Sunday, May 24, 2009

சிங்கப்பூர் பதிவர் சந்திப்பு 23.05.2009 - துருவ நட்சத்திரங்கள்



தென்னந்தோப்புக்குள் பதிவர்கள் - சந்திப்பு, கலந்துரையாடல்


பதிவர் சந்திப்பு, அறிவிப்பை வெளியிட்ட திரு கோவி.கண்ணன் எதைப் பற்றி விவாதிக்க இந்த சந்திப்புக்கு அழைப்பு விடுகிறார் என்கிற கேள்வி பலருக்கு எழுந்து யூகங்களை பகிர்ந்திருக்கிறார்கள்.

இருபத்து ஒன்றாம் நூற்றாண்டின் மனிதப் பேரவலம், உச்சக்கட்ட மனித உரிமை மீறல், மேற்கத்திய நாடுகள், அமெரிக்கா மற்றும் ஐ.நா போன்றவற்றின் பாராமுகம், இந்திய அரசாங்கத்தின் மறைமுக மனித உரிமை மீறல், கண்ணீர் வடிப்பதை தவிர வேறேதும் செய்யமுடியாத உலகத் தமிழ் மக்களின் கையறு நிலை.

ஜெனரல் டையர் செய்த படுகொலையை வரலாறு புத்தகத்தில் படித்துப் படித்து வேதனைப் பட்டு இந்திய சுதந்திரக் கனலின் சூட்டைக் உணர்ந்து கண்ணீர் விடும் நாம், கைக்கெட்டும் தூரத்தில் நடைபெறும் இனப்படுகொலையை கண்டுகொள்ளாமல், கவலைப் படாமல் இருக்கிறோம். அது நமக்கு எந்த பாதிப்பையும் நேரடியாக ஏற்படுத்துவதில்லை என்கிற மொக்கை வாதத்தை துணைக்கழைத்துக் கொண்டு வாதிடுவது நமக்கு கை வந்த கலையாக இருக்கிறது.

இணையத்தில் எழுதி எதைக் கிழித்தீர்கள் நேரடியாக அங்கு போய் போரிட வேண்டியதுதானே என்கிற கருத்தும் வைக்கக் கூடிய சூழலில் தான் நாம் வாழ்ந்து வருகிறோம். அது நமக்குப் பழகிப் போய் விட்டது. இருப்பினும் ஒவ்வொரு தமிழரும் தான் சார்ந்திருக்கும் நிலையினூடாக செயலாற்றுவதில், பங்காற்றுவதில் உணர்வுகளைவிட உண்மையாய் இருப்பதில் தவறொன்றும் இல்லை என்று கருதுகிறோம்.

ஒரு பதிவர் சந்திப்பை இவ்வளவு சீரியஸாக வருணிக்க முடியும் என்பதற்கு இது எடுத்துக் காட்டாக அமைந்து விடக்கூடும். எடுத்துக்காட்டுகளையும், வரலாறுகளையும் தேதியிட்டு அடுக்கி வைத்துக் கொண்டு தமிழர்கள் செய்யும் நற்செயல்களையும், துரோகங்களையும் அன்றாடம் வேடிக்கை பார்த்து கை தட்டுவது நமது இயல்பாகப் போய் விட்டது. அதுவே நமக்கு நிம்மதியைத் தருகிறது.

பதிவர் சந்திப்பு நான்கு மணியளவில் தொடங்கி ஏழு மணியளவில் நிறைவடையும் என்று திரு கோவி.கண்ணன் தனது அறிவிப்பில் தெரிவித்திருந்தார். முதலில் வந்தமர்ந்து நிகழ்வுக்கு அடிக்கல் நாட்டியவர்கள் சமூக சேவகர் ஜோசப் பால்ராஜ், வெண்பாவில் விளையாடும் முகவை மைந்தன் இராம், கவிஞரும் "நாம்" இலக்கிய இதழின் ஆசிரியருமான நீதிபதி பாண்டித்துரை, வெண்பா சிற்பி அகரம் அமுதா ஆகியோர். சிங்கை ஹவ் காங் பகுதியைச் சேர்ந்த வலைப்பதிவு வாசகர்கள் இருவர் வந்திருந்தார்கள்.

அடுத்து பசிர் ரிஸ் வந்திறங்கிய போதே நிகழ்வின் ஏற்பாட்டாளர் மூத்த பதிவர் கோவியாருக்கு தொலை பேசிய போது, அவரது வீட்டிருக்கு வரச்சொல்லி அன்புக் கட்டளையிட்டார். மறுக்க முடியாமல், அங்கு செல்ல ஏதுவாக பெங்களூர் மதுர இராம் அவர்கள் என்னை அங்கு அழைத்துச் சென்றார்கள்.

அங்கு கோவியார் தே அழியா(இஞ்சி தேநீர்) வழங்கினார். அதற்கு பின்னர் அங்கிருந்து மூவரும் பசிர் ரிஸ் கடற்கரை பூங்காவை அடைந்த போது கோவியாரைத் தொடர்பு கொண்ட வலைப்பதிவு வாசகர் திரு பிரகாஷ் அவர்கள் எங்களுடன் ஐக்கியமானார். அந்தக் கடற்கரையில் எழிலாய் அமைந்திருக்கும் தென்னந்தோப்பில் சந்திப்பை நிகழ்த்தலாம் என்று முடிவு செய்து அங்கு சென்று அமர்ந்து கொண்டோம்.

பின்னர் விருதுநகர் சென்று தனது வாக்கைப் பதிவு செய்துவிட்டு வந்திருக்கும் ஆமத்தூர் திரு ஜெகதீசன் அவர்களும், திருச்சியில் பதிவர் சந்திப்பில் கலந்து கொண்டுவிட்டு சிங்கை திரும்பியிருக்கும் திரு ஆ.ஞானசேகரன் அவர்களும் வந்து சேர்ந்தார்கள். திரு அப்பாவி முரு அவர்களின் நண்பர்கள் திரு சரவணனும், அவருடைய நண்பர்கள் இருவரும் அவரைப் பிரதிநித்து வந்திருந்தார்கள்.

இடையிடையே கலந்துரையாடல் செய்து கொண்டிருந்த போது, இயல்பாகக் கூட நேரத்தை கவனிக்க மறந்து போனோம்.
அடுத்ததாக இன்னொரு பதிவர் நீண்ட கொடையுடன்(குடை) வருவது தென்பட்டது. நெருங்கி வந்ததும் தெரிந்து கொண்டோம், அது மூத்தப் பதிவர் நண்பர் திரு குழலி அவர்கள் என்று.

பின்னர் புதிய பதிவர்கள் அறிமுகம் நடை பெற்றது. முந்தைய பதிவர் சந்திப்புகளில் கலந்து கொண்ட பதிவர்களை மூத்த பதிவர் கோவியார் அறிமுகம் செய்துவைத்தார். காமிரா கவிஞர் இராம் துருவங்களை இணைத்து துலாபாரம் செய்துகொண்டிருந்தார்.

இது துருவங்கள் இணையும் பருவம், பதிவர்கள் குழலி - கோவி கண்ணன்

இந்த பதிவர் சந்திப்புக்கான கருப்பொருளை திரியிட்டு ஏற்றிவைத்தார் கோவியார்.நல்ல நோக்கமாக அமைந்திருப்பதால், அதனை செயல் படுத்த செயற்குழு அமைப்பது போன்றவற்றைப் பற்றி விவாதித்தோம். இது பற்றி பின்னர் விரிவான அறிவிப்பு வெளியிடப்படும்

இலங்கை இனப் படுகொலை, செயற்கை பேரிடர், மனித உரிமை மீறல் மற்றும் விரும்பத்தகாத நிகழ்வுகளும்,பதிவர்களின் ஆதங்கங்களும் கலந்துரையாடலில் இடம்பெற்றது.

கவிஞர் பாண்டித்துரை பேசும்போது பதிவர் சந்திப்பை மாதாந்திர வாசகர் வட்ட சந்திப்புடன் அங் மோ க்யோ நூலகத்தில், உள்ளரங்கத்தில் நடத்துவதற்கு ஏதுவாக ஏற்பாடுகளைச் செய்ய இயலும் என்றார். மேலும் அவர் கூறுகையில் இலக்கிய இதழ்களில் வரும் கதைகள், கட்டுரைகள்,கவிதைகள் போன்றவைகள் வாசகர் வட்டத்தில் அலசப்படுகின்ற விதத்தைப் பகிர்ந்தார். இது படைப்பிலக்கியத்தின் கூறுகளை பதிவர்கள் உள்வாங்க உறுதுணையாக இருக்கும் என்று கருத்துரைத்தார் முகவை இராம்.

சிறந்த கருத்துக் களமாகவும், பயிற்சி பட்டறையாகவும் இருக்கும் என்று கருத்துரைத்தோம்.

அகரம் அமுதனின் குறள், வடிவம் பெற்றிருப்பதை தெரிவித்து நெல்லை கண்ணன் கூட அவர் சொல்லைத் தட்ட மாட்டார் என்று உணர்த்தினார். தங்கமுனை பேனா விருதைப் பற்றி அகரம் அமுதனும், பாண்டித்துரையும் விவாதித்தார்கள்.

வழக்கமாக வெண்பா கவிஞர் அகரம் அமுதா தனது வீரியமான கருத்துகளை கூரிய தமிழில் எடுத்தாள்வது வழக்கம். இந்த சந்திப்பின் போது, வழக்கத்திற்கு மாறாக அனைவரும் இருந்ததைக் கவனிக்க முடிந்தது.

நாடாளுமன்ற தேர்தலுக்கு தமிழகம் சென்று வந்திருக்கும் திரு குழலி தனது தேர்தல் அனுபவத்தை பகிர்ந்தார்.தேர்தல் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் காரணிகள், ஒட்டுமொத்த தேர்தல் நிலவரம் முதல் பூத் நிலவரம் வரை புட்டு புட்டு வைத்தார்.

பேச்சினூடே மாணிக் தாகூர், இரவீந்திரநாத் தாகூர் போன்ற தேச பக்தி மிக்கவர்களை பற்றி கருத்துரைக்கப் பட்டது. பேசாத ஒரு விடயம் உண்டெற்றால் அது மாணிக் பாட்சா பற்றி மட்டுமே. இறையாண்மைக்கான டெபநிசன் தெரியாமல் மிகுந்த குழப்பத்தை ஏற்படுத்தியது யார் என்கிற ரீதியில் கருத்துரைக்கப் பட்டது. தேசிய பாதுகாப்புச் சட்டம், அதனால் சாதித்தது, மக்கள் விழிப்புணர்வு, இனி வரும் காலங்களில் தேர்தல்கள் எதை நோக்கி செல்லும் போன்றவற்றில் பதிவர்கள் கருத்துரைத்தார்கள்.

குறுகிய கால இடைவெளியில் சந்திப்புக்கு ஏற்பாடு செய்தமையால் இன்னும் பல பதிவுலக நண்பர்கள் கலந்து கொள்ள இயலவில்லை என்று தொலைபேசியில் தெரிவித்தார்கள். அடுத்த சந்திப்பில் நிச்சயம் கலந்து கொள்வார்கள் என்று நம்புகிறோம்.

சொல்லி வைத்த படி ஏழு மணிக்கு கூட்டம் ஒரு நிறைவுக்கு வந்தது. இலியால் கடையில்(நாயர் கடை அல்ல) தேநீர் அருந்தாமல் சந்திப்பை முடிக்க மனம் இல்லாத பதிவர்கள் சந்திப்பின் தொடர்ச்சியை தேநீரினூடே புகைத்தோம். புகையோடு மட்டுமல்லாமல் நீரு பூத்த நெருப்பாய், இருப்பாய் நிறைவடைந்தது சந்திப்பு.

சந்திப்புக்கான ஏற்பாடுகளை செய்த கோவியார், ஜோசப் பால்ராஜ், முகவை இராம் மற்றும் அனைவருக்கும் நன்றி!





26 கருத்துக்கள்:

கிரி said...

ஒரு வழியா குழலி வந்துட்டாரா! :-)

சி தயாளன் said...

//இது துருவங்கள் இணையும் பருவம், பதிவர்கள் குழலி - கோவி கண்ணன்//

ஓ...அப்படியா...?

சி தயாளன் said...

இலியால் கடையில்(நாயர் கடை அல்ல) தேநீர் அருந்தாமல் சந்திப்பை முடிக்க மனம் இல்லாத பதிவர்கள் சந்திப்பின் தொடர்ச்சியை தேநீரினூடே புகைத்தோம். புகையோடு மட்டுமல்லாமல் நீரு பூத்த நெருப்பாய், இருப்பாய் நிறைவடைந்தது சந்திப்பு.:-))) இடக்கரக்கல்...?

நெருப்பாய்..இருப்பாய்...? அப்ப இனிப்பாய் இல்லை..?

TBCD said...

நெருப்பு பொறி பறக்குதே..அந்தப் படத்தில் !!

Sanjai Gandhi said...

சூப்பரு.. இணைப்பு கொடுத்து அழைத்த ஜோதி சாருக்கு நன்றி. ரொம்ப உபயோகமா இருந்திருக்கும் போல.

//இது துருவங்கள் இணையும் பருவம், பதிவர்கள் குழலி - கோவி கண்ணன்//

இதை முன்னமே ஒருத்தர் சொன்னார். எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது. இனி எப்போதும் நட்பு மட்டுமே இருக்க வாழ்த்துகள்..:)))


இரண்டாவது படத்துல இடது பக்கம் பயங்கரவாதி மாதிரி இருப்பவர் தன் குழலியா? :))

Sanjai Gandhi said...

/ TBCD said...

நெருப்பு பொறி பறக்குதே..அந்தப் படத்தில் !!//

:))))))))))))))

இராம்/Raam said...

கோவியார் லுக் தான் சூப்பரு... :)) எடுக்கிறோப்போ கேமரா'லே அதை பார்த்து அப்பிடிதான் சிரிச்சிட்டு இருந்தேன்.... :)

ஜெகதீசன் said...

//’டொன்’ லீ said...
:-)//
நானும் சிரிச்சுக்குறேன்... :-)

அறிவிலி said...

அலுவலக மற்றும் சொந்தப் பணிகள் காரணமாக வர இயலவில்லை.

மேல் விவரம் மற்றும் முடிவுகள் அறிய ஆவல்.

Sanjai Gandhi said...

கோவியார் ஏன் ராமை இப்டி முறைக்கிறார்? :))

Sanjai Gandhi said...

2வது போட்டோவில் வலதுபுறம் இருப்பது நிஜமாவே கோவியார் தானா? அதில் தொப்பை எங்கே?

(கோவி: கொய்யால , நான் எவ்ளோ கஷ்டப்பட்டு வயித்தை உள்ள இழுத்து வச்சிருக்கேன்.. இந்த ராம் வேணும்னே தாமதாமா போட்டோ எடுத்து மூச்சு வாங்க வச்சார்.. இப்போ நீ வந்து நோண்ட்றயா? :)) )

கோவி.கண்ணன் said...

என்னப்பா இது என்னிய வச்சி காமடி கீமடி பண்ணிக்கிட்டு இருக்கிங்க.

//$anjaiGandh! said...
2வது போட்டோவில் வலதுபுறம் இருப்பது நிஜமாவே கோவியார் தானா? அதில் தொப்பை எங்கே?
//

சஞ்செய், அபி அப்பாவிடம் கேட்டால் அந்த ரகசியம் சொல்லுவார்.
:)

சி தயாளன் said...

///ஜெகதீசன் said...
//’டொன்’ லீ said...
:-)//
நானும் சிரிச்சுக்குறேன்... :-)
///

இதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.....

ஆ.ஞானசேகரன் said...

அச்சு மாறாமல் அப்படியே இருக்கு ஜோதிபாரதி

முகவை மைந்தன் said...

சிறப்பான தொகுப்பு. அருமை.

ஜோசப் பால்ராஜ் said...

நமது அதிகாரப்பூர்வ அறிவிப்பாளர் டொன் லீ வராமல் போனதால் இம்முறை சந்திப்பு குறித்த பதிவு நிறைவாய் இருக்குமா என்ற சந்தேகம் இருந்தது. அதை நீக்கிவிட்டீர்கள். நன்றி.

ஜோசப் பால்ராஜ் said...

நாம் சந்திப்பில் விவாதித்தபடி நமது செயல்பாடுகளுக்காக ஒரு இணைய குழுமம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
singaibloggeractivities@googlegroups.com

இக்குழுமத்தில் இணைந்து நம் பணிகளில் பங்கெடுக்க விரும்புபவர்கள் என்னை தொடர்பு கொள்ளவும்.

Revolt said...

Its nice to see there are peoples in Singpaore who really care about our SL peoples. Please send me your details to me by email jairevolt@gmail.com or thro my blog
india-revolt.blogspot.com.

சென்ஷி said...

/// TBCD said...

நெருப்பு பொறி பறக்குதே..அந்தப் படத்தில் !!//


:))))

குப்பன்.யாஹூ said...

Thanks for sharing and thanks for the photos.

குடந்தை அன்புமணி said...

சிங்கப்பூர் பதிவர் சந்திப்புகளை பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி! புகைப்படங்கள் இன்னும் சில வெளியி்ட்டிருக்கலாமே!

சி தயாளன் said...

//ஜோசப் பால்ராஜ் said...
நமது அதிகாரப்பூர்வ அறிவிப்பாளர் டொன் லீ வராமல் போனதால் இம்முறை சந்திப்பு குறித்த பதிவு நிறைவாய் இருக்குமா என்ற சந்தேகம் இருந்தது. அதை நீக்கிவிட்டீர்கள். நன்றி.//

:-))))

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

வருகை தந்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி!

இந்த இடுகைக்குக் கூட தமிழ்மணத்தில் எதிர் வாக்களித்து தங்கள் காழ்ப்புணர்ச்சியை தீர்த்துக் கொண்டவர்களுக்கும் நன்றி!

வருகை தந்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி!

இந்த இடுகைக்குக் கூட தமிழ்மணத்தில் எதிர் வாக்களித்து தங்கள் காழ்ப்புணர்ச்சியை தீர்த்துக் கொண்டவர்களுக்கும் நன்றி!

கோவி.கண்ணன் said...

அகரம் அமுதா புகைப்படத்தை சேர்த்திருக்கிறீர்கள். போடச் சொல்லி மிரட்டினாரா ?
:)

RAMYA said...

நல்ல தொகுப்பு, அருமை சிலரை பார்க்க முடிந்தது, நன்றி ஜோதிபாரதி

RAMYA said...

/ TBCD said...

நெருப்பு பொறி பறக்குதே..அந்தப் படத்தில் !!//

:))))))))))))))

வட மொழி - தமிழ் மொழி

பின் நவீனத்துவம் - பின் புதுமையியல்

அகங்காரம் - செருக்கு,இறுமாப்பு,முனைப்பு,யானெனல்

அகடவிகடம் - குறும்பு,மாற்று,மாறுபட்டது

அகதி - அறவை,வறியன்,எதிலி,புகலிலான்,யாருமற்றவன்,ஏழை

அகந்தை - இறுமாப்பு,செருக்கு

அகம் - உள்ளே,உயிர்,நான்,மனம்,மனநிலை,எண்ணம்

அகம்பாவம் - தற்பெருமை,செருக்கு

அகராதி - அகரமுதலி,அகரவரிசை,அகரநிரல்,அகரமுதல்

அகிம்சை - இன்னா செய்யாமை,கொல்லாமை

அஹிம்சை - இன்னா செய்யாமை,கொல்லாமை

அகோரம் - அழகின்மை,கொடுமை,நடுக்கம்

அக்கணம் - அப்பொழுது,அந்நொடி

அக்கரம் - எழுத்து

அட்சரம் - அழிவில்லாதது

அக்கியாணி - அறிவிலான்

அஞ்ஞானி - புல்லறிவாளன்

அக்கிரகாரம் - பார்ப்பனச் சேரி

அக்கிரமம் - ஒழுன்கின்மை,முறைகேடு

அக்கிராசனம் - முதலிருக்கை,தலைமை

அக்கினி,அக்நி - நெருப்பு,தீ,அனல்,எரி

அங்கப்பிரதட்சணம் - உடல் வலமுருளல், வலம் புரளல்

அங்கீகாரம்,அங்கீகரணம் - உடன்,செப்பு

அங்குலம் - விறக்கட்டை,விரலளவு

அசத்தை,அசத்தியம் - பொய்

அசரம்- அசைவில்லாதது,இயங்காதது,நிலையியல்

அசரீரி - வானொலி,உருவற்றது

அசித்து - பயனின்மை

அஜீரணம்,அசீரணம்- செரியாமை,பசியின்மை,அழிவுபடாமை

அசுத்தம் - அழுக்கு,துப்புரவின்மை,தூய்மையின்மை

அசேதனம் - அறிவில்லாதது,அறிவிலி,அறிவில் பொருள்

அசெளரியம் - நலமின்மை,இடைஞ்சல்

அஞ்சலி - கும்பிடல்,வணக்கம்

அஞ்சனம் - மை,கறுப்பு,இருள்

அஞ்சிட்டம் - கதிரவன்

அஞ்ஞாதம் - மறைவு,அறியப்படாதது

அஞ்ஞாத வாசஸ்தலம் - மறைந்துறைவிடம்

அட்சயப் பாத்திரம் - திருவோடு,ஏற்போடு,அள்ள அள்ளக் குறையாதது

அட்டதிக்கு பாலகர் - எண்புறக்காவலர்

அட்டபந்தனம் - எண்புறக்கட்டு

அண்டம் - முட்டை,உலகம்,வித்து,மூலம்

அதமம் - கீழ்மை,கடைத்திரம்

அதர்மம்,அதருமம் - தீவினை,அறமின்மை,மறம்

அதிகப்பிரசங்கம் - மிகுபேச்சு,தன் மேம்பாட்டுரை,மற்றொன்று விரித்தல்

அதிகாரி - அலுவலர்,தலைவன்,முதல்வன்,உடையவன்

அதிகாலம் - விடியற்காலம்

அதிகாலை - விடியற்காலம்,புலரிக்காலை

அதிஷ்டவசம் - நல்வினைப்பயன், நல்வினை வயம்

அநந்தகோடி - எண்ணத்தொலையாதன

அநந்தம் - அளவின்மை,முடிவில்லது

அநாதை - யாருமற்றவன்,தாய்தந்தையிலான்

அநித்தம்,அநித்தியம் - அழிவு,நிலையற்றது,நிலையாமை

அநீதி - முறைகேடு

அநுக்கிரகம் - அருளிரக்கம்,அருள்

அநுசரணை - சார்பு,சார்பு நிலை

அநுசிதம் - பொய்,தகாதது

அனுபவம் - பழக்கம்,வழக்கம்,நுகர்ச்சி

அனுமினம் - ஐயம்,வழியளவை,கருதலளவை

அனுமானப் புரமானம் - கருதலளவை

அநேகர் - பலர்

அந்தகன் - அழிப்போன்,குருடன்

அந்தகாரம் - இருள்,அறியாமை

அந்தக்கரணங்கள் - அகக்கருவிகள்

அந்தஸ்து - நிலைமை,ஒழுங்கு,நிலை

அந்தரம் - வான்வெளி,இடைவெளி,துணையின்மை,காலம்

அந்தி - முடிவு,மாலைக்காலம்

அந்திய கிரியை - இறுதிச் சடங்கு

அந்நியர் - பிறர்,அயலார்

அந்நியோந்நியம் - நெருக்கம்,ஒற்றுமை,ஒருவொருக்கொருவர்

அபயம் - அடைக்கலம்,அச்சமின்மை,புகலிடம்,அஞ்சேலெனல்

அபாயம் - பேரிடர்,அழிவு,கேடு,துன்பம்,இடுக்கண்,இக்கட்டு

அபாரம் - சிறப்பு,அளவின்மை,கேடு

அபிதானம் - பெயர்

அபிநயம் - நடிப்பு,கூத்து,கைமைய்காட்டல்,உள்ளக் குறிகாட்டல்

அபிப்பிராயம் - நோக்கம்,எண்ணம்,உட்கருத்து,உள்ளப்போக்கு

அபிமானம் - பற்று,நேயம்,செருக்கு

அபூர்வம் - அரிது,அருமை,அரிய பொருள்

அபேச்சை -அவா,விருப்பம்

அபேதம் - ஒற்றுமை,வேற்றுமையின்மை,வேறன்மை

அப்பியாசம் -பழக்கம்,பயிற்சி

அப்பிரதட்சிணம் - இடப்புறச் சுற்று, இடப்பக்கச் சுற்று

அமரத்துவம் - அழிவின்மை

அமலன் - துயோன்,கடவுள்,வாலறிவன்

அந்நியர் - பிறர்,அயலார்

அதிகம் - மிகுதி,அளவின்மை

அமிர்தம்,அமிருதம் - இனிமை,அருமருந்து,சாவா மருந்து,அழிவினமை

அமச்ம் - வகை,பங்கு,காலம்,எண்,அன்னப்புள்

அம்பாரம் - குவியல்

அயோக்கியம் - தகுதியினமை,தகாதது

அயோக்க்கியன் - தகுதியற்றவன்,தகவிலான்,கெட்டவன்

அரணியம் - காடு

அருச்சனை,அர்ச்சனை - வழிபாடு, பூ வழிபாடு,மலர் வழிபாடு

அருத்தம்,அர்த்தம் -பொருள்,பாதி

அருவம் - உருவின்மை,அழகின்மை

அர்த்தநாசம் - பேரழிவு,பொருளழிவு

அர்ப்பணம் - உரிமை கொடுத்தல், ஒப்புவித்தல், நீரோடு கொடுத்தல்

அலங்காரம் - அழகு,ஒப்பனை,அணி,புனைவு

அலச்சியம் - பாராமுகம்,பொருட்படுத்தாமை,கருத்தின்மை

அவகீர்த்தி - இழிவு,புகழின்மை

அவக்கியாதி - வசை,இகழ்ச்சி

அவசரம் - விரைவு,பரபரப்பு,சுருக்கு,பதைப்பு

அவசியம் - முதன்மை,கட்டாயம்,இன்றியமையாமை

அவதரித்தல் - பிறத்தல்

அவதாரம் - பிறப்பு,இறங்குகை

அவதானம் - எச்சரிக்கை,ஒழிவு,நினைவு,விரித்தல்,மறப்பின்மை

அவநம்பிக்கை - நம்ப்பிக்கைக்குறை

அவமரியாதை - முறைதவறல்,வணக்கமின்மை,தீயமுறை

அவமானம் - மானக்கேடு,இழிவு,குறைவு,இளிவரவு

அவயவம்,அவையவம் - உறுப்பு

அவலன் - உடற்குறையன்,வீணன்

அவசு,ஹவிசு - தூய உணவு,சோறு,நெய்,

அற்பம்,அல்பம் - சிறுமை,அணு,புன்மை,இழிவு

அனங்கன் - உடலிலான்,கடவுள்,காமவேள்

அனாதி - கடவுள்,தனியன்,பழமை,தொன்மை

அனுதாபம் - இரக்கம்

அனுபவம் - பழக்கம்,வழக்கம்,அழுந்தியறிதல்,பட்டறிவு

அனுமானம் - உய்த்துணர்தல்,கருதல்ளவை,வழியளவை

அனேகம் - பல,எல்லாம்

அன்னதானம் - சோற்றறம்,சோற்றுக்கொடை,உணாக்கொடை

அன்னம் - சோறு,உணவு,அடிசில்

அன்னியன் - பிறர்,அயலார்

அன்னியோன்னியம் - ஒற்றுமை,நெருக்கம்,ஒருவர்க்கொருவர்

ஆகம் -உடல்,மார்பு

ஆகரு(ர்)ஷண சக்தி - இழுப்பாற்றல்,இழுவழி,சேர்வழி

ஆகாசம்,ஆகாயம் - விண்,வெளி,வான்,விசும்பு,வர்னம்

ஆகாய விமானம் - வான ஊர்தி

ஆகாரம் - உணவு,அடிசில்,உடம்பு,வடிவு

ஆக்கியாபித்தல்,ஆஞ்ஞாபித்தல் - கட்டளையிடல்

ஆக்கிரமித்தல் - வலிந்து கவர்தல்,வலிமை காட்டல்

ஆட்சேபம் - மறுமொழி,மறுத்துக்கூறல்,தடைமொழி

ஆங்காரம் - இறுமாப்பு,செருக்கு,தருக்கு

ஆச சங்கை -ஐயம்

ஆசாபாசம் -அன்பு,பற்று,அவா

ஆசாரம் - ஒழுக்கம்,வழக்கம்,நன்னடை,வழிபாடு,துப்புரவு

ஆசியம்,ஹாசியம் - எள்ளல்,நகை,சிரிப்பு

ஆசீர்வாதம் - வாழ்த்துரை

ஆசுவாசம் - இளைப்பாறுகை

ஆசை - விருப்பம்,அவா,பற்று,வேட்கை,விழைவு

ஆச்சரியம் - புதுமை,வியப்பு,இறும்பூது

ஆ(ச்)சிரமம் - இலைக்குடில்,பாழி,முனிவருறயுள்

ஆஸ்திகம் - கடவுளுண்டெனுங்கொள்கை

ஆஸ்பத்திரி - மருத்துவச்சாலை

ஆஞ்ஞாபித்தல் -கட்டளையிடல்

ஆஞ்ஞை -ஆணை,கட்டளை

ஆடம்பரம் - ஆரவாரம்,பகட்டு

ஆட்சேபம்,ஆட்சேபனம் - தடைமொழி,மறுமொழி,எதிர்மொழி,மறுப்பு

ஆதங்கம் - ஆற்றாமை,அச்சம்,நோய்

அந்நியர் - பிறர்,அயலார்

ஆதவ(ப)ன் - பகலோன்,கதிரோன்

ஆதரவு - துணை,உதவி,சார்பு,பற்றுக்கொடு

ஆதி - முதல்,பழமை,அடி,தொடக்கம்,காரணம்,எழுவாய்,கடவுள்

ஆப்தம்,ஆத்தம் - அன்பு,நட்பு

ஆத்தானம்,ஆஸ்தானம் - நகரவாயில்,அறமன்றம்,கொடிமுடிவாயில்

ஆத்திரம்,ஆத்திரியம்,ஆத்திரவம் - உளக்கொதிப்பு,விரைவு,பரபரப்பு

ஆத்துமா,ஆன்மா - உயிர்

ஆந்ந்தம் - இன்பம்

ஆபத்து -இடர்,துன்பம்,இக்கெட்டு,ஊறுபாடு,இடுக்கண்

ஆபரணம் - அணிகலம்,இழை,நகை,அணி,பூண்

ஆபாசம் - அருவருப்பு,சிதைவு,கெடுதல்,பொய்,அளவைப்பொலி

அபூர்வம் - வினைப்பயன்

ஆமோதித்தல் - உடன்படல்,வழிமொழிதல்,மகிழ்தல்

ஆயக்கட்டு(துளுவம்) - மொத்த நஞ்சை நிலம்,களப்புரவு

ஆயத்தம்(இந்தி) - முயற்சி,எத்தனம்,முன்னேற்பாடு

ஆயா(போர்ச்சுக்கீஸ்) - செவலித்தாய்,கைத்தாய்

ஆயாசம்,ஆயாஸம் - களைப்பு,இளைப்பு,சோர்வு,அயர்வு,மயக்கம்

ஆயுசு,ஆயுள் - வாழ்நாள்,ஆண்டு

ஆயுதம் - கருவு,படைக்கலம்,படை,வாள்

ஆரணியம்,ஆரண்ணியம் - காடு

ஆரம்,ஹாரம் - பூமாலை,தொடையல்

ஆரம்பம் - தொடக்கம்

ஆரம்பித்தல் - தொடங்கல்

ஆராதனம் - வணக்கம்,மகிழ்வித்தல்

ஆரோகம்,ஆரோபம்,ஆரோக்கியஸ்நானம் - நல முழுக்கு,நோய் தீர்ந்தபின் முழுகல்

ஆரோக்கியம் - நலம்,நோயின்மை

ஆரோபணம்- நாட்டுதல்,ஏற்றுதல்

ஆரோபித்தல் - ஏற்றுதல்

ஆர்ச்சிதம் - தேட்டம்,தேடிய பொருள்

ஆர்மோனியம் - இசைக்கருவி

ஆர்வம் - அன்பு,விருப்பம்

ஆலகண்டண் - சிவன்,நஞ்சுமிடற்றன்,கறைமிடற்றன்

ஆலகம்- நெல்லிமரம்

ஆலம் - நஞ்சு

ஆலயம் - கோயில்

ஆலாபம்,ஆலாபனம் - அலப்பு,பேச்சு,உரையாடல்

ஆலோசனை - சூழ்தல்,சூழ்ச்சி,ஓர்வு,எண்ணம்,ஆராய்ச்சி

ஆவசியம் - கட்டாயம்,முதன்மை,இன்றியமையாமை

ஆவத்து,ஆபத்து - இக்கெட்டு,இடர்,பொல்லாங்கு

ஆவர்த்தி,ஆவருத்தம்,ஆவிருத்தி - தடவை,வரிசை,சுற்று,வழக்கம்

ஆவாகனம் - அழைத்தல்,உட்புகல்

ஆனந்தபரவசம் - இன்பக்களிப்பு,பேரின்பக்களிப்பு

ஆனந்தம் - இன்பம்,பேரின்பம்

ஆன்மா - உயிர்

இகம் - இவ்வுலகம்,இவ்விடம்,இப்பிறப்பு

இங்கிதம் - இனிமை,அடையாளம்,கருத்து,இடம் பொருள்

இச்சகம் - முகமன்

இச்சை - விருப்பம்,அவா,விழைவு,வேட்கை

இடபம்,ரிஷபம் - எருது,காளை,ஏறு,விடை

இட்டசித்தி - விருப்பப்பேறு

இதம்,ஹிதம் - இனிமை,நன்மை,அன்பு,அறம்

இதயம்,இதையம்,ஹிருதயம் - நெஞ்சம்,உள்ளம்

இதரம் - வேறு,இயல்,அழிவு,பகைமை

இதிகாசம் - பண்டை வரலாறு,பழங்கதை

இந்திர ஜாலம் - இமயவர்கோன்,வானவர் தலைவன்

இந்து - நிலா,திங்கள்,அம்புலி

இமாலயம்,ஹிமாலயம் - பனிமலை

இரகசியம் - மறைபொருள்,மறை,அற்றம்

இராசாபாசம் - அருவருப்பு,ஒழுங்கின்மை

இரசாயனம் - பொருளியைபு

இரட்சகம் - பாதுகாப்பு,மீட்பு

இரட்சை - காப்பு

இரணம்,ரணம் - புண்

இரதம்,ரதம் - தேர்

இரத்தம் - குருதி,செந்நீர்

இரத்தினம்,ரத்தினம் - மாமணி,செம்மணி

இரம்பம்,ரம்பம் - ஈர்வாள்

இராகம்,ராகம் - இசை,பண்,அவா,விருப்பு

இராகு - கருங்கோள்

இராக்கதர் - அரக்கர்

இராசசூயம் - அரசர் வேள்வி

இராசா - அரையன்,மன்னன்,அரசன்

இராச்சியம் - நாடு,அரசியல்

இராத்திரி - இரவு,கங்குல்

இருஷி,இருடி - முனிவன்,தவசி,துறவி

இதய கமலம் - நெஞ்சத்தாமரை

இருது - பருவம்,மகளிர் முதற்பூப்பு

இரேகை - வரி,எழுத்து,கையிறை,நிறை,தொடர்

இலகிரி,லகிரி,லாகிரி - வெறி,மயக்கம்

இலகு,லகு - எளிது,நொய்மை,நுண்மை,ஈரம்,பலா மரம்

இலங்கணம் - பட்டினி

இலஞ்சம் - கைக்கூலி,கையூட்டு,கையுறை

இலட்சணம்,லட்சணம் - அழகு,பார்வை

இலயித்தல் - ஒடுங்குதல்,சேர்ந்தொன்றித்தல்

இலெளகீகம்,இலவுகீகம் - உலகியல்,உலகப்போக்கு

இலாஞ்சனம்,இலாஞ்சனை - புகழ்,அடியாளம்,கறை

இலாபம்,லாபம் - ஊதியம்,மிச்சம்,பேறு

இலீலை,லீலை - விளையாட்டு

யுகம்,உகம் - உலக முடிவு,இரண்டு

உக்கிராணம் -களஞ்சியம்,சரக்கறை

உஷ்ணம் - வெப்பம்,சூடு

உசிதம் - உயர்வு,சிறப்பு,மேன்மை,தகுதி,ஒழுங்கு

உசிதன் - தக்கோன்

உச்சம் - உயர்ச்சி,சிறப்பு

உச்சரித்தல் - சொல்லுதல்,ஒலித்தல்,ஓதல்

உச்சரிப்பு - எழுத்தோசை

உச்சாட்டியம் - பேய கற்றல்,ஒட்டுதல்

உச்சி - மேடு,முகடு

உச்சிக்காலம்,உச்சிச்சமயம் - நண் பகல், நடுப் பகல்

உதயன் - பகலோன்

உதாரணம்,திருட்டாந்தம் - எடுத்துக்காட்டு,சான்று

உத்தமம் - உண்மை,மேன்மை

உத்தரியம்,உத்தரீயம் - மேலாடை

உத்தரவு - கட்டளை

உத்தி,யுத்தி - அறிவு,இணக்கம்,இசைவு,சூழ்ச்சி,சொல்

உத்தேசம்,உத்தேகம் - கருத்து,மதிப்பு,ஏறக்குறைய

உபகரணம் - கொடுத்தல்,உதபிபொருள்கள்,கருவி,துணைக்காரணம்

உபதேசம் - அருண்மொழி,அறிவுரை

உபயம் - உதவி,நன்கொடை,இரண்டு

உபாசநம்,உபாசநை,உபாசனை - வழிபாடு,வணக்கம்

உபாதி,உபாதை - நோய்,துன்பம்,வருத்தம்

உபாத்தியாயன் - கணக்காயன்,ஆசிரியன்,கற்பிப்போன்

உபாயம் - சூழ்ச்சி,நொய்மை,எளிது,சிறிது

உயுக்கம்,உயுத்தம்,யுத்தம் - போர்,தகுதி

உருசி,ருசி - சுவை

உருத்திராக்கம் - சிவமணி,சுக்குமணி

உரூபம்,ரூபம் - உருவம்,வடிவம்

உரொக்கம்,ரொக்கம் - கைப்பணம்,இருப்பு,கையிருப்பு

உரோமம்,ரோமம் - மயிர்,முடி,குஞ்சி

உல்லாசம் - மகிழ்ச்சி,விளையாட்டு,களிப்பு,உள்ளக்களிப்பு

உவதி,யுவதி, - மங்கை,பதினாறாண்டுப் பெண்

ஊகம் - கருதல்,ஓர்தல்,கருத்து,நினைவு

ஊர்ச்சிதம்,ஊர்ஜ்ஜிதம் - உட்பொருளுணர்தல், நிலைப்படுதல்,உறுதி,கருங்குரங்கு

எசமானன்,எஜமான் - தலைவன்,முதல்வன்,முதலாளி

எந்திரம் - பொறி

எமன் - கூற்றுவன்,மறலி

ஏகதேசம் - ஒருபால்,ஒருபுடை,சிறுபான்மை

ஏகம் - ஒன்று,தனிமை

ஏகாந்தம் - தனிமை,ஒரு முடிவு

ஏகோபித்தல் - ஒன்றுபடுதல்

ஏடணை,ஏஷணை - விருப்பம்

ஐது,ஹேது - காரணம்

ஏக்கம்,ஐக்கியம் - ஒற்றுமை

ஐஸ்வர்யம்,ஐச்வரியம் - செல்வம்,பொருள்,திரு

ஐதீகம்,ஐதிகம் - உலகுரை

ஐம் பூதம்,பஞ்ச பூதம் - ஐந்து முதற்பொருள்

ஓமம்,ஹோமம் - வேள்வி

ஒளடதம்,ஒளஷதம்- மருந்து

களோகம் - வான் வட்டம்,வளி மண்டலம்

கடகம் - கைவளை,வளையம்

கடம் - கடம்,யானைக்கதுப்பு

கடாட்சித்தல் - அருளல்

கடாரம் - கொப்பரை,தேங்காய்

கடிகாரம் - நாழிகை வட்டில்,பொழுது காட்டுங்கருவி

கடிகை - நாழிகை,தாழ்க்கோல்

கடினசித்தம் - வன்னெஞ்சம்

கடினம் - வன்மை,கடுமை,வருத்தம்,கொடுமை

கடூரம்,கொடூரம் - கொடுமை

கட்டம்,கஷ்டம் - துன்பம்,வருத்தம்

கணம்,ஹணம் - குழாம்,கூட்டம்,தொகுதி,நொடிப்பொழுது

கணி - கோள் நூல், கோல் நூல் வல்லான்

கணிகை - பொதுமகள்

கணிசம் - அளவு,மேம்பாடு

கணிதம் - கணக்கு

கண்டம் - நிலப்பிரிவு,துண்டு,கட்டி,மிடறு,கழுத்து

கண்திட்டி,கண்திருஷ்டி - கண்ணேறு

கதம்பகம்,கதம்பம் - கூட்டம்,மணப்பொருட் கூட்டு,சேர்ந்தது,இணைத்தது

கதலி - வாழை

கதி - நடை,செலவு,வழி,புகலிடம்,பற்றுக்கோடு,நிலை

கனகம்,கநகம் - பொன்

கனவான்,கநவான் - பெரியோன்,பெருமையாளன்,பெருந்தகை

கனிஷ்டை,கநிஷ்டை - பின்னோள்,தங்கை

கன்னிகை,கந்நிகை - மணமாகாதவள்,இளம்பெண்

கந்மம்,கருமம் - தொழில்,வினை

கபடம்,கவடம்,கபடு - கரவு,படிறு,வஞ்சகம்,மோசம்,சூது,ஒளிப்பு

கபாலம் - தலையோடு,மண்டையோடு

கபோதி - குருடன்

கப்பம் - இறை

கமண்டலம் - நீர்க்குடுவை

கமலம் - தாமரை,நீர்

கம்பீரம் - உயர்தோற்றம்,பெருமை,ஆழம்,செருக்கு

கயம்,ஹயம் - குளம்,ஆழம்,யானை

கரகம் - வட்டில்,நீர்க்குடுவை

கரகோசம்,கரகோஷம் - கைதட்டுதல்

கரணம் - கருவி,ஐம்பொறி

கரம் - கை

கருச் சித்தல் - முழங்கல்,இரைதல்

கருணை - அருள்,இரக்கம்

கர்த்தா,கருத்தா - தலைவன்,வினைமுதல்,ஆக்கியோன்,நூலாசிரியன்,முதல்வன்,கடவுள்

கர்ப்பவதி - சூலி

கர்ப்பாசயம் - கருப்பை

கர்வம் - செருக்கு,இறுமாப்பு

கலாபம்,கலபம் - மயில்,மயிற்றோகை

கலி - வறுமை,துன்பம்

கலியாணம் - மனம்,மன்றல்,பொன்,மகிழ்ச்சி

கவளீகரித்தல்,கபளீகரம்,கபளீகரித்தல் - முற்றிலும் விழுங்குதல்,விழுங்குதல்

கவனம் - கருத்து நோக்கம்,உன்னித்தல்

கவாத்து - படைக்கலப் பயிற்சி,வெட்டி விடுதல்

கவி - செய்யுள்,புலவன்,பாட்டு

கவுளி,கெளளி - பல்லி

களேபரம் - குழப்பம்,உடல்,பிணம்

கற்பம் - ஊழிக்காலம்,நெடுவாழ்க்கை மருந்து

கனம் - சுமை,பளு,பளுவு

காசம் - ஈளை,ஈளைநோய்,இருமல் நோய்

கசாயம்,கஷாயம் - காவி

காஞ்சிரம் - எட்டி மரம்

காட்டம்,காஷ்டம் - விறகு,வெகுளி

காதகன் - கொலையாளி

காயசித்தி - நீடுவாழ்ப் பேறு

காயம் - உடல்,யாக்கை,வான்

காரிய கர்த்தா - வினைமுதல்வன்

காரியதரிசி - அமைச்சன்,செயலாளன்

கலாட்சேபம் - பொழுதுபோக்கல்,நாட்கழித்தல்,வாழ்க்கை

கால நியமம் - காலமுறை,காலக்கடன்,கால்,ஒழுங்கு

கிஸ்தி - திறை,வரி

கிரகணம்,கிராணம் - பற்றுதல்,பிடித்தல்

கிரகஸ்தம் - இல்லற நிலை

கிரகம் - வீடு,கோள்,பற்றுதல்,பிடிப்பு

கிரணம் - ஒளி,கதிர்

கிரந்தம் - நூல்,எழுத்து

கிரமம் - ஒழுங்கு,முறைமை

கிரயம் - விலை

கிராதன் - குறவன்,வேட்டுவன்

கிரி - மலை,பன்றி

கிரிகை - தொழில்,செயல்,வினை,சடங்கு

கிரிமி,கிருமி - உயிரி,பூச்சி,புழு

கிரீடம் - முடி

கிருஷி - பயிர்,உழவு,பயிர் செய்கை

கிலம் - கழிவு,அழிவு,சிறுமை

கிலேசம் - அச்சம்,கவலை,துன்பம்

கீதம் - இசை,பாட்டு,பாடல்,இசைப்பாட்டு

கீர்த்தனம்,கீர்த்தனை - புகழ்ச்சி,புகழ்ப்பா

கீலகம் - ஆணி,பொருத்து

குஞ்சரம் - யானை

குஷ்டம் - தொழு நோய்,பெரு நோய்

குணஷ்டை - தொல்லை,துன்பம்

குதர்க்கம் - அழிவழக்கு

குதூகலம்,குதுகலம் - பெருங்களிப்பு,பெருமகிழ்வு

குபேரன் - பெருஞ்செல்வன்,செல்வக்கடவுள்

குமரி,குமாரி - நங்கை,மணமாகாப்பெண்,புதல்வி,மகள்

கும்பம் - குடம்

குருகடாட்சம் - ஆசிரியனருட்பார்வை

குரோதம் - உட்பகை

குலாலன் - குயவன்

குலிசம் - வேற்படை

குன்மம் - சூலை,வயிற்று வலி

கேதம் - துன்பம்,இடர்,குற்றம்

கேவலம் - சிறுமை,தனிமை

கோகிலம் - குயில்

கோடம்,கோஷம்,கோஷ்டம் - முழக்கம்,பேரோசை

கோஷ்டி - கூட்டம்

கோடி - நூறு நூறாயிரம்

கோதண்டம் - வில்

கோளகை,கோளம் - உருண்டை,வட்டம்

கெளரவம் - மேன்மை,பெருமை

சக - கூட,உடன்

சகசம்,ஸகஸம் - இயற்கை,ஒற்றுமை

சகஸ்ரநாமம் - ஆயிரந்திருமொழி,ஆயிரந்திருப்பெயர்

சகமார்க்கம் - தோழமை நெறி

சகலம் - எல்லாம்

சகவாசம் - கூடவிருத்தல்,உடனுரைதல்,பழக்கம்,சேர்க்கை,நட்பு

சகா - தோழன்,துணை

சகாப்தம் - ஆண்டு,நூறாண்டு

சகாயம் - நயம்,நன்மை,மலிவு,பயன்,உதவி,துணை

சகி,சகீ - தோழி

சகிதம் - உடன்

சகுணம் - குணத்தோடு கூடியது

சகுந்தம் - கழுகு,பறவை

சகுனம் - குறி

சகோதரம் - உடன்பிறப்பு

சகோதரி - உடன்பிறந்தாள்

சக்கரம் - உருளை,வட்டம்

சக்தி - ஆற்றல்,வல்லமை,வலி

சங்கடம்,சங்கட்டம் - இக்கெட்டு,நெருக்கடி,இடர்,கண்மூடுதல்

சங்கிதை - தொகுதி,வரலாறு

சடுதி,சடிதி - விரைவு

சஷ்டியப்த பூர்த்தி - அறுபதாமாண்டு நிறைவு

சண்டப்பிரசண்டம் - மிகு விரைவு

சண்டமாருதம் - பெருங்காற்று,கடியகாற்று,புயற்காற்று

சண்டாளம் - தீமை,புலைத்தன்மை,நம்பிக்கை கேடு

சண்டாளர் - தீவினையாளர்,இழிஞர்

சண்டித்தனம் - முருட்டுத்தன்மை,முரட்டுத்தன்மை

சதகோடி - நூறு கோடி

சதசு - அவை

சதம் - நூறு நிலை

சதானந்தம் - இடையறா வின்பம்

சதி - இறைவி,அழிவு,வஞ்சனை,சூழ்ச்சி

சந்தகம் - எப்பொழுதும்

சந்தானம் - வழி,வழித்தொடர்பு

சந்தித்தல் - எதிர்படுதல்,கூடுதல்

சந்திரலோகம் - திங்கள் உலகு,அம்புலியுலகம்

சந்திரன் - பிறை,கலையோன்,இரவோன்,அலவன்,அல்லோன்

சந்து - முடுக்கு,இயங்கும் உயிர்,தூது,பிளப்பு,பொருத்து

சந்துட்டம்,சந்துஷ்டி,சந்தோஷம் - மகிழ்ச்சி

சந்தேகம் - ஐயம்,ஐயுறவு

சந்தோஷம் - மகிழ்ச்சி,உவகை,களிப்பு

சன்னதி,சந்நதி,சந்நிதானம் - திருமுன்

சந்நியாசம் - துறவு,துறவறம்

சபதம் - ஆணை,உறுதிமொழி,வஞ்சினம்

சபம்,ஜெபம் - உருவேற்றல்

சபலம் - நிறைவேறல்,வெற்றி,நடுக்கம்,ஏக்கம்,இச்சை,அவா

சபா,சபை - அவை,மன்றம்,கழகம்,அரங்கம்

சபித்தல் - தீமொழி கூறல்,சினந்துரைத்தல்

சமஷ்டி - தொகுதி,எல்லாம்

சமதை - ஒப்பு

சமர்த்தன்,சமத்தன் - வல்லான்,வல்லவன்,திறமையாளன்

சமஸ்தானம்,சமத்தானம் - அரசவை,தலை நகர்

சமம் - இணை,ஈடு,மட்டம்,போர்,நடு,ஓர்மை

சமரச தத்துவம் - பொதுநிலையுண்மை

சமரசம் - பொது,வேறுபாடின்மை,ஒற்றுமை

சமர்ப்பணம் - ஒப்பித்தல்,உயர்ந்தோர்க்குக் கொடுத்தல்

சமாதானம் - அமைதி,இணக்கம்,தணிவு,உடன்பாடு,தக்கவிடை

சமாதி - அமைதி,பிணக்குழி,பேசாதிருத்தல்,இறப்பு,மரித்தல்

சமாப்தம்,சமாப்தி - முற்றுப்பெற்றது

சமாராதனை - உளநிறைவு

சமி,ஷமி - பொறு

சமிதை - வேள்வி விறகு,உலர்ந்த குச்சி

சமீபம் - அருகு,அணமை,மருங்கு

சமீன்தார்,ஜமீந்தார் - நிலக்காரன்,பெருநிலக்கிழார்

சமுதாயம் - குமுகம்,கூட்டம்

சமுத்திரம் - கடல்

சமை,ஷமை - பொறுமை

சம்சாரம்,சம்ஸாரம் - குடும்பம்,இல்லாள்,இல்லத்தரசி

சம்பத்து - செல்வம்,பொருள்

சம்பந்தம -உறவு,பற்று,இயைபு,சார்பு,தொடர்பு,பொருத்தம்

சம்பிரதாயம் - தொல்வழக்கு,முன்னோர் முறை,பண்டை முறை

சம்பு ரேட்சணம் - தெளித்தல்

சம்பூரணம் - நிறைவு

சம்மதம் - உடன்பாடு,ஒப்புமை,இயைபு

சம்ரஷணை - பாதுகாப்பு

சயம்,ஜெயம் - வெற்றி

சரணம்,சரண் -அடைக்கலம்,வணக்கம்,கால்,திருவடி

சரணாகதி - புகலடைதல்,அடைக்கலம்

சராசரம்,ஜங்கமா - இயங்கியற் பொருள், நிலையியற் பொருள்

சரிதம்,சரிதை,சரித்திரம் - வரலாறு

சரீரம் - உடல்,யாக்கை,மெய்

சருமம்,சர்மம் - தோல்

சர்ப்பம் - பாம்பு

சர்வகலாசாலை -

பல்கழைக் கழகம்

சலதளம்- அரசமரம்

சலதாரை - நீர்க்கால்,நீரோட்டம்,மதகு

சலதோசம் - நீர்க்கோர்வை,தடுமம், நீர்க்கோவை

சல்லாபம் - உரையாடல்

சவம் - பிணம்

சவுகரியம்,செளக்கியம்,செளகரியம் -நலம்

சவுந்தரியம்,செளந்தரியம்,சவுந்தரம் - அழகு

செளபாக்கியம்,சவுபாக்கியம் - செல்வம்

சற்காரியம் - உற்பொருளினின்று தோன்றும் வினை

சற்குணம் - நல்லியல்பு

சனனம்,ஜனனம்,சனிப்பு,சன்மம் - பிறப்பு

சாகசம் - ஆற்றல்,துணிவு,நெருக்கிடை

சாகரம் - கடல்

சாகுபடி - பயிர் செய்தல்

சாகை,ஜாகை(உருது) - தங்குமிடம்

சாக்கிரதை,ஜாக்கிரதை - விழிப்பு,உன்னிப்பு,எச்சரிக்கை