கட்டுடைக்க முடியாதத் தொண்டர்களைக் கொண்ட கவிஞர்.

பிடிக்காதது: ”அடைந்தால் திராவிட நாடு இல்லையேல் சுடுகாடு” அன்றைய முழக்கம், இன்று ”வடக்கு வழங்குகிறது தெற்கு தேறுகிறது”. கழகம் எனது குடும்பம் என்று சொல்லிச் சொல்லியே தனது குடும்பத்தை கழகமாக்கியது. பெரியார்,அண்ணா என்றால் என்னா என்று கேட்கும் அளவில் அவர்களது கொள்கைகளை மதிப்பது. இனமானக் காவலர் என்று சொல்லிக்கொண்டே ஒர் இனம் அழிக்கப்படும்போது, அதற்கு மத்திய அரசு செய்த எல்லா உதவிகளுக்கும் உறுதுணையாக இருந்தது. தனக்குச் சொந்தமான ஊடகங்களில் அது பற்றிய செய்திகள் வராமல் இருட்டடிப்பு செய்தது. ஒட்டுமொத்தமாக துடைத்தொழிக்கப்படும் வரை அனைவரையும் பொறுத்திருக்கச் சொன்னது. உண்ணாவிரத நாடகம், மருத்துவச்சாலை நாடகம், ஈழமக்களின் ரணம் ஆறாமல் இருக்கும் போது அம்மக்களையும் சேர்த்துகொண்டு உலகத் தமிழ் மாநாடு நடத்தி ஈழமக்களின் அவலத்தை இருட்டடிக்க முயல்வது. இப்போது செம்மொழி மாநாட்டுக்காக தமிழக அகதிகள் முகாம்களுக்கு தனது சகாக்களை அத்தி பூத்தார்போல் அனுப்பும் நாடகம். இன்னும் நிறைய சொல்ல முடியும்.


ஜெயலலிதா :

பிடித்தது: உறுதியான நிலைப்பாடு, காவிரி நீர் பிரச்சனையில் பிரதமர் நரசிமராவ் தலைமையில் நடந்த முதல்வர்கள் கூட்டத்திலிருந்து கருத்துக்கள் ஒவ்வாதபோது வெளி நடப்பு செய்தது, அதன் பலனாக உடனே காவிரியில் உடனடி நிவாரணமாக தண்ணீர் திறக்க ராவ் உத்தரவிட்டது. தமிழோ,ஆங்கிலமோ ஒரளவுக்குத் தூய்மையாகப் பேசுவது.

பிடிக்காதது: அடைந்தால் தமிழ் நாடு இல்லையேல் கொட நாடு என்கிற உப்பு சப்பில்லா நிலை. கழகம் எனது குடும்பம் என்று சொல்லிச் சொல்லியே கழகத்தை இன்னொரு குடும்பத்திடம் ஒப்படைத்தது. தடா,போடா என்ற சட்டங்களைப் பயன்படுத்தி தனக்கு பிடிக்காத தலைவர்களை சிறையில் தள்ளியது. மூத்த தலைவர்களை மண்டியிட வைத்து மாரியாத்தா ஆசி கொடுப்பது போல் நின்றுகொள்வது. தனி ஈழம் அமைக்கப் பாடுபடுவேன் என்று தேர்தல் நேரத்தில் சூளுரைத்துவிட்டு, தேர்தலுக்குப் பின் கொட நாடு பங்களாவில் குடிபுகுந்தது. ஈழமக்களைப் பற்றி தேர்தலுக்கு முன் ஒவ்வொரு கூட்டத்திலும் பேசிவிட்டு தேர்தல் முடிந்ததும் அது பற்றி வாய்திறக்காமல் இருப்பது. வளர்ப்பு மகனுக்கு ஆடம்பரமாகத் திருமணம் நடத்தி வைத்தது.

நடிகர்

பிடித்தவர் : கமலகாசன்,நாசர்,ரகுவரன்,பிரகாஷ்ராஜ்,கவுண்டமணி,விவேக்

பிடிக்காதவர் : பிரசாந்த்,ஜெயம் ரவி, சிம்பு,அஜித்


நடிகை

பிடித்தவர் : கே.ஆர்.விஜயா,ஸ்ரீதேவி,நயன்(9)தாரா,திரி(3)சா,தமன்னா(நடிப்பை மட்டும் சொல்லவில்லை)

பிடிக்காதவர் : சந்தியா,பிரியாமணி,மஞ்சுளா,ஸ்ரீபிரியா


பாடகர்

பிடித்தவர் : கே.ஜே.ஜேசுதாஸ்,ஹரிகரன்,டி.எம்.செளந்தர்ராஜன்,கார்த்திக்

பிடிக்காதவர் : அப்படி சொல்வதற்கு யாருமில்லை.


பாடகி

பிடித்தவர் : எஸ் .ஜானகி,சுவர்ணலதா,கவிதா சுப்பிரமணியம், சாதனா சர்க்கம்

பிடிக்காதவர் : அப்படி சொல்வதற்கு யாருமில்லை.


இயக்குநர்

பிடித்தவர் : மணிரத்னம்,பாலா,அமீர்,சீமான்,பாலுமகேந்திரா

பிடிக்காதவர் : ராஜ்கபூர்,இராம நாராயணன்,


கவிஞர்

பிடித்தவர் : வைரமுத்து,பாலா,மு.மேத்தா,சிற்பி,சுரதா,கு.க.சண்முகம்,புகாரி

பிடிக்காதவர் : வைரமுத்து(துரோகிகளைத் தெரிந்தும் வாழ்த்துப்பா பாடியே வாழப் பழகியதற்கு) , மற்ற பின் நவீனத்துவம் என்கிற பெயரில் தன்னுள் இருக்கும் வக்கிரத்தை பொதுவில் வைத்து பிரபலமாகிக் கொண்டிருக்கும் ஒரு சிலரை.


இசைஅமைப்பாளர்

பிடித்தவர் : ஏ.ஆர்.இரகுமான்,இளையராஜா,வித்யாசாகர்,விஜய் ஆண்டனி,யுவன் சங்கர் ராஜா

பிடிக்காதவர் : யாரையும் பிடிக்காது என்று ஒதுக்கி வைக்கும் நிலையில் குறிப்பிட முடியவில்லை. இளையராஜா போன்ற கொஞ்சம் தலைக்கணம் உள்ளவர்களைப் பிடிப்பதில்லை. தமிழ் பாடகர்களுக்கு வாய்ப்பளிக்காமல் கேரளம்,ஆந்திரா மற்றும் வட இந்தியாவில் பாடகர்களை தேடியதில் கொஞ்சம் வருத்தமும் உண்டு.


எழுத்தாளர்

பிடித்தவர் : சுஜாதா,எஸ்.இராமகிருஷ்ணன்,பட்டுக்கோட்டை பிரபாகர்(எங்க ஊர்க்காரர் ஆச்சே),ஜெயமோகன்(இவர்களது எழுத்து பிடிக்கும். கொள்கை மற்றும் நிலைப்பாடு அல்ல)

பிடிக்காதவர் : சாரு நிவேதிதா(கொள்கை மற்றும் தலைக்கணத்துக்கு)


பேச்சாளர்

பிடித்தவர் : தமிழ்க்குடிமகன்,வைகோ,சுகி சிவம்,சரஸ்வதி இராமனாதன்,தமிழருவி சிவகுமாரன்,தமிழருவி மணியன், இளசை எஸ்.சுந்தரம்,உவமைக் கவிஞர் சுரதா, வலம்புரி ஜான், பேராசிரியர் சோ.சத்தியசீலன், மன்சூர்,டாக்டர் செல்வகணபதி.

பிடிக்காதவர் : அவர்களே, அவர்களே என்று ஆரம்பித்து பேச்சை முடிக்கக் காத்திருக்கும் அரசியல் வியாதிகள். கழகங்களின் தலைமைக் கழக சிறப்புப் பேச்சாளர்களின் விரசமானப் பேச்சு. அதுதான் கழகங்களின் சிறப்பு.

இதே போன்ற பதிவினைத் தொடர நான் அழைக்கும் பதிவர்கள்

1) கோவி.கண்ணன்
2) சஞ்சய் காந்தி
3) ஜோ
4) குழலி
5) முகவை மைந்தன்

அவர்களும் சிறப்பு செய்வார்கள் என்கிற நம்பிக்கையுடன்,

அன்பன்,

அத்திவெட்டி ஜோதிபாரதி

”உண்மையைச் சொல்வேன்; நல்லதைச் செய்வேன் வேறொன்றும் தெரியாது எனக்கு”







35 கருத்துக்கள்:

ஆ.ஞானசேகரன் said...

உங்களைப்பற்றியும்.. உங்கள் எண்ணங்களைப்பற்றியும் அறிந்துக்கொண்டதில் மகிழ்ச்சிங்க....

அப்பாவி முரு said...

//”உண்மையைச் சொல்வேன்; நல்லதைச் செய்வேன் வேறொன்றும் தெரியாது எனக்கு”//

நல்லா இருந்த்து, பாட்டும்

சிங்கை நாதன்/SingaiNathan said...

//சாரு நிவேதிதா(கொள்கை//

அது என்ன சாரு நிவேதிதாவின் கொள்கை கொஞ்சம் சொல்லுங்களேன் ;)

அன்புடன்
சிங்கை நாதன்

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

singainathan said...
//சாரு நிவேதிதா(கொள்கை//

அது என்ன சாரு நிவேதிதாவின் கொள்கை கொஞ்சம் சொல்லுங்களேன் ;)

அன்புடன்
சிங்கை நாதன்//

அது நான் செய்த இமாலயத் தவறு.(அதுக்கு கூட தமிழ் நாட்டுல நமக்கு எடுத்துக்காட்டு கிடையாது)
தமிழர் என்கிற இனத்தின் அகரமுதலியில் இருந்து கொள்கை எனும் சொல்லை நீக்கும் வரை போராடுவோம் என்று சூளுரைக்கிறேன்!

singainathan said...
//சாரு நிவேதிதா(கொள்கை//

அது என்ன சாரு நிவேதிதாவின் கொள்கை கொஞ்சம் சொல்லுங்களேன் ;)

அன்புடன்
சிங்கை நாதன்//

அது நான் செய்த இமாலயத் தவறு.(அதுக்கு கூட தமிழ் நாட்டுல நமக்கு எடுத்துக்காட்டு கிடையாது)
தமிழர் என்கிற இனத்தின் அகரமுதலியில் இருந்து கொள்கை எனும் சொல்லை நீக்கும் வரை போராடுவோம் என்று சூளுரைக்கிறேன்!

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

singainathan said...
//சாரு நிவேதிதா(கொள்கை//

அது என்ன சாரு நிவேதிதாவின் கொள்கை கொஞ்சம் சொல்லுங்களேன் ;)

அன்புடன்
சிங்கை நாதன்//

நிலைப்பாடு என்று கூட மாற்ற முடியாது. கொள்கையையே தூக்குவது தான் நல்லது. எடுத்துடுறேன்!

singainathan said...
//சாரு நிவேதிதா(கொள்கை//

அது என்ன சாரு நிவேதிதாவின் கொள்கை கொஞ்சம் சொல்லுங்களேன் ;)

அன்புடன்
சிங்கை நாதன்//

நிலைப்பாடு என்று கூட மாற்ற முடியாது. கொள்கையையே தூக்குவது தான் நல்லது. எடுத்துடுறேன்!

Anonymous said...

விளையாட்டாய் இந்த தொடர் பதிவை எண்ணாமல் பதில்கள் சில தகவல்களோடு தந்து இருக்கிறீர்கள்..பொருப்பா முடித்திருக்கிறீர்கள் தந்த பணியை.... நல்லாயிருக்கு பாரதி....

வால்பையன் said...

கலக்கலா சொல்லியிருக்கிங்க தல!

Sanjai Gandhi said...

ஹிஹி.. போட்டுத் தாளிச்சி இருக்கேள் போங்கோ.. :)


உங்க அன்புக்கு நன்றி ஜோதிசார். நான் ஏற்கனவே ஒரு நண்பரின் அழைப்பில் எழுதிவிட்டேனே.

Menaga Sathia said...

அருமையா எழுதிருக்கிங்க...

Starjan (ஸ்டார்ஜன்) said...

அருமையான பதில்கள்

நசரேயன் said...

அண்ணே ஒரு பிடி பிடிச்சிட்டீங்க

நட்புடன் ஜமால் said...

பிரசாந்த், சிம்பு

இந்த இரண்டு பேரை கேட்டாலே ...

தமிழ் அமுதன் said...

உங்க ஸ்டைலில் பதிவு .....!!
அசத்தல்..!

நன்றி ...!;)

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

ஆ.ஞானசேகரன் said...
உங்களைப்பற்றியும்.. உங்கள் எண்ணங்களைப்பற்றியும் அறிந்துக்கொண்டதில் மகிழ்ச்சிங்க....
//

நன்றி ஞானம்!

வருகைக்கு!!

ஆ.ஞானசேகரன் said...
உங்களைப்பற்றியும்.. உங்கள் எண்ணங்களைப்பற்றியும் அறிந்துக்கொண்டதில் மகிழ்ச்சிங்க....
//

நன்றி ஞானம்!

வருகைக்கு!!

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

அப்பாவி முரு said...
//”உண்மையைச் சொல்வேன்; நல்லதைச் செய்வேன் வேறொன்றும் தெரியாது எனக்கு”//

நல்லா இருந்த்து, பாட்டும்
//

நன்றி முரு!

எந்தப் பாட்டு!!

நான் பாடியதா?

அப்பாவி முரு said...
//”உண்மையைச் சொல்வேன்; நல்லதைச் செய்வேன் வேறொன்றும் தெரியாது எனக்கு”//

நல்லா இருந்த்து, பாட்டும்
//

நன்றி முரு!

எந்தப் பாட்டு!!

நான் பாடியதா?

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

தமிழரசி said...
விளையாட்டாய் இந்த தொடர் பதிவை எண்ணாமல் பதில்கள் சில தகவல்களோடு தந்து இருக்கிறீர்கள்..பொருப்பா முடித்திருக்கிறீர்கள் தந்த பணியை.... நல்லாயிருக்கு பாரதி....
//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கவிஞர் தமிழ்!

தமிழரசி said...
விளையாட்டாய் இந்த தொடர் பதிவை எண்ணாமல் பதில்கள் சில தகவல்களோடு தந்து இருக்கிறீர்கள்..பொருப்பா முடித்திருக்கிறீர்கள் தந்த பணியை.... நல்லாயிருக்கு பாரதி....
//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கவிஞர் தமிழ்!

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

வால்பையன் said...
கலக்கலா சொல்லியிருக்கிங்க தல!
//

நன்றி வால்!

வால்பையன் said...
கலக்கலா சொல்லியிருக்கிங்க தல!
//

நன்றி வால்!

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

SanjaiGandhi™ said...
ஹிஹி.. போட்டுத் தாளிச்சி இருக்கேள் போங்கோ.. :)


உங்க அன்புக்கு நன்றி ஜோதிசார். நான் ஏற்கனவே ஒரு நண்பரின் அழைப்பில் எழுதிவிட்டேனே.//

எவ்வளவு தாளிச்சுப் போட்டாலும் அவர்களுக்கு கொழுப்பு கொஞ்சம் நிறைய ஏறுதேயொழிய குறைந்த பாடில்லை.

பதிவுக்கப்புறம் தான் கவனித்தேன் தங்கள் பதிவை....!

நன்றி சஞ்சய்!

SanjaiGandhi™ said...
ஹிஹி.. போட்டுத் தாளிச்சி இருக்கேள் போங்கோ.. :)


உங்க அன்புக்கு நன்றி ஜோதிசார். நான் ஏற்கனவே ஒரு நண்பரின் அழைப்பில் எழுதிவிட்டேனே.//

எவ்வளவு தாளிச்சுப் போட்டாலும் அவர்களுக்கு கொழுப்பு கொஞ்சம் நிறைய ஏறுதேயொழிய குறைந்த பாடில்லை.

பதிவுக்கப்புறம் தான் கவனித்தேன் தங்கள் பதிவை....!

நன்றி சஞ்சய்!

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

SanjaiGandhi™ said...
ஹிஹி.. போட்டுத் தாளிச்சி இருக்கேள் போங்கோ.. :)


உங்க அன்புக்கு நன்றி ஜோதிசார். நான் ஏற்கனவே ஒரு நண்பரின் அழைப்பில் எழுதிவிட்டேனே.//

எவ்வளவு தாளிச்சுப் போட்டாலும் அவர்களுக்கு கொழுப்பு கொஞ்சம் நிறைய ஏறுதேயொழிய குறைந்த பாடில்லை.

பதிவுக்கப்புறம் தான் கவனித்தேன் தங்கள் பதிவை....!

நன்றி சஞ்சய்!

SanjaiGandhi™ said...
ஹிஹி.. போட்டுத் தாளிச்சி இருக்கேள் போங்கோ.. :)


உங்க அன்புக்கு நன்றி ஜோதிசார். நான் ஏற்கனவே ஒரு நண்பரின் அழைப்பில் எழுதிவிட்டேனே.//

எவ்வளவு தாளிச்சுப் போட்டாலும் அவர்களுக்கு கொழுப்பு கொஞ்சம் நிறைய ஏறுதேயொழிய குறைந்த பாடில்லை.

பதிவுக்கப்புறம் தான் கவனித்தேன் தங்கள் பதிவை....!

நன்றி சஞ்சய்!

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

SanjaiGandhi™ said...
ஹிஹி.. போட்டுத் தாளிச்சி இருக்கேள் போங்கோ.. :)


உங்க அன்புக்கு நன்றி ஜோதிசார். நான் ஏற்கனவே ஒரு நண்பரின் அழைப்பில் எழுதிவிட்டேனே.//

எவ்வளவு தாளிச்சுப் போட்டாலும் அவர்களுக்கு கொழுப்பு கொஞ்சம் நிறைய ஏறுதேயொழிய குறைந்த பாடில்லை.

பதிவுக்கப்புறம் தான் கவனித்தேன் தங்கள் பதிவை....!

நன்றி சஞ்சய்!

SanjaiGandhi™ said...
ஹிஹி.. போட்டுத் தாளிச்சி இருக்கேள் போங்கோ.. :)


உங்க அன்புக்கு நன்றி ஜோதிசார். நான் ஏற்கனவே ஒரு நண்பரின் அழைப்பில் எழுதிவிட்டேனே.//

எவ்வளவு தாளிச்சுப் போட்டாலும் அவர்களுக்கு கொழுப்பு கொஞ்சம் நிறைய ஏறுதேயொழிய குறைந்த பாடில்லை.

பதிவுக்கப்புறம் தான் கவனித்தேன் தங்கள் பதிவை....!

நன்றி சஞ்சய்!

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

ஞானப்]-[பி]-[த்]-[த]-[ன்] said...
-:)
//

நன்றி பித்தன் சுவாமிகள்!

ஞானப்]-[பி]-[த்]-[த]-[ன்] said...
-:)
//

நன்றி பித்தன் சுவாமிகள்!

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

Mrs.Menagasathia said...
அருமையா எழுதிருக்கிங்க...
//

நன்றி மேனகா சத்யா!

Mrs.Menagasathia said...
அருமையா எழுதிருக்கிங்க...
//

நன்றி மேனகா சத்யா!

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

Starjan ( ஸ்டார்ஜன் ) said...
அருமையான பதில்கள்
//

நன்றி ஸ்டார்ஜன்!

Starjan ( ஸ்டார்ஜன் ) said...
அருமையான பதில்கள்
//

நன்றி ஸ்டார்ஜன்!

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

நசரேயன் said...
அண்ணே ஒரு பிடி பிடிச்சிட்டீங்க
//

அப்படீங்கிறீங்க...!?

நன்றி நசரேயன்!

நசரேயன் said...
அண்ணே ஒரு பிடி பிடிச்சிட்டீங்க
//

அப்படீங்கிறீங்க...!?

நன்றி நசரேயன்!

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

நட்புடன் ஜமால் said...
பிரசாந்த், சிம்பு

இந்த இரண்டு பேரை கேட்டாலே ...
//

உங்களுக்கும் அவங்க மேல கோவமா?

அவ்வ்வ்வ்!

நன்றி ஜமால் அண்ணே!

நட்புடன் ஜமால் said...
பிரசாந்த், சிம்பு

இந்த இரண்டு பேரை கேட்டாலே ...
//

உங்களுக்கும் அவங்க மேல கோவமா?

அவ்வ்வ்வ்!

நன்றி ஜமால் அண்ணே!

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

ஜீவன் said...
உங்க ஸ்டைலில் பதிவு .....!!
அசத்தல்..!

நன்றி ...!;)


//

நன்றி ஜீவன்!

ஜீவன் said...
உங்க ஸ்டைலில் பதிவு .....!!
அசத்தல்..!

நன்றி ...!;)


//

நன்றி ஜீவன்!

NO said...

அன்பான நண்பர் திரு ஜோதி,

எல்லாம் சரிதான் சார், திரு கோவி அவர்களை கூபிட்டீங்க இல்ல, அவரு போடுவதற்குள், அவர் சார்பில் கொஞ்சம், அவருக்கு பிடிக்காதவை சிலது மட்டும்

வீட்டு சமாச்சாரம்:
பிடிக்காதது
குப்பைத்தொட்ட்டி -
அவரு எழுதுவதெல்லாம் கடைசியாக இங்கேதான் போவதால்

வெளி சமாச்சாரம்
காத்தாடி
அவரு உடரதோட மேல போகுதில்ல!

நாட்டு சமாசாரம்:
நல்லது -
கெட்டது நடக்கலைன்னா காரணத்த கண்டுபிடிச்சிட்டேன்னு கண்டபடி விளக்கம் கொடுக்க முடியாதில்ல!

காட்டு சமாசாரம்:
காட்டு கொசு
நீங்களே சொல்லுங்களேன் ஏன் பிடிக்காதுன்னு - சின்ன கிளூ - அதன் கடி பயங்கரமா
இருக்குமாம்!


நன்றி

T.V.ராதாகிருஷ்ணன் said...

அருமை

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

நோ ஐயா,

ஏன் இப்படி?

நோ ஐயா,

ஏன் இப்படி?

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

T.V.Radhakrishnan said...
அருமை
//

நன்றி டிவிஆர் ஐயா!

T.V.Radhakrishnan said...
அருமை
//

நன்றி டிவிஆர் ஐயா!

அன்புடன் நான் said...

மிக ரசித்தேன்.

//எனக்கு பிடித்த தலைவர்கள் இருவரின் மறைவும் இன்னும் உறுதிப்படுத்தப் படவில்லை.
மற்றவர்களைப் பார்ப்போம்.//

//இந்தியாவில் புதிய பொருளாதாரக் கொள்கையை அறிமுகப்படுத்தி செயல்பட்டவர்.

பிடிக்காதது: அணு ஒப்பந்தத்தை நிறைவேற்றுகிறேன் என்று இந்தியாவை ஒட்டுமொத்தமாக அமெரிக்காவிடம் அடகு வைத்தது. நல்லது கெட்டது எதுவாக இருந்தாலும் சோனியா சொன்னால் தலையாட்டுவது. பேசாம சோள கொல்லையில நின்னா காக்கா, குருவி, நரி எதும் வராது. இரை(றை)யாண்மை மேம்படும். இலங்கை இனப்படுகொலைக்கு பொய் சொல்லிக்கொண்டே ஆயுதம் உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் செய்து அந்த கோர நிகழ்வுகளுக்குக் காரணகர்த்தாவாக இருந்தது.//

// ”அடைந்தால் திராவிட நாடு இல்லையேல் சுடுகாடு” அன்றைய முழக்கம், இன்று ”வடக்கு வழங்குகிறது தெற்கு தேறுகிறது”. கழகம் எனது குடும்பம் என்று சொல்லிச் சொல்லியே தனது குடும்பத்தை கழகமாக்கியது. பெரியார்,அண்ணா என்றால் என்னா என்று கேட்கும் அளவில் அவர்களது கொள்கைகளை மதிப்பது. இனமானக் காவலர் என்று சொல்லிக்கொண்டே ஒர் இனம் அழிக்கப்படும்போது, அதற்கு மத்திய அரசு செய்த எல்லா உதவிகளுக்கும் உறுதுணையாக இருந்தது. தனக்குச் சொந்தமான ஊடகங்களில் அது பற்றிய செய்திகள் வராமல் இருட்டடிப்பு செய்தது. ஒட்டுமொத்தமாக துடைத்தொழிக்கப்படும் வரை அனைவரையும் பொறுத்திருக்கச் சொன்னது. உண்ணாவிரத நாடகம், மருத்துவச்சாலை நாடகம், ஈழமக்களின் ரணம் ஆறாமல் இருக்கும் போது அம்மக்களையும் சேர்த்துகொண்டு உலகத் தமிழ் மாநாடு நடத்தி ஈழமக்களின் அவலத்தை இருட்டடிக்க முயல்வது. இப்போது செம்மொழி மாநாட்டுக்காக தமிழக அகதிகள் முகாம்களுக்கு தனது சகாக்களை அத்தி பூத்தார்போல் அனுப்பும் நாடகம். இன்னும் நிறைய சொல்ல முடியும்//

தங்களின் மனவோட்டம் எனக்கு தங்களின் மீது புதிய மரியாதையை ஏற்படுத்துகிறது. இந்த பதி மனிதர்களையும் புரிந்துக்கொள்ள் உதவுகிறது.

நன்றி...தொடர்க.

எம்.எம்.அப்துல்லா said...

அண்ணா தங்களைச் சந்திக்க விரைவில் சிங்கை வருகின்றேன்

:)

Riley said...
This comment has been removed by the author.
அத்திவெட்டி ஜோதிபாரதி said...

சி. கருணாகரசு said...
மிக ரசித்தேன்.


தங்களின் மனவோட்டம் எனக்கு தங்களின் மீது புதிய ம�//



நன்றி நண்பரே!

சி. கருணாகரசு said...
மிக ரசித்தேன்.


தங்களின் மனவோட்டம் எனக்கு தங்களின் மீது புதிய ம�//



நன்றி நண்பரே!

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

எம்.எம்.அப்துல்லா said...
அண்ணா தங்களைச் சந்திக்க விரைவில் சிங்கை வருகின்றேன்

:)
//

அப்து அண்ணே!
கண்டிப்பாக!!
வாருங்கள் சந்திப்போம்!!!
ஆவலோடு இருக்கிறோம்!

எம்.எம்.அப்துல்லா said...
அண்ணா தங்களைச் சந்திக்க விரைவில் சிங்கை வருகின்றேன்

:)
//

அப்து அண்ணே!
கண்டிப்பாக!!
வாருங்கள் சந்திப்போம்!!!
ஆவலோடு இருக்கிறோம்!

வட மொழி - தமிழ் மொழி

பின் நவீனத்துவம் - பின் புதுமையியல்

அகங்காரம் - செருக்கு,இறுமாப்பு,முனைப்பு,யானெனல்

அகடவிகடம் - குறும்பு,மாற்று,மாறுபட்டது

அகதி - அறவை,வறியன்,எதிலி,புகலிலான்,யாருமற்றவன்,ஏழை

அகந்தை - இறுமாப்பு,செருக்கு

அகம் - உள்ளே,உயிர்,நான்,மனம்,மனநிலை,எண்ணம்

அகம்பாவம் - தற்பெருமை,செருக்கு

அகராதி - அகரமுதலி,அகரவரிசை,அகரநிரல்,அகரமுதல்

அகிம்சை - இன்னா செய்யாமை,கொல்லாமை

அஹிம்சை - இன்னா செய்யாமை,கொல்லாமை

அகோரம் - அழகின்மை,கொடுமை,நடுக்கம்

அக்கணம் - அப்பொழுது,அந்நொடி

அக்கரம் - எழுத்து

அட்சரம் - அழிவில்லாதது

அக்கியாணி - அறிவிலான்

அஞ்ஞானி - புல்லறிவாளன்

அக்கிரகாரம் - பார்ப்பனச் சேரி

அக்கிரமம் - ஒழுன்கின்மை,முறைகேடு

அக்கிராசனம் - முதலிருக்கை,தலைமை

அக்கினி,அக்நி - நெருப்பு,தீ,அனல்,எரி

அங்கப்பிரதட்சணம் - உடல் வலமுருளல், வலம் புரளல்

அங்கீகாரம்,அங்கீகரணம் - உடன்,செப்பு

அங்குலம் - விறக்கட்டை,விரலளவு

அசத்தை,அசத்தியம் - பொய்

அசரம்- அசைவில்லாதது,இயங்காதது,நிலையியல்

அசரீரி - வானொலி,உருவற்றது

அசித்து - பயனின்மை

அஜீரணம்,அசீரணம்- செரியாமை,பசியின்மை,அழிவுபடாமை

அசுத்தம் - அழுக்கு,துப்புரவின்மை,தூய்மையின்மை

அசேதனம் - அறிவில்லாதது,அறிவிலி,அறிவில் பொருள்

அசெளரியம் - நலமின்மை,இடைஞ்சல்

அஞ்சலி - கும்பிடல்,வணக்கம்

அஞ்சனம் - மை,கறுப்பு,இருள்

அஞ்சிட்டம் - கதிரவன்

அஞ்ஞாதம் - மறைவு,அறியப்படாதது

அஞ்ஞாத வாசஸ்தலம் - மறைந்துறைவிடம்

அட்சயப் பாத்திரம் - திருவோடு,ஏற்போடு,அள்ள அள்ளக் குறையாதது

அட்டதிக்கு பாலகர் - எண்புறக்காவலர்

அட்டபந்தனம் - எண்புறக்கட்டு

அண்டம் - முட்டை,உலகம்,வித்து,மூலம்

அதமம் - கீழ்மை,கடைத்திரம்

அதர்மம்,அதருமம் - தீவினை,அறமின்மை,மறம்

அதிகப்பிரசங்கம் - மிகுபேச்சு,தன் மேம்பாட்டுரை,மற்றொன்று விரித்தல்

அதிகாரி - அலுவலர்,தலைவன்,முதல்வன்,உடையவன்

அதிகாலம் - விடியற்காலம்

அதிகாலை - விடியற்காலம்,புலரிக்காலை

அதிஷ்டவசம் - நல்வினைப்பயன், நல்வினை வயம்

அநந்தகோடி - எண்ணத்தொலையாதன

அநந்தம் - அளவின்மை,முடிவில்லது

அநாதை - யாருமற்றவன்,தாய்தந்தையிலான்

அநித்தம்,அநித்தியம் - அழிவு,நிலையற்றது,நிலையாமை

அநீதி - முறைகேடு

அநுக்கிரகம் - அருளிரக்கம்,அருள்

அநுசரணை - சார்பு,சார்பு நிலை

அநுசிதம் - பொய்,தகாதது

அனுபவம் - பழக்கம்,வழக்கம்,நுகர்ச்சி

அனுமினம் - ஐயம்,வழியளவை,கருதலளவை

அனுமானப் புரமானம் - கருதலளவை

அநேகர் - பலர்

அந்தகன் - அழிப்போன்,குருடன்

அந்தகாரம் - இருள்,அறியாமை

அந்தக்கரணங்கள் - அகக்கருவிகள்

அந்தஸ்து - நிலைமை,ஒழுங்கு,நிலை

அந்தரம் - வான்வெளி,இடைவெளி,துணையின்மை,காலம்

அந்தி - முடிவு,மாலைக்காலம்

அந்திய கிரியை - இறுதிச் சடங்கு

அந்நியர் - பிறர்,அயலார்

அந்நியோந்நியம் - நெருக்கம்,ஒற்றுமை,ஒருவொருக்கொருவர்

அபயம் - அடைக்கலம்,அச்சமின்மை,புகலிடம்,அஞ்சேலெனல்

அபாயம் - பேரிடர்,அழிவு,கேடு,துன்பம்,இடுக்கண்,இக்கட்டு

அபாரம் - சிறப்பு,அளவின்மை,கேடு

அபிதானம் - பெயர்

அபிநயம் - நடிப்பு,கூத்து,கைமைய்காட்டல்,உள்ளக் குறிகாட்டல்

அபிப்பிராயம் - நோக்கம்,எண்ணம்,உட்கருத்து,உள்ளப்போக்கு

அபிமானம் - பற்று,நேயம்,செருக்கு

அபூர்வம் - அரிது,அருமை,அரிய பொருள்

அபேச்சை -அவா,விருப்பம்

அபேதம் - ஒற்றுமை,வேற்றுமையின்மை,வேறன்மை

அப்பியாசம் -பழக்கம்,பயிற்சி

அப்பிரதட்சிணம் - இடப்புறச் சுற்று, இடப்பக்கச் சுற்று

அமரத்துவம் - அழிவின்மை

அமலன் - துயோன்,கடவுள்,வாலறிவன்

அந்நியர் - பிறர்,அயலார்

அதிகம் - மிகுதி,அளவின்மை

அமிர்தம்,அமிருதம் - இனிமை,அருமருந்து,சாவா மருந்து,அழிவினமை

அமச்ம் - வகை,பங்கு,காலம்,எண்,அன்னப்புள்

அம்பாரம் - குவியல்

அயோக்கியம் - தகுதியினமை,தகாதது

அயோக்க்கியன் - தகுதியற்றவன்,தகவிலான்,கெட்டவன்

அரணியம் - காடு

அருச்சனை,அர்ச்சனை - வழிபாடு, பூ வழிபாடு,மலர் வழிபாடு

அருத்தம்,அர்த்தம் -பொருள்,பாதி

அருவம் - உருவின்மை,அழகின்மை

அர்த்தநாசம் - பேரழிவு,பொருளழிவு

அர்ப்பணம் - உரிமை கொடுத்தல், ஒப்புவித்தல், நீரோடு கொடுத்தல்

அலங்காரம் - அழகு,ஒப்பனை,அணி,புனைவு

அலச்சியம் - பாராமுகம்,பொருட்படுத்தாமை,கருத்தின்மை

அவகீர்த்தி - இழிவு,புகழின்மை

அவக்கியாதி - வசை,இகழ்ச்சி

அவசரம் - விரைவு,பரபரப்பு,சுருக்கு,பதைப்பு

அவசியம் - முதன்மை,கட்டாயம்,இன்றியமையாமை

அவதரித்தல் - பிறத்தல்

அவதாரம் - பிறப்பு,இறங்குகை

அவதானம் - எச்சரிக்கை,ஒழிவு,நினைவு,விரித்தல்,மறப்பின்மை

அவநம்பிக்கை - நம்ப்பிக்கைக்குறை

அவமரியாதை - முறைதவறல்,வணக்கமின்மை,தீயமுறை

அவமானம் - மானக்கேடு,இழிவு,குறைவு,இளிவரவு

அவயவம்,அவையவம் - உறுப்பு

அவலன் - உடற்குறையன்,வீணன்

அவசு,ஹவிசு - தூய உணவு,சோறு,நெய்,

அற்பம்,அல்பம் - சிறுமை,அணு,புன்மை,இழிவு

அனங்கன் - உடலிலான்,கடவுள்,காமவேள்

அனாதி - கடவுள்,தனியன்,பழமை,தொன்மை

அனுதாபம் - இரக்கம்

அனுபவம் - பழக்கம்,வழக்கம்,அழுந்தியறிதல்,பட்டறிவு

அனுமானம் - உய்த்துணர்தல்,கருதல்ளவை,வழியளவை

அனேகம் - பல,எல்லாம்

அன்னதானம் - சோற்றறம்,சோற்றுக்கொடை,உணாக்கொடை

அன்னம் - சோறு,உணவு,அடிசில்

அன்னியன் - பிறர்,அயலார்

அன்னியோன்னியம் - ஒற்றுமை,நெருக்கம்,ஒருவர்க்கொருவர்

ஆகம் -உடல்,மார்பு

ஆகரு(ர்)ஷண சக்தி - இழுப்பாற்றல்,இழுவழி,சேர்வழி

ஆகாசம்,ஆகாயம் - விண்,வெளி,வான்,விசும்பு,வர்னம்

ஆகாய விமானம் - வான ஊர்தி

ஆகாரம் - உணவு,அடிசில்,உடம்பு,வடிவு

ஆக்கியாபித்தல்,ஆஞ்ஞாபித்தல் - கட்டளையிடல்

ஆக்கிரமித்தல் - வலிந்து கவர்தல்,வலிமை காட்டல்

ஆட்சேபம் - மறுமொழி,மறுத்துக்கூறல்,தடைமொழி

ஆங்காரம் - இறுமாப்பு,செருக்கு,தருக்கு

ஆச சங்கை -ஐயம்

ஆசாபாசம் -அன்பு,பற்று,அவா

ஆசாரம் - ஒழுக்கம்,வழக்கம்,நன்னடை,வழிபாடு,துப்புரவு

ஆசியம்,ஹாசியம் - எள்ளல்,நகை,சிரிப்பு

ஆசீர்வாதம் - வாழ்த்துரை

ஆசுவாசம் - இளைப்பாறுகை

ஆசை - விருப்பம்,அவா,பற்று,வேட்கை,விழைவு

ஆச்சரியம் - புதுமை,வியப்பு,இறும்பூது

ஆ(ச்)சிரமம் - இலைக்குடில்,பாழி,முனிவருறயுள்

ஆஸ்திகம் - கடவுளுண்டெனுங்கொள்கை

ஆஸ்பத்திரி - மருத்துவச்சாலை

ஆஞ்ஞாபித்தல் -கட்டளையிடல்

ஆஞ்ஞை -ஆணை,கட்டளை

ஆடம்பரம் - ஆரவாரம்,பகட்டு

ஆட்சேபம்,ஆட்சேபனம் - தடைமொழி,மறுமொழி,எதிர்மொழி,மறுப்பு

ஆதங்கம் - ஆற்றாமை,அச்சம்,நோய்

அந்நியர் - பிறர்,அயலார்

ஆதவ(ப)ன் - பகலோன்,கதிரோன்

ஆதரவு - துணை,உதவி,சார்பு,பற்றுக்கொடு

ஆதி - முதல்,பழமை,அடி,தொடக்கம்,காரணம்,எழுவாய்,கடவுள்

ஆப்தம்,ஆத்தம் - அன்பு,நட்பு

ஆத்தானம்,ஆஸ்தானம் - நகரவாயில்,அறமன்றம்,கொடிமுடிவாயில்

ஆத்திரம்,ஆத்திரியம்,ஆத்திரவம் - உளக்கொதிப்பு,விரைவு,பரபரப்பு

ஆத்துமா,ஆன்மா - உயிர்

ஆந்ந்தம் - இன்பம்

ஆபத்து -இடர்,துன்பம்,இக்கெட்டு,ஊறுபாடு,இடுக்கண்

ஆபரணம் - அணிகலம்,இழை,நகை,அணி,பூண்

ஆபாசம் - அருவருப்பு,சிதைவு,கெடுதல்,பொய்,அளவைப்பொலி

அபூர்வம் - வினைப்பயன்

ஆமோதித்தல் - உடன்படல்,வழிமொழிதல்,மகிழ்தல்

ஆயக்கட்டு(துளுவம்) - மொத்த நஞ்சை நிலம்,களப்புரவு

ஆயத்தம்(இந்தி) - முயற்சி,எத்தனம்,முன்னேற்பாடு

ஆயா(போர்ச்சுக்கீஸ்) - செவலித்தாய்,கைத்தாய்

ஆயாசம்,ஆயாஸம் - களைப்பு,இளைப்பு,சோர்வு,அயர்வு,மயக்கம்

ஆயுசு,ஆயுள் - வாழ்நாள்,ஆண்டு

ஆயுதம் - கருவு,படைக்கலம்,படை,வாள்

ஆரணியம்,ஆரண்ணியம் - காடு

ஆரம்,ஹாரம் - பூமாலை,தொடையல்

ஆரம்பம் - தொடக்கம்

ஆரம்பித்தல் - தொடங்கல்

ஆராதனம் - வணக்கம்,மகிழ்வித்தல்

ஆரோகம்,ஆரோபம்,ஆரோக்கியஸ்நானம் - நல முழுக்கு,நோய் தீர்ந்தபின் முழுகல்

ஆரோக்கியம் - நலம்,நோயின்மை

ஆரோபணம்- நாட்டுதல்,ஏற்றுதல்

ஆரோபித்தல் - ஏற்றுதல்

ஆர்ச்சிதம் - தேட்டம்,தேடிய பொருள்

ஆர்மோனியம் - இசைக்கருவி

ஆர்வம் - அன்பு,விருப்பம்

ஆலகண்டண் - சிவன்,நஞ்சுமிடற்றன்,கறைமிடற்றன்

ஆலகம்- நெல்லிமரம்

ஆலம் - நஞ்சு

ஆலயம் - கோயில்

ஆலாபம்,ஆலாபனம் - அலப்பு,பேச்சு,உரையாடல்

ஆலோசனை - சூழ்தல்,சூழ்ச்சி,ஓர்வு,எண்ணம்,ஆராய்ச்சி

ஆவசியம் - கட்டாயம்,முதன்மை,இன்றியமையாமை

ஆவத்து,ஆபத்து - இக்கெட்டு,இடர்,பொல்லாங்கு

ஆவர்த்தி,ஆவருத்தம்,ஆவிருத்தி - தடவை,வரிசை,சுற்று,வழக்கம்

ஆவாகனம் - அழைத்தல்,உட்புகல்

ஆனந்தபரவசம் - இன்பக்களிப்பு,பேரின்பக்களிப்பு

ஆனந்தம் - இன்பம்,பேரின்பம்

ஆன்மா - உயிர்

இகம் - இவ்வுலகம்,இவ்விடம்,இப்பிறப்பு

இங்கிதம் - இனிமை,அடையாளம்,கருத்து,இடம் பொருள்

இச்சகம் - முகமன்

இச்சை - விருப்பம்,அவா,விழைவு,வேட்கை

இடபம்,ரிஷபம் - எருது,காளை,ஏறு,விடை

இட்டசித்தி - விருப்பப்பேறு

இதம்,ஹிதம் - இனிமை,நன்மை,அன்பு,அறம்

இதயம்,இதையம்,ஹிருதயம் - நெஞ்சம்,உள்ளம்

இதரம் - வேறு,இயல்,அழிவு,பகைமை

இதிகாசம் - பண்டை வரலாறு,பழங்கதை

இந்திர ஜாலம் - இமயவர்கோன்,வானவர் தலைவன்

இந்து - நிலா,திங்கள்,அம்புலி

இமாலயம்,ஹிமாலயம் - பனிமலை

இரகசியம் - மறைபொருள்,மறை,அற்றம்

இராசாபாசம் - அருவருப்பு,ஒழுங்கின்மை

இரசாயனம் - பொருளியைபு

இரட்சகம் - பாதுகாப்பு,மீட்பு

இரட்சை - காப்பு

இரணம்,ரணம் - புண்

இரதம்,ரதம் - தேர்

இரத்தம் - குருதி,செந்நீர்

இரத்தினம்,ரத்தினம் - மாமணி,செம்மணி

இரம்பம்,ரம்பம் - ஈர்வாள்

இராகம்,ராகம் - இசை,பண்,அவா,விருப்பு

இராகு - கருங்கோள்

இராக்கதர் - அரக்கர்

இராசசூயம் - அரசர் வேள்வி

இராசா - அரையன்,மன்னன்,அரசன்

இராச்சியம் - நாடு,அரசியல்

இராத்திரி - இரவு,கங்குல்

இருஷி,இருடி - முனிவன்,தவசி,துறவி

இதய கமலம் - நெஞ்சத்தாமரை

இருது - பருவம்,மகளிர் முதற்பூப்பு

இரேகை - வரி,எழுத்து,கையிறை,நிறை,தொடர்

இலகிரி,லகிரி,லாகிரி - வெறி,மயக்கம்

இலகு,லகு - எளிது,நொய்மை,நுண்மை,ஈரம்,பலா மரம்

இலங்கணம் - பட்டினி

இலஞ்சம் - கைக்கூலி,கையூட்டு,கையுறை

இலட்சணம்,லட்சணம் - அழகு,பார்வை

இலயித்தல் - ஒடுங்குதல்,சேர்ந்தொன்றித்தல்

இலெளகீகம்,இலவுகீகம் - உலகியல்,உலகப்போக்கு

இலாஞ்சனம்,இலாஞ்சனை - புகழ்,அடியாளம்,கறை

இலாபம்,லாபம் - ஊதியம்,மிச்சம்,பேறு

இலீலை,லீலை - விளையாட்டு

யுகம்,உகம் - உலக முடிவு,இரண்டு

உக்கிராணம் -களஞ்சியம்,சரக்கறை

உஷ்ணம் - வெப்பம்,சூடு

உசிதம் - உயர்வு,சிறப்பு,மேன்மை,தகுதி,ஒழுங்கு

உசிதன் - தக்கோன்

உச்சம் - உயர்ச்சி,சிறப்பு

உச்சரித்தல் - சொல்லுதல்,ஒலித்தல்,ஓதல்

உச்சரிப்பு - எழுத்தோசை

உச்சாட்டியம் - பேய கற்றல்,ஒட்டுதல்

உச்சி - மேடு,முகடு

உச்சிக்காலம்,உச்சிச்சமயம் - நண் பகல், நடுப் பகல்

உதயன் - பகலோன்

உதாரணம்,திருட்டாந்தம் - எடுத்துக்காட்டு,சான்று

உத்தமம் - உண்மை,மேன்மை

உத்தரியம்,உத்தரீயம் - மேலாடை

உத்தரவு - கட்டளை

உத்தி,யுத்தி - அறிவு,இணக்கம்,இசைவு,சூழ்ச்சி,சொல்

உத்தேசம்,உத்தேகம் - கருத்து,மதிப்பு,ஏறக்குறைய

உபகரணம் - கொடுத்தல்,உதபிபொருள்கள்,கருவி,துணைக்காரணம்

உபதேசம் - அருண்மொழி,அறிவுரை

உபயம் - உதவி,நன்கொடை,இரண்டு

உபாசநம்,உபாசநை,உபாசனை - வழிபாடு,வணக்கம்

உபாதி,உபாதை - நோய்,துன்பம்,வருத்தம்

உபாத்தியாயன் - கணக்காயன்,ஆசிரியன்,கற்பிப்போன்

உபாயம் - சூழ்ச்சி,நொய்மை,எளிது,சிறிது

உயுக்கம்,உயுத்தம்,யுத்தம் - போர்,தகுதி

உருசி,ருசி - சுவை

உருத்திராக்கம் - சிவமணி,சுக்குமணி

உரூபம்,ரூபம் - உருவம்,வடிவம்

உரொக்கம்,ரொக்கம் - கைப்பணம்,இருப்பு,கையிருப்பு

உரோமம்,ரோமம் - மயிர்,முடி,குஞ்சி

உல்லாசம் - மகிழ்ச்சி,விளையாட்டு,களிப்பு,உள்ளக்களிப்பு

உவதி,யுவதி, - மங்கை,பதினாறாண்டுப் பெண்

ஊகம் - கருதல்,ஓர்தல்,கருத்து,நினைவு

ஊர்ச்சிதம்,ஊர்ஜ்ஜிதம் - உட்பொருளுணர்தல், நிலைப்படுதல்,உறுதி,கருங்குரங்கு

எசமானன்,எஜமான் - தலைவன்,முதல்வன்,முதலாளி

எந்திரம் - பொறி

எமன் - கூற்றுவன்,மறலி

ஏகதேசம் - ஒருபால்,ஒருபுடை,சிறுபான்மை

ஏகம் - ஒன்று,தனிமை

ஏகாந்தம் - தனிமை,ஒரு முடிவு

ஏகோபித்தல் - ஒன்றுபடுதல்

ஏடணை,ஏஷணை - விருப்பம்

ஐது,ஹேது - காரணம்

ஏக்கம்,ஐக்கியம் - ஒற்றுமை

ஐஸ்வர்யம்,ஐச்வரியம் - செல்வம்,பொருள்,திரு

ஐதீகம்,ஐதிகம் - உலகுரை

ஐம் பூதம்,பஞ்ச பூதம் - ஐந்து முதற்பொருள்

ஓமம்,ஹோமம் - வேள்வி

ஒளடதம்,ஒளஷதம்- மருந்து

களோகம் - வான் வட்டம்,வளி மண்டலம்

கடகம் - கைவளை,வளையம்

கடம் - கடம்,யானைக்கதுப்பு

கடாட்சித்தல் - அருளல்

கடாரம் - கொப்பரை,தேங்காய்

கடிகாரம் - நாழிகை வட்டில்,பொழுது காட்டுங்கருவி

கடிகை - நாழிகை,தாழ்க்கோல்

கடினசித்தம் - வன்னெஞ்சம்

கடினம் - வன்மை,கடுமை,வருத்தம்,கொடுமை

கடூரம்,கொடூரம் - கொடுமை

கட்டம்,கஷ்டம் - துன்பம்,வருத்தம்

கணம்,ஹணம் - குழாம்,கூட்டம்,தொகுதி,நொடிப்பொழுது

கணி - கோள் நூல், கோல் நூல் வல்லான்

கணிகை - பொதுமகள்

கணிசம் - அளவு,மேம்பாடு

கணிதம் - கணக்கு

கண்டம் - நிலப்பிரிவு,துண்டு,கட்டி,மிடறு,கழுத்து

கண்திட்டி,கண்திருஷ்டி - கண்ணேறு

கதம்பகம்,கதம்பம் - கூட்டம்,மணப்பொருட் கூட்டு,சேர்ந்தது,இணைத்தது

கதலி - வாழை

கதி - நடை,செலவு,வழி,புகலிடம்,பற்றுக்கோடு,நிலை

கனகம்,கநகம் - பொன்

கனவான்,கநவான் - பெரியோன்,பெருமையாளன்,பெருந்தகை

கனிஷ்டை,கநிஷ்டை - பின்னோள்,தங்கை

கன்னிகை,கந்நிகை - மணமாகாதவள்,இளம்பெண்

கந்மம்,கருமம் - தொழில்,வினை

கபடம்,கவடம்,கபடு - கரவு,படிறு,வஞ்சகம்,மோசம்,சூது,ஒளிப்பு

கபாலம் - தலையோடு,மண்டையோடு

கபோதி - குருடன்

கப்பம் - இறை

கமண்டலம் - நீர்க்குடுவை

கமலம் - தாமரை,நீர்

கம்பீரம் - உயர்தோற்றம்,பெருமை,ஆழம்,செருக்கு

கயம்,ஹயம் - குளம்,ஆழம்,யானை

கரகம் - வட்டில்,நீர்க்குடுவை

கரகோசம்,கரகோஷம் - கைதட்டுதல்

கரணம் - கருவி,ஐம்பொறி

கரம் - கை

கருச் சித்தல் - முழங்கல்,இரைதல்

கருணை - அருள்,இரக்கம்

கர்த்தா,கருத்தா - தலைவன்,வினைமுதல்,ஆக்கியோன்,நூலாசிரியன்,முதல்வன்,கடவுள்

கர்ப்பவதி - சூலி

கர்ப்பாசயம் - கருப்பை

கர்வம் - செருக்கு,இறுமாப்பு

கலாபம்,கலபம் - மயில்,மயிற்றோகை

கலி - வறுமை,துன்பம்

கலியாணம் - மனம்,மன்றல்,பொன்,மகிழ்ச்சி

கவளீகரித்தல்,கபளீகரம்,கபளீகரித்தல் - முற்றிலும் விழுங்குதல்,விழுங்குதல்

கவனம் - கருத்து நோக்கம்,உன்னித்தல்

கவாத்து - படைக்கலப் பயிற்சி,வெட்டி விடுதல்

கவி - செய்யுள்,புலவன்,பாட்டு

கவுளி,கெளளி - பல்லி

களேபரம் - குழப்பம்,உடல்,பிணம்

கற்பம் - ஊழிக்காலம்,நெடுவாழ்க்கை மருந்து

கனம் - சுமை,பளு,பளுவு

காசம் - ஈளை,ஈளைநோய்,இருமல் நோய்

கசாயம்,கஷாயம் - காவி

காஞ்சிரம் - எட்டி மரம்

காட்டம்,காஷ்டம் - விறகு,வெகுளி

காதகன் - கொலையாளி

காயசித்தி - நீடுவாழ்ப் பேறு

காயம் - உடல்,யாக்கை,வான்

காரிய கர்த்தா - வினைமுதல்வன்

காரியதரிசி - அமைச்சன்,செயலாளன்

கலாட்சேபம் - பொழுதுபோக்கல்,நாட்கழித்தல்,வாழ்க்கை

கால நியமம் - காலமுறை,காலக்கடன்,கால்,ஒழுங்கு

கிஸ்தி - திறை,வரி

கிரகணம்,கிராணம் - பற்றுதல்,பிடித்தல்

கிரகஸ்தம் - இல்லற நிலை

கிரகம் - வீடு,கோள்,பற்றுதல்,பிடிப்பு

கிரணம் - ஒளி,கதிர்

கிரந்தம் - நூல்,எழுத்து

கிரமம் - ஒழுங்கு,முறைமை

கிரயம் - விலை

கிராதன் - குறவன்,வேட்டுவன்

கிரி - மலை,பன்றி

கிரிகை - தொழில்,செயல்,வினை,சடங்கு

கிரிமி,கிருமி - உயிரி,பூச்சி,புழு

கிரீடம் - முடி

கிருஷி - பயிர்,உழவு,பயிர் செய்கை

கிலம் - கழிவு,அழிவு,சிறுமை

கிலேசம் - அச்சம்,கவலை,துன்பம்

கீதம் - இசை,பாட்டு,பாடல்,இசைப்பாட்டு

கீர்த்தனம்,கீர்த்தனை - புகழ்ச்சி,புகழ்ப்பா

கீலகம் - ஆணி,பொருத்து

குஞ்சரம் - யானை

குஷ்டம் - தொழு நோய்,பெரு நோய்

குணஷ்டை - தொல்லை,துன்பம்

குதர்க்கம் - அழிவழக்கு

குதூகலம்,குதுகலம் - பெருங்களிப்பு,பெருமகிழ்வு

குபேரன் - பெருஞ்செல்வன்,செல்வக்கடவுள்

குமரி,குமாரி - நங்கை,மணமாகாப்பெண்,புதல்வி,மகள்

கும்பம் - குடம்

குருகடாட்சம் - ஆசிரியனருட்பார்வை

குரோதம் - உட்பகை

குலாலன் - குயவன்

குலிசம் - வேற்படை

குன்மம் - சூலை,வயிற்று வலி

கேதம் - துன்பம்,இடர்,குற்றம்

கேவலம் - சிறுமை,தனிமை

கோகிலம் - குயில்

கோடம்,கோஷம்,கோஷ்டம் - முழக்கம்,பேரோசை

கோஷ்டி - கூட்டம்

கோடி - நூறு நூறாயிரம்

கோதண்டம் - வில்

கோளகை,கோளம் - உருண்டை,வட்டம்

கெளரவம் - மேன்மை,பெருமை

சக - கூட,உடன்

சகசம்,ஸகஸம் - இயற்கை,ஒற்றுமை

சகஸ்ரநாமம் - ஆயிரந்திருமொழி,ஆயிரந்திருப்பெயர்

சகமார்க்கம் - தோழமை நெறி

சகலம் - எல்லாம்

சகவாசம் - கூடவிருத்தல்,உடனுரைதல்,பழக்கம்,சேர்க்கை,நட்பு

சகா - தோழன்,துணை

சகாப்தம் - ஆண்டு,நூறாண்டு

சகாயம் - நயம்,நன்மை,மலிவு,பயன்,உதவி,துணை

சகி,சகீ - தோழி

சகிதம் - உடன்

சகுணம் - குணத்தோடு கூடியது

சகுந்தம் - கழுகு,பறவை

சகுனம் - குறி

சகோதரம் - உடன்பிறப்பு

சகோதரி - உடன்பிறந்தாள்

சக்கரம் - உருளை,வட்டம்

சக்தி - ஆற்றல்,வல்லமை,வலி

சங்கடம்,சங்கட்டம் - இக்கெட்டு,நெருக்கடி,இடர்,கண்மூடுதல்

சங்கிதை - தொகுதி,வரலாறு

சடுதி,சடிதி - விரைவு

சஷ்டியப்த பூர்த்தி - அறுபதாமாண்டு நிறைவு

சண்டப்பிரசண்டம் - மிகு விரைவு

சண்டமாருதம் - பெருங்காற்று,கடியகாற்று,புயற்காற்று

சண்டாளம் - தீமை,புலைத்தன்மை,நம்பிக்கை கேடு

சண்டாளர் - தீவினையாளர்,இழிஞர்

சண்டித்தனம் - முருட்டுத்தன்மை,முரட்டுத்தன்மை

சதகோடி - நூறு கோடி

சதசு - அவை

சதம் - நூறு நிலை

சதானந்தம் - இடையறா வின்பம்

சதி - இறைவி,அழிவு,வஞ்சனை,சூழ்ச்சி

சந்தகம் - எப்பொழுதும்

சந்தானம் - வழி,வழித்தொடர்பு

சந்தித்தல் - எதிர்படுதல்,கூடுதல்

சந்திரலோகம் - திங்கள் உலகு,அம்புலியுலகம்

சந்திரன் - பிறை,கலையோன்,இரவோன்,அலவன்,அல்லோன்

சந்து - முடுக்கு,இயங்கும் உயிர்,தூது,பிளப்பு,பொருத்து

சந்துட்டம்,சந்துஷ்டி,சந்தோஷம் - மகிழ்ச்சி

சந்தேகம் - ஐயம்,ஐயுறவு

சந்தோஷம் - மகிழ்ச்சி,உவகை,களிப்பு

சன்னதி,சந்நதி,சந்நிதானம் - திருமுன்

சந்நியாசம் - துறவு,துறவறம்

சபதம் - ஆணை,உறுதிமொழி,வஞ்சினம்

சபம்,ஜெபம் - உருவேற்றல்

சபலம் - நிறைவேறல்,வெற்றி,நடுக்கம்,ஏக்கம்,இச்சை,அவா

சபா,சபை - அவை,மன்றம்,கழகம்,அரங்கம்

சபித்தல் - தீமொழி கூறல்,சினந்துரைத்தல்

சமஷ்டி - தொகுதி,எல்லாம்

சமதை - ஒப்பு

சமர்த்தன்,சமத்தன் - வல்லான்,வல்லவன்,திறமையாளன்

சமஸ்தானம்,சமத்தானம் - அரசவை,தலை நகர்

சமம் - இணை,ஈடு,மட்டம்,போர்,நடு,ஓர்மை

சமரச தத்துவம் - பொதுநிலையுண்மை

சமரசம் - பொது,வேறுபாடின்மை,ஒற்றுமை

சமர்ப்பணம் - ஒப்பித்தல்,உயர்ந்தோர்க்குக் கொடுத்தல்

சமாதானம் - அமைதி,இணக்கம்,தணிவு,உடன்பாடு,தக்கவிடை

சமாதி - அமைதி,பிணக்குழி,பேசாதிருத்தல்,இறப்பு,மரித்தல்

சமாப்தம்,சமாப்தி - முற்றுப்பெற்றது

சமாராதனை - உளநிறைவு

சமி,ஷமி - பொறு

சமிதை - வேள்வி விறகு,உலர்ந்த குச்சி

சமீபம் - அருகு,அணமை,மருங்கு

சமீன்தார்,ஜமீந்தார் - நிலக்காரன்,பெருநிலக்கிழார்

சமுதாயம் - குமுகம்,கூட்டம்

சமுத்திரம் - கடல்

சமை,ஷமை - பொறுமை

சம்சாரம்,சம்ஸாரம் - குடும்பம்,இல்லாள்,இல்லத்தரசி

சம்பத்து - செல்வம்,பொருள்

சம்பந்தம -உறவு,பற்று,இயைபு,சார்பு,தொடர்பு,பொருத்தம்

சம்பிரதாயம் - தொல்வழக்கு,முன்னோர் முறை,பண்டை முறை

சம்பு ரேட்சணம் - தெளித்தல்

சம்பூரணம் - நிறைவு

சம்மதம் - உடன்பாடு,ஒப்புமை,இயைபு

சம்ரஷணை - பாதுகாப்பு

சயம்,ஜெயம் - வெற்றி

சரணம்,சரண் -அடைக்கலம்,வணக்கம்,கால்,திருவடி

சரணாகதி - புகலடைதல்,அடைக்கலம்

சராசரம்,ஜங்கமா - இயங்கியற் பொருள், நிலையியற் பொருள்

சரிதம்,சரிதை,சரித்திரம் - வரலாறு

சரீரம் - உடல்,யாக்கை,மெய்

சருமம்,சர்மம் - தோல்

சர்ப்பம் - பாம்பு

சர்வகலாசாலை -

பல்கழைக் கழகம்

சலதளம்- அரசமரம்

சலதாரை - நீர்க்கால்,நீரோட்டம்,மதகு

சலதோசம் - நீர்க்கோர்வை,தடுமம், நீர்க்கோவை

சல்லாபம் - உரையாடல்

சவம் - பிணம்

சவுகரியம்,செளக்கியம்,செளகரியம் -நலம்

சவுந்தரியம்,செளந்தரியம்,சவுந்தரம் - அழகு

செளபாக்கியம்,சவுபாக்கியம் - செல்வம்

சற்காரியம் - உற்பொருளினின்று தோன்றும் வினை

சற்குணம் - நல்லியல்பு

சனனம்,ஜனனம்,சனிப்பு,சன்மம் - பிறப்பு

சாகசம் - ஆற்றல்,துணிவு,நெருக்கிடை

சாகரம் - கடல்

சாகுபடி - பயிர் செய்தல்

சாகை,ஜாகை(உருது) - தங்குமிடம்

சாக்கிரதை,ஜாக்கிரதை - விழிப்பு,உன்னிப்பு,எச்சரிக்கை