Tuesday, June 9, 2009

கோவி.கண்ணனும், நையாண்டியும் - சிக்கலின் நான்

முன்னணி பதிவர்களான திரு கோவி.கண்ணன் அவர்களும், திரு நையாண்டி நைனா அவர்களும் இந்த மல்டி லெவல் மார்க்கெட்டிங்கில் என்னையும் மாட்டி விட்டிருக்கிறார்கள். எல்லாம் போட்டு வாங்குறதுக்குன்னு மட்டும் நல்லா தெரியுது.

படிக்கிறவங்க கண்ணுல இரத்தக்கண்ணீர் வந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய இடம் கோவி.கண்ணன் மற்றும் நையாண்டி நைனா என்பது நான் சொல்லி உங்களுக்குத் தெரியவேண்டியதில்லை!

முன்னணி கலைஞரான கலைஞர் மு.கருணாநிதி போன்றவர்கள் திரு மோகன் கந்தசாமி போன்றவர்களுக்கு செவ்வி வழங்கியிருக்கும் போது என்னுடைய செவ்வி பின்னணி செவ்வியாக மட்டுமே பார்க்கப் படும் என்பது திண்ணம்.

1.உங்களுக்கு ஏன் இப்பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?
இந்தக் கேள்வியெல்லாம் சாதனை பண்ணுனவங்க கிட்ட கேக்கணும். சோதனை பண்ணுறவங்களுக்கிட்ட கேட்கக்கூடாது.
என் தந்தை எனக்கு சோதிபாரதி என்று பெயரிட்டார்(அவருடைய தமிழ் பற்று). குழந்தையாக இருக்கும் போது என் தாய் சுப்பிரமணிய பாரதி என்றழைத்து மகிழ்ந்தார். பிற்காலத்தில் நான் ஜோதிபாரதி என்று மாற்றிக் கொண்டேன். உச்சரிப்புப் பிழை பொருட்பிழை ஏற்பட்டுவிடக் கூடாது என்கிற நல்ல நோக்கத்தில்...! மற்றபடி யாரையும் சோதிக்க வேண்டும் என்கிற எண்ணம் எனக்குக் கிடையாது.

2.கடைசியாக அழுதது எப்போது..?
இப்போதெல்லாம் மரத்துப் போன இதயங்களை உடையவர்களைக் கண்டு என் கண்கள் கூட அழ மறுத்துவிடுகின்றன, மனம் மட்டும் அழுகையை நிறுத்தாத போது...!

3.உங்களோட கையெழுத்து உங்களுக்குப் பிடிக்குமா?
கையெழுத்து அழகாக இருக்கிறது என்று எல்லோரும் சொல்கிறார்கள். எழுதும் போது ரசித்து எழுத வேண்டும் என்பது எனது விருப்பம்.(கையெழுத்து நல்லா இருந்தா தலைஎழுத்து நல்லா இருக்காது போன்ற உரையாடல்களை நம்புவதில்லை)

4.பிடித்த மதிய உணவு..
எல்லா சைவ உணவுகளையும் விரும்பி சாப்பிடுவேன். பரங்கிக்காய் மட்டும் பிடிக்காது.அசைவ உணவுகளில், நண்டு வறுவல் பிடிக்கும், இறால், விரா மீன், வாளை மீன் பிடிக்கும். மட்டன் பிடிக்கும், நம் தமிழகத்தில் மட்டும் தான். சிங்கையில்ஆட்டுக்கறி( மட்டன்) சாப்பிட அவ்வளவாக பிடிப்பதில்லை. சிங்கையில் ஒரு குறிப்பிட்ட உணவகங்களில் ஆட்டுக்கறி நன்றாக இருக்கும்.மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மனம் உண்டு என்கிற படியால், சீன உணவில் லக்சா, பிஷ் சூப், பிஷ் பால் நூடுல்ஸ் இன்னபிற உணவு வகைகள் பிடித்தமானது.

5.நீங்கள் வேறுயாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
என்னைப் பார்த்தவுடன் பழக வேண்டும் போல் இருக்கிறது என்று சிலர் சொல்லி இருக்கிறார்கள். அதேபோல் தான் நானும்...! வாங்க பழகலாம் என்னும் பிளாஸ்டிக் பழக்கம் எனக்கு ஒத்து வராது.

6.கடலில் குளிக்கப் பிடிக்குமா? அருவியில் குளிக்கப் பிடிக்குமா?
கடலும் அருவியும் எங்க வீட்டுக்கு பக்கத்துல இல்லை. எனக்குப் பிடித்தாலும் அதனால் எனக்கு பெரிய பலன் ஒன்றும் இல்லை. சுற்றுலா சென்றால் அருவியில் குளிக்கத்தான் பிடிக்கும்.

7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதைக் கவனிப்பீர்கள்..
முகத்தை, கண்ணைப் பார்த்து பேசுவதே முறையாகும். அதுதான் எனக்கும் பிடிக்கும். மண்ணைப் பார்த்து பேசும் பெண்ணானாலும் கண்ணைப் பார்க்கவே விரும்புவேன்.

8.உங்க கிட்ட உங்களுக்கு..பிடித்த விஷயம் என்ன..பிடிக்காத விஷயம் என்ன?
பிடித்தது: ஓரளவுக்கு உண்மையை மட்டுமே பேச வேண்டும் என்று நினைப்பது, முடிந்தவரை அதைக் காப்பாற்றி வருவது.
எழும்பூரில் காத்திருப்பவரிடம், நான் இந்தா வந்துடுவேன் சைதாபேட்டை வந்துட்டேன் என்று தாம்பரத்தில் இருந்து கொண்டு சொல்வது எனக்குப் பிடிக்காது.
பிடிக்காதது: ஒன்பது வேலைகளை ஆற போட்டுவிட்டு பத்தாவது வேலை வந்தவுடன் அதனையும் சேர்த்து சோறு, தூக்கம் எதுவும் பாராது ஒரே மூச்சில் முடிக்க நினைப்பது.

9.உங்க சரிபாதி கிட்ட உங்களுக்கு பிடித்த,பிடிக்காத விஷயம்..
பிடித்த விசயம் : நாம் மறந்த பலவற்றை ஞாபகம் வைத்திருப்பது. நோட்டு புத்தகம் வாங்குற செலவு மிச்சம்.
பிடிக்காத விசயம் : நாம் தெரிவிக்கும் கருத்துகளை பெரும்பாலும் ஆமோதிப்பது.


10.யார் பக்கத்தில் இல்லாம இருக்கறதுக்கு வருந்துகிறீர்கள்?

ஒரு சில மனிதர்களுடன் வாழும் வாய்ப்பு கிட்டியிருப்பதால் அந்த வருத்தம் இதுவரை ஏற்படவில்லை. இருப்பினும் நம் உறவுகள் அனைவரையும் விட்டுவிட்டு சிங்கை போன்ற இயந்திர உலகில் வாழ்வதற்கு யாருக்குத் தான் பிடிக்கும்.

11.இதை எழுதும்போது என்ன வர்ண உடை அணிந்துள்ளீர்கள்?
இந்த கேள்வியை கேட்டவர் என்னை காதலிக்க விரும்புகிறாரா? நான் திராவிட பாரம்பர்யத்தில் வந்த மஞ்சள் சட்டையும் போடவில்லை, அண்ணாயிசத்தை குழைத்த பச்சை கலர் சிங்குஜாவும் இல்லை. கருப்புதான் எனக்கு பிடிச்ச கலரு.

12.என்ன பாட்டு கேட்டுக் கொண்டிருக்கிறீங்க..
பாட்டா? என் பாட்டையே நீங்க கேட்பீங்களா என்று தெரியவில்லை. இதுல நான் கேட்டுக் கொண்டிருக்கும் பாடல் வேறா?

13.வர்ண பேனாக்களாக உங்களை மாற்றினால் என வர்ணமாக உங்களுக்கு ஆசை?
தொடர்ந்து தட்டச்சு மட்டும் செய்வதால், பேனாவாக ஆனால் எனக்கு இரண்டு வேலைதான். இருப்பினும் பேனாக்களிடம் ஏன் நிற வெறி காட்ட வேண்டும் என்பது எனது கேள்வி. தொடர்ந்து நிறம் சம்பந்தப் பட்ட கேள்விகளையே கேட்டுக் கொண்டு வருவதால், கேள்விகளைக் கேட்டவர் நிற வெறியுடையவரோ என சந்தேகிக்கிறேன்.

14.பிடித்த மணம்..
தமிழ் வாசம் வீசும் மணம் மட்டுமல்ல மானமும், மனமும் கூட பிடிக்கும்.

15.நீங்க அழைக்க விரும்பும் பதிவரிடம்..உங்களுக்கு பிடித்த விஷயம்..அவரை அழைக்கக் காரணம்..
"டொன் லீ" சிவா தயாளன் - எமது ஈழத்து உறவு, நகைச்சுவையாக எழுதுவதில் வல்லவர்.
"நிஜமா நல்லவன்" பாரதி - கவிதைகள் எழுதுவார், பின்னூட்டங்களின் பின்னிப் பெடலெடுப்பவர், வாசிப்பு தேடல் உடையவர்.
"பித்தன்" விஜய் - மேன்மையான சீரிய கருத்துகளை கூரிய சொற்களால் கட்டமைப்பார். வாசிப்பை நேசிப்பாய் கொண்டவர்.

16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்கு பிடித்த பதிவு..
இதை அனுப்பிய திரு கோவியார் எண்ணற்ற பதிவுகள் எழுதியுள்ளதால் எதை விடுப்பது எதைத் தொடுப்பது என்று தெரியவில்லை. கோவி கண்ணன் அவர்களின் பெரும்பாலான பதிவுகள் பிடித்தவையே!

இன்னொரு பதிவரான திரு நையாண்டி நைனா அவர்களின் பதிவுகளும் பெயருக்கேற்றாற்போல் நகைச்சுவை ததும்ப இருக்கிறது. பெரும்பாலான இவரது பதிவுகளும் எனக்கு பிடித்தவையே!

17.பிடித்த விளையாட்டு...
கிரிக்கெட் என்னும் பணக்கார விளையாட்டு அல்ல.

18) கண்ணாடி அணிபவரா?
ஏன் வயது 40 ஆகிவிட்டதா என்று தெரிந்து கொள்ள முயற்சி செய்கிறீர்களா? இல்லை.

19).எப்படிப்பட்ட திரைப்படம் பிடிக்கும்...

இயல்பான, நகைச்சுவைகளை உள்ளடக்கிய படமும் பிடிக்கும். பிரமாண்டமும் பிடிக்கும். ஏன் உங்களுக்கு திரைப்பட தயாரிப்பாளர் ஆக வேண்டும் என்கிற ஆசையா? அதற்கான கருத்துக் கணிப்பு போல் தெரிகிறதே, அதான் கேட்டேன்.

20.கடைசியாக பார்த்த படம்..
இப்போது ஏதும் பார்க்க வில்லை. சென்ற ஆண்டு பார்த்தது சேரனின் மாயக்கண்ணாடி. நீங்க படம் எடுக்கனும்னு நினைத்தால் சேரனை வைத்து எடுங்கள் அல்லது சீமானை வைத்து எடுங்கள்.

21.பிடித்த பருவ காலம்...
தை - அதுதான் தமிழனின் திருநாள் தொடங்கும் மாதம், அறுவடை செய்து அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கும் காலம்..

22.இப்போது படித்துக் கொண்டிருக்கும் புத்தகம்?
தமிழர் அடிமையானது ஏன்? எவ்வாறு? - க.ப.அறவாணன் எழுதியது பலருக்கு பயன் படாத புத்தகம், எனக்காவது பயன்படுகிறதா என்று பார்ப்போம் என்ற ஒரே நம்பிக்கையோடு படிக்கிறேன்.

23.உங்க டெஸ்க் டாப்பில் இருக்கும் படத்தை எத்தனை நாளைக்கு ஒரு முறை மாற்றுவீர்கள்?
கணக்கு பண்ணி மாற்றுகிற நிரந்தர வேலையெல்லாம் கிடையாது. பெரும்பாலும் குழந்தைகளின் படங்களை போடுவது உண்டு. தற்போது போட்டிருப்பது என் மகன் நரேன் அவர்கள் தமிழ் புத்தாண்டு நிகழ்ச்சியில் பாரதியார் வேடமிட்ட படம்.

24.உங்களுக்கு பிடித்த சத்தம்...பிடிக்காத சத்தம்...
பிடித்த சத்தம் : அழகின் சிரிப்பு
பிடிக்காதது: அவசர வேலையாக இருக்கும் போது தெரிந்தே நம்மை அழைக்கும் சத்தம்.

25.வீட்டை விட்டு சென்ற அதிகபட்ச தொலைவு ?
சிங்கப்பூர் - மலேசியா

26.உங்களுக்கு ஏதேனும் தனித்திறமை இருக்கிறதா?
தனித் திறமைகள் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. இனிமேல் இருப்பதாக யாரவது சொன்னாலும் ஆச்சர்யப் படுவதற்கில்லை.

27.உங்களால் ஏற்றுக் கொள்ளமுடியா ஒரு விஷயம்..
ஓரிடத்தில் மக்கள் படுகொலை செய்யப்பட்டால் அது இயற்கை என்று கூறிவிட்டு, இன்னொரு இடத்தில் வெறும் தாக்குதலுக்கு நீலிக் கண்ணீர் வடிக்கும் தன்மையும் போக்கும்.

28.உங்களுக்குள் இருக்கும் சாத்தான்..
சாத்தான் மீதெல்லாம் நம்பிக்கை இல்லாததால், நம்பிக்கை உள்ளவர்களிடம் இந்த கேள்வியை கேட்டிருந்தால் நலம்.

29.உங்களுக்கு பிடித்த சுற்றுலாத்தலம்..
நான் போன இடங்களில் குற்றாலம் பிடித்தது.

30.எப்படி இருக்கணும்னு ஆசை..
எப்படி இருந்தவன் இப்படி ஆயிட்டேன் என்று சொல்லாத நிலை வேண்டும் என்று நினைக்கிறேன். போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து.

31.கணவர்/மனைவி இல்லாம செய்ய விரும்பும் காரியம்...
சமைப்பது - அது இல்லை என்றால் வேலைக்கு ஆகாது.
அவர்கள் இருக்கும் போது சமைக்க விரும்பினால் அவர்கள் சமைக்க விடுவதில்லை. நாம் சமைப்பது பிடிக்கவில்லை என்று சொல்வதுமில்லை. நன்றாக இருக்கிறது என்று மட்டும் கிளி பிள்ளை மாதிரி சொல்லிக் கொண்டிருப்பார்கள்.

32.வாழ்வு பற்றி ஒருவரி சொல்லுங்க..
காஞ்சி காம கோடி பீடாதிபதி போன்ற ஆட்கள் சொன்னா நம்புவீங்க. நான் சொன்னா நம்புவியளா? இருந்தாலும் சொல்றேன்,
கட்டுமரம்! வாழ்க்கை என்பது ஓடம் என்று சொல்வார்கள். நம்பாதீர்கள்.








31 கருத்துக்கள்:

சி தயாளன் said...

நன்றி...:-)

சி தயாளன் said...

//என் தந்தை எனக்கு சோதிபாரதி என்று பெயரிட்டார்

பிற்காலத்தில் நான் ஜோதிபாரதி என்று மாற்றிக் கொண்டேன்
//

அப்படியா...:-)))

சி தயாளன் said...

//சிங்கையில்ஆட்டுக்கறி( மட்டன்) சாப்பிட அவ்வளவாக பிடிப்பதில்லை.
//

நான் இலங்கையில் இருக்கும் வரை ஆடு சாப்பிட்டதே இல்லை..யாழ்ப்பாணத்தில் ஆட்டுகறி பிரபலம்..ஆனால் ஆடு பாவம் என்று சாப்பிடுவதில்லை :-(((

சிங்கை வந்து தான் மட்டன் ஒரு பிடி பிடிக்கிறன் :-)))

கோவி.கண்ணன் said...

கலக்கலான பதில்கள் வெளிச்சபதிவரே !

வால்பையன் said...

நீங்களுமா?

இது காமெடியா தெரியலையா!

நையாண்டி நைனா said...

நன்றி.
அனைத்தும் நல்லா இருந்தது.

தமிழ் said...

/படிக்கிறவங்க கண்ணுல இரத்தக்கண்ணீர் வந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய இடம் கோவி.கண்ணன் மற்றும் நையாண்டி நைனா என்பது நான் சொல்லி உங்களுக்குத் தெரியவேண்டியதில்லை!//

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

தமிழ் said...

/என் தந்தை எனக்கு சோதிபாரதி என்று பெயரிட்டார்(அவருடைய தமிழ் பற்று). குழந்தையாக இருக்கும் போது என் தாய் சுப்பிரமணிய பாரதி என்றழைத்து மகிழ்ந்தார். பிற்காலத்தில் நான் ஜோதிபாரதி என்று மாற்றிக் கொண்டேன். உச்சரிப்புப் பிழை பொருட்பிழை ஏற்பட்டுவிடக் கூடாது என்கிற நல்ல நோக்கத்தில்...! மற்றபடி யாரையும் சோதிக்க வேண்டும் என்கிற எண்ணம் எனக்குக் கிடையாது./

:))))))))))))))

தமிழ் said...

/மண்ணைப் பார்த்து பேசும் பெண்ணானாலும் கண்ணைப் பார்க்கவே விரும்புவேன்.
/

வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

தமிழ் said...

/ஒரு சில மனிதர்களுடன் வாழும் வாய்ப்பு கிட்டியிருப்பதால் அந்த வருத்தம் இதுவரை ஏற்படவில்லை. இருப்பினும் நம் உறவுகள் அனைவரையும் விட்டுவிட்டு சிங்கை போன்ற இயந்திர உலகில் வாழ்வதற்கு யாருக்குத் தான் பிடிக்கும். /

சரியாகச் சொன்னீர்கள்

தமிழ் said...

/18) கண்ணாடி அணிபவரா?
ஏன் வயது 40 ஆகிவிட்டதா என்று தெரிந்து கொள்ள முயற்சி செய்கிறீர்களா? இல்லை. /

உண்மையாக இல்லீங்க

தமிழ் said...

/தனித் திறமைகள் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. இனிமேல் இருப்பதாக யாரவது சொன்னாலும் ஆச்சர்யப் படுவதற்கில்லை./

இது தான் வேண்டாம் என்பது

தன்னடக்கம்

தமிழ் said...

/30.எப்படி இருக்கணும்னு ஆசை..
எப்படி இருந்தவன் இப்படி ஆயிட்டேன் என்று சொல்லாத நிலை வேண்டும் என்று நினைக்கிறேன். போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து./

அருமை

தமிழ் said...

/32.வாழ்வு பற்றி ஒருவரி சொல்லுங்க..
காஞ்சி காம கோடி பீடாதிபதி போன்ற ஆட்கள் சொன்னா நம்புவீங்க. நான் சொன்னா நம்புவியளா? இருந்தாலும் சொல்றேன்,
கட்டுமரம்! வாழ்க்கை என்பது ஓடம் என்று சொல்வார்கள். நம்பாதீர்கள்./

நச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்

வெற்றி-[க்]-கதிரவன் said...

அணைத்து பதிலிலும் சோதியின் தனித்தன்மை தெரிகின்றது.

***

தொடர் பதிவுக்கு அழைத்தமைக்கு நன்றி.. ஏற்கனவே எழுதிட்டேன்

http://paarvaigalpalavitham.blogspot.com/2009/06/blog-post.html

T.V.ராதாகிருஷ்ணன் said...

பதில்கள் நச்..

வேடிக்கை மனிதன் said...

ரொம்ப யோசிச்சு பதில் சொன்ன மாதிரி தெரியுது.
எல்லா பதில்களும் சிறப்பாக இருந்தது

ஆ.ஞானசேகரன் said...

பதில்கள் கலக்கலாதான் இருக்கு

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//’டொன்’ லீ said...
//என் தந்தை எனக்கு சோதிபாரதி என்று பெயரிட்டார்

பிற்காலத்தில் நான் ஜோதிபாரதி என்று மாற்றிக் கொண்டேன்
//

அப்படியா...:-)))//

நன்றி டொன் லீ!

அப்படியே தான்!

//’டொன்’ லீ said...
//என் தந்தை எனக்கு சோதிபாரதி என்று பெயரிட்டார்

பிற்காலத்தில் நான் ஜோதிபாரதி என்று மாற்றிக் கொண்டேன்
//

அப்படியா...:-)))//

நன்றி டொன் லீ!

அப்படியே தான்!

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//’டொன்’ லீ said...
//சிங்கையில்ஆட்டுக்கறி( மட்டன்) சாப்பிட அவ்வளவாக பிடிப்பதில்லை.
//

நான் இலங்கையில் இருக்கும் வரை ஆடு சாப்பிட்டதே இல்லை..யாழ்ப்பாணத்தில் ஆட்டுகறி பிரபலம்..ஆனால் ஆடு பாவம் என்று சாப்பிடுவதில்லை :-(((

சிங்கை வந்து தான் மட்டன் ஒரு பிடி பிடிக்கிறன் :-)))//

சகுந்தலாவுலையும், காந்தியிலையும் கொஞ்சம் வாய்க்கு எனமா இருக்கும்.

//’டொன்’ லீ said...
//சிங்கையில்ஆட்டுக்கறி( மட்டன்) சாப்பிட அவ்வளவாக பிடிப்பதில்லை.
//

நான் இலங்கையில் இருக்கும் வரை ஆடு சாப்பிட்டதே இல்லை..யாழ்ப்பாணத்தில் ஆட்டுகறி பிரபலம்..ஆனால் ஆடு பாவம் என்று சாப்பிடுவதில்லை :-(((

சிங்கை வந்து தான் மட்டன் ஒரு பிடி பிடிக்கிறன் :-)))//

சகுந்தலாவுலையும், காந்தியிலையும் கொஞ்சம் வாய்க்கு எனமா இருக்கும்.

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

கோவி.கண்ணன் said...
கலக்கலான பதில்கள் வெளிச்சபதிவரே !//


நன்றி மூத்த பதிவரே!

கோவி.கண்ணன் said...
கலக்கலான பதில்கள் வெளிச்சபதிவரே !//


நன்றி மூத்த பதிவரே!

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

வால்பையன் said...
நீங்களுமா?

இது காமெடியா தெரியலையா!//


காமெடியா தெரிஞ்சா நல்லதுதானே வாலு!
சீரியஸா தெரிஞ்சா கோவியாரையும்,நையாண்டியையும் கவனிச்சு பின்னர் விட்டுவிடுங்கள்.
பாவம் அவர்கள் என் நண்பர்கள்!

வால்பையன் said...
நீங்களுமா?

இது காமெடியா தெரியலையா!//


காமெடியா தெரிஞ்சா நல்லதுதானே வாலு!
சீரியஸா தெரிஞ்சா கோவியாரையும்,நையாண்டியையும் கவனிச்சு பின்னர் விட்டுவிடுங்கள்.
பாவம் அவர்கள் என் நண்பர்கள்!

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//நையாண்டி நைனா said...
நன்றி.
அனைத்தும் நல்லா இருந்தது.//


எல்லாத்துக்கும் நீங்க தான் காரணம் நையாண்டி ஐயா!

//நையாண்டி நைனா said...
நன்றி.
அனைத்தும் நல்லா இருந்தது.//


எல்லாத்துக்கும் நீங்க தான் காரணம் நையாண்டி ஐயா!

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

திகழ்மிளிர் said...
/படிக்கிறவங்க கண்ணுல இரத்தக்கண்ணீர் வந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய இடம் கோவி.கண்ணன் மற்றும் நையாண்டி நைனா என்பது நான் சொல்லி உங்களுக்குத் தெரியவேண்டியதில்லை!//

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்////



திகழ்! ம்ம்ம்ம்ம்!!

திகழ்மிளிர் said...
/படிக்கிறவங்க கண்ணுல இரத்தக்கண்ணீர் வந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய இடம் கோவி.கண்ணன் மற்றும் நையாண்டி நைனா என்பது நான் சொல்லி உங்களுக்குத் தெரியவேண்டியதில்லை!//

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்////



திகழ்! ம்ம்ம்ம்ம்!!

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

திகழ்மிளிர் said...
/32.வாழ்வு பற்றி ஒருவரி சொல்லுங்க..
காஞ்சி காம கோடி பீடாதிபதி போன்ற ஆட்கள் சொன்னா நம்புவீங்க. நான் சொன்னா நம்புவியளா? இருந்தாலும் சொல்றேன்,
கட்டுமரம்! வாழ்க்கை என்பது ஓடம் என்று சொல்வார்கள். நம்பாதீர்கள்./

நச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்//


கருத்துகளுக்கு நன்றி திகழ்!

திகழ்மிளிர் said...
/32.வாழ்வு பற்றி ஒருவரி சொல்லுங்க..
காஞ்சி காம கோடி பீடாதிபதி போன்ற ஆட்கள் சொன்னா நம்புவீங்க. நான் சொன்னா நம்புவியளா? இருந்தாலும் சொல்றேன்,
கட்டுமரம்! வாழ்க்கை என்பது ஓடம் என்று சொல்வார்கள். நம்பாதீர்கள்./

நச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்//


கருத்துகளுக்கு நன்றி திகழ்!

நாடோடி இலக்கியன் said...

எல்லா பதில்களுமே அருமை.

சில பதில்கள் நகைச்சுவையாகச் சொல்லப் பட்டிருந்தாலும் அதன் பின்னால் இருக்கும் சிந்திக்க வேண்டிய விஷயங்கள் பாராட்டத்தக்கது.

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//பித்தன் said...
அணைத்து பதிலிலும் சோதியின் தனித்தன்மை தெரிகின்றது.

***

தொடர் பதிவுக்கு அழைத்தமைக்கு நன்றி.. ஏற்கனவே எழுதிட்டேன்

http://paarvaigalpalavitham.blogspot.com/2009/06/blog-post.html//

நன்றி விஜய்! உங்கள் பதிவும் அருமையாக வந்திருக்கிறது!

//பித்தன் said...
அணைத்து பதிலிலும் சோதியின் தனித்தன்மை தெரிகின்றது.

***

தொடர் பதிவுக்கு அழைத்தமைக்கு நன்றி.. ஏற்கனவே எழுதிட்டேன்

http://paarvaigalpalavitham.blogspot.com/2009/06/blog-post.html//

நன்றி விஜய்! உங்கள் பதிவும் அருமையாக வந்திருக்கிறது!

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

T.V.Radhakrishnan said...
பதில்கள் நச்..//


நன்றி டி.வி.ஆர் ஐயா!

T.V.Radhakrishnan said...
பதில்கள் நச்..//


நன்றி டி.வி.ஆர் ஐயா!

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//வேடிக்கை மனிதன் said...
ரொம்ப யோசிச்சு பதில் சொன்ன மாதிரி தெரியுது.
எல்லா பதில்களும் சிறப்பாக இருந்தது//


ரொம்பவெல்லாம் யோசிக்கலை!
யோசிக்கிற அளவுக்கெல்லாம் பெரிய அறிவு ஜீவி அல்ல!
கேட்டதுக்கு பதில் சொன்னோம் அவ்வளவுதான்!
கருத்துக்கு நன்றி!

//வேடிக்கை மனிதன் said...
ரொம்ப யோசிச்சு பதில் சொன்ன மாதிரி தெரியுது.
எல்லா பதில்களும் சிறப்பாக இருந்தது//


ரொம்பவெல்லாம் யோசிக்கலை!
யோசிக்கிற அளவுக்கெல்லாம் பெரிய அறிவு ஜீவி அல்ல!
கேட்டதுக்கு பதில் சொன்னோம் அவ்வளவுதான்!
கருத்துக்கு நன்றி!

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

ஆ.ஞானசேகரன் said...
பதில்கள் கலக்கலாதான் இருக்கு//


நன்றி ஞானம்!

ஆ.ஞானசேகரன் said...
பதில்கள் கலக்கலாதான் இருக்கு//


நன்றி ஞானம்!

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

நாடோடி இலக்கியன் said...
எல்லா பதில்களுமே அருமை.

சில பதில்கள் நகைச்சுவையாகச் சொல்லப் பட்டிருந்தாலும் அதன் பின்னால் இருக்கும் சிந்திக்க வேண்டிய விஷயங்கள் பாராட்டத்தக்கது.//

கருத்துக்கு நன்றி நாடோடி இலக்கியன்!

நாடோடி இலக்கியன் said...
எல்லா பதில்களுமே அருமை.

சில பதில்கள் நகைச்சுவையாகச் சொல்லப் பட்டிருந்தாலும் அதன் பின்னால் இருக்கும் சிந்திக்க வேண்டிய விஷயங்கள் பாராட்டத்தக்கது.//

கருத்துக்கு நன்றி நாடோடி இலக்கியன்!

வட மொழி - தமிழ் மொழி

பின் நவீனத்துவம் - பின் புதுமையியல்

அகங்காரம் - செருக்கு,இறுமாப்பு,முனைப்பு,யானெனல்

அகடவிகடம் - குறும்பு,மாற்று,மாறுபட்டது

அகதி - அறவை,வறியன்,எதிலி,புகலிலான்,யாருமற்றவன்,ஏழை

அகந்தை - இறுமாப்பு,செருக்கு

அகம் - உள்ளே,உயிர்,நான்,மனம்,மனநிலை,எண்ணம்

அகம்பாவம் - தற்பெருமை,செருக்கு

அகராதி - அகரமுதலி,அகரவரிசை,அகரநிரல்,அகரமுதல்

அகிம்சை - இன்னா செய்யாமை,கொல்லாமை

அஹிம்சை - இன்னா செய்யாமை,கொல்லாமை

அகோரம் - அழகின்மை,கொடுமை,நடுக்கம்

அக்கணம் - அப்பொழுது,அந்நொடி

அக்கரம் - எழுத்து

அட்சரம் - அழிவில்லாதது

அக்கியாணி - அறிவிலான்

அஞ்ஞானி - புல்லறிவாளன்

அக்கிரகாரம் - பார்ப்பனச் சேரி

அக்கிரமம் - ஒழுன்கின்மை,முறைகேடு

அக்கிராசனம் - முதலிருக்கை,தலைமை

அக்கினி,அக்நி - நெருப்பு,தீ,அனல்,எரி

அங்கப்பிரதட்சணம் - உடல் வலமுருளல், வலம் புரளல்

அங்கீகாரம்,அங்கீகரணம் - உடன்,செப்பு

அங்குலம் - விறக்கட்டை,விரலளவு

அசத்தை,அசத்தியம் - பொய்

அசரம்- அசைவில்லாதது,இயங்காதது,நிலையியல்

அசரீரி - வானொலி,உருவற்றது

அசித்து - பயனின்மை

அஜீரணம்,அசீரணம்- செரியாமை,பசியின்மை,அழிவுபடாமை

அசுத்தம் - அழுக்கு,துப்புரவின்மை,தூய்மையின்மை

அசேதனம் - அறிவில்லாதது,அறிவிலி,அறிவில் பொருள்

அசெளரியம் - நலமின்மை,இடைஞ்சல்

அஞ்சலி - கும்பிடல்,வணக்கம்

அஞ்சனம் - மை,கறுப்பு,இருள்

அஞ்சிட்டம் - கதிரவன்

அஞ்ஞாதம் - மறைவு,அறியப்படாதது

அஞ்ஞாத வாசஸ்தலம் - மறைந்துறைவிடம்

அட்சயப் பாத்திரம் - திருவோடு,ஏற்போடு,அள்ள அள்ளக் குறையாதது

அட்டதிக்கு பாலகர் - எண்புறக்காவலர்

அட்டபந்தனம் - எண்புறக்கட்டு

அண்டம் - முட்டை,உலகம்,வித்து,மூலம்

அதமம் - கீழ்மை,கடைத்திரம்

அதர்மம்,அதருமம் - தீவினை,அறமின்மை,மறம்

அதிகப்பிரசங்கம் - மிகுபேச்சு,தன் மேம்பாட்டுரை,மற்றொன்று விரித்தல்

அதிகாரி - அலுவலர்,தலைவன்,முதல்வன்,உடையவன்

அதிகாலம் - விடியற்காலம்

அதிகாலை - விடியற்காலம்,புலரிக்காலை

அதிஷ்டவசம் - நல்வினைப்பயன், நல்வினை வயம்

அநந்தகோடி - எண்ணத்தொலையாதன

அநந்தம் - அளவின்மை,முடிவில்லது

அநாதை - யாருமற்றவன்,தாய்தந்தையிலான்

அநித்தம்,அநித்தியம் - அழிவு,நிலையற்றது,நிலையாமை

அநீதி - முறைகேடு

அநுக்கிரகம் - அருளிரக்கம்,அருள்

அநுசரணை - சார்பு,சார்பு நிலை

அநுசிதம் - பொய்,தகாதது

அனுபவம் - பழக்கம்,வழக்கம்,நுகர்ச்சி

அனுமினம் - ஐயம்,வழியளவை,கருதலளவை

அனுமானப் புரமானம் - கருதலளவை

அநேகர் - பலர்

அந்தகன் - அழிப்போன்,குருடன்

அந்தகாரம் - இருள்,அறியாமை

அந்தக்கரணங்கள் - அகக்கருவிகள்

அந்தஸ்து - நிலைமை,ஒழுங்கு,நிலை

அந்தரம் - வான்வெளி,இடைவெளி,துணையின்மை,காலம்

அந்தி - முடிவு,மாலைக்காலம்

அந்திய கிரியை - இறுதிச் சடங்கு

அந்நியர் - பிறர்,அயலார்

அந்நியோந்நியம் - நெருக்கம்,ஒற்றுமை,ஒருவொருக்கொருவர்

அபயம் - அடைக்கலம்,அச்சமின்மை,புகலிடம்,அஞ்சேலெனல்

அபாயம் - பேரிடர்,அழிவு,கேடு,துன்பம்,இடுக்கண்,இக்கட்டு

அபாரம் - சிறப்பு,அளவின்மை,கேடு

அபிதானம் - பெயர்

அபிநயம் - நடிப்பு,கூத்து,கைமைய்காட்டல்,உள்ளக் குறிகாட்டல்

அபிப்பிராயம் - நோக்கம்,எண்ணம்,உட்கருத்து,உள்ளப்போக்கு

அபிமானம் - பற்று,நேயம்,செருக்கு

அபூர்வம் - அரிது,அருமை,அரிய பொருள்

அபேச்சை -அவா,விருப்பம்

அபேதம் - ஒற்றுமை,வேற்றுமையின்மை,வேறன்மை

அப்பியாசம் -பழக்கம்,பயிற்சி

அப்பிரதட்சிணம் - இடப்புறச் சுற்று, இடப்பக்கச் சுற்று

அமரத்துவம் - அழிவின்மை

அமலன் - துயோன்,கடவுள்,வாலறிவன்

அந்நியர் - பிறர்,அயலார்

அதிகம் - மிகுதி,அளவின்மை

அமிர்தம்,அமிருதம் - இனிமை,அருமருந்து,சாவா மருந்து,அழிவினமை

அமச்ம் - வகை,பங்கு,காலம்,எண்,அன்னப்புள்

அம்பாரம் - குவியல்

அயோக்கியம் - தகுதியினமை,தகாதது

அயோக்க்கியன் - தகுதியற்றவன்,தகவிலான்,கெட்டவன்

அரணியம் - காடு

அருச்சனை,அர்ச்சனை - வழிபாடு, பூ வழிபாடு,மலர் வழிபாடு

அருத்தம்,அர்த்தம் -பொருள்,பாதி

அருவம் - உருவின்மை,அழகின்மை

அர்த்தநாசம் - பேரழிவு,பொருளழிவு

அர்ப்பணம் - உரிமை கொடுத்தல், ஒப்புவித்தல், நீரோடு கொடுத்தல்

அலங்காரம் - அழகு,ஒப்பனை,அணி,புனைவு

அலச்சியம் - பாராமுகம்,பொருட்படுத்தாமை,கருத்தின்மை

அவகீர்த்தி - இழிவு,புகழின்மை

அவக்கியாதி - வசை,இகழ்ச்சி

அவசரம் - விரைவு,பரபரப்பு,சுருக்கு,பதைப்பு

அவசியம் - முதன்மை,கட்டாயம்,இன்றியமையாமை

அவதரித்தல் - பிறத்தல்

அவதாரம் - பிறப்பு,இறங்குகை

அவதானம் - எச்சரிக்கை,ஒழிவு,நினைவு,விரித்தல்,மறப்பின்மை

அவநம்பிக்கை - நம்ப்பிக்கைக்குறை

அவமரியாதை - முறைதவறல்,வணக்கமின்மை,தீயமுறை

அவமானம் - மானக்கேடு,இழிவு,குறைவு,இளிவரவு

அவயவம்,அவையவம் - உறுப்பு

அவலன் - உடற்குறையன்,வீணன்

அவசு,ஹவிசு - தூய உணவு,சோறு,நெய்,

அற்பம்,அல்பம் - சிறுமை,அணு,புன்மை,இழிவு

அனங்கன் - உடலிலான்,கடவுள்,காமவேள்

அனாதி - கடவுள்,தனியன்,பழமை,தொன்மை

அனுதாபம் - இரக்கம்

அனுபவம் - பழக்கம்,வழக்கம்,அழுந்தியறிதல்,பட்டறிவு

அனுமானம் - உய்த்துணர்தல்,கருதல்ளவை,வழியளவை

அனேகம் - பல,எல்லாம்

அன்னதானம் - சோற்றறம்,சோற்றுக்கொடை,உணாக்கொடை

அன்னம் - சோறு,உணவு,அடிசில்

அன்னியன் - பிறர்,அயலார்

அன்னியோன்னியம் - ஒற்றுமை,நெருக்கம்,ஒருவர்க்கொருவர்

ஆகம் -உடல்,மார்பு

ஆகரு(ர்)ஷண சக்தி - இழுப்பாற்றல்,இழுவழி,சேர்வழி

ஆகாசம்,ஆகாயம் - விண்,வெளி,வான்,விசும்பு,வர்னம்

ஆகாய விமானம் - வான ஊர்தி

ஆகாரம் - உணவு,அடிசில்,உடம்பு,வடிவு

ஆக்கியாபித்தல்,ஆஞ்ஞாபித்தல் - கட்டளையிடல்

ஆக்கிரமித்தல் - வலிந்து கவர்தல்,வலிமை காட்டல்

ஆட்சேபம் - மறுமொழி,மறுத்துக்கூறல்,தடைமொழி

ஆங்காரம் - இறுமாப்பு,செருக்கு,தருக்கு

ஆச சங்கை -ஐயம்

ஆசாபாசம் -அன்பு,பற்று,அவா

ஆசாரம் - ஒழுக்கம்,வழக்கம்,நன்னடை,வழிபாடு,துப்புரவு

ஆசியம்,ஹாசியம் - எள்ளல்,நகை,சிரிப்பு

ஆசீர்வாதம் - வாழ்த்துரை

ஆசுவாசம் - இளைப்பாறுகை

ஆசை - விருப்பம்,அவா,பற்று,வேட்கை,விழைவு

ஆச்சரியம் - புதுமை,வியப்பு,இறும்பூது

ஆ(ச்)சிரமம் - இலைக்குடில்,பாழி,முனிவருறயுள்

ஆஸ்திகம் - கடவுளுண்டெனுங்கொள்கை

ஆஸ்பத்திரி - மருத்துவச்சாலை

ஆஞ்ஞாபித்தல் -கட்டளையிடல்

ஆஞ்ஞை -ஆணை,கட்டளை

ஆடம்பரம் - ஆரவாரம்,பகட்டு

ஆட்சேபம்,ஆட்சேபனம் - தடைமொழி,மறுமொழி,எதிர்மொழி,மறுப்பு

ஆதங்கம் - ஆற்றாமை,அச்சம்,நோய்

அந்நியர் - பிறர்,அயலார்

ஆதவ(ப)ன் - பகலோன்,கதிரோன்

ஆதரவு - துணை,உதவி,சார்பு,பற்றுக்கொடு

ஆதி - முதல்,பழமை,அடி,தொடக்கம்,காரணம்,எழுவாய்,கடவுள்

ஆப்தம்,ஆத்தம் - அன்பு,நட்பு

ஆத்தானம்,ஆஸ்தானம் - நகரவாயில்,அறமன்றம்,கொடிமுடிவாயில்

ஆத்திரம்,ஆத்திரியம்,ஆத்திரவம் - உளக்கொதிப்பு,விரைவு,பரபரப்பு

ஆத்துமா,ஆன்மா - உயிர்

ஆந்ந்தம் - இன்பம்

ஆபத்து -இடர்,துன்பம்,இக்கெட்டு,ஊறுபாடு,இடுக்கண்

ஆபரணம் - அணிகலம்,இழை,நகை,அணி,பூண்

ஆபாசம் - அருவருப்பு,சிதைவு,கெடுதல்,பொய்,அளவைப்பொலி

அபூர்வம் - வினைப்பயன்

ஆமோதித்தல் - உடன்படல்,வழிமொழிதல்,மகிழ்தல்

ஆயக்கட்டு(துளுவம்) - மொத்த நஞ்சை நிலம்,களப்புரவு

ஆயத்தம்(இந்தி) - முயற்சி,எத்தனம்,முன்னேற்பாடு

ஆயா(போர்ச்சுக்கீஸ்) - செவலித்தாய்,கைத்தாய்

ஆயாசம்,ஆயாஸம் - களைப்பு,இளைப்பு,சோர்வு,அயர்வு,மயக்கம்

ஆயுசு,ஆயுள் - வாழ்நாள்,ஆண்டு

ஆயுதம் - கருவு,படைக்கலம்,படை,வாள்

ஆரணியம்,ஆரண்ணியம் - காடு

ஆரம்,ஹாரம் - பூமாலை,தொடையல்

ஆரம்பம் - தொடக்கம்

ஆரம்பித்தல் - தொடங்கல்

ஆராதனம் - வணக்கம்,மகிழ்வித்தல்

ஆரோகம்,ஆரோபம்,ஆரோக்கியஸ்நானம் - நல முழுக்கு,நோய் தீர்ந்தபின் முழுகல்

ஆரோக்கியம் - நலம்,நோயின்மை

ஆரோபணம்- நாட்டுதல்,ஏற்றுதல்

ஆரோபித்தல் - ஏற்றுதல்

ஆர்ச்சிதம் - தேட்டம்,தேடிய பொருள்

ஆர்மோனியம் - இசைக்கருவி

ஆர்வம் - அன்பு,விருப்பம்

ஆலகண்டண் - சிவன்,நஞ்சுமிடற்றன்,கறைமிடற்றன்

ஆலகம்- நெல்லிமரம்

ஆலம் - நஞ்சு

ஆலயம் - கோயில்

ஆலாபம்,ஆலாபனம் - அலப்பு,பேச்சு,உரையாடல்

ஆலோசனை - சூழ்தல்,சூழ்ச்சி,ஓர்வு,எண்ணம்,ஆராய்ச்சி

ஆவசியம் - கட்டாயம்,முதன்மை,இன்றியமையாமை

ஆவத்து,ஆபத்து - இக்கெட்டு,இடர்,பொல்லாங்கு

ஆவர்த்தி,ஆவருத்தம்,ஆவிருத்தி - தடவை,வரிசை,சுற்று,வழக்கம்

ஆவாகனம் - அழைத்தல்,உட்புகல்

ஆனந்தபரவசம் - இன்பக்களிப்பு,பேரின்பக்களிப்பு

ஆனந்தம் - இன்பம்,பேரின்பம்

ஆன்மா - உயிர்

இகம் - இவ்வுலகம்,இவ்விடம்,இப்பிறப்பு

இங்கிதம் - இனிமை,அடையாளம்,கருத்து,இடம் பொருள்

இச்சகம் - முகமன்

இச்சை - விருப்பம்,அவா,விழைவு,வேட்கை

இடபம்,ரிஷபம் - எருது,காளை,ஏறு,விடை

இட்டசித்தி - விருப்பப்பேறு

இதம்,ஹிதம் - இனிமை,நன்மை,அன்பு,அறம்

இதயம்,இதையம்,ஹிருதயம் - நெஞ்சம்,உள்ளம்

இதரம் - வேறு,இயல்,அழிவு,பகைமை

இதிகாசம் - பண்டை வரலாறு,பழங்கதை

இந்திர ஜாலம் - இமயவர்கோன்,வானவர் தலைவன்

இந்து - நிலா,திங்கள்,அம்புலி

இமாலயம்,ஹிமாலயம் - பனிமலை

இரகசியம் - மறைபொருள்,மறை,அற்றம்

இராசாபாசம் - அருவருப்பு,ஒழுங்கின்மை

இரசாயனம் - பொருளியைபு

இரட்சகம் - பாதுகாப்பு,மீட்பு

இரட்சை - காப்பு

இரணம்,ரணம் - புண்

இரதம்,ரதம் - தேர்

இரத்தம் - குருதி,செந்நீர்

இரத்தினம்,ரத்தினம் - மாமணி,செம்மணி

இரம்பம்,ரம்பம் - ஈர்வாள்

இராகம்,ராகம் - இசை,பண்,அவா,விருப்பு

இராகு - கருங்கோள்

இராக்கதர் - அரக்கர்

இராசசூயம் - அரசர் வேள்வி

இராசா - அரையன்,மன்னன்,அரசன்

இராச்சியம் - நாடு,அரசியல்

இராத்திரி - இரவு,கங்குல்

இருஷி,இருடி - முனிவன்,தவசி,துறவி

இதய கமலம் - நெஞ்சத்தாமரை

இருது - பருவம்,மகளிர் முதற்பூப்பு

இரேகை - வரி,எழுத்து,கையிறை,நிறை,தொடர்

இலகிரி,லகிரி,லாகிரி - வெறி,மயக்கம்

இலகு,லகு - எளிது,நொய்மை,நுண்மை,ஈரம்,பலா மரம்

இலங்கணம் - பட்டினி

இலஞ்சம் - கைக்கூலி,கையூட்டு,கையுறை

இலட்சணம்,லட்சணம் - அழகு,பார்வை

இலயித்தல் - ஒடுங்குதல்,சேர்ந்தொன்றித்தல்

இலெளகீகம்,இலவுகீகம் - உலகியல்,உலகப்போக்கு

இலாஞ்சனம்,இலாஞ்சனை - புகழ்,அடியாளம்,கறை

இலாபம்,லாபம் - ஊதியம்,மிச்சம்,பேறு

இலீலை,லீலை - விளையாட்டு

யுகம்,உகம் - உலக முடிவு,இரண்டு

உக்கிராணம் -களஞ்சியம்,சரக்கறை

உஷ்ணம் - வெப்பம்,சூடு

உசிதம் - உயர்வு,சிறப்பு,மேன்மை,தகுதி,ஒழுங்கு

உசிதன் - தக்கோன்

உச்சம் - உயர்ச்சி,சிறப்பு

உச்சரித்தல் - சொல்லுதல்,ஒலித்தல்,ஓதல்

உச்சரிப்பு - எழுத்தோசை

உச்சாட்டியம் - பேய கற்றல்,ஒட்டுதல்

உச்சி - மேடு,முகடு

உச்சிக்காலம்,உச்சிச்சமயம் - நண் பகல், நடுப் பகல்

உதயன் - பகலோன்

உதாரணம்,திருட்டாந்தம் - எடுத்துக்காட்டு,சான்று

உத்தமம் - உண்மை,மேன்மை

உத்தரியம்,உத்தரீயம் - மேலாடை

உத்தரவு - கட்டளை

உத்தி,யுத்தி - அறிவு,இணக்கம்,இசைவு,சூழ்ச்சி,சொல்

உத்தேசம்,உத்தேகம் - கருத்து,மதிப்பு,ஏறக்குறைய

உபகரணம் - கொடுத்தல்,உதபிபொருள்கள்,கருவி,துணைக்காரணம்

உபதேசம் - அருண்மொழி,அறிவுரை

உபயம் - உதவி,நன்கொடை,இரண்டு

உபாசநம்,உபாசநை,உபாசனை - வழிபாடு,வணக்கம்

உபாதி,உபாதை - நோய்,துன்பம்,வருத்தம்

உபாத்தியாயன் - கணக்காயன்,ஆசிரியன்,கற்பிப்போன்

உபாயம் - சூழ்ச்சி,நொய்மை,எளிது,சிறிது

உயுக்கம்,உயுத்தம்,யுத்தம் - போர்,தகுதி

உருசி,ருசி - சுவை

உருத்திராக்கம் - சிவமணி,சுக்குமணி

உரூபம்,ரூபம் - உருவம்,வடிவம்

உரொக்கம்,ரொக்கம் - கைப்பணம்,இருப்பு,கையிருப்பு

உரோமம்,ரோமம் - மயிர்,முடி,குஞ்சி

உல்லாசம் - மகிழ்ச்சி,விளையாட்டு,களிப்பு,உள்ளக்களிப்பு

உவதி,யுவதி, - மங்கை,பதினாறாண்டுப் பெண்

ஊகம் - கருதல்,ஓர்தல்,கருத்து,நினைவு

ஊர்ச்சிதம்,ஊர்ஜ்ஜிதம் - உட்பொருளுணர்தல், நிலைப்படுதல்,உறுதி,கருங்குரங்கு

எசமானன்,எஜமான் - தலைவன்,முதல்வன்,முதலாளி

எந்திரம் - பொறி

எமன் - கூற்றுவன்,மறலி

ஏகதேசம் - ஒருபால்,ஒருபுடை,சிறுபான்மை

ஏகம் - ஒன்று,தனிமை

ஏகாந்தம் - தனிமை,ஒரு முடிவு

ஏகோபித்தல் - ஒன்றுபடுதல்

ஏடணை,ஏஷணை - விருப்பம்

ஐது,ஹேது - காரணம்

ஏக்கம்,ஐக்கியம் - ஒற்றுமை

ஐஸ்வர்யம்,ஐச்வரியம் - செல்வம்,பொருள்,திரு

ஐதீகம்,ஐதிகம் - உலகுரை

ஐம் பூதம்,பஞ்ச பூதம் - ஐந்து முதற்பொருள்

ஓமம்,ஹோமம் - வேள்வி

ஒளடதம்,ஒளஷதம்- மருந்து

களோகம் - வான் வட்டம்,வளி மண்டலம்

கடகம் - கைவளை,வளையம்

கடம் - கடம்,யானைக்கதுப்பு

கடாட்சித்தல் - அருளல்

கடாரம் - கொப்பரை,தேங்காய்

கடிகாரம் - நாழிகை வட்டில்,பொழுது காட்டுங்கருவி

கடிகை - நாழிகை,தாழ்க்கோல்

கடினசித்தம் - வன்னெஞ்சம்

கடினம் - வன்மை,கடுமை,வருத்தம்,கொடுமை

கடூரம்,கொடூரம் - கொடுமை

கட்டம்,கஷ்டம் - துன்பம்,வருத்தம்

கணம்,ஹணம் - குழாம்,கூட்டம்,தொகுதி,நொடிப்பொழுது

கணி - கோள் நூல், கோல் நூல் வல்லான்

கணிகை - பொதுமகள்

கணிசம் - அளவு,மேம்பாடு

கணிதம் - கணக்கு

கண்டம் - நிலப்பிரிவு,துண்டு,கட்டி,மிடறு,கழுத்து

கண்திட்டி,கண்திருஷ்டி - கண்ணேறு

கதம்பகம்,கதம்பம் - கூட்டம்,மணப்பொருட் கூட்டு,சேர்ந்தது,இணைத்தது

கதலி - வாழை

கதி - நடை,செலவு,வழி,புகலிடம்,பற்றுக்கோடு,நிலை

கனகம்,கநகம் - பொன்

கனவான்,கநவான் - பெரியோன்,பெருமையாளன்,பெருந்தகை

கனிஷ்டை,கநிஷ்டை - பின்னோள்,தங்கை

கன்னிகை,கந்நிகை - மணமாகாதவள்,இளம்பெண்

கந்மம்,கருமம் - தொழில்,வினை

கபடம்,கவடம்,கபடு - கரவு,படிறு,வஞ்சகம்,மோசம்,சூது,ஒளிப்பு

கபாலம் - தலையோடு,மண்டையோடு

கபோதி - குருடன்

கப்பம் - இறை

கமண்டலம் - நீர்க்குடுவை

கமலம் - தாமரை,நீர்

கம்பீரம் - உயர்தோற்றம்,பெருமை,ஆழம்,செருக்கு

கயம்,ஹயம் - குளம்,ஆழம்,யானை

கரகம் - வட்டில்,நீர்க்குடுவை

கரகோசம்,கரகோஷம் - கைதட்டுதல்

கரணம் - கருவி,ஐம்பொறி

கரம் - கை

கருச் சித்தல் - முழங்கல்,இரைதல்

கருணை - அருள்,இரக்கம்

கர்த்தா,கருத்தா - தலைவன்,வினைமுதல்,ஆக்கியோன்,நூலாசிரியன்,முதல்வன்,கடவுள்

கர்ப்பவதி - சூலி

கர்ப்பாசயம் - கருப்பை

கர்வம் - செருக்கு,இறுமாப்பு

கலாபம்,கலபம் - மயில்,மயிற்றோகை

கலி - வறுமை,துன்பம்

கலியாணம் - மனம்,மன்றல்,பொன்,மகிழ்ச்சி

கவளீகரித்தல்,கபளீகரம்,கபளீகரித்தல் - முற்றிலும் விழுங்குதல்,விழுங்குதல்

கவனம் - கருத்து நோக்கம்,உன்னித்தல்

கவாத்து - படைக்கலப் பயிற்சி,வெட்டி விடுதல்

கவி - செய்யுள்,புலவன்,பாட்டு

கவுளி,கெளளி - பல்லி

களேபரம் - குழப்பம்,உடல்,பிணம்

கற்பம் - ஊழிக்காலம்,நெடுவாழ்க்கை மருந்து

கனம் - சுமை,பளு,பளுவு

காசம் - ஈளை,ஈளைநோய்,இருமல் நோய்

கசாயம்,கஷாயம் - காவி

காஞ்சிரம் - எட்டி மரம்

காட்டம்,காஷ்டம் - விறகு,வெகுளி

காதகன் - கொலையாளி

காயசித்தி - நீடுவாழ்ப் பேறு

காயம் - உடல்,யாக்கை,வான்

காரிய கர்த்தா - வினைமுதல்வன்

காரியதரிசி - அமைச்சன்,செயலாளன்

கலாட்சேபம் - பொழுதுபோக்கல்,நாட்கழித்தல்,வாழ்க்கை

கால நியமம் - காலமுறை,காலக்கடன்,கால்,ஒழுங்கு

கிஸ்தி - திறை,வரி

கிரகணம்,கிராணம் - பற்றுதல்,பிடித்தல்

கிரகஸ்தம் - இல்லற நிலை

கிரகம் - வீடு,கோள்,பற்றுதல்,பிடிப்பு

கிரணம் - ஒளி,கதிர்

கிரந்தம் - நூல்,எழுத்து

கிரமம் - ஒழுங்கு,முறைமை

கிரயம் - விலை

கிராதன் - குறவன்,வேட்டுவன்

கிரி - மலை,பன்றி

கிரிகை - தொழில்,செயல்,வினை,சடங்கு

கிரிமி,கிருமி - உயிரி,பூச்சி,புழு

கிரீடம் - முடி

கிருஷி - பயிர்,உழவு,பயிர் செய்கை

கிலம் - கழிவு,அழிவு,சிறுமை

கிலேசம் - அச்சம்,கவலை,துன்பம்

கீதம் - இசை,பாட்டு,பாடல்,இசைப்பாட்டு

கீர்த்தனம்,கீர்த்தனை - புகழ்ச்சி,புகழ்ப்பா

கீலகம் - ஆணி,பொருத்து

குஞ்சரம் - யானை

குஷ்டம் - தொழு நோய்,பெரு நோய்

குணஷ்டை - தொல்லை,துன்பம்

குதர்க்கம் - அழிவழக்கு

குதூகலம்,குதுகலம் - பெருங்களிப்பு,பெருமகிழ்வு

குபேரன் - பெருஞ்செல்வன்,செல்வக்கடவுள்

குமரி,குமாரி - நங்கை,மணமாகாப்பெண்,புதல்வி,மகள்

கும்பம் - குடம்

குருகடாட்சம் - ஆசிரியனருட்பார்வை

குரோதம் - உட்பகை

குலாலன் - குயவன்

குலிசம் - வேற்படை

குன்மம் - சூலை,வயிற்று வலி

கேதம் - துன்பம்,இடர்,குற்றம்

கேவலம் - சிறுமை,தனிமை

கோகிலம் - குயில்

கோடம்,கோஷம்,கோஷ்டம் - முழக்கம்,பேரோசை

கோஷ்டி - கூட்டம்

கோடி - நூறு நூறாயிரம்

கோதண்டம் - வில்

கோளகை,கோளம் - உருண்டை,வட்டம்

கெளரவம் - மேன்மை,பெருமை

சக - கூட,உடன்

சகசம்,ஸகஸம் - இயற்கை,ஒற்றுமை

சகஸ்ரநாமம் - ஆயிரந்திருமொழி,ஆயிரந்திருப்பெயர்

சகமார்க்கம் - தோழமை நெறி

சகலம் - எல்லாம்

சகவாசம் - கூடவிருத்தல்,உடனுரைதல்,பழக்கம்,சேர்க்கை,நட்பு

சகா - தோழன்,துணை

சகாப்தம் - ஆண்டு,நூறாண்டு

சகாயம் - நயம்,நன்மை,மலிவு,பயன்,உதவி,துணை

சகி,சகீ - தோழி

சகிதம் - உடன்

சகுணம் - குணத்தோடு கூடியது

சகுந்தம் - கழுகு,பறவை

சகுனம் - குறி

சகோதரம் - உடன்பிறப்பு

சகோதரி - உடன்பிறந்தாள்

சக்கரம் - உருளை,வட்டம்

சக்தி - ஆற்றல்,வல்லமை,வலி

சங்கடம்,சங்கட்டம் - இக்கெட்டு,நெருக்கடி,இடர்,கண்மூடுதல்

சங்கிதை - தொகுதி,வரலாறு

சடுதி,சடிதி - விரைவு

சஷ்டியப்த பூர்த்தி - அறுபதாமாண்டு நிறைவு

சண்டப்பிரசண்டம் - மிகு விரைவு

சண்டமாருதம் - பெருங்காற்று,கடியகாற்று,புயற்காற்று

சண்டாளம் - தீமை,புலைத்தன்மை,நம்பிக்கை கேடு

சண்டாளர் - தீவினையாளர்,இழிஞர்

சண்டித்தனம் - முருட்டுத்தன்மை,முரட்டுத்தன்மை

சதகோடி - நூறு கோடி

சதசு - அவை

சதம் - நூறு நிலை

சதானந்தம் - இடையறா வின்பம்

சதி - இறைவி,அழிவு,வஞ்சனை,சூழ்ச்சி

சந்தகம் - எப்பொழுதும்

சந்தானம் - வழி,வழித்தொடர்பு

சந்தித்தல் - எதிர்படுதல்,கூடுதல்

சந்திரலோகம் - திங்கள் உலகு,அம்புலியுலகம்

சந்திரன் - பிறை,கலையோன்,இரவோன்,அலவன்,அல்லோன்

சந்து - முடுக்கு,இயங்கும் உயிர்,தூது,பிளப்பு,பொருத்து

சந்துட்டம்,சந்துஷ்டி,சந்தோஷம் - மகிழ்ச்சி

சந்தேகம் - ஐயம்,ஐயுறவு

சந்தோஷம் - மகிழ்ச்சி,உவகை,களிப்பு

சன்னதி,சந்நதி,சந்நிதானம் - திருமுன்

சந்நியாசம் - துறவு,துறவறம்

சபதம் - ஆணை,உறுதிமொழி,வஞ்சினம்

சபம்,ஜெபம் - உருவேற்றல்

சபலம் - நிறைவேறல்,வெற்றி,நடுக்கம்,ஏக்கம்,இச்சை,அவா

சபா,சபை - அவை,மன்றம்,கழகம்,அரங்கம்

சபித்தல் - தீமொழி கூறல்,சினந்துரைத்தல்

சமஷ்டி - தொகுதி,எல்லாம்

சமதை - ஒப்பு

சமர்த்தன்,சமத்தன் - வல்லான்,வல்லவன்,திறமையாளன்

சமஸ்தானம்,சமத்தானம் - அரசவை,தலை நகர்

சமம் - இணை,ஈடு,மட்டம்,போர்,நடு,ஓர்மை

சமரச தத்துவம் - பொதுநிலையுண்மை

சமரசம் - பொது,வேறுபாடின்மை,ஒற்றுமை

சமர்ப்பணம் - ஒப்பித்தல்,உயர்ந்தோர்க்குக் கொடுத்தல்

சமாதானம் - அமைதி,இணக்கம்,தணிவு,உடன்பாடு,தக்கவிடை

சமாதி - அமைதி,பிணக்குழி,பேசாதிருத்தல்,இறப்பு,மரித்தல்

சமாப்தம்,சமாப்தி - முற்றுப்பெற்றது

சமாராதனை - உளநிறைவு

சமி,ஷமி - பொறு

சமிதை - வேள்வி விறகு,உலர்ந்த குச்சி

சமீபம் - அருகு,அணமை,மருங்கு

சமீன்தார்,ஜமீந்தார் - நிலக்காரன்,பெருநிலக்கிழார்

சமுதாயம் - குமுகம்,கூட்டம்

சமுத்திரம் - கடல்

சமை,ஷமை - பொறுமை

சம்சாரம்,சம்ஸாரம் - குடும்பம்,இல்லாள்,இல்லத்தரசி

சம்பத்து - செல்வம்,பொருள்

சம்பந்தம -உறவு,பற்று,இயைபு,சார்பு,தொடர்பு,பொருத்தம்

சம்பிரதாயம் - தொல்வழக்கு,முன்னோர் முறை,பண்டை முறை

சம்பு ரேட்சணம் - தெளித்தல்

சம்பூரணம் - நிறைவு

சம்மதம் - உடன்பாடு,ஒப்புமை,இயைபு

சம்ரஷணை - பாதுகாப்பு

சயம்,ஜெயம் - வெற்றி

சரணம்,சரண் -அடைக்கலம்,வணக்கம்,கால்,திருவடி

சரணாகதி - புகலடைதல்,அடைக்கலம்

சராசரம்,ஜங்கமா - இயங்கியற் பொருள், நிலையியற் பொருள்

சரிதம்,சரிதை,சரித்திரம் - வரலாறு

சரீரம் - உடல்,யாக்கை,மெய்

சருமம்,சர்மம் - தோல்

சர்ப்பம் - பாம்பு

சர்வகலாசாலை -

பல்கழைக் கழகம்

சலதளம்- அரசமரம்

சலதாரை - நீர்க்கால்,நீரோட்டம்,மதகு

சலதோசம் - நீர்க்கோர்வை,தடுமம், நீர்க்கோவை

சல்லாபம் - உரையாடல்

சவம் - பிணம்

சவுகரியம்,செளக்கியம்,செளகரியம் -நலம்

சவுந்தரியம்,செளந்தரியம்,சவுந்தரம் - அழகு

செளபாக்கியம்,சவுபாக்கியம் - செல்வம்

சற்காரியம் - உற்பொருளினின்று தோன்றும் வினை

சற்குணம் - நல்லியல்பு

சனனம்,ஜனனம்,சனிப்பு,சன்மம் - பிறப்பு

சாகசம் - ஆற்றல்,துணிவு,நெருக்கிடை

சாகரம் - கடல்

சாகுபடி - பயிர் செய்தல்

சாகை,ஜாகை(உருது) - தங்குமிடம்

சாக்கிரதை,ஜாக்கிரதை - விழிப்பு,உன்னிப்பு,எச்சரிக்கை