வட மொழி - தமிழ் மொழி

பின் நவீனத்துவம் - பின் புதுமையியல்

அகங்காரம் - செருக்கு,இறுமாப்பு,முனைப்பு,யானெனல்

அகடவிகடம் - குறும்பு,மாற்று,மாறுபட்டது

அகதி - அறவை,வறியன்,எதிலி,புகலிலான்,யாருமற்றவன்,ஏழை

அகந்தை - இறுமாப்பு,செருக்கு

அகம் - உள்ளே,உயிர்,நான்,மனம்,மனநிலை,எண்ணம்

அகம்பாவம் - தற்பெருமை,செருக்கு

அகராதி - அகரமுதலி,அகரவரிசை,அகரநிரல்,அகரமுதல்

அகிம்சை - இன்னா செய்யாமை,கொல்லாமை

அஹிம்சை - இன்னா செய்யாமை,கொல்லாமை

அகோரம் - அழகின்மை,கொடுமை,நடுக்கம்

அக்கணம் - அப்பொழுது,அந்நொடி

அக்கரம் - எழுத்து

அட்சரம் - அழிவில்லாதது

அக்கியாணி - அறிவிலான்

அஞ்ஞானி - புல்லறிவாளன்

அக்கிரகாரம் - பார்ப்பனச் சேரி

அக்கிரமம் - ஒழுன்கின்மை,முறைகேடு

அக்கிராசனம் - முதலிருக்கை,தலைமை

அக்கினி,அக்நி - நெருப்பு,தீ,அனல்,எரி

அங்கப்பிரதட்சணம் - உடல் வலமுருளல், வலம் புரளல்

அங்கீகாரம்,அங்கீகரணம் - உடன்,செப்பு

அங்குலம் - விறக்கட்டை,விரலளவு

அசத்தை,அசத்தியம் - பொய்

அசரம்- அசைவில்லாதது,இயங்காதது,நிலையியல்

அசரீரி - வானொலி,உருவற்றது

அசித்து - பயனின்மை

அஜீரணம்,அசீரணம்- செரியாமை,பசியின்மை,அழிவுபடாமை

அசுத்தம் - அழுக்கு,துப்புரவின்மை,தூய்மையின்மை

அசேதனம் - அறிவில்லாதது,அறிவிலி,அறிவில் பொருள்

அசெளரியம் - நலமின்மை,இடைஞ்சல்

அஞ்சலி - கும்பிடல்,வணக்கம்

அஞ்சனம் - மை,கறுப்பு,இருள்

அஞ்சிட்டம் - கதிரவன்

அஞ்ஞாதம் - மறைவு,அறியப்படாதது

அஞ்ஞாத வாசஸ்தலம் - மறைந்துறைவிடம்

அட்சயப் பாத்திரம் - திருவோடு,ஏற்போடு,அள்ள அள்ளக் குறையாதது

அட்டதிக்கு பாலகர் - எண்புறக்காவலர்

அட்டபந்தனம் - எண்புறக்கட்டு

அண்டம் - முட்டை,உலகம்,வித்து,மூலம்

அதமம் - கீழ்மை,கடைத்திரம்

அதர்மம்,அதருமம் - தீவினை,அறமின்மை,மறம்

அதிகப்பிரசங்கம் - மிகுபேச்சு,தன் மேம்பாட்டுரை,மற்றொன்று விரித்தல்

அதிகாரி - அலுவலர்,தலைவன்,முதல்வன்,உடையவன்

அதிகாலம் - விடியற்காலம்

அதிகாலை - விடியற்காலம்,புலரிக்காலை

அதிஷ்டவசம் - நல்வினைப்பயன், நல்வினை வயம்

அநந்தகோடி - எண்ணத்தொலையாதன

அநந்தம் - அளவின்மை,முடிவில்லது

அநாதை - யாருமற்றவன்,தாய்தந்தையிலான்

அநித்தம்,அநித்தியம் - அழிவு,நிலையற்றது,நிலையாமை

அநீதி - முறைகேடு

அநுக்கிரகம் - அருளிரக்கம்,அருள்

அநுசரணை - சார்பு,சார்பு நிலை

அநுசிதம் - பொய்,தகாதது

அனுபவம் - பழக்கம்,வழக்கம்,நுகர்ச்சி

அனுமினம் - ஐயம்,வழியளவை,கருதலளவை

அனுமானப் புரமானம் - கருதலளவை

அநேகர் - பலர்

அந்தகன் - அழிப்போன்,குருடன்

அந்தகாரம் - இருள்,அறியாமை

அந்தக்கரணங்கள் - அகக்கருவிகள்

அந்தஸ்து - நிலைமை,ஒழுங்கு,நிலை

அந்தரம் - வான்வெளி,இடைவெளி,துணையின்மை,காலம்

அந்தி - முடிவு,மாலைக்காலம்

அந்திய கிரியை - இறுதிச் சடங்கு

அந்நியர் - பிறர்,அயலார்

அந்நியோந்நியம் - நெருக்கம்,ஒற்றுமை,ஒருவொருக்கொருவர்

அபயம் - அடைக்கலம்,அச்சமின்மை,புகலிடம்,அஞ்சேலெனல்

அபாயம் - பேரிடர்,அழிவு,கேடு,துன்பம்,இடுக்கண்,இக்கட்டு

அபாரம் - சிறப்பு,அளவின்மை,கேடு

அபிதானம் - பெயர்

அபிநயம் - நடிப்பு,கூத்து,கைமைய்காட்டல்,உள்ளக் குறிகாட்டல்

அபிப்பிராயம் - நோக்கம்,எண்ணம்,உட்கருத்து,உள்ளப்போக்கு

அபிமானம் - பற்று,நேயம்,செருக்கு

அபூர்வம் - அரிது,அருமை,அரிய பொருள்

அபேச்சை -அவா,விருப்பம்

அபேதம் - ஒற்றுமை,வேற்றுமையின்மை,வேறன்மை

அப்பியாசம் -பழக்கம்,பயிற்சி

அப்பிரதட்சிணம் - இடப்புறச் சுற்று, இடப்பக்கச் சுற்று

அமரத்துவம் - அழிவின்மை

அமலன் - துயோன்,கடவுள்,வாலறிவன்

அந்நியர் - பிறர்,அயலார்

அதிகம் - மிகுதி,அளவின்மை

அமிர்தம்,அமிருதம் - இனிமை,அருமருந்து,சாவா மருந்து,அழிவினமை

அமச்ம் - வகை,பங்கு,காலம்,எண்,அன்னப்புள்

அம்பாரம் - குவியல்

அயோக்கியம் - தகுதியினமை,தகாதது

அயோக்க்கியன் - தகுதியற்றவன்,தகவிலான்,கெட்டவன்

அரணியம் - காடு

அருச்சனை,அர்ச்சனை - வழிபாடு, பூ வழிபாடு,மலர் வழிபாடு

அருத்தம்,அர்த்தம் -பொருள்,பாதி

அருவம் - உருவின்மை,அழகின்மை

அர்த்தநாசம் - பேரழிவு,பொருளழிவு

அர்ப்பணம் - உரிமை கொடுத்தல், ஒப்புவித்தல், நீரோடு கொடுத்தல்

அலங்காரம் - அழகு,ஒப்பனை,அணி,புனைவு

அலச்சியம் - பாராமுகம்,பொருட்படுத்தாமை,கருத்தின்மை

அவகீர்த்தி - இழிவு,புகழின்மை

அவக்கியாதி - வசை,இகழ்ச்சி

அவசரம் - விரைவு,பரபரப்பு,சுருக்கு,பதைப்பு

அவசியம் - முதன்மை,கட்டாயம்,இன்றியமையாமை

அவதரித்தல் - பிறத்தல்

அவதாரம் - பிறப்பு,இறங்குகை

அவதானம் - எச்சரிக்கை,ஒழிவு,நினைவு,விரித்தல்,மறப்பின்மை

அவநம்பிக்கை - நம்ப்பிக்கைக்குறை

அவமரியாதை - முறைதவறல்,வணக்கமின்மை,தீயமுறை

அவமானம் - மானக்கேடு,இழிவு,குறைவு,இளிவரவு

அவயவம்,அவையவம் - உறுப்பு

அவலன் - உடற்குறையன்,வீணன்

அவசு,ஹவிசு - தூய உணவு,சோறு,நெய்,

அற்பம்,அல்பம் - சிறுமை,அணு,புன்மை,இழிவு

அனங்கன் - உடலிலான்,கடவுள்,காமவேள்

அனாதி - கடவுள்,தனியன்,பழமை,தொன்மை

அனுதாபம் - இரக்கம்

அனுபவம் - பழக்கம்,வழக்கம்,அழுந்தியறிதல்,பட்டறிவு

அனுமானம் - உய்த்துணர்தல்,கருதல்ளவை,வழியளவை

அனேகம் - பல,எல்லாம்

அன்னதானம் - சோற்றறம்,சோற்றுக்கொடை,உணாக்கொடை

அன்னம் - சோறு,உணவு,அடிசில்

அன்னியன் - பிறர்,அயலார்

அன்னியோன்னியம் - ஒற்றுமை,நெருக்கம்,ஒருவர்க்கொருவர்

ஆகம் -உடல்,மார்பு

ஆகரு(ர்)ஷண சக்தி - இழுப்பாற்றல்,இழுவழி,சேர்வழி

ஆகாசம்,ஆகாயம் - விண்,வெளி,வான்,விசும்பு,வர்னம்

ஆகாய விமானம் - வான ஊர்தி

ஆகாரம் - உணவு,அடிசில்,உடம்பு,வடிவு

ஆக்கியாபித்தல்,ஆஞ்ஞாபித்தல் - கட்டளையிடல்

ஆக்கிரமித்தல் - வலிந்து கவர்தல்,வலிமை காட்டல்

ஆட்சேபம் - மறுமொழி,மறுத்துக்கூறல்,தடைமொழி

ஆங்காரம் - இறுமாப்பு,செருக்கு,தருக்கு

ஆச சங்கை -ஐயம்

ஆசாபாசம் -அன்பு,பற்று,அவா

ஆசாரம் - ஒழுக்கம்,வழக்கம்,நன்னடை,வழிபாடு,துப்புரவு

ஆசியம்,ஹாசியம் - எள்ளல்,நகை,சிரிப்பு

ஆசீர்வாதம் - வாழ்த்துரை

ஆசுவாசம் - இளைப்பாறுகை

ஆசை - விருப்பம்,அவா,பற்று,வேட்கை,விழைவு

ஆச்சரியம் - புதுமை,வியப்பு,இறும்பூது

ஆ(ச்)சிரமம் - இலைக்குடில்,பாழி,முனிவருறயுள்

ஆஸ்திகம் - கடவுளுண்டெனுங்கொள்கை

ஆஸ்பத்திரி - மருத்துவச்சாலை

ஆஞ்ஞாபித்தல் -கட்டளையிடல்

ஆஞ்ஞை -ஆணை,கட்டளை

ஆடம்பரம் - ஆரவாரம்,பகட்டு

ஆட்சேபம்,ஆட்சேபனம் - தடைமொழி,மறுமொழி,எதிர்மொழி,மறுப்பு

ஆதங்கம் - ஆற்றாமை,அச்சம்,நோய்

அந்நியர் - பிறர்,அயலார்

ஆதவ(ப)ன் - பகலோன்,கதிரோன்

ஆதரவு - துணை,உதவி,சார்பு,பற்றுக்கொடு

ஆதி - முதல்,பழமை,அடி,தொடக்கம்,காரணம்,எழுவாய்,கடவுள்

ஆப்தம்,ஆத்தம் - அன்பு,நட்பு

ஆத்தானம்,ஆஸ்தானம் - நகரவாயில்,அறமன்றம்,கொடிமுடிவாயில்

ஆத்திரம்,ஆத்திரியம்,ஆத்திரவம் - உளக்கொதிப்பு,விரைவு,பரபரப்பு

ஆத்துமா,ஆன்மா - உயிர்

ஆந்ந்தம் - இன்பம்

ஆபத்து -இடர்,துன்பம்,இக்கெட்டு,ஊறுபாடு,இடுக்கண்

ஆபரணம் - அணிகலம்,இழை,நகை,அணி,பூண்

ஆபாசம் - அருவருப்பு,சிதைவு,கெடுதல்,பொய்,அளவைப்பொலி

அபூர்வம் - வினைப்பயன்

ஆமோதித்தல் - உடன்படல்,வழிமொழிதல்,மகிழ்தல்

ஆயக்கட்டு(துளுவம்) - மொத்த நஞ்சை நிலம்,களப்புரவு

ஆயத்தம்(இந்தி) - முயற்சி,எத்தனம்,முன்னேற்பாடு

ஆயா(போர்ச்சுக்கீஸ்) - செவலித்தாய்,கைத்தாய்

ஆயாசம்,ஆயாஸம் - களைப்பு,இளைப்பு,சோர்வு,அயர்வு,மயக்கம்

ஆயுசு,ஆயுள் - வாழ்நாள்,ஆண்டு

ஆயுதம் - கருவு,படைக்கலம்,படை,வாள்

ஆரணியம்,ஆரண்ணியம் - காடு

ஆரம்,ஹாரம் - பூமாலை,தொடையல்

ஆரம்பம் - தொடக்கம்

ஆரம்பித்தல் - தொடங்கல்

ஆராதனம் - வணக்கம்,மகிழ்வித்தல்

ஆரோகம்,ஆரோபம்,ஆரோக்கியஸ்நானம் - நல முழுக்கு,நோய் தீர்ந்தபின் முழுகல்

ஆரோக்கியம் - நலம்,நோயின்மை

ஆரோபணம்- நாட்டுதல்,ஏற்றுதல்

ஆரோபித்தல் - ஏற்றுதல்

ஆர்ச்சிதம் - தேட்டம்,தேடிய பொருள்

ஆர்மோனியம் - இசைக்கருவி

ஆர்வம் - அன்பு,விருப்பம்

ஆலகண்டண் - சிவன்,நஞ்சுமிடற்றன்,கறைமிடற்றன்

ஆலகம்- நெல்லிமரம்

ஆலம் - நஞ்சு

ஆலயம் - கோயில்

ஆலாபம்,ஆலாபனம் - அலப்பு,பேச்சு,உரையாடல்

ஆலோசனை - சூழ்தல்,சூழ்ச்சி,ஓர்வு,எண்ணம்,ஆராய்ச்சி

ஆவசியம் - கட்டாயம்,முதன்மை,இன்றியமையாமை

ஆவத்து,ஆபத்து - இக்கெட்டு,இடர்,பொல்லாங்கு

ஆவர்த்தி,ஆவருத்தம்,ஆவிருத்தி - தடவை,வரிசை,சுற்று,வழக்கம்

ஆவாகனம் - அழைத்தல்,உட்புகல்

ஆனந்தபரவசம் - இன்பக்களிப்பு,பேரின்பக்களிப்பு

ஆனந்தம் - இன்பம்,பேரின்பம்

ஆன்மா - உயிர்

இகம் - இவ்வுலகம்,இவ்விடம்,இப்பிறப்பு

இங்கிதம் - இனிமை,அடையாளம்,கருத்து,இடம் பொருள்

இச்சகம் - முகமன்

இச்சை - விருப்பம்,அவா,விழைவு,வேட்கை

இடபம்,ரிஷபம் - எருது,காளை,ஏறு,விடை

இட்டசித்தி - விருப்பப்பேறு

இதம்,ஹிதம் - இனிமை,நன்மை,அன்பு,அறம்

இதயம்,இதையம்,ஹிருதயம் - நெஞ்சம்,உள்ளம்

இதரம் - வேறு,இயல்,அழிவு,பகைமை

இதிகாசம் - பண்டை வரலாறு,பழங்கதை

இந்திர ஜாலம் - இமயவர்கோன்,வானவர் தலைவன்

இந்து - நிலா,திங்கள்,அம்புலி

இமாலயம்,ஹிமாலயம் - பனிமலை

இரகசியம் - மறைபொருள்,மறை,அற்றம்

இராசாபாசம் - அருவருப்பு,ஒழுங்கின்மை

இரசாயனம் - பொருளியைபு

இரட்சகம் - பாதுகாப்பு,மீட்பு

இரட்சை - காப்பு

இரணம்,ரணம் - புண்

இரதம்,ரதம் - தேர்

இரத்தம் - குருதி,செந்நீர்

இரத்தினம்,ரத்தினம் - மாமணி,செம்மணி

இரம்பம்,ரம்பம் - ஈர்வாள்

இராகம்,ராகம் - இசை,பண்,அவா,விருப்பு

இராகு - கருங்கோள்

இராக்கதர் - அரக்கர்

இராசசூயம் - அரசர் வேள்வி

இராசா - அரையன்,மன்னன்,அரசன்

இராச்சியம் - நாடு,அரசியல்

இராத்திரி - இரவு,கங்குல்

இருஷி,இருடி - முனிவன்,தவசி,துறவி

இதய கமலம் - நெஞ்சத்தாமரை

இருது - பருவம்,மகளிர் முதற்பூப்பு

இரேகை - வரி,எழுத்து,கையிறை,நிறை,தொடர்

இலகிரி,லகிரி,லாகிரி - வெறி,மயக்கம்

இலகு,லகு - எளிது,நொய்மை,நுண்மை,ஈரம்,பலா மரம்

இலங்கணம் - பட்டினி

இலஞ்சம் - கைக்கூலி,கையூட்டு,கையுறை

இலட்சணம்,லட்சணம் - அழகு,பார்வை

Friday, November 6, 2009

பிடித்ததும், பீடித்ததும் -எனது பார்வையில்

பிடித்தவர்கள், பிடிக்காதவர்களை பற்றிய தொடர் பதிவுக்கு அன்பின் நண்பர் ஜீவன் என்கிற தமிழ் அமுதன் அழைத்திருந்தார். இது ஒரு போட்டு வாங்கும் செயலாகவோ அல்லது மல்டி லெவெல் மார்க்கெட்டிங் என்றோ எடுத்துக்கொள்ளாமல், நம்மையும் மதித்து அழைப்பு அனுப்பியவருக்கு பெருமை சேர்க்கும் விதத்தில் எனது பதிவில் பிடித்தவர்களையும்,பீடித்தவர்களையும்(பிடிக்காதவர்களையும்) எனது பார்வையில் தர முயன்றிருக்கிறேன்.

எனக்கு யாரையும் நூறு விழுக்காடு பிடிப்பதில்லை நூறு விழுக்காடு பிடிக்காமலும் இருப்பதில்லை. அப்படி நூறு விழுக்காடு இவரை எனக்குப் பிடிக்கும் என்று சொல்கிறவர்களை, இவர்கள் ஒப்பனையாகத்தான் சொல்கிறார்கள் என்று சொல்ல முடியும்.


தலைவர்

எனக்கு பிடித்த தலைவர்கள் இருவரின் மறைவும் இன்னும் உறுதிப்படுத்தப் படவில்லை.
மற்றவர்களைப் பார்ப்போம்.

பிடித்ததும், பிடிக்காததும்

மன்மோகன் சிங் :

பிடித்தது: இந்தியாவில் புதிய பொருளாதாரக் கொள்கையை அறிமுகப்படுத்தி செயல்பட்டவர்.

பிடிக்காதது: அணு ஒப்பந்தத்தை நிறைவேற்றுகிறேன் என்று இந்தியாவை ஒட்டுமொத்தமாக அமெரிக்காவிடம் அடகு வைத்தது. நல்லது கெட்டது எதுவாக இருந்தாலும் சோனியா சொன்னால் தலையாட்டுவது. பேசாம சோள கொல்லையில நின்னா காக்கா, குருவி, நரி எதும் வராது. இரை(றை)யாண்மை மேம்படும். இலங்கை இனப்படுகொலைக்கு பொய் சொல்லிக்கொண்டே ஆயுதம் உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் செய்து அந்த கோர நிகழ்வுகளுக்குக் காரணகர்த்தாவாக இருந்தது.

கருணாநிதி :

பிடித்தது: வசனங்களில் தனது தமிழ் வல்லமையைத் தமிழ் உலகுக்குக் காட்டி தமிழ் மக்களின் இதயத்தில், அண்ணாவின் இரவல் இதயத்துடன் குடிபுகுந்தவர், கட்டுடைக்க முடியாதத் தொண்டர்களைக் கொண்ட கவிஞர்.

பிடிக்காதது: ”அடைந்தால் திராவிட நாடு இல்லையேல் சுடுகாடு” அன்றைய முழக்கம், இன்று ”வடக்கு வழங்குகிறது தெற்கு தேறுகிறது”. கழகம் எனது குடும்பம் என்று சொல்லிச் சொல்லியே தனது குடும்பத்தை கழகமாக்கியது. பெரியார்,அண்ணா என்றால் என்னா என்று கேட்கும் அளவில் அவர்களது கொள்கைகளை மதிப்பது. இனமானக் காவலர் என்று சொல்லிக்கொண்டே ஒர் இனம் அழிக்கப்படும்போது, அதற்கு மத்திய அரசு செய்த எல்லா உதவிகளுக்கும் உறுதுணையாக இருந்தது. தனக்குச் சொந்தமான ஊடகங்களில் அது பற்றிய செய்திகள் வராமல் இருட்டடிப்பு செய்தது. ஒட்டுமொத்தமாக துடைத்தொழிக்கப்படும் வரை அனைவரையும் பொறுத்திருக்கச் சொன்னது. உண்ணாவிரத நாடகம், மருத்துவச்சாலை நாடகம், ஈழமக்களின் ரணம் ஆறாமல் இருக்கும் போது அம்மக்களையும் சேர்த்துகொண்டு உலகத் தமிழ் மாநாடு நடத்தி ஈழமக்களின் அவலத்தை இருட்டடிக்க முயல்வது. இப்போது செம்மொழி மாநாட்டுக்காக தமிழக அகதிகள் முகாம்களுக்கு தனது சகாக்களை அத்தி பூத்தார்போல் அனுப்பும் நாடகம். இன்னும் நிறைய சொல்ல முடியும்.


ஜெயலலிதா :

பிடித்தது: உறுதியான நிலைப்பாடு, காவிரி நீர் பிரச்சனையில் பிரதமர் நரசிமராவ் தலைமையில் நடந்த முதல்வர்கள் கூட்டத்திலிருந்து கருத்துக்கள் ஒவ்வாதபோது வெளி நடப்பு செய்தது, அதன் பலனாக உடனே காவிரியில் உடனடி நிவாரணமாக தண்ணீர் திறக்க ராவ் உத்தரவிட்டது. தமிழோ,ஆங்கிலமோ ஒரளவுக்குத் தூய்மையாகப் பேசுவது.

பிடிக்காதது: அடைந்தால் தமிழ் நாடு இல்லையேல் கொட நாடு என்கிற உப்பு சப்பில்லா நிலை. கழகம் எனது குடும்பம் என்று சொல்லிச் சொல்லியே கழகத்தை இன்னொரு குடும்பத்திடம் ஒப்படைத்தது. தடா,போடா என்ற சட்டங்களைப் பயன்படுத்தி தனக்கு பிடிக்காத தலைவர்களை சிறையில் தள்ளியது. மூத்த தலைவர்களை மண்டியிட வைத்து மாரியாத்தா ஆசி கொடுப்பது போல் நின்றுகொள்வது. தனி ஈழம் அமைக்கப் பாடுபடுவேன் என்று தேர்தல் நேரத்தில் சூளுரைத்துவிட்டு, தேர்தலுக்குப் பின் கொட நாடு பங்களாவில் குடிபுகுந்தது. ஈழமக்களைப் பற்றி தேர்தலுக்கு முன் ஒவ்வொரு கூட்டத்திலும் பேசிவிட்டு தேர்தல் முடிந்ததும் அது பற்றி வாய்திறக்காமல் இருப்பது. வளர்ப்பு மகனுக்கு ஆடம்பரமாகத் திருமணம் நடத்தி வைத்தது.

நடிகர்

பிடித்தவர் : கமலகாசன்,நாசர்,ரகுவரன்,பிரகாஷ்ராஜ்,கவுண்டமணி,விவேக்

பிடிக்காதவர் : பிரசாந்த்,ஜெயம் ரவி, சிம்பு,அஜித்


நடிகை

பிடித்தவர் : கே.ஆர்.விஜயா,ஸ்ரீதேவி,நயன்(9)தாரா,திரி(3)சா,தமன்னா(நடிப்பை மட்டும் சொல்லவில்லை)

பிடிக்காதவர் : சந்தியா,பிரியாமணி,மஞ்சுளா,ஸ்ரீபிரியா


பாடகர்

பிடித்தவர் : கே.ஜே.ஜேசுதாஸ்,ஹரிகரன்,டி.எம்.செளந்தர்ராஜன்,கார்த்திக்

பிடிக்காதவர் : அப்படி சொல்வதற்கு யாருமில்லை.


பாடகி

பிடித்தவர் : எஸ் .ஜானகி,சுவர்ணலதா,கவிதா சுப்பிரமணியம், சாதனா சர்க்கம்

பிடிக்காதவர் : அப்படி சொல்வதற்கு யாருமில்லை.


இயக்குநர்

பிடித்தவர் : மணிரத்னம்,பாலா,அமீர்,சீமான்,பாலுமகேந்திரா

பிடிக்காதவர் : ராஜ்கபூர்,இராம நாராயணன்,


கவிஞர்

பிடித்தவர் : வைரமுத்து,பாலா,மு.மேத்தா,சிற்பி,சுரதா,கு.க.சண்முகம்,புகாரி

பிடிக்காதவர் : வைரமுத்து(துரோகிகளைத் தெரிந்தும் வாழ்த்துப்பா பாடியே வாழப் பழகியதற்கு) , மற்ற பின் நவீனத்துவம் என்கிற பெயரில் தன்னுள் இருக்கும் வக்கிரத்தை பொதுவில் வைத்து பிரபலமாகிக் கொண்டிருக்கும் ஒரு சிலரை.


இசைஅமைப்பாளர்

பிடித்தவர் : ஏ.ஆர்.இரகுமான்,இளையராஜா,வித்யாசாகர்,விஜய் ஆண்டனி,யுவன் சங்கர் ராஜா

பிடிக்காதவர் : யாரையும் பிடிக்காது என்று ஒதுக்கி வைக்கும் நிலையில் குறிப்பிட முடியவில்லை. இளையராஜா போன்ற கொஞ்சம் தலைக்கணம் உள்ளவர்களைப் பிடிப்பதில்லை. தமிழ் பாடகர்களுக்கு வாய்ப்பளிக்காமல் கேரளம்,ஆந்திரா மற்றும் வட இந்தியாவில் பாடகர்களை தேடியதில் கொஞ்சம் வருத்தமும் உண்டு.


எழுத்தாளர்

பிடித்தவர் : சுஜாதா,எஸ்.இராமகிருஷ்ணன்,பட்டுக்கோட்டை பிரபாகர்(எங்க ஊர்க்காரர் ஆச்சே),ஜெயமோகன்(இவர்களது எழுத்து பிடிக்கும். கொள்கை மற்றும் நிலைப்பாடு அல்ல)

பிடிக்காதவர் : சாரு நிவேதிதா(கொள்கை மற்றும் தலைக்கணத்துக்கு)


பேச்சாளர்

பிடித்தவர் : தமிழ்க்குடிமகன்,வைகோ,சுகி சிவம்,சரஸ்வதி இராமனாதன்,தமிழருவி சிவகுமாரன்,தமிழருவி மணியன், இளசை எஸ்.சுந்தரம்,உவமைக் கவிஞர் சுரதா, வலம்புரி ஜான், பேராசிரியர் சோ.சத்தியசீலன், மன்சூர்,டாக்டர் செல்வகணபதி.

பிடிக்காதவர் : அவர்களே, அவர்களே என்று ஆரம்பித்து பேச்சை முடிக்கக் காத்திருக்கும் அரசியல் வியாதிகள். கழகங்களின் தலைமைக் கழக சிறப்புப் பேச்சாளர்களின் விரசமானப் பேச்சு. அதுதான் கழகங்களின் சிறப்பு.

இதே போன்ற பதிவினைத் தொடர நான் அழைக்கும் பதிவர்கள்

1) கோவி.கண்ணன்
2) சஞ்சய் காந்தி
3) ஜோ
4) குழலி
5) முகவை மைந்தன்

அவர்களும் சிறப்பு செய்வார்கள் என்கிற நம்பிக்கையுடன்,

அன்பன்,

அத்திவெட்டி ஜோதிபாரதி

”உண்மையைச் சொல்வேன்; நல்லதைச் செய்வேன் வேறொன்றும் தெரியாது எனக்கு”







Saturday, October 31, 2009

சிங்கப்பூர் கவிஞர் பாண்டித்துரைக்கு வாழ்த்துகள்!




சிங்கப்பூர் இலக்கிய உலகின் தவிர்க்க முடியாத அங்கம், “ நாம்” இலக்கிய இதழின் ஆசிரியர், அண்மையில் “தனி” குறும்படத்தைத் தயாரித்து அளித்தவர், சிங்கப்பூர் கவிமாலை கவிஞர், நம் சக பதிவர், நண்பர் நீதிபதி பாண்டித்துரை அவர்கள் சிங்கப்பூர் அரசாங்கத்தால் வழங்கப்படும் தங்கமுனை பேனா விருது வழங்கும் விழாவில் மூன்றாம் பரிசை(சிங்கப்பூர் வெள்ளிகள் - இரண்டாயிரம் ரொக்கம்) பெற்றிருக்கிறார் என்பதை அறிந்து மகிழ்கிறோம். அவருடைய இலக்கியப் பணி மேன்மேலும் சிறக்க வாழ்த்துவோம்.


அன்புடன்,
அத்திவெட்டி ஜோதிபாரதி.







Thursday, October 22, 2009

"தனி" குறும்படம் வெளியீடு - அழைப்பிதழ்




எதிர்வரும் 24.10.2009 சனிக்கிழமை மாலை 6.15 மணிக்கு சிங்கப்பூர் ஆங்மோகியோ நூலகத்தில் "தனி" குறும்படம் வெளியீடு காண்கிறது. அதுசமயம் கல்லூரி,தம்பி திரைப்பட ஒளிப்பதிவாளர் செழியன் அவர்கள் சிறப்புரையாற்றுகிறார்கள். அனைவரும் வருக!


அன்புடன் அழைப்பது

பாண்டித்துரை 82377006

அறிவுநிதி 90356113







இலங்கை பேராசிரியர் தமிழருவி த.சிவகுமாரன் சிங்கப்பூர் வருகை - தொடர் சொற்பொழிவு



அன்பிற்கும் பாசத்திற்கும் உரிய அருமை உடன்பிறப்பு, வவுனியா தமிழ்ச் சங்கத் தலைவர், தமிழர் தேசிய கல்லூரி பேராசிரியர் தமிழருவி த.சிவகுமாரன் அவர்கள் சிங்கப்பூர் வந்திருக்கிறார்கள். ஒரு வாரகாலத்திற்கு கந்தனின் கனியமுதம் தொடர் பேருரையாக,
சிங்கப்பூர் சிலோன் சாலை செண்பக விநாயகர் ஆலயத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தலைப்பில் சுவைபட உரை நிகழ்த்துகிறார்கள்.
அனைவரும் வருக! தமிழ்த்தேன் பருக!!


அன்புடன்,
அத்திவெட்டி ஜோதிபாரதி.








Friday, October 16, 2009

கருணாநிதி,அனுரா-யார் சொல்வது உண்மை அல்லது யார் சொல்வது பொய்?

15 நாட்களுக்குள் 58 ஆயிரம் தமிழர்களை மறுகுடியேற்றம் செய்ய இலங்கை அரசு முடிவு செய்துள்ளது என்று தமிழக முதல்வர் கருணாநிதி கூறியிருப்பது குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது என்று இலங்கை செய்தித்துறை அமைச்சர் அனுரா பிரியதர்ஷன் யாபா கூறியுள்ளார்.

இலங்கை சென்று திரும்பிய திமுக - காங்கிரஸ் குழு தமிழகம் திரும்பியதும் முதல்வர் கருணாநிதியை சந்தித்து தங்களது அறிக்கையைக் கொடுத்தனர். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் கருணாநிதி, 15 நாட்களுக்குள் 58 ஆயிரம் தமிழர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பும் பணியை வியாழக்கிழமை முதல் மேற்கொள்ளப் போவதாக இலங்கைத் தரப்பு தெரிவித்துள்ளதாகவும், மற்றவர்கள் படிப்படியாக மறு குடியமர்த்தப்படுவர் என்றும் தெரிவித்தார்.

இதுகுறித்து நேற்று அமைச்சர் யாபாவிடம் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்குப் பதிலளித்த அவர், இதுகுறித்து எனக்கு எதுவும் தெரியாது. அரசின் கொள்கைப்படி, தமிழர்கள் கெளரவத்துடன் மறுகுடியமர்த்தப்படுவர் என்று மட்டும் தெரிவித்தார்.

இதில் தமிழக முதல்வர் மு.கருணாநிதி அவர்கள் சொல்வது உண்மையா?அல்லது இலங்கை செய்தித்துறை அமைச்சர் அனுரா பிரியதர்ஷன் யாபா சொல்வது உண்மையா?

அல்லது இரண்டும் பொய்யா?

நன்றி: தட்ஸ்தமிழ்.

எண்ணச் சிதறலில் தீபாவலி - ஈழமக்கள்




மாற்றுத்துணியில்லா
மண்ணின் மைந்தர்கள்
மறத்தை உரமாக்கி
மங்கிப் போன ஓவியங்கள்
பருக்கைகளுக்கு பகலிரவாய்
காத்திருக்கும் காவியங்கள்
குடி நீருக்கு
குடங்களுடன் மட்டுமல்ல
குற்றுயிருடன் விழிப்பு
குளிப்பதற்கு பிறவிப் பெருங்கடல்
இருந்தால் நீந்த முடியும்
அயலார் வருகையும்
வழமையான வினாக்களும்
தொடரும் கனாக்களும்
வேடிக்கை பார்க்க
வீணர்களின் வருகை
கிளிகளைக் கூண்டில் அடைத்து
ஆடச் சொல்லும் அவலம்
தினம் தினம் காணாமல் போகும்
உறவுகளால் மனவதை
பால் இல்லாப் பாலகர்கள்
பகலவன் வந்துபோவதை பார்த்து
பசியாற முடியுமா?
வல்லாருக்கு வாய் பிளக்கும்
வல்லாதிக்க வரைவுத்திட்டம்
இல்லாருக்கு இறங்குமா?
சொல்லார் சுயமாய்
உண்மை உரைப்பின்
உடுக்கை பறக்குமே
உயிர் போகும் வரை
பிழைத்துக்கொள்ள
உரிமை மறுப்பதேனோ?
வருகைக்காக ஏங்கும்
மண்புழுக்கள் எலிகள் நண்டுகள்
எருதுகள் எங்கோ?
பசுவின் பாலிற்கு ஏங்கும்
பாலகர்கள் செய்த பாவம்தான் என்ன?
மரித்துப்போன மனிதம்
மறுமுறை பிறக்கும் என்ற நம்பிக்கை
ஆள் அரவம் இல்லாத
குட்டிச்சுவர்கள்
வெளிச்சத்திற்காக
ஏக்கத்துடன்
முட்கம்பி வேலிக்குள் வாடும்
முல்லை மலர்கள்
தொடுக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்ட
தீபாவலி








Saturday, October 10, 2009

முத்து வரிகளில் சொட்டு விடும் கண்ணீர்த் துளிகள்


எழுதாத வரிகள்

எழுதாதக் கவிதைகளை
கண்ணீரால்

இரட்டை வரிகளில் எழுதும்

உதிரும் கவிதைகள்

உதிரக் கவிதைகள்


அன்றும் இன்றும்

அன்று

எனக்கு நடக்க முடியாத போது

வேலி தாண்டிய

கண்ணுக்குட்டியை

பிடித்து கொண்டு வந்து கொடுத்தது

எங்கள் கறுப்பு நாய்

இன்று

எனக்கு கண் தெரியவில்லை

படுக்கையில் நான்

வெத்துலாக்குப் பொட்டி வேண்டும் எனக்கு

எலே நடுளவனே

இந்த வெத்துலாக்கு பொட்டிய

எடுத்துத் தாடா என்றேன்

நான் பக்கத்து வீட்டுப்பையன்

என்கிறான் பேரன்




ஆக்கிரமிப்பு

நம்ம அருணாச்சலம்

சீன மொழி கற்றுக்கொண்டிருக்கிறான்

வாருங்கள் நாம்

சிங்கள மொழியைக் கற்றுக்கொள்வோம்
அன்னை மொழி தவிர்த்து

அண்டை மொழிகளைக் கற்றுத் தேர்ந்தால்

அடிமை சாசனம் எனும் ஆசனம் உறுதியாம்

சென்னை டு திருப்தி எம்.பி எக்ஸ்பிரஸ் இலங்கை பயணம்




இலங்கைக்கு பயணம் செய்யும்
இன உணர்வுத் தங்கங்களே
வழி மாறி
திருப்பதிக்குச் சென்று
மொட்டை போட்டுக்கொண்டு
வந்து விடாதீர்கள்
நீங்கள் வரலாற்றுப் பிழை
மட்டுமல்ல
எழுத்துபிழையும் செய்வீர்கள்
”ப” உங்களுக்குப் பிடித்தமானதுதான்
அதற்காக அதை எடுத்துக்கொண்டு
இறுதியாக திருப்தி
என்று சொல்லிவிடாதீர்கள்
உங்களைக் கோமாளிகள் என்றதை
மனதில் நிறுத்துங்கள்
மனிதம் மரிப்பதை
நின்று பாருங்கள்
நிறுத்துப்பாருங்கள்
உண்மை பேசுங்கள்
நன்மை செய்யுங்கள்
உங்களுக்கு ரத்தினக்கம்பளம்
கூட விரிக்கப்படலாம்
அது உங்களை வீழ்த்தும் வலை
சிங்கள ரத்னா
கூட கொடுக்கப்படலாம்
அது உங்கள் சிறை
விருந்து
கூட வைக்கப்படலாம்
அது உங்களுக்கு மருந்து
தமிழே
நீ வாழவேண்டுமானால்
தமிழனை வாழ விடு

Wednesday, September 30, 2009

நவீனத்துவ ஓட்டை




நவீன கவிதைகளில்
பின் நவீனத்துவம்
தலைப்பில்
அழகான சொற்பொழிவு
நிகழ்த்திய கவிஞர்
முன் வரிசையில்
உரை
நன்றென உரைத்து
நலமா என்றேன்
நலமென்ற கவிஞர்
நலம் விரும்பி
பின்
குழந்தைக்கு என்ன பெயர்
சூட்டியிருக்கிறாய் என்றார்
நவீன் என்றேன்
தமிழ்ப் பெயர் வைக்கவில்லையா
கடிந்து கொண்டார்
தனக்குரிய இயல்புடன்







Tuesday, September 22, 2009

நாராயணனின் தம்பி - நக்கலைப் பாருங்கள்




விமானத்தில் சாதாரண வகுப்பை மாட்டு தொழுவ வகுப்பு என்று கூறிய மத்திய மந்திரி சசிதரூர் மீது உரிய நேரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று காங்கிரஸ் கட்சி கூறி உள்ளது. இதனால் அவரது மந்திரி பதவிக்கு ஆபத்து ஏற்பட்டு இருக்கிறது.

மத்திய அரசு மேற்கொண்டுள்ள சிக்கன நடவடிக்கை பற்றி சமீபத்தில் கருத்து தெரிவித்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மத்திய வெளியுறவுத்துறை ராஜாங்க மந்திரி சசிதரூர், ``இனிமேல் விமானத்தில் மாட்டு தொழுவத்தில் புனித பசுக்களுடன் பயணம் செய்ய வேண்டியதுதான்'' என்று கிண்டலாக கூறினார்.

விமானத்தில் சாதாரண வகுப்பை மாட்டு தொழுவம் என்று அவர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அவரது கருத்துக்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. ``சாதாரண வகுப்பு பயணத்தை மாட்டு தொழுவ பயணம் என்று சசிதரூர் கூறி இருப்பதை ஏற்க இயலாது'' என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன் எம்.பி. கூறினார்.


சசிதரூர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், மந்திரி பதவியை அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் எதிர்க்கட்சியான பாரதீய ஜனதா வற்புறுத்தி உள்ளது.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட் கூறுகையில்; சசிதரூர் கூறிய வார்த்தைகள் துரதிருஷ்டமானது என்றும் அவரிடம் இருந்து அப்படிப்பட்ட வார்த்தைகளை எதிர்பார்க்கவில்லை என்றும் தெரிவித்தார். அத்துடன், பிரதமர் அல்லது கட்சி மேலிடத்தின் உத்தரவுக்காக காத்திருக்காமல் மத்திய மந்திரி பதவியை அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் அசோக் கெலாட் கூறினார்.

சசிதரூர் அரசு பயணமாக தற்போது லைபீரியா நாட்டுக்கு சென்று உள்ளார். தனக்கு எதிர்ப்பு வலுத்து வருவதை தொடர்ந்து, விமானத்தில் உள்ள சாதாரண வகுப்பை மாட்டு தொழுவம் என்று கூறியதற்காக அவர் மன்னிப்பு கேட்டு உள்ளார்.
இதற்கிடையே, இந்த பிரச்சினை பற்றியும், சசிதரூர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட் கூறி இருப்பது பற்றியும் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மனிஷ் திவாரியிடம் நேற்று நிருபர்கள் கருத்து கேட்டனர்.

அதற்கு அவர் பதில் அளிக்கையில்; சசிதரூர் தெரிவித்த கருத்துக்கு இதுபோன்று எதிர்ப்புகள் வருவது இயற்கையானதுதான் என்றும், அவரது கருத்துக்கு காங்கிரஸ் ஏற்கனவே கண்டனம் தெரிவித்து இருக்கிறது என்றும் கூறினார். சசிதரூர் மீது காங்கிரஸ் கட்சி உரிய நேரத்தில் உரிய நடவடிக்கையை எடுக்கும் என்றும் அப்போது அவர் தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட நிருபர், ராகுல் காந்தி தென்இந்தியாவுக்கு சென்ற போது அவரது விமான பயணத்துக்கு கூடுதல் செலவானதாக கூறப்படுவதை குறிப்பிட்டு, சிக்கன நடவடிக்கையில் வெவ்வேறு தலைவர்களுக்கு வெவ்வேறு அளவுகோல்கள் உள்ளதா? என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு மனிஷ் திவாரி; ராகுல் காந்தி போன்ற முக்கியமான தலைவர்கள் பயணம் செய்யும் போது அவர்களுடைய பாதுகாப்பையும் கவனத்தில் கொள்ள வேண்டி இருக்கிறது என்றார்.
-செய்தி மலர்
இந்தாளை எல்லாம் ஐ. நா தலைமைச் செயலாளர் பதவிக்குப் பரிந்துரைத்த எங்கள் இந்தியாவை என்ன வெண்ட்ரு சொல்வேன்!
ஏன் இப்ப இருப்பவர் தங்கமான்னு கேட்பது காதில் விழுகிறது!
இந்தியா என்பது வேளாண்மையை(இறையாண்மையை அல்ல விவசாயத்தை) , கால் நடைகளை(ஆடு மாடுகளை) நம்பியிருக்கும் நாடு. அந்தத் தொழுவத்துல தானே இந்த வெண்ட்ரு இருக்கு.
-இவன், மாட்டுக்காரன்(கவ் பாய்) கொள்ளிமலை குப்பு!