Wednesday, January 7, 2009

இந்தியாவில் யாருக்கு முதல் மரியாதை!

இந்தியாவில் யாருக்கு முதல் மரியாதை!
                                            போட்டிக்குப் பின் நட்சத்திர விடுதிக்குச் செல்லும் கிரிக்கெட் வீரர்கள்

இந்தியாவில் விளையாட்டு என்றால் கிரிக்கெட் தான் என்கிற நிலைமை, வெள்ளைக் காரர்கள் நம் தலையில் கட்டிவைத்ததை அப்படியே பிடித்துக் கொண்டோம். உலகப் புகழ் பெற்ற விளையாட்டான கால்ப் பந்து  விளையாட்டு மிகவும் பின் தங்கிய நிலையில் தான் இன்றளவும் இருக்கிறது. காரணம் அதற்கான ஆதரவு, ஊக்குவிப்பு எதுவும் மத்திய மாநில அரசாங்கத்திடம் இருந்து கிடைக்காது, இருக்கும் வெகு சில கிளப் -களும் மிகவும் நலிவடைந்த நிலையில் இருக்கின்றன. விளையாடுவதற்கு ஒரு தரமான விளையாட்டரங்கு அல்லது விளையாட்டு மைதானம் கிடையாது.

                                                          வெற்றிக்குப் பின் வெற்றி ஊர்வலம் மக்கள் வெள்ளத்தில்

ஹாக்கி போன்ற விளையாட்டுகளில் இந்தியா சிறந்து விளங்கிய போதிலும், அங்கும் இவர்களின் அரசியல் சித்து விளையாட்டுக்கள் அரங்கேறுகின்றன. திறமையானவர்கள் அலைக்கழிக்கப் படுகிறார்கள். இது ஹாக்கி விளையாட்டுக்கு விடப்பட்ட சாபம் அல்ல. எல்லா விளையாட்டுக்களிலும் விளையாடுபவர்கள் என்னவோ அரசியல் வாதிகளும் அதிகார வர்க்கங்களும் தானே.

இந்தியா போன்ற ஏழை நாடுகளில்(யாரும் கோவிப்பவர்கள் இருந்தால் வளரும் நாட்டில் என்று எடுத்துக் கொள்ளலாம்) பணக்கார விளையாட்டான, கிரிக்கெட்டை எவ்வாறு வெள்ளைக்காரர்கள் பிரபலப் படுத்தி விட்டு போனார்களோ அதே போல் பிலிப்பைன்ஸ் நாட்டில் கூடைப் பந்தை அவர்கள் தலையில் கட்டிவிட்டு சென்று விட்டார்கள்.

வளரும் நாடுகளில், அரசியல் தலையீடு, விளையாட்டை ஊக்குவிக்காத மந்தநிலை, தேவையான மைதானங்கள் இல்லாமை, அரசாங்கங்களுக்கு அதைப் பற்றிய கவலை இன்மை போன்றவைகளால் மற்ற பிரபலமான விளையாட்டுக்கள் காலப் போக்கில் மறக்கப் பட்டுக் கொண்டிருக்கின்றன.
இந்தியாவில் இருக்கும் கிரிக்கெட் வாரியத்தின் தலைவரை, பிரதமருக்கு அடுத்தார் போல் அதிக அதிகாரங்களைக் கொண்டவர்களாக அனைவரும் பார்ப்பதை நாமும் வேடிக்கையாகப் பார்க்க வேண்டியிருக்கிறது.

பத்து போட்டிகளில் தொடர்ந்து பூச்சியம் அடித்தாலும் கிரிக்கெட் வீரர்கள், பகட்டாகப் பவனி வர முடிகிறது. கிரிக்கெட் விளையாட்டில் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை. மிஞ்சி மிஞ்சிப் போனால் ஹர்பஜன் சிங் ஸ்ரீசாந்தை அறைவார், அதனால் ஸ்ரீசாந்தின் உயிருக்கு எந்த ஆபத்துமில்லை. ஹர்பஜன் சிங் ஆஸ்திரேலிய வீரரை திட்டுவார், அதனால் எந்த உயிர்ச் சேதமும் இல்லை. பரிசு வழங்கும் போது ஆஸ்திரேலிய வீரர் ரிக்கி பாண்டிங் இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர், மத்திய அமைச்சர் சரத்பவாரை பிடித்து தள்ளி விட்டு விட்டு போட்டோவிற்கு போஸ் கொடுப்பார்(ஓர் ஆஸ்திரேலிய அமைச்சரை இந்திய வீரர் தள்ளி விட்டு விட்டு இந்தியா வந்து சேரமுடியுமா?) அதனால் அவருக்கு எந்த உயிர் உடல் சேதமும் இல்லை.


இது போன்ற சில விரும்பத் தகாத விடயங்கள் நிகழ்ந்தேறினாலும், கிரிக்கெட் வீரர்களை தலையில் தூக்கி வைத்துக் கொண்டுதான் ஆடுகிறோம். விளையாட்டில் பூஜ்ஜியம் அடித்தாலும் விளம்பரத்தில் ராஜ்ஜியம் அமைத்துக் கொண்டிருப்பவர்கலாயிற்றே. அவர்களுக்கு பகட்டான விமானம், அனைத்து வசதிகளுடன் கூடிய பேருந்து. ராஜ மரியாதை. எல்லாம் செய்யலாம். தவறில்லை. ஆனால், நிற்க!
 
 
 
















தீவிரவாதிகளிடம் தாஜ் நட்சத்திர விடுதியில் சிக்கியவர்களை உயிரை பணையம் வைத்து மீட்ட கமாண்டோக்கள் தங்குமிடம் செல்கிறார்கள்

சமீபத்தில் இந்தியாவின் வர்த்தகத் தலைநகரம் மும்பையில்(வெளிநாட்டுக் காரனுக்கு புதுதில்லி எங்கே இருக்குன்னு கேட்டா பேந்த பேந்த விழிப்பான், ஆனால் மும்பை எங்கே இருக்குன்னா உடனே யா! பாலிவுட்!! இந்தியா!!! அப்படின்னு ஆரம்பிச்சுடுவான்) நடந்த தீவிரவாதத் தாக்குதலில் தங்களது உயிரைப் பணயம் வைத்து தாஜ் ஹோட்டலில் தீவிர வாதிகளிடம் சண்டையிட்டு அதில் சிலர் தங்கள் இன்னுயிரையும் நீத்து, அந்த ஹோட்டலில் இருந்த அப்பாவி மக்களை மீட்ட என்.எஸ்.ஜி எனப்படும் தேசிய பாதுகாப்பு கமாண்டோக்கள் எவ்வாறு மதிக்கப் படுகிறார்கள். அவர்கள் இந்த மும்பை தாஜ் ஹோட்டல் ஆப்பரேஷனை முடித்து விட்டு களைத்து பேருந்தில் செல்வதை, கிரிக்கெட் வீரர்கள் விளையாட்டை முடித்துவிட்டு(வெற்றியா தோல்வியா என்றெல்லாம் கேட்கக்கூடாது) பேருந்தில் செல்வதோடு ஒப்பிட்டுப் பார்த்தபோது கொஞ்சம் வேதனையாகத் தான் இருந்தது.

பெரும்பாலும் தேசிய பாதுகாப்புக் கமாண்டோக்கள் அரசியல் வாதிகளில் காருக்குப் பக்கத்தில் ஓடிக் கொண்டிருப்பார்கள். அவர்களை எப்படி ஊக்கு விக்க வேண்டும். வளர்ந்த நாடுகள் கமாண்டோக்களை எப்படி நடத்துகின்றன என்று அந்த நாடுகளிடம் இந்தியா பாடம் கற்றுக் கொள்ளவேண்டும்.

அதை விடுத்து இந்தியா ஒளிர்கிறது, இந்தியா முன்னேறிய நாடாகிக் கொண்டிருக்கிறது என்றெல்லாம் கூக்குரலிட்டால் எந்த உலக நாடும் இந்த கூக்குரலை செவி மடுப்பதாக இல்லை. எந்த கட்டமைப்பும் இல்லை, முன்னேறிய கணினி மென்பொருள் துறையையும் ஒழுங்காகத் தக்கவைக்க இயலவில்லை. முன்னேறும் நாடுகளைப் பாருங்கள் அவர்கள் விளையாட்டில் அதிக பதக்கங்களைப் பெறுவதைக் கண்கூடாகப் பார்க்கமுடியும்.(உதாரணத்திற்கு சீனா, ஆஸ்திரேலியா) அதற்கான அறிகுறியே இங்கு தெரியவில்லையே.
 
கட்டுகிற வீட்டிற்கு அடித்தளத்தை ஒழுங்காகப் போடுங்கள், அதை ஒழுங்காகப் போடாமல் விட்டு விட்டு, வீட்டில் வைக்கும் அழகுப் பொருட்களைப் பற்றி பேச ஆரம்பித்து விட்டால் வேடிக்கையாகத் தானே இருக்கும்.

44 கருத்துக்கள்:

சி தயாளன் said...

கிரிக்கெட்..ஒரு சூதாட்டம். ஆனால் கமாண்டோக்கள் ஆடியது மரண ஆட்டம்..
:((

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//
’டொன்’ லீ said...
கிரிக்கெட்..ஒரு சூதாட்டம். ஆனால் கமாண்டோக்கள் ஆடியது மரண ஆட்டம்..
:((
//

தங்கள் சொல்வது சரிதான் டொன் லீ!
வருகைக்கு நன்றி!!

//
’டொன்’ லீ said...
கிரிக்கெட்..ஒரு சூதாட்டம். ஆனால் கமாண்டோக்கள் ஆடியது மரண ஆட்டம்..
:((
//

தங்கள் சொல்வது சரிதான் டொன் லீ!
வருகைக்கு நன்றி!!

நிஜமா நல்லவன் said...

அண்ணே...இந்தியா பற்றி பேசாதீங்க....செம கடுப்பா இருக்கு....நாடு உருப்பட சான்ஸ் ரொம்ப ரொம்ப கம்மி....!

நிஜமா நல்லவன் said...

/வளர்ந்த நாடுகள் கமாண்டோக்களை எப்படி நடத்துகின்றன என்று அந்த நாடுகளிடம் இந்தியா பாடம் கற்றுக் கொள்ளவேண்டும்./

இது ஆகுறதில்லை....:)

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//நிஜமா நல்லவன் said...
அண்ணே...இந்தியா பற்றி பேசாதீங்க....செம கடுப்பா இருக்கு....நாடு உருப்பட சான்ஸ் ரொம்ப ரொம்ப கம்மி....!//


அன்பின் நிஜமா நல்லவன்,
என்ன இப்படி வாக்கு விட்டுட்டீங்க.
நீங்க விட்ட வாக்கை அரசியல் வாதிகளுக்குத் திருப்பி விட்டுடவா?

//நிஜமா நல்லவன் said...
அண்ணே...இந்தியா பற்றி பேசாதீங்க....செம கடுப்பா இருக்கு....நாடு உருப்பட சான்ஸ் ரொம்ப ரொம்ப கம்மி....!//


அன்பின் நிஜமா நல்லவன்,
என்ன இப்படி வாக்கு விட்டுட்டீங்க.
நீங்க விட்ட வாக்கை அரசியல் வாதிகளுக்குத் திருப்பி விட்டுடவா?

கூட்ஸ் வண்டி said...

அண்ணே...

அந்த சொ"குசு" பேருந்திலே இருக்கிறவன் மூஞ்சயும், கீழே கட்டை விரலை காட்டுபவரின் கம்பீர முகத்தையும் பாருங்களேன்.
பின்னவரின் முகத்தில் என்ன ஒரு பொலிவு, மற்றும் கம்பீரம்.

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//நிஜமா நல்லவன் said...
/வளர்ந்த நாடுகள் கமாண்டோக்களை எப்படி நடத்துகின்றன என்று அந்த நாடுகளிடம் இந்தியா பாடம் கற்றுக் கொள்ளவேண்டும்./

இது ஆகுறதில்லை....:)//


எங்கயோ பெங்களுருவில் இருப்பது போன்ற உணர்வு.

//நிஜமா நல்லவன் said...
/வளர்ந்த நாடுகள் கமாண்டோக்களை எப்படி நடத்துகின்றன என்று அந்த நாடுகளிடம் இந்தியா பாடம் கற்றுக் கொள்ளவேண்டும்./

இது ஆகுறதில்லை....:)//


எங்கயோ பெங்களுருவில் இருப்பது போன்ற உணர்வு.

நிஜமா நல்லவன் said...

/எங்கயோ பெங்களுருவில் இருப்பது போன்ற உணர்வு./

:))

நிஜமா நல்லவன் said...

/கூட்ஸ் வண்டி said...

அண்ணே...

அந்த சொ"குசு" பேருந்திலே இருக்கிறவன் மூஞ்சயும், கீழே கட்டை விரலை காட்டுபவரின் கம்பீர முகத்தையும் பாருங்களேன்.
பின்னவரின் முகத்தில் என்ன ஒரு பொலிவு, மற்றும் கம்பீரம்./

மறுக்கா சொல்லிக்கிறேன்...!

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//கூட்ஸ் வண்டி said...
அண்ணே...

அந்த சொ"குசு" பேருந்திலே இருக்கிறவன் மூஞ்சயும், கீழே கட்டை விரலை காட்டுபவரின் கம்பீர முகத்தையும் பாருங்களேன்.
பின்னவரின் முகத்தில் என்ன ஒரு பொலிவு, மற்றும் கம்பீரம்.//


நீங்கள் சொல்வது என்னோவோ வாஸ்தவம்தான்!
பாவம் உயிரைப் பணையம் வைப்பவர்கள் ஏன் இப்படி நடத்தப் படுகிறார்கள் என்பதுதான் வேதனை!!

//கூட்ஸ் வண்டி said...
அண்ணே...

அந்த சொ"குசு" பேருந்திலே இருக்கிறவன் மூஞ்சயும், கீழே கட்டை விரலை காட்டுபவரின் கம்பீர முகத்தையும் பாருங்களேன்.
பின்னவரின் முகத்தில் என்ன ஒரு பொலிவு, மற்றும் கம்பீரம்.//


நீங்கள் சொல்வது என்னோவோ வாஸ்தவம்தான்!
பாவம் உயிரைப் பணையம் வைப்பவர்கள் ஏன் இப்படி நடத்தப் படுகிறார்கள் என்பதுதான் வேதனை!!

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//நிஜமா நல்லவன் said...
/எங்கயோ பெங்களுருவில் இருப்பது போன்ற உணர்வு./

:))//



பெங்களுரு வட்டார வழக்கு என்று சொல்லவந்தேன்.

//நிஜமா நல்லவன் said...
/எங்கயோ பெங்களுருவில் இருப்பது போன்ற உணர்வு./

:))//



பெங்களுரு வட்டார வழக்கு என்று சொல்லவந்தேன்.

ஜோசப் பால்ராஜ் said...

உங்கள் கருத்துகளோடு முற்றிலும் உடன்படுகிறேன்.
டொன் லீ ஒரு வாசகம் சொன்னாலும் திருவாசகமாகச் சொல்லியிருக்கார்.

என்ன செய்வது? நம் நாட்டில் உண்மையை விட போலிக்கும், நிழலுக்கும் தானே மரியாதை அதிகம்.

விளையாட்டில் முதலில் எல்லா விளையாட்டையும் நிர்வகிக்கும் கழகங்களில் இருந்தும் விளையாட்டுக்குத் தொடர்பில்லாதவர்களை தூக்கி எறிய வேண்டும்.

ஹாக்கி விளையாட்டு மேம்பாட்டுக் கழகத்தில் எம்.எஸ்.கில் அடிக்கிற கூத்து தாங்க முடியாதது. அதே போல கிரிக்கெட் வாரியத்துல சரத்பவார் - டால்மியா கும்பல் அடிக்கிற கூத்தும் தாங்க முடியாத ஒன்னு. இவங்களுக்கு எல்லாம் விளையாட்டு முக்கியமேயில்ல. அங்க இருக்க பணம் தான் முக்கியம்.

நிஜமா நல்லவன் said...

/ஜோதிபாரதி said...

//நிஜமா நல்லவன் said...
/எங்கயோ பெங்களுருவில் இருப்பது போன்ற உணர்வு./

:))//



பெங்களுரு வட்டார வழக்கு என்று சொல்லவந்தேன்./

தெரியுது அண்ணே....பெங்களூரு வாசிங்க கூட ரொம்ப பேசுறதை குறைக்கணும்...:)

கூட்ஸ் வண்டி said...

/*நீங்கள் சொல்வது என்னோவோ வாஸ்தவம்தான்!
பாவம் உயிரைப் பணையம் வைப்பவர்கள் ஏன் இப்படி நடத்தப் படுகிறார்கள் என்பதுதான் வேதனை!!*/

அண்ணே. அந்த ஆதங்கம் எனக்கும் உள்ளது.
ஆனா என்ன சொல்றது?
இது "குசு"புக்கும், நமிதாவுக்கும் கோவில் கட்டுற ஊரு இது....
இப்படி பச்சபுள்ளையா இருக்கியாலெ!
பார்த்து சூதானமா இருங்கப்பு.

நிஜமா நல்லவன் said...

/ கிரிக்கெட் வாரியத்துல சரத்பவார் - டால்மியா கும்பல் அடிக்கிற கூத்தும் தாங்க முடியாத ஒன்னு. இவங்களுக்கு எல்லாம் விளையாட்டு முக்கியமேயில்ல. அங்க இருக்க பணம் தான் முக்கியம்./

அவங்களை குறை சொல்லி புண்ணியம் இல்லை.....நாம திருந்தனும்....எல்லோரும் கிரிக்கெட் பார்க்கிறதை அதுவும் இந்தியா விளையாடுவதை பார்க்கிறதை நிறுத்தனும்.....பணம் இருக்கிற வரைக்கும் வருகிறவரைக்கும் தானே ஆட்டம் போடுவாங்க...!

நையாண்டி நைனா said...

/* ஜோசப் பால்ராஜ் said...
உங்கள் கருத்துகளோடு முற்றிலும் உடன்படுகிறேன்.*/

சிங்கம் காளம் இறங்கிடுச்சே....

நையாண்டி நைனா said...

/* ஜோசப் பால்ராஜ் said...
உங்கள் கருத்துகளோடு முற்றிலும் உடன்படுகிறேன்.*/

சிங்கம் களம் இறங்கிடுச்சே....

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

// நிஜமா நல்லவன் said...
/கூட்ஸ் வண்டி said...

அண்ணே...

அந்த சொ"குசு" பேருந்திலே இருக்கிறவன் மூஞ்சயும், கீழே கட்டை விரலை காட்டுபவரின் கம்பீர முகத்தையும் பாருங்களேன்.
பின்னவரின் முகத்தில் என்ன ஒரு பொலிவு, மற்றும் கம்பீரம்./

மறுக்கா சொல்லிக்கிறேன்...!//


மறுக்கா சொன்னதற்கு மறுக்கா நன்றி!

// நிஜமா நல்லவன் said...
/கூட்ஸ் வண்டி said...

அண்ணே...

அந்த சொ"குசு" பேருந்திலே இருக்கிறவன் மூஞ்சயும், கீழே கட்டை விரலை காட்டுபவரின் கம்பீர முகத்தையும் பாருங்களேன்.
பின்னவரின் முகத்தில் என்ன ஒரு பொலிவு, மற்றும் கம்பீரம்./

மறுக்கா சொல்லிக்கிறேன்...!//


மறுக்கா சொன்னதற்கு மறுக்கா நன்றி!

நிஜமா நல்லவன் said...

/விளையாட்டில் முதலில் எல்லா விளையாட்டையும் நிர்வகிக்கும் கழகங்களில் இருந்தும் விளையாட்டுக்குத் தொடர்பில்லாதவர்களை தூக்கி எறிய வேண்டும்./

விளையாட்டுக்கு தொடர்பில்லாதவர்களை தூக்கி எறியவேண்டிய இடத்தில் இருப்பவர்களையே தூக்கி எறியவேண்டிய நிலை தான் நிலவுகிறது.....இதில் யாரை யார் தூக்கி எறிவது????

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//ஜோசப் பால்ராஜ் said...
உங்கள் கருத்துகளோடு முற்றிலும் உடன்படுகிறேன்.
டொன் லீ ஒரு வாசகம் சொன்னாலும் திருவாசகமாகச் சொல்லியிருக்கார்.

என்ன செய்வது? நம் நாட்டில் உண்மையை விட போலிக்கும், நிழலுக்கும் தானே மரியாதை அதிகம்.

விளையாட்டில் முதலில் எல்லா விளையாட்டையும் நிர்வகிக்கும் கழகங்களில் இருந்தும் விளையாட்டுக்குத் தொடர்பில்லாதவர்களை தூக்கி எறிய வேண்டும்.

ஹாக்கி விளையாட்டு மேம்பாட்டுக் கழகத்தில் எம்.எஸ்.கில் அடிக்கிற கூத்து தாங்க முடியாதது. அதே போல கிரிக்கெட் வாரியத்துல சரத்பவார் - டால்மியா கும்பல் அடிக்கிற கூத்தும் தாங்க முடியாத ஒன்னு. இவங்களுக்கு எல்லாம் விளையாட்டு முக்கியமேயில்ல. அங்க இருக்க பணம் தான் முக்கியம்.//

உங்கள் ஆதங்கம் நியாயமானதுதான் ஜோசப்,
நம்ம ஊரு முத்தையா, டால்மியா, சரத் பவார் இவங்க ராஜ்ஜியம்தான் கிரிக்கெட் வாரியத்தில். ஹாக்கி எம்.எஸ்.கில் பற்றி சொன்னீர்களே அவன் நம் ஈழத்தமிழர்களை எப்படி அழிப்பது என்று சிறிலங்க அரசுக்கு பாடம் நடத்தியவனாச்சே! இவனுகளையெல்லாம் ஒழிக்கணும்.

//ஜோசப் பால்ராஜ் said...
உங்கள் கருத்துகளோடு முற்றிலும் உடன்படுகிறேன்.
டொன் லீ ஒரு வாசகம் சொன்னாலும் திருவாசகமாகச் சொல்லியிருக்கார்.

என்ன செய்வது? நம் நாட்டில் உண்மையை விட போலிக்கும், நிழலுக்கும் தானே மரியாதை அதிகம்.

விளையாட்டில் முதலில் எல்லா விளையாட்டையும் நிர்வகிக்கும் கழகங்களில் இருந்தும் விளையாட்டுக்குத் தொடர்பில்லாதவர்களை தூக்கி எறிய வேண்டும்.

ஹாக்கி விளையாட்டு மேம்பாட்டுக் கழகத்தில் எம்.எஸ்.கில் அடிக்கிற கூத்து தாங்க முடியாதது. அதே போல கிரிக்கெட் வாரியத்துல சரத்பவார் - டால்மியா கும்பல் அடிக்கிற கூத்தும் தாங்க முடியாத ஒன்னு. இவங்களுக்கு எல்லாம் விளையாட்டு முக்கியமேயில்ல. அங்க இருக்க பணம் தான் முக்கியம்.//

உங்கள் ஆதங்கம் நியாயமானதுதான் ஜோசப்,
நம்ம ஊரு முத்தையா, டால்மியா, சரத் பவார் இவங்க ராஜ்ஜியம்தான் கிரிக்கெட் வாரியத்தில். ஹாக்கி எம்.எஸ்.கில் பற்றி சொன்னீர்களே அவன் நம் ஈழத்தமிழர்களை எப்படி அழிப்பது என்று சிறிலங்க அரசுக்கு பாடம் நடத்தியவனாச்சே! இவனுகளையெல்லாம் ஒழிக்கணும்.

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

// நிஜமா நல்லவன் said...
/ஜோதிபாரதி said...

//நிஜமா நல்லவன் said...
/எங்கயோ பெங்களுருவில் இருப்பது போன்ற உணர்வு./

:))//



பெங்களுரு வட்டார வழக்கு என்று சொல்லவந்தேன்./

தெரியுது அண்ணே....பெங்களூரு வாசிங்க கூட ரொம்ப பேசுறதை குறைக்கணும்...:)//

தங்கள் சுற்றம் பெங்களுரு வாசிகளா நிஜமா நல்லவன்!

// நிஜமா நல்லவன் said...
/ஜோதிபாரதி said...

//நிஜமா நல்லவன் said...
/எங்கயோ பெங்களுருவில் இருப்பது போன்ற உணர்வு./

:))//



பெங்களுரு வட்டார வழக்கு என்று சொல்லவந்தேன்./

தெரியுது அண்ணே....பெங்களூரு வாசிங்க கூட ரொம்ப பேசுறதை குறைக்கணும்...:)//

தங்கள் சுற்றம் பெங்களுரு வாசிகளா நிஜமா நல்லவன்!

நிஜமா நல்லவன் said...

/தங்கள் சுற்றம் பெங்களுரு வாசிகளா நிஜமா நல்லவன்!/

அட பதிவுலக சுற்றங்களை சொன்னேன்....:)

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//கூட்ஸ் வண்டி said...
/*நீங்கள் சொல்வது என்னோவோ வாஸ்தவம்தான்!
பாவம் உயிரைப் பணையம் வைப்பவர்கள் ஏன் இப்படி நடத்தப் படுகிறார்கள் என்பதுதான் வேதனை!!*/

அண்ணே. அந்த ஆதங்கம் எனக்கும் உள்ளது.
ஆனா என்ன சொல்றது?
இது "குசு"புக்கும், நமிதாவுக்கும் கோவில் கட்டுற ஊரு இது....
இப்படி பச்சபுள்ளையா இருக்கியாலெ!
பார்த்து சூதானமா இருங்கப்பு.
//

ஆதங்கத்துக்கு நன்றிங்க!
பச்ச புள்ளை தாங்கோ!
சூதானமா இருந்தும் பாத்துட்டேன்,
நூதனமா இருந்தும் பாத்துட்டேன்.
இந்தியா மாறலையே.
ஒரு வேலை 2011-ல் மாறலாம்.

//கூட்ஸ் வண்டி said...
/*நீங்கள் சொல்வது என்னோவோ வாஸ்தவம்தான்!
பாவம் உயிரைப் பணையம் வைப்பவர்கள் ஏன் இப்படி நடத்தப் படுகிறார்கள் என்பதுதான் வேதனை!!*/

அண்ணே. அந்த ஆதங்கம் எனக்கும் உள்ளது.
ஆனா என்ன சொல்றது?
இது "குசு"புக்கும், நமிதாவுக்கும் கோவில் கட்டுற ஊரு இது....
இப்படி பச்சபுள்ளையா இருக்கியாலெ!
பார்த்து சூதானமா இருங்கப்பு.
//

ஆதங்கத்துக்கு நன்றிங்க!
பச்ச புள்ளை தாங்கோ!
சூதானமா இருந்தும் பாத்துட்டேன்,
நூதனமா இருந்தும் பாத்துட்டேன்.
இந்தியா மாறலையே.
ஒரு வேலை 2011-ல் மாறலாம்.

நிஜமா நல்லவன் said...

/தங்கள் சுற்றம் பெங்களுரு வாசிகளா நிஜமா நல்லவன்!/

போகிறபோக்கில் எடியூரப்பாவுக்கு நான் சொந்தக்காரன்னு சொல்லாம விட்டீங்களே....:)

ஜெகதீசன் said...

//
வளர்ந்த நாடுகள் கமாண்டோக்களை எப்படி நடத்துகின்றன என்று அந்த நாடுகளிடம் இந்தியா பாடம் கற்றுக் கொள்ளவேண்டும்.
//
தப்பா சொல்லீருக்கீங்க....:P
இந்தியா கமாண்டோக்களை எப்படி நடத்துகின்றது என்று இந்தியாவிடம் வளர்ந்த நாடுகள் பாடம் கற்றுக் கொள்ளவேண்டும்.

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//நிஜமா நல்லவன் said...
/ கிரிக்கெட் வாரியத்துல சரத்பவார் - டால்மியா கும்பல் அடிக்கிற கூத்தும் தாங்க முடியாத ஒன்னு. இவங்களுக்கு எல்லாம் விளையாட்டு முக்கியமேயில்ல. அங்க இருக்க பணம் தான் முக்கியம்./

அவங்களை குறை சொல்லி புண்ணியம் இல்லை.....நாம திருந்தனும்....எல்லோரும் கிரிக்கெட் பார்க்கிறதை அதுவும் இந்தியா விளையாடுவதை பார்க்கிறதை நிறுத்தனும்.....பணம் இருக்கிற வரைக்கும் வருகிறவரைக்கும் தானே ஆட்டம் போடுவாங்க...!
//

நூத்துல ஒரு வார்த்தை!
ஆனா! யாரைப் பார்த்தாலும் நீங்க திருந்துங்க அப்புறம் நான் திருந்துறேன் அப்படின்னு சொல்றாங்களே. என்ன பண்றது.

//நிஜமா நல்லவன் said...
/ கிரிக்கெட் வாரியத்துல சரத்பவார் - டால்மியா கும்பல் அடிக்கிற கூத்தும் தாங்க முடியாத ஒன்னு. இவங்களுக்கு எல்லாம் விளையாட்டு முக்கியமேயில்ல. அங்க இருக்க பணம் தான் முக்கியம்./

அவங்களை குறை சொல்லி புண்ணியம் இல்லை.....நாம திருந்தனும்....எல்லோரும் கிரிக்கெட் பார்க்கிறதை அதுவும் இந்தியா விளையாடுவதை பார்க்கிறதை நிறுத்தனும்.....பணம் இருக்கிற வரைக்கும் வருகிறவரைக்கும் தானே ஆட்டம் போடுவாங்க...!
//

நூத்துல ஒரு வார்த்தை!
ஆனா! யாரைப் பார்த்தாலும் நீங்க திருந்துங்க அப்புறம் நான் திருந்துறேன் அப்படின்னு சொல்றாங்களே. என்ன பண்றது.

நையாண்டி நைனா said...

/*ஜெகதீசன் said...
//
வளர்ந்த நாடுகள் கமாண்டோக்களை எப்படி நடத்துகின்றன என்று அந்த நாடுகளிடம் இந்தியா பாடம் கற்றுக் கொள்ளவேண்டும்.
//
தப்பா சொல்லீருக்கீங்க....:P
இந்தியா கமாண்டோக்களை எப்படி நடத்துகின்றது என்று இந்தியாவிடம் வளர்ந்த நாடுகள் பாடம் கற்றுக் கொள்ளவேண்டும்.
*/

COST CUTTING?????

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//நையாண்டி நைனா said...
/* ஜோசப் பால்ராஜ் said...
உங்கள் கருத்துகளோடு முற்றிலும் உடன்படுகிறேன்.*/

சிங்கம் காளம் இறங்கிடுச்சே....//



சிங்கம் எத்தனை களைத்தையோ பாத்திருக்கிறது. இது என்ன ஜுஜுபி!

//நையாண்டி நைனா said...
/* ஜோசப் பால்ராஜ் said...
உங்கள் கருத்துகளோடு முற்றிலும் உடன்படுகிறேன்.*/

சிங்கம் காளம் இறங்கிடுச்சே....//



சிங்கம் எத்தனை களைத்தையோ பாத்திருக்கிறது. இது என்ன ஜுஜுபி!

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

// நிஜமா நல்லவன் said...
/தங்கள் சுற்றம் பெங்களுரு வாசிகளா நிஜமா நல்லவன்!/

அட பதிவுலக சுற்றங்களை சொன்னேன்....:)//

அப்பா பெங்களுரு ராமைத்தான் சொல்றிய!

// நிஜமா நல்லவன் said...
/தங்கள் சுற்றம் பெங்களுரு வாசிகளா நிஜமா நல்லவன்!/

அட பதிவுலக சுற்றங்களை சொன்னேன்....:)//

அப்பா பெங்களுரு ராமைத்தான் சொல்றிய!

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

// நிஜமா நல்லவன் said...
/தங்கள் சுற்றம் பெங்களுரு வாசிகளா நிஜமா நல்லவன்!/

போகிறபோக்கில் எடியூரப்பாவுக்கு நான் சொந்தக்காரன்னு சொல்லாம விட்டீங்களே....:)//


அவரும்தான் நம்ம உறவைத் தேடி ஒகனேக்கல் வரைக்கும் வந்துட்டுப் போனாரே!
நல்ல மனுஷன் அவர் என்ன பண்ணுவாரு.

// நிஜமா நல்லவன் said...
/தங்கள் சுற்றம் பெங்களுரு வாசிகளா நிஜமா நல்லவன்!/

போகிறபோக்கில் எடியூரப்பாவுக்கு நான் சொந்தக்காரன்னு சொல்லாம விட்டீங்களே....:)//


அவரும்தான் நம்ம உறவைத் தேடி ஒகனேக்கல் வரைக்கும் வந்துட்டுப் போனாரே!
நல்ல மனுஷன் அவர் என்ன பண்ணுவாரு.

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//ஜெகதீசன் said...
//
வளர்ந்த நாடுகள் கமாண்டோக்களை எப்படி நடத்துகின்றன என்று அந்த நாடுகளிடம் இந்தியா பாடம் கற்றுக் கொள்ளவேண்டும்.
//
தப்பா சொல்லீருக்கீங்க....:P
இந்தியா கமாண்டோக்களை எப்படி நடத்துகின்றது என்று இந்தியாவிடம் வளர்ந்த நாடுகள் பாடம் கற்றுக் கொள்ளவேண்டும்.//

அரசியல் வாதிகளின் காருக்குப் பின்னால ஓடவிடனும்னு எல்லா நாட்டுக்கும் ஒரு கடிதம் போட்டா அவங்களுக்கு செலவில்லாம வேலை முடியும்.

//ஜெகதீசன் said...
//
வளர்ந்த நாடுகள் கமாண்டோக்களை எப்படி நடத்துகின்றன என்று அந்த நாடுகளிடம் இந்தியா பாடம் கற்றுக் கொள்ளவேண்டும்.
//
தப்பா சொல்லீருக்கீங்க....:P
இந்தியா கமாண்டோக்களை எப்படி நடத்துகின்றது என்று இந்தியாவிடம் வளர்ந்த நாடுகள் பாடம் கற்றுக் கொள்ளவேண்டும்.//

அரசியல் வாதிகளின் காருக்குப் பின்னால ஓடவிடனும்னு எல்லா நாட்டுக்கும் ஒரு கடிதம் போட்டா அவங்களுக்கு செலவில்லாம வேலை முடியும்.

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//நையாண்டி நைனா said...
/*ஜெகதீசன் said...
//
வளர்ந்த நாடுகள் கமாண்டோக்களை எப்படி நடத்துகின்றன என்று அந்த நாடுகளிடம் இந்தியா பாடம் கற்றுக் கொள்ளவேண்டும்.
//
தப்பா சொல்லீருக்கீங்க....:P
இந்தியா கமாண்டோக்களை எப்படி நடத்துகின்றது என்று இந்தியாவிடம் வளர்ந்த நாடுகள் பாடம் கற்றுக் கொள்ளவேண்டும்.
*/

COST CUTTING?????
//

ஆம். பொருளாதார நெருக்கடில என்ன பண்றது.

//நையாண்டி நைனா said...
/*ஜெகதீசன் said...
//
வளர்ந்த நாடுகள் கமாண்டோக்களை எப்படி நடத்துகின்றன என்று அந்த நாடுகளிடம் இந்தியா பாடம் கற்றுக் கொள்ளவேண்டும்.
//
தப்பா சொல்லீருக்கீங்க....:P
இந்தியா கமாண்டோக்களை எப்படி நடத்துகின்றது என்று இந்தியாவிடம் வளர்ந்த நாடுகள் பாடம் கற்றுக் கொள்ளவேண்டும்.
*/

COST CUTTING?????
//

ஆம். பொருளாதார நெருக்கடில என்ன பண்றது.

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி திரு நிஜமா நல்லவன் "பாரதி", கூட்ஸ் வண்டி, டொன் லீ, யூசுப் பால்ராஜ் ஐயங்கார், நையாண்டி நைனா, ஜெகதீசன் (இ.கா). தங்கள் கருத்துக்கள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவை.

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி திரு நிஜமா நல்லவன் "பாரதி", கூட்ஸ் வண்டி, டொன் லீ, யூசுப் பால்ராஜ் ஐயங்கார், நையாண்டி நைனா, ஜெகதீசன் (இ.கா). தங்கள் கருத்துக்கள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவை.

நட்புடன் ஜமால் said...

\\எல்லா விளையாட்டுக்களிலும் விளையாடுபவர்கள் என்னவோ அரசியல் வாதிகளும் அதிகார வர்க்கங்களும் தானே. \\

நிதர்சணம்

(தாமதமாக வந்ததுக்கு மன்னிக்கவும்)

நட்புடன் ஜமால் said...

\\விளையாட்டில் பூஜ்ஜியம் அடித்தாலும் விளம்பரத்தில் ராஜ்ஜியம் அமைத்துக் கொண்டிருப்பவர்கலாயிற்றே. \\

சரியாக சொன்னீர்கள்

நட்புடன் ஜமால் said...

\\அவர்கள் விளையாட்டில் அதிக பதக்கங்களைப் பெறுவதைக் கண்கூடாகப் பார்க்கமுடியும்.\\

அண்ணே நம்மாளுங்க விளையாடும் விளையாட்டுக்கள் அங்கு சேர்க்க படுவதில்லை ...

விட்டு பாருங்க ...

என்ன விளையாட்டு என்று நீங்கள் கேட்க மாட்டீர்கள் தானே ...

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//நட்புடன் ஜமால் said...
\\எல்லா விளையாட்டுக்களிலும் விளையாடுபவர்கள் என்னவோ அரசியல் வாதிகளும் அதிகார வர்க்கங்களும் தானே. \\

நிதர்சணம்

(தாமதமாக வந்ததுக்கு மன்னிக்கவும்)//


அன்பின் நட்புடன் ஜமால்!
நீங்க எப்ப வந்தாலும் உங்களுக்கு இங்கு இட முன்பதிவு கண்டிப்பாக உண்டு.
அதிரை ஜமால் என்று எல்லோரையும் அதிர வைத்து விட்டு நட்புடன் ஜமால் என்று நயமாக வருகிறீர்களே! வாழ்த்துக்கள்!!

//நட்புடன் ஜமால் said...
\\எல்லா விளையாட்டுக்களிலும் விளையாடுபவர்கள் என்னவோ அரசியல் வாதிகளும் அதிகார வர்க்கங்களும் தானே. \\

நிதர்சணம்

(தாமதமாக வந்ததுக்கு மன்னிக்கவும்)//


அன்பின் நட்புடன் ஜமால்!
நீங்க எப்ப வந்தாலும் உங்களுக்கு இங்கு இட முன்பதிவு கண்டிப்பாக உண்டு.
அதிரை ஜமால் என்று எல்லோரையும் அதிர வைத்து விட்டு நட்புடன் ஜமால் என்று நயமாக வருகிறீர்களே! வாழ்த்துக்கள்!!

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//நட்புடன் ஜமால் said...
\\விளையாட்டில் பூஜ்ஜியம் அடித்தாலும் விளம்பரத்தில் ராஜ்ஜியம் அமைத்துக் கொண்டிருப்பவர்கலாயிற்றே. \\

சரியாக சொன்னீர்கள்//

அவர்களுக்கு சம்பளத்திற்கு மேல் கிடைக்கின்ற ஐட்டங்கள் அல்லவா இவைகள்!

//நட்புடன் ஜமால் said...
\\விளையாட்டில் பூஜ்ஜியம் அடித்தாலும் விளம்பரத்தில் ராஜ்ஜியம் அமைத்துக் கொண்டிருப்பவர்கலாயிற்றே. \\

சரியாக சொன்னீர்கள்//

அவர்களுக்கு சம்பளத்திற்கு மேல் கிடைக்கின்ற ஐட்டங்கள் அல்லவா இவைகள்!

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//நட்புடன் ஜமால் said...
\\அவர்கள் விளையாட்டில் அதிக பதக்கங்களைப் பெறுவதைக் கண்கூடாகப் பார்க்கமுடியும்.\\

அண்ணே நம்மாளுங்க விளையாடும் விளையாட்டுக்கள் அங்கு சேர்க்க படுவதில்லை ...

விட்டு பாருங்க ...

என்ன விளையாட்டு என்று நீங்கள் கேட்க மாட்டீர்கள் தானே ...//


கிட்டிப்புல்லு, கோலி(கசி பழிங்கு ஆட்டம்),கிண்டு(லாக்கடிக்கிறது), போர்க் காய், ஜல்லிக் கட்டு, மஞ்சு விரட்டு(ஜல்லிக் கட்டுடன் வேறுபட்டது), பானை உடைத்தல், இசை நாற்காலி, சாக்கு ஓட்டம், ரேக்களா ரேஸ், பம்பரம், கோ கோ, கபடி, நொண்டிக் கோடு(அதான் ஓட்டாஞ்சில்லு),கிரிக்கெட்(சேக்குராங்கன்னு சொல்றாங்க)

//நட்புடன் ஜமால் said...
\\அவர்கள் விளையாட்டில் அதிக பதக்கங்களைப் பெறுவதைக் கண்கூடாகப் பார்க்கமுடியும்.\\

அண்ணே நம்மாளுங்க விளையாடும் விளையாட்டுக்கள் அங்கு சேர்க்க படுவதில்லை ...

விட்டு பாருங்க ...

என்ன விளையாட்டு என்று நீங்கள் கேட்க மாட்டீர்கள் தானே ...//


கிட்டிப்புல்லு, கோலி(கசி பழிங்கு ஆட்டம்),கிண்டு(லாக்கடிக்கிறது), போர்க் காய், ஜல்லிக் கட்டு, மஞ்சு விரட்டு(ஜல்லிக் கட்டுடன் வேறுபட்டது), பானை உடைத்தல், இசை நாற்காலி, சாக்கு ஓட்டம், ரேக்களா ரேஸ், பம்பரம், கோ கோ, கபடி, நொண்டிக் கோடு(அதான் ஓட்டாஞ்சில்லு),கிரிக்கெட்(சேக்குராங்கன்னு சொல்றாங்க)

கோவி.கண்ணன் said...

//கிரிக்கெட் விளையாட்டில் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை. மிஞ்சி மிஞ்சிப் போனால் ஹர்பஜன் சிங் ஸ்ரீசாந்தை அறைவார், அதனால் ஸ்ரீசாந்தின் உயிருக்கு எந்த ஆபத்துமில்லை. ஹர்பஜன் சிங் ஆஸ்திரேலிய வீரரை திட்டுவார், அதனால் எந்த உயிர்ச் சேதமும் இல்லை//

செம காமடி !
:)

இராணுவ வீரர்கள் குறித்து உங்கள் ஆதங்கம்... பகிர்கிறேன்.

நமீதா வீட்டு நாய்குட்டி சாலையில் சென்றால் கூட டிராபிக் ஜாம் ஆகிடும். எல்லாம் நட்சத்திர அந்தெஸ்து! ரசிகனுங்களைத்தான் சொல்லனும்

கோவி.கண்ணன் said...

//இவங்களுக்கு எல்லாம் விளையாட்டு முக்கியமேயில்ல. அங்க இருக்க பணம் தான் முக்கியம்.//

யூசூப் ஐயங்கார் எப்போதாவது பின்னூட்டம் போட்டாலும் தத்துவம், யதார்த்த மழையாக பொழிஞ்சுடுறார்

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

// கோவி.கண்ணன் said...
//கிரிக்கெட் விளையாட்டில் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை. மிஞ்சி மிஞ்சிப் போனால் ஹர்பஜன் சிங் ஸ்ரீசாந்தை அறைவார், அதனால் ஸ்ரீசாந்தின் உயிருக்கு எந்த ஆபத்துமில்லை. ஹர்பஜன் சிங் ஆஸ்திரேலிய வீரரை திட்டுவார், அதனால் எந்த உயிர்ச் சேதமும் இல்லை//

செம காமடி !
:)

இராணுவ வீரர்கள் குறித்து உங்கள் ஆதங்கம்... பகிர்கிறேன்.

நமீதா வீட்டு நாய்குட்டி சாலையில் சென்றால் கூட டிராபிக் ஜாம் ஆகிடும். எல்லாம் நட்சத்திர அந்தெஸ்து! ரசிகனுங்களைத்தான் சொல்லனும்
//

கோவியாரே வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி!
நமீதா வீட்டு நாய்க்குட்டியா? அது கொழு கொழு என்றல்லவா இருக்கும்.
கண்டிப்பா டிராபிக் ஜாம் ஆவும்.

// கோவி.கண்ணன் said...
//கிரிக்கெட் விளையாட்டில் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை. மிஞ்சி மிஞ்சிப் போனால் ஹர்பஜன் சிங் ஸ்ரீசாந்தை அறைவார், அதனால் ஸ்ரீசாந்தின் உயிருக்கு எந்த ஆபத்துமில்லை. ஹர்பஜன் சிங் ஆஸ்திரேலிய வீரரை திட்டுவார், அதனால் எந்த உயிர்ச் சேதமும் இல்லை//

செம காமடி !
:)

இராணுவ வீரர்கள் குறித்து உங்கள் ஆதங்கம்... பகிர்கிறேன்.

நமீதா வீட்டு நாய்குட்டி சாலையில் சென்றால் கூட டிராபிக் ஜாம் ஆகிடும். எல்லாம் நட்சத்திர அந்தெஸ்து! ரசிகனுங்களைத்தான் சொல்லனும்
//

கோவியாரே வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி!
நமீதா வீட்டு நாய்க்குட்டியா? அது கொழு கொழு என்றல்லவா இருக்கும்.
கண்டிப்பா டிராபிக் ஜாம் ஆவும்.

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

// கோவி.கண்ணன் said...
//இவங்களுக்கு எல்லாம் விளையாட்டு முக்கியமேயில்ல. அங்க இருக்க பணம் தான் முக்கியம்.//

யூசூப் ஐயங்கார் எப்போதாவது பின்னூட்டம் போட்டாலும் தத்துவம், யதார்த்த மழையாக பொழிஞ்சுடுறார்//

சாமியார்களுக்கு தத்துவம் வருவது இயற்க்கை தானே? அதில் ஆச்சர்யப் படுவதற்கு என்ன இருக்கிறது. :P இந்த முகூர்த்தம் சாமியார் பஞ்சாங்கத்தைப் பார்த்துட்டு இங்கே படைஎடுத்தாலும் எடுப்பார். எதுக்கும் ஜாக்கிரதை.

// கோவி.கண்ணன் said...
//இவங்களுக்கு எல்லாம் விளையாட்டு முக்கியமேயில்ல. அங்க இருக்க பணம் தான் முக்கியம்.//

யூசூப் ஐயங்கார் எப்போதாவது பின்னூட்டம் போட்டாலும் தத்துவம், யதார்த்த மழையாக பொழிஞ்சுடுறார்//

சாமியார்களுக்கு தத்துவம் வருவது இயற்க்கை தானே? அதில் ஆச்சர்யப் படுவதற்கு என்ன இருக்கிறது. :P இந்த முகூர்த்தம் சாமியார் பஞ்சாங்கத்தைப் பார்த்துட்டு இங்கே படைஎடுத்தாலும் எடுப்பார். எதுக்கும் ஜாக்கிரதை.

Anonymous said...

cricketers are working to fill up their pockets and Camandos are working to save the country and its people. that is the only difference between them. camando 's proud face tells us about the great honourable job they did.Where as cricketers face shows us how they want to be the elite memebers of the society.

வட மொழி - தமிழ் மொழி

பின் நவீனத்துவம் - பின் புதுமையியல்

அகங்காரம் - செருக்கு,இறுமாப்பு,முனைப்பு,யானெனல்

அகடவிகடம் - குறும்பு,மாற்று,மாறுபட்டது

அகதி - அறவை,வறியன்,எதிலி,புகலிலான்,யாருமற்றவன்,ஏழை

அகந்தை - இறுமாப்பு,செருக்கு

அகம் - உள்ளே,உயிர்,நான்,மனம்,மனநிலை,எண்ணம்

அகம்பாவம் - தற்பெருமை,செருக்கு

அகராதி - அகரமுதலி,அகரவரிசை,அகரநிரல்,அகரமுதல்

அகிம்சை - இன்னா செய்யாமை,கொல்லாமை

அஹிம்சை - இன்னா செய்யாமை,கொல்லாமை

அகோரம் - அழகின்மை,கொடுமை,நடுக்கம்

அக்கணம் - அப்பொழுது,அந்நொடி

அக்கரம் - எழுத்து

அட்சரம் - அழிவில்லாதது

அக்கியாணி - அறிவிலான்

அஞ்ஞானி - புல்லறிவாளன்

அக்கிரகாரம் - பார்ப்பனச் சேரி

அக்கிரமம் - ஒழுன்கின்மை,முறைகேடு

அக்கிராசனம் - முதலிருக்கை,தலைமை

அக்கினி,அக்நி - நெருப்பு,தீ,அனல்,எரி

அங்கப்பிரதட்சணம் - உடல் வலமுருளல், வலம் புரளல்

அங்கீகாரம்,அங்கீகரணம் - உடன்,செப்பு

அங்குலம் - விறக்கட்டை,விரலளவு

அசத்தை,அசத்தியம் - பொய்

அசரம்- அசைவில்லாதது,இயங்காதது,நிலையியல்

அசரீரி - வானொலி,உருவற்றது

அசித்து - பயனின்மை

அஜீரணம்,அசீரணம்- செரியாமை,பசியின்மை,அழிவுபடாமை

அசுத்தம் - அழுக்கு,துப்புரவின்மை,தூய்மையின்மை

அசேதனம் - அறிவில்லாதது,அறிவிலி,அறிவில் பொருள்

அசெளரியம் - நலமின்மை,இடைஞ்சல்

அஞ்சலி - கும்பிடல்,வணக்கம்

அஞ்சனம் - மை,கறுப்பு,இருள்

அஞ்சிட்டம் - கதிரவன்

அஞ்ஞாதம் - மறைவு,அறியப்படாதது

அஞ்ஞாத வாசஸ்தலம் - மறைந்துறைவிடம்

அட்சயப் பாத்திரம் - திருவோடு,ஏற்போடு,அள்ள அள்ளக் குறையாதது

அட்டதிக்கு பாலகர் - எண்புறக்காவலர்

அட்டபந்தனம் - எண்புறக்கட்டு

அண்டம் - முட்டை,உலகம்,வித்து,மூலம்

அதமம் - கீழ்மை,கடைத்திரம்

அதர்மம்,அதருமம் - தீவினை,அறமின்மை,மறம்

அதிகப்பிரசங்கம் - மிகுபேச்சு,தன் மேம்பாட்டுரை,மற்றொன்று விரித்தல்

அதிகாரி - அலுவலர்,தலைவன்,முதல்வன்,உடையவன்

அதிகாலம் - விடியற்காலம்

அதிகாலை - விடியற்காலம்,புலரிக்காலை

அதிஷ்டவசம் - நல்வினைப்பயன், நல்வினை வயம்

அநந்தகோடி - எண்ணத்தொலையாதன

அநந்தம் - அளவின்மை,முடிவில்லது

அநாதை - யாருமற்றவன்,தாய்தந்தையிலான்

அநித்தம்,அநித்தியம் - அழிவு,நிலையற்றது,நிலையாமை

அநீதி - முறைகேடு

அநுக்கிரகம் - அருளிரக்கம்,அருள்

அநுசரணை - சார்பு,சார்பு நிலை

அநுசிதம் - பொய்,தகாதது

அனுபவம் - பழக்கம்,வழக்கம்,நுகர்ச்சி

அனுமினம் - ஐயம்,வழியளவை,கருதலளவை

அனுமானப் புரமானம் - கருதலளவை

அநேகர் - பலர்

அந்தகன் - அழிப்போன்,குருடன்

அந்தகாரம் - இருள்,அறியாமை

அந்தக்கரணங்கள் - அகக்கருவிகள்

அந்தஸ்து - நிலைமை,ஒழுங்கு,நிலை

அந்தரம் - வான்வெளி,இடைவெளி,துணையின்மை,காலம்

அந்தி - முடிவு,மாலைக்காலம்

அந்திய கிரியை - இறுதிச் சடங்கு

அந்நியர் - பிறர்,அயலார்

அந்நியோந்நியம் - நெருக்கம்,ஒற்றுமை,ஒருவொருக்கொருவர்

அபயம் - அடைக்கலம்,அச்சமின்மை,புகலிடம்,அஞ்சேலெனல்

அபாயம் - பேரிடர்,அழிவு,கேடு,துன்பம்,இடுக்கண்,இக்கட்டு

அபாரம் - சிறப்பு,அளவின்மை,கேடு

அபிதானம் - பெயர்

அபிநயம் - நடிப்பு,கூத்து,கைமைய்காட்டல்,உள்ளக் குறிகாட்டல்

அபிப்பிராயம் - நோக்கம்,எண்ணம்,உட்கருத்து,உள்ளப்போக்கு

அபிமானம் - பற்று,நேயம்,செருக்கு

அபூர்வம் - அரிது,அருமை,அரிய பொருள்

அபேச்சை -அவா,விருப்பம்

அபேதம் - ஒற்றுமை,வேற்றுமையின்மை,வேறன்மை

அப்பியாசம் -பழக்கம்,பயிற்சி

அப்பிரதட்சிணம் - இடப்புறச் சுற்று, இடப்பக்கச் சுற்று

அமரத்துவம் - அழிவின்மை

அமலன் - துயோன்,கடவுள்,வாலறிவன்

அந்நியர் - பிறர்,அயலார்

அதிகம் - மிகுதி,அளவின்மை

அமிர்தம்,அமிருதம் - இனிமை,அருமருந்து,சாவா மருந்து,அழிவினமை

அமச்ம் - வகை,பங்கு,காலம்,எண்,அன்னப்புள்

அம்பாரம் - குவியல்

அயோக்கியம் - தகுதியினமை,தகாதது

அயோக்க்கியன் - தகுதியற்றவன்,தகவிலான்,கெட்டவன்

அரணியம் - காடு

அருச்சனை,அர்ச்சனை - வழிபாடு, பூ வழிபாடு,மலர் வழிபாடு

அருத்தம்,அர்த்தம் -பொருள்,பாதி

அருவம் - உருவின்மை,அழகின்மை

அர்த்தநாசம் - பேரழிவு,பொருளழிவு

அர்ப்பணம் - உரிமை கொடுத்தல், ஒப்புவித்தல், நீரோடு கொடுத்தல்

அலங்காரம் - அழகு,ஒப்பனை,அணி,புனைவு

அலச்சியம் - பாராமுகம்,பொருட்படுத்தாமை,கருத்தின்மை

அவகீர்த்தி - இழிவு,புகழின்மை

அவக்கியாதி - வசை,இகழ்ச்சி

அவசரம் - விரைவு,பரபரப்பு,சுருக்கு,பதைப்பு

அவசியம் - முதன்மை,கட்டாயம்,இன்றியமையாமை

அவதரித்தல் - பிறத்தல்

அவதாரம் - பிறப்பு,இறங்குகை

அவதானம் - எச்சரிக்கை,ஒழிவு,நினைவு,விரித்தல்,மறப்பின்மை

அவநம்பிக்கை - நம்ப்பிக்கைக்குறை

அவமரியாதை - முறைதவறல்,வணக்கமின்மை,தீயமுறை

அவமானம் - மானக்கேடு,இழிவு,குறைவு,இளிவரவு

அவயவம்,அவையவம் - உறுப்பு

அவலன் - உடற்குறையன்,வீணன்

அவசு,ஹவிசு - தூய உணவு,சோறு,நெய்,

அற்பம்,அல்பம் - சிறுமை,அணு,புன்மை,இழிவு

அனங்கன் - உடலிலான்,கடவுள்,காமவேள்

அனாதி - கடவுள்,தனியன்,பழமை,தொன்மை

அனுதாபம் - இரக்கம்

அனுபவம் - பழக்கம்,வழக்கம்,அழுந்தியறிதல்,பட்டறிவு

அனுமானம் - உய்த்துணர்தல்,கருதல்ளவை,வழியளவை

அனேகம் - பல,எல்லாம்

அன்னதானம் - சோற்றறம்,சோற்றுக்கொடை,உணாக்கொடை

அன்னம் - சோறு,உணவு,அடிசில்

அன்னியன் - பிறர்,அயலார்

அன்னியோன்னியம் - ஒற்றுமை,நெருக்கம்,ஒருவர்க்கொருவர்

ஆகம் -உடல்,மார்பு

ஆகரு(ர்)ஷண சக்தி - இழுப்பாற்றல்,இழுவழி,சேர்வழி

ஆகாசம்,ஆகாயம் - விண்,வெளி,வான்,விசும்பு,வர்னம்

ஆகாய விமானம் - வான ஊர்தி

ஆகாரம் - உணவு,அடிசில்,உடம்பு,வடிவு

ஆக்கியாபித்தல்,ஆஞ்ஞாபித்தல் - கட்டளையிடல்

ஆக்கிரமித்தல் - வலிந்து கவர்தல்,வலிமை காட்டல்

ஆட்சேபம் - மறுமொழி,மறுத்துக்கூறல்,தடைமொழி

ஆங்காரம் - இறுமாப்பு,செருக்கு,தருக்கு

ஆச சங்கை -ஐயம்

ஆசாபாசம் -அன்பு,பற்று,அவா

ஆசாரம் - ஒழுக்கம்,வழக்கம்,நன்னடை,வழிபாடு,துப்புரவு

ஆசியம்,ஹாசியம் - எள்ளல்,நகை,சிரிப்பு

ஆசீர்வாதம் - வாழ்த்துரை

ஆசுவாசம் - இளைப்பாறுகை

ஆசை - விருப்பம்,அவா,பற்று,வேட்கை,விழைவு

ஆச்சரியம் - புதுமை,வியப்பு,இறும்பூது

ஆ(ச்)சிரமம் - இலைக்குடில்,பாழி,முனிவருறயுள்

ஆஸ்திகம் - கடவுளுண்டெனுங்கொள்கை

ஆஸ்பத்திரி - மருத்துவச்சாலை

ஆஞ்ஞாபித்தல் -கட்டளையிடல்

ஆஞ்ஞை -ஆணை,கட்டளை

ஆடம்பரம் - ஆரவாரம்,பகட்டு

ஆட்சேபம்,ஆட்சேபனம் - தடைமொழி,மறுமொழி,எதிர்மொழி,மறுப்பு

ஆதங்கம் - ஆற்றாமை,அச்சம்,நோய்

அந்நியர் - பிறர்,அயலார்

ஆதவ(ப)ன் - பகலோன்,கதிரோன்

ஆதரவு - துணை,உதவி,சார்பு,பற்றுக்கொடு

ஆதி - முதல்,பழமை,அடி,தொடக்கம்,காரணம்,எழுவாய்,கடவுள்

ஆப்தம்,ஆத்தம் - அன்பு,நட்பு

ஆத்தானம்,ஆஸ்தானம் - நகரவாயில்,அறமன்றம்,கொடிமுடிவாயில்

ஆத்திரம்,ஆத்திரியம்,ஆத்திரவம் - உளக்கொதிப்பு,விரைவு,பரபரப்பு

ஆத்துமா,ஆன்மா - உயிர்

ஆந்ந்தம் - இன்பம்

ஆபத்து -இடர்,துன்பம்,இக்கெட்டு,ஊறுபாடு,இடுக்கண்

ஆபரணம் - அணிகலம்,இழை,நகை,அணி,பூண்

ஆபாசம் - அருவருப்பு,சிதைவு,கெடுதல்,பொய்,அளவைப்பொலி

அபூர்வம் - வினைப்பயன்

ஆமோதித்தல் - உடன்படல்,வழிமொழிதல்,மகிழ்தல்

ஆயக்கட்டு(துளுவம்) - மொத்த நஞ்சை நிலம்,களப்புரவு

ஆயத்தம்(இந்தி) - முயற்சி,எத்தனம்,முன்னேற்பாடு

ஆயா(போர்ச்சுக்கீஸ்) - செவலித்தாய்,கைத்தாய்

ஆயாசம்,ஆயாஸம் - களைப்பு,இளைப்பு,சோர்வு,அயர்வு,மயக்கம்

ஆயுசு,ஆயுள் - வாழ்நாள்,ஆண்டு

ஆயுதம் - கருவு,படைக்கலம்,படை,வாள்

ஆரணியம்,ஆரண்ணியம் - காடு

ஆரம்,ஹாரம் - பூமாலை,தொடையல்

ஆரம்பம் - தொடக்கம்

ஆரம்பித்தல் - தொடங்கல்

ஆராதனம் - வணக்கம்,மகிழ்வித்தல்

ஆரோகம்,ஆரோபம்,ஆரோக்கியஸ்நானம் - நல முழுக்கு,நோய் தீர்ந்தபின் முழுகல்

ஆரோக்கியம் - நலம்,நோயின்மை

ஆரோபணம்- நாட்டுதல்,ஏற்றுதல்

ஆரோபித்தல் - ஏற்றுதல்

ஆர்ச்சிதம் - தேட்டம்,தேடிய பொருள்

ஆர்மோனியம் - இசைக்கருவி

ஆர்வம் - அன்பு,விருப்பம்

ஆலகண்டண் - சிவன்,நஞ்சுமிடற்றன்,கறைமிடற்றன்

ஆலகம்- நெல்லிமரம்

ஆலம் - நஞ்சு

ஆலயம் - கோயில்

ஆலாபம்,ஆலாபனம் - அலப்பு,பேச்சு,உரையாடல்

ஆலோசனை - சூழ்தல்,சூழ்ச்சி,ஓர்வு,எண்ணம்,ஆராய்ச்சி

ஆவசியம் - கட்டாயம்,முதன்மை,இன்றியமையாமை

ஆவத்து,ஆபத்து - இக்கெட்டு,இடர்,பொல்லாங்கு

ஆவர்த்தி,ஆவருத்தம்,ஆவிருத்தி - தடவை,வரிசை,சுற்று,வழக்கம்

ஆவாகனம் - அழைத்தல்,உட்புகல்

ஆனந்தபரவசம் - இன்பக்களிப்பு,பேரின்பக்களிப்பு

ஆனந்தம் - இன்பம்,பேரின்பம்

ஆன்மா - உயிர்

இகம் - இவ்வுலகம்,இவ்விடம்,இப்பிறப்பு

இங்கிதம் - இனிமை,அடையாளம்,கருத்து,இடம் பொருள்

இச்சகம் - முகமன்

இச்சை - விருப்பம்,அவா,விழைவு,வேட்கை

இடபம்,ரிஷபம் - எருது,காளை,ஏறு,விடை

இட்டசித்தி - விருப்பப்பேறு

இதம்,ஹிதம் - இனிமை,நன்மை,அன்பு,அறம்

இதயம்,இதையம்,ஹிருதயம் - நெஞ்சம்,உள்ளம்

இதரம் - வேறு,இயல்,அழிவு,பகைமை

இதிகாசம் - பண்டை வரலாறு,பழங்கதை

இந்திர ஜாலம் - இமயவர்கோன்,வானவர் தலைவன்

இந்து - நிலா,திங்கள்,அம்புலி

இமாலயம்,ஹிமாலயம் - பனிமலை

இரகசியம் - மறைபொருள்,மறை,அற்றம்

இராசாபாசம் - அருவருப்பு,ஒழுங்கின்மை

இரசாயனம் - பொருளியைபு

இரட்சகம் - பாதுகாப்பு,மீட்பு

இரட்சை - காப்பு

இரணம்,ரணம் - புண்

இரதம்,ரதம் - தேர்

இரத்தம் - குருதி,செந்நீர்

இரத்தினம்,ரத்தினம் - மாமணி,செம்மணி

இரம்பம்,ரம்பம் - ஈர்வாள்

இராகம்,ராகம் - இசை,பண்,அவா,விருப்பு

இராகு - கருங்கோள்

இராக்கதர் - அரக்கர்

இராசசூயம் - அரசர் வேள்வி

இராசா - அரையன்,மன்னன்,அரசன்

இராச்சியம் - நாடு,அரசியல்

இராத்திரி - இரவு,கங்குல்

இருஷி,இருடி - முனிவன்,தவசி,துறவி

இதய கமலம் - நெஞ்சத்தாமரை

இருது - பருவம்,மகளிர் முதற்பூப்பு

இரேகை - வரி,எழுத்து,கையிறை,நிறை,தொடர்

இலகிரி,லகிரி,லாகிரி - வெறி,மயக்கம்

இலகு,லகு - எளிது,நொய்மை,நுண்மை,ஈரம்,பலா மரம்

இலங்கணம் - பட்டினி

இலஞ்சம் - கைக்கூலி,கையூட்டு,கையுறை

இலட்சணம்,லட்சணம் - அழகு,பார்வை

இலயித்தல் - ஒடுங்குதல்,சேர்ந்தொன்றித்தல்

இலெளகீகம்,இலவுகீகம் - உலகியல்,உலகப்போக்கு

இலாஞ்சனம்,இலாஞ்சனை - புகழ்,அடியாளம்,கறை

இலாபம்,லாபம் - ஊதியம்,மிச்சம்,பேறு

இலீலை,லீலை - விளையாட்டு

யுகம்,உகம் - உலக முடிவு,இரண்டு

உக்கிராணம் -களஞ்சியம்,சரக்கறை

உஷ்ணம் - வெப்பம்,சூடு

உசிதம் - உயர்வு,சிறப்பு,மேன்மை,தகுதி,ஒழுங்கு

உசிதன் - தக்கோன்

உச்சம் - உயர்ச்சி,சிறப்பு

உச்சரித்தல் - சொல்லுதல்,ஒலித்தல்,ஓதல்

உச்சரிப்பு - எழுத்தோசை

உச்சாட்டியம் - பேய கற்றல்,ஒட்டுதல்

உச்சி - மேடு,முகடு

உச்சிக்காலம்,உச்சிச்சமயம் - நண் பகல், நடுப் பகல்

உதயன் - பகலோன்

உதாரணம்,திருட்டாந்தம் - எடுத்துக்காட்டு,சான்று

உத்தமம் - உண்மை,மேன்மை

உத்தரியம்,உத்தரீயம் - மேலாடை

உத்தரவு - கட்டளை

உத்தி,யுத்தி - அறிவு,இணக்கம்,இசைவு,சூழ்ச்சி,சொல்

உத்தேசம்,உத்தேகம் - கருத்து,மதிப்பு,ஏறக்குறைய

உபகரணம் - கொடுத்தல்,உதபிபொருள்கள்,கருவி,துணைக்காரணம்

உபதேசம் - அருண்மொழி,அறிவுரை

உபயம் - உதவி,நன்கொடை,இரண்டு

உபாசநம்,உபாசநை,உபாசனை - வழிபாடு,வணக்கம்

உபாதி,உபாதை - நோய்,துன்பம்,வருத்தம்

உபாத்தியாயன் - கணக்காயன்,ஆசிரியன்,கற்பிப்போன்

உபாயம் - சூழ்ச்சி,நொய்மை,எளிது,சிறிது

உயுக்கம்,உயுத்தம்,யுத்தம் - போர்,தகுதி

உருசி,ருசி - சுவை

உருத்திராக்கம் - சிவமணி,சுக்குமணி

உரூபம்,ரூபம் - உருவம்,வடிவம்

உரொக்கம்,ரொக்கம் - கைப்பணம்,இருப்பு,கையிருப்பு

உரோமம்,ரோமம் - மயிர்,முடி,குஞ்சி

உல்லாசம் - மகிழ்ச்சி,விளையாட்டு,களிப்பு,உள்ளக்களிப்பு

உவதி,யுவதி, - மங்கை,பதினாறாண்டுப் பெண்

ஊகம் - கருதல்,ஓர்தல்,கருத்து,நினைவு

ஊர்ச்சிதம்,ஊர்ஜ்ஜிதம் - உட்பொருளுணர்தல், நிலைப்படுதல்,உறுதி,கருங்குரங்கு

எசமானன்,எஜமான் - தலைவன்,முதல்வன்,முதலாளி

எந்திரம் - பொறி

எமன் - கூற்றுவன்,மறலி

ஏகதேசம் - ஒருபால்,ஒருபுடை,சிறுபான்மை

ஏகம் - ஒன்று,தனிமை

ஏகாந்தம் - தனிமை,ஒரு முடிவு

ஏகோபித்தல் - ஒன்றுபடுதல்

ஏடணை,ஏஷணை - விருப்பம்

ஐது,ஹேது - காரணம்

ஏக்கம்,ஐக்கியம் - ஒற்றுமை

ஐஸ்வர்யம்,ஐச்வரியம் - செல்வம்,பொருள்,திரு

ஐதீகம்,ஐதிகம் - உலகுரை

ஐம் பூதம்,பஞ்ச பூதம் - ஐந்து முதற்பொருள்

ஓமம்,ஹோமம் - வேள்வி

ஒளடதம்,ஒளஷதம்- மருந்து

களோகம் - வான் வட்டம்,வளி மண்டலம்

கடகம் - கைவளை,வளையம்

கடம் - கடம்,யானைக்கதுப்பு

கடாட்சித்தல் - அருளல்

கடாரம் - கொப்பரை,தேங்காய்

கடிகாரம் - நாழிகை வட்டில்,பொழுது காட்டுங்கருவி

கடிகை - நாழிகை,தாழ்க்கோல்

கடினசித்தம் - வன்னெஞ்சம்

கடினம் - வன்மை,கடுமை,வருத்தம்,கொடுமை

கடூரம்,கொடூரம் - கொடுமை

கட்டம்,கஷ்டம் - துன்பம்,வருத்தம்

கணம்,ஹணம் - குழாம்,கூட்டம்,தொகுதி,நொடிப்பொழுது

கணி - கோள் நூல், கோல் நூல் வல்லான்

கணிகை - பொதுமகள்

கணிசம் - அளவு,மேம்பாடு

கணிதம் - கணக்கு

கண்டம் - நிலப்பிரிவு,துண்டு,கட்டி,மிடறு,கழுத்து

கண்திட்டி,கண்திருஷ்டி - கண்ணேறு

கதம்பகம்,கதம்பம் - கூட்டம்,மணப்பொருட் கூட்டு,சேர்ந்தது,இணைத்தது

கதலி - வாழை

கதி - நடை,செலவு,வழி,புகலிடம்,பற்றுக்கோடு,நிலை

கனகம்,கநகம் - பொன்

கனவான்,கநவான் - பெரியோன்,பெருமையாளன்,பெருந்தகை

கனிஷ்டை,கநிஷ்டை - பின்னோள்,தங்கை

கன்னிகை,கந்நிகை - மணமாகாதவள்,இளம்பெண்

கந்மம்,கருமம் - தொழில்,வினை

கபடம்,கவடம்,கபடு - கரவு,படிறு,வஞ்சகம்,மோசம்,சூது,ஒளிப்பு

கபாலம் - தலையோடு,மண்டையோடு

கபோதி - குருடன்

கப்பம் - இறை

கமண்டலம் - நீர்க்குடுவை

கமலம் - தாமரை,நீர்

கம்பீரம் - உயர்தோற்றம்,பெருமை,ஆழம்,செருக்கு

கயம்,ஹயம் - குளம்,ஆழம்,யானை

கரகம் - வட்டில்,நீர்க்குடுவை

கரகோசம்,கரகோஷம் - கைதட்டுதல்

கரணம் - கருவி,ஐம்பொறி

கரம் - கை

கருச் சித்தல் - முழங்கல்,இரைதல்

கருணை - அருள்,இரக்கம்

கர்த்தா,கருத்தா - தலைவன்,வினைமுதல்,ஆக்கியோன்,நூலாசிரியன்,முதல்வன்,கடவுள்

கர்ப்பவதி - சூலி

கர்ப்பாசயம் - கருப்பை

கர்வம் - செருக்கு,இறுமாப்பு

கலாபம்,கலபம் - மயில்,மயிற்றோகை

கலி - வறுமை,துன்பம்

கலியாணம் - மனம்,மன்றல்,பொன்,மகிழ்ச்சி

கவளீகரித்தல்,கபளீகரம்,கபளீகரித்தல் - முற்றிலும் விழுங்குதல்,விழுங்குதல்

கவனம் - கருத்து நோக்கம்,உன்னித்தல்

கவாத்து - படைக்கலப் பயிற்சி,வெட்டி விடுதல்

கவி - செய்யுள்,புலவன்,பாட்டு

கவுளி,கெளளி - பல்லி

களேபரம் - குழப்பம்,உடல்,பிணம்

கற்பம் - ஊழிக்காலம்,நெடுவாழ்க்கை மருந்து

கனம் - சுமை,பளு,பளுவு

காசம் - ஈளை,ஈளைநோய்,இருமல் நோய்

கசாயம்,கஷாயம் - காவி

காஞ்சிரம் - எட்டி மரம்

காட்டம்,காஷ்டம் - விறகு,வெகுளி

காதகன் - கொலையாளி

காயசித்தி - நீடுவாழ்ப் பேறு

காயம் - உடல்,யாக்கை,வான்

காரிய கர்த்தா - வினைமுதல்வன்

காரியதரிசி - அமைச்சன்,செயலாளன்

கலாட்சேபம் - பொழுதுபோக்கல்,நாட்கழித்தல்,வாழ்க்கை

கால நியமம் - காலமுறை,காலக்கடன்,கால்,ஒழுங்கு

கிஸ்தி - திறை,வரி

கிரகணம்,கிராணம் - பற்றுதல்,பிடித்தல்

கிரகஸ்தம் - இல்லற நிலை

கிரகம் - வீடு,கோள்,பற்றுதல்,பிடிப்பு

கிரணம் - ஒளி,கதிர்

கிரந்தம் - நூல்,எழுத்து

கிரமம் - ஒழுங்கு,முறைமை

கிரயம் - விலை

கிராதன் - குறவன்,வேட்டுவன்

கிரி - மலை,பன்றி

கிரிகை - தொழில்,செயல்,வினை,சடங்கு

கிரிமி,கிருமி - உயிரி,பூச்சி,புழு

கிரீடம் - முடி

கிருஷி - பயிர்,உழவு,பயிர் செய்கை

கிலம் - கழிவு,அழிவு,சிறுமை

கிலேசம் - அச்சம்,கவலை,துன்பம்

கீதம் - இசை,பாட்டு,பாடல்,இசைப்பாட்டு

கீர்த்தனம்,கீர்த்தனை - புகழ்ச்சி,புகழ்ப்பா

கீலகம் - ஆணி,பொருத்து

குஞ்சரம் - யானை

குஷ்டம் - தொழு நோய்,பெரு நோய்

குணஷ்டை - தொல்லை,துன்பம்

குதர்க்கம் - அழிவழக்கு

குதூகலம்,குதுகலம் - பெருங்களிப்பு,பெருமகிழ்வு

குபேரன் - பெருஞ்செல்வன்,செல்வக்கடவுள்

குமரி,குமாரி - நங்கை,மணமாகாப்பெண்,புதல்வி,மகள்

கும்பம் - குடம்

குருகடாட்சம் - ஆசிரியனருட்பார்வை

குரோதம் - உட்பகை

குலாலன் - குயவன்

குலிசம் - வேற்படை

குன்மம் - சூலை,வயிற்று வலி

கேதம் - துன்பம்,இடர்,குற்றம்

கேவலம் - சிறுமை,தனிமை

கோகிலம் - குயில்

கோடம்,கோஷம்,கோஷ்டம் - முழக்கம்,பேரோசை

கோஷ்டி - கூட்டம்

கோடி - நூறு நூறாயிரம்

கோதண்டம் - வில்

கோளகை,கோளம் - உருண்டை,வட்டம்

கெளரவம் - மேன்மை,பெருமை

சக - கூட,உடன்

சகசம்,ஸகஸம் - இயற்கை,ஒற்றுமை

சகஸ்ரநாமம் - ஆயிரந்திருமொழி,ஆயிரந்திருப்பெயர்

சகமார்க்கம் - தோழமை நெறி

சகலம் - எல்லாம்

சகவாசம் - கூடவிருத்தல்,உடனுரைதல்,பழக்கம்,சேர்க்கை,நட்பு

சகா - தோழன்,துணை

சகாப்தம் - ஆண்டு,நூறாண்டு

சகாயம் - நயம்,நன்மை,மலிவு,பயன்,உதவி,துணை

சகி,சகீ - தோழி

சகிதம் - உடன்

சகுணம் - குணத்தோடு கூடியது

சகுந்தம் - கழுகு,பறவை

சகுனம் - குறி

சகோதரம் - உடன்பிறப்பு

சகோதரி - உடன்பிறந்தாள்

சக்கரம் - உருளை,வட்டம்

சக்தி - ஆற்றல்,வல்லமை,வலி

சங்கடம்,சங்கட்டம் - இக்கெட்டு,நெருக்கடி,இடர்,கண்மூடுதல்

சங்கிதை - தொகுதி,வரலாறு

சடுதி,சடிதி - விரைவு

சஷ்டியப்த பூர்த்தி - அறுபதாமாண்டு நிறைவு

சண்டப்பிரசண்டம் - மிகு விரைவு

சண்டமாருதம் - பெருங்காற்று,கடியகாற்று,புயற்காற்று

சண்டாளம் - தீமை,புலைத்தன்மை,நம்பிக்கை கேடு

சண்டாளர் - தீவினையாளர்,இழிஞர்

சண்டித்தனம் - முருட்டுத்தன்மை,முரட்டுத்தன்மை

சதகோடி - நூறு கோடி

சதசு - அவை

சதம் - நூறு நிலை

சதானந்தம் - இடையறா வின்பம்

சதி - இறைவி,அழிவு,வஞ்சனை,சூழ்ச்சி

சந்தகம் - எப்பொழுதும்

சந்தானம் - வழி,வழித்தொடர்பு

சந்தித்தல் - எதிர்படுதல்,கூடுதல்

சந்திரலோகம் - திங்கள் உலகு,அம்புலியுலகம்

சந்திரன் - பிறை,கலையோன்,இரவோன்,அலவன்,அல்லோன்

சந்து - முடுக்கு,இயங்கும் உயிர்,தூது,பிளப்பு,பொருத்து

சந்துட்டம்,சந்துஷ்டி,சந்தோஷம் - மகிழ்ச்சி

சந்தேகம் - ஐயம்,ஐயுறவு

சந்தோஷம் - மகிழ்ச்சி,உவகை,களிப்பு

சன்னதி,சந்நதி,சந்நிதானம் - திருமுன்

சந்நியாசம் - துறவு,துறவறம்

சபதம் - ஆணை,உறுதிமொழி,வஞ்சினம்

சபம்,ஜெபம் - உருவேற்றல்

சபலம் - நிறைவேறல்,வெற்றி,நடுக்கம்,ஏக்கம்,இச்சை,அவா

சபா,சபை - அவை,மன்றம்,கழகம்,அரங்கம்

சபித்தல் - தீமொழி கூறல்,சினந்துரைத்தல்

சமஷ்டி - தொகுதி,எல்லாம்

சமதை - ஒப்பு

சமர்த்தன்,சமத்தன் - வல்லான்,வல்லவன்,திறமையாளன்

சமஸ்தானம்,சமத்தானம் - அரசவை,தலை நகர்

சமம் - இணை,ஈடு,மட்டம்,போர்,நடு,ஓர்மை

சமரச தத்துவம் - பொதுநிலையுண்மை

சமரசம் - பொது,வேறுபாடின்மை,ஒற்றுமை

சமர்ப்பணம் - ஒப்பித்தல்,உயர்ந்தோர்க்குக் கொடுத்தல்

சமாதானம் - அமைதி,இணக்கம்,தணிவு,உடன்பாடு,தக்கவிடை

சமாதி - அமைதி,பிணக்குழி,பேசாதிருத்தல்,இறப்பு,மரித்தல்

சமாப்தம்,சமாப்தி - முற்றுப்பெற்றது

சமாராதனை - உளநிறைவு

சமி,ஷமி - பொறு

சமிதை - வேள்வி விறகு,உலர்ந்த குச்சி

சமீபம் - அருகு,அணமை,மருங்கு

சமீன்தார்,ஜமீந்தார் - நிலக்காரன்,பெருநிலக்கிழார்

சமுதாயம் - குமுகம்,கூட்டம்

சமுத்திரம் - கடல்

சமை,ஷமை - பொறுமை

சம்சாரம்,சம்ஸாரம் - குடும்பம்,இல்லாள்,இல்லத்தரசி

சம்பத்து - செல்வம்,பொருள்

சம்பந்தம -உறவு,பற்று,இயைபு,சார்பு,தொடர்பு,பொருத்தம்

சம்பிரதாயம் - தொல்வழக்கு,முன்னோர் முறை,பண்டை முறை

சம்பு ரேட்சணம் - தெளித்தல்

சம்பூரணம் - நிறைவு

சம்மதம் - உடன்பாடு,ஒப்புமை,இயைபு

சம்ரஷணை - பாதுகாப்பு

சயம்,ஜெயம் - வெற்றி

சரணம்,சரண் -அடைக்கலம்,வணக்கம்,கால்,திருவடி

சரணாகதி - புகலடைதல்,அடைக்கலம்

சராசரம்,ஜங்கமா - இயங்கியற் பொருள், நிலையியற் பொருள்

சரிதம்,சரிதை,சரித்திரம் - வரலாறு

சரீரம் - உடல்,யாக்கை,மெய்

சருமம்,சர்மம் - தோல்

சர்ப்பம் - பாம்பு

சர்வகலாசாலை -

பல்கழைக் கழகம்

சலதளம்- அரசமரம்

சலதாரை - நீர்க்கால்,நீரோட்டம்,மதகு

சலதோசம் - நீர்க்கோர்வை,தடுமம், நீர்க்கோவை

சல்லாபம் - உரையாடல்

சவம் - பிணம்

சவுகரியம்,செளக்கியம்,செளகரியம் -நலம்

சவுந்தரியம்,செளந்தரியம்,சவுந்தரம் - அழகு

செளபாக்கியம்,சவுபாக்கியம் - செல்வம்

சற்காரியம் - உற்பொருளினின்று தோன்றும் வினை

சற்குணம் - நல்லியல்பு

சனனம்,ஜனனம்,சனிப்பு,சன்மம் - பிறப்பு

சாகசம் - ஆற்றல்,துணிவு,நெருக்கிடை

சாகரம் - கடல்

சாகுபடி - பயிர் செய்தல்

சாகை,ஜாகை(உருது) - தங்குமிடம்

சாக்கிரதை,ஜாக்கிரதை - விழிப்பு,உன்னிப்பு,எச்சரிக்கை