Friday, December 26, 2008

கிராமத்து மார்கழியே!



கிராமத்து மார்கழியே வாழி!

தும்பைப்பூவின் பனிக்குளியல்

தூவான வாடைத் தென்றல்

அதிகாலை பெண்களின் விழிப்பு

இல்ல வாசலில் சாணம் தெளிப்பு

கூட்டிய பின் கோலம் போட்டு

கோலத்தின் நடுவே பரங்கிப் பூக்கள் போட்டு

கோவிலில் கேட்கும் பக்திப் பாடல்

கோலமிடும் பெண்கள் ஒன்று கூடல்

காளையர்கள் அதிகாலை விழித்து

கதிர் முற்றிய தம் வயலை பார்த்து

அறுவடைக்கு உகந்த நாள் குறித்து

அதுவரைக்கும் கதிரைப் பாதுகாத்து

பொங்கலுக்கு முன்னரே களம் கண்டு

போற்றிடுவார் புது நெல் கொண்டு

-ஜோதிபாரதி

Monday, December 22, 2008

ரஜினி சொல்லாட்டியும், தங்கபாலு சொன்னாலும் கலைஞர் கேட்பார்! -சீமான் கைது!!

ரஜினி சொல்லாட்டியும், தங்கபாலு சொன்னாலும் கலைஞர் கேட்பார்! -சீமான் கைது!!

Saturday, December 20, 2008

கலங்கரை விளக்கம் கலைஞரும், கவிழ்ந்து போன சாணக்கியத்தனமும்


தமிழகத்தின் ஓரளவு உணர்வுள்ள ஒரே அரசியல் தலைவராக நாமெல்லாம் எதிர்பார்த்திருந்த கலைஞர் அவர்கள் ஆட்சியில் இருக்கும் போது, (தற்போது ) நடைபெறும் நிகழ்வுகள் மிகவும் வருத்தத்தையும் ஆழ்ந்த கவலையையும் ஏற்படுத்துகிறது. தனது அரசியல் மற்றும் மற்ற விடயங்களுக்காக மத்திய காங்கிரஸ் அரசாங்கத்திடமும், தமிழக காங்கிரஸ் பிரமுகர்களிடமும் இனமான உணர்வை விட்டுக் கொடுப்பதாகவே அனைவராலும் கருதப் படுகிறது.

கலைஞர் அவர்களை அரசியல் தலைவர், முதல்வர் போன்ற பதவிகளுக்கு அப்பார்ப்பட்டு தமிழுக்காக நேசித்தவர்கள் எண்ணிலடங்கா.

அந்த வகையில் கலைஞர் அவர்கள் தமிழ் நல்லுலகுக்கு தன்னிகரில்லாத் தமிழ் மகனாகத் திகழ்ந்தார்.

உலகத் தமிழர்களின் தலைவராகவே உற்றுப் பார்த்தவர்களும் உண்டு.

காரியங்களை கண நேரத்தில் கச்சிதமாக முடிக்கவல்லவர்.

சாணக்கியத் தனத்தில் சரித்திரம் படைத்தவர்.

போர்க்குணம் படைத்த போராளி.

நா வன்மையால் நயவஞ்சகர்களையும் நண்பனாக்கிக் கொண்டவர்.

பேனாவினால் பெரிய வரலாறு படைத்தவர்.

அவருக்கு இயலாதது என்று ஒன்று இவ்வுலகில்(அரசியல்) இல்லை.

அந்த வகையில் நம் தமிழ்ச் சமுத்திரத்தில் கலைஞர் கலங்கரை விளக்கமாகவே திகழ்ந்தார்.

மதிய அரசுக்கு எப்போதெல்லாம் சிக்கல் வருகிறதோ அப்போதெல்லாம் இவரே முன்னின்று தீர்த்து வைத்தார்.

நாடளுமன்ற நாயகரை இவரே தேர்ந்தெடுத்தார்.

குடியரசு தலைவரை இவரே தேர்ந்தெடுத்தார்.

ஏன், சோனியா காந்தி இந்தியப் பிரமராக வேண்டும் என்று சூளுரைத்த முதல் அரசியல் தலைவரே கலைஞர்தான்.

தனது கட்சிக்கு அமைச்சரவையில் முக்கியத் துறைகளை கேட்டுப் பெற்றார்.

இவ்வளவும் செய்த கலைஞர் ஈழப்பிரச்சனையில் மட்டும் ஏன் மத்திய அரசைக் கேட்டு, அவர்கள் சொல் படி நடந்து கொள்கிறார்?

ஈழ மக்கள் மீது உச்சக்கட்டத் தாக்குதல் இந்திய ராணுவ அதிகாரிகளின் அறிவுரைப்படி நடைபெறுகிறதே இதைத் தடுக்க வேண்டாமா?

காணாமல் போன பிரணாப் முகர்ஜியைத் தேடுவதை விட்டு விட்டு, இந்திய அதிகாரிகள் கிளிநொச்சி சென்றதைக் காரணம் காட்டி மத்திய அரசை நிர்பந்திக்க வேண்டாமா?

நமது அடிப்படைக் கோரிக்கை ஈழத்தில் சிறிலங்க அரசினரால் நிகழ்த்தப்படும் கோரத்தாக்குதலை முடிவுக்குக் கொண்டுவருதல்: இந்த விடயத்தில் பிரணாப் முகர்ஜியின் சென்னை வருகையால் சமாதானம் அடைந்தது எப்படி? தொடர்ந்து தமிழ் மக்கள் மீது தாக்குதல் நடந்து கொண்டு தானே இருக்கிறது. இப்போது அதன் உச்சக்கட்டமாக இந்திய ராணுவ உயர் அதிகாரிகள், எப்படி தாக்குவது என்று சிறிலங்க படைக்கு ஆலோசனை வழங்குகிறார்கள். இதற்கு உங்கள் எதிர் வினை என்ன? தமிழக மக்கள் கேட்கிறார்கள். உலகத் தமிழர்கள் கேட்கிறார்கள்.

Friday, December 19, 2008

ரஜினி சொல்லாட்டியும், தங்கபாலு சொன்னாலும் கலைஞர் கேட்பார்! -சீமான் கைது!!

ரஜினி சொல்லாட்டியும், தங்கபாலு சொன்னாலும் கலைஞர் கேட்பார்!

சீமான்கள் சொன்னால் சீமானும் கைது செய்யப்படுவார்!

காங்கிரஸ்க்காரத் தமிழர்களுக்கு சில கேள்விகளை முன் வைக்கிறேன். முடிந்தால் இதற்கு பதில் சொல்லுங்கள். முடியாவிட்டால், தவறான பிரச்சாரம் செய்யாமல் உண்மையை சீர் தூக்கி பார்த்து எழுத வேண்டுகிறேன்.

1) வங்க தேச உதயம் எப்படி நடந்தது?

2) அன்னை இந்திராவைக் கொன்றவர்களை காங்கிரஸ் எப்படி நடாத்தியது, நடாத்துகிறது?

3) காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாலய உள்துறை அமைச்சர் ஏன் பொற்கோவிலுக்கு எதிரே காலணிகளைத் துடைத்து வைத்தார்?

4) இந்திராவை கொன்ற சீக்கிய சமூகத்தைச் சேர்ந்தவர் இந்திய பிரதமராக முடிகிறது. காந்தியைக் கொன்ற கோட்சேயின் ஆர்.எஸ்.எஸ் -ஐ சேர்ந்தவர்கள் பிரதமராக உதவிப் பிரதமராக இருக்க முடிகிறது. ஏன் தமிழர்கள் இந்திய பிரதமர் ஆகமுடியவில்லை அல்லது யாரோ ஆக விடாமல் தடுக்கிறார்கள்?

5) அகாலிதளம் மான் பிரிவு தலைவர் சிம்ரன்ஜித் சிங் மான் துப்பாக்கியுடன் பாராளுமன்றம் வருவேன் என்று சொல்கிறார். அவரும் இங்கு தானே குப்பை கொட்டினார். அவரை என்ன செய்தார்கள் காங்கிரஸ் ஆட்சியில்?

6)கூறியத் அமைப்பினர் துப்பாக்கியுடன் தான் பேச்சு வார்த்தைக்கு வருவோம் என்கிறார்கள். அவர்களை காங்கிரஸ் அரசு என்ன செய்ய முடிந்தது?

7) அசாமை ஆண்ட பிரபுல்ல குமார் மகந்தா உங்கள் பார்வையில் தீவிர வாதியா? அப்படி இருந்தால் அந்த மாநில மக்கள் அவரை எப்படி ஏற்றுக் கொண்டார்கள்?

8) இந்திரா கொலை முயற்சி, இராஜீவ் கொலை குற்றச்சாட்டு போன்றவற்றில் திமுகவுக்கு தொடர்பு உள்ளது என்று காங்கிரசார் பிரச்சாரம் செய்தனரே? பின்னர் அவர்களுடன் கூட்டணி வைத்தால் அது நியாயமா?

9) பல கொலைகளில் சம்பத்தப் பட்ட முன்னாலைய தீவிரவாத இயக்கம், பிரிவினை வாத இயக்கம் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவைச் சேர்ந்த சிபு சோரனை எப்படி காங்கிரஸ் அமைச்சரவையில் சர்ச்சைகளுக்கிடையில் சேர்க்க முடிந்தது?

10) அப்சல் என்னும் தண்டனை வழங்கப்பட்ட தீவிர வாதியை, தூக்கிலிடுவதை நிறுத்திவைக்க வேண்டி காஷ்மீர் முதலமைச்சர் குழாம் நபி ஆசாத் சப்பைக் கட்டுடுடன் பிரதமரைச் சந்திக்கலாமா?

11) இராஜீவைத் முதுகில் தாக்கிய சிங்கள சிப்பாய்க்கு சிறிலங்கா அரசாங்கம் எவ்வளவு மரியாதை அளித்தது என்று தெரிந்தும் அவர்களோடு கொஞ்சிக் குலாவுவதில் காங்கிரஸ் அரசுக்கு என்ன மரியாதை அங்கு கிடைக்கும்? மரியாதை இல்லாத இடத்தில் பல்லிளிப்பது ஏனோ?

12) கிழக்குத் தீமோர் இந்தோனேஷியாவில் இருந்து பிரிய முடிகிறது, ஏறக்குறைய அதே நிலை அல்லது அதைவிட மனித உரிமைகளை தரையில் போட்டு மிதிக்கும் நிகழ்வுதானே இன்று சிறிலங்காவில் நடந்து கொண்டிருக்கிறது? இவற்றையெல்லாம் சீர்தூக்கிப் பார்த்திருக்க வேண்டாமா?

போறேன் போறேன்னு சொன்னது ஒரு நண்டு, அது போவாம வலைக்குள்ள போயிடுச்சு. அதைத் தேடித் தேடி அலையுது நரிகள். நரிகளுக்கு வலைக்குள்ள வாலை விட பயம். நரிக்கு வேலையும் இல்லை அதைப் போல அலைச்சலும் இல்லை. ஒரு புண்ணியமும் இல்லை.

Thursday, December 18, 2008

கலைஞர்-துரைமுருகன் ஒரு தவறான புரிதல்!

கலைஞர் : இந்த கோபாலசாமியால பெரிய தொந்தரவா இருக்கய்யா.

துரைமுருகன் : ஆமாங்க தலைவரே இந்தாளு ஏன் திருமங்கலத்தை அந்தம்மாவுக்கு விட்டு கொடுத்து நம்ம உயிரை வாங்குறாரு?

கலைஞர் : அட போய்யா நான் திருமங்கலம் தேர்தலை அறிவிச்ச தேர்தல் கமிஷனர் கோபால்சாமியச் சொன்னா...! நீ வேற ஒன்னு கெடக்க ஒன்னா புரிஞ்சுக்கிறே!

துரைமுருகன்: கவலை படாதீங்க தலைவரே! நம்ம அஞ்சா நெஞ்சன் பாத்துக்குவார்.

கலைஞர் : ம்ம்! ம்ம்! அவர் பாத்துக்கட்டும். நீங்கல்லாம் என்னை சுத்தியே நில்லுங்க. போங்கையா போய் எலக்ஷன் வேலைய பாருங்கய்யா. என்னை சுத்தியே நின்னா எனக்கு காத்தே வரமாட்டீங்குது. (எனக்கு மட்டும் தான் வேர்த்து வடியுது. நீங்கல்லாம் எப்படி கூலா நிக்கிறீங்க!)

ஆற்காடு வீராசாமி : தலைவரே! நாங்களெல்லாம் அஞ்சா நெஞ்சன் தலைமையில அணிவகுக்கலாமுன்னு இருக்கோம். தொகுதியை கைப்பத்திடுவோம் தலைவரே!

கலைஞர் : ஐயா! சாமி!! நீ மட்டும் அங்க போய்ராதே!!! நீ போனேன்னு வச்சுக்கோ, ஓட்டு போடுரவனுக்கு மின் வெட்டு தான் ஞாபகம் வரும். அப்புறம் ஜெயிச்ச மாதிரித்தான்! பேசாம நீயே வீட்டுக் காவல்ல இருந்துக்கோ. இல்லை என்றால் காவல்துறையை விட்டு கைது செய்ய நேரிடும். அமைச்சரை கைது செய்து நேர்மையை நிலை நாட்டிக் கொள்ள உதவும். (மின்வெட்டு செய்த அமைச்சர் கைது - எப்படி ஒரே கல்லுல ரெண்டு மாங்கா!)

தொண்டன் : ஆர்காட்டரே! என்ன புரியாம பேசுறீங்க. வாக்குச் சாவடியை முதலில் கைப்பற்றுவோம். பின்னர் தொகுதியை கைப்பற்றுவது சுலபம்.

துரைமுருகன்: தலைவரே! எலக்ஷன் நேரமாப் பாத்து நல்ல மழை பெய்யுது! வெற்றி நமக்குத்தான் தலைவரே!

கலைஞர்: அடப்போய்யா, எலக்ஷன் நேரத்துல வெள்ள நிவாரணம் அது இதுன்னு போட்டு உயிரை வாங்குராங்கைய்யா இந்த இடது சாரிங்க. அதனாலேயே வெற்றி பாதிக்குமோன்னு கவலையா இருக்கையா.

துரைமுருகன்: (என்னா இன்னைக்கு தலைவர்ட்ட எது சொன்னாலும் தவறாவே போய் முடியுது) தலைவரே வரட்டுங்களா?

கலைஞர்: வரவேண்டாம் போய் எலக்ஷன் வேலையைப் பாருங்கய்யா. வெற்றி பெற்றா மட்டும் இங்க வாங்க.

துரைமுருகன் : (நல்லவேளை சென்னையில எலக்ஷன் இல்ல. இருந்தா சட்ட கல்லூரிப் பிரச்சனையை இழுத்து நம்ம பேரு நாறிடும். நான் தமிழ் நாட்டுல எங்கயும் போய் எலக்ஷன் வேலை பார்க்க முடியும். பாவம் ஆற்காடு!)

பி.கு: இந்தப்பதிவு வெறும் பகிடி,நகைச்சுவை மட்டுமே! படித்து விட்டு சிரிக்க முடிந்தால் சிரிக்கலாம் இல்லன்னா மறந்துடுங்க.

Monday, December 15, 2008

பதி பக்தியும், காங்கிரஸ் கூட்டணியும்

நடைபெற இருக்கிற நாடாளுமன்றத் தேர்தல் தமிழக அரசியல் கட்சிகளுக்குள் ஒரு பலபரிட்சையை ஏற்படுத்தும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. இருப்பினும் அதற்கு முன்னரே அவசரமாக அறிவிக்கப் பட்ட திருமங்கலம் சட்டமன்ற இடைத் தேர்தல் இதற்கு முன்னோட்டமாக வெள்ளோட்டமாக அமையும் என்று கருதுகிறோம்.


கடந்த சட்டமன்ற மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களில் தனது கட்சியின் வளர்ச்சியை ஓரளவேனும் நிரூபித்துள்ள திரு.விஜயகாந்த் அவர்கள் ஒரு முக்கிய அரசியல் சக்தியாகக் கணிக்கப் படுகிறார். இவரிடம் கூட்டணி வைக்க பொதுவுடைமைக் கட்சிகளில் இருந்து, காங்கிரஸ்,பாரதீய சனதா போன்ற கட்சிகள் போட்டி போட்டது நினைவிருக்கலாம். இருப்பினும் தான் தனியாக போட்டியிடுவதில் இன்னும் உறுதியாக இருப்பது திரு விஜயகாந்த அவர்களுக்கு நன்மை பயக்கக் கூடிய ஒன்று. ஆனால் வருகிற தேர்தலில் அவருடைய வாக்குகள் குறையும் பட்சத்தில் அதுவே அவருக்கு பெருத்த பின்னடைவாகவும் அமையலாம்.

இப்போதைய கூட்டணிகளுக்கு வருவோம். தி.மு.க., காங்கிரஸ்,விடுதலை சிறுத்தைகள், முஸ்லீம் லீக் கட்சிகள் ஓர் அணியாகவும், அ.தி,மு.க, இடது சாரி கட்சிகள்,ம.தி.மு.க போன்ற கட்சிகள் ஓர் அணியாகவும், தே.மு.தி.க ஒரு அணியாகவும் இருக்கின்றன. தமிழகத்தின் வட மாவட்டங்களில் அதிக வாக்கு வங்கியைப் பெற்றிருக்கும் பா.ம.க திரிசங்கு சொர்க்க நிலையில் தான் இதுவரை இருக்கிறது. தேர்தல் நெருங்க நெருங்க இவர்களுக்கு தி.மு.க மற்றும் அ.தி.மு.க தரப்பில் இருந்து அழைப்புகளும், அதிக தொகுதிகள் தருகிறேன் என்கிற கெஞ்சல் கூட இருக்கலாம். இது பொறுத்திருந்து பார்க்க வேண்டிய ஒன்று.

தி.மு.க வைப் பொறுத்தவரை காங்கிரசை விட்டால் வேறு வழி இல்லை. அவர்களை தன்னுடன் வைத்திருந்தால் தான் வருகிற தேர்தலில் வெற்றி மற்றும் ஆட்சியைக் தக்கவைத்துக் கொள்ள முடியும் என்கிற நிலை. அதனால் தான் ஈழப்பிரச்ச்சனையில் கூட கலைஞரால் தனது கருத்துக்களை, கோரிக்கைகளை உரத்த குரலில் எடுத்து வைத்து சாதிக்க இயலவில்லை. காங்கிரஸ் தே.மு.தி.க வுடன் கூட்டணி வைத்தால் தி.மு.க ஆட்சிக்கு ஏதும் பாதிப்பில்லை. ஆனால் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்தால் தி.மு.க ஆட்சி நீடிப்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை. ஏனென்றால் அதன் தலைவியின் முக்கிய கோரிக்கையே தி.மு.க ஆட்சியக் கலைக்க வேண்டும் என்பதாகத்தான் இருக்கும். இந்த கூட்டணி அமைய வாய்ப்புகள் குறைவு என்றாலும் கூட வாய்ப்பில்லை என்று கூறிவிட முடியாது. ஒரு வேலை ஜெயலலிதா சோனியாவின் பதி பக்தியை விமர்சித்ததை சோனியா மறந்திருந்தால், இது நிகழலாம். அதற்கு சோனியாவிற்கு, அத்வானிக்கு வந்தது போல் செலெக்டிவ் அம்னீசியா நோய் வந்தால் சாத்தியப்படும்.

சட்டமன்ற தேர்தல்களைப் பொறுத்தவரையில் பா.ம.க வின் தாக்கம் அதிகமாக இருக்கும். நாடாளுமன்ற தேர்தலில் அவர்களுக்கு ஐந்தாறு தொகுதிகள் கொடுப்பார்கள் அதுவும் அவர்கள் செல்வாக்கான தொகுதிகளாக இருப்பதால் பா.ம.க வுக்கு வெற்றி வாய்ப்பு இருக்கும். ஆனால் மற்ற தொகுதிகளில் அவர்களுடன் கூட்டணி வைக்கும் திமுக வுக்கோ, அ.தி.மு.க.வுக்கோ பெரிதாக ஒன்றும் பலன் இராது. இதனால் கடைசி நேரத்தில் தி.மு.கவும், அ.தி.மு.கவும் இவர்களுடன் கூட்டணி வைக்காமல் தனியாக விட்டு விட்டாலும் ஆச்சர்யப் படுவதற்கில்லை.

பா.ச.க -வைப் பொறுத்தவரை அவற்றைத் இடதுசாரிகளும், முஸ்லீம் லீக் கட்சிகளும் தீண்டத்தகாத கட்சியாகவே கருதுகின்றன. மற்ற திமுக,அதிமுக உள்ளிட்ட கட்சிகள் பாபர் மசூதி இடிக்கப்பட்ட பின்னரும் இவர்களுடன் கூட்டணி வைத்திருந்தார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. இவர்கள் மத சார்பு கூட்டணி, சார்பற்ற கூட்டணி என்பதெல்லாம் கண் கட்டி வித்தை. இப்போது பாசக விற்கு இரண்டே வழிதான், ஒன்று தே.மு.தி.க விடன் கூட்டணி வைக்க வேண்டும். இல்லை தனித்துப் போட்டியிட்டு மண்ணை கவ்வ வேண்டும்.

தேர்தலுக்குப் பிறகு ஜெயலலிதா, பா.ச.க விற்கு ஆதரவளிக்கக் கூடும் என்கிற நிலைப்பாடும் இருக்கிறது. இதை அவர்களுடன் கூட்டணி வைத்திருக்கும் தா.பாண்டியனே மறுக்கவில்லை. மொத்தத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் அல்லது பா.ச.க மத்தியில் அதிக இடங்களை வென்றிருந்தால் அந்த கட்சியுடன் கூட்டணி அமைச்சரவை அமைக்க திமுக தயங்காது. அதிமுகவைப் பொருத்த வரையில் பா.ச.க அதிக இடங்களை வென்றிருந்தால் அவர்களுடன் கூட்டணி அமைச்சரவை அமைப்பது நிச்சயம். காங்கிரஸ் அதிகமானத் தொகுதிகளில் வென்றிருந்தாலும் காங்கிரசுடனும் கூட்டணி மத்திரி சபைக்கு ஜெயலலிதா ரெடியாகத் தான் இருப்பார், "பதிபக்தி" என்ற வார்த்தையை சோனியா காந்தி மறக்கும் பட்சத்தில்...!

Saturday, December 13, 2008

உடன் பிறந்த சகோதரர்கள்! (உ.பி.ச)



இந்த வாளும் வேலும் சந்தித்தால்......!

Thursday, December 4, 2008

விவசாயிகளுக்கு ஏன் அரசு உதவி செய்ய வேண்டும்? பொது புத்தியும், ஆதங்கமும்

ஆடிப்பெருக்கல்ல ஆனந்தப்பட - வெள்ளப்பெருக்கு



இரவெல்லாம் மழை -ஆம்

இடியும் கூட


இரக்கம் இல்லை இந்த வானுக்கு

உறக்கமில்லை எனக்கு


அன்று நட்ட நடவு மஞ்சநேரி வயலில்

விடியும் வரை காத்திருந்தேன்


காலை இரவை தழுவிக்கொள்ளும் வேளையில்

வெளிக்கிட்டேன் வயலுக்கு மண்வெட்டியுடன்


இளங்காடு கடந்து அறை மணி நேரத்திற்குள்

அடைந்தேன் மஞ்சநேரி எல்லையை


எட்டிப்பார்த்தால் எங்கும் வெள்ளக்காடு

சொல்லி மாளாது என் வேதனையை துயரை


தூரத்து வாய்க்காலில் ஆங்காங்கே நட்ட நாற்று

மிதந்து வரக்கண்டேன்


வந்த கண்ணீரை துடைத்துக்கொண்டேன்

நீயுமா இந்த வெள்ளத்தில் கலக்கவேண்டும் என்று


வயலை நெருங்கினேன் வாய்க்கால் காணேன்

நட்ட நடவு காணேன் வரப்பு காணேன் -அட

நில அளவைக் கல்லையே காணேன்

நிலைகுலைந்து போனேன்


இறங்கினால் இடுப்பளவு நீர்

உணர்ந்துகொண்டேன் ஒரு சாண் பயிரின் நிலையை


பயிரே தெரியவில்லை

வயிறு மட்டும் எரிந்தது

தண்ணீருக்குள்ளேயும்


வாடிய பயிரை கண்டு வாடியவர் வள்ளலார்

இங்கே மூழ்கிய பயிரை கண்டும் வாடினேன்


வரப்புயர நீர் உயரும், நீர் உயர நெல் உயரும்

இங்கே வரப்பும் பயிரும் தெரியவேயில்லை

நீர் மட்டுமே உயர்ந்து நின்றது


வெள்ளத்தனைய மலர் நீட்டம் மட்டும் தானா?

இங்கே பயிர் நீட்டம் கூடாதா?


தண்ணீரை வரவுக்கு மேல் செலவு செய்ய

முடியாமல் வருந்தினேன்


வடிகால் வெட்டலாம் என்றால்

அதுவும் மிதந்து போகிறது


திரும்பிப் பார்த்தேன்

ஏரிக்கு போய் மதகடைப்போம் என்று


மதகடைப்பதென்றால் பலகை இறக்குவதொடு

சில திரை வைக்கோலும்

தேவைப்படும் என்று தெரியும்

இருந்தாலும் சென்றேன் மஞ்சநேரியை நோக்கி


போகும் வழியில் தண்ணீரின் வேகத்தை கண்டேன்

இருந்தாலும் சென்றேன் மனம் தளராமல்


ஏரியை நெருங்கியதும் நொறுங்கினேன்

கரை உடைத்து நீர் புரண்டோடுவதை கண்டு


தனக்கியன்றதையும் இயலாததையும் செய்ய முடியா

சொல்லொணாத் துயருற்றேன்


வீட்டுக்கு பயணித்தேன் -வழியில்

வந்த யாரையும் பார்க்கவில்லை

யாரும் வயலைப்பற்றி கேட்டால்

பதிலுரைக்க வெட்க்கப்பட்டு


மஞ்சநேரி வயல் எப்படி இருக்கிறது?

அம்மா கேள்விக்கு அயர்ந்து போய்

அமர்ந்தேன் சொல்லற்றவனாய்

பதிலுரைத்தேன் கண்ணீர் துளிகளாக


அடுத்தவருடம் பார்த்துக்கொள்ளலாம் என்ற

அம்மாவின் தேற்றுதல் வரிகளுடன்

ஆறுதல் அடைந்தேன்


என் உள்மனசு சொன்னது

எத்தனை முறைதான்

இந்த வரிகளை கேட்டு ஆறுதல் அடைவது என்று…




அன்புடன் ஜோதிபாரதி

சிஃபி தமிழ் 2008 பொங்கல் சிறப்பு மலரில் பிரசுரமாகியுள்ளது
பதிவுகள்

வார்ப்பு கவிதை இதழ்
திண்ணை
கீற்று

Friday, November 21, 2008

சாதி மத வெறியர்களுக்கு இங்கே சுளுக்கு எடுக்கப்படும்!

ஆயிரத்தில் ஒருவன்



எல்லா சாதி மதத்தினரின்

மானத்தையும்

கரும்புள்ளி செம்புள்ளி குத்தி

கழுதைமேல் ஏற்றி

கஞ்சி குடிக்கவைத்து

துவைத்து

சுளுக்கெடுத்து

அழுக்கெடுத்து

காயவைத்து

சூடும் வைத்து

கை கால்களை

மடித்துக் கட்டிப்போட்ட

சலவைத் தொழிலாளி

Saturday, October 25, 2008

ஜெயலலிதா-சோனியாவின் விருப்பப்படி நடக்கும் தமிழக அரசு!



வெளிப்படையாகப் பேசிய சீமான்-அமீர் கைது!


வெளிப்படையாக பேசாதவர்களை எதைக் கொண்டு தடுக்க முடியும்?

ஆற்றாமைத் தமிழன் அழுதால் மிதித்துவிட்டுப் போவார்கள். கர்ஜித்தால் கைது செய்கிறார்கள்!

ஜெயலலிதா-சோனியாவின் விருப்பப்படி நடக்கும் தமிழக அரசு!

ஜெயலலிதா-சோனியாவுக்கு சில கேள்விகள் மட்டும்,

தனி ஈழத்தைத் தவிர வேறு எந்தத் தீர்வு தமிழ் மக்களைக் காக்கும் என்று சொல்ல வருகிறீர்கள்?

இதற்கு ஆதரவு தெரிவிக்கும் பட்சத்தில் அதை யாரால் வென்றெடுக்க முடியும் என்று கருதுகிறீர்கள்?

இந்தாங்க ஈழத்தமிழர்களே உங்களுக்கு தனி நாடு தருகிறேன் என்று சொல்கிறாரா மகிந்த?

மயிலே மயிலே இறகு போடு என்றால் போடாது! அதை எப்படி எடுக்க வேண்டுமோ அப்படி எடுக்க வேண்டும்.

சிந்தியுங்கள் அருமைத் தாய்குலங்களே!

Friday, October 24, 2008

திருநாவுக்கரசர் இருக்கும் இடம் சரியான இடமல்ல?

மத்திய அரசில் தமிழகத்தைச் சேர்ந்த 13 அமைச்சர்கள் இருந்தபோதிலும் இலங்கைக்கு ராணுவ உதவிகள் செய்யப்பட்டுள்ளன. இதை கூட்டணியின் முக்கிய கட்சியான திமுக தடுக்கவில்லை என நாடாளுமன்றத்தில் அதிமுக குற்றம் சாட்டியது. இதையடுத்து திமுக-அதிமுக எம்பிக்களிடையே மோதல் ஏற்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக ராஜ்யசபாவில் நடந்த விவாதத்தில் பேசிய திமுக எம்பி. சிவா,
இலங்கையில் தமிழ் இனத்தையே முற்றிலுமாக அழித்து ஒழிக்கும் செயலில் அந்த நாட்டு ராணுவம் ஈடுபட்டுள்ளது. தமிழர் வாழும் பகுதிகளில் ரசாயன குண்டுகள் வீசப்படுகின்றன. இதனால் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள், அத்தியாவசிய பொருட்கள் இல்லாமல் தவித்து வருகின்றன.
இலங்கை பிரச்சினையில் மத்திய அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து நாடாளுமன்றத்தில் மத்திய அரசு விளக்கமளிக்க வேண்டும் என்றார்.

இதையடுத்துப் பேசிய அதிமுக எம்பி மைத்ரேயன்,
இலங்கைத் தமிழர் பிரச்சினையில் காங்கிரஸ் கூட்டணி அரசு தொடர்ந்து அமைதி காத்து வருகிறது. அது மட்டுமல்ல இலங்கை அரசுக்கு ராணுவ தளவாடங்கள் மற்றும் ரேடார் கருவிகளை வழங்கி, இனப் படுகொலைக்கு மறைமுக கூட்டாளியாகவும் செயல்படுகிறது.

தமிழகத்தில் இருந்து 13 சக்தி வாய்ந்த அமைச்சர்கள் இருந்தபோதிலும் இலங்கைக்கு தங்கு தடையின்றி ராணுவ உதவிகள் செய்யப்பட்டு வந்துள்ளன. காங்கிரசின் முக்கிய கூட்டணியும், தமிழகத்தின் ஆளும் கட்சியுமான திமுக கூட இதை தடுக்கவில்லை.

தற்போது எதிர்ப்பு வலுத்ததும், எதையோ சாதிக்கப்போவது போல மத்திய அரசு ஏமாற்றி வருகிறது. ஆழ்ந்த உறக்கத்தில் இருந்து விழித்து எழுந்துள்ள திமுகவும் ஒரு பெரிய ராஜினாமா நாடகத்தை அரங்கேற்றி உள்ளது.

உண்மையிலேயே, இலங்கை தமிழர் பிரச்சினைக்காக ராஜினாமா செய்ய வேண்டும் என்ற எண்ணம் திமுக அமைச்சர்களுக்கு இருந்திருந்தால் 7, ரேஸ்கோர்ஸ் சாலைக்கு (பிரதமர் இல்லம்) தான் ராஜினாமாவை அனுப்பி இருக்க வேண்டும். சென்னையில் உள்ள திமுக தலைமை அலுவலகத்தில் கொடுக்க கூடாது என்றார்.

அவருடைய பேச்சுக்கு, காங்கிரஸ் எம்பி ஜெயந்தி நடராஜன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இலங்கை அரசுக்கு இந்தியா ராணுவ உதவி அளிப்பதாக கூறுவது முற்றிலும் தவறானது என்றார்.

மேலும் திமுக எம்பிக்களும் அதிமுகவை கண்டித்து கோஷம் எழுப்பினர். மைத்ரேயனுக்கு ஆதரவாக அதிமுக எம்பிக்கள் எழுந்து நின்று கூச்சலிட்டனர்.

இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்தது.
அப்போது பேசிய மைத்ரேயன்,
இலங்கையில் சிங்கள மக்களைப் போலவே சரி சமமான உரிமையை கோரும் தமிழர்களின் கோரிக்கையை அதிமுக அங்கீகரிக்கிறது. சட்டத்துக்கு முன் சம உரிமை, கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் சம உரிமை ஆகியவற்றை ஆதரிக்கிறோம். இலங்கையில் சுயாட்சியுடன் கூடிய தமிழ் மாகாணத்துக்கான அவர்களுடைய போராட்டத்தை வரவேற்கிறோம்.

ஆனால், விடுதலைப் புலிகளின் தீவிரவாதத்தை கடுமையாக எதிர்க்கிறோம். சுயாட்சிக்காக தமிழர்கள் போராடுவதில் இருந்து விடுதலைப் புலிகளின் தீவிரவாதம் முற்றிலும் மாறுபட்டது என்றார்.

இதையடுத்துப் பேசிய பாஜக எம்பியான திருநாவுக்கரசர்,
இலங்கை தமிழர் பிரச்சனை அந்த நாட்டின் உள்நாட்டு பிரச்சனை மட்டுமல்ல. இந்தியாவின் தமிழகத்தின் சுமார் 1 லட்சம் இலங்கை தமிழர்கள் அகதிகளாக வாழ்கிறார்கள். கடும் யுத்தம் நடக்கும் போதெல்லாம் வந்த வண்ணம் உள்ளனர்.

இலங்கை ராணுவம் அப்பாவி இலங்கை தமிழர்களின் இல்லங்களில் கொள்ளை அடிக்கிறது. இலங்கை தமிழ் பெண்களை கற்பழிக்கிறது. கட்டாயப்படுத்தி அகதிகள் முகாம்களில் கொண்டு சென்று அடைக்கிறார்கள்.

வனப்பகுதிகளுக்கு தமிழர்கள் விரட்டி அடிக்கப்படுகிறார்கள். வீடு இழந்து, உணவின்றி, மருந்தின்றி காடுகளில் தமிழ் மக்கள் தவிக்கிறார்கள். சொந்த மக்களை அரசாங்கமே கொல்லும் செயல் உலக வரலாற்றில் இலங்கையில் தான் நடக்கிறது.

இந்திய அரசு எவ்வளவு காலம் வெறும் பார்வையாளராக இந்த கொடுமைகளை, மனித உரிமை மீறல்களை வேடிக்கை பார்க்கப்போகிறது? மத்திய அரசை நேரடியாக குற்றம் சுமத்துகிறேன்: இலங்கை அரசுக்கு ரேடார் போன்ற போர் உதவிக் கருவிகள் கொடுத்ததும், இலங்கை ராணுவத்திற்கு ராணுவ தளவாடங்கள், கருவிகள் கொடுப்பதும் தவறாகும்.

இலங்கையில் இனப்படுகொலை நடைபெறுகிறது. பெருமளவில் அப்பாவி மக்கள் கொல்லப்படுகிறார்கள். இலங்கையில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு செஞ்சிலுவை சங்கம் மூலமாக உதவிகள் வழங்க தமிழக பிஜேபி மற்றும் நெடுமாறன் போன்றவர்கள் மருந்து உள்ளிட்ட உதவிப் பொருட்களை சேகரித்தோம். ஆனால் இவற்றை வழங்க மத்திய அரசு அனுமதி வழங்கவில்லை.

மத்திய அரசு உடனடியாக ஐக்கிய நாட்டு சபையில் இப்பிரச்சனையை எடுத்து, ஐ.நா. மனித உரிமைக் குழுவை இலங்கையில் தமிழர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று அங்கு நிலவும் உண்மை நிலையை கண்டறிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மனித உரிமை அமைப்புகள், செஞ்சிலுவை சங்கம் போன்ற பொது நடுநிலை அமைப்புகளைக் கூட பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு உதவ இலங்கை அரசு தடை விதிப்பது அநியாயம்.


போரை உடனே நிறுத்தி பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணவும், அமைதி ஏற்படவும் இந்திய அரசு இலங்கை அரசை வற்புறுத்த வேண்டும் என்றார்.

இந்த விவாதத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்பி ராஜா, மார்க்சிஸ்ட் எம்பி ரங்கராஜன் ஆகியோரும் பேசினர்.

(ஊடகச் செய்திகள்)

திருநாவுக்கரசர் இருக்கும் இடம் சரியா?

ஈழத்தமிழர்கள் பற்றிய பாரதீய சனதா கட்சியின் கொள்கை என்ன?

காங்கிரசின் கொள்கையும் பாரதீய சனதாவின் கொள்கையும் ஒன்றே?

திருநாவுக்கரசர் இருக்கும் இடம் அவருக்கு சரியான இடமா?

Thursday, October 23, 2008

வைகோ கைது -வேதனை வெட்கம் அவமானம் தமிழினத்துக்கு!



நாட்டில் பிரிவினைவாதத்தை தூண்டும் வகையில் பேசியதாகக் கூறி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று கைது செய்யப்பட்டார். அக்கட்சியின் அவைத் தலைவர் கண்ணப்பனை கைது செய்வதற்காக போலீஸ் படை பொள்ளாச்சி விரைந்துள்ளது.ஈழத்தில் நடப்பது என்ன? என்ற தலைப்பில் மதிமுக சார்பில் கருத்தரங்கம் நடந்தது. அதில் வைகோ பேசுகையில், புலிகள் மீதான தடையை உடனே நீக்க வேண்டும். இலங்கை தமிழர்களுக்காக ஆயுதம் ஏந்த வேண்டிய தேவை வந்தால் வைகோ முதல் ஆளாக களத்திற்கு வந்து நிற்பான். இதற்காக நாடு முழுவதும் இளைஞர்களை திரட்டுவேன்.தமிழர்களுக்கு எதிராக துரோகம் செய்தால் அதற்கு தமிழக மக்கள் தக்க தண்டனை தருவார்கள். தமிழ் ஈழம் மலரும். அதுவே எங்கள் தாகம் என்றார்.
அந்தக் கூட்டத்தில் பேசிய மதிமுக அவைத் தலைவர் கண்ணப்பன், தமிழ்நாடு தனிநாடு என்று சொல்லும் நாள் வந்தே தீரும். தமிழ் ஈழம் மட்டுமல்ல, தனித் தமிழ்நாடு மலரும் என்று பேசினார்.வைகோ, கண்ணப்பனின் பேச்சுக்கு காங்கிரஸ், அதிமுக, பாஜக ஆகியவை கடும் எதிர்ப்புத் தெரிவித்தன.இந் நிலையில் இன்று மாலை க்யூ பிராஞ்ச் போலீசார் திடீரென வைகோவின் சென்னை அண்ணா நகர் இல்லத்துக்குச் சென்று அவரைக் கைது செய்தனர்.பின்னர் அவர் ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்துக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். அங்கு நீதிபதி முன்பு வைகோவை போலீஸார் ஆஜர்படுத்தினர். வைகோவை நவம்பர் 6ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.இதைத் தொடர்ந்து வைகோ புழல் மத்திய சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார். மேலும் மதிமுக அவைத் தலைவர் கண்ணப்பனையும் கைது செய்வதற்காக போலீஸ் படை பொள்ளாச்சி விரைந்துள்ளது.முன்னதாக வைகோவின் கைதை அறிந்து ஏராளமான தொண்டர்கள் அவரது வீடு முன் குவிந்தனர். இதையடுத்து பலத்த பாதுகாப்புடன் அவர் கைது செய்யப்பட்டார்.
இந் நிலையில் இன்று சென்னையில் உள்ள இலங்கைத் துணைத் தூதரகத்தின மீது தாக்குதல் நடந்தது. இதையடுத்து அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
நன்றி: தட்ஸ்தமிழ்


வைகோ கைது -வேதனை வெட்கம் அவமானம் தமிழினத்துக்கு!
எனது வன்மையான கண்டனத்தைப் பதிவு செய்கிறேன்!

Monday, October 20, 2008

முதல்வர் பதவி -விஜயகாந்திடம் கொள்ளிமலை குப்புவின் சரமாரி கேள்விகள்!



முதல்வர் பதவிக்குப் போட்டியிடுபவர்களிடம் கொள்ளிமலை குப்புவின் கேள்விகள் -3


தமிழகத்தின் அடுத்த முதல்வராக வருவதற்கு பலர் முயற்சி செய்கிற இந்த நேரத்தில், அவர்கள் அனைவரிடமும் கொள்ளிமலை குப்பு என்பவர் கேள்வி கேட்க விரும்புகிறார்.

இதோ கொள்ளிமலை குப்பு அவர்கள்!

வணக்கமுங்க! கும்புடுறேனுங்க சாமியோவ்!! நான் தான் கொள்ளிமலை குப்புங்க! நானும் உங்க சாதி தானுங்க. எனக்கும் மொதலமைச்ச்சரா வர ஆசைதானுங்க. ஆனா வரமுயாதுன்னு சொல்ராங்கங்க. ஏன்னு கேட்டா உன்கிட்ட என்ன இருக்குன்னு பல்லு மேல நாக்க போட்டு கேக்குராங்கங்கோ!

பொரச்சிக்கலைஞர் , கேப்புட்டேன் , கருப்பு எம்.ஜி.ஆர் இப்புடி மக்கள் உங்களை பலவாரா அழைக்கிறாங்க சாமி. நானும் அப்படியே கும்புட்டுகுறேனுங்கோ! உங்க கட்சி 2011-ல் ஆச்சிக்கு வருமுன்னு கண்டிஷனா சொல்லி போட்டீங்க சாமி. நீங்க தான் மொதலமைக்சர்னும் சொல்லி கிட்டு வாறீங்க. நல்லதுங்க சாமி. உங்க கிட்ட நல்லா கிட்ட புடிச்சு நாலு கேள்வி கேக்கலாமுன்னு வந்திருக்கேன் சாமி இந்த குப்பு!

1) கட்சி ஆரம்பிச்ச்சத்துலேர்ந்து கேக்குறேங்க சாமி. கொஞ்சம் கோவிக்காதீங்க சாமியோவ்! நீங்க கட்சி ஆரம்பிச்சப்ப நாள் நட்சத்திரம், இடம், பேரு, கொடி எல்லாம் ஒரு சாமியார் கிட்ட கேட்டு தானேங்க செஞ்சீங்க. ஆச்சிக்கு வந்தா நீங்க மொதலமைச்ச்சர். ஆனா, அந்த சாமியார் தானுங்களே ஆட்சியை நடத்துவாரு?

2) சாமி உங்களை மாதிரி எல்லா அரசியல் வாதிகளும் கட்சி ஆரம்பிக்கிறது, மொதல் மாநாடு எல்லாம் மதுரையில நடத்துறீங்க சாமியோவ்! சந்தோசப் படுரோமுங்க. ஆனா இந்த கம்பெனி கிம்பெனின்கிரான்களே, அதான் சாமி தொழிலு, அதை மட்டும் வேற ஊருக்கு கொண்டு போறீங்களே இது நாயமா சாமி. நீங்க எப்படின்னு சொல்லுங்க சாமியோவ்?

3) கிந்தி படிக்க சொல்றீங்க சாமி. வாஸ்தவந்தான் சாமியோவ்! நம்ம புள்ளைங்க என்னதான் கிந்தி படிச்சாலும். வடநாட்டுக்காரங்க மதராசின்னு ஒதுக்கி வைக்கிறாங்களே, அதை மாத்துறத்துக்கு என்ன திட்டம் வச்சிருக்கீங்க சாமி? பிரதமராவுற திட்டம் இருக்கா சாமி?

4) அரசியலில் பழமும் தின்னு கொட்டையும் போட்ட அய்யா, பண்ணு ரொட்டியாரை பக்கத்துல வச்சுருக்கீங்க. சந்தொஷமுங்கோ. ஆனா இளைஞர் அணிக்கு மாப்பிள்ளைய போட்டுடீங்களே! இது சரியா சாமி? பொஞ்சாதிய உங்க கச்சியில முன்னிருத்துறீங்களே, இப்புடி பன்றத்துனாலே, என் சாதிக்காரன் எல்லாம் கேப்புட்டன் சாமியும் குடுப்பத்ததான் கொண்டார்ராருன்னு சொல்றாங்க சாமியோவ்! ஏன் சாமி வேற ஆள் இல்லீங்களா தமிழ் நாட்டுல?

5) ரேஷன் பொருளை வீட்டுக்கு கொண்டு வந்து தருவேன்னு சொன்னீங்க. நல்ல திட்டமுங்க. ஆனா, ரேஷன் கடையில இப்ப இருக்குற கியூவக் கொரைச்சாக் கூட கும்புடுவோமுங்கோ! ராத்திரி நேரத்துல ரேஷன் பொருள் போட்டீங்கன்னா, நாங்க வேலையெல்லாம் முடிச்சுட்டு வந்து வாங்குறதுக்கு சௌரியப்படும் சாமியோவ். ஏதாவது திட்டம் இருக்குங்களா?

6) பொறுப்பான அரசியல் கச்சிக்கு தலைவரா இருக்கீங்க சாமி. உங்க சிநேகிதனா இருந்தாலும் பொது எடத்துல போட்டு அடிக்கலாங்களா?

7) உங்கப் புள்ளைக்கெல்லாம் பேரு வச்சீங்க, ஆனா தமிழர்களைக் கொள்ளும் இலங்கை- சிங்கள அரசுக்கு, இந்தியா ராணுவ உதவி மற்றும் தொழில் நுப்ப ஒதவி எல்லாம் செய்யுதே. அதை ஏங்க கண்டிச்சு போராட்டம் நடத்தலே? (பேரு வச்சியே சோறு வச்சியான்னு விவேக் கேட்டது தான் சாமி நாபகத்துக்கு வருது) காங்கிரஸ் கூட கூட்டணி வைக்க போறீங்களா சாமி? அப்ப நீங்களும் ஈழப்பிரச்சனையில் அரசியல் தான் செய்றீங்களா சாமி?

8) கலைஞரைத் அதிகமாகத் தாக்கிப் பேசுறீங்க சாமி. ஆனா அந்த ஆச்சியை மட்டும் ஒண்ணுமே சொல்ல மாட்டீங்கிறீங்களே? அப்ப அந்த ஆச்சியோட ஆச்சி நல்லா இருந்திச்சுன்னு சொல்ல வர்றீங்களா சாமி? இல்ல பண்ணுருட்டி அய்யா அந்த ஆச்சியைப் பத்தி சொல்லிப் பயமூர்த்திட்டாங்களா??

9) சாமி! நீங்க பொது வாழ்வுல இருக்கீங்க சாமியோவ்! நீங்க காலேஜெல்லாம் வச்சுருக்கீங்கன்னு சொல்றாங்க. அதுல என் சாதி ஏழைப் புள்ளைங்க படிக்க காசு இல்லாம சீட்டு கொடுப்பீங்களா சாமி?

10) நீங்க நெறைய படத்துல நேர்மையான காவல்துறை அதிகாரியா நடிக்கிறீங்க. நீங்க ஆச்சிக்கு வந்தால் காவல் துறையில ஊழலே இருக்காதா சாமி. அதுக்கு என்ன திட்டம் சாமி வச்சு இருக்கீங்க? அப்பாவிகளை தண்டிச்சுட்டு, குற்றவாளிகளை விடுவிக்கும் பல காவல் துறை அதிகாரிங்களை என்ன பண்ண போறீங்க சாமி?

11) சாமி! நீங்க அந்த மவராசன் எம்.ஜி.யார் வேனை வங்கி ஓட்டுறதால நீங்க கருப்பு எம்.ஜி.யாருங்களா? நீங்க ஏன் காமராஜர் எம்.ஜி.ஆர் கலந்த ஆட்சியைக் கொண்டு வருவேன்கிறீங்க? ஏன் விசயகாந்து ஆச்சியைக் கொண்டுவந்தா என்ன? எம்.ஜி.ஆர் அண்ணாயிசம்னு சொன்ன மாதிரி, நீங்க குழப்புறீங்களே? அப்பத்தான் உங்களை எம்.ஜி.ஆர்னு சொல்லுவாங்கன்னு நினைக்கிறீங்களா?

12) தமிழ்க்குடிதாங்கி அய்யாவோட இடத்துல போய் செயிச்சீங்க சாமி! ஏன் சாமி அந்த கலைஞர் அய்யாவையும்,அந்த செயலலிதா ஆச்சியையும் பாக்குற மாதிரி ஆயிடுமேன்னுதானே சட்டசபைக்கு போவ மாட்டேங்கிறீங்க?

13) குடி குடியைக் கெடுக்கும்னு சொல்லுவாங்க சாமி. உங்கள்ட்ட அத பத்தி கேக்க வேண்டாம்னு நினைக்கிறேன் சாமி! கேப்டன் சாமி நீங்க ஆச்சிக்கு வந்தா டாஸ்மாக் தொரப்பீங்களா? இல்ல மூடுவீங்களா? வெக்கப்படாம சொல்லுங்க சாமியோவ்!

14) சாமி! நம்ம குப்பாயி அக்கா மவன் கைப்புள்ள வடுவேலு உங்களை எதுத்து நின்னு செயிப்பேன்னு சொல்றாருங்க. அப்படி அவரு செயிச்சிட்டாருன்னா நீங்க அறைசியல்ல இருப்பீங்களா இல்ல போய்டுவீங்களா?

இன்னும் நிறையா கேக்கனும்னு நினைச்சேன். நீங்க ஆட்சிக்கு வந்தா! கேக்குறேங்க. அதனால் உங்களிடம் இதுவரைக்கும் கேள்வி கேட்டது போதும்னு நினைக்கிறேங்க. கேள்வி பத்தலைன்னு கோவிக்காதீங்க சாமியோவ்.

நாலு கேள்வி கேக்குறேன்னு சொல்லிபுட்டு பதினாழு கேள்வி கேட்டதுக்கு, மன்னித்துக் கொள்ளுங்க சாமியோவ்.நான் இன்னும், கலைஞர் சாமி, ஜெயலலிதா ஆச்சி, எல்லோரையும் கேள்வி கேட்கனுங்க சாமியோவ். வரட்டுங்களா சாமி! நன்றிங்க சாமி!

Sunday, October 19, 2008

தங்கபாலுவின் சமாதானமும், பள்ளம் ராஜுவின் பொறுப்பற்ற பேச்சும்!

இலங்கை தமிழர்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் தொடர்பில் இந்திய மத்திய அரசாங்கம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைககள் குறித்து, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு டெல்லியில் நேற்று இந்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியை சந்தித்து பேசியுள்ளார். இலங்கை தமிழர்கள் பிரச்சினையில் இந்திய மத்திய அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்து தங்கபாலுவிடம் பிரணாப் முகர்ஜி விளக்கமளித்துள்ளார்.


இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இந்திய பிரதமர் மன்மோகன்சிங்கை தொலைபேசியில் தொடர்பு கொண்டதாகவும் இதன்போது இலங்கை தமிழர் பிரச்சினையை சுமூகமாக தீர்க்க நடவடிக்கை எடுக்குமாறு மன்மோகன்சிங் கேட்டுக்கொண்டதாகவும் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.

பிராணப் முகர்ஜியுடன் இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தங்கபாலு, இலங்கையில் ராணுவத்துக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான மோதல்களில் அப்பாவி தமிழர்கள் பாதிக்கப்படக்கூடாது எனவும், இலங்கை தமிழர்களின் மனித உரிமைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறும் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் இந்திய பிரதமர் மன்மோகன்சிங் வலியுறுத்தியுள்ளதாக கூறியுள்ளார்.


இந்த விடயத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய பிரதமரிடம் ஜனாதிபதி ராஜபக்ஷ உறுதியளித்ததாகவும், பிரணாப் முகர்ஜி தன்னிடம் தெரிவித்ததாக, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலு குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அரசுக்கு ராணுவரீதியாக இந்தியா எந்த உதவியும் வழங்கவில்லை. இது தொடர்பாக சில அரசியல் கட்சிகள் தவறான தகவலை பரப்பி வருவதால், உண்மை நிலையை தெளிவுபடுத்த வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் குழு சார்பில் வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியை கேட்டுக்கொண்டேதாகவும் தங்கபாலு கூறியுள்ளார்.



எனினும் இந்திய பாதுகாப்பு துணையமைச்சர் பள்ளம் ராஜு இந்திய ரேடார் உள்ளிட்ட இராணுவ உபகரணங்களை இலங்கைக்கு வழங்கி வருவதாகவும் இவ்வாறான உதவிகள் இலங்கைக்கு தொடர்ந்தும் வழங்கப்படும் என அவர் கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடதக்கது.

ஒரு பொறுப்பானா மத்திய அமைச்சர் அதுவும் இராணுவ அமைச்சர் பொறுப்பில் உள்ள பள்ளம் ராஜு என்பவர், அப்பாவித் தமிழர்கள் இலங்கையில் படுகொலை செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் போது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சிக் கொண்டிருப்பது போல் பேசுவது தமிழர்களை மிகுந்த வேதனைக்குள்ளாக்குகிறது.


அதற்கு அவர் சொல்லும் காரணம், இந்தியா தான் தெற்காசியாவின் வல்லாதிக்க சக்தியாம். அய்யகோ! கார்கில் யுத்தத்தின் போது நாம் பெற்ற உயிரிழப்புகள் எத்தனை என்று தெரியுமா? அப்போது உங்கள் வல்லாதிக்கத்தை காட்டி உயிரிழப்பைத் தடுத்திருக்கலாமே? கார்கில் யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அப்போது தமிழக முதல்வராக இருந்த கலைஞர் அவர்கள் இந்தியாவிலேயே அதிக வசூல் செய்து கொடுத்தாரே, (அதில் பாதிக்கப்பட்டவர்களில் வெகு சிலர் மட்டுமே தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது) அவருடைய இனம் இன்று இலங்கையிலே வாழ விடாமல் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் தாக்குதல் நடத்தி படுகொலை செய்கிறார்களே, அதற்கு நீங்கள் ஆயுதம் கொடுப்பது எந்த வகையில் நியாயம் அய்யா? நீங்கள் கொடுக்காவிட்டால் பாகிஸ்தான் கொடுத்துவிடும், சீனா கொடுத்துவிடும், இஸ்ரேல் கொடுத்துவிடும் என்றெல்லாம் சொல்லி தமிழனை ஏமாற்றுகிறீர்களே! நீங்கள் கொடுத்தாலும், பாகிஸ்தான்,சீனா,இஸ்ரேல் போற்ற நாடுகள் ஆயுதம் கொடுக்க மாட்டார்கள் என்பதற்கு என்ன உத்திரவாதம்? நீங்கள் கொடுத்தால் நாங்கள் கொடுக்க மாட்டோம் என்று உங்களுக்கு எழுதிக் கொடுத்தார்களா?

சிந்தியுங்கள் அரைசியல் வாந்திகளே! அமைச்சர்களே!


தேசிய கட்சிகளான காங்கிரசையும், பி.ஜெ.பியையும், தமிழகத்தில் ஜெயலலிதாவின் அ.தி.மு.க.வையும், தமிழகத்தில் ஈழப்பிரச்சனையை வைத்து அரசியல் பிழைப்பு நடத்தும் இன்ன பிற கட்சிகளையும் அடையாளம் கண்டு கொண்டு வருகிற நாடாளுமன்றத்  தேர்தலில் தமிழர்கள் புறக்கணிப்பார்கள் என்று நம்புவோம்.

ஊடகங்களில் இருக்கும் தமிழர்கள் தங்களால் முடித்த அளவுக்குத் தமிழக மக்களிடம் ஈழப் பிரச்சனையைக் கொண்டு செல்ல வேண்டுகிறேன்.

Wednesday, October 15, 2008

கனிமொழி ராஜினாமா ஒரு அரசியல் காய் நகர்த்தல்!


கனிமொழி ராஜினாமா ஒரு அரசியல் காய் நகர்த்தல்.

நேற்று, அனைத்துக் கட்சி கூட்டத்தில் இரண்டு வாரத்தில் இலங்கையில் தமிழர்களைத் தாக்குவதை இந்திய மத்திய அரசு தடுத்து நிறுத்தாவிட்டால் தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து எம்.பிக்களும் ராஜினாமா செய்வார்கள் என்று தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறார்கள். இதில் ம.தி.மு.க வைச் சேர்ந்த இரண்டு எம்.பிக்களும் அடங்குவார்களா என்று தெரிய வில்லை. திரு.எல்.கணேசனும் செஞ்சியும் மட்டுமே கூட்டத்தில் கலந்து கொண்டிருக்கிறார்கள். அ.தி.மு.க. வைப் பொருத்தவரை அவர்களும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. அவர்களிடமும் சில ராஜ்ய சபை எம்.பிக்கள் இருக்கிறார்கள். அனைத்துக் கட்சிக்கூட்டம் ஒரு காலம் கடந்த முயற்சியாக இருந்தாலும். இதில் அ.தி.மு.கவும், ம.தி.மு.க வும் கலந்து கொள்ளாதது வருந்தத்தக்கது. அ.தி.மு.க. சமீப காலமாக மட்டுமே ஈழத்தமிருக்காகக் வெளிப்படையாகக் குரல் கொடுக்கிறது. ம.தி.மு.க வைப் பொறுத்தவரை அந்த கட்சியும் அதன் பொதுச் செயலாளருமான திரு.வைகோ அக்காலந்தொட்டே இலங்கைத் தமிழர்களுக்காகக் குரல் கொடுத்து வருகிறார்கள்.

இதில் என்னுடைய சில கேள்விகளை இங்கு பதிவு செய்ய விருபுகிறேன்.

1) ஈழத்தமிழர்களுக்காக எத்தனை முறை தமிழக எம்.பிக்கள் (ம.தி.மு.க நீங்கலாக) பிரதமரையும், மத்திய அரசாங்கத்தின் அதிகார பீடம் திருமதி.சோனியாவையும் சந்தித்திருக்கிறார்கள். என்னவெல்லாம் எடுத்துச்சொல்லியிருக்கிறார்கள்?

2)மத்திய அரசின் துறையைத் தக்கவைத்துக் கொள்ள தில்லி சென்று அதிகார பீடத்தைச் சந்திக்க முடிகிறது. குடியரசு தலைவர் தேர்தலில் பொதுவுடமை வாதிகளை சந்தித்து சமரசம் செய்ய தில்லி செல்ல முடிகிறது. நம் இனம் பக்கத்து நாட்டில் அழிக்கப் படுகிறது. அதற்கு இந்திய அரசு ராணுவத் தொழில் நுட்ப உதவியும், ஆயுத உதவியும் செய்கிறது. இதை ஓராண்டுக்கு முன்னர், இந்திய ராணுவத் தளபதியே பகிரங்கமாக காஷ்மீரில் தெரிவித்திருக்கிறார். அப்போது ஏன் மத்திய அரசை இவர்கள் நிர்பந்தம் செய்ய வில்லை? அப்போது தில்லி செல்ல விமான வசதி இல்லையா? அப்போது நாற்பது எம்.பிக்கள், ராஜ்ய சபா எம்.பிக்கள் மற்றும் தமிழக அரசும் எந்த பக்கம் தூங்கிக் கொண்டு இருந்தனர்?

3) இலங்கையில் செஞ்சோலையில் பள்ளிக் குழ்ந்தைகளைக் படுகொலை செய்தபோது, தமிழக அரசும், தமிழக அரசியல் வாதிகளும் செய்து கொண்டு இருந்தது என்ன? (ஒரு சிலர் இதற்கு விதிவிலக்கு) அதை அனைத்துலக சமுதாயத்தின் கவனத்திற்கு சரியான முறையில் கொண்டு செல்லாதது ஏன்?

4) இலங்கையில் தமிழர்களைப் படுகொலை செய்து குப்பை வண்டியில் ஏற்றிக் கொண்டு சென்றபோது, வெளிப்படையாக மனித உரிமை மீறல், இனப்படுகொலை நடந்ததே.(வெகு சன ஊடகங்களில் படம் வந்தது) அப்போது இவர்கள் தூங்கியது எங்கே?

5) இலங்கையைச் சேர்ந்தவர்களுக்கு தமிழகத்தில் பயிற்சி வழங்கப்பட்டதே. அது தமிழக அரசுக்கு தெரியாமல் போனது எப்படி? சமீபத்தில் வட இந்தியாவில் ஒரு மாநிலத்தில் இலங்கை ராணுவத்தினருக்குப் பயிற்சி அளிக்கப் பட்டதே. அப்போது இவர்கள் செய்தது என்ன?

6)திரு பழ.நெடுமாறன் அவர்கள் மனிதாபிமான உணர்வுடன் ஈழத்தமிழர்களுக்காகத் திரட்டிய உணவுபொருட்கள், ஆடைகளை செஞ்சிலுவை சங்கம் மூலமாக அனுப்ப அனுமதிக்காது, தானே கொண்டு செல்கிறேன் என்றவரை கைது செய்தது ஏன்? அப்போது உங்கள் இன உணர்வு, மனிதாபிமான உணர்வு எங்கே போனது?

இப்படி நிறைய கேள்விகளைக் கேட்டுக் கொண்டே போகலாம். ஆனால் இதில் எந்த கேள்விக்கும் உங்களிடத்தில் பதில் இல்லை என்பது தெரியும்.

இருப்பினும், தற்போது தூங்கிக் கொண்டிருந்த பூனைக்கு பெரிய மணி கட்டிய திரு.தா.பாண்டியன் அய்யாவை மனதார வாழ்த்துகிறேன். தூங்கிக் கொண்டிருந்த உங்கள் முகத்தில், தண்ணியை ஊற்றி முதலில் எழும்பிய தா.பாண்டியன் அய்யாவை நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறேன்.
இதில் கனிமொழி எங்கே வருகிறார் என்று கேட்பது தெரிகிறது.
அனைத்து கட்சி எம்.பிக்கள் ராஜினாமா முடிவு, நாடாளுமன்ற தேர்தல் விரைவில் வருவதால் எடுத்த முடிவு என்றே கருதுகிறேன்.
கனிமொழி ராஜினாமா என்பது, மேற்கூறியவற்றை பொய்யாக்கும் ஒரு நாடகம்.(அவர் ராஜ்ய சபா எம்.பி) அவருடைய ராஜினாமா, ராஜ்யசபாத் தலைவர் அன்சாரிக்கு அனுப்பப் பட வேண்டும். கலைஞருக்கு அனுப்பப் பட்டது, அதை ஊடகங்களுக்குத் தெரிவித்தது எல்லாம் கேலிக்கூத்து!

Sunday, October 12, 2008

சிங்கப்பூரில் பிள்ளையார் பால் குடிக்கிறார்!

சமீபத்தில் சிங்கை குட்டி இந்திய பகுதிக்குச் சென்றுகொண்டிருந்தேன். குட்டி இந்திய வளாகத்துக்கு (Little India Arcade) அருகில் செல்லும் போது, அங்கே தெருவில் ஓர் உணவகத்துக்கு அருகாமையில் ஒரு பிரமாண்டமான பிள்ளையாரைப் பார்த்தேன். பிள்ளையாருக்கு அருகில் சிங்கையில் வெகு சன மக்கள் அருந்தும் Marigold HL Milk திறந்து வைக்கப் பட்டிருந்தது. எனக்கு பழைய நினைவுகள் வந்து போனது. ஒரு பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு, உலகம் முழுவதும் இருக்கும் பிள்ளையார்கள் பால் குடிப்பதாக எல்லா ஊடகங்களிலும் பார்த்த ஞாபகம். அட! இப்ப கூட பிள்ளையார் பால் குடித்துக்கொண்டுதான் இருக்கிறார் என்று நினைத்துவிட்டேன். பிள்ளையார் பிராண்டட் பால் குடித்திருப்பாரோ என்கிற சந்தேகம், அல்லது யாரேனும் வாங்கிக் கொடுத்திருப்பார்களோ என்றும் நினைக்கத் தோன்றியது. ஒருவேளை தமிழ்க் கடவுள் எம்பெருமான் முருகனுடைய அருமை அண்ணன் அல்லவா? அதனால் சிங்கை வாழ் தமிழ் மக்களுக்கு எந்த பால் குடிக்கலாம் என்று பகுத்தறிந்து கொடுக்கிறார் போலும் என்று நினைத்துக் கொண்டேன்.


பிள்ளையார் இந்த பாலைத் தான் குடித்தார்

இதனால் சகலமானவர்களுக்கும் பிள்ளையார் தெரிவிப்பது என்னவென்றால்,

கீழ்கண்ட (மேற்கண்ட அல்ல) பால் மற்றும் பால் சம்பந்தப் பட்டப் பொருட்களை பயன்படுத்த வேண்டாம், உட்கொள்ள வேண்டாம், குறிப்பாக சீனாவில் தயாரிக்கப் பட்ட பால் பொருட்களை உபயோகப் படுத்த வேண்டாம் என்பதாகும்.

கீழ்கண்ட பால் பொருட்களில் நச்சுத் தன்மை வாய்ந்த பொருட்கள் கலந்திருப்பதாக நிரூபணம் ஆகியுள்ளதால், வலையுக மக்கள் தங்கள் குடும்பத்தார், உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரிடம் தெரிவித்து ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த சிங்கைப் பிள்ளையார் சார்பாக வேண்டி விரும்பிக் கேட்டுக்கொள்கிறேன்.
Products Recalled - Melanine Contaminated
BRAND and ITEM DESC
1 BAIRONG GRAPE CREAM CRACKERS
2 DOVE H/NUT ALM & RAISIN CHOC
3 DOVE HAZELNUT CHOC
4 DOVE MILK CHOCOLATE
5 Dreyers Choc Cake Ice Cream 887ml
6 Dreyers Choc Cake Ice Cream 887ml
7 Dreyers Cookie & Cream Ice Cream 887ml
8 Dreyers Cookie & Cream Ice Cream 887ml
9 Dreyers Mint Chip Ice Cream 887ml
10 Dreyers Mint Chip Ice Cream 887ml
11 Dreyers Rocky Road Ice Cream 887ml
12 Dreyers Rocky Road Ice Cream 887ml
13 Dreyers Strawberry Ice Cream 887ml
14 Dreyers Strawberry Ice Cream 887ml
15 Dreyers Toast Almond Ice Cream 887ml
16 Dreyers Toast Almond Ice Cream 887ml
17 Dreyers Vanilla Ice Cream 887ml
18 Dreyers Vanilla Ice Cream 887ml
19 DUTCH LADY STER M LF BANANA
20 DUTCH LADY STER MK LF PLAIN
21 DUTCH LADY STER MK LF CHOC
22 DUTCH LADY STER MK LF SBERRY
23 DUTCH LADY STER M LF HNYDEW
24 DUTCH LADY STER M LF HNYDEW
25 DUTCH LADY STER MILK PLAIN
26 DUTCH LADY STER MK LF CHOC
27 DUTCH LADY STER MK LF SBERRY
28 DUTCH LADY STER M LF BANANA
29 FIRST CHOICE CALCIUM SESAME CRACKERS
30 FIRST CHOICE CALCIUM SALTINE CRACKERS
31 FIRST CHOICE CALCIUM S ONION CRACKERS
32 FIRST CHOICE CALCIUM SEAWEED CRACKERS
33 GINBIS PARTY ANIMAL BUTTER BISC
34 GINBIS PARTY ANIMAL SEAWEED BIS
35 GINBIS PARTY ANIMAL CNUT
36 GINBIS ANIMAL BISCUIT
37 Koala Cocoa Biscuit 40g
38 Koala Cocoa Biscuit 40g
39 KRAFT OREO WAFER STICKS 18S
40 KRAFT OREO WAFER STICKS 5S
41 KRAFT OREO W/STICK WH CHOC 18S
42 KRAFT OREO W/STICK WH CHOC 5S
43 Lotte Koala Cocoa Funpack 210g
44 Lotte Koala Cocoa Funpack 210g
45 M & M Chocolate Peanut 200g
46 M & M Chocolate Peanut 200g
47 M&M CHOC CANDIES PLAIN%
48 M&M CHOC CANDIES PEANUT%
49 M&M CHOC CANDIES-PLAIN
50 M&M CHOC CANDIES-PEANUTS
51 M&M FUNSIZE MILK
52 M&M FUNSIZE PEANUT
53 M&M Chocolate Candies Plain 200g
54 M&M Chocolate Candies Plain 200g
55 MEIJI UJIKINTOKI 2978
56 MEIJI UMAKABO CHOCOLATE
57 MEIJI FAMILY PACK-GREEN TEA
58 MEIJI CHESTNUT & REDBEAN
59 MENTOS BOTTLE YOGHURT PROMO PK
60 MENTOS BOTTLE YOGHURT
61 Monmilk BREAKFAST MILK MALT
62 Monmilk BREAKFAST MILK WALNUT 6S
63 Monmilk BREAKFAST MILKMALT 6S
64 Monmilk CHOCOLATE MILK 6S
65 Monmilk COFFEE MILK 6S
66 Monmilk HI CAL LOW FAT
67 Monmilk HI CAL LOW FAT MILK
68 Monmilk HI CAL LOW FAT MILK 6S
69 Monmilk HI CAL MILK
70 Monmilk HI CAL MILK 6S
71 Monmilk MILK DELUXE 12S
72 Monmilk PURE MILK
73 Monmilk PURE MILK
74 Monmilk PURE MILK 6S
75 MonmilkBREAKFAST MILK WALNUT
76 NABISCO IN A BISKIT CHICKEN
77 NESTLE NES D/STICK MINI VANILLA
78 NESTLE NES DISTICK MINI CHOCO
79 NESTLE MILK & BERRY STARS CRL
80 NO FRILLS WAFER BLUEBERRY
81 NO FRILLS WAFER CHOCOLATE
82 NO FRILLS WAFER PEANUT
83 Orion Fresh Pie 138g
84 Orion Fresh Pie 138g
85 Orion Tiramisu 138g
86 Orion Tiramisu 138g
87 PEI TIAN CREAM BISCUIT
88 Rabbit Milk Sweet 150g
89 SILANG NATURAL OAT CRACKER
90 Snicker Candies Funsize 240g
91 Snicker Candies Funsize 240g
92 SNICKERS PEANUT CHOCOLATE%
93 SNICKERS SNACKSIZE BARS PNUT 5
94 TAKE ONE BABY BITES 24S
95 TAKE ONE BABY BITE CK VG
96 TAKE ONE BABY BITE CARROT
97 Vitasoy Chocolate Drink 4s 125ml
98 Vitasoy Chocolate Drink 4s 125ml
99 Vitasoy Melon Soya Bean Milk 4s 125ml
100 Vitasoy Melon Soya Bean Milk 4s 125ml
101 Vitasoy Q Soya Milk 4s 125ml
102 Vitasoy Q Soya Milk 4s 125ml
103 WANT WANT MILK CANDY
104 Want Want Flavoured Milk 250ml
105 Yili Hi Cal Low Fat Milk 1L
106 Yili Hi Cal Low Fat Milk 6s 250ml
107 Yili Hi Cal Milk 1L
108 Yili Hi Cal Milk 6s 250ml
109 Yili Pure Milk 1L
110 Yili Pure Milk 6s 250ml
111 Youcan Masterbean Multipack
112 Youcan Passion Multipack
113 Youcan Silk Sliced and Passion Strawberry
114 Youcan Stawberry Multipack
115 Youcan Traditional Sesame Multipack 4s
116 Youcan Unusual Multipack 4s

பின் குறிப்பு:

ஒரு நல்ல விடயத்துக்குப் பிள்ளையாரைப் பயன்படுத்தியதில் தவறில்லை என்றே நினைக்கிறேன். யாருடைய மனதையும் புண் படுத்தியிருக்க மாட்டேன் என்றும் நம்புகிறேன். பாலுடன் பிள்ளையாரைப் பார்த்தவுடன், சிங்கப்பூரின் பிரபல வலைப்பதிவர் சமூகத்திற்கு தெரிவித்தேன். அவர் புகைப்படக் கருவி எடுத்துக் கொண்டு வரவில்லை என்று தெரிவித்துவிட்டார்.  என்னிடமும் அப்போது இல்லை. அதனால் அந்த கண் கொள்ளாக் கட்சியை வலையேற்ற முடியவில்லை.

Thursday, October 2, 2008

முதல்வர் பதவி - இராமதாசு அய்யாவிடம் கொள்ளிமலை குப்புவின் கேள்விகள்!


முதல்வர் பதவிக்குப் போட்டியிடுபவர்களிடம் கொள்ளிமலை குப்புவின் கேள்விகள் -2

தமிழகத்தின் அடுத்த முதல்வராக வருவதற்கு பலர் முயற்சி செய்கிற இந்த நேரத்தில், அவர்கள் அனைவரிடமும் கொள்ளிமலை குப்பு என்பவர் கேள்வி கேட்க விரும்புகிறார்.

இதோ கொள்ளிமலை குப்பு அவர்கள்!

வணக்கமுங்க! கும்புடுறேனுங்க சாமியோவ்!! நான் தான் கொள்ளிமலை குப்புங்க! நானும் உங்க சாதி தானுங்க. எனக்கும் மொதலமைச்ச்சரா வர ஆசைதானுங்க. ஆனா வரமுயாதுன்னு சொல்ராங்கங்க. ஏன்னு கேட்டா உன்கிட்ட என்ன இருக்குன்னு பல்லு மேல நாக்க போட்டு கேக்குராங்கங்கோ!

சமூக நீதிப் போராளி, தமிழ்க்குடிதாங்கி மருத்துவர் திரு இராமதாசு அய்யா அவர்களே வணக்கமுங்க. உங்க கட்சி 2011-ல ஆட்சிக்கு வரும்னு சொல்லி இருக்கீங்க. உங்ககிட்ட நாலு கேள்வி கேக்கனும்னு நினைக்கிறேங்க.

1)உங்க கட்சி 2011-ல ஆட்சிக்கு வரும்னு சொல்லி இருக்கீங்க. உங்க ஆட்சியில் தலைமைச் செயலகம்(செயின்ட் ஜார்ஜ் கோட்டை) சென்னையில் இருக்குமுங்களா? இல்ல திண்டிவனத்துல(கோட்டைதான், என்ன கோட்டைனு சனங்க தான் சொல்லணும்) கட்டுறீங்களா?

2)நீங்க சமூக நீதிப் போராளிங்க சாமியோவ். சமூகங்கிறது எல்லா சாதிகளையும் உள்ளடக்கியது. இல்லைன்னு சொல்லமுடியுங்களா? அப்ப ஒரு சாதிக்கு மட்டும் நிறைய நன்மைகளை எதிர்பார்ப்பது சரிங்களா? எல்லா மக்களும் நிம்மதியா வாழனுமுங்களே? அது தானே சமூக நீதி?

3)ஐந்தாம் வகுப்பு வரைத் தமிழைப் பயிற்று மொழியாக வைக்கனும்னு சொல்றீங்க சாமி. ஆனா உங்க குடுப்பத்து பிள்ளைகளை இந்தியும் ஆங்கிலமும் படிக்க வைக்கிறீங்க அப்படின்னு சொல்றாங்களே. அது உண்மையா? ஊருக்கு உபதேசம் செய்றது முன்னாடி நம்ம குடுப்பத்தையும் பாக்கலாங்களே?

4) எங்களுக்கு காடு தானுங்க வாழ்க்கை. பசுமைத்தாயகம்னு ஒன்னு ஆரம்பிச்சு மரம் வளப்போம்னு சொல்லி எங்க வயித்தில பால வாத்தீங்க அய்யா. ஆனா, 80-களில் ரோட்டில மரத்த வெட்டி போட்டது யாருங்க சாமியோவ்? இல்ல முன்னாடி மரம் வெட்டுனத்துக்கு இப்ப பரிகாரம் தேடுறீங்களா அய்யா?

5) திருமாவளவனொடு நட்பு பாராட்டுறீங்க. ஆனா, அவங்க கட்சிக்காரங்களும் உங்க கட்சிக்காரங்களும் அவ்வப்போது அடித்துக் கொள்கிறார்களே? இதைத் திருமாவோடு சேர்ந்து தடுத்து நிறுத்தலாமே?

6)"இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்" என்று வள்ளுவர் சாமி சொன்னது போல் சிறந்த இடிப்பாறையாக அரசுக்கு இருக்குறீங்க. மகிழ்ச்சி அடையுரோமுங்க சாமியோவ். நீங்க சட்ட,நாடளுமற்றத்தில் கால் வைக்க மாட்டேன் என்று சொல்லி இருக்கிறீர்கள். உங்க கட்சி ஆட்சிக்கு வந்தா கோ.க.மணிதானே முதலமைச்சர்? ஆளை மாத்த மாட்டீங்களே?

7) தனித்தமிழை, பொங்குதமிழை ஊக்கு விக்கிறீங்க(எங்களை மாதிரி! நாங்களும் ஊக்கு விக்கிறவங்க தான் சாமியோவ்). நல்லதுங்க. தனித் தமிழ் நாட்டை ஊக்கு விக்கிறீங்களா? இல்லை தமிழ் நாட்டையே...!?

8)நீங்க நடிகர்களை எதுக்குறீங்களா? இல்லை நடிப்புத்தொழிலையே எதுக்குறீங்களா? காந்துகளை(விஷய கந்து, ரசினி காந்து) கண்டு கொள்ளுங்கள். ஏன் அவர்களிடம் காண்டு கொல்றீங்க?

9)ஈழத்தமிழர்களை ஆதரிப்பதாகச் சொல்கிறீங்க. ஆனா, அவங்களை அழிக்கும் இலங்கை அரசுக்கு ஆயுதம் வழங்கும் இந்திய மத்திய அரிசில் இடம்பெற்றுக் கொண்டு(சின்னையா மத்திய சுகாதார அமைச்சரா இருக்காருங்களே) வாய் மூடி மொனியாக இருப்பது ஏன்? சோனியாவிடம் எதிர்ப்பைக் காட்டாமல், நடு ரோட்டில காட்டுனா என்னங்க சாமி நடக்கும்?

10)விஷய காந்தை பயங்கரமாகத் தாக்குறீங்க. ஆனா அவரு உங்க கோட்டை விருதாலத்துல கொடி ஏத்திட்டாருங்களே? அவரைத் தோற்கடிக்க சரத்குமாரை நாடும் எண்ணம் உள்ளதா?(வடிவேலு கூட தயாராத்தான் அய்யா இருக்கார், ஆனா முதல்வர் பதவி கேக்குறார் பரவால்லையா?)

11) கொஞ்ச நாளைக்கு கலைஞர் அய்யாவை பாராட்டுறீங்க, பின்னாடி எதிர்குறீங்க, அதேமாதிரி ஜெயலலிதா அம்மாவை அன்புச் சகோதரிங்கிறீங்க. பின்னாடி எதுக்கிறீங்க. மூன்றவதா விஷய காந்தை இப்படி செய்யமாட்டீங்கன்னு என்ன நிச்ச்சயங்க சாமி.

12) நடிகர் ரசினி சாமியோட படம் பாபாவை போடவிடாம தடுத்தீர்கள் சாமியோவ். அதுக்கு என்ன காரணங்க சாமி. அது இருக்கட்டும். பண்பாட்டுச் சீரழிவை தொடர்ந்து கிராமம் தோறும் கலைவிழா என்ற பெயரில் நடத்திக் கொண்டு இருப்போரை தடுக்கும் உத்தேசம் இருக்கிறதா? காலை 11 மணி காட்சிகளில் பொங்கி வழியும் இளைஞர் கூட்டங்களை தடுக்கும் உத்தேசம் இருக்குங்களா சாமி?


இன்னும் நிறையா கேக்கனும்னு நினைச்சேன். நீங்க ஆட்சிக்கு வந்தா! கேக்குறேங்க. அதனால் உங்களிடம் இதுவரைக்கும் கேள்வி கேட்டது போதும்னு நினைக்கிறேங்க. கேள்வி பத்தலைன்னு கோவிக்காதீங்க சாமியோவ்.

நாலு கேள்வி கேக்குறேன்னு சொல்லிபுட்டு பன்னெண்டு கேள்வி கேட்டதுக்கு, மன்னித்துக் கொள்ளுங்க சாமியோவ்.நான் இன்னும், கலைஞர் சாமி, ஜெயலலிதா ஆச்சி, விசயகாந்து சாமி, எல்லோரையும் கேள்வி கேட்கனுங்க சாமியோவ். வரட்டுங்களா சாமி! நன்றிங்க சாமி!

முதல்வர் வேட்பாளர் சரத்குமாருக்கு கொள்ளிமலை குப்புவின் கேள்விகள்!


முதல்வர் பதவிக்குப் போட்டியிடுபவர்களிடம் கொள்ளிமலை குப்புவின் கேள்விகள் -1

தமிழகத்தின் அடுத்த முதல்வராக வருவதற்கு பலர் முயற்சி செய்கிற இந்த நேரத்தில், அவர்கள் அனைவரிடமும் கொள்ளிமலை குப்பு என்பவர் கேள்வி கேட்க விரும்புகிறார்.

இதோ கொள்ளிமலை குப்பு அவர்கள்!

வணக்கமுங்க! கும்புடுறேனுங்க சாமியோவ்!! நான் தான் கொள்ளிமலை குப்புங்க! நானும் உங்க சாதி தானுங்க. எனக்கும் மொதலமைச்ச்சரா வர ஆசைதானுங்க. ஆனா வரமுயாதுன்னு சொல்ராங்கங்க. ஏன்னு கேட்டா உன்கிட்ட என்ன இருக்குன்னு பல்லு மேல நாக்க போட்டு கேக்குராங்கங்கோ!

நாங்க ஊசிமணி பாசிமணி விப்போமுங்க. ஆனா காசுக்காக மானத்தை விக்கமாட்டோமுங்க! குருவி, கொக்கு, நாரை சுடுவோமுங்க. ஆனா அரசாங்கத்து பணத்தை மட்டும் சுடமாட்டோமுங்க! தேன் கூட எடுக்குரோமுங்க. ஆனா வெரல் மட்டும் சப்புனதில்லீங்கோ! அதனால நான் (கொள்ளிமலை குப்பு) முடிவு பண்ணிட்டேனுங்க. இந்த பாழாப்போன மொதல்வர் பதவி வேணாமுன்னு. ஆனால் நான் மொதல்வர் பதவிக்கு போட்டி போடுரவங்கள் கிட்ட நாலு கேள்வியைக் கேக்கலாமுன்னு இருக்கேனுங்க. சரிதானுங்களே!

மொதல்ல சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் திரு. சரத்குமார் சாமி கிட்ட கேக்கலாமுன்னு இருக்கிறேன்.
சரத்குமார் சாமியோவ்! வணக்கமுங்க!! உங்கமேல நாங்க ரெம்ப மருவாதி வச்சுருக்குரோமுங்க.

கேள்வி கேக்குறேன் கோவிக்காதிங்க சாமியோவ்.

1) சாமி நீங்க சமத்துவ மக்கள் கட்சின்னு பேரு வச்சிருக்கீங்க. தமிழு நாட்ட ஆளப் போறீங்களா? இல்ல வடநாட்ட ஆளப் போறீங்களா சாமியோவ்? சமத்துவங்கிறது வடமொழிச் சொல்லுன்னு சொல்ராங்கலேங்க. நீங்க கலைஞர் கிட்ட அரசியல் பால பாடம் கத்துகிட்டீங்க. சரிங்க. அதுக்காக அவரைக் காப்பியடிச்சா எப்படிங்க? கலைஞர் சமத்துவ புரம்னு பேரு வச்சிருக்கார்னு வச்சீங்களா? சும்மா தெரியாமத்தான் கேக்குறேன், கோவிக்காதீங்க.

2) ரொம்ப நாடார் மக்களை சேத்துக் கொண்டு கட்சி ஆரபிச்சீங்க. நீங்க ரொம்ப நல்லவருங்க சாமியோவ். இப்படி ஒவ்வொரு சாதிக்கும் ஒவ்வொரு மொதலமைச்ச்சர் வந்தா நாடு வெளங்கிடும் சாமியோவ். சாதிக்கு ஒரு மொதல்வர் வேண்டாம் சாமி. எங்களுக்கு சாதிக்கும் மொதல்வர் வேணுங்க சாமியோவ்! உங்க கையில இருக்கிற ஐ.ஏ.எஸ் அதிகாரிங்க சொல்லலையா சாமியோ? அவங்க கிட்ட கேட்டு சொல்லுங்களேன். காமராஜரையும் மக்கள், காமராஜ் நாடார்னுதான் கூபிட்டாங்கன்னு சொல்றீங்களா? அமாங்க அவர் லஞ்சம் நாடார், வசதி நாடார், வஞ்சம் நாடார். அப்படிப் பாத்தா நம்ம பெரியார் சாமியும் ராமசாமி நாயக்கர் தானுங்களே. அவங்கெல்லாம் சாதியை முன்னிருத்தலையே?

3) சாமி உங்க கட்சியை, உங்க பொஞ்சாதியை தொடங்கி வைக்க சொன்னீங்களே, அவங்களை விட பெரியவங்க உங்க கட்சியில இல்லீங்களா? இல்லை கட்சி குடும்பம் இல்ல. குடும்பம்தான் கட்சின்னு சொல்லாம சொல்றீங்களா?

4) இலங்கையில என்ன நடக்குதுன்னு தெரியலைன்னும், அனுமதி கொடுத்தா போய் பாத்துட்டு வருவேன்னு சொல்றீங்களே நியாயங்களா? உங்களுக்கு அம்பது வயசுக்கு மேல ஆவுதுன்னு சொல்றாங்களே. எப்படிங்க தெரியாம இருந்தீங்க? இன்னும் கெட்டுப் போகல. நீங்க வைகோ சாமிகிட்டயும், பழ நெடுமாரஞ்சாமிகிட்டையும் கேட்டா வெளாவாரியா எடுத்து சொல்லுவாங்களே. வெக்கப் படாம கேட்டு தெரிஞ்சு கொள்ளுங்க சாமியோவ்...!? நீங்க பேப்பர் போட்டவர் தானே! பேப்பரும் படிங்க சாமியோவ்!
5) அய்யா சாமியோவ்! நீங்க நடிக்கும் போது வில்லனா இருந்து கதாநாயகனாநீங்க. இப்ப அரசியல், அரசியல்வாதியாக ஆயி இருக்கீங்க. அரசியல்ல நீங்க வில்லனா இல்ல கதாநாயகனா?

6) 2011-ல ஆட்சிக்கு வருவேன்னு கண்டிஷனா சொல்லி போட்டீங்க. தமிழ் நாட்டுல எந்த பகுதிக்கு சாமி நீங்க மொதலமைச்ச்சர். சொல்லி போட்டீங்கன்னா எல்லா தமிழக மக்களையும் லாரியில் அங்க வர சொல்லிட்டா, அடுத்த தமிழக முதல்வர் நீங்க தானுங்கோ! வாழ்த்துக்கள் சாமியோ!!!

நீங்க புதுசா வந்துருக்கிறதுனால நிறைய கேள்வி கேக்க முடியாதுங்க. அதனால அடுத்தமுறை நிறைய கேள்வி கேக்குறேன். நாலு கேள்வி கேக்குறேன்னு சொல்லிபுட்டு ஆறு கேள்வி கேட்டதுக்கு, மன்னித்துக் கொள்ளுங்க சாமியோவ்.
நான் இன்னும், கலைஞர் சாமி, ஜெயலலிதா ஆச்சி, விசயகாந்து சாமி, ராமதாஸ் சாமி எல்லோரையும் கேள்வி கேட்கனுங்க சாமியோவ். வரட்டுங்களா சாமி! நன்றிங்க சாமி!

Thursday, September 4, 2008

ஒரு ரூபாய்க்கு அரிசி – விவசாயிகளின் வயிற்றில் மரண அடி!

சமீபத்தில் தமிழக முதல்வர் திரு.கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் ஒரு ரூபாய்க்கு நியாய விலைக் கடைகளில் அண்ணாவின் நூற்றாண்டு பிறந்தநாள் முதல், அரிசி போடுவதாக அறிவித்திருக்கிறார். இந்த அறிவிப்பு பாட்டாளி ஏழை மக்களுக்கு இனிப்பைத் தரும் செய்தியாக இருந்தாலும், ஏன் தமிழகத்தின் ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கும் ஒரு நற்செய்தியாக இருந்தாலும், அதற்கு பின் உள்ள கசப்பான பின்விளைவுகளைப் பற்றி நாம் கொஞ்சம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

நம் விவசாயி பாடு பட்டு உழைத்து, நாற்று விட்டு,நாற்று பறித்து, நாற்று கட்டு தூக்கி, நடவு நட்டு, களைஎடுத்து, மருந்தடித்து, பின்னர் மருகளைஎடுத்து களைத்துப்போய், உரங்களை சமயம் பார்த்துப் போட்டு, எலிகளை பிடித்து, கதிர் அறுக்கும் வரை காவு காத்து, கதிர் அறுத்து அடித்து, கூலி கொடுத்தது போக அவனுக்கு என்ன மிஞ்சும் என்று நினைக்கிறீர்கள்.
பட்டுக்கோட்டையார் பாடியது போல் "காடு வெளைஞ்சென்ன மச்சான் நமக்கு கையும் காலுந்தானே மிச்சம்"

இவ்வளவு சிரமங்களுக்கிடையில் ஆற்றுத் தண்ணீருக்காக அவன் காத்து காத்து காய்ந்து கிடந்தது எத்தனை நாள்?
பணக்காரர்களுக்கு (பம்பு செட்டு உள்ளவர்களுக்கு) இலவச மின்சாரம் என்றீர்கள். இல்லாத மின்சாரத்தை இலவசமாகத் தருவதால் என்ன பயன்?
மின்சாரம் இருக்கும் போதெல்லாம் நிலத்தடி நீரை உறிஞ்சுகிறார்கள். அவர்களின் வயல்களை தெப்பம் போல் மிதக்க விடுகிறார்கள். ஏழை விவசாயிகள் அவர்களிடம் பணம் கொடுத்து தண்ணீர் இறைக்க வேண்டியிருக்கிறது. அவர்களுக்குத் தண்ணீர் தேவை இல்லாதபோது மண்டை கிணற்றுக்குள்(பெரிய கிணறு) தண்ணீரை விட்டு சேமித்து, பின்னர் அதிலிருந்து தண்ணீர் இறைத்துக் கொள்கிறார்கள்(அதுவும் இலவச மின்சாரம் தான்)
இதனால் ஏழை, நடுத்தர மக்களுக்கு என்ன லாபம்?
இதனால் வீணாகும் பணத்தை(நிதியை)யார் தலையில் கட்டுகிறார்கள்?
ஏழை மக்கள் சாப்பாட்டுக்கு கஷ்டப் படுகிறார்கள் அதனால் ஒரு ரூபாய்க்குக் கொடுக்கிறோம் என்று சொன்னால், அதை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்.
அந்த ஒரு ரூபாயும் அவனுக்குக் கிடைக்காத பட்சத்தில் அவன் எப்படி அந்த அரிசியை வாங்கிச் சாப்பிட முடியும்.(சாப்பிடக்கூடிய அரிசியா என்பது வேறு விடயம்)

ஓர் ஏழை நடுத்தர விவசாயி ஓர் ஏக்கர் நிலம் வைத்திருக்கிறான் என்று வைத்துக் கொள்வோம். அவனுடைய செலவுகளைப் கொஞ்சம் சிந்திப்போம், ஒரு ஆள் கூலி 100 முதல் 150 வரை. நடவாள்(பெரும்பாலும் பெண்கள்) ரூபாய் 75 முதல் 100 வரை. ஒரு மூட்டை DAP 1000 ரூபாய் வரை விற்கிறது. இதில் கூலி ஆள் கிடைப்பது குதிரைக் கொம்பாய் இருக்கிறது. ஏன் என்றால் இப்படி விவசாயிகள் படும் கஷ்டத்தில் அவன் எப்படி கூலி கொடுக்கப்போகிறான் என்று எண்ணி அனைவரும் வெளி மாநிலங்கள், வெளிநாடு என்று சென்று விட்டார்கள். இந்த சூழ்நிலையில் இன்னும் விவசாயம் செய்யும் ஏழை நடுத்தர விவசாயிகள் பாவப் பட்ட ஜென்மங்களாக இருக்கிறார்கள். இவ்வளவும் கஷ்டப்பட்டு, அவன் நெல் விற்க வரும் போது அரசாங்கம் நெல் வாங்குவதற்கு பிகு பண்ணுவதைப் பார்த்திருக்கிறோம். அதைவிடக் கொடுமை அடிமாட்டு விலைக்கு எடுத்துக் கொள்வதைப் பார்த்திருக்கிறோம். அதில் எடை போடுபவனுக்கும், வாங்கும் ஊழியனுக்கும் கையூட்டு வேறு.

வெளிநாடுகளில், உலகம் முழுவதும் ஏற்பட்டிருக்கும் உணவு தட்டுப்பாட்டில்(Food Crisis). நீங்கள் கற்றுக் கொண்ட பாடம் என்ன? குறைந்த பட்சம் அது தெரியுமா உங்களுக்கு? நம் விவசாயி உற்பத்தி செய்யும் 9 ரூபாய் மதிப்புள்ள வெகு சன்ன ரக அரிசி இன்று வெளிநாட்டில் 150 ரூபாய் விற்கிறது.(கிடைப்பது அரிதாக இருக்கிறது) ஏன் நமது விவசாயிகளின் உழைப்பால் விளைந்த நெல்லை உபயோகம் போக உபரியை வெளிநாட்டிற்கு அனுப்பி அவனை நிம்மதியாக வாழவிட்டால் என்ன? விவசாயிகள் வாழ்ந்தால் தான் ஏழை மக்கள் வாழ்க்கை தன்னிறைவு அடையும். இல்லை என்றால் எல்லா விவசாய குடும்பத்தில் உள்ளவர்களும் வெளி மாநிலத்திற்கு,வெளிநாட்டிற்கு வேலை தேடிச் செல்லும் படலம் தொடர்வது உறுதி.
விவசாயம் செய்ய யாரும் இல்லாத துர்பாக்கிய நிலை ஏற்பட்டுவிடும் அபாயம் இருக்கிறது. இதை தடுக்க வேண்டியது ஆட்சியில் இருப்பவர்களின் கடமை அல்லவா?

அதை விடுத்து ஒரு ரூபாய்க்கு அரிசி தருகிறேன் என்றால் அது விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் மரண அடியாகவே கருதுகிறேன். வெளிமாநிலத்திற்கு நம் ரேஷன் அரிசி கடத்தப் பட்டு அங்குள்ளவர்கள் குறைந்த விலையில் அரிசி சாப்பிட எதுவாக அமையும். கண்டிப்பாக அவர்கள் நமக்கு தண்ணீர் தரமாட்டேன் என்று அடம் பிடிப்பவர்கள் என்பது அனைவரும் அறிந்ததே. இதனால் ஏற்படும் இழப்பு யார் யார் தலையில் விழும் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே.

கிராமங்களில் அடிப்படை வசதிகள் இல்லை, குடிக்க தண்ணீர் இல்லை(தண்ணீர் பாட்டில் 20 ரூபாய் விற்கிறது). கழிப்பறை நாறுகிறது, தண்ணீர் இல்லை அதற்கு இரண்டு ரூபாய் நுழைவுக் கட்டணம். கிராமங்களில் கழிப்பறையே இல்லை, இருந்தாலும் தண்ணீர் இல்லை. அரை கிளாஸ் தேநீர் 3 ரூபாய் விற்கிறது. ஒரு கிலோ அரிசி 1 ரூபாயா? வெளியே சொல்ல வெட்கமாக இருக்கிறது...!

இன்னும் நிறைய விடயங்கள் எழுத நினைத்தேன். வேறொரு பதிவில் சிந்திக்கலாம்.

Thursday, August 14, 2008

முதல் பரிசு பெற்ற எனது கட்டுரை -ஈழத்தமிழரும் இந்திய அரசியலும்

தமிழ் பிரவாகம் இணையக் குழுமத்தால் நடத்தப்பட்ட இலக்கியப் போட்டியில் எனது "ஈழத்தமிழரும் இந்திய அரசியலும்" என்ற தலைப்பிலான கட்டுரை முதல் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டது. அந்த கட்டுரை அனைவரின் பார்வைக்காகவும், கருத்துக்களுக்காகவும் வைக்கப் பட்டுள்ளது.

பதிவுலக நண்பர்களின் வேண்டுகோளுக்கிணங்க அதன் சுட்டியைத் தருகிறேன்.

கட்டுரையைப் படிக்க இங்கே சொடுக்குங்கள்.

உங்கள் கருத்துக்களைப் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.


அன்புடன்,
ஜோதிபாரதி.


நன்றி: தமிழ் பிரவாகம்

Wednesday, July 23, 2008

முதல் பரிசு பெற்ற எனது கட்டுரை -ஈழத்தமிழரும் இந்திய அரசியலும்

தமிழ் பிரவாகம் இணையக் குழுமத்தால் நடத்தப்பட்ட இலக்கியப் போட்டியில் எனது "ஈழத்தமிழரும் இந்திய அரசியலும்" என்ற தலைப்பிலான கட்டுரைக்கு முதல் பரிசு கிடைத்துள்ளது. இலக்கியப் போட்டி முடிவுகள் பற்றி அறிய இங்கே சொடுக்குங்கள்.

கட்டுரையைப் படிக்க இங்கே சொடுக்குங்கள்.


அன்புடன்,
ஜோதிபாரதி.

Saturday, April 19, 2008

வள்ளுவர் சிலைக்கும் பூமி பூஜை(சை)யா??? அடப்பாவத்தே...!

டெல்லி தமிழ்ச் சங்க வளாகத்துக்கு திருவள்ளுவர் சிலை இடம் மாற்றம் செய்யப்படுவதையொட்டி அதற்கான அடிக்கல் நாட்டு விழாவும், பூமி பூஜையும் நேற்று (16ம் தேதி) நடந்தது.டெல்லி ராமகிருஷ்ணாபுரத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டது. ஆனால் இந்த சிலை எந்தவித பராமரிப்பும் இன்றி சிதிலமடைந்து வந்தது.இதையடுத்து சிலையை டெல்லி தமிழ்ச் சங்க வளாகத்துக்கு மாற்றும் முயற்சியில் அதன் நிர்வாகிகள் இறங்கினர்.

தமிழக அரசியல் தலைவர்களின் உதவியோடு இந்த முயற்சி எடுக்கப்பட்டது. இதையடுத்து சிலையை தமிழ்ச் சங்க வளாகத்துக்கு இடம் மாற்ற டெல்லி முதல்வர் ஷீலா தீக்ஷித் சமீபத்தில் அனுமதிளித்தார்.இதையடுத்து நேற்று தமிழ்ச் சங்க வளாகத்தில் திருவள்ளுவர் சிலை வைக்க தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தில் இதற்கான அடிக்கல் நாடு விழாவும், பூமி பூஜையும் நடந்தது.சோமாஸ்கந்த சாஸ்திரி இந்த பூமி பூஜையை நடத்தினார். இந்த நிகழ்ச்சியில் டெல்லி தமிழ்ச் சங்க தலைவர் கிருஷ்ணமணி, துணைத் தலைவர் சேதுதுரை, பொதுச் செயலாளர் இரா.முகுந்தன், பொருளாளர் சந்தானம், இணைச் செயலாளர்கள் ராகவன் நாயுடு, ரமாமணி சுந்தர், முன்னாள் தலைவர்கள் பாலச்சந்திரன், ராமாமிர்தம், முன்னாள் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, வடக்கு வாசல் ஆசிரியர் கி.பென்னேஸ்வரன் மற்றும் பலர் விழாவில் கலந்து கொண்டனர்.

திருவள்ளுவர் சிலையை தமிழ்ச் சங்க வளாகத்துக்கு இடம் மாற்றியதும், பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தமிழக முதல்வர் கருணாநிதி, டெல்லி முதல்வர் ஷீலா தீக்ஷித் ஆகியோரை அழைத்து திறப்பு விழாவை மிக விமரிசையாக நடத்த தமிழ்ச் சங்கம் முடிவு செய்துள்ளது.

எல்லாம் முரண்பாடாக இருக்கிறதே...!

கலைஞர் நாத்திகர் அவர் திறக்க இருக்கும் வள்ளுவர் சிலைக்கு பூமி பூஜையா?
ஆச்சர்யாமாதான் இருக்கு...!
எனது கண்டனங்கள்!!

கட்டிடத்துக்குள்(தமிழ்ச் சங்கம் மாதிரி) திருவள்ளுவர் சிலை வைத்தால் நல்லது என்று நினைக்கிறேன். தமிழகம் முழுதும் சாலைகளை எல்லாம் சிலைகளால் நிரப்பி(1008 கொடி கம்பங்கள் வேறு), போக்குவரத்துக்கு பெரிய இடைஞ்சலை ஏற்படுத்துகிறார்கள்.

சிலைகள் சில குரங்குகளாலும் காகங்களாலும் சேதத்துக்குள்ளாகின்றன. சிலைகளைப் பார்க்கும் போதே அந்த தலைவரை நினைத்து வேதனைப் பட வேண்டிஇருக்கிறது.

தெருவுக்கு தெரு, சாலைக்குச் சாலை சிலை எழுப்புவதற்கு பதிலாக கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை போல அதற்கு இடம் ஒதுக்கி நினைவுச்சின்னங்களை எழுப்பலாம்.

இனியாவது சிந்திப்பார்களா?

அன்புடன்,
ஜோதிபாரதி.

சௌதியில் கஷ்டப்படும் தமிழர்களுக்கு உதவிட வேண்டுகிறேன்

நன்றி: தமிழ்மணம், தமிழ் கணிமை


சௌதியில் கஷ்டப்படும் தமிழர்களுக்கு உதவிட வேண்டுகிறேன்

தமிழ் கணிமை தளத்தில், தமிழ்மணத்தில் இரண்டு பதிவுகள் சௌதி அரேபியாவைப் பற்றியது அருகருகே வந்து கொண்டிருந்தது.



மற்றொன்று: கலைஞருக்கு கண்ணீர் கடிதம் : கவனத்துக்கு கொண்டு செல்கிறது "அண்டிப்பிழைக்க வந்தோம்;அரேபியாவில் வாடுகின்றோம்"-சவுதி அரேபியா, ரியாத்துக்கு பிழைப்புத் தேடிப் போன 100 தமிழர்கள் - சம்பளம் கிடைக்கமால்,சாப்பிட வழியில்லாமல், சிறைக் கம்பிகளுக்குள் 5 சக தோழர்களை உட்கார வைத்துவிட்டு தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.யாராவது உதவி செய்ய மாட்டார்களா?என்று ஏங்கித் தவிக்கின்றனர்-அந்த அப்பாவி மனிதர்கள்.சிந்திய வியர்வைக்கு ஊதியமும்,சிக்கல் இல்லமால் தாயகப் பயணமும் கிடைத்துவிடுமா? என்று கண்ணீர் சுமக்கும் கடித வரிகளை நம் தமிழக முதல்வர் கலைஞர் அவர்களுக்கு அனுப்பி இருக்கிறார்கள்.அதை அபப்டியே இங்கே பிரசுரிப்ப்பதுடன் இது பற்றி நம் தமிழக முதல்வரின் சிறப்புக் கவனத்துக்கு அதிகாலை.காம் எடுத்துச் செல்ல இருக்கிறது.



சௌதியில் சிறப்பாகத் தமிழ்ப் பணி செய்து, தமிழ் வளர்க்கும் நம் தமிழ் ஆர்வலர்கள், தங்களுக்குள்ள அரசதந்திர பங்களிப்பைக் கொண்டு, இது போன்ற மாநாடு நடக்கும் இடங்களில், தமிழர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு எளிதாக தீர்வு காண என்ன வழி என்று ஆராய்ந்து, அவர்களுக்கு தங்களால் இயன்ற உதவியை செய்து பிரச்சனைகளில் இருந்து வெளியே கொண்டு வர ஆவண செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.


நம்பிக்கையுடன்,
ஜோதிபாரதி.

Friday, April 18, 2008

அம்மியின் விழுப்புண்

அம்மியின் விழுப்புண்


வாங்கிக் கட்டிக் கொண்டது

வரிசையாக அடி

இடியாக.

விழுகின்ற அடியெல்லாம்

விழுப்புண்ணானது.

நொடி இடைவெளி கூட இல்லை

நொந்துகொள்ள.

உளியால் கொத்தப்பட்ட அம்மி

வலியால் துடிக்கவில்லை.

தாங்கிக்கொண்டது

தனது வேலைக்குதவுமென்று.

அறியாமைச் செதில்களும்

புரியாமைத் தூசியும் பறந்து

குப்பைகளை மாசாக்கின.

பண்பட்டது அம்மி நன்றாக

புண் பட்டாலும்.

வழுக்காமல் அரைத்து

உரைத்தெடுத்தது

உறைக்கும் மிளகாயைக் கூட...!

குன்றாத

சுவையோடு இருந்தது

குழம்பு...!


அன்புடன்,
அத்திவெட்டி ஜோதிபாரதி.

Thursday, April 17, 2008

புகையாத புகை புகைந்தது பின்னால்...!



புகையாத புகை புகைந்தது பின்னால்...!


அவன் புகைப்பிடிக்கும்

காலங்களில்

புகையாதது,

புகைந்தது

ஊரெல்லாம்,

அவன் மருத்துவ சோதனைக்கு

நடையாய் நடந்தபோது,

புற்றுநோயாய்

இருக்குமோ என்று...?



அன்புடன்,
அத்திவெட்டி ஜோதிபாரதி.

Wednesday, April 16, 2008

தொப்பை...!

ஒளித்து வைத்த

ஒய்யாரம்

வெளியே வந்து

வெட்கத்துடன்,

தடித்து நின்றது

தயக்கமில்லாமல்...!



அன்புடன்,
அத்திவெட்டி ஜோதிபாரதி.

Thursday, April 10, 2008

தேசிய நீரோட்டம் எங்கே இருக்கிறது?

தேசிய நீரோட்டம்
எங்கே இருக்கிறது?

எங்கே இருக்கிறது?
தேசிய நீரோட்டம்

நீரோடவில்லை
அணைகள்
போட்டுக் கொண்டதால்

வரிந்து கட்டிக் கொண்டு
நிற்கிறது தேசியம்
வாயளவில்...!

தேசியக் குட்டை மட்டும்
நாறிக்கொண்டிருக்கிறது
கிடை தண்ணீரால்

ஊறிக் கொண்டிருக்கின்றன
அதனுள் மட்டைகள்

பல வண்ணமாய்ப்
பின்னப் படுகின்றன.
அந்த மட்டைகள்

நிரை(றை)ச்சல்
பிடிக்கின்றன
ஒழுகும் கீற்றுக் கொட்டகை
வீட்டு வேலிக்கு

பாவம் அவன்
ஒழுகும் வீட்டில்
நனைந்துகொண்டு
உறங்குகிறான்...!



அன்புடன்,
அத்திவெட்டி ஜோதிபாரதி.

Wednesday, April 9, 2008

பொதி சுமந்த கழுதை...!

பொதி சுமந்த கழுதை...!

பொறுப்பைத் தட்டிக்
கழிக்கவில்லை

பொறுமையின் எல்லை
காணவில்லை

தயக்கமும்
தங்கியதில்லை

தறிகெட்டு
ஓடியதுமில்லை

எல்லோருக்கும் ஏளனம்
எனது நடையைப் பார்த்து

எல்லோருக்கும் ஒவ்வாமை
எனது குரல் கேட்டால்

ஏற்றிக் கொள்கிறேன்
ஏற்றம் மட்டுமே வாழ்க்கை என்று

கலங்கியதே இல்லை
கவலைப் பட்டாலும்

எவ்வளவு ஏற்றினாலும்
சுமக்கிறேன்

நல்ல பெயர் மட்டும்
கிடைத்ததே இல்லை

சுமந்து கொண்டே
இருக்கிறேன்

என்னைப் பிடிக்காதவர்களின்
அழுக்குகளையும் தான்.



அன்புடன்,
அத்திவெட்டி ஜோதிபாரதி.

Sunday, April 6, 2008

மணம் வீசிய காகிதப் பூக்கள்!

மணம் வீசிய காகிதப் பூக்கள்!


எனது காகிதம் கூட

கரைந்தது

சாயம் மட்டும்

போகவில்லை

நான் வரைந்த

பூக்கள்

மணம் வீசியது

எனது கவிதைகள்...!



அன்புடன்,
அத்திவெட்டி ஜோதிபாரதி

Saturday, April 5, 2008

தமிழ்ப் புத்தாண்டு நெருங்குகிறதா? இல்லை தை மாதம் வருகிறதா? யார் நம்மைக் குழப்பியது?

தமிழ்ப் புத்தாண்டு நெருங்குகிறதா? இல்லை தை மாதம் வருகிறதா? யார் நம்மைக் குழப்பியது?

எனது நூறாவது பதிவு!

சித்திரை ஒன்றாம் தேதி தமிழ்ப் புத்தாண்டா அல்லது தை ஒன்றாம் தேதி தமிழ்ப் புத்தாண்டா என்ற குழப்பம் அன்றாடம் நம்மைப் போல் செய்தித்தாள் படிப்பவர்களுக்கு இருக்கிறது. படிக்காத பாமர மக்களுக்கு இந்த விடயமே இன்னும் தெரியாது.
அவர்கள் இன்னும் சித்திரை ஒன்றாம் தேதியைத் தான் தமிழ்ப் புத்தாண்டு என்று நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.
தமிழக முதல்வர் தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக்கச் சட்ட சபையில் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றி இருக்கிறார்.

இதைக் கொண்டு வருவதற்கான காரணிகளை எந்தத் தமிழ் அறிஞர்களை வைத்து ஆராய்ந்தார். அதற்கான முழு விளக்கத்தை தமிழக மக்களிடம், தமது அரசின் செய்தி மற்றும் விளம்பரத் துறை மூலமாக கொண்டு சென்றாரா? இதைவிட உலகெங்கும் பரவிக் கிடக்கும் தமிழ் மக்களை, அறிஞர்களை எந்த விதத்தில் கருத்தில் கொண்டு பங்குபெற செய்தார்?


உலகத் தமிழர்களுக்கு எந்தவகையில் இதைப் பற்றி விழிப்புணர்வு உள்ளது என்பதை எல்லாம் ஆராயாமல் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று ஒரு முடிவை தமிழக முதல்வர் எடுத்திருக்கிறார். முதலில் இந்த செய்தியை உலகத் தமிழர்களுக்குப் பரப்பினால் தான் தமிழர்களுக்கு ஒரே புத்தாண்டு. இல்லையேல் தமிழர்கள் இரண்டு புத்தாண்டு கொண்டாடும் அபாயம் உள்ளது. இது தமிழர்களைத் துண்டாட வகை செய்யுமே ஒழிய, ஒற்றுமையைப் பறை சாற்றாது.

இதற்கு முன்பு ஒரு காலத்தில் தை முதல் நாள் தான் புத்தாண்டு என்று இருந்தது என்ற வாதத்தை வைத்துக் கொண்டால், அது எப்போது இருந்தது? யாரால் அது சித்திரைக்கு மற்றப் பட்டது. போன்ற விளக்கங்கள் மக்களுக்குத் தெரிய வேண்டாமா? இதற்கு பிரச்சாரப் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட வேண்டாமா? சாதரணமாக நான்கைந்து தலைவர்களது பிறந்தநாள் பொதுகூட்டங்களை வருடா வருடம் ஆயிரக்கணக்கான இடங்களில் நடத்துகிறீர்கள். இந்த பெரிய மாற்றத்தை எந்த வகையில் மக்களுக்குக் கொண்டு சென்றிருக்கிறீர்கள்? இப்போது சித்திரை ஒன்று வந்துகொண்டு இருக்கிறது. இப்போது தெரிந்துவிடும் உங்கள் கையாலாகாதனம்.

எதற்காக சித்திரையில் இருந்து தைக்கு மாற்ற வேண்டும்? தைப் பொங்கல் என்பது தமிழரின் பண்பாட்டைக் குறிக்கும், இயற்கைக்கு நன்றி நவிலும் திருநாள் அல்லவா? அறுவடைத் திருநாள் அல்லவா? அப்படியே தை முதல் நாளை புத்தாண்டாகக் கொண்டாடினால் சித்திரை ஒன்றாம் நாள் எப்படி கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்? இது போன்ற எண்ணற்ற கேள்விகள் துளைத்து எடுக்கின்ற நேரத்தில் நேற்று தினமலர் இணையப் பக்கத்தைத் திறத்த போது சித்திரை ஒன்று தமிழ் புத்தாண்டை பற்றிய செய்தி மினுக்கியது.

இதை தினமலர் மட்டும் தான் என்று விட்டு விட முடியாது. எல்லா மலர்களிலும் வர வாய்ப்புகள் உண்டு.



அன்புடன்,
அத்திவெட்டி ஜோதிபாரதி.

Friday, April 4, 2008

தூக்கணாங்குருவி

கோதி உரித்த நார்

கொத்திக்கொண்டு வந்தேன்.


ஒன்று ஒன்றாய்ச் சேர்த்து

ஒட்டி ஒட்டிப் பின்னி

ஒப்பேத்தி விட்டேன்.


நாரிலையில் கூடு

நாறிடாத வீடு.


மயிரிழையில் வாழ்வு

மகிழ்ச்சியான வாழ்வு


நாசியினை

நங்கூரமிட்ட

நயமான வீடு.


தொங்குகிற வீடு

தோட்டங்களோ கீழே.


மங்காத வெளிச்சம்

மாறி மாறி அடிக்கும்.


கதவில்லா நிலை

கவலை கொண்டதில்லை.


சன்னல்களோ இல்லை

சகித்துக் கொள்ள வேணும்.


பின்னல்களும் உண்டு

பேதலித்ததில்லை.


காற்று வந்தால் ஆடும்

களிப்புடனே ஊஞ்சல்.


குஞ்சுகளை ஏந்தி

குலவைகளும் இட்டு.


நெஞ்சுரமே கொண்டு

நேர்த்தியான வாழ்வு.


வேடர்களைக் கண்டு

வெகுண்டெழுந்ததில்லை.


சுற்றங்களும் உண்டு

சூழ்ச்சிகளோ இல்லை.


பற்றியதே வாழ்க்கை

பசுமையான வாழ்க்கை.



அத்திவெட்டி ஜோதிபாரதி

Thursday, April 3, 2008

என்னை மரக்க வைத்த மறத்தமிழன்!

பழகியதால்

நீங்கள் தமிழரா என்று கேட்டேன்.

நான் தமிழன் என்று சொன்னார்.


மகிழ்ச்சியுடன்

தமிழகத்தில் எந்தப் பகுதி என்று கேட்டேன்.


தாத்தா பூனாவைச் சேர்ந்த மராத்திக்காரர்

பாட்டி இலங்கையைச் சேர்ந்தவர் என்றார்.


மகிழ்ச்சியுடன்

உங்கள் பாட்டி நம் ஈழத்தமிழரா என்று கேட்டேன்.


சிரித்துக்கொண்டே சிங்களவர் என்றார்

மலைத்து நின்றேன்.


அப்பா தெலுங்குக்காரர், அம்மா மலையாளி

நான் தமிழன் என்றான்

அந்த மறத்தமிழன்.

நான் மரத்துப் போய் நின்றேன்...!



அத்திவெட்டி ஜோதிபாரதி

ஏ! காவிரித்தாயே!! ஏன் இந்த சோதனை!!!

காய்ந்த நிலங்கள்

பாலம் பாலமாக

விரிந்து கிடக்கின்றன.

காவிரி ஆற்றில் நீரில்லாமல்

மணல் அள்ளப்பட்டு

வழுவிழந்த வாய்க்காலாக.


நீ அணை போட்டுக் கொண்டாய்

ஆயிரம் காலத்துக்கு

உனக்குத் தண்ணீர் உண்டு.

எங்களுக்குக் கண்ணீர் மட்டும் உன்னால்...!

ஏ! காவிரித்தாயே!!

நீ தமிழகத்திலிருந்து உற்பத்தியாகி

கர்நாடகத்துக்குள் பாய்ந்திருந்தால்

அவர்கள் என்ன செய்திருப்பார்கள்.

எண்ணிப் பார்க்கிறேன்.


தமிழன் தாராளமானவன்

தரமானவன்

உனக்குச் சிறை வைத்திருக்க மாட்டான்.


நடுவண் அரசே!

நீ என்ன செய்கிறாய்?

மேந்தண்ணி குடித்த

மாடுபோல் விழிக்காதே!

பிரச்சனை உன்னுடையது

இறை ஆண்மை

இழந்துவிடாமல் இருந்துகொள்!


நீதிமன்றமே!

நிலைகுலைந்துவிட்டாயா?

உன் தீர்ப்புகள்

எழுதப்படுவது மட்டும் தானா?

எத்தனை மன்றங்களையும்,குழுக்களையும்,

தீர்ப்புகளையும் பார்த்துவிட்டோம்

புளித்த ஏப்பம் வருகிறதா?

எங்கே போனது உன் ஆளுமை?


குடிதண்ணீருக்கும்

குதர்க்கம் விளைவித்து

இடையூறு செய்யும்

இடையூரப்பாக்களுக்கும்

சாளு(லு) வாளிகளில்

தண்ணீரைத் தேக்கும்

சாதுர்யக் கழுதைகளுக்கும்

சவுக்கடி கொடு…!



அத்திவெட்டி ஜோதிபாரதி

Friday, March 21, 2008

நெற்றித் திலகம்

அரைப் புள்ளிகளை

அணிந்து அணிந்து

அவமானமாய்.


மூச்சடக்கி

முடிக்காமல்

முற்று பெறாத

முற்றிய புள்ளியாய்

நெற்றித் திலகமாய்

நெகிழ்கிறேன்.



அத்திவெட்டி ஜோதிபாரதி

அரிக்கன் கரியடித்துவிட்டது

அழகான அரிக்கன் விளக்கு

அளவான வெளிச்சம்

வெளிச்சம் பத்தவில்லை என்று

வெகுண்டு தூண்டியது மனம்

கரியடித்துவிட்டது

துடைத்து விட்டேன்

தூண்ட முடியவில்லை

எண்ணெய் தீர்ந்துவிட்டது



அத்திவெட்டி ஜோதிபாரதி

Thursday, March 20, 2008

சிவப்புச் சாய உதட்டுக்குள் ஓர் ஊத்தல்

வீட்டுக்கு வெளியே

வண்ணச்சாயம்

விலைகொடுத்து வாங்கி

அடித்தவன்,

வீட்டுக்குள்ளே இருந்த

கரையான் புற்றை

இடிக்க மட்டும்

வாங்கினான்

கடப்பாரையை

கடனாய்...



அத்திவெட்டி ஜோதிபாரதி

பசுவும் தென்னையும்

வித்தாகிவிட்டது

கன்று வளர்ந்து

அதன்பால் பெற்று

வளர்த்ததென்னை

வாழ்கிறேன்...!



அத்திவெட்டி ஜோதிபாரதி

Wednesday, March 19, 2008

ஏளனம்

எறும்புகள்

ஏளனம் செய்தன

காய்ந்து போனவர்களின்

கல் மாக்கோலம்



அத்திவெட்டி ஜோதிபாரதி

எழவு வீட்டில் எழுந்த இலட்சியம்

எழவு வீட்டில்

விடிய விடியச்

சீட்டாடும் இலட்சியவாதிக்கு

ஒரு கையில் ராஜா இருந்தார்

சிகரெட்டுடன்.


ராணியைத் தேடி

அலைந்த கைக்கு

தேநீர் கொண்டுவந்து

கொடுத்தது

ஒரு சின்ன ராணி.

புகை போக்கிக் கொண்டிருந்த

சிகரெட் வெட்கிச் சிவந்து

தலைகுனிந்தது.


இலட்சியத்தை அடைய

சீட்டுக்கட்டு

ராஜாவை வைத்துக்கொண்டு

போராடிக்கொண்டிருந்தார்

இந்த ஜோக்கர்.




அத்திவெட்டி ஜோதிபாரதி

Saturday, March 15, 2008

சாதி மத வெறியர்களுக்கு இங்கே சுளுக்கு எடுக்கப்படும்



ஆயிரத்தில் ஒருவன்

எல்லா சாதி மதத்தினரின்

மானத்தையும்

கரும்புள்ளி செம்புள்ளி குத்தி

கழுதைமேல் ஏற்றி

கஞ்சி குடிக்கவைத்து

துவைத்து

சுளுக்கெடுத்து

அழுக்கெடுத்து

காயவைத்து

சூடும் வைத்து

கை கால்களை

மடித்துக் கட்டிப்போட்ட

சலவைத் தொழிலாளி



அன்புடன் ஜோதிபாரதி.

Friday, March 14, 2008

கருகி விழுந்த சருகு

மல்லிகை மொட்டுகளும்

முதிர் கன்னிகளாய் மலர்களும்

பறிக்கப்பட்டு

மாலைகள் தொடுக்கும் வரை

அண்ணனாய்க்

காத்திருந்த கனகாம்பரம்

கதம்பத்தில் சேர்த்துக்

கட்டமுடியாமல்

காய்ந்து

கருகி விழுந்தது

சருகாய்


அன்புடன் ஜோதிபாரதி

Thursday, March 13, 2008

பூங்காவினுள் ஒரு பனை விருட்சம்

அந்தரான கிராமத்தில்

ஒத்தைப் பனைமரம்

நுங்கு நுகர்வாரில்லை

காத்திருந்த பனம்பழம்

வழிப்போக்கனின் வண்டியில்

விழுந்தது

காகம் அமர்ந்த கணத்தில்

பழம் சப்பி ருசித்த

வண்டியோட்டி

கொட்டையை மட்டும்

வீசி எறிந்தான்

பூங்கா என்று தெரியாமல்

மரமாக வளர்ந்து நின்றது

ஒரு பனை விருட்சம்

பூங்காவினுள்

வெளிநாட்டுக்காரர்களும் வந்து நின்று

படமெடுத்துக்கொண்டார்கள்



அன்புடன் ஜோதிபாரதி

Sunday, March 9, 2008

கவிதா இனிக்கும் கவிதா!

கவிதா இனிக்கும் கவிதா!

கற்பனை இல கவி பாட

கவிபட பொருள் பாட

கவிதா இனிக்கும் கவிதா!

கரு களையாமல் -கவின்மிகு

நடையழகை நவில -நல்

சொற்குதிர் திறந்து செய்யுள்

கவிதா இனிக்கும் கவிதா!



அன்புடன் ஜோதிபாரதி

Friday, March 7, 2008

சிறைப்பறவை

சிறகிருந்தும்

சிறைப்பறவை

கூண்டுக்கிளி




அன்புடன் ஜோதிபாரதி

Wednesday, March 5, 2008

அழகை ஆராதிக்க அவகாசம் இல்லையே!

நான் பட்டத் தாக்கமே
எனதாக்க(கு)ம்

விதைகளைக் கொட்டினேன்
வேதனையுடன்
கவிதைகளை அல்ல

பிரசவித்தேன்
பிடிக்காதவற்றை

ஏக்கங்களை எழுத
முடியவில்லை
தட்டச்சு மூலம்
தாகம்
தீர்த்துக்கொள்கிறேன்

இணையத்தில் தமிழ் வலை
பின்னுகிறேன்

கம்பி வடத்தில் கணினித்
தேர் இழுக்கிறேன்

கணினியைக்
கற்பனைப் பூங்காவாக
ஆக்கிக்கொள்கிறேன்

விளைந்த கவலைகளை
விலை இல்லாமல்
விற்றுக்கொண்டிருக்கிறேன்

வலையிலும்
கவலைகளை ஏற்றுகிறேன்

சோகங்களைச் சொல்லிச்
சுமை
இறக்கி வைக்கிறேன்

அழகை ஆராதிக்க
அவகாசம் இல்லையே!



அத்திவெட்டி ஜோதிபாரதி

ஏழைத் தாயின் ஏக்கம்

ஏழை விவசாயி நான்
இருக்கும் இடமும்
இறுகிய இல்லமும்
ஒரு சாண் வயிற்றுக்கு
ஓர் ஏக்கர் நிலமும் சொந்தம்

சாண் பிள்ளையானாலும்
ஆண் பிள்ளை என இரண்டு

அழகான பிள்ளைகள் -என
அனைவருமே கண் வைத்தார்

நாடறிந்த பிள்ளைகளாய்
நல்ல பேர் எடுக்க வேணுமென்று

ஊருக்கு அஞ்சி
ஊட்டி ஊட்டி நான் வளர்த்தேன்.

சங்கடங்கள் தெரியாம
சகிச்சுக் கொண்டு நான் வளர்த்தேன்

பள்ளிக் கூடம் போகவேண்டி
படிச்சு படிச்சு நான் சொன்னேன்

சொன்னபடி செய்தார்கள்
சுற்று வட்டாரத்தில்
நல்லவர்கள் மகிழ்ந்தார்கள்

சொத்து பத்து வித்து
சுகங்களையும் விட்டு
மேல்படிப்பு
படிக்கவைக்க
பட்டணத்துக்கனுப்பிவைத்தேன்

வயிற்றுக்குப் பாதகம் பண்ணாமல்
வயிறாரச் சாப்பிடு -என
வாரி வாரி பணம் கொடுத்தேன்

பட்டினி பசியும்
பரிதவிக்கும் வாழ்க்கையும்

பழைய சோறு பருக்கையையும்
வெங்காயம் புளித்துவையல்
பட்சனமாச் சாப்பிட்டேனே

விடுமுறைக்கு வரும் போது
விருந்து வைத்து நான் மகிழ்ந்தேன்

இன்னும் சப்பிடென்று
இட்டுக்கொண்டே நான் இருந்தேன்

படித்த மகனே -உன்னைப்
பார் புகழ வேண்டும் என்று
பரிகாரம் செய்துவந்தேன்

நொடித்துப் போனாலும் பரவாயில்லை-நீ என்னை
நோகடிக்க மாட்டாய் என்று
தடித்த நம்பிக்கையுடன்
தாகம் வந்து காத்திருக்கேன்…



அன்புடன் ஜோதிபாரதி

Tuesday, March 4, 2008

பலிபீடம் பாருக்குள்ளே நல்ல நாடாகும்

விடிவெள்ளி தெரிகிறது
வந்து பார்

உன் நிலத்தின் பொழியை
நீயே அளந்து கொள்வாய்

நீ உழுது நட்ட பயிர்
கதிரானதும்
நீயே அறுத்து
உன் குதிரில் இடுவாய்

நீ சேர்த்த சொத்து
உன்னோடு இருக்கும்

சொல்லிக்கொள்ளாமல்
அள்ளிக்கொண்டு ஓடும்
நிலை மாறும்

உன் இடத்தில் நீ உலவ
உதவாக்கரை ஒப்புதல்
தேவையில்லை

வேடர்கள் வீழ்ந்து போவர்
வெள்ளி நிலா உலவும்
விண்மீன்கள் சாமரம் வீசும்
வேங்கைகள் நாடாளும்
வீர மறக் கொடி பறக்கும்

தமிழ் வெள்ளம் அருவியாகும்
பாலாறாய்ப் பெருக்கெடுக்கும்

மல்லிகை
மண மணக்கும்
மாஞ்சோலைக்
குயில்கள் கூவும்

வண்ணமயில்
தோகை விரித்தாடும்

உன் பூமியில்
காகம் மட்டுமே கரையும்

ஓலங்கள் ஒழிந்து
ஏலங்கள் குவியும்

துயரங்கள் துடைத்து
துலாபாரம் பெருகும்

கள்ளிச் செடிகளும்
கவி பாடும்

பூங்கொத்துகள்
புன்னகை
பரிமாறிக் கொள்ளும்

தென்றல் மட்டும்
உன்னைத் தீண்டும்

வானவில் உனக்குத்
தோரணம் கட்டும்

மேகங்கள்
பன்னீர் தெளிக்கும்

முல்லைப் பூக்களுக்கும்
முடிசூட்டப்படும்


நீ நாடிய நாடெல்லாம்
உன் நாட்டை நாடும்

பூவரசு
பொன்னரசாகும்

வையம் போற்றும்
வல்லரசாகும்

எள்ளி நகைத்தவர்
ஏமாந்து போவர்

விதைக்காமல்
முளைக் கொட்டும்

பலிபீடம்
பாருக்குள்ளே நல்ல நாடாகும்




அன்புடன் ஜோதிபாரதி

Friday, February 29, 2008

சென்னை வாசத்தால் கடன் கழியவில்லை

காலை எழுந்தவுடன்
கடுங்குளிர்

அக்கம் பக்கத்திலே
அளவு கடந்த கூட்டம்

கூட்டுரிமைப் பொதுக் கழிப்பறை
நிரம்பி வழிந்தது
நீரில்லாமல்
மக்களால்

மாநகரக் கழிப்பறைக்குச் சென்றால்
மக்கள் வரிசை பிடித்து நிற்கிறார்கள்

காசு கொடுத்தால் இங்கு கொஞ்சம்
கழுவத் தண்ணீர் கிடைக்கும்
வரிசை கழிய வேண்டுமே முதலில்

வரிசை கழிந்து
வந்து பார்த்தால்

கற்பனைக்கு அப்பாற்ப்பட்ட கழிவறை
கதவு மட்டும் தான் இல்லை

தண்ணீர் கிடைக்கும்
ஊற்றும் போது மட்டும்

நேரத்தைக் கழிக்கக் கூடாது
சீக்கிரம் வாங்க என்கிற சத்தம்
காதைப் பிளக்கும்
நாசி வேறு பிளக்கப்படுகிறது

மொத்தத்தில்
காசு மட்டும் கழிந்தது
கடன் கழியவில்லை



அன்புடன் ஜோதிபாரதி

Thursday, February 28, 2008

என்றும் சுஜாதா


திருவரங்கக் காவிரி

கொள்ளிடம் சென்று

கடலில் கலந்து விட்டது

அதன் பிரதான நதியும்

கிளை நதிகளும்

என்றும் நம்முடன்...


2000-ம் ஆண்டு சிங்கப்பூரில் நடைபெற்ற உலகத் தமிழ் இணைய மாநாட்டிற்கு சன் டெக் சிட்டி செற்றிருந்த போது, புத்தக மற்றும் மென்பொருள் கடைகளை ஒவ்வொன்றாக பார்த்துக்கொண்டு வந்தேன். திடீரென்று யாரோ ஒரு பெண்மணியின் குரல் தம்பி! என்று அழைத்தது கேட்டது. சட்டெனத் திருப்பிப் பார்த்தேன். அந்த பெண்மணிக்கு பக்கத்தில் எழுத்தாளர் சுஜாதா நின்று கொண்டு இருந்தார். ஆச்சர்யத்துடன் அவர்கள் இருவருக்கும் புன்முறுவலுடன் வணக்கம் தெரிவித்துவிட்டு, அவர்களிடம் சென்றேன். நான் திரு சுஜாதாவோடு பேசுவதற்குள் அந்த பெண்மணி இவர்தான் எழுத்தாளர் சுஜாதா என்று எனக்கு அறிமுகப் படுத்திவிட்டார். இவ்வளவு உயர்ந்த, பிரபலமான எழுத்தாளரை நமக்கு அறிமுகப்படுத்தி வைக்கிறாரே என்று கொஞ்சம் சங்கடத்தில் நெளிந்தது உண்மை. நான் சொன்ன பெண்மணி திரு சுஜாதா அவர்களின் துணைவியார் என்று பின்பு தெரிந்து கொண்டேன். பிறகு சுஜாதா அவர்களிடம் இணையத்தைப் பற்றி அவர் எழுதிய ஒரு புத்தகம் பெற்று வந்தேன்.அந்த அமைதியான, அபூர்வமான மனிதரை இன்று நாம் இழந்துவிட்டோம். அவரை இழந்தாலும், அவருடைய எழுத்துக்கள் என்றும் வாழும் நம்முடன்...



அன்புடன் ஜோதிபாரதி

Tuesday, February 26, 2008

எண்ணெய்க் குளியலுக்காக ஏக்கத்துடன் காத்திருந்தேன்

ரொட்டிப் பரோட்டா கேட்டேன்

எண்ணெயில் முக்கி மூழ்கடித்துப்

பொரித்துக்கொடுத்தாய் -நீ

அவசரமாய்க் கொடுத்ததை

அவசரமில்லாமல் காத்திருந்து

வாங்கிச் சென்றேன்

ஒன்றை மட்டும் கொடுக்க

மறந்து விட்டாய்

குழம்புக்குப் பதிலாக

அரப்பைக் கொடுத்திருந்தால்

அழகாகக் குளிப்பாட்டி இருப்பேன்

எண்ணெய் என்ன செய்யும் என்று

நீ உரைக்காமல் புரிந்திருப்பேன்.



அன்புடன் ஜோதிபாரதி

Friday, February 22, 2008

அழகின் அழகு அமிழ்கிறது காணீர்!

அழகின் அழகு அமிழ்கிறது காணீர்!

இறக்கையில் முதுகில்
இளம் பச்சை

மார்பிலோ
மாம்பழ நிறம்

கண்ணுக்கு மையிட்ட
கச்சிதமான அழகு

வானின் நீல நிறம்
வாலுக்கு வைத்துக் கொண்டாய்
வாலுக்குக் கீழே
வசீகரிக்கும்
வண்ணக் குங்குமப் பொட்டோ?

வெடுக்கென்ற பார்வை
விஞ்சுகின்ற அழகு


அழகான கால்கள்
அசைந்து வரும் ஒன்றாய்



தவ்வித் தவ்வி அழகாய்
தவழ்ந்து வரும் அழகு

தவிக்கவிடும் நம்மை
தமிழச்சியோ என்று

அழகானப் பாதை -நீ
விரும்புகிற பாதை

ஆயுத பூசை அன்று
ஆயிரம் பேர் வருவீர்கள் என
அங்கலாய்த்து நாமிருந்தோம்

முன்பே வந்திடுவாய் -உன்
முக அழகைக் காட்டிடுவாய்

சீட்டடித்து நாம் பாட
சிங்கார நடைதனையே
சிறப்பாக நடந்திடுவாய்

அழகாக வாலாட்டி
அருமையாக ரசித்திடுவாய் -நீ
அப்பாவி என்றுணர்ந்து
அடைந்திடுவார் உன்னை

அவர் அழகானக் கொண்டையைப் பிடித்துக்கொண்டு
ஆடச்சொல்வார் பொய்யாக

“இருந்த இடத்தில் கொண்டுபோய் விடுறேன்
கூத்தாடு கூத்தாடு” என்று

அழகாய் ஆடி ஆடி
அனைவரையும் மகிழ்விப்பாய்

இயல்பாய் செய்கிறாய் என்று
இறக்கையையும் பிடுங்கிடுவார்

அழகை அமிழ்த்திடுவார்
அருமை தெரியாதார்

காச்சுள் என்கிற உன்பேரை
தவறாகப் புரிந்து கொண்டு

காச்சு என்று உரைத்தனரோ
கவலையிலே வாடுகிறோம்




அன்புடன் ஜோதிபாரதி

Thursday, February 21, 2008

கிராமங்களைச் சீரழிக்கும் திமிங்கிலங்களும், திரைகடலோடிகளும்

கிராமங்களைச் சீரழிக்கும் திமிங்கிலங்களும்,திரைகடலோடிகளும்

கிராமங்களில் உள்ள கோவில்களில் ஆண்டுக்கு ஒருமுறை திருவிழாக்கள் களை கட்டும். கிராம மக்களுக்கு இந்த தருணம் மகிழ்ச்சியான தருணமும் கூட. உறவினர், நண்பர்களை திருவிழாக்களுக்கு அழைத்துவந்து உபசரிப்பது. புத்தாடை அணிந்து மகிழ்வது. இன்னும் பட்டியல் நீளும்.

திருவிழாக்கள் ஒரு மாதம், 15 நாட்கள், ஒருவாரம், ஒரு நாள் இப்படி வசதிக்கு தகுந்தபடி கொண்டாடுவார்கள். இந்த கொண்டாட்டங்களில், திரைப்படங்கள் திரையிடுதல், கரகாட்டம், நடன நிகழ்ச்சிகள், சமுக நாடகங்கள் மற்றும் புராண நாடகங்கள் வள்ளித் திருமணம், அரிச்சந்திர மயானகாண்டம், சத்தியவான் சாவித்திரி, பவளக்கொடி போன்றவைகளும் வசதிக்கேற்ப சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

சமீப காலமாக இந்த நிலை கொஞ்சம் கொஞ்சமாக மாறி, கலை இரவு என்று ஒரு நிகழ்ச்சி நடைபெறுவதாக நண்பர் திரு.சரவணன் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியைப் பற்றி அவர் விவரித்த விதம் என்னை மிகுந்த வேதனைக்குள்ளாக்கியது. சினிமாவில் நாம் பார்த்து ஆபாசம் என்று சொல்கிறோம் அல்லவா? அதையும் தாண்டி அருவெறுக்கத்தக்க விரசமான ஒரு நிழ்வாக இருப்பதாகவே திரு சரவணன் மேலும் கூறுகிறார். இதை கோவில் போன்ற புனிதமான இடங்களாகக் கருதப்படும் இடங்களில் நிகழ்த்துவது ஏனோ? அதையும் தாண்டி கிராமத்துக் கோவில்களில் இந்த நிகழ்ச்சியின் போது இளம் சிறார்கள், குழந்தைகள் கொட்ட கொட்ட விழித்திருந்து பார்ப்பதாகவும் தெரிவித்தார். இது மேலும் நமது வேதனையைக் கூட்டியது. இந்த பிஞ்சு உள்ளங்களில் நஞ்சை விதைக்கும் வானரங்களும் உட்கார்ந்து பார்ப்பதாகவும் கேள்விப்பட்டேன். அவர்களை அறுபதைத் தாண்டிய திமிங்கிலங்களாக, வாளை மீனு, விலாங்கு மீனாக சித்திரம் பேசுதடி திரைப்படத்தில் உருவகப்படுத்தியுள்ளார்கள். குழந்தைகளாக இருக்கும் போது நடக்கும் விடயங்கள் அவர்கள் வாழ்நாள் இறுதி வரை பாதிப்பை ஏற்ப்படுத்தும் என்பது ஏன் இந்த திமிங்கிலங்களுக்குத் தெரியவில்லை?

இன்னொரு விடயம், இந்த நிகழ்ச்சிக்கு ஆகும் செலவு சுமார் ஐம்பது முதல் அறுபதாயிரம் என்றும் கேள்விப்பட்டேன். நண்பர் திரு சரவணன் கூற்றுப்படி, இந்த நிகழ்ச்சிக்கு ஆதரவு மற்றும் பண உதவியை அந்த கிராமத்தைச் சேர்ந்த "மலேசிய,சிங்கை வாழ் ஊழியர்கள்" செய்திருக்கிறார்கள். இது அதை விடக் கொடுமை. நீங்கள் கடின உழைப்பால் சம்பாதிக்கும் பணத்தை உங்கள் குடும்பத்துக்கு, அம்மாவிற்கு, அப்பாவிற்கு, மனைவிக்கு அனுப்புங்கள். ஏன் இப்படி உங்கள் பணத்தை வீணடிக்கிறீர்கள். வீணடிப்பதோடு மட்டும் அல்லாமல் பிஞ்சுக் குழந்தைகளையும், அப்பாவி கிராம மக்களையும் கெடுத்து, எடுத்து வைத்து மூடாதீர்கள். அப்படியே நீங்கள் எதாவது ஊருக்கு செய்ய வேண்டும் என்று நினைத்தால் நன்றாகப் படிக்கும் பள்ளி மாணவர்களுக்கு பரிசு வழங்கி ஊக்கப் படுத்துங்கள், விளையாட்டு விழாவிற்கு பண உதவி செய்து உங்களை கௌரவப் படுத்திக் கொள்ளுங்கள். பள்ளிக் கட்டிடம் சரியில்லை என்றால் புதிதாகக் கட்டிடம் கட்டி கொடுங்கள். நூலகம் கூட கட்டிக் கொடுக்கலாம். குளத்தைத் தூர் வார உதவி செய்யலாம்.

இதைப் படிக்கும் நல்லெண்ண சமூக ஆர்வலர்கள், தங்களுக்கு தெரிந்தவர்கள் யாரேனும் தங்களை அறியாமல் இந்த செயலில் ஈடுபட்டிருந்தார்கள் என்றால், இதன் தீமைகளை நாசூக்காக எடுத்துக் கூறி இது போன்ற நிகழ்ச்சிகளைத் தடுத்து நிறுத்த வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.



அன்புடன் ஜோதிபாரதி

Saturday, February 16, 2008

ஆயுதம் செய்வோம்

ஆயுதம் செய்வோம்

நிராயுதபாணியாய் நிற்கிறேன்
நிலை தடுமாறிப் போகிறேன்

ஊக்கம் கொடுக்க
ஒரு குருவி இல்லை
ஒப்பாரி வைக்கிறேன்

ஆக்கம் செய்வதற்கு
அஞ்சு காசு இல்லை
அவதிப் படுகிறேன்

ஏக்கம் ஒன்றே
கொண்டுள்ளதால் -யாரும்
ஏறெடுத்துப் பார்க்கவில்லை

நோக்கம் இல்லாமல்
நொந்து தவித்ததனால்
தூக்கமும் இழந்து
தவிக்கிறேன்

கோபம் கொப்பளிக்க
குறுக்கு வழியில் போனதால்
குட்டிச் சுவாராகிப்
போனதே மிச்சம்

அன்பே அறியவில்லை
அரவணைப்பு தெரியவில்லை

அன்பென்பது அமுதசுரபி -நான்
அதை அறியாத் தனிப்பிறவி

நிலை தடுமாறிவிட்டேன்
நிராயுதபாணியாக நிற்கிறேன்
அன்பு மட்டுமே ஆயுதமாய் -ஆம்
ஆயுதம் செய்வோம்



அன்புடன் ஜோதிபாரதி

எனதருமை வள்ளி

எனதருமை வள்ளி

காலை எழுந்தவுடன்

கணிவுடனே வந்திடுவாள்

சோலையிலிருந்து

சொக்கவைக்க வந்திடுவாள்

நாளையும் அவள் வேண்டும் -என்று

நச்சரித்துக் கொண்டிருப்பேன்

அம்மாவிடம் சொல்லி

அனுசரித்துப் போகச்சொன்னேன்

அவளின் குரல் கேட்டு

அவசரமாய் ஓடிடுவேன்

ஆசை ஆசையாய் -அவளை

அள்ளி அணைத்துக் கொள்வேன்

வெளுத்த நிறத்தாள்

வழவழக்கும் தோலாள்

வசீகரிப்பாள் என்னை

சுவைக்க நினைத்திடுவேன்

சும்மா இருக்க மாட்டேன்

பக்கத்து ஊரிலிருந்து வரும்

பதுமையல்லவா அவள்

சொர்க்கத்தாள் என்று

சொல்லிச் சொல்லி

சுவைத்திடுவேன்

அவள் எனக்குத் தந்தது

உரம் அள்ளி

என்னை அள்ளிக் கொண்ட

அவளோ மரவள்ளி



அன்புடன் ஜோதிபாரதி

பாலம் வேண்டும்!

பாலம் வேண்டும்!

நாசா சொன்னதென்று
நா கூசாமல் சொல்வர்

நம் நாட்டு நல்லறிஞர்களை
நகைப்புக்குள்ளாகினர்

பேசா ஊமைகளாய்
பெரும் பெரும் அறிஞர்கள்
தாஜா செய்வர் -பெரும்
பண முதலைகளை - ஆங்கே
அவர்கள் அங்கலாய்க்கும்
அமெரிக்கா சொன்ன -அந்த
ஆதாம் பாலமும் வேண்டாம்

இதிகாசம் சொல்லும்
இடியாப்பச் சிக்கலில் -நீங்கள்
இறுகிப் போகவும் வேண்டாம்

சூத்திரன் சொன்னது -என்று நீங்கள்
ஆத்திரமும் படவேண்டாம்

ஆத்திகன் சொல்வதைக் கேட்டு
அவசரப் படவும் வேண்டாம்

நாத்திகன் சொல்வதைப் பார்த்து
நஞ்சைக் கக்கவும் வேண்டாம்

ராமர் பாலம் என்று
ரகளையிடும் -அந்த
ராமர் பாலமும் வேண்டாம்

கடல் வளங்களைக்
கரைத்து ஊற்றுபவர்
கரிசனமும் நமக்கு வேண்டாம்

மேடாக்கி மெலிந்து
போகவும் வேண்டாம்
பள்ளமாக்கி
பறிகொடுக்கவும் வேண்டாம்

பிட்டுக்கு மண்சுமந்த
காலம் போய் -நீ இப்போது
துட்டுக்கு மண்
சுமக்கவும் வேண்டாம்

பாரதி என்ற பகலவன்
நேரெதிர் நின்று சொன்ன
சேது பாலத்திற்காக -நீங்கள்
மோதவும் வேண்டாம்

துன்பக் கேணியில்
துயரத்தில் வாடும்
எம் ஈழத்தமிழனுடன்
பாரதனில் எமக்கு
உறவுப் பாலம் வேண்டும்
செய்வாயா? -எம்
பாரத மாதாவே! -எமக்குப்
பாலம் வேண்டும்


அன்புடன் ஜோதிபாரதி

வட மொழி - தமிழ் மொழி

பின் நவீனத்துவம் - பின் புதுமையியல்

அகங்காரம் - செருக்கு,இறுமாப்பு,முனைப்பு,யானெனல்

அகடவிகடம் - குறும்பு,மாற்று,மாறுபட்டது

அகதி - அறவை,வறியன்,எதிலி,புகலிலான்,யாருமற்றவன்,ஏழை

அகந்தை - இறுமாப்பு,செருக்கு

அகம் - உள்ளே,உயிர்,நான்,மனம்,மனநிலை,எண்ணம்

அகம்பாவம் - தற்பெருமை,செருக்கு

அகராதி - அகரமுதலி,அகரவரிசை,அகரநிரல்,அகரமுதல்

அகிம்சை - இன்னா செய்யாமை,கொல்லாமை

அஹிம்சை - இன்னா செய்யாமை,கொல்லாமை

அகோரம் - அழகின்மை,கொடுமை,நடுக்கம்

அக்கணம் - அப்பொழுது,அந்நொடி

அக்கரம் - எழுத்து

அட்சரம் - அழிவில்லாதது

அக்கியாணி - அறிவிலான்

அஞ்ஞானி - புல்லறிவாளன்

அக்கிரகாரம் - பார்ப்பனச் சேரி

அக்கிரமம் - ஒழுன்கின்மை,முறைகேடு

அக்கிராசனம் - முதலிருக்கை,தலைமை

அக்கினி,அக்நி - நெருப்பு,தீ,அனல்,எரி

அங்கப்பிரதட்சணம் - உடல் வலமுருளல், வலம் புரளல்

அங்கீகாரம்,அங்கீகரணம் - உடன்,செப்பு

அங்குலம் - விறக்கட்டை,விரலளவு

அசத்தை,அசத்தியம் - பொய்

அசரம்- அசைவில்லாதது,இயங்காதது,நிலையியல்

அசரீரி - வானொலி,உருவற்றது

அசித்து - பயனின்மை

அஜீரணம்,அசீரணம்- செரியாமை,பசியின்மை,அழிவுபடாமை

அசுத்தம் - அழுக்கு,துப்புரவின்மை,தூய்மையின்மை

அசேதனம் - அறிவில்லாதது,அறிவிலி,அறிவில் பொருள்

அசெளரியம் - நலமின்மை,இடைஞ்சல்

அஞ்சலி - கும்பிடல்,வணக்கம்

அஞ்சனம் - மை,கறுப்பு,இருள்

அஞ்சிட்டம் - கதிரவன்

அஞ்ஞாதம் - மறைவு,அறியப்படாதது

அஞ்ஞாத வாசஸ்தலம் - மறைந்துறைவிடம்

அட்சயப் பாத்திரம் - திருவோடு,ஏற்போடு,அள்ள அள்ளக் குறையாதது

அட்டதிக்கு பாலகர் - எண்புறக்காவலர்

அட்டபந்தனம் - எண்புறக்கட்டு

அண்டம் - முட்டை,உலகம்,வித்து,மூலம்

அதமம் - கீழ்மை,கடைத்திரம்

அதர்மம்,அதருமம் - தீவினை,அறமின்மை,மறம்

அதிகப்பிரசங்கம் - மிகுபேச்சு,தன் மேம்பாட்டுரை,மற்றொன்று விரித்தல்

அதிகாரி - அலுவலர்,தலைவன்,முதல்வன்,உடையவன்

அதிகாலம் - விடியற்காலம்

அதிகாலை - விடியற்காலம்,புலரிக்காலை

அதிஷ்டவசம் - நல்வினைப்பயன், நல்வினை வயம்

அநந்தகோடி - எண்ணத்தொலையாதன

அநந்தம் - அளவின்மை,முடிவில்லது

அநாதை - யாருமற்றவன்,தாய்தந்தையிலான்

அநித்தம்,அநித்தியம் - அழிவு,நிலையற்றது,நிலையாமை

அநீதி - முறைகேடு

அநுக்கிரகம் - அருளிரக்கம்,அருள்

அநுசரணை - சார்பு,சார்பு நிலை

அநுசிதம் - பொய்,தகாதது

அனுபவம் - பழக்கம்,வழக்கம்,நுகர்ச்சி

அனுமினம் - ஐயம்,வழியளவை,கருதலளவை

அனுமானப் புரமானம் - கருதலளவை

அநேகர் - பலர்

அந்தகன் - அழிப்போன்,குருடன்

அந்தகாரம் - இருள்,அறியாமை

அந்தக்கரணங்கள் - அகக்கருவிகள்

அந்தஸ்து - நிலைமை,ஒழுங்கு,நிலை

அந்தரம் - வான்வெளி,இடைவெளி,துணையின்மை,காலம்

அந்தி - முடிவு,மாலைக்காலம்

அந்திய கிரியை - இறுதிச் சடங்கு

அந்நியர் - பிறர்,அயலார்

அந்நியோந்நியம் - நெருக்கம்,ஒற்றுமை,ஒருவொருக்கொருவர்

அபயம் - அடைக்கலம்,அச்சமின்மை,புகலிடம்,அஞ்சேலெனல்

அபாயம் - பேரிடர்,அழிவு,கேடு,துன்பம்,இடுக்கண்,இக்கட்டு

அபாரம் - சிறப்பு,அளவின்மை,கேடு

அபிதானம் - பெயர்

அபிநயம் - நடிப்பு,கூத்து,கைமைய்காட்டல்,உள்ளக் குறிகாட்டல்

அபிப்பிராயம் - நோக்கம்,எண்ணம்,உட்கருத்து,உள்ளப்போக்கு

அபிமானம் - பற்று,நேயம்,செருக்கு

அபூர்வம் - அரிது,அருமை,அரிய பொருள்

அபேச்சை -அவா,விருப்பம்

அபேதம் - ஒற்றுமை,வேற்றுமையின்மை,வேறன்மை

அப்பியாசம் -பழக்கம்,பயிற்சி

அப்பிரதட்சிணம் - இடப்புறச் சுற்று, இடப்பக்கச் சுற்று

அமரத்துவம் - அழிவின்மை

அமலன் - துயோன்,கடவுள்,வாலறிவன்

அந்நியர் - பிறர்,அயலார்

அதிகம் - மிகுதி,அளவின்மை

அமிர்தம்,அமிருதம் - இனிமை,அருமருந்து,சாவா மருந்து,அழிவினமை

அமச்ம் - வகை,பங்கு,காலம்,எண்,அன்னப்புள்

அம்பாரம் - குவியல்

அயோக்கியம் - தகுதியினமை,தகாதது

அயோக்க்கியன் - தகுதியற்றவன்,தகவிலான்,கெட்டவன்

அரணியம் - காடு

அருச்சனை,அர்ச்சனை - வழிபாடு, பூ வழிபாடு,மலர் வழிபாடு

அருத்தம்,அர்த்தம் -பொருள்,பாதி

அருவம் - உருவின்மை,அழகின்மை

அர்த்தநாசம் - பேரழிவு,பொருளழிவு

அர்ப்பணம் - உரிமை கொடுத்தல், ஒப்புவித்தல், நீரோடு கொடுத்தல்

அலங்காரம் - அழகு,ஒப்பனை,அணி,புனைவு

அலச்சியம் - பாராமுகம்,பொருட்படுத்தாமை,கருத்தின்மை

அவகீர்த்தி - இழிவு,புகழின்மை

அவக்கியாதி - வசை,இகழ்ச்சி

அவசரம் - விரைவு,பரபரப்பு,சுருக்கு,பதைப்பு

அவசியம் - முதன்மை,கட்டாயம்,இன்றியமையாமை

அவதரித்தல் - பிறத்தல்

அவதாரம் - பிறப்பு,இறங்குகை

அவதானம் - எச்சரிக்கை,ஒழிவு,நினைவு,விரித்தல்,மறப்பின்மை

அவநம்பிக்கை - நம்ப்பிக்கைக்குறை

அவமரியாதை - முறைதவறல்,வணக்கமின்மை,தீயமுறை

அவமானம் - மானக்கேடு,இழிவு,குறைவு,இளிவரவு

அவயவம்,அவையவம் - உறுப்பு

அவலன் - உடற்குறையன்,வீணன்

அவசு,ஹவிசு - தூய உணவு,சோறு,நெய்,

அற்பம்,அல்பம் - சிறுமை,அணு,புன்மை,இழிவு

அனங்கன் - உடலிலான்,கடவுள்,காமவேள்

அனாதி - கடவுள்,தனியன்,பழமை,தொன்மை

அனுதாபம் - இரக்கம்

அனுபவம் - பழக்கம்,வழக்கம்,அழுந்தியறிதல்,பட்டறிவு

அனுமானம் - உய்த்துணர்தல்,கருதல்ளவை,வழியளவை

அனேகம் - பல,எல்லாம்

அன்னதானம் - சோற்றறம்,சோற்றுக்கொடை,உணாக்கொடை

அன்னம் - சோறு,உணவு,அடிசில்

அன்னியன் - பிறர்,அயலார்

அன்னியோன்னியம் - ஒற்றுமை,நெருக்கம்,ஒருவர்க்கொருவர்

ஆகம் -உடல்,மார்பு

ஆகரு(ர்)ஷண சக்தி - இழுப்பாற்றல்,இழுவழி,சேர்வழி

ஆகாசம்,ஆகாயம் - விண்,வெளி,வான்,விசும்பு,வர்னம்

ஆகாய விமானம் - வான ஊர்தி

ஆகாரம் - உணவு,அடிசில்,உடம்பு,வடிவு

ஆக்கியாபித்தல்,ஆஞ்ஞாபித்தல் - கட்டளையிடல்

ஆக்கிரமித்தல் - வலிந்து கவர்தல்,வலிமை காட்டல்

ஆட்சேபம் - மறுமொழி,மறுத்துக்கூறல்,தடைமொழி

ஆங்காரம் - இறுமாப்பு,செருக்கு,தருக்கு

ஆச சங்கை -ஐயம்

ஆசாபாசம் -அன்பு,பற்று,அவா

ஆசாரம் - ஒழுக்கம்,வழக்கம்,நன்னடை,வழிபாடு,துப்புரவு

ஆசியம்,ஹாசியம் - எள்ளல்,நகை,சிரிப்பு

ஆசீர்வாதம் - வாழ்த்துரை

ஆசுவாசம் - இளைப்பாறுகை

ஆசை - விருப்பம்,அவா,பற்று,வேட்கை,விழைவு

ஆச்சரியம் - புதுமை,வியப்பு,இறும்பூது

ஆ(ச்)சிரமம் - இலைக்குடில்,பாழி,முனிவருறயுள்

ஆஸ்திகம் - கடவுளுண்டெனுங்கொள்கை

ஆஸ்பத்திரி - மருத்துவச்சாலை

ஆஞ்ஞாபித்தல் -கட்டளையிடல்

ஆஞ்ஞை -ஆணை,கட்டளை

ஆடம்பரம் - ஆரவாரம்,பகட்டு

ஆட்சேபம்,ஆட்சேபனம் - தடைமொழி,மறுமொழி,எதிர்மொழி,மறுப்பு

ஆதங்கம் - ஆற்றாமை,அச்சம்,நோய்

அந்நியர் - பிறர்,அயலார்

ஆதவ(ப)ன் - பகலோன்,கதிரோன்

ஆதரவு - துணை,உதவி,சார்பு,பற்றுக்கொடு

ஆதி - முதல்,பழமை,அடி,தொடக்கம்,காரணம்,எழுவாய்,கடவுள்

ஆப்தம்,ஆத்தம் - அன்பு,நட்பு

ஆத்தானம்,ஆஸ்தானம் - நகரவாயில்,அறமன்றம்,கொடிமுடிவாயில்

ஆத்திரம்,ஆத்திரியம்,ஆத்திரவம் - உளக்கொதிப்பு,விரைவு,பரபரப்பு

ஆத்துமா,ஆன்மா - உயிர்

ஆந்ந்தம் - இன்பம்

ஆபத்து -இடர்,துன்பம்,இக்கெட்டு,ஊறுபாடு,இடுக்கண்

ஆபரணம் - அணிகலம்,இழை,நகை,அணி,பூண்

ஆபாசம் - அருவருப்பு,சிதைவு,கெடுதல்,பொய்,அளவைப்பொலி

அபூர்வம் - வினைப்பயன்

ஆமோதித்தல் - உடன்படல்,வழிமொழிதல்,மகிழ்தல்

ஆயக்கட்டு(துளுவம்) - மொத்த நஞ்சை நிலம்,களப்புரவு

ஆயத்தம்(இந்தி) - முயற்சி,எத்தனம்,முன்னேற்பாடு

ஆயா(போர்ச்சுக்கீஸ்) - செவலித்தாய்,கைத்தாய்

ஆயாசம்,ஆயாஸம் - களைப்பு,இளைப்பு,சோர்வு,அயர்வு,மயக்கம்

ஆயுசு,ஆயுள் - வாழ்நாள்,ஆண்டு

ஆயுதம் - கருவு,படைக்கலம்,படை,வாள்

ஆரணியம்,ஆரண்ணியம் - காடு

ஆரம்,ஹாரம் - பூமாலை,தொடையல்

ஆரம்பம் - தொடக்கம்

ஆரம்பித்தல் - தொடங்கல்

ஆராதனம் - வணக்கம்,மகிழ்வித்தல்

ஆரோகம்,ஆரோபம்,ஆரோக்கியஸ்நானம் - நல முழுக்கு,நோய் தீர்ந்தபின் முழுகல்

ஆரோக்கியம் - நலம்,நோயின்மை

ஆரோபணம்- நாட்டுதல்,ஏற்றுதல்

ஆரோபித்தல் - ஏற்றுதல்

ஆர்ச்சிதம் - தேட்டம்,தேடிய பொருள்

ஆர்மோனியம் - இசைக்கருவி

ஆர்வம் - அன்பு,விருப்பம்

ஆலகண்டண் - சிவன்,நஞ்சுமிடற்றன்,கறைமிடற்றன்

ஆலகம்- நெல்லிமரம்

ஆலம் - நஞ்சு

ஆலயம் - கோயில்

ஆலாபம்,ஆலாபனம் - அலப்பு,பேச்சு,உரையாடல்

ஆலோசனை - சூழ்தல்,சூழ்ச்சி,ஓர்வு,எண்ணம்,ஆராய்ச்சி

ஆவசியம் - கட்டாயம்,முதன்மை,இன்றியமையாமை

ஆவத்து,ஆபத்து - இக்கெட்டு,இடர்,பொல்லாங்கு

ஆவர்த்தி,ஆவருத்தம்,ஆவிருத்தி - தடவை,வரிசை,சுற்று,வழக்கம்

ஆவாகனம் - அழைத்தல்,உட்புகல்

ஆனந்தபரவசம் - இன்பக்களிப்பு,பேரின்பக்களிப்பு

ஆனந்தம் - இன்பம்,பேரின்பம்

ஆன்மா - உயிர்

இகம் - இவ்வுலகம்,இவ்விடம்,இப்பிறப்பு

இங்கிதம் - இனிமை,அடையாளம்,கருத்து,இடம் பொருள்

இச்சகம் - முகமன்

இச்சை - விருப்பம்,அவா,விழைவு,வேட்கை

இடபம்,ரிஷபம் - எருது,காளை,ஏறு,விடை

இட்டசித்தி - விருப்பப்பேறு

இதம்,ஹிதம் - இனிமை,நன்மை,அன்பு,அறம்

இதயம்,இதையம்,ஹிருதயம் - நெஞ்சம்,உள்ளம்

இதரம் - வேறு,இயல்,அழிவு,பகைமை

இதிகாசம் - பண்டை வரலாறு,பழங்கதை

இந்திர ஜாலம் - இமயவர்கோன்,வானவர் தலைவன்

இந்து - நிலா,திங்கள்,அம்புலி

இமாலயம்,ஹிமாலயம் - பனிமலை

இரகசியம் - மறைபொருள்,மறை,அற்றம்

இராசாபாசம் - அருவருப்பு,ஒழுங்கின்மை

இரசாயனம் - பொருளியைபு

இரட்சகம் - பாதுகாப்பு,மீட்பு

இரட்சை - காப்பு

இரணம்,ரணம் - புண்

இரதம்,ரதம் - தேர்

இரத்தம் - குருதி,செந்நீர்

இரத்தினம்,ரத்தினம் - மாமணி,செம்மணி

இரம்பம்,ரம்பம் - ஈர்வாள்

இராகம்,ராகம் - இசை,பண்,அவா,விருப்பு

இராகு - கருங்கோள்

இராக்கதர் - அரக்கர்

இராசசூயம் - அரசர் வேள்வி

இராசா - அரையன்,மன்னன்,அரசன்

இராச்சியம் - நாடு,அரசியல்

இராத்திரி - இரவு,கங்குல்

இருஷி,இருடி - முனிவன்,தவசி,துறவி

இதய கமலம் - நெஞ்சத்தாமரை

இருது - பருவம்,மகளிர் முதற்பூப்பு

இரேகை - வரி,எழுத்து,கையிறை,நிறை,தொடர்

இலகிரி,லகிரி,லாகிரி - வெறி,மயக்கம்

இலகு,லகு - எளிது,நொய்மை,நுண்மை,ஈரம்,பலா மரம்

இலங்கணம் - பட்டினி

இலஞ்சம் - கைக்கூலி,கையூட்டு,கையுறை

இலட்சணம்,லட்சணம் - அழகு,பார்வை

இலயித்தல் - ஒடுங்குதல்,சேர்ந்தொன்றித்தல்

இலெளகீகம்,இலவுகீகம் - உலகியல்,உலகப்போக்கு

இலாஞ்சனம்,இலாஞ்சனை - புகழ்,அடியாளம்,கறை

இலாபம்,லாபம் - ஊதியம்,மிச்சம்,பேறு

இலீலை,லீலை - விளையாட்டு

யுகம்,உகம் - உலக முடிவு,இரண்டு

உக்கிராணம் -களஞ்சியம்,சரக்கறை

உஷ்ணம் - வெப்பம்,சூடு

உசிதம் - உயர்வு,சிறப்பு,மேன்மை,தகுதி,ஒழுங்கு

உசிதன் - தக்கோன்

உச்சம் - உயர்ச்சி,சிறப்பு

உச்சரித்தல் - சொல்லுதல்,ஒலித்தல்,ஓதல்

உச்சரிப்பு - எழுத்தோசை

உச்சாட்டியம் - பேய கற்றல்,ஒட்டுதல்

உச்சி - மேடு,முகடு

உச்சிக்காலம்,உச்சிச்சமயம் - நண் பகல், நடுப் பகல்

உதயன் - பகலோன்

உதாரணம்,திருட்டாந்தம் - எடுத்துக்காட்டு,சான்று

உத்தமம் - உண்மை,மேன்மை

உத்தரியம்,உத்தரீயம் - மேலாடை

உத்தரவு - கட்டளை

உத்தி,யுத்தி - அறிவு,இணக்கம்,இசைவு,சூழ்ச்சி,சொல்

உத்தேசம்,உத்தேகம் - கருத்து,மதிப்பு,ஏறக்குறைய

உபகரணம் - கொடுத்தல்,உதபிபொருள்கள்,கருவி,துணைக்காரணம்

உபதேசம் - அருண்மொழி,அறிவுரை

உபயம் - உதவி,நன்கொடை,இரண்டு

உபாசநம்,உபாசநை,உபாசனை - வழிபாடு,வணக்கம்

உபாதி,உபாதை - நோய்,துன்பம்,வருத்தம்

உபாத்தியாயன் - கணக்காயன்,ஆசிரியன்,கற்பிப்போன்

உபாயம் - சூழ்ச்சி,நொய்மை,எளிது,சிறிது

உயுக்கம்,உயுத்தம்,யுத்தம் - போர்,தகுதி

உருசி,ருசி - சுவை

உருத்திராக்கம் - சிவமணி,சுக்குமணி

உரூபம்,ரூபம் - உருவம்,வடிவம்

உரொக்கம்,ரொக்கம் - கைப்பணம்,இருப்பு,கையிருப்பு

உரோமம்,ரோமம் - மயிர்,முடி,குஞ்சி

உல்லாசம் - மகிழ்ச்சி,விளையாட்டு,களிப்பு,உள்ளக்களிப்பு

உவதி,யுவதி, - மங்கை,பதினாறாண்டுப் பெண்

ஊகம் - கருதல்,ஓர்தல்,கருத்து,நினைவு

ஊர்ச்சிதம்,ஊர்ஜ்ஜிதம் - உட்பொருளுணர்தல், நிலைப்படுதல்,உறுதி,கருங்குரங்கு

எசமானன்,எஜமான் - தலைவன்,முதல்வன்,முதலாளி

எந்திரம் - பொறி

எமன் - கூற்றுவன்,மறலி

ஏகதேசம் - ஒருபால்,ஒருபுடை,சிறுபான்மை

ஏகம் - ஒன்று,தனிமை

ஏகாந்தம் - தனிமை,ஒரு முடிவு

ஏகோபித்தல் - ஒன்றுபடுதல்

ஏடணை,ஏஷணை - விருப்பம்

ஐது,ஹேது - காரணம்

ஏக்கம்,ஐக்கியம் - ஒற்றுமை

ஐஸ்வர்யம்,ஐச்வரியம் - செல்வம்,பொருள்,திரு

ஐதீகம்,ஐதிகம் - உலகுரை

ஐம் பூதம்,பஞ்ச பூதம் - ஐந்து முதற்பொருள்

ஓமம்,ஹோமம் - வேள்வி

ஒளடதம்,ஒளஷதம்- மருந்து

களோகம் - வான் வட்டம்,வளி மண்டலம்

கடகம் - கைவளை,வளையம்

கடம் - கடம்,யானைக்கதுப்பு

கடாட்சித்தல் - அருளல்

கடாரம் - கொப்பரை,தேங்காய்

கடிகாரம் - நாழிகை வட்டில்,பொழுது காட்டுங்கருவி

கடிகை - நாழிகை,தாழ்க்கோல்

கடினசித்தம் - வன்னெஞ்சம்

கடினம் - வன்மை,கடுமை,வருத்தம்,கொடுமை

கடூரம்,கொடூரம் - கொடுமை

கட்டம்,கஷ்டம் - துன்பம்,வருத்தம்

கணம்,ஹணம் - குழாம்,கூட்டம்,தொகுதி,நொடிப்பொழுது

கணி - கோள் நூல், கோல் நூல் வல்லான்

கணிகை - பொதுமகள்

கணிசம் - அளவு,மேம்பாடு

கணிதம் - கணக்கு

கண்டம் - நிலப்பிரிவு,துண்டு,கட்டி,மிடறு,கழுத்து

கண்திட்டி,கண்திருஷ்டி - கண்ணேறு

கதம்பகம்,கதம்பம் - கூட்டம்,மணப்பொருட் கூட்டு,சேர்ந்தது,இணைத்தது

கதலி - வாழை

கதி - நடை,செலவு,வழி,புகலிடம்,பற்றுக்கோடு,நிலை

கனகம்,கநகம் - பொன்

கனவான்,கநவான் - பெரியோன்,பெருமையாளன்,பெருந்தகை

கனிஷ்டை,கநிஷ்டை - பின்னோள்,தங்கை

கன்னிகை,கந்நிகை - மணமாகாதவள்,இளம்பெண்

கந்மம்,கருமம் - தொழில்,வினை

கபடம்,கவடம்,கபடு - கரவு,படிறு,வஞ்சகம்,மோசம்,சூது,ஒளிப்பு

கபாலம் - தலையோடு,மண்டையோடு

கபோதி - குருடன்

கப்பம் - இறை

கமண்டலம் - நீர்க்குடுவை

கமலம் - தாமரை,நீர்

கம்பீரம் - உயர்தோற்றம்,பெருமை,ஆழம்,செருக்கு

கயம்,ஹயம் - குளம்,ஆழம்,யானை

கரகம் - வட்டில்,நீர்க்குடுவை

கரகோசம்,கரகோஷம் - கைதட்டுதல்

கரணம் - கருவி,ஐம்பொறி

கரம் - கை

கருச் சித்தல் - முழங்கல்,இரைதல்

கருணை - அருள்,இரக்கம்

கர்த்தா,கருத்தா - தலைவன்,வினைமுதல்,ஆக்கியோன்,நூலாசிரியன்,முதல்வன்,கடவுள்

கர்ப்பவதி - சூலி

கர்ப்பாசயம் - கருப்பை

கர்வம் - செருக்கு,இறுமாப்பு

கலாபம்,கலபம் - மயில்,மயிற்றோகை

கலி - வறுமை,துன்பம்

கலியாணம் - மனம்,மன்றல்,பொன்,மகிழ்ச்சி

கவளீகரித்தல்,கபளீகரம்,கபளீகரித்தல் - முற்றிலும் விழுங்குதல்,விழுங்குதல்

கவனம் - கருத்து நோக்கம்,உன்னித்தல்

கவாத்து - படைக்கலப் பயிற்சி,வெட்டி விடுதல்

கவி - செய்யுள்,புலவன்,பாட்டு

கவுளி,கெளளி - பல்லி

களேபரம் - குழப்பம்,உடல்,பிணம்

கற்பம் - ஊழிக்காலம்,நெடுவாழ்க்கை மருந்து

கனம் - சுமை,பளு,பளுவு

காசம் - ஈளை,ஈளைநோய்,இருமல் நோய்

கசாயம்,கஷாயம் - காவி

காஞ்சிரம் - எட்டி மரம்

காட்டம்,காஷ்டம் - விறகு,வெகுளி

காதகன் - கொலையாளி

காயசித்தி - நீடுவாழ்ப் பேறு

காயம் - உடல்,யாக்கை,வான்

காரிய கர்த்தா - வினைமுதல்வன்

காரியதரிசி - அமைச்சன்,செயலாளன்

கலாட்சேபம் - பொழுதுபோக்கல்,நாட்கழித்தல்,வாழ்க்கை

கால நியமம் - காலமுறை,காலக்கடன்,கால்,ஒழுங்கு

கிஸ்தி - திறை,வரி

கிரகணம்,கிராணம் - பற்றுதல்,பிடித்தல்

கிரகஸ்தம் - இல்லற நிலை

கிரகம் - வீடு,கோள்,பற்றுதல்,பிடிப்பு

கிரணம் - ஒளி,கதிர்

கிரந்தம் - நூல்,எழுத்து

கிரமம் - ஒழுங்கு,முறைமை

கிரயம் - விலை

கிராதன் - குறவன்,வேட்டுவன்

கிரி - மலை,பன்றி

கிரிகை - தொழில்,செயல்,வினை,சடங்கு

கிரிமி,கிருமி - உயிரி,பூச்சி,புழு

கிரீடம் - முடி

கிருஷி - பயிர்,உழவு,பயிர் செய்கை

கிலம் - கழிவு,அழிவு,சிறுமை

கிலேசம் - அச்சம்,கவலை,துன்பம்

கீதம் - இசை,பாட்டு,பாடல்,இசைப்பாட்டு

கீர்த்தனம்,கீர்த்தனை - புகழ்ச்சி,புகழ்ப்பா

கீலகம் - ஆணி,பொருத்து

குஞ்சரம் - யானை

குஷ்டம் - தொழு நோய்,பெரு நோய்

குணஷ்டை - தொல்லை,துன்பம்

குதர்க்கம் - அழிவழக்கு

குதூகலம்,குதுகலம் - பெருங்களிப்பு,பெருமகிழ்வு

குபேரன் - பெருஞ்செல்வன்,செல்வக்கடவுள்

குமரி,குமாரி - நங்கை,மணமாகாப்பெண்,புதல்வி,மகள்

கும்பம் - குடம்

குருகடாட்சம் - ஆசிரியனருட்பார்வை

குரோதம் - உட்பகை

குலாலன் - குயவன்

குலிசம் - வேற்படை

குன்மம் - சூலை,வயிற்று வலி

கேதம் - துன்பம்,இடர்,குற்றம்

கேவலம் - சிறுமை,தனிமை

கோகிலம் - குயில்

கோடம்,கோஷம்,கோஷ்டம் - முழக்கம்,பேரோசை

கோஷ்டி - கூட்டம்

கோடி - நூறு நூறாயிரம்

கோதண்டம் - வில்

கோளகை,கோளம் - உருண்டை,வட்டம்

கெளரவம் - மேன்மை,பெருமை

சக - கூட,உடன்

சகசம்,ஸகஸம் - இயற்கை,ஒற்றுமை

சகஸ்ரநாமம் - ஆயிரந்திருமொழி,ஆயிரந்திருப்பெயர்

சகமார்க்கம் - தோழமை நெறி

சகலம் - எல்லாம்

சகவாசம் - கூடவிருத்தல்,உடனுரைதல்,பழக்கம்,சேர்க்கை,நட்பு

சகா - தோழன்,துணை

சகாப்தம் - ஆண்டு,நூறாண்டு

சகாயம் - நயம்,நன்மை,மலிவு,பயன்,உதவி,துணை

சகி,சகீ - தோழி

சகிதம் - உடன்

சகுணம் - குணத்தோடு கூடியது

சகுந்தம் - கழுகு,பறவை

சகுனம் - குறி

சகோதரம் - உடன்பிறப்பு

சகோதரி - உடன்பிறந்தாள்

சக்கரம் - உருளை,வட்டம்

சக்தி - ஆற்றல்,வல்லமை,வலி

சங்கடம்,சங்கட்டம் - இக்கெட்டு,நெருக்கடி,இடர்,கண்மூடுதல்

சங்கிதை - தொகுதி,வரலாறு

சடுதி,சடிதி - விரைவு

சஷ்டியப்த பூர்த்தி - அறுபதாமாண்டு நிறைவு

சண்டப்பிரசண்டம் - மிகு விரைவு

சண்டமாருதம் - பெருங்காற்று,கடியகாற்று,புயற்காற்று

சண்டாளம் - தீமை,புலைத்தன்மை,நம்பிக்கை கேடு

சண்டாளர் - தீவினையாளர்,இழிஞர்

சண்டித்தனம் - முருட்டுத்தன்மை,முரட்டுத்தன்மை

சதகோடி - நூறு கோடி

சதசு - அவை

சதம் - நூறு நிலை

சதானந்தம் - இடையறா வின்பம்

சதி - இறைவி,அழிவு,வஞ்சனை,சூழ்ச்சி

சந்தகம் - எப்பொழுதும்

சந்தானம் - வழி,வழித்தொடர்பு

சந்தித்தல் - எதிர்படுதல்,கூடுதல்

சந்திரலோகம் - திங்கள் உலகு,அம்புலியுலகம்

சந்திரன் - பிறை,கலையோன்,இரவோன்,அலவன்,அல்லோன்

சந்து - முடுக்கு,இயங்கும் உயிர்,தூது,பிளப்பு,பொருத்து

சந்துட்டம்,சந்துஷ்டி,சந்தோஷம் - மகிழ்ச்சி

சந்தேகம் - ஐயம்,ஐயுறவு

சந்தோஷம் - மகிழ்ச்சி,உவகை,களிப்பு

சன்னதி,சந்நதி,சந்நிதானம் - திருமுன்

சந்நியாசம் - துறவு,துறவறம்

சபதம் - ஆணை,உறுதிமொழி,வஞ்சினம்

சபம்,ஜெபம் - உருவேற்றல்

சபலம் - நிறைவேறல்,வெற்றி,நடுக்கம்,ஏக்கம்,இச்சை,அவா

சபா,சபை - அவை,மன்றம்,கழகம்,அரங்கம்

சபித்தல் - தீமொழி கூறல்,சினந்துரைத்தல்

சமஷ்டி - தொகுதி,எல்லாம்

சமதை - ஒப்பு

சமர்த்தன்,சமத்தன் - வல்லான்,வல்லவன்,திறமையாளன்

சமஸ்தானம்,சமத்தானம் - அரசவை,தலை நகர்

சமம் - இணை,ஈடு,மட்டம்,போர்,நடு,ஓர்மை

சமரச தத்துவம் - பொதுநிலையுண்மை

சமரசம் - பொது,வேறுபாடின்மை,ஒற்றுமை

சமர்ப்பணம் - ஒப்பித்தல்,உயர்ந்தோர்க்குக் கொடுத்தல்

சமாதானம் - அமைதி,இணக்கம்,தணிவு,உடன்பாடு,தக்கவிடை

சமாதி - அமைதி,பிணக்குழி,பேசாதிருத்தல்,இறப்பு,மரித்தல்

சமாப்தம்,சமாப்தி - முற்றுப்பெற்றது

சமாராதனை - உளநிறைவு

சமி,ஷமி - பொறு

சமிதை - வேள்வி விறகு,உலர்ந்த குச்சி

சமீபம் - அருகு,அணமை,மருங்கு

சமீன்தார்,ஜமீந்தார் - நிலக்காரன்,பெருநிலக்கிழார்

சமுதாயம் - குமுகம்,கூட்டம்

சமுத்திரம் - கடல்

சமை,ஷமை - பொறுமை

சம்சாரம்,சம்ஸாரம் - குடும்பம்,இல்லாள்,இல்லத்தரசி

சம்பத்து - செல்வம்,பொருள்

சம்பந்தம -உறவு,பற்று,இயைபு,சார்பு,தொடர்பு,பொருத்தம்

சம்பிரதாயம் - தொல்வழக்கு,முன்னோர் முறை,பண்டை முறை

சம்பு ரேட்சணம் - தெளித்தல்

சம்பூரணம் - நிறைவு

சம்மதம் - உடன்பாடு,ஒப்புமை,இயைபு

சம்ரஷணை - பாதுகாப்பு

சயம்,ஜெயம் - வெற்றி

சரணம்,சரண் -அடைக்கலம்,வணக்கம்,கால்,திருவடி

சரணாகதி - புகலடைதல்,அடைக்கலம்

சராசரம்,ஜங்கமா - இயங்கியற் பொருள், நிலையியற் பொருள்

சரிதம்,சரிதை,சரித்திரம் - வரலாறு

சரீரம் - உடல்,யாக்கை,மெய்

சருமம்,சர்மம் - தோல்

சர்ப்பம் - பாம்பு

சர்வகலாசாலை -

பல்கழைக் கழகம்

சலதளம்- அரசமரம்

சலதாரை - நீர்க்கால்,நீரோட்டம்,மதகு

சலதோசம் - நீர்க்கோர்வை,தடுமம், நீர்க்கோவை

சல்லாபம் - உரையாடல்

சவம் - பிணம்

சவுகரியம்,செளக்கியம்,செளகரியம் -நலம்

சவுந்தரியம்,செளந்தரியம்,சவுந்தரம் - அழகு

செளபாக்கியம்,சவுபாக்கியம் - செல்வம்

சற்காரியம் - உற்பொருளினின்று தோன்றும் வினை

சற்குணம் - நல்லியல்பு

சனனம்,ஜனனம்,சனிப்பு,சன்மம் - பிறப்பு

சாகசம் - ஆற்றல்,துணிவு,நெருக்கிடை

சாகரம் - கடல்

சாகுபடி - பயிர் செய்தல்

சாகை,ஜாகை(உருது) - தங்குமிடம்

சாக்கிரதை,ஜாக்கிரதை - விழிப்பு,உன்னிப்பு,எச்சரிக்கை