Saturday, April 25, 2009

கலைஞர் பேட்டி-சொல்லிக் கேட்கவில்லை,இருப்பினும் நல்லதே நடக்கும்


டெல்லியில் இருந்து மத்திய உள்துறை மந்திரி ப.சிதம்பரம் நேற்றிரவு அண்ணா அறிவாலயம் வந்து முதலமைச்சர் கருணாநிதியை சந்தித்து ஒருமணி நேரம் பேசினார்.

அப்போது இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய வேண்டியது தொடர்பாக இந்திய தூதர்கள் இலங்கை சென்று வந்தது பற்றி முதலமைச்சர் கருணாநிதியிடம் உள்துறை மந்திரி ப.சிதம்பரம் விவரமாக எடுத்துக் கூறினார்.

அதைத் தொடர்ந்து முதலமைச்சர் கருணாநிதி நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு முதலமைச்சர் கருணாநிதி அளித்த பதில்களும்:

மத்திய மந்திரி சிதம்பரம் தெரிவித்த செய்தி உங்களுக்கு திருப்தி அளித்துள்ளதா?

திருப்தி அளிக்கிறது. நல்லதே நடக்கும் என்று நம்புவதாகச் சொன்னார். நானும் நல்லதே நடக்கும் என்று நம்புகிறேன்.

வெளியுறவுத்துறை செயலாளர் இலங்கையிலே தமிழர்கள் பாதிப்பதாகத் தான் சொன்னதாகவும், போர் நிறுத்தம் பற்றி சொல்லவில்லை என்றும் ஒரு சிலர் கூறுகிறார்களே?

அப்படி யார் சொன்னது? தமிழர்கள் தாக்கப்படுவது கவலை அளிக்கிறது. ஆகவே, போரை நிறுத்த வேண்டுமென்று வலியுறுத்தி இருக்கிறார்கள். டெல்லியில் அறிக்கையே கொடுத்திருக்கிறார்கள். அந்த அறிக்கையில் நாங்கள் போர் நிறுத்தத்தை வற்புறுத்தி இருக்கிறோம் என்றே சொல்லியிருக்கிறார்கள்.

போர் நிறுத்தம் வேண்டும் என்று இந்திய அரசு பலமுறை கேட்டிருக்கிறது. ஆனால், அதை இலஙëகை அரசு கேட்கவில்லை. இந்தமுறை இலங்கை அரசு கேட்கும் என்று நம்பிக்கை உங்களுக்கு இருக்கிறதா?

நம்புகிறோம். அந்த நம்பிக்கை தனக்கும் இருப்பதாக இப்போது என்னிடம் தொலைபேசியில் பேசிய பிரதமரும் தெரிவித்தார். சிதம்பரம் எல்லா விஷயங்களையும் சொல்லியிருப்பாரே என்று கேட்டார். நல்லதே நடக்கும் என்று நம்புவோம்.

இலங்கை தமிழர் பிரச்சினை உங்களுடைய வெற்றியைத் தேர்தலிலே பாதிக்குமா?

நாங்கள் இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காகத் தான் நேற்று தமிழ்நாடு முழுவதும் வேலைநிறுத்தம் செய்தோம். தேர்தலை மனதிலே கொண்டு செயல்பட்டவர்கள் யார் என்றும், அந்தப் பணிகளை ஆற்றியவர்கள் யார் என்றும் உங்களுக்குத் தெரியும். அதே நேரத்தில் இலங்கை தமிழர்களுக்காக நேற்று வேலைநிறுத்தம் செய்தவர்கள் யார் என்றும் உங்களுக்கே தெரியும்.

இலங்கையில் உள்ள அமைச்சர்கள் அவர்களுடைய நாட்டில் நடக்கும் பிரச்சினையில் இந்தியா தலையிடக்கூடாது என்றும், அது மட்டுமல்ல, மற்ற நாடுகளும், தலையிடக்கூடாது என்றும், இது அவர்களுடைய நாட்டில் நடக்கும் தீவிரவாதம் என்று சொல்கிறார்களே?

சீனா என்ற கம்யூனிஸ்டு நாடு இருக்கிறதே, அது ஐ.நா. சபையிலேயே இப்பிரச்சினையை எடுக்கக்கூடாது என்றும், பேசக்கூடாது என்றும், இது தீவிரவாதம் என்றும், தீவிரவாதத்தை அடக்கியே தீர வேண்டும் என்றும் கம்யூனிஸ்டு ஆட்சி நடத்துகிற சீனா நாடு சொல்லி இருக்கிறது. இங்கேயுள்ள கம்யூனிஸ்டுகள் இலங்கை தமிழர்களுக்காக போராடுவதாக நீலிக்கண்ணீர் வடிக்கிறார்கள்.

பெண்கள் தொடர் உண்ணாநிலை போராட்டம் இன்றைக்கும் தொடர்ந்து கொண்டிருக்கிறதே?

நாங்கள் உண்ணாவிரதத்தை கைவிடுமாறு அவர்களை கேட்டுக்கொண்டோம். எவ்வளவு கெஞ்சினோம். கேட்கவில்லை. உண்ணாவிரதமிருந்த ஐந்து பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக ஆனதால், அவர்களை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்திருக்கிறோம். மற்றவர்கள் தொடர் உண்ணாவிரதத்திலே ஈடுபட்டிருக்கிறார்கள்

கொள்ளிமலை குப்பு: ஓரளவுக்கு நல்லா புரியுதுங்க சாமியோவ்!

15 கருத்துக்கள்:

வெற்றி-[க்]-கதிரவன் said...

//சீனா என்ற கம்யூனிஸ்டு நாடு இருக்கிறதே, அது ஐ.நா. சபையிலேயே இப்பிரச்சினையை எடுக்கக்கூடாது என்றும், பேசக்கூடாது என்றும், இது தீவிரவாதம் என்றும், தீவிரவாதத்தை அடக்கியே தீர வேண்டும் என்றும் கம்யூனிஸ்டு ஆட்சி நடத்துகிற சீனா நாடு சொல்லி இருக்கிறது.//

சீனாவுல மக்கள் எல்லாம் மிக்க
சுதந்திரமா
சகலவசதிகளுடன் எந்த உரிமைமீறல் நடக்காமல் வாழ்கின்றனராம்.... அதற்க்கு சீன கம்யுனிசம் செய்யும் ஆட்சியாளர்கள் அவ்வளவு பாடுபடுகின்றனராம்....

வெற்றி-[க்]-கதிரவன் said...

சீனாவில் கருத்து சுதந்திரமும் அளவுக்கு அதிகமாகவே இருக்கின்றதாம்.

Sanjai Gandhi said...

//போர் நிறுத்தம் வேண்டும் என்று இந்திய அரசு பலமுறை கேட்டிருக்கிறது. ஆனால், அதை இலஙëகை அரசு கேட்கவில்லை. இந்தமுறை இலங்கை அரசு கேட்கும் என்று நம்பிக்கை உங்களுக்கு இருக்கிறதா?//

உலகமே சொல்லியாச்சி.. ஆனால் போர் நிறுத்தம் பற்றி இந்தியா இன்னும் வாயே திறக்கவில்லை என்று தினமும் கூவுறாரே பொய்க்கோ.. :(

Anonymous said...

பெரும் பரபரப்பாக கிளம்பிப் போன எஸ்.எஸ்.மேனனும், எம்.கே.நாராயணனும், இலங்கை அதிபர் ராஜபக்சேவுடன் வழக்கம் போல இதயப்பூர்வமாக பேசி விட்டு வேகமாக டெல்லி திரும்பி விட்டனர். தப்பி வரும் தமிழர்களுக்கு மறு வாழ்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள் என்று மட்டும் கூறியுள்ளனராம். போர் நிறுத்தம் குறித்து இருவருமே ராஜபக்சேவை வலியுறுத்தவில்லையாம்.

எதிர்பார்த்ததைப் போலவே எந்த பயனும் இல்லாமல் முடிந்துள்ளது மேனன், நாராயணன் பயணம். இவர்களது பயணத்தால் இலங்கையின் ராணுவ நடவடிக்கையில் எந்த மாற்றமும் வராது என கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

காரணம், இருவருமே ராஜபக்சேவிடம் வழக்கம் போல மட்டுமே பேசியுள்ளனர். தப்பி வரும் தமிழர்களுக்கு மறு வாழ்வு நடவடிக்கைகளை முடுக்கி விடுங்கள் என்றுதான் இருவரும் வலியுறுத்தினார்களாம். சிக்கிக் கொண்டுள்ள 2 லட்சம் தமிழர்களின் உயிர்களைக் காக்கும் வகையில் போர் நிறுத்தத்தை உடனடியாக மேற்கொள்ளுங்கள் என இருவருமே வலியுறுத்தவில்லையாம்.

இந்த சந்திப்பு இதயப்பூர்வமாக இருந்ததாக வேறு இலங்கை அதிபர் மாளிகை வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தமிழகத்தில் கடும் எதிர்ப்பு அலை எழுந்ததைத் தொடர்ந்து தேர்தலில் பெரும் பாதகம் ஏற்பட்டு விடுமோ என்ற பயத்தில் வேகம் வேகமாக மேனனையும், நாராயணனையும் மத்திய அரசு நேற்று கொழும்புக்கு அனுப்பி வைத்தது.

அவர்கள் இருவரும் கிளம்பிப் போவதற்கு முன்பாக மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி ஒரு அறிக்கை விடுத்தார். அதில், அப்பாவித் தமிழர்கள் பெருமளவில் கொல்லப்படுவது கவலை தருகிறது. நாங்கள் மகிழ்ச்சியாக இல்லை. உடனடியாக இவை நிறுத்தப்பட வேண்டும் என சற்று கடுமையாகவே கூறியிருந்தார்.

இதனால் இந்த இரட்டைத் தூதர்களும் போய் போரை நிறுத்துமாறு ராஜபக்சேவை வலியுறுத்தலாம் என்ற லேசான எதிர்பார்ப்பு எழுந்தது.

ஆனால் நேற்று கொழும்பு சென்ற இரு தூதர்களும், ராஜபக்சேவை சந்தித்து சுமார் 90 நிமிடங்கள் பேசினர். இந்தப் பேச்சுவார்த்தையின்போது போரை உடனடியாக நிறுத்துங்கள் என்று ஒருமுறை கூட இவர்கள் சொல்லவில்லை என்று கூறப்படுகிறது.

மாறாக, இடம் பெயர்ந்து வந்திருக்கும் தமிழர்களுக்கும், போர்க்களத்திலிருந்து வரும் தமிழர்களுக்கும் உரிய மறு வாழ்வு நடவடிக்கைகளை எடுங்கள். அப்பாவிகள் பாதிக்கப்படாத அளவுக்கு நடவடிக்கையில் ஈடுபடுங்கள் என்று மட்டும் சொன்னதாக கூறப்படுகிறது.

மேலும், விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்தும் அக்கறையுடன் அவர்கள் ராஜபக்சேவிடம் கேட்டுக் கொண்டனராம்.

இந்தியத் தூதர்களின் சந்திப்பு இதயப்பூர்வமாக இருந்ததாக அதிபர் மாளிகை பின்னர் தெரிவித்தது.

வெற்றிகரமாக தங்களது பயணத்தை முடித்துக் கொண்டு இருவரும் இரவே டெல்லி திரும்பினர். டெல்லி திரும்பியதும் ஏற்கனவே எழுதி வைத்த ஒரு அறிக்கையை நாராயணன் வாசித்தார்.

அதில், இலங்கை நிலவரம் குறித்த இந்தியாவின் கவலையை அதிபரிடம் தெரிவித்தோம். எங்களது பயணத்தின் விளைவாக சாதகமான நடவடிக்கைகள் இருக்கும் என எதிர்பார்க்கிறோம்.

அதிக அளவில் உயிர்ப்பலி ஏற்படுவது குறித்தும் விவாதித்தோம் என்றார்.

ராஜபக்சேவுடனான சந்திப்பின்போது, இந்தியத் தரப்பில் இலங்கைக்கான இந்தியத் தூதர் அலோக் பிரசாத், இலங்கை தரப்பில் கோதபாய ராஜபக்சே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

போர் நிறுத்தம் செய்யுங்கள் என்று ராஜபக்சேவிடம் கூறியதாக மேனனோ, நாராயணனோ தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே இந்த பயணம் மேலும் ஒரு கண் துடைப்புப் பயணமாகவே மாறியுள்ளது. அப்பாவித் தமிழர்களின் உயிர்களுக்கு உத்தரவாதம் அளிக்கவும் இந்தப் பயணம் தவறி விட்டதாகவே கருதப்படுகிறது.

Anonymous said...

இப்போது போர் நிறுத்தம் தேவையில்லேயே என்று ராஜபக்சேவின் தம்பியும், பாதுகாப்புத்துறை செயலாளருமான கோதபாய ராஜபக்சே கூறியதற்கு சம்மதம் தெரிவித்து விட்டு மேனனும், நாராயணனும் டெல்லி திரும்பியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

படு வேகமாக டெல்லியிலிருந்து கொழும்புக்குப் பறந்த மேனனும், நாராயணனும் போன வேகத்தில் டெல்லி திரும்பி விட்டனர். போர் நிறுத்தம் செய்க என்று அழுத்தம் திருத்தமாக ஒரு வார்த்தை கூட அதிபர் ராஜபக்சேவிடம் அவர்கள் கூறவில்லை.

எங்காத்துக்காரரும் கச்சேரிக்குப் போனார் கதையாக, நேராகவே போய் ராஜபக்சேவிடம் போய் பேசி விட்டு வந்தோம் என்று கணக்கு காட்டுவதற்காகவே இந்த பயணம் மேற்கொண்டதாகவே கருதப்படுகிறது.

இந்த நிலையில் கோதபாய ராஜபக்சே போர் நிறுத்தம் தேவையில்லை என்று மேனன், நாராயணனிடம் கூறியதாகவும், அதை ஏற்றுக் கொண்டு மேனனும், நாராயணனும் திரும்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், அப்பாவித் தமிழர்களுக்கு சாதகமாக மேனனும், நாராயணனும் ஒரு வார்த்தை கூட ராஜபக்சேவிடம் பேசவில்லை என்றும், ராஜபக்சே கூறியதையெல்லாம் தலையாட்டி கேட்டுக் கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்திய - இலங்கை உறவு, போருக்குப் பின்னால் செய்ய வேண்டியது குறித்து பொத்தாம் பொதுவாகத்தான் இரு தூதர்களும் ராஜபக்சேவிடம் பேசினார்களாம்.

இந்த சந்திப்பின்போது உடன் இருந்த கோத்தபாய ராஜபக்சே, விடுதலைப் புலிகளுடன் போர் நிறுத்தம் ஒன்றை செய்ய வேண்டிய அவசியம் எதுவும் இல்லை என்று கூறியதாகவும், அதை தலையாட்டி மேனனும், நாராயணனும் ஏற்றுக் கொண்டார்களாம்.

பிரபாகரனோ அல்லது விடுதலைப் புலிகளோ சரணடைந்தால் அல்லது பிடிபட்டால் எப்படி நடந்து கொள்வது, என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் முக்கியமாக விவாதித்தார்களாம்.

கொழும்பு பயணத்தின்போது ராணுவத் தளபதி சரத் பொன்சேகா தனியாக சந்தித்துப் பேசியதாகவும் கூறப்படுகிறது.

Anonymous said...

/இங்கேயுள்ள கம்யூனிஸ்டுகள் இலங்கை தமிழர்களுக்காக போராடுவதாக நீலிக்கண்ணீர் வடிக்கிறார்கள்./


இதை சொல்லுற பெரிய மனுஷன் மட்டும் தினமும் என்ன கண்ணீர் வடிக்கிறாராம்?????

Anonymous said...

/நானும் நல்லதே நடக்கும் என்று நம்புகிறேன்./

யாருக்கு...உங்க குடும்பத்துக்கா.....இருக்கும்...இருக்கும்...!

Anonymous said...

/சிதம்பரம் எல்லா விஷயங்களையும் சொல்லியிருப்பாரே என்று கேட்டார்/

என்ன பெரிய புடலங்காய் விஷயம்....எலக்ஷன் வரைக்கும் நல்லா நாடகம் போடுற விஷயம் தானே???

Anonymous said...

/நாங்கள் இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காகத் தான் நேற்று தமிழ்நாடு முழுவதும் வேலைநிறுத்தம் செய்தோம். /

டாஸ்மாக்கை மூடிட்டா குடிமகன்களின் சாபத்தை சம்பாதிக்கனுமேன்னு அதை மட்டும் அக்கறையா திருந்து வச்சீங்களே......அடடா....அடடா...எவ்ளோ நல்ல மனசு.

Anonymous said...

/நாங்கள் இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காகத் தான் நேற்று தமிழ்நாடு முழுவதும் வேலைநிறுத்தம் செய்தோம். /

டாஸ்மாக்கை மூடிட்டா குடிமகன்களின் சாபத்தை சம்பாதிக்கனுமேன்னு அதை மட்டும் அக்கறையா திறந்து வச்சீங்களே......அடடா....அடடா...எவ்ளோ நல்ல மனசு.

Anonymous said...

/கொள்ளிமலை குப்பு: ஓரளவுக்கு நல்லா புரியுதுங்க சாமியோவ்!/


அதான் எல்லாம் தெரியுதே..

Anonymous said...

தமிழர்கள் இளிச்ச வாயர்கள்.
தமிழ்நாட்டுத் தலைவர்கள் கோமாளிகள்.

இப்போது தமிழ்ர்கள் அனைவரும் முட்டாள்கள் என்று மேனனும்,நாரவாயணும்,
பிரணாபும், சோனியாவும்,மன்மில்லாத
மடமோகனும் நினைக்கிறார்கள்.
முத்திரை குத்தும் மக்கள் அவர்கள்
முகரக்கட்டைகளில் குத்தப் போகிறார்கள்,அப்போதுதான் இந்த
வெறியர்களுக்கு தங்கள் நாடகத்தின் திரை விழும்.

இளையமதி said...

அப்படியே யாருக்கு நல்லதுன்னும் சொல்லி இருக்கலாம். அது ஈழத்தமிழருக்கா? இல்ல காங்கிரஸ் மற்றும் கழக 'குடும்பத்துக்கா "?

Anonymous said...

mccs cosmictree scottsdale told tells secondly nonpublic nettiescrub finish kissmyface [url=http://www.webjam.com/tshirtprinting]t shirt printing ny[/url]
free seeking engineering exercising hose chapter vysada color cause policies [url=http://www.webjam.com/homesecurity]web enable home security[/url]
intuitive performed special coaching measure asking portable armhammer evaluated remotely [url=http://www.webjam.com/hairremoval]cheap hair removal[/url]
bethel michelle cosmolara deserve climb additions flexible patients angel victor [url=http://www.webjam.com/taxattorney]fayetteville nc tax attorney[/url]

Anonymous said...

viagra and prostate
viagra zenegra viagrra
price for viagra
medications viagra delivery
viagra cheap kamagra uk

வட மொழி - தமிழ் மொழி

பின் நவீனத்துவம் - பின் புதுமையியல்

அகங்காரம் - செருக்கு,இறுமாப்பு,முனைப்பு,யானெனல்

அகடவிகடம் - குறும்பு,மாற்று,மாறுபட்டது

அகதி - அறவை,வறியன்,எதிலி,புகலிலான்,யாருமற்றவன்,ஏழை

அகந்தை - இறுமாப்பு,செருக்கு

அகம் - உள்ளே,உயிர்,நான்,மனம்,மனநிலை,எண்ணம்

அகம்பாவம் - தற்பெருமை,செருக்கு

அகராதி - அகரமுதலி,அகரவரிசை,அகரநிரல்,அகரமுதல்

அகிம்சை - இன்னா செய்யாமை,கொல்லாமை

அஹிம்சை - இன்னா செய்யாமை,கொல்லாமை

அகோரம் - அழகின்மை,கொடுமை,நடுக்கம்

அக்கணம் - அப்பொழுது,அந்நொடி

அக்கரம் - எழுத்து

அட்சரம் - அழிவில்லாதது

அக்கியாணி - அறிவிலான்

அஞ்ஞானி - புல்லறிவாளன்

அக்கிரகாரம் - பார்ப்பனச் சேரி

அக்கிரமம் - ஒழுன்கின்மை,முறைகேடு

அக்கிராசனம் - முதலிருக்கை,தலைமை

அக்கினி,அக்நி - நெருப்பு,தீ,அனல்,எரி

அங்கப்பிரதட்சணம் - உடல் வலமுருளல், வலம் புரளல்

அங்கீகாரம்,அங்கீகரணம் - உடன்,செப்பு

அங்குலம் - விறக்கட்டை,விரலளவு

அசத்தை,அசத்தியம் - பொய்

அசரம்- அசைவில்லாதது,இயங்காதது,நிலையியல்

அசரீரி - வானொலி,உருவற்றது

அசித்து - பயனின்மை

அஜீரணம்,அசீரணம்- செரியாமை,பசியின்மை,அழிவுபடாமை

அசுத்தம் - அழுக்கு,துப்புரவின்மை,தூய்மையின்மை

அசேதனம் - அறிவில்லாதது,அறிவிலி,அறிவில் பொருள்

அசெளரியம் - நலமின்மை,இடைஞ்சல்

அஞ்சலி - கும்பிடல்,வணக்கம்

அஞ்சனம் - மை,கறுப்பு,இருள்

அஞ்சிட்டம் - கதிரவன்

அஞ்ஞாதம் - மறைவு,அறியப்படாதது

அஞ்ஞாத வாசஸ்தலம் - மறைந்துறைவிடம்

அட்சயப் பாத்திரம் - திருவோடு,ஏற்போடு,அள்ள அள்ளக் குறையாதது

அட்டதிக்கு பாலகர் - எண்புறக்காவலர்

அட்டபந்தனம் - எண்புறக்கட்டு

அண்டம் - முட்டை,உலகம்,வித்து,மூலம்

அதமம் - கீழ்மை,கடைத்திரம்

அதர்மம்,அதருமம் - தீவினை,அறமின்மை,மறம்

அதிகப்பிரசங்கம் - மிகுபேச்சு,தன் மேம்பாட்டுரை,மற்றொன்று விரித்தல்

அதிகாரி - அலுவலர்,தலைவன்,முதல்வன்,உடையவன்

அதிகாலம் - விடியற்காலம்

அதிகாலை - விடியற்காலம்,புலரிக்காலை

அதிஷ்டவசம் - நல்வினைப்பயன், நல்வினை வயம்

அநந்தகோடி - எண்ணத்தொலையாதன

அநந்தம் - அளவின்மை,முடிவில்லது

அநாதை - யாருமற்றவன்,தாய்தந்தையிலான்

அநித்தம்,அநித்தியம் - அழிவு,நிலையற்றது,நிலையாமை

அநீதி - முறைகேடு

அநுக்கிரகம் - அருளிரக்கம்,அருள்

அநுசரணை - சார்பு,சார்பு நிலை

அநுசிதம் - பொய்,தகாதது

அனுபவம் - பழக்கம்,வழக்கம்,நுகர்ச்சி

அனுமினம் - ஐயம்,வழியளவை,கருதலளவை

அனுமானப் புரமானம் - கருதலளவை

அநேகர் - பலர்

அந்தகன் - அழிப்போன்,குருடன்

அந்தகாரம் - இருள்,அறியாமை

அந்தக்கரணங்கள் - அகக்கருவிகள்

அந்தஸ்து - நிலைமை,ஒழுங்கு,நிலை

அந்தரம் - வான்வெளி,இடைவெளி,துணையின்மை,காலம்

அந்தி - முடிவு,மாலைக்காலம்

அந்திய கிரியை - இறுதிச் சடங்கு

அந்நியர் - பிறர்,அயலார்

அந்நியோந்நியம் - நெருக்கம்,ஒற்றுமை,ஒருவொருக்கொருவர்

அபயம் - அடைக்கலம்,அச்சமின்மை,புகலிடம்,அஞ்சேலெனல்

அபாயம் - பேரிடர்,அழிவு,கேடு,துன்பம்,இடுக்கண்,இக்கட்டு

அபாரம் - சிறப்பு,அளவின்மை,கேடு

அபிதானம் - பெயர்

அபிநயம் - நடிப்பு,கூத்து,கைமைய்காட்டல்,உள்ளக் குறிகாட்டல்

அபிப்பிராயம் - நோக்கம்,எண்ணம்,உட்கருத்து,உள்ளப்போக்கு

அபிமானம் - பற்று,நேயம்,செருக்கு

அபூர்வம் - அரிது,அருமை,அரிய பொருள்

அபேச்சை -அவா,விருப்பம்

அபேதம் - ஒற்றுமை,வேற்றுமையின்மை,வேறன்மை

அப்பியாசம் -பழக்கம்,பயிற்சி

அப்பிரதட்சிணம் - இடப்புறச் சுற்று, இடப்பக்கச் சுற்று

அமரத்துவம் - அழிவின்மை

அமலன் - துயோன்,கடவுள்,வாலறிவன்

அந்நியர் - பிறர்,அயலார்

அதிகம் - மிகுதி,அளவின்மை

அமிர்தம்,அமிருதம் - இனிமை,அருமருந்து,சாவா மருந்து,அழிவினமை

அமச்ம் - வகை,பங்கு,காலம்,எண்,அன்னப்புள்

அம்பாரம் - குவியல்

அயோக்கியம் - தகுதியினமை,தகாதது

அயோக்க்கியன் - தகுதியற்றவன்,தகவிலான்,கெட்டவன்

அரணியம் - காடு

அருச்சனை,அர்ச்சனை - வழிபாடு, பூ வழிபாடு,மலர் வழிபாடு

அருத்தம்,அர்த்தம் -பொருள்,பாதி

அருவம் - உருவின்மை,அழகின்மை

அர்த்தநாசம் - பேரழிவு,பொருளழிவு

அர்ப்பணம் - உரிமை கொடுத்தல், ஒப்புவித்தல், நீரோடு கொடுத்தல்

அலங்காரம் - அழகு,ஒப்பனை,அணி,புனைவு

அலச்சியம் - பாராமுகம்,பொருட்படுத்தாமை,கருத்தின்மை

அவகீர்த்தி - இழிவு,புகழின்மை

அவக்கியாதி - வசை,இகழ்ச்சி

அவசரம் - விரைவு,பரபரப்பு,சுருக்கு,பதைப்பு

அவசியம் - முதன்மை,கட்டாயம்,இன்றியமையாமை

அவதரித்தல் - பிறத்தல்

அவதாரம் - பிறப்பு,இறங்குகை

அவதானம் - எச்சரிக்கை,ஒழிவு,நினைவு,விரித்தல்,மறப்பின்மை

அவநம்பிக்கை - நம்ப்பிக்கைக்குறை

அவமரியாதை - முறைதவறல்,வணக்கமின்மை,தீயமுறை

அவமானம் - மானக்கேடு,இழிவு,குறைவு,இளிவரவு

அவயவம்,அவையவம் - உறுப்பு

அவலன் - உடற்குறையன்,வீணன்

அவசு,ஹவிசு - தூய உணவு,சோறு,நெய்,

அற்பம்,அல்பம் - சிறுமை,அணு,புன்மை,இழிவு

அனங்கன் - உடலிலான்,கடவுள்,காமவேள்

அனாதி - கடவுள்,தனியன்,பழமை,தொன்மை

அனுதாபம் - இரக்கம்

அனுபவம் - பழக்கம்,வழக்கம்,அழுந்தியறிதல்,பட்டறிவு

அனுமானம் - உய்த்துணர்தல்,கருதல்ளவை,வழியளவை

அனேகம் - பல,எல்லாம்

அன்னதானம் - சோற்றறம்,சோற்றுக்கொடை,உணாக்கொடை

அன்னம் - சோறு,உணவு,அடிசில்

அன்னியன் - பிறர்,அயலார்

அன்னியோன்னியம் - ஒற்றுமை,நெருக்கம்,ஒருவர்க்கொருவர்

ஆகம் -உடல்,மார்பு

ஆகரு(ர்)ஷண சக்தி - இழுப்பாற்றல்,இழுவழி,சேர்வழி

ஆகாசம்,ஆகாயம் - விண்,வெளி,வான்,விசும்பு,வர்னம்

ஆகாய விமானம் - வான ஊர்தி

ஆகாரம் - உணவு,அடிசில்,உடம்பு,வடிவு

ஆக்கியாபித்தல்,ஆஞ்ஞாபித்தல் - கட்டளையிடல்

ஆக்கிரமித்தல் - வலிந்து கவர்தல்,வலிமை காட்டல்

ஆட்சேபம் - மறுமொழி,மறுத்துக்கூறல்,தடைமொழி

ஆங்காரம் - இறுமாப்பு,செருக்கு,தருக்கு

ஆச சங்கை -ஐயம்

ஆசாபாசம் -அன்பு,பற்று,அவா

ஆசாரம் - ஒழுக்கம்,வழக்கம்,நன்னடை,வழிபாடு,துப்புரவு

ஆசியம்,ஹாசியம் - எள்ளல்,நகை,சிரிப்பு

ஆசீர்வாதம் - வாழ்த்துரை

ஆசுவாசம் - இளைப்பாறுகை

ஆசை - விருப்பம்,அவா,பற்று,வேட்கை,விழைவு

ஆச்சரியம் - புதுமை,வியப்பு,இறும்பூது

ஆ(ச்)சிரமம் - இலைக்குடில்,பாழி,முனிவருறயுள்

ஆஸ்திகம் - கடவுளுண்டெனுங்கொள்கை

ஆஸ்பத்திரி - மருத்துவச்சாலை

ஆஞ்ஞாபித்தல் -கட்டளையிடல்

ஆஞ்ஞை -ஆணை,கட்டளை

ஆடம்பரம் - ஆரவாரம்,பகட்டு

ஆட்சேபம்,ஆட்சேபனம் - தடைமொழி,மறுமொழி,எதிர்மொழி,மறுப்பு

ஆதங்கம் - ஆற்றாமை,அச்சம்,நோய்

அந்நியர் - பிறர்,அயலார்

ஆதவ(ப)ன் - பகலோன்,கதிரோன்

ஆதரவு - துணை,உதவி,சார்பு,பற்றுக்கொடு

ஆதி - முதல்,பழமை,அடி,தொடக்கம்,காரணம்,எழுவாய்,கடவுள்

ஆப்தம்,ஆத்தம் - அன்பு,நட்பு

ஆத்தானம்,ஆஸ்தானம் - நகரவாயில்,அறமன்றம்,கொடிமுடிவாயில்

ஆத்திரம்,ஆத்திரியம்,ஆத்திரவம் - உளக்கொதிப்பு,விரைவு,பரபரப்பு

ஆத்துமா,ஆன்மா - உயிர்

ஆந்ந்தம் - இன்பம்

ஆபத்து -இடர்,துன்பம்,இக்கெட்டு,ஊறுபாடு,இடுக்கண்

ஆபரணம் - அணிகலம்,இழை,நகை,அணி,பூண்

ஆபாசம் - அருவருப்பு,சிதைவு,கெடுதல்,பொய்,அளவைப்பொலி

அபூர்வம் - வினைப்பயன்

ஆமோதித்தல் - உடன்படல்,வழிமொழிதல்,மகிழ்தல்

ஆயக்கட்டு(துளுவம்) - மொத்த நஞ்சை நிலம்,களப்புரவு

ஆயத்தம்(இந்தி) - முயற்சி,எத்தனம்,முன்னேற்பாடு

ஆயா(போர்ச்சுக்கீஸ்) - செவலித்தாய்,கைத்தாய்

ஆயாசம்,ஆயாஸம் - களைப்பு,இளைப்பு,சோர்வு,அயர்வு,மயக்கம்

ஆயுசு,ஆயுள் - வாழ்நாள்,ஆண்டு

ஆயுதம் - கருவு,படைக்கலம்,படை,வாள்

ஆரணியம்,ஆரண்ணியம் - காடு

ஆரம்,ஹாரம் - பூமாலை,தொடையல்

ஆரம்பம் - தொடக்கம்

ஆரம்பித்தல் - தொடங்கல்

ஆராதனம் - வணக்கம்,மகிழ்வித்தல்

ஆரோகம்,ஆரோபம்,ஆரோக்கியஸ்நானம் - நல முழுக்கு,நோய் தீர்ந்தபின் முழுகல்

ஆரோக்கியம் - நலம்,நோயின்மை

ஆரோபணம்- நாட்டுதல்,ஏற்றுதல்

ஆரோபித்தல் - ஏற்றுதல்

ஆர்ச்சிதம் - தேட்டம்,தேடிய பொருள்

ஆர்மோனியம் - இசைக்கருவி

ஆர்வம் - அன்பு,விருப்பம்

ஆலகண்டண் - சிவன்,நஞ்சுமிடற்றன்,கறைமிடற்றன்

ஆலகம்- நெல்லிமரம்

ஆலம் - நஞ்சு

ஆலயம் - கோயில்

ஆலாபம்,ஆலாபனம் - அலப்பு,பேச்சு,உரையாடல்

ஆலோசனை - சூழ்தல்,சூழ்ச்சி,ஓர்வு,எண்ணம்,ஆராய்ச்சி

ஆவசியம் - கட்டாயம்,முதன்மை,இன்றியமையாமை

ஆவத்து,ஆபத்து - இக்கெட்டு,இடர்,பொல்லாங்கு

ஆவர்த்தி,ஆவருத்தம்,ஆவிருத்தி - தடவை,வரிசை,சுற்று,வழக்கம்

ஆவாகனம் - அழைத்தல்,உட்புகல்

ஆனந்தபரவசம் - இன்பக்களிப்பு,பேரின்பக்களிப்பு

ஆனந்தம் - இன்பம்,பேரின்பம்

ஆன்மா - உயிர்

இகம் - இவ்வுலகம்,இவ்விடம்,இப்பிறப்பு

இங்கிதம் - இனிமை,அடையாளம்,கருத்து,இடம் பொருள்

இச்சகம் - முகமன்

இச்சை - விருப்பம்,அவா,விழைவு,வேட்கை

இடபம்,ரிஷபம் - எருது,காளை,ஏறு,விடை

இட்டசித்தி - விருப்பப்பேறு

இதம்,ஹிதம் - இனிமை,நன்மை,அன்பு,அறம்

இதயம்,இதையம்,ஹிருதயம் - நெஞ்சம்,உள்ளம்

இதரம் - வேறு,இயல்,அழிவு,பகைமை

இதிகாசம் - பண்டை வரலாறு,பழங்கதை

இந்திர ஜாலம் - இமயவர்கோன்,வானவர் தலைவன்

இந்து - நிலா,திங்கள்,அம்புலி

இமாலயம்,ஹிமாலயம் - பனிமலை

இரகசியம் - மறைபொருள்,மறை,அற்றம்

இராசாபாசம் - அருவருப்பு,ஒழுங்கின்மை

இரசாயனம் - பொருளியைபு

இரட்சகம் - பாதுகாப்பு,மீட்பு

இரட்சை - காப்பு

இரணம்,ரணம் - புண்

இரதம்,ரதம் - தேர்

இரத்தம் - குருதி,செந்நீர்

இரத்தினம்,ரத்தினம் - மாமணி,செம்மணி

இரம்பம்,ரம்பம் - ஈர்வாள்

இராகம்,ராகம் - இசை,பண்,அவா,விருப்பு

இராகு - கருங்கோள்

இராக்கதர் - அரக்கர்

இராசசூயம் - அரசர் வேள்வி

இராசா - அரையன்,மன்னன்,அரசன்

இராச்சியம் - நாடு,அரசியல்

இராத்திரி - இரவு,கங்குல்

இருஷி,இருடி - முனிவன்,தவசி,துறவி

இதய கமலம் - நெஞ்சத்தாமரை

இருது - பருவம்,மகளிர் முதற்பூப்பு

இரேகை - வரி,எழுத்து,கையிறை,நிறை,தொடர்

இலகிரி,லகிரி,லாகிரி - வெறி,மயக்கம்

இலகு,லகு - எளிது,நொய்மை,நுண்மை,ஈரம்,பலா மரம்

இலங்கணம் - பட்டினி

இலஞ்சம் - கைக்கூலி,கையூட்டு,கையுறை

இலட்சணம்,லட்சணம் - அழகு,பார்வை

இலயித்தல் - ஒடுங்குதல்,சேர்ந்தொன்றித்தல்

இலெளகீகம்,இலவுகீகம் - உலகியல்,உலகப்போக்கு

இலாஞ்சனம்,இலாஞ்சனை - புகழ்,அடியாளம்,கறை

இலாபம்,லாபம் - ஊதியம்,மிச்சம்,பேறு

இலீலை,லீலை - விளையாட்டு

யுகம்,உகம் - உலக முடிவு,இரண்டு

உக்கிராணம் -களஞ்சியம்,சரக்கறை

உஷ்ணம் - வெப்பம்,சூடு

உசிதம் - உயர்வு,சிறப்பு,மேன்மை,தகுதி,ஒழுங்கு

உசிதன் - தக்கோன்

உச்சம் - உயர்ச்சி,சிறப்பு

உச்சரித்தல் - சொல்லுதல்,ஒலித்தல்,ஓதல்

உச்சரிப்பு - எழுத்தோசை

உச்சாட்டியம் - பேய கற்றல்,ஒட்டுதல்

உச்சி - மேடு,முகடு

உச்சிக்காலம்,உச்சிச்சமயம் - நண் பகல், நடுப் பகல்

உதயன் - பகலோன்

உதாரணம்,திருட்டாந்தம் - எடுத்துக்காட்டு,சான்று

உத்தமம் - உண்மை,மேன்மை

உத்தரியம்,உத்தரீயம் - மேலாடை

உத்தரவு - கட்டளை

உத்தி,யுத்தி - அறிவு,இணக்கம்,இசைவு,சூழ்ச்சி,சொல்

உத்தேசம்,உத்தேகம் - கருத்து,மதிப்பு,ஏறக்குறைய

உபகரணம் - கொடுத்தல்,உதபிபொருள்கள்,கருவி,துணைக்காரணம்

உபதேசம் - அருண்மொழி,அறிவுரை

உபயம் - உதவி,நன்கொடை,இரண்டு

உபாசநம்,உபாசநை,உபாசனை - வழிபாடு,வணக்கம்

உபாதி,உபாதை - நோய்,துன்பம்,வருத்தம்

உபாத்தியாயன் - கணக்காயன்,ஆசிரியன்,கற்பிப்போன்

உபாயம் - சூழ்ச்சி,நொய்மை,எளிது,சிறிது

உயுக்கம்,உயுத்தம்,யுத்தம் - போர்,தகுதி

உருசி,ருசி - சுவை

உருத்திராக்கம் - சிவமணி,சுக்குமணி

உரூபம்,ரூபம் - உருவம்,வடிவம்

உரொக்கம்,ரொக்கம் - கைப்பணம்,இருப்பு,கையிருப்பு

உரோமம்,ரோமம் - மயிர்,முடி,குஞ்சி

உல்லாசம் - மகிழ்ச்சி,விளையாட்டு,களிப்பு,உள்ளக்களிப்பு

உவதி,யுவதி, - மங்கை,பதினாறாண்டுப் பெண்

ஊகம் - கருதல்,ஓர்தல்,கருத்து,நினைவு

ஊர்ச்சிதம்,ஊர்ஜ்ஜிதம் - உட்பொருளுணர்தல், நிலைப்படுதல்,உறுதி,கருங்குரங்கு

எசமானன்,எஜமான் - தலைவன்,முதல்வன்,முதலாளி

எந்திரம் - பொறி

எமன் - கூற்றுவன்,மறலி

ஏகதேசம் - ஒருபால்,ஒருபுடை,சிறுபான்மை

ஏகம் - ஒன்று,தனிமை

ஏகாந்தம் - தனிமை,ஒரு முடிவு

ஏகோபித்தல் - ஒன்றுபடுதல்

ஏடணை,ஏஷணை - விருப்பம்

ஐது,ஹேது - காரணம்

ஏக்கம்,ஐக்கியம் - ஒற்றுமை

ஐஸ்வர்யம்,ஐச்வரியம் - செல்வம்,பொருள்,திரு

ஐதீகம்,ஐதிகம் - உலகுரை

ஐம் பூதம்,பஞ்ச பூதம் - ஐந்து முதற்பொருள்

ஓமம்,ஹோமம் - வேள்வி

ஒளடதம்,ஒளஷதம்- மருந்து

களோகம் - வான் வட்டம்,வளி மண்டலம்

கடகம் - கைவளை,வளையம்

கடம் - கடம்,யானைக்கதுப்பு

கடாட்சித்தல் - அருளல்

கடாரம் - கொப்பரை,தேங்காய்

கடிகாரம் - நாழிகை வட்டில்,பொழுது காட்டுங்கருவி

கடிகை - நாழிகை,தாழ்க்கோல்

கடினசித்தம் - வன்னெஞ்சம்

கடினம் - வன்மை,கடுமை,வருத்தம்,கொடுமை

கடூரம்,கொடூரம் - கொடுமை

கட்டம்,கஷ்டம் - துன்பம்,வருத்தம்

கணம்,ஹணம் - குழாம்,கூட்டம்,தொகுதி,நொடிப்பொழுது

கணி - கோள் நூல், கோல் நூல் வல்லான்

கணிகை - பொதுமகள்

கணிசம் - அளவு,மேம்பாடு

கணிதம் - கணக்கு

கண்டம் - நிலப்பிரிவு,துண்டு,கட்டி,மிடறு,கழுத்து

கண்திட்டி,கண்திருஷ்டி - கண்ணேறு

கதம்பகம்,கதம்பம் - கூட்டம்,மணப்பொருட் கூட்டு,சேர்ந்தது,இணைத்தது

கதலி - வாழை

கதி - நடை,செலவு,வழி,புகலிடம்,பற்றுக்கோடு,நிலை

கனகம்,கநகம் - பொன்

கனவான்,கநவான் - பெரியோன்,பெருமையாளன்,பெருந்தகை

கனிஷ்டை,கநிஷ்டை - பின்னோள்,தங்கை

கன்னிகை,கந்நிகை - மணமாகாதவள்,இளம்பெண்

கந்மம்,கருமம் - தொழில்,வினை

கபடம்,கவடம்,கபடு - கரவு,படிறு,வஞ்சகம்,மோசம்,சூது,ஒளிப்பு

கபாலம் - தலையோடு,மண்டையோடு

கபோதி - குருடன்

கப்பம் - இறை

கமண்டலம் - நீர்க்குடுவை

கமலம் - தாமரை,நீர்

கம்பீரம் - உயர்தோற்றம்,பெருமை,ஆழம்,செருக்கு

கயம்,ஹயம் - குளம்,ஆழம்,யானை

கரகம் - வட்டில்,நீர்க்குடுவை

கரகோசம்,கரகோஷம் - கைதட்டுதல்

கரணம் - கருவி,ஐம்பொறி

கரம் - கை

கருச் சித்தல் - முழங்கல்,இரைதல்

கருணை - அருள்,இரக்கம்

கர்த்தா,கருத்தா - தலைவன்,வினைமுதல்,ஆக்கியோன்,நூலாசிரியன்,முதல்வன்,கடவுள்

கர்ப்பவதி - சூலி

கர்ப்பாசயம் - கருப்பை

கர்வம் - செருக்கு,இறுமாப்பு

கலாபம்,கலபம் - மயில்,மயிற்றோகை

கலி - வறுமை,துன்பம்

கலியாணம் - மனம்,மன்றல்,பொன்,மகிழ்ச்சி

கவளீகரித்தல்,கபளீகரம்,கபளீகரித்தல் - முற்றிலும் விழுங்குதல்,விழுங்குதல்

கவனம் - கருத்து நோக்கம்,உன்னித்தல்

கவாத்து - படைக்கலப் பயிற்சி,வெட்டி விடுதல்

கவி - செய்யுள்,புலவன்,பாட்டு

கவுளி,கெளளி - பல்லி

களேபரம் - குழப்பம்,உடல்,பிணம்

கற்பம் - ஊழிக்காலம்,நெடுவாழ்க்கை மருந்து

கனம் - சுமை,பளு,பளுவு

காசம் - ஈளை,ஈளைநோய்,இருமல் நோய்

கசாயம்,கஷாயம் - காவி

காஞ்சிரம் - எட்டி மரம்

காட்டம்,காஷ்டம் - விறகு,வெகுளி

காதகன் - கொலையாளி

காயசித்தி - நீடுவாழ்ப் பேறு

காயம் - உடல்,யாக்கை,வான்

காரிய கர்த்தா - வினைமுதல்வன்

காரியதரிசி - அமைச்சன்,செயலாளன்

கலாட்சேபம் - பொழுதுபோக்கல்,நாட்கழித்தல்,வாழ்க்கை

கால நியமம் - காலமுறை,காலக்கடன்,கால்,ஒழுங்கு

கிஸ்தி - திறை,வரி

கிரகணம்,கிராணம் - பற்றுதல்,பிடித்தல்

கிரகஸ்தம் - இல்லற நிலை

கிரகம் - வீடு,கோள்,பற்றுதல்,பிடிப்பு

கிரணம் - ஒளி,கதிர்

கிரந்தம் - நூல்,எழுத்து

கிரமம் - ஒழுங்கு,முறைமை

கிரயம் - விலை

கிராதன் - குறவன்,வேட்டுவன்

கிரி - மலை,பன்றி

கிரிகை - தொழில்,செயல்,வினை,சடங்கு

கிரிமி,கிருமி - உயிரி,பூச்சி,புழு

கிரீடம் - முடி

கிருஷி - பயிர்,உழவு,பயிர் செய்கை

கிலம் - கழிவு,அழிவு,சிறுமை

கிலேசம் - அச்சம்,கவலை,துன்பம்

கீதம் - இசை,பாட்டு,பாடல்,இசைப்பாட்டு

கீர்த்தனம்,கீர்த்தனை - புகழ்ச்சி,புகழ்ப்பா

கீலகம் - ஆணி,பொருத்து

குஞ்சரம் - யானை

குஷ்டம் - தொழு நோய்,பெரு நோய்

குணஷ்டை - தொல்லை,துன்பம்

குதர்க்கம் - அழிவழக்கு

குதூகலம்,குதுகலம் - பெருங்களிப்பு,பெருமகிழ்வு

குபேரன் - பெருஞ்செல்வன்,செல்வக்கடவுள்

குமரி,குமாரி - நங்கை,மணமாகாப்பெண்,புதல்வி,மகள்

கும்பம் - குடம்

குருகடாட்சம் - ஆசிரியனருட்பார்வை

குரோதம் - உட்பகை

குலாலன் - குயவன்

குலிசம் - வேற்படை

குன்மம் - சூலை,வயிற்று வலி

கேதம் - துன்பம்,இடர்,குற்றம்

கேவலம் - சிறுமை,தனிமை

கோகிலம் - குயில்

கோடம்,கோஷம்,கோஷ்டம் - முழக்கம்,பேரோசை

கோஷ்டி - கூட்டம்

கோடி - நூறு நூறாயிரம்

கோதண்டம் - வில்

கோளகை,கோளம் - உருண்டை,வட்டம்

கெளரவம் - மேன்மை,பெருமை

சக - கூட,உடன்

சகசம்,ஸகஸம் - இயற்கை,ஒற்றுமை

சகஸ்ரநாமம் - ஆயிரந்திருமொழி,ஆயிரந்திருப்பெயர்

சகமார்க்கம் - தோழமை நெறி

சகலம் - எல்லாம்

சகவாசம் - கூடவிருத்தல்,உடனுரைதல்,பழக்கம்,சேர்க்கை,நட்பு

சகா - தோழன்,துணை

சகாப்தம் - ஆண்டு,நூறாண்டு

சகாயம் - நயம்,நன்மை,மலிவு,பயன்,உதவி,துணை

சகி,சகீ - தோழி

சகிதம் - உடன்

சகுணம் - குணத்தோடு கூடியது

சகுந்தம் - கழுகு,பறவை

சகுனம் - குறி

சகோதரம் - உடன்பிறப்பு

சகோதரி - உடன்பிறந்தாள்

சக்கரம் - உருளை,வட்டம்

சக்தி - ஆற்றல்,வல்லமை,வலி

சங்கடம்,சங்கட்டம் - இக்கெட்டு,நெருக்கடி,இடர்,கண்மூடுதல்

சங்கிதை - தொகுதி,வரலாறு

சடுதி,சடிதி - விரைவு

சஷ்டியப்த பூர்த்தி - அறுபதாமாண்டு நிறைவு

சண்டப்பிரசண்டம் - மிகு விரைவு

சண்டமாருதம் - பெருங்காற்று,கடியகாற்று,புயற்காற்று

சண்டாளம் - தீமை,புலைத்தன்மை,நம்பிக்கை கேடு

சண்டாளர் - தீவினையாளர்,இழிஞர்

சண்டித்தனம் - முருட்டுத்தன்மை,முரட்டுத்தன்மை

சதகோடி - நூறு கோடி

சதசு - அவை

சதம் - நூறு நிலை

சதானந்தம் - இடையறா வின்பம்

சதி - இறைவி,அழிவு,வஞ்சனை,சூழ்ச்சி

சந்தகம் - எப்பொழுதும்

சந்தானம் - வழி,வழித்தொடர்பு

சந்தித்தல் - எதிர்படுதல்,கூடுதல்

சந்திரலோகம் - திங்கள் உலகு,அம்புலியுலகம்

சந்திரன் - பிறை,கலையோன்,இரவோன்,அலவன்,அல்லோன்

சந்து - முடுக்கு,இயங்கும் உயிர்,தூது,பிளப்பு,பொருத்து

சந்துட்டம்,சந்துஷ்டி,சந்தோஷம் - மகிழ்ச்சி

சந்தேகம் - ஐயம்,ஐயுறவு

சந்தோஷம் - மகிழ்ச்சி,உவகை,களிப்பு

சன்னதி,சந்நதி,சந்நிதானம் - திருமுன்

சந்நியாசம் - துறவு,துறவறம்

சபதம் - ஆணை,உறுதிமொழி,வஞ்சினம்

சபம்,ஜெபம் - உருவேற்றல்

சபலம் - நிறைவேறல்,வெற்றி,நடுக்கம்,ஏக்கம்,இச்சை,அவா

சபா,சபை - அவை,மன்றம்,கழகம்,அரங்கம்

சபித்தல் - தீமொழி கூறல்,சினந்துரைத்தல்

சமஷ்டி - தொகுதி,எல்லாம்

சமதை - ஒப்பு

சமர்த்தன்,சமத்தன் - வல்லான்,வல்லவன்,திறமையாளன்

சமஸ்தானம்,சமத்தானம் - அரசவை,தலை நகர்

சமம் - இணை,ஈடு,மட்டம்,போர்,நடு,ஓர்மை

சமரச தத்துவம் - பொதுநிலையுண்மை

சமரசம் - பொது,வேறுபாடின்மை,ஒற்றுமை

சமர்ப்பணம் - ஒப்பித்தல்,உயர்ந்தோர்க்குக் கொடுத்தல்

சமாதானம் - அமைதி,இணக்கம்,தணிவு,உடன்பாடு,தக்கவிடை

சமாதி - அமைதி,பிணக்குழி,பேசாதிருத்தல்,இறப்பு,மரித்தல்

சமாப்தம்,சமாப்தி - முற்றுப்பெற்றது

சமாராதனை - உளநிறைவு

சமி,ஷமி - பொறு

சமிதை - வேள்வி விறகு,உலர்ந்த குச்சி

சமீபம் - அருகு,அணமை,மருங்கு

சமீன்தார்,ஜமீந்தார் - நிலக்காரன்,பெருநிலக்கிழார்

சமுதாயம் - குமுகம்,கூட்டம்

சமுத்திரம் - கடல்

சமை,ஷமை - பொறுமை

சம்சாரம்,சம்ஸாரம் - குடும்பம்,இல்லாள்,இல்லத்தரசி

சம்பத்து - செல்வம்,பொருள்

சம்பந்தம -உறவு,பற்று,இயைபு,சார்பு,தொடர்பு,பொருத்தம்

சம்பிரதாயம் - தொல்வழக்கு,முன்னோர் முறை,பண்டை முறை

சம்பு ரேட்சணம் - தெளித்தல்

சம்பூரணம் - நிறைவு

சம்மதம் - உடன்பாடு,ஒப்புமை,இயைபு

சம்ரஷணை - பாதுகாப்பு

சயம்,ஜெயம் - வெற்றி

சரணம்,சரண் -அடைக்கலம்,வணக்கம்,கால்,திருவடி

சரணாகதி - புகலடைதல்,அடைக்கலம்

சராசரம்,ஜங்கமா - இயங்கியற் பொருள், நிலையியற் பொருள்

சரிதம்,சரிதை,சரித்திரம் - வரலாறு

சரீரம் - உடல்,யாக்கை,மெய்

சருமம்,சர்மம் - தோல்

சர்ப்பம் - பாம்பு

சர்வகலாசாலை -

பல்கழைக் கழகம்

சலதளம்- அரசமரம்

சலதாரை - நீர்க்கால்,நீரோட்டம்,மதகு

சலதோசம் - நீர்க்கோர்வை,தடுமம், நீர்க்கோவை

சல்லாபம் - உரையாடல்

சவம் - பிணம்

சவுகரியம்,செளக்கியம்,செளகரியம் -நலம்

சவுந்தரியம்,செளந்தரியம்,சவுந்தரம் - அழகு

செளபாக்கியம்,சவுபாக்கியம் - செல்வம்

சற்காரியம் - உற்பொருளினின்று தோன்றும் வினை

சற்குணம் - நல்லியல்பு

சனனம்,ஜனனம்,சனிப்பு,சன்மம் - பிறப்பு

சாகசம் - ஆற்றல்,துணிவு,நெருக்கிடை

சாகரம் - கடல்

சாகுபடி - பயிர் செய்தல்

சாகை,ஜாகை(உருது) - தங்குமிடம்

சாக்கிரதை,ஜாக்கிரதை - விழிப்பு,உன்னிப்பு,எச்சரிக்கை