Friday, December 26, 2008

கிராமத்து மார்கழியே!



கிராமத்து மார்கழியே வாழி!

தும்பைப்பூவின் பனிக்குளியல்

தூவான வாடைத் தென்றல்

அதிகாலை பெண்களின் விழிப்பு

இல்ல வாசலில் சாணம் தெளிப்பு

கூட்டிய பின் கோலம் போட்டு

கோலத்தின் நடுவே பரங்கிப் பூக்கள் போட்டு

கோவிலில் கேட்கும் பக்திப் பாடல்

கோலமிடும் பெண்கள் ஒன்று கூடல்

காளையர்கள் அதிகாலை விழித்து

கதிர் முற்றிய தம் வயலை பார்த்து

அறுவடைக்கு உகந்த நாள் குறித்து

அதுவரைக்கும் கதிரைப் பாதுகாத்து

பொங்கலுக்கு முன்னரே களம் கண்டு

போற்றிடுவார் புது நெல் கொண்டு

-ஜோதிபாரதி

Monday, December 22, 2008

ரஜினி சொல்லாட்டியும், தங்கபாலு சொன்னாலும் கலைஞர் கேட்பார்! -சீமான் கைது!!

ரஜினி சொல்லாட்டியும், தங்கபாலு சொன்னாலும் கலைஞர் கேட்பார்! -சீமான் கைது!!

Saturday, December 20, 2008

கலங்கரை விளக்கம் கலைஞரும், கவிழ்ந்து போன சாணக்கியத்தனமும்


தமிழகத்தின் ஓரளவு உணர்வுள்ள ஒரே அரசியல் தலைவராக நாமெல்லாம் எதிர்பார்த்திருந்த கலைஞர் அவர்கள் ஆட்சியில் இருக்கும் போது, (தற்போது ) நடைபெறும் நிகழ்வுகள் மிகவும் வருத்தத்தையும் ஆழ்ந்த கவலையையும் ஏற்படுத்துகிறது. தனது அரசியல் மற்றும் மற்ற விடயங்களுக்காக மத்திய காங்கிரஸ் அரசாங்கத்திடமும், தமிழக காங்கிரஸ் பிரமுகர்களிடமும் இனமான உணர்வை விட்டுக் கொடுப்பதாகவே அனைவராலும் கருதப் படுகிறது.

கலைஞர் அவர்களை அரசியல் தலைவர், முதல்வர் போன்ற பதவிகளுக்கு அப்பார்ப்பட்டு தமிழுக்காக நேசித்தவர்கள் எண்ணிலடங்கா.

அந்த வகையில் கலைஞர் அவர்கள் தமிழ் நல்லுலகுக்கு தன்னிகரில்லாத் தமிழ் மகனாகத் திகழ்ந்தார்.

உலகத் தமிழர்களின் தலைவராகவே உற்றுப் பார்த்தவர்களும் உண்டு.

காரியங்களை கண நேரத்தில் கச்சிதமாக முடிக்கவல்லவர்.

சாணக்கியத் தனத்தில் சரித்திரம் படைத்தவர்.

போர்க்குணம் படைத்த போராளி.

நா வன்மையால் நயவஞ்சகர்களையும் நண்பனாக்கிக் கொண்டவர்.

பேனாவினால் பெரிய வரலாறு படைத்தவர்.

அவருக்கு இயலாதது என்று ஒன்று இவ்வுலகில்(அரசியல்) இல்லை.

அந்த வகையில் நம் தமிழ்ச் சமுத்திரத்தில் கலைஞர் கலங்கரை விளக்கமாகவே திகழ்ந்தார்.

மதிய அரசுக்கு எப்போதெல்லாம் சிக்கல் வருகிறதோ அப்போதெல்லாம் இவரே முன்னின்று தீர்த்து வைத்தார்.

நாடளுமன்ற நாயகரை இவரே தேர்ந்தெடுத்தார்.

குடியரசு தலைவரை இவரே தேர்ந்தெடுத்தார்.

ஏன், சோனியா காந்தி இந்தியப் பிரமராக வேண்டும் என்று சூளுரைத்த முதல் அரசியல் தலைவரே கலைஞர்தான்.

தனது கட்சிக்கு அமைச்சரவையில் முக்கியத் துறைகளை கேட்டுப் பெற்றார்.

இவ்வளவும் செய்த கலைஞர் ஈழப்பிரச்சனையில் மட்டும் ஏன் மத்திய அரசைக் கேட்டு, அவர்கள் சொல் படி நடந்து கொள்கிறார்?

ஈழ மக்கள் மீது உச்சக்கட்டத் தாக்குதல் இந்திய ராணுவ அதிகாரிகளின் அறிவுரைப்படி நடைபெறுகிறதே இதைத் தடுக்க வேண்டாமா?

காணாமல் போன பிரணாப் முகர்ஜியைத் தேடுவதை விட்டு விட்டு, இந்திய அதிகாரிகள் கிளிநொச்சி சென்றதைக் காரணம் காட்டி மத்திய அரசை நிர்பந்திக்க வேண்டாமா?

நமது அடிப்படைக் கோரிக்கை ஈழத்தில் சிறிலங்க அரசினரால் நிகழ்த்தப்படும் கோரத்தாக்குதலை முடிவுக்குக் கொண்டுவருதல்: இந்த விடயத்தில் பிரணாப் முகர்ஜியின் சென்னை வருகையால் சமாதானம் அடைந்தது எப்படி? தொடர்ந்து தமிழ் மக்கள் மீது தாக்குதல் நடந்து கொண்டு தானே இருக்கிறது. இப்போது அதன் உச்சக்கட்டமாக இந்திய ராணுவ உயர் அதிகாரிகள், எப்படி தாக்குவது என்று சிறிலங்க படைக்கு ஆலோசனை வழங்குகிறார்கள். இதற்கு உங்கள் எதிர் வினை என்ன? தமிழக மக்கள் கேட்கிறார்கள். உலகத் தமிழர்கள் கேட்கிறார்கள்.

Friday, December 19, 2008

ரஜினி சொல்லாட்டியும், தங்கபாலு சொன்னாலும் கலைஞர் கேட்பார்! -சீமான் கைது!!

ரஜினி சொல்லாட்டியும், தங்கபாலு சொன்னாலும் கலைஞர் கேட்பார்!

சீமான்கள் சொன்னால் சீமானும் கைது செய்யப்படுவார்!

காங்கிரஸ்க்காரத் தமிழர்களுக்கு சில கேள்விகளை முன் வைக்கிறேன். முடிந்தால் இதற்கு பதில் சொல்லுங்கள். முடியாவிட்டால், தவறான பிரச்சாரம் செய்யாமல் உண்மையை சீர் தூக்கி பார்த்து எழுத வேண்டுகிறேன்.

1) வங்க தேச உதயம் எப்படி நடந்தது?

2) அன்னை இந்திராவைக் கொன்றவர்களை காங்கிரஸ் எப்படி நடாத்தியது, நடாத்துகிறது?

3) காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாலய உள்துறை அமைச்சர் ஏன் பொற்கோவிலுக்கு எதிரே காலணிகளைத் துடைத்து வைத்தார்?

4) இந்திராவை கொன்ற சீக்கிய சமூகத்தைச் சேர்ந்தவர் இந்திய பிரதமராக முடிகிறது. காந்தியைக் கொன்ற கோட்சேயின் ஆர்.எஸ்.எஸ் -ஐ சேர்ந்தவர்கள் பிரதமராக உதவிப் பிரதமராக இருக்க முடிகிறது. ஏன் தமிழர்கள் இந்திய பிரதமர் ஆகமுடியவில்லை அல்லது யாரோ ஆக விடாமல் தடுக்கிறார்கள்?

5) அகாலிதளம் மான் பிரிவு தலைவர் சிம்ரன்ஜித் சிங் மான் துப்பாக்கியுடன் பாராளுமன்றம் வருவேன் என்று சொல்கிறார். அவரும் இங்கு தானே குப்பை கொட்டினார். அவரை என்ன செய்தார்கள் காங்கிரஸ் ஆட்சியில்?

6)கூறியத் அமைப்பினர் துப்பாக்கியுடன் தான் பேச்சு வார்த்தைக்கு வருவோம் என்கிறார்கள். அவர்களை காங்கிரஸ் அரசு என்ன செய்ய முடிந்தது?

7) அசாமை ஆண்ட பிரபுல்ல குமார் மகந்தா உங்கள் பார்வையில் தீவிர வாதியா? அப்படி இருந்தால் அந்த மாநில மக்கள் அவரை எப்படி ஏற்றுக் கொண்டார்கள்?

8) இந்திரா கொலை முயற்சி, இராஜீவ் கொலை குற்றச்சாட்டு போன்றவற்றில் திமுகவுக்கு தொடர்பு உள்ளது என்று காங்கிரசார் பிரச்சாரம் செய்தனரே? பின்னர் அவர்களுடன் கூட்டணி வைத்தால் அது நியாயமா?

9) பல கொலைகளில் சம்பத்தப் பட்ட முன்னாலைய தீவிரவாத இயக்கம், பிரிவினை வாத இயக்கம் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவைச் சேர்ந்த சிபு சோரனை எப்படி காங்கிரஸ் அமைச்சரவையில் சர்ச்சைகளுக்கிடையில் சேர்க்க முடிந்தது?

10) அப்சல் என்னும் தண்டனை வழங்கப்பட்ட தீவிர வாதியை, தூக்கிலிடுவதை நிறுத்திவைக்க வேண்டி காஷ்மீர் முதலமைச்சர் குழாம் நபி ஆசாத் சப்பைக் கட்டுடுடன் பிரதமரைச் சந்திக்கலாமா?

11) இராஜீவைத் முதுகில் தாக்கிய சிங்கள சிப்பாய்க்கு சிறிலங்கா அரசாங்கம் எவ்வளவு மரியாதை அளித்தது என்று தெரிந்தும் அவர்களோடு கொஞ்சிக் குலாவுவதில் காங்கிரஸ் அரசுக்கு என்ன மரியாதை அங்கு கிடைக்கும்? மரியாதை இல்லாத இடத்தில் பல்லிளிப்பது ஏனோ?

12) கிழக்குத் தீமோர் இந்தோனேஷியாவில் இருந்து பிரிய முடிகிறது, ஏறக்குறைய அதே நிலை அல்லது அதைவிட மனித உரிமைகளை தரையில் போட்டு மிதிக்கும் நிகழ்வுதானே இன்று சிறிலங்காவில் நடந்து கொண்டிருக்கிறது? இவற்றையெல்லாம் சீர்தூக்கிப் பார்த்திருக்க வேண்டாமா?

போறேன் போறேன்னு சொன்னது ஒரு நண்டு, அது போவாம வலைக்குள்ள போயிடுச்சு. அதைத் தேடித் தேடி அலையுது நரிகள். நரிகளுக்கு வலைக்குள்ள வாலை விட பயம். நரிக்கு வேலையும் இல்லை அதைப் போல அலைச்சலும் இல்லை. ஒரு புண்ணியமும் இல்லை.

Thursday, December 18, 2008

கலைஞர்-துரைமுருகன் ஒரு தவறான புரிதல்!

கலைஞர் : இந்த கோபாலசாமியால பெரிய தொந்தரவா இருக்கய்யா.

துரைமுருகன் : ஆமாங்க தலைவரே இந்தாளு ஏன் திருமங்கலத்தை அந்தம்மாவுக்கு விட்டு கொடுத்து நம்ம உயிரை வாங்குறாரு?

கலைஞர் : அட போய்யா நான் திருமங்கலம் தேர்தலை அறிவிச்ச தேர்தல் கமிஷனர் கோபால்சாமியச் சொன்னா...! நீ வேற ஒன்னு கெடக்க ஒன்னா புரிஞ்சுக்கிறே!

துரைமுருகன்: கவலை படாதீங்க தலைவரே! நம்ம அஞ்சா நெஞ்சன் பாத்துக்குவார்.

கலைஞர் : ம்ம்! ம்ம்! அவர் பாத்துக்கட்டும். நீங்கல்லாம் என்னை சுத்தியே நில்லுங்க. போங்கையா போய் எலக்ஷன் வேலைய பாருங்கய்யா. என்னை சுத்தியே நின்னா எனக்கு காத்தே வரமாட்டீங்குது. (எனக்கு மட்டும் தான் வேர்த்து வடியுது. நீங்கல்லாம் எப்படி கூலா நிக்கிறீங்க!)

ஆற்காடு வீராசாமி : தலைவரே! நாங்களெல்லாம் அஞ்சா நெஞ்சன் தலைமையில அணிவகுக்கலாமுன்னு இருக்கோம். தொகுதியை கைப்பத்திடுவோம் தலைவரே!

கலைஞர் : ஐயா! சாமி!! நீ மட்டும் அங்க போய்ராதே!!! நீ போனேன்னு வச்சுக்கோ, ஓட்டு போடுரவனுக்கு மின் வெட்டு தான் ஞாபகம் வரும். அப்புறம் ஜெயிச்ச மாதிரித்தான்! பேசாம நீயே வீட்டுக் காவல்ல இருந்துக்கோ. இல்லை என்றால் காவல்துறையை விட்டு கைது செய்ய நேரிடும். அமைச்சரை கைது செய்து நேர்மையை நிலை நாட்டிக் கொள்ள உதவும். (மின்வெட்டு செய்த அமைச்சர் கைது - எப்படி ஒரே கல்லுல ரெண்டு மாங்கா!)

தொண்டன் : ஆர்காட்டரே! என்ன புரியாம பேசுறீங்க. வாக்குச் சாவடியை முதலில் கைப்பற்றுவோம். பின்னர் தொகுதியை கைப்பற்றுவது சுலபம்.

துரைமுருகன்: தலைவரே! எலக்ஷன் நேரமாப் பாத்து நல்ல மழை பெய்யுது! வெற்றி நமக்குத்தான் தலைவரே!

கலைஞர்: அடப்போய்யா, எலக்ஷன் நேரத்துல வெள்ள நிவாரணம் அது இதுன்னு போட்டு உயிரை வாங்குராங்கைய்யா இந்த இடது சாரிங்க. அதனாலேயே வெற்றி பாதிக்குமோன்னு கவலையா இருக்கையா.

துரைமுருகன்: (என்னா இன்னைக்கு தலைவர்ட்ட எது சொன்னாலும் தவறாவே போய் முடியுது) தலைவரே வரட்டுங்களா?

கலைஞர்: வரவேண்டாம் போய் எலக்ஷன் வேலையைப் பாருங்கய்யா. வெற்றி பெற்றா மட்டும் இங்க வாங்க.

துரைமுருகன் : (நல்லவேளை சென்னையில எலக்ஷன் இல்ல. இருந்தா சட்ட கல்லூரிப் பிரச்சனையை இழுத்து நம்ம பேரு நாறிடும். நான் தமிழ் நாட்டுல எங்கயும் போய் எலக்ஷன் வேலை பார்க்க முடியும். பாவம் ஆற்காடு!)

பி.கு: இந்தப்பதிவு வெறும் பகிடி,நகைச்சுவை மட்டுமே! படித்து விட்டு சிரிக்க முடிந்தால் சிரிக்கலாம் இல்லன்னா மறந்துடுங்க.

Monday, December 15, 2008

பதி பக்தியும், காங்கிரஸ் கூட்டணியும்

நடைபெற இருக்கிற நாடாளுமன்றத் தேர்தல் தமிழக அரசியல் கட்சிகளுக்குள் ஒரு பலபரிட்சையை ஏற்படுத்தும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. இருப்பினும் அதற்கு முன்னரே அவசரமாக அறிவிக்கப் பட்ட திருமங்கலம் சட்டமன்ற இடைத் தேர்தல் இதற்கு முன்னோட்டமாக வெள்ளோட்டமாக அமையும் என்று கருதுகிறோம்.


கடந்த சட்டமன்ற மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களில் தனது கட்சியின் வளர்ச்சியை ஓரளவேனும் நிரூபித்துள்ள திரு.விஜயகாந்த் அவர்கள் ஒரு முக்கிய அரசியல் சக்தியாகக் கணிக்கப் படுகிறார். இவரிடம் கூட்டணி வைக்க பொதுவுடைமைக் கட்சிகளில் இருந்து, காங்கிரஸ்,பாரதீய சனதா போன்ற கட்சிகள் போட்டி போட்டது நினைவிருக்கலாம். இருப்பினும் தான் தனியாக போட்டியிடுவதில் இன்னும் உறுதியாக இருப்பது திரு விஜயகாந்த அவர்களுக்கு நன்மை பயக்கக் கூடிய ஒன்று. ஆனால் வருகிற தேர்தலில் அவருடைய வாக்குகள் குறையும் பட்சத்தில் அதுவே அவருக்கு பெருத்த பின்னடைவாகவும் அமையலாம்.

இப்போதைய கூட்டணிகளுக்கு வருவோம். தி.மு.க., காங்கிரஸ்,விடுதலை சிறுத்தைகள், முஸ்லீம் லீக் கட்சிகள் ஓர் அணியாகவும், அ.தி,மு.க, இடது சாரி கட்சிகள்,ம.தி.மு.க போன்ற கட்சிகள் ஓர் அணியாகவும், தே.மு.தி.க ஒரு அணியாகவும் இருக்கின்றன. தமிழகத்தின் வட மாவட்டங்களில் அதிக வாக்கு வங்கியைப் பெற்றிருக்கும் பா.ம.க திரிசங்கு சொர்க்க நிலையில் தான் இதுவரை இருக்கிறது. தேர்தல் நெருங்க நெருங்க இவர்களுக்கு தி.மு.க மற்றும் அ.தி.மு.க தரப்பில் இருந்து அழைப்புகளும், அதிக தொகுதிகள் தருகிறேன் என்கிற கெஞ்சல் கூட இருக்கலாம். இது பொறுத்திருந்து பார்க்க வேண்டிய ஒன்று.

தி.மு.க வைப் பொறுத்தவரை காங்கிரசை விட்டால் வேறு வழி இல்லை. அவர்களை தன்னுடன் வைத்திருந்தால் தான் வருகிற தேர்தலில் வெற்றி மற்றும் ஆட்சியைக் தக்கவைத்துக் கொள்ள முடியும் என்கிற நிலை. அதனால் தான் ஈழப்பிரச்ச்சனையில் கூட கலைஞரால் தனது கருத்துக்களை, கோரிக்கைகளை உரத்த குரலில் எடுத்து வைத்து சாதிக்க இயலவில்லை. காங்கிரஸ் தே.மு.தி.க வுடன் கூட்டணி வைத்தால் தி.மு.க ஆட்சிக்கு ஏதும் பாதிப்பில்லை. ஆனால் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்தால் தி.மு.க ஆட்சி நீடிப்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை. ஏனென்றால் அதன் தலைவியின் முக்கிய கோரிக்கையே தி.மு.க ஆட்சியக் கலைக்க வேண்டும் என்பதாகத்தான் இருக்கும். இந்த கூட்டணி அமைய வாய்ப்புகள் குறைவு என்றாலும் கூட வாய்ப்பில்லை என்று கூறிவிட முடியாது. ஒரு வேலை ஜெயலலிதா சோனியாவின் பதி பக்தியை விமர்சித்ததை சோனியா மறந்திருந்தால், இது நிகழலாம். அதற்கு சோனியாவிற்கு, அத்வானிக்கு வந்தது போல் செலெக்டிவ் அம்னீசியா நோய் வந்தால் சாத்தியப்படும்.

சட்டமன்ற தேர்தல்களைப் பொறுத்தவரையில் பா.ம.க வின் தாக்கம் அதிகமாக இருக்கும். நாடாளுமன்ற தேர்தலில் அவர்களுக்கு ஐந்தாறு தொகுதிகள் கொடுப்பார்கள் அதுவும் அவர்கள் செல்வாக்கான தொகுதிகளாக இருப்பதால் பா.ம.க வுக்கு வெற்றி வாய்ப்பு இருக்கும். ஆனால் மற்ற தொகுதிகளில் அவர்களுடன் கூட்டணி வைக்கும் திமுக வுக்கோ, அ.தி.மு.க.வுக்கோ பெரிதாக ஒன்றும் பலன் இராது. இதனால் கடைசி நேரத்தில் தி.மு.கவும், அ.தி.மு.கவும் இவர்களுடன் கூட்டணி வைக்காமல் தனியாக விட்டு விட்டாலும் ஆச்சர்யப் படுவதற்கில்லை.

பா.ச.க -வைப் பொறுத்தவரை அவற்றைத் இடதுசாரிகளும், முஸ்லீம் லீக் கட்சிகளும் தீண்டத்தகாத கட்சியாகவே கருதுகின்றன. மற்ற திமுக,அதிமுக உள்ளிட்ட கட்சிகள் பாபர் மசூதி இடிக்கப்பட்ட பின்னரும் இவர்களுடன் கூட்டணி வைத்திருந்தார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. இவர்கள் மத சார்பு கூட்டணி, சார்பற்ற கூட்டணி என்பதெல்லாம் கண் கட்டி வித்தை. இப்போது பாசக விற்கு இரண்டே வழிதான், ஒன்று தே.மு.தி.க விடன் கூட்டணி வைக்க வேண்டும். இல்லை தனித்துப் போட்டியிட்டு மண்ணை கவ்வ வேண்டும்.

தேர்தலுக்குப் பிறகு ஜெயலலிதா, பா.ச.க விற்கு ஆதரவளிக்கக் கூடும் என்கிற நிலைப்பாடும் இருக்கிறது. இதை அவர்களுடன் கூட்டணி வைத்திருக்கும் தா.பாண்டியனே மறுக்கவில்லை. மொத்தத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் அல்லது பா.ச.க மத்தியில் அதிக இடங்களை வென்றிருந்தால் அந்த கட்சியுடன் கூட்டணி அமைச்சரவை அமைக்க திமுக தயங்காது. அதிமுகவைப் பொருத்த வரையில் பா.ச.க அதிக இடங்களை வென்றிருந்தால் அவர்களுடன் கூட்டணி அமைச்சரவை அமைப்பது நிச்சயம். காங்கிரஸ் அதிகமானத் தொகுதிகளில் வென்றிருந்தாலும் காங்கிரசுடனும் கூட்டணி மத்திரி சபைக்கு ஜெயலலிதா ரெடியாகத் தான் இருப்பார், "பதிபக்தி" என்ற வார்த்தையை சோனியா காந்தி மறக்கும் பட்சத்தில்...!

Saturday, December 13, 2008

உடன் பிறந்த சகோதரர்கள்! (உ.பி.ச)



இந்த வாளும் வேலும் சந்தித்தால்......!

Thursday, December 4, 2008

விவசாயிகளுக்கு ஏன் அரசு உதவி செய்ய வேண்டும்? பொது புத்தியும், ஆதங்கமும்

ஆடிப்பெருக்கல்ல ஆனந்தப்பட - வெள்ளப்பெருக்கு



இரவெல்லாம் மழை -ஆம்

இடியும் கூட


இரக்கம் இல்லை இந்த வானுக்கு

உறக்கமில்லை எனக்கு


அன்று நட்ட நடவு மஞ்சநேரி வயலில்

விடியும் வரை காத்திருந்தேன்


காலை இரவை தழுவிக்கொள்ளும் வேளையில்

வெளிக்கிட்டேன் வயலுக்கு மண்வெட்டியுடன்


இளங்காடு கடந்து அறை மணி நேரத்திற்குள்

அடைந்தேன் மஞ்சநேரி எல்லையை


எட்டிப்பார்த்தால் எங்கும் வெள்ளக்காடு

சொல்லி மாளாது என் வேதனையை துயரை


தூரத்து வாய்க்காலில் ஆங்காங்கே நட்ட நாற்று

மிதந்து வரக்கண்டேன்


வந்த கண்ணீரை துடைத்துக்கொண்டேன்

நீயுமா இந்த வெள்ளத்தில் கலக்கவேண்டும் என்று


வயலை நெருங்கினேன் வாய்க்கால் காணேன்

நட்ட நடவு காணேன் வரப்பு காணேன் -அட

நில அளவைக் கல்லையே காணேன்

நிலைகுலைந்து போனேன்


இறங்கினால் இடுப்பளவு நீர்

உணர்ந்துகொண்டேன் ஒரு சாண் பயிரின் நிலையை


பயிரே தெரியவில்லை

வயிறு மட்டும் எரிந்தது

தண்ணீருக்குள்ளேயும்


வாடிய பயிரை கண்டு வாடியவர் வள்ளலார்

இங்கே மூழ்கிய பயிரை கண்டும் வாடினேன்


வரப்புயர நீர் உயரும், நீர் உயர நெல் உயரும்

இங்கே வரப்பும் பயிரும் தெரியவேயில்லை

நீர் மட்டுமே உயர்ந்து நின்றது


வெள்ளத்தனைய மலர் நீட்டம் மட்டும் தானா?

இங்கே பயிர் நீட்டம் கூடாதா?


தண்ணீரை வரவுக்கு மேல் செலவு செய்ய

முடியாமல் வருந்தினேன்


வடிகால் வெட்டலாம் என்றால்

அதுவும் மிதந்து போகிறது


திரும்பிப் பார்த்தேன்

ஏரிக்கு போய் மதகடைப்போம் என்று


மதகடைப்பதென்றால் பலகை இறக்குவதொடு

சில திரை வைக்கோலும்

தேவைப்படும் என்று தெரியும்

இருந்தாலும் சென்றேன் மஞ்சநேரியை நோக்கி


போகும் வழியில் தண்ணீரின் வேகத்தை கண்டேன்

இருந்தாலும் சென்றேன் மனம் தளராமல்


ஏரியை நெருங்கியதும் நொறுங்கினேன்

கரை உடைத்து நீர் புரண்டோடுவதை கண்டு


தனக்கியன்றதையும் இயலாததையும் செய்ய முடியா

சொல்லொணாத் துயருற்றேன்


வீட்டுக்கு பயணித்தேன் -வழியில்

வந்த யாரையும் பார்க்கவில்லை

யாரும் வயலைப்பற்றி கேட்டால்

பதிலுரைக்க வெட்க்கப்பட்டு


மஞ்சநேரி வயல் எப்படி இருக்கிறது?

அம்மா கேள்விக்கு அயர்ந்து போய்

அமர்ந்தேன் சொல்லற்றவனாய்

பதிலுரைத்தேன் கண்ணீர் துளிகளாக


அடுத்தவருடம் பார்த்துக்கொள்ளலாம் என்ற

அம்மாவின் தேற்றுதல் வரிகளுடன்

ஆறுதல் அடைந்தேன்


என் உள்மனசு சொன்னது

எத்தனை முறைதான்

இந்த வரிகளை கேட்டு ஆறுதல் அடைவது என்று…




அன்புடன் ஜோதிபாரதி

சிஃபி தமிழ் 2008 பொங்கல் சிறப்பு மலரில் பிரசுரமாகியுள்ளது
பதிவுகள்

வார்ப்பு கவிதை இதழ்
திண்ணை
கீற்று

வட மொழி - தமிழ் மொழி

பின் நவீனத்துவம் - பின் புதுமையியல்

அகங்காரம் - செருக்கு,இறுமாப்பு,முனைப்பு,யானெனல்

அகடவிகடம் - குறும்பு,மாற்று,மாறுபட்டது

அகதி - அறவை,வறியன்,எதிலி,புகலிலான்,யாருமற்றவன்,ஏழை

அகந்தை - இறுமாப்பு,செருக்கு

அகம் - உள்ளே,உயிர்,நான்,மனம்,மனநிலை,எண்ணம்

அகம்பாவம் - தற்பெருமை,செருக்கு

அகராதி - அகரமுதலி,அகரவரிசை,அகரநிரல்,அகரமுதல்

அகிம்சை - இன்னா செய்யாமை,கொல்லாமை

அஹிம்சை - இன்னா செய்யாமை,கொல்லாமை

அகோரம் - அழகின்மை,கொடுமை,நடுக்கம்

அக்கணம் - அப்பொழுது,அந்நொடி

அக்கரம் - எழுத்து

அட்சரம் - அழிவில்லாதது

அக்கியாணி - அறிவிலான்

அஞ்ஞானி - புல்லறிவாளன்

அக்கிரகாரம் - பார்ப்பனச் சேரி

அக்கிரமம் - ஒழுன்கின்மை,முறைகேடு

அக்கிராசனம் - முதலிருக்கை,தலைமை

அக்கினி,அக்நி - நெருப்பு,தீ,அனல்,எரி

அங்கப்பிரதட்சணம் - உடல் வலமுருளல், வலம் புரளல்

அங்கீகாரம்,அங்கீகரணம் - உடன்,செப்பு

அங்குலம் - விறக்கட்டை,விரலளவு

அசத்தை,அசத்தியம் - பொய்

அசரம்- அசைவில்லாதது,இயங்காதது,நிலையியல்

அசரீரி - வானொலி,உருவற்றது

அசித்து - பயனின்மை

அஜீரணம்,அசீரணம்- செரியாமை,பசியின்மை,அழிவுபடாமை

அசுத்தம் - அழுக்கு,துப்புரவின்மை,தூய்மையின்மை

அசேதனம் - அறிவில்லாதது,அறிவிலி,அறிவில் பொருள்

அசெளரியம் - நலமின்மை,இடைஞ்சல்

அஞ்சலி - கும்பிடல்,வணக்கம்

அஞ்சனம் - மை,கறுப்பு,இருள்

அஞ்சிட்டம் - கதிரவன்

அஞ்ஞாதம் - மறைவு,அறியப்படாதது

அஞ்ஞாத வாசஸ்தலம் - மறைந்துறைவிடம்

அட்சயப் பாத்திரம் - திருவோடு,ஏற்போடு,அள்ள அள்ளக் குறையாதது

அட்டதிக்கு பாலகர் - எண்புறக்காவலர்

அட்டபந்தனம் - எண்புறக்கட்டு

அண்டம் - முட்டை,உலகம்,வித்து,மூலம்

அதமம் - கீழ்மை,கடைத்திரம்

அதர்மம்,அதருமம் - தீவினை,அறமின்மை,மறம்

அதிகப்பிரசங்கம் - மிகுபேச்சு,தன் மேம்பாட்டுரை,மற்றொன்று விரித்தல்

அதிகாரி - அலுவலர்,தலைவன்,முதல்வன்,உடையவன்

அதிகாலம் - விடியற்காலம்

அதிகாலை - விடியற்காலம்,புலரிக்காலை

அதிஷ்டவசம் - நல்வினைப்பயன், நல்வினை வயம்

அநந்தகோடி - எண்ணத்தொலையாதன

அநந்தம் - அளவின்மை,முடிவில்லது

அநாதை - யாருமற்றவன்,தாய்தந்தையிலான்

அநித்தம்,அநித்தியம் - அழிவு,நிலையற்றது,நிலையாமை

அநீதி - முறைகேடு

அநுக்கிரகம் - அருளிரக்கம்,அருள்

அநுசரணை - சார்பு,சார்பு நிலை

அநுசிதம் - பொய்,தகாதது

அனுபவம் - பழக்கம்,வழக்கம்,நுகர்ச்சி

அனுமினம் - ஐயம்,வழியளவை,கருதலளவை

அனுமானப் புரமானம் - கருதலளவை

அநேகர் - பலர்

அந்தகன் - அழிப்போன்,குருடன்

அந்தகாரம் - இருள்,அறியாமை

அந்தக்கரணங்கள் - அகக்கருவிகள்

அந்தஸ்து - நிலைமை,ஒழுங்கு,நிலை

அந்தரம் - வான்வெளி,இடைவெளி,துணையின்மை,காலம்

அந்தி - முடிவு,மாலைக்காலம்

அந்திய கிரியை - இறுதிச் சடங்கு

அந்நியர் - பிறர்,அயலார்

அந்நியோந்நியம் - நெருக்கம்,ஒற்றுமை,ஒருவொருக்கொருவர்

அபயம் - அடைக்கலம்,அச்சமின்மை,புகலிடம்,அஞ்சேலெனல்

அபாயம் - பேரிடர்,அழிவு,கேடு,துன்பம்,இடுக்கண்,இக்கட்டு

அபாரம் - சிறப்பு,அளவின்மை,கேடு

அபிதானம் - பெயர்

அபிநயம் - நடிப்பு,கூத்து,கைமைய்காட்டல்,உள்ளக் குறிகாட்டல்

அபிப்பிராயம் - நோக்கம்,எண்ணம்,உட்கருத்து,உள்ளப்போக்கு

அபிமானம் - பற்று,நேயம்,செருக்கு

அபூர்வம் - அரிது,அருமை,அரிய பொருள்

அபேச்சை -அவா,விருப்பம்

அபேதம் - ஒற்றுமை,வேற்றுமையின்மை,வேறன்மை

அப்பியாசம் -பழக்கம்,பயிற்சி

அப்பிரதட்சிணம் - இடப்புறச் சுற்று, இடப்பக்கச் சுற்று

அமரத்துவம் - அழிவின்மை

அமலன் - துயோன்,கடவுள்,வாலறிவன்

அந்நியர் - பிறர்,அயலார்

அதிகம் - மிகுதி,அளவின்மை

அமிர்தம்,அமிருதம் - இனிமை,அருமருந்து,சாவா மருந்து,அழிவினமை

அமச்ம் - வகை,பங்கு,காலம்,எண்,அன்னப்புள்

அம்பாரம் - குவியல்

அயோக்கியம் - தகுதியினமை,தகாதது

அயோக்க்கியன் - தகுதியற்றவன்,தகவிலான்,கெட்டவன்

அரணியம் - காடு

அருச்சனை,அர்ச்சனை - வழிபாடு, பூ வழிபாடு,மலர் வழிபாடு

அருத்தம்,அர்த்தம் -பொருள்,பாதி

அருவம் - உருவின்மை,அழகின்மை

அர்த்தநாசம் - பேரழிவு,பொருளழிவு

அர்ப்பணம் - உரிமை கொடுத்தல், ஒப்புவித்தல், நீரோடு கொடுத்தல்

அலங்காரம் - அழகு,ஒப்பனை,அணி,புனைவு

அலச்சியம் - பாராமுகம்,பொருட்படுத்தாமை,கருத்தின்மை

அவகீர்த்தி - இழிவு,புகழின்மை

அவக்கியாதி - வசை,இகழ்ச்சி

அவசரம் - விரைவு,பரபரப்பு,சுருக்கு,பதைப்பு

அவசியம் - முதன்மை,கட்டாயம்,இன்றியமையாமை

அவதரித்தல் - பிறத்தல்

அவதாரம் - பிறப்பு,இறங்குகை

அவதானம் - எச்சரிக்கை,ஒழிவு,நினைவு,விரித்தல்,மறப்பின்மை

அவநம்பிக்கை - நம்ப்பிக்கைக்குறை

அவமரியாதை - முறைதவறல்,வணக்கமின்மை,தீயமுறை

அவமானம் - மானக்கேடு,இழிவு,குறைவு,இளிவரவு

அவயவம்,அவையவம் - உறுப்பு

அவலன் - உடற்குறையன்,வீணன்

அவசு,ஹவிசு - தூய உணவு,சோறு,நெய்,

அற்பம்,அல்பம் - சிறுமை,அணு,புன்மை,இழிவு

அனங்கன் - உடலிலான்,கடவுள்,காமவேள்

அனாதி - கடவுள்,தனியன்,பழமை,தொன்மை

அனுதாபம் - இரக்கம்

அனுபவம் - பழக்கம்,வழக்கம்,அழுந்தியறிதல்,பட்டறிவு

அனுமானம் - உய்த்துணர்தல்,கருதல்ளவை,வழியளவை

அனேகம் - பல,எல்லாம்

அன்னதானம் - சோற்றறம்,சோற்றுக்கொடை,உணாக்கொடை

அன்னம் - சோறு,உணவு,அடிசில்

அன்னியன் - பிறர்,அயலார்

அன்னியோன்னியம் - ஒற்றுமை,நெருக்கம்,ஒருவர்க்கொருவர்

ஆகம் -உடல்,மார்பு

ஆகரு(ர்)ஷண சக்தி - இழுப்பாற்றல்,இழுவழி,சேர்வழி

ஆகாசம்,ஆகாயம் - விண்,வெளி,வான்,விசும்பு,வர்னம்

ஆகாய விமானம் - வான ஊர்தி

ஆகாரம் - உணவு,அடிசில்,உடம்பு,வடிவு

ஆக்கியாபித்தல்,ஆஞ்ஞாபித்தல் - கட்டளையிடல்

ஆக்கிரமித்தல் - வலிந்து கவர்தல்,வலிமை காட்டல்

ஆட்சேபம் - மறுமொழி,மறுத்துக்கூறல்,தடைமொழி

ஆங்காரம் - இறுமாப்பு,செருக்கு,தருக்கு

ஆச சங்கை -ஐயம்

ஆசாபாசம் -அன்பு,பற்று,அவா

ஆசாரம் - ஒழுக்கம்,வழக்கம்,நன்னடை,வழிபாடு,துப்புரவு

ஆசியம்,ஹாசியம் - எள்ளல்,நகை,சிரிப்பு

ஆசீர்வாதம் - வாழ்த்துரை

ஆசுவாசம் - இளைப்பாறுகை

ஆசை - விருப்பம்,அவா,பற்று,வேட்கை,விழைவு

ஆச்சரியம் - புதுமை,வியப்பு,இறும்பூது

ஆ(ச்)சிரமம் - இலைக்குடில்,பாழி,முனிவருறயுள்

ஆஸ்திகம் - கடவுளுண்டெனுங்கொள்கை

ஆஸ்பத்திரி - மருத்துவச்சாலை

ஆஞ்ஞாபித்தல் -கட்டளையிடல்

ஆஞ்ஞை -ஆணை,கட்டளை

ஆடம்பரம் - ஆரவாரம்,பகட்டு

ஆட்சேபம்,ஆட்சேபனம் - தடைமொழி,மறுமொழி,எதிர்மொழி,மறுப்பு

ஆதங்கம் - ஆற்றாமை,அச்சம்,நோய்

அந்நியர் - பிறர்,அயலார்

ஆதவ(ப)ன் - பகலோன்,கதிரோன்

ஆதரவு - துணை,உதவி,சார்பு,பற்றுக்கொடு

ஆதி - முதல்,பழமை,அடி,தொடக்கம்,காரணம்,எழுவாய்,கடவுள்

ஆப்தம்,ஆத்தம் - அன்பு,நட்பு

ஆத்தானம்,ஆஸ்தானம் - நகரவாயில்,அறமன்றம்,கொடிமுடிவாயில்

ஆத்திரம்,ஆத்திரியம்,ஆத்திரவம் - உளக்கொதிப்பு,விரைவு,பரபரப்பு

ஆத்துமா,ஆன்மா - உயிர்

ஆந்ந்தம் - இன்பம்

ஆபத்து -இடர்,துன்பம்,இக்கெட்டு,ஊறுபாடு,இடுக்கண்

ஆபரணம் - அணிகலம்,இழை,நகை,அணி,பூண்

ஆபாசம் - அருவருப்பு,சிதைவு,கெடுதல்,பொய்,அளவைப்பொலி

அபூர்வம் - வினைப்பயன்

ஆமோதித்தல் - உடன்படல்,வழிமொழிதல்,மகிழ்தல்

ஆயக்கட்டு(துளுவம்) - மொத்த நஞ்சை நிலம்,களப்புரவு

ஆயத்தம்(இந்தி) - முயற்சி,எத்தனம்,முன்னேற்பாடு

ஆயா(போர்ச்சுக்கீஸ்) - செவலித்தாய்,கைத்தாய்

ஆயாசம்,ஆயாஸம் - களைப்பு,இளைப்பு,சோர்வு,அயர்வு,மயக்கம்

ஆயுசு,ஆயுள் - வாழ்நாள்,ஆண்டு

ஆயுதம் - கருவு,படைக்கலம்,படை,வாள்

ஆரணியம்,ஆரண்ணியம் - காடு

ஆரம்,ஹாரம் - பூமாலை,தொடையல்

ஆரம்பம் - தொடக்கம்

ஆரம்பித்தல் - தொடங்கல்

ஆராதனம் - வணக்கம்,மகிழ்வித்தல்

ஆரோகம்,ஆரோபம்,ஆரோக்கியஸ்நானம் - நல முழுக்கு,நோய் தீர்ந்தபின் முழுகல்

ஆரோக்கியம் - நலம்,நோயின்மை

ஆரோபணம்- நாட்டுதல்,ஏற்றுதல்

ஆரோபித்தல் - ஏற்றுதல்

ஆர்ச்சிதம் - தேட்டம்,தேடிய பொருள்

ஆர்மோனியம் - இசைக்கருவி

ஆர்வம் - அன்பு,விருப்பம்

ஆலகண்டண் - சிவன்,நஞ்சுமிடற்றன்,கறைமிடற்றன்

ஆலகம்- நெல்லிமரம்

ஆலம் - நஞ்சு

ஆலயம் - கோயில்

ஆலாபம்,ஆலாபனம் - அலப்பு,பேச்சு,உரையாடல்

ஆலோசனை - சூழ்தல்,சூழ்ச்சி,ஓர்வு,எண்ணம்,ஆராய்ச்சி

ஆவசியம் - கட்டாயம்,முதன்மை,இன்றியமையாமை

ஆவத்து,ஆபத்து - இக்கெட்டு,இடர்,பொல்லாங்கு

ஆவர்த்தி,ஆவருத்தம்,ஆவிருத்தி - தடவை,வரிசை,சுற்று,வழக்கம்

ஆவாகனம் - அழைத்தல்,உட்புகல்

ஆனந்தபரவசம் - இன்பக்களிப்பு,பேரின்பக்களிப்பு

ஆனந்தம் - இன்பம்,பேரின்பம்

ஆன்மா - உயிர்

இகம் - இவ்வுலகம்,இவ்விடம்,இப்பிறப்பு

இங்கிதம் - இனிமை,அடையாளம்,கருத்து,இடம் பொருள்

இச்சகம் - முகமன்

இச்சை - விருப்பம்,அவா,விழைவு,வேட்கை

இடபம்,ரிஷபம் - எருது,காளை,ஏறு,விடை

இட்டசித்தி - விருப்பப்பேறு

இதம்,ஹிதம் - இனிமை,நன்மை,அன்பு,அறம்

இதயம்,இதையம்,ஹிருதயம் - நெஞ்சம்,உள்ளம்

இதரம் - வேறு,இயல்,அழிவு,பகைமை

இதிகாசம் - பண்டை வரலாறு,பழங்கதை

இந்திர ஜாலம் - இமயவர்கோன்,வானவர் தலைவன்

இந்து - நிலா,திங்கள்,அம்புலி

இமாலயம்,ஹிமாலயம் - பனிமலை

இரகசியம் - மறைபொருள்,மறை,அற்றம்

இராசாபாசம் - அருவருப்பு,ஒழுங்கின்மை

இரசாயனம் - பொருளியைபு

இரட்சகம் - பாதுகாப்பு,மீட்பு

இரட்சை - காப்பு

இரணம்,ரணம் - புண்

இரதம்,ரதம் - தேர்

இரத்தம் - குருதி,செந்நீர்

இரத்தினம்,ரத்தினம் - மாமணி,செம்மணி

இரம்பம்,ரம்பம் - ஈர்வாள்

இராகம்,ராகம் - இசை,பண்,அவா,விருப்பு

இராகு - கருங்கோள்

இராக்கதர் - அரக்கர்

இராசசூயம் - அரசர் வேள்வி

இராசா - அரையன்,மன்னன்,அரசன்

இராச்சியம் - நாடு,அரசியல்

இராத்திரி - இரவு,கங்குல்

இருஷி,இருடி - முனிவன்,தவசி,துறவி

இதய கமலம் - நெஞ்சத்தாமரை

இருது - பருவம்,மகளிர் முதற்பூப்பு

இரேகை - வரி,எழுத்து,கையிறை,நிறை,தொடர்

இலகிரி,லகிரி,லாகிரி - வெறி,மயக்கம்

இலகு,லகு - எளிது,நொய்மை,நுண்மை,ஈரம்,பலா மரம்

இலங்கணம் - பட்டினி

இலஞ்சம் - கைக்கூலி,கையூட்டு,கையுறை

இலட்சணம்,லட்சணம் - அழகு,பார்வை

இலயித்தல் - ஒடுங்குதல்,சேர்ந்தொன்றித்தல்

இலெளகீகம்,இலவுகீகம் - உலகியல்,உலகப்போக்கு

இலாஞ்சனம்,இலாஞ்சனை - புகழ்,அடியாளம்,கறை

இலாபம்,லாபம் - ஊதியம்,மிச்சம்,பேறு

இலீலை,லீலை - விளையாட்டு

யுகம்,உகம் - உலக முடிவு,இரண்டு

உக்கிராணம் -களஞ்சியம்,சரக்கறை

உஷ்ணம் - வெப்பம்,சூடு

உசிதம் - உயர்வு,சிறப்பு,மேன்மை,தகுதி,ஒழுங்கு

உசிதன் - தக்கோன்

உச்சம் - உயர்ச்சி,சிறப்பு

உச்சரித்தல் - சொல்லுதல்,ஒலித்தல்,ஓதல்

உச்சரிப்பு - எழுத்தோசை

உச்சாட்டியம் - பேய கற்றல்,ஒட்டுதல்

உச்சி - மேடு,முகடு

உச்சிக்காலம்,உச்சிச்சமயம் - நண் பகல், நடுப் பகல்

உதயன் - பகலோன்

உதாரணம்,திருட்டாந்தம் - எடுத்துக்காட்டு,சான்று

உத்தமம் - உண்மை,மேன்மை

உத்தரியம்,உத்தரீயம் - மேலாடை

உத்தரவு - கட்டளை

உத்தி,யுத்தி - அறிவு,இணக்கம்,இசைவு,சூழ்ச்சி,சொல்

உத்தேசம்,உத்தேகம் - கருத்து,மதிப்பு,ஏறக்குறைய

உபகரணம் - கொடுத்தல்,உதபிபொருள்கள்,கருவி,துணைக்காரணம்

உபதேசம் - அருண்மொழி,அறிவுரை

உபயம் - உதவி,நன்கொடை,இரண்டு

உபாசநம்,உபாசநை,உபாசனை - வழிபாடு,வணக்கம்

உபாதி,உபாதை - நோய்,துன்பம்,வருத்தம்

உபாத்தியாயன் - கணக்காயன்,ஆசிரியன்,கற்பிப்போன்

உபாயம் - சூழ்ச்சி,நொய்மை,எளிது,சிறிது

உயுக்கம்,உயுத்தம்,யுத்தம் - போர்,தகுதி

உருசி,ருசி - சுவை

உருத்திராக்கம் - சிவமணி,சுக்குமணி

உரூபம்,ரூபம் - உருவம்,வடிவம்

உரொக்கம்,ரொக்கம் - கைப்பணம்,இருப்பு,கையிருப்பு

உரோமம்,ரோமம் - மயிர்,முடி,குஞ்சி

உல்லாசம் - மகிழ்ச்சி,விளையாட்டு,களிப்பு,உள்ளக்களிப்பு

உவதி,யுவதி, - மங்கை,பதினாறாண்டுப் பெண்

ஊகம் - கருதல்,ஓர்தல்,கருத்து,நினைவு

ஊர்ச்சிதம்,ஊர்ஜ்ஜிதம் - உட்பொருளுணர்தல், நிலைப்படுதல்,உறுதி,கருங்குரங்கு

எசமானன்,எஜமான் - தலைவன்,முதல்வன்,முதலாளி

எந்திரம் - பொறி

எமன் - கூற்றுவன்,மறலி

ஏகதேசம் - ஒருபால்,ஒருபுடை,சிறுபான்மை

ஏகம் - ஒன்று,தனிமை

ஏகாந்தம் - தனிமை,ஒரு முடிவு

ஏகோபித்தல் - ஒன்றுபடுதல்

ஏடணை,ஏஷணை - விருப்பம்

ஐது,ஹேது - காரணம்

ஏக்கம்,ஐக்கியம் - ஒற்றுமை

ஐஸ்வர்யம்,ஐச்வரியம் - செல்வம்,பொருள்,திரு

ஐதீகம்,ஐதிகம் - உலகுரை

ஐம் பூதம்,பஞ்ச பூதம் - ஐந்து முதற்பொருள்

ஓமம்,ஹோமம் - வேள்வி

ஒளடதம்,ஒளஷதம்- மருந்து

களோகம் - வான் வட்டம்,வளி மண்டலம்

கடகம் - கைவளை,வளையம்

கடம் - கடம்,யானைக்கதுப்பு

கடாட்சித்தல் - அருளல்

கடாரம் - கொப்பரை,தேங்காய்

கடிகாரம் - நாழிகை வட்டில்,பொழுது காட்டுங்கருவி

கடிகை - நாழிகை,தாழ்க்கோல்

கடினசித்தம் - வன்னெஞ்சம்

கடினம் - வன்மை,கடுமை,வருத்தம்,கொடுமை

கடூரம்,கொடூரம் - கொடுமை

கட்டம்,கஷ்டம் - துன்பம்,வருத்தம்

கணம்,ஹணம் - குழாம்,கூட்டம்,தொகுதி,நொடிப்பொழுது

கணி - கோள் நூல், கோல் நூல் வல்லான்

கணிகை - பொதுமகள்

கணிசம் - அளவு,மேம்பாடு

கணிதம் - கணக்கு

கண்டம் - நிலப்பிரிவு,துண்டு,கட்டி,மிடறு,கழுத்து

கண்திட்டி,கண்திருஷ்டி - கண்ணேறு

கதம்பகம்,கதம்பம் - கூட்டம்,மணப்பொருட் கூட்டு,சேர்ந்தது,இணைத்தது

கதலி - வாழை

கதி - நடை,செலவு,வழி,புகலிடம்,பற்றுக்கோடு,நிலை

கனகம்,கநகம் - பொன்

கனவான்,கநவான் - பெரியோன்,பெருமையாளன்,பெருந்தகை

கனிஷ்டை,கநிஷ்டை - பின்னோள்,தங்கை

கன்னிகை,கந்நிகை - மணமாகாதவள்,இளம்பெண்

கந்மம்,கருமம் - தொழில்,வினை

கபடம்,கவடம்,கபடு - கரவு,படிறு,வஞ்சகம்,மோசம்,சூது,ஒளிப்பு

கபாலம் - தலையோடு,மண்டையோடு

கபோதி - குருடன்

கப்பம் - இறை

கமண்டலம் - நீர்க்குடுவை

கமலம் - தாமரை,நீர்

கம்பீரம் - உயர்தோற்றம்,பெருமை,ஆழம்,செருக்கு

கயம்,ஹயம் - குளம்,ஆழம்,யானை

கரகம் - வட்டில்,நீர்க்குடுவை

கரகோசம்,கரகோஷம் - கைதட்டுதல்

கரணம் - கருவி,ஐம்பொறி

கரம் - கை

கருச் சித்தல் - முழங்கல்,இரைதல்

கருணை - அருள்,இரக்கம்

கர்த்தா,கருத்தா - தலைவன்,வினைமுதல்,ஆக்கியோன்,நூலாசிரியன்,முதல்வன்,கடவுள்

கர்ப்பவதி - சூலி

கர்ப்பாசயம் - கருப்பை

கர்வம் - செருக்கு,இறுமாப்பு

கலாபம்,கலபம் - மயில்,மயிற்றோகை

கலி - வறுமை,துன்பம்

கலியாணம் - மனம்,மன்றல்,பொன்,மகிழ்ச்சி

கவளீகரித்தல்,கபளீகரம்,கபளீகரித்தல் - முற்றிலும் விழுங்குதல்,விழுங்குதல்

கவனம் - கருத்து நோக்கம்,உன்னித்தல்

கவாத்து - படைக்கலப் பயிற்சி,வெட்டி விடுதல்

கவி - செய்யுள்,புலவன்,பாட்டு

கவுளி,கெளளி - பல்லி

களேபரம் - குழப்பம்,உடல்,பிணம்

கற்பம் - ஊழிக்காலம்,நெடுவாழ்க்கை மருந்து

கனம் - சுமை,பளு,பளுவு

காசம் - ஈளை,ஈளைநோய்,இருமல் நோய்

கசாயம்,கஷாயம் - காவி

காஞ்சிரம் - எட்டி மரம்

காட்டம்,காஷ்டம் - விறகு,வெகுளி

காதகன் - கொலையாளி

காயசித்தி - நீடுவாழ்ப் பேறு

காயம் - உடல்,யாக்கை,வான்

காரிய கர்த்தா - வினைமுதல்வன்

காரியதரிசி - அமைச்சன்,செயலாளன்

கலாட்சேபம் - பொழுதுபோக்கல்,நாட்கழித்தல்,வாழ்க்கை

கால நியமம் - காலமுறை,காலக்கடன்,கால்,ஒழுங்கு

கிஸ்தி - திறை,வரி

கிரகணம்,கிராணம் - பற்றுதல்,பிடித்தல்

கிரகஸ்தம் - இல்லற நிலை

கிரகம் - வீடு,கோள்,பற்றுதல்,பிடிப்பு

கிரணம் - ஒளி,கதிர்

கிரந்தம் - நூல்,எழுத்து

கிரமம் - ஒழுங்கு,முறைமை

கிரயம் - விலை

கிராதன் - குறவன்,வேட்டுவன்

கிரி - மலை,பன்றி

கிரிகை - தொழில்,செயல்,வினை,சடங்கு

கிரிமி,கிருமி - உயிரி,பூச்சி,புழு

கிரீடம் - முடி

கிருஷி - பயிர்,உழவு,பயிர் செய்கை

கிலம் - கழிவு,அழிவு,சிறுமை

கிலேசம் - அச்சம்,கவலை,துன்பம்

கீதம் - இசை,பாட்டு,பாடல்,இசைப்பாட்டு

கீர்த்தனம்,கீர்த்தனை - புகழ்ச்சி,புகழ்ப்பா

கீலகம் - ஆணி,பொருத்து

குஞ்சரம் - யானை

குஷ்டம் - தொழு நோய்,பெரு நோய்

குணஷ்டை - தொல்லை,துன்பம்

குதர்க்கம் - அழிவழக்கு

குதூகலம்,குதுகலம் - பெருங்களிப்பு,பெருமகிழ்வு

குபேரன் - பெருஞ்செல்வன்,செல்வக்கடவுள்

குமரி,குமாரி - நங்கை,மணமாகாப்பெண்,புதல்வி,மகள்

கும்பம் - குடம்

குருகடாட்சம் - ஆசிரியனருட்பார்வை

குரோதம் - உட்பகை

குலாலன் - குயவன்

குலிசம் - வேற்படை

குன்மம் - சூலை,வயிற்று வலி

கேதம் - துன்பம்,இடர்,குற்றம்

கேவலம் - சிறுமை,தனிமை

கோகிலம் - குயில்

கோடம்,கோஷம்,கோஷ்டம் - முழக்கம்,பேரோசை

கோஷ்டி - கூட்டம்

கோடி - நூறு நூறாயிரம்

கோதண்டம் - வில்

கோளகை,கோளம் - உருண்டை,வட்டம்

கெளரவம் - மேன்மை,பெருமை

சக - கூட,உடன்

சகசம்,ஸகஸம் - இயற்கை,ஒற்றுமை

சகஸ்ரநாமம் - ஆயிரந்திருமொழி,ஆயிரந்திருப்பெயர்

சகமார்க்கம் - தோழமை நெறி

சகலம் - எல்லாம்

சகவாசம் - கூடவிருத்தல்,உடனுரைதல்,பழக்கம்,சேர்க்கை,நட்பு

சகா - தோழன்,துணை

சகாப்தம் - ஆண்டு,நூறாண்டு

சகாயம் - நயம்,நன்மை,மலிவு,பயன்,உதவி,துணை

சகி,சகீ - தோழி

சகிதம் - உடன்

சகுணம் - குணத்தோடு கூடியது

சகுந்தம் - கழுகு,பறவை

சகுனம் - குறி

சகோதரம் - உடன்பிறப்பு

சகோதரி - உடன்பிறந்தாள்

சக்கரம் - உருளை,வட்டம்

சக்தி - ஆற்றல்,வல்லமை,வலி

சங்கடம்,சங்கட்டம் - இக்கெட்டு,நெருக்கடி,இடர்,கண்மூடுதல்

சங்கிதை - தொகுதி,வரலாறு

சடுதி,சடிதி - விரைவு

சஷ்டியப்த பூர்த்தி - அறுபதாமாண்டு நிறைவு

சண்டப்பிரசண்டம் - மிகு விரைவு

சண்டமாருதம் - பெருங்காற்று,கடியகாற்று,புயற்காற்று

சண்டாளம் - தீமை,புலைத்தன்மை,நம்பிக்கை கேடு

சண்டாளர் - தீவினையாளர்,இழிஞர்

சண்டித்தனம் - முருட்டுத்தன்மை,முரட்டுத்தன்மை

சதகோடி - நூறு கோடி

சதசு - அவை

சதம் - நூறு நிலை

சதானந்தம் - இடையறா வின்பம்

சதி - இறைவி,அழிவு,வஞ்சனை,சூழ்ச்சி

சந்தகம் - எப்பொழுதும்

சந்தானம் - வழி,வழித்தொடர்பு

சந்தித்தல் - எதிர்படுதல்,கூடுதல்

சந்திரலோகம் - திங்கள் உலகு,அம்புலியுலகம்

சந்திரன் - பிறை,கலையோன்,இரவோன்,அலவன்,அல்லோன்

சந்து - முடுக்கு,இயங்கும் உயிர்,தூது,பிளப்பு,பொருத்து

சந்துட்டம்,சந்துஷ்டி,சந்தோஷம் - மகிழ்ச்சி

சந்தேகம் - ஐயம்,ஐயுறவு

சந்தோஷம் - மகிழ்ச்சி,உவகை,களிப்பு

சன்னதி,சந்நதி,சந்நிதானம் - திருமுன்

சந்நியாசம் - துறவு,துறவறம்

சபதம் - ஆணை,உறுதிமொழி,வஞ்சினம்

சபம்,ஜெபம் - உருவேற்றல்

சபலம் - நிறைவேறல்,வெற்றி,நடுக்கம்,ஏக்கம்,இச்சை,அவா

சபா,சபை - அவை,மன்றம்,கழகம்,அரங்கம்

சபித்தல் - தீமொழி கூறல்,சினந்துரைத்தல்

சமஷ்டி - தொகுதி,எல்லாம்

சமதை - ஒப்பு

சமர்த்தன்,சமத்தன் - வல்லான்,வல்லவன்,திறமையாளன்

சமஸ்தானம்,சமத்தானம் - அரசவை,தலை நகர்

சமம் - இணை,ஈடு,மட்டம்,போர்,நடு,ஓர்மை

சமரச தத்துவம் - பொதுநிலையுண்மை

சமரசம் - பொது,வேறுபாடின்மை,ஒற்றுமை

சமர்ப்பணம் - ஒப்பித்தல்,உயர்ந்தோர்க்குக் கொடுத்தல்

சமாதானம் - அமைதி,இணக்கம்,தணிவு,உடன்பாடு,தக்கவிடை

சமாதி - அமைதி,பிணக்குழி,பேசாதிருத்தல்,இறப்பு,மரித்தல்

சமாப்தம்,சமாப்தி - முற்றுப்பெற்றது

சமாராதனை - உளநிறைவு

சமி,ஷமி - பொறு

சமிதை - வேள்வி விறகு,உலர்ந்த குச்சி

சமீபம் - அருகு,அணமை,மருங்கு

சமீன்தார்,ஜமீந்தார் - நிலக்காரன்,பெருநிலக்கிழார்

சமுதாயம் - குமுகம்,கூட்டம்

சமுத்திரம் - கடல்

சமை,ஷமை - பொறுமை

சம்சாரம்,சம்ஸாரம் - குடும்பம்,இல்லாள்,இல்லத்தரசி

சம்பத்து - செல்வம்,பொருள்

சம்பந்தம -உறவு,பற்று,இயைபு,சார்பு,தொடர்பு,பொருத்தம்

சம்பிரதாயம் - தொல்வழக்கு,முன்னோர் முறை,பண்டை முறை

சம்பு ரேட்சணம் - தெளித்தல்

சம்பூரணம் - நிறைவு

சம்மதம் - உடன்பாடு,ஒப்புமை,இயைபு

சம்ரஷணை - பாதுகாப்பு

சயம்,ஜெயம் - வெற்றி

சரணம்,சரண் -அடைக்கலம்,வணக்கம்,கால்,திருவடி

சரணாகதி - புகலடைதல்,அடைக்கலம்

சராசரம்,ஜங்கமா - இயங்கியற் பொருள், நிலையியற் பொருள்

சரிதம்,சரிதை,சரித்திரம் - வரலாறு

சரீரம் - உடல்,யாக்கை,மெய்

சருமம்,சர்மம் - தோல்

சர்ப்பம் - பாம்பு

சர்வகலாசாலை -

பல்கழைக் கழகம்

சலதளம்- அரசமரம்

சலதாரை - நீர்க்கால்,நீரோட்டம்,மதகு

சலதோசம் - நீர்க்கோர்வை,தடுமம், நீர்க்கோவை

சல்லாபம் - உரையாடல்

சவம் - பிணம்

சவுகரியம்,செளக்கியம்,செளகரியம் -நலம்

சவுந்தரியம்,செளந்தரியம்,சவுந்தரம் - அழகு

செளபாக்கியம்,சவுபாக்கியம் - செல்வம்

சற்காரியம் - உற்பொருளினின்று தோன்றும் வினை

சற்குணம் - நல்லியல்பு

சனனம்,ஜனனம்,சனிப்பு,சன்மம் - பிறப்பு

சாகசம் - ஆற்றல்,துணிவு,நெருக்கிடை

சாகரம் - கடல்

சாகுபடி - பயிர் செய்தல்

சாகை,ஜாகை(உருது) - தங்குமிடம்

சாக்கிரதை,ஜாக்கிரதை - விழிப்பு,உன்னிப்பு,எச்சரிக்கை