Thursday, September 4, 2008

ஒரு ரூபாய்க்கு அரிசி – விவசாயிகளின் வயிற்றில் மரண அடி!

சமீபத்தில் தமிழக முதல்வர் திரு.கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் ஒரு ரூபாய்க்கு நியாய விலைக் கடைகளில் அண்ணாவின் நூற்றாண்டு பிறந்தநாள் முதல், அரிசி போடுவதாக அறிவித்திருக்கிறார். இந்த அறிவிப்பு பாட்டாளி ஏழை மக்களுக்கு இனிப்பைத் தரும் செய்தியாக இருந்தாலும், ஏன் தமிழகத்தின் ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கும் ஒரு நற்செய்தியாக இருந்தாலும், அதற்கு பின் உள்ள கசப்பான பின்விளைவுகளைப் பற்றி நாம் கொஞ்சம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

நம் விவசாயி பாடு பட்டு உழைத்து, நாற்று விட்டு,நாற்று பறித்து, நாற்று கட்டு தூக்கி, நடவு நட்டு, களைஎடுத்து, மருந்தடித்து, பின்னர் மருகளைஎடுத்து களைத்துப்போய், உரங்களை சமயம் பார்த்துப் போட்டு, எலிகளை பிடித்து, கதிர் அறுக்கும் வரை காவு காத்து, கதிர் அறுத்து அடித்து, கூலி கொடுத்தது போக அவனுக்கு என்ன மிஞ்சும் என்று நினைக்கிறீர்கள்.
பட்டுக்கோட்டையார் பாடியது போல் "காடு வெளைஞ்சென்ன மச்சான் நமக்கு கையும் காலுந்தானே மிச்சம்"

இவ்வளவு சிரமங்களுக்கிடையில் ஆற்றுத் தண்ணீருக்காக அவன் காத்து காத்து காய்ந்து கிடந்தது எத்தனை நாள்?
பணக்காரர்களுக்கு (பம்பு செட்டு உள்ளவர்களுக்கு) இலவச மின்சாரம் என்றீர்கள். இல்லாத மின்சாரத்தை இலவசமாகத் தருவதால் என்ன பயன்?
மின்சாரம் இருக்கும் போதெல்லாம் நிலத்தடி நீரை உறிஞ்சுகிறார்கள். அவர்களின் வயல்களை தெப்பம் போல் மிதக்க விடுகிறார்கள். ஏழை விவசாயிகள் அவர்களிடம் பணம் கொடுத்து தண்ணீர் இறைக்க வேண்டியிருக்கிறது. அவர்களுக்குத் தண்ணீர் தேவை இல்லாதபோது மண்டை கிணற்றுக்குள்(பெரிய கிணறு) தண்ணீரை விட்டு சேமித்து, பின்னர் அதிலிருந்து தண்ணீர் இறைத்துக் கொள்கிறார்கள்(அதுவும் இலவச மின்சாரம் தான்)
இதனால் ஏழை, நடுத்தர மக்களுக்கு என்ன லாபம்?
இதனால் வீணாகும் பணத்தை(நிதியை)யார் தலையில் கட்டுகிறார்கள்?
ஏழை மக்கள் சாப்பாட்டுக்கு கஷ்டப் படுகிறார்கள் அதனால் ஒரு ரூபாய்க்குக் கொடுக்கிறோம் என்று சொன்னால், அதை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்.
அந்த ஒரு ரூபாயும் அவனுக்குக் கிடைக்காத பட்சத்தில் அவன் எப்படி அந்த அரிசியை வாங்கிச் சாப்பிட முடியும்.(சாப்பிடக்கூடிய அரிசியா என்பது வேறு விடயம்)

ஓர் ஏழை நடுத்தர விவசாயி ஓர் ஏக்கர் நிலம் வைத்திருக்கிறான் என்று வைத்துக் கொள்வோம். அவனுடைய செலவுகளைப் கொஞ்சம் சிந்திப்போம், ஒரு ஆள் கூலி 100 முதல் 150 வரை. நடவாள்(பெரும்பாலும் பெண்கள்) ரூபாய் 75 முதல் 100 வரை. ஒரு மூட்டை DAP 1000 ரூபாய் வரை விற்கிறது. இதில் கூலி ஆள் கிடைப்பது குதிரைக் கொம்பாய் இருக்கிறது. ஏன் என்றால் இப்படி விவசாயிகள் படும் கஷ்டத்தில் அவன் எப்படி கூலி கொடுக்கப்போகிறான் என்று எண்ணி அனைவரும் வெளி மாநிலங்கள், வெளிநாடு என்று சென்று விட்டார்கள். இந்த சூழ்நிலையில் இன்னும் விவசாயம் செய்யும் ஏழை நடுத்தர விவசாயிகள் பாவப் பட்ட ஜென்மங்களாக இருக்கிறார்கள். இவ்வளவும் கஷ்டப்பட்டு, அவன் நெல் விற்க வரும் போது அரசாங்கம் நெல் வாங்குவதற்கு பிகு பண்ணுவதைப் பார்த்திருக்கிறோம். அதைவிடக் கொடுமை அடிமாட்டு விலைக்கு எடுத்துக் கொள்வதைப் பார்த்திருக்கிறோம். அதில் எடை போடுபவனுக்கும், வாங்கும் ஊழியனுக்கும் கையூட்டு வேறு.

வெளிநாடுகளில், உலகம் முழுவதும் ஏற்பட்டிருக்கும் உணவு தட்டுப்பாட்டில்(Food Crisis). நீங்கள் கற்றுக் கொண்ட பாடம் என்ன? குறைந்த பட்சம் அது தெரியுமா உங்களுக்கு? நம் விவசாயி உற்பத்தி செய்யும் 9 ரூபாய் மதிப்புள்ள வெகு சன்ன ரக அரிசி இன்று வெளிநாட்டில் 150 ரூபாய் விற்கிறது.(கிடைப்பது அரிதாக இருக்கிறது) ஏன் நமது விவசாயிகளின் உழைப்பால் விளைந்த நெல்லை உபயோகம் போக உபரியை வெளிநாட்டிற்கு அனுப்பி அவனை நிம்மதியாக வாழவிட்டால் என்ன? விவசாயிகள் வாழ்ந்தால் தான் ஏழை மக்கள் வாழ்க்கை தன்னிறைவு அடையும். இல்லை என்றால் எல்லா விவசாய குடும்பத்தில் உள்ளவர்களும் வெளி மாநிலத்திற்கு,வெளிநாட்டிற்கு வேலை தேடிச் செல்லும் படலம் தொடர்வது உறுதி.
விவசாயம் செய்ய யாரும் இல்லாத துர்பாக்கிய நிலை ஏற்பட்டுவிடும் அபாயம் இருக்கிறது. இதை தடுக்க வேண்டியது ஆட்சியில் இருப்பவர்களின் கடமை அல்லவா?

அதை விடுத்து ஒரு ரூபாய்க்கு அரிசி தருகிறேன் என்றால் அது விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் மரண அடியாகவே கருதுகிறேன். வெளிமாநிலத்திற்கு நம் ரேஷன் அரிசி கடத்தப் பட்டு அங்குள்ளவர்கள் குறைந்த விலையில் அரிசி சாப்பிட எதுவாக அமையும். கண்டிப்பாக அவர்கள் நமக்கு தண்ணீர் தரமாட்டேன் என்று அடம் பிடிப்பவர்கள் என்பது அனைவரும் அறிந்ததே. இதனால் ஏற்படும் இழப்பு யார் யார் தலையில் விழும் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே.

கிராமங்களில் அடிப்படை வசதிகள் இல்லை, குடிக்க தண்ணீர் இல்லை(தண்ணீர் பாட்டில் 20 ரூபாய் விற்கிறது). கழிப்பறை நாறுகிறது, தண்ணீர் இல்லை அதற்கு இரண்டு ரூபாய் நுழைவுக் கட்டணம். கிராமங்களில் கழிப்பறையே இல்லை, இருந்தாலும் தண்ணீர் இல்லை. அரை கிளாஸ் தேநீர் 3 ரூபாய் விற்கிறது. ஒரு கிலோ அரிசி 1 ரூபாயா? வெளியே சொல்ல வெட்கமாக இருக்கிறது...!

இன்னும் நிறைய விடயங்கள் எழுத நினைத்தேன். வேறொரு பதிவில் சிந்திக்கலாம்.

42 கருத்துக்கள்:

TBCD said...

கொள்முதல் விலையில் அரசாங்கம் விவசாயிகளை ஏமாற்றினால் தானே நீங்க கவலைக்கொள்ளவேண்டும்...
மக்களுக்கு அரிசி விலையயைக் குறைத்துக் கொடுப்பது "சகாய' (Subsidized ) விலையில் தானே...
இதில் என்ன பிரச்சனை...

புதசெவி

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//TBCD said...
கொள்முதல் விலையில் அரசாங்கம் விவசாயிகளை ஏமாற்றினால் தானே நீங்க கவலைக்கொள்ளவேண்டும்...
மக்களுக்கு அரிசி விலையயைக் குறைத்துக் கொடுப்பது "சகாய' (Subsidized ) விலையில் தானே...
இதில் என்ன பிரச்சனை...

புதசெவி//

அறுவடை காலங்களில் கொள்முதல் நிலையங்கள் திறப்பது, கொள்முதல் செய்வது என்பது அரசாங்கங்களின் அழகிய தந்திர விளையாட்டு. சாதாரண நாட்களில் 400 ரூபாய் விற்கும் நெல் அரசு கொள்முதல் நாட்களில் 260 ரூபாய் விற்கும். இதை விட கொடுமை கொள்முதல் நிலையங்களை சில இடங்களில் திறப்பதே இல்லை. தனியாரிடமும், மில் முதலாளிகளிடமும் கையூட்டு பெற்றுக் கொள்வது அனைவரும் அறிந்ததே. கொள்முதல் நிலையங்களில் மூட்டைக்கு இவ்வளவு என்று பகிரங்க கையூட்டு அனைவரும் அறிந்ததே. அது கொடுக்காவிட்டால் உங்கள் நெல்லுக்கு ஈரப்பதம் அதிகமாகப் போட்டு விலை குறைக்கப்படும் என்கிற பகிரங்க மிரட்டல் வேறு. இது எந்த வகையில் நியாயம்?

//TBCD said...
கொள்முதல் விலையில் அரசாங்கம் விவசாயிகளை ஏமாற்றினால் தானே நீங்க கவலைக்கொள்ளவேண்டும்...
மக்களுக்கு அரிசி விலையயைக் குறைத்துக் கொடுப்பது "சகாய' (Subsidized ) விலையில் தானே...
இதில் என்ன பிரச்சனை...

புதசெவி//

அறுவடை காலங்களில் கொள்முதல் நிலையங்கள் திறப்பது, கொள்முதல் செய்வது என்பது அரசாங்கங்களின் அழகிய தந்திர விளையாட்டு. சாதாரண நாட்களில் 400 ரூபாய் விற்கும் நெல் அரசு கொள்முதல் நாட்களில் 260 ரூபாய் விற்கும். இதை விட கொடுமை கொள்முதல் நிலையங்களை சில இடங்களில் திறப்பதே இல்லை. தனியாரிடமும், மில் முதலாளிகளிடமும் கையூட்டு பெற்றுக் கொள்வது அனைவரும் அறிந்ததே. கொள்முதல் நிலையங்களில் மூட்டைக்கு இவ்வளவு என்று பகிரங்க கையூட்டு அனைவரும் அறிந்ததே. அது கொடுக்காவிட்டால் உங்கள் நெல்லுக்கு ஈரப்பதம் அதிகமாகப் போட்டு விலை குறைக்கப்படும் என்கிற பகிரங்க மிரட்டல் வேறு. இது எந்த வகையில் நியாயம்?

ஜோசப் பால்ராஜ் said...

மிக நல்ல கருத்துக்கள் நண்பரே.
இது விவசாயிகளை விலையில் மட்டும் பாதிக்காது. கூலி ஆள் பிரச்சனையும் அதிகமாகும். மக்களின் வாழ்வாதாரத்தைப் பெருக்கி அவர்களாக தங்கள் தேவையை பூர்த்திசெய்யும் நிலைக்கு உயர்த்தாமல், 1 ரூபாய்க்கு அரிசி என்பதெல்லாம் மிக மட்டரகமான அரசியல்தான். ஏன் அதை ஒரு ரூபாய்க்கு விற்க வேண்டும்? சும்மாவே கொடுத்துவிடலாமே? இவரு தமிழ்நாட்டை குட்டிச்சுவராக்கிட்டுத்தான் போவாரு.

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//ஜோசப் பால்ராஜ் said...
மிக நல்ல கருத்துக்கள் நண்பரே.
இது விவசாயிகளை விலையில் மட்டும் பாதிக்காது. கூலி ஆள் பிரச்சனையும் அதிகமாகும். மக்களின் வாழ்வாதாரத்தைப் பெருக்கி அவர்களாக தங்கள் தேவையை பூர்த்திசெய்யும் நிலைக்கு உயர்த்தாமல், 1 ரூபாய்க்கு அரிசி என்பதெல்லாம் மிக மட்டரகமான அரசியல்தான். ஏன் அதை ஒரு ரூபாய்க்கு விற்க வேண்டும்? சும்மாவே கொடுத்துவிடலாமே? இவரு தமிழ்நாட்டை குட்டிச்சுவராக்கிட்டுத்தான் போவாரு.//

நீங்கள் சொல்வது போல் இலவசமாகக் கொடுத்தால், இலவச டி.வி. கொடுப்பதில் பற்றாக்குறை பட்ஜெட் ஆகிவிடும் என்று அவர்கள் அங்கலாய்க்க கூடும்.(இதற்கு மத்திய நிதியமைச்சர் பசி back up வேறு) மக்களைச் சிந்திக்க விடாத மகா அரசியல் வாதிகள்!

//ஜோசப் பால்ராஜ் said...
மிக நல்ல கருத்துக்கள் நண்பரே.
இது விவசாயிகளை விலையில் மட்டும் பாதிக்காது. கூலி ஆள் பிரச்சனையும் அதிகமாகும். மக்களின் வாழ்வாதாரத்தைப் பெருக்கி அவர்களாக தங்கள் தேவையை பூர்த்திசெய்யும் நிலைக்கு உயர்த்தாமல், 1 ரூபாய்க்கு அரிசி என்பதெல்லாம் மிக மட்டரகமான அரசியல்தான். ஏன் அதை ஒரு ரூபாய்க்கு விற்க வேண்டும்? சும்மாவே கொடுத்துவிடலாமே? இவரு தமிழ்நாட்டை குட்டிச்சுவராக்கிட்டுத்தான் போவாரு.//

நீங்கள் சொல்வது போல் இலவசமாகக் கொடுத்தால், இலவச டி.வி. கொடுப்பதில் பற்றாக்குறை பட்ஜெட் ஆகிவிடும் என்று அவர்கள் அங்கலாய்க்க கூடும்.(இதற்கு மத்திய நிதியமைச்சர் பசி back up வேறு) மக்களைச் சிந்திக்க விடாத மகா அரசியல் வாதிகள்!

Anonymous said...

இபோதெல்லாம் நெல் அறுவடைக்கு இயந்திரத்தையே விவசாயிகள் விரும்புகிறார்கள்.கூலிக்கு ஆள் கிடைப்பது மிகவும் கஷ்டமாக உள்ளது, அப்படியே ஆம்பிளை ஆள் கிடைத்தாலும் அவர்கள் கேட்பது கூலியுடன் சேர்ந்து ஒரு டாஸ்மாக் குவாட்டர்..(அறுக்க வேண்டுமானால் பெண் ஆள் போதும் ஆனால் அறுத்ததை அடிக்க கண்டிப்பாக ஆம்பிளை ஆள் தேவை)...

அறுவடை இயந்திரம் ஒரு மணி நேர வாடகை 600 ரூபாய் ஒரு ஏக்கருக்கு. ஒரு நாளில் பத்து ஏக்கர் கூட அறுத்துவிடுகிறது இந்த இயந்திரம் ( டீசல் செலவு ஒரு 500 ஆகும், அதுவும் நம்மளோட தலையில்).

ஆக மொத்தம் இரண்டாயிரத்துக்குள் பத்து ஏக்கர் அடித்துவிடலாம்.

தி.மு.க அரசு இப்போது மார்க்கெட் கமிட்டிகளை முறைப்படுத்தியுள்ளது அதனால் லஞ்சம் கொஞ்சம் கொடுத்தாலும், ஈர நெல்லை தவிர, நல்ல தரமான நெல்லை நல்ல விலைக்கே எடுத்துக்கொள்கிறார்கள்...

(சென்ற வாரம் தான் அறுபது மூட்டை நெல்லை கமிட்டியில் போட்டேன்)

மேலும் வெள்ள நிவாரணமும் சரியாக கிடைக்கும் வகையில் செய்துள்ளார்கள் ( சென்ற வெள்ளத்தில் 4 ஏக்கர் நெல் ஏரித்தண்ணீர் கோடி போனதால் மூழ்கியது, அதுக்கு ஏக்கருக்கு பத்தாயிரம் கொடுத்துவிட்டார்கள் க்ளீனாக.)

என்னுடைய கருத்து ரெண்டு ரூபாய்க்கு போட்டாலும், ஒரு ரூபாய்க்கு போட்டாலும் அதன் இம்பேக்ட் ஒன்றுதான், பெரிய வித்தியாசம் இல்லை...

இந்த அரசு சிறப்பாகவே செயல்படுகிறது என்பது என் கருத்து.

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

ஒழுங்காய் பாடு படு வயற்காட்டில் உயரும் உன் மதிப்பு அயல் நாட்டில்"
விவசாயிகள் ஒழுங்காய் வயலில் பாடுபடவில்லை என்று யாரும் குற்றம் சுமத்த முடியாது. ஏன் என்றான் அவனுடைய விளைபொருளுக்கு சந்தையில் விலை கிடைக்கவில்லை. மழை இல்லை, வர வேண்டிய தண்ணீரும் பிகு பண்ணிக் கொண்டு இடையூறு செய்கிறது. அவன் என்ன செய்வான்? பேசாம வெளிநாடு போய் எதாவது கட்டட வேலை கிடைத்தால் கூட பரவாயில்லை. சம்பாதிக்கலாம் என்று கிளம்பிக் கொண்டிருக்கிறார்கள். அவனுடைய தரத்தை உயர்த்தி வெளிநாடுகளில் அவனுக்கு மதிப்பு ஏற்படும் படி செய்யாமல் இருப்பது ஆட்சியாளர்களின் கையாலாகாத்தனம். இனி உலகம் உணவு சம்பந்தப்பட்ட தொழிலை நம்பி இருக்கிறது. இதைப் பார்க்கும் பொது, விவசாய நாடான நம் நாடு கவலைக்கிடமாக உள்ளது தெளிவாகத் தெரிகிறது.
அதைப் பணமாக்கி நம் விவசாயிகளை வாழ வைக்கத் தவறும் எந்த அரசும் கையாலாகத அரசுதான்.

ஒழுங்காய் பாடு படு வயற்காட்டில் உயரும் உன் மதிப்பு அயல் நாட்டில்"
விவசாயிகள் ஒழுங்காய் வயலில் பாடுபடவில்லை என்று யாரும் குற்றம் சுமத்த முடியாது. ஏன் என்றான் அவனுடைய விளைபொருளுக்கு சந்தையில் விலை கிடைக்கவில்லை. மழை இல்லை, வர வேண்டிய தண்ணீரும் பிகு பண்ணிக் கொண்டு இடையூறு செய்கிறது. அவன் என்ன செய்வான்? பேசாம வெளிநாடு போய் எதாவது கட்டட வேலை கிடைத்தால் கூட பரவாயில்லை. சம்பாதிக்கலாம் என்று கிளம்பிக் கொண்டிருக்கிறார்கள். அவனுடைய தரத்தை உயர்த்தி வெளிநாடுகளில் அவனுக்கு மதிப்பு ஏற்படும் படி செய்யாமல் இருப்பது ஆட்சியாளர்களின் கையாலாகாத்தனம். இனி உலகம் உணவு சம்பந்தப்பட்ட தொழிலை நம்பி இருக்கிறது. இதைப் பார்க்கும் பொது, விவசாய நாடான நம் நாடு கவலைக்கிடமாக உள்ளது தெளிவாகத் தெரிகிறது.
அதைப் பணமாக்கி நம் விவசாயிகளை வாழ வைக்கத் தவறும் எந்த அரசும் கையாலாகத அரசுதான்.

Anonymous said...

உணவுப்பொருள் உற்பத்தி என்பது ஒரு சமுதாயத்தின், நாட்டின் அடிப்படையான இன்றியமையாத பணி. இதன் முக்கியத்துவத்தை அரசும் ஆட்சியாளர்களும் உணருவதில்லை.

விளையும் நிலத்தை மேலும் பக்குவப்படுத்தி பயிர்களை விளைவிப்பவன் அறிவாளி...

விளையும் நிலத்தில் கருங்கல்லைக்கொட்டி கட்டிடம் கட்டி அதில் செல்போன், வண்ணத்தொலைக்காட்சி, குளிர்பதனப் பெட்டி போன்றவற்றை தயாரிப்பவர்கள் அறிவாளிகளா? இச்செயலை ஊக்கப்படுத்தும் அரசுகளும் அரசா? இவர்கள் “மனிதனை உயிரோடு கொத்தித்திண்ணும் கழுகுகள்”

உற்பத்தி செய்யும் பொருளை விற்கும்போது உற்பத்திச்செலவு, மனிதஉழைப்பு, முதலீட்டுக்கான வட்டி இவற்றுடன் நியாயமான இலாபம் போன்றவை உற்பத்தியாளனுக்குக் கிடைத்தால்தான் அவன் தொடர்ந்து முன்னைப்போடு ஒரு பொருளை உற்பத்தி செய்வான்...

விவசாயத்தில் 100 ரூபாய் முதலீடு செய்தால் அந்த 100 ரூபாயை மீட்டெடுப்பதற்கு விவசாயி படாதபாடு படவேண்டியுள்ளது.

இந்நிலையில் “ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்” போன்ற திட்டங்கள் அனைத்தும் முழுமுட்டாளின் அயோக்கித்தனமான மூளையில் உதிப்பவையே...

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//செந்தழல் ரவி said...
இபோதெல்லாம் நெல் அறுவடைக்கு இயந்திரத்தையே விவசாயிகள் விரும்புகிறார்கள்.கூலிக்கு ஆள் கிடைப்பது மிகவும் கஷ்டமாக உள்ளது, அப்படியே ஆம்பிளை ஆள் கிடைத்தாலும் அவர்கள் கேட்பது கூலியுடன் சேர்ந்து ஒரு டாஸ்மாக் குவாட்டர்..(அறுக்க வேண்டுமானால் பெண் ஆள் போதும் ஆனால் அறுத்ததை அடிக்க கண்டிப்பாக ஆம்பிளை ஆள் தேவை)...

அறுவடை இயந்திரம் ஒரு மணி நேர வாடகை 600 ரூபாய் ஒரு ஏக்கருக்கு. ஒரு நாளில் பத்து ஏக்கர் கூட அறுத்துவிடுகிறது இந்த இயந்திரம் ( டீசல் செலவு ஒரு 500 ஆகும், அதுவும் நம்மளோட தலையில்).

ஆக மொத்தம் இரண்டாயிரத்துக்குள் பத்து ஏக்கர் அடித்துவிடலாம்.

தி.மு.க அரசு இப்போது மார்க்கெட் கமிட்டிகளை முறைப்படுத்தியுள்ளது அதனால் லஞ்சம் கொஞ்சம் கொடுத்தாலும், ஈர நெல்லை தவிர, நல்ல தரமான நெல்லை நல்ல விலைக்கே எடுத்துக்கொள்கிறார்கள்...

(சென்ற வாரம் தான் அறுபது மூட்டை நெல்லை கமிட்டியில் போட்டேன்)

மேலும் வெள்ள நிவாரணமும் சரியாக கிடைக்கும் வகையில் செய்துள்ளார்கள் ( சென்ற வெள்ளத்தில் 4 ஏக்கர் நெல் ஏரித்தண்ணீர் கோடி போனதால் மூழ்கியது, அதுக்கு ஏக்கருக்கு பத்தாயிரம் கொடுத்துவிட்டார்கள் க்ளீனாக.)

என்னுடைய கருத்து ரெண்டு ரூபாய்க்கு போட்டாலும், ஒரு ரூபாய்க்கு போட்டாலும் அதன் இம்பேக்ட் ஒன்றுதான், பெரிய வித்தியாசம் இல்லை...

இந்த அரசு சிறப்பாகவே செயல்படுகிறது என்பது என் கருத்து.
//

தங்கள் கருத்துக்கு நன்றி திரு செந்தழல் ரவி,

ஆள் கூலி, உர விலை, பூச்சி மருந்து விலை இவற்றை நெல் கொள்முதல் விலையுடன் ஒப்பிட்டால் எங்கேயோ போய் நிற்கிறது என்பது உண்மை. இதைவிட பயிர்க்கடன் தள்ளுபடி என்பது மிகப்பெரிய மோசடி, அப்ப காத்திருந்தவன் அறிவாளி! ஒழுக்கா கட்டியவன் பாவமா?

//செந்தழல் ரவி said...
இபோதெல்லாம் நெல் அறுவடைக்கு இயந்திரத்தையே விவசாயிகள் விரும்புகிறார்கள்.கூலிக்கு ஆள் கிடைப்பது மிகவும் கஷ்டமாக உள்ளது, அப்படியே ஆம்பிளை ஆள் கிடைத்தாலும் அவர்கள் கேட்பது கூலியுடன் சேர்ந்து ஒரு டாஸ்மாக் குவாட்டர்..(அறுக்க வேண்டுமானால் பெண் ஆள் போதும் ஆனால் அறுத்ததை அடிக்க கண்டிப்பாக ஆம்பிளை ஆள் தேவை)...

அறுவடை இயந்திரம் ஒரு மணி நேர வாடகை 600 ரூபாய் ஒரு ஏக்கருக்கு. ஒரு நாளில் பத்து ஏக்கர் கூட அறுத்துவிடுகிறது இந்த இயந்திரம் ( டீசல் செலவு ஒரு 500 ஆகும், அதுவும் நம்மளோட தலையில்).

ஆக மொத்தம் இரண்டாயிரத்துக்குள் பத்து ஏக்கர் அடித்துவிடலாம்.

தி.மு.க அரசு இப்போது மார்க்கெட் கமிட்டிகளை முறைப்படுத்தியுள்ளது அதனால் லஞ்சம் கொஞ்சம் கொடுத்தாலும், ஈர நெல்லை தவிர, நல்ல தரமான நெல்லை நல்ல விலைக்கே எடுத்துக்கொள்கிறார்கள்...

(சென்ற வாரம் தான் அறுபது மூட்டை நெல்லை கமிட்டியில் போட்டேன்)

மேலும் வெள்ள நிவாரணமும் சரியாக கிடைக்கும் வகையில் செய்துள்ளார்கள் ( சென்ற வெள்ளத்தில் 4 ஏக்கர் நெல் ஏரித்தண்ணீர் கோடி போனதால் மூழ்கியது, அதுக்கு ஏக்கருக்கு பத்தாயிரம் கொடுத்துவிட்டார்கள் க்ளீனாக.)

என்னுடைய கருத்து ரெண்டு ரூபாய்க்கு போட்டாலும், ஒரு ரூபாய்க்கு போட்டாலும் அதன் இம்பேக்ட் ஒன்றுதான், பெரிய வித்தியாசம் இல்லை...

இந்த அரசு சிறப்பாகவே செயல்படுகிறது என்பது என் கருத்து.
//

தங்கள் கருத்துக்கு நன்றி திரு செந்தழல் ரவி,

ஆள் கூலி, உர விலை, பூச்சி மருந்து விலை இவற்றை நெல் கொள்முதல் விலையுடன் ஒப்பிட்டால் எங்கேயோ போய் நிற்கிறது என்பது உண்மை. இதைவிட பயிர்க்கடன் தள்ளுபடி என்பது மிகப்பெரிய மோசடி, அப்ப காத்திருந்தவன் அறிவாளி! ஒழுக்கா கட்டியவன் பாவமா?

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//கரிகாலன் said...
உணவுப்பொருள் உற்பத்தி என்பது ஒரு சமுதாயத்தின், நாட்டின் அடிப்படையான இன்றியமையாத பணி. இதன் முக்கியத்துவத்தை அரசும் ஆட்சியாளர்களும் உணருவதில்லை.

விளையும் நிலத்தை மேலும் பக்குவப்படுத்தி பயிர்களை விளைவிப்பவன் அறிவாளி...

விளையும் நிலத்தில் கருங்கல்லைக்கொட்டி கட்டிடம் கட்டி அதில் செல்போன், வண்ணத்தொலைக்காட்சி, குளிர்பதனப் பெட்டி போன்றவற்றை தயாரிப்பவர்கள் அறிவாளிகளா? இச்செயலை ஊக்கப்படுத்தும் அரசுகளும் அரசா? இவர்கள் “மனிதனை உயிரோடு கொத்தித்திண்ணும் கழுகுகள்”

உற்பத்தி செய்யும் பொருளை விற்கும்போது உற்பத்திச்செலவு, மனிதஉழைப்பு, முதலீட்டுக்கான வட்டி இவற்றுடன் நியாயமான இலாபம் போன்றவை உற்பத்தியாளனுக்குக் கிடைத்தால்தான் அவன் தொடர்ந்து முன்னைப்போடு ஒரு பொருளை உற்பத்தி செய்வான்...

விவசாயத்தில் 100 ரூபாய் முதலீடு செய்தால் அந்த 100 ரூபாயை மீட்டெடுப்பதற்கு விவசாயி படாதபாடு படவேண்டியுள்ளது.

இந்நிலையில் “ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்” போன்ற திட்டங்கள் அனைத்தும் முழுமுட்டாளின் அயோக்கித்தனமான மூளையில் உதிப்பவையே...//


ஏற்றுக்கொள்ளக் கூடிய விரிவான பின்னூட்டத்தை வழங்கிய திரு.கரிகாலன் அவர்களுக்கு நன்றி!

//கரிகாலன் said...
உணவுப்பொருள் உற்பத்தி என்பது ஒரு சமுதாயத்தின், நாட்டின் அடிப்படையான இன்றியமையாத பணி. இதன் முக்கியத்துவத்தை அரசும் ஆட்சியாளர்களும் உணருவதில்லை.

விளையும் நிலத்தை மேலும் பக்குவப்படுத்தி பயிர்களை விளைவிப்பவன் அறிவாளி...

விளையும் நிலத்தில் கருங்கல்லைக்கொட்டி கட்டிடம் கட்டி அதில் செல்போன், வண்ணத்தொலைக்காட்சி, குளிர்பதனப் பெட்டி போன்றவற்றை தயாரிப்பவர்கள் அறிவாளிகளா? இச்செயலை ஊக்கப்படுத்தும் அரசுகளும் அரசா? இவர்கள் “மனிதனை உயிரோடு கொத்தித்திண்ணும் கழுகுகள்”

உற்பத்தி செய்யும் பொருளை விற்கும்போது உற்பத்திச்செலவு, மனிதஉழைப்பு, முதலீட்டுக்கான வட்டி இவற்றுடன் நியாயமான இலாபம் போன்றவை உற்பத்தியாளனுக்குக் கிடைத்தால்தான் அவன் தொடர்ந்து முன்னைப்போடு ஒரு பொருளை உற்பத்தி செய்வான்...

விவசாயத்தில் 100 ரூபாய் முதலீடு செய்தால் அந்த 100 ரூபாயை மீட்டெடுப்பதற்கு விவசாயி படாதபாடு படவேண்டியுள்ளது.

இந்நிலையில் “ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்” போன்ற திட்டங்கள் அனைத்தும் முழுமுட்டாளின் அயோக்கித்தனமான மூளையில் உதிப்பவையே...//


ஏற்றுக்கொள்ளக் கூடிய விரிவான பின்னூட்டத்தை வழங்கிய திரு.கரிகாலன் அவர்களுக்கு நன்றி!

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

அரசாங்கத்தால் சில பணக்கார விவசாயிகளுக்கு பலன் கிடைத்தது உண்மைதான்(குறுகிய கால பலன்) மூன்று லட்ச ரூபாய்க்கு டிராக்டர் லோன் தள்ளுபடி, ஐம்பதாயிரத்துக்கு எடுத்த பயிர்க்கடன் தள்ளுபடி. இதனால் அவர்களுக்கு ஏற்படும் சிற்றின்பம் நீண்ட காலப் பலனைத் தராது. இது போற்ற செயல்பாடுகள் நல்லதல்ல என்று தனிமையில் பசியைச் சந்தித்தால் ஆப் த ரேகார்டாகவே சொல்லுவார்.

அரசாங்கத்தால் சில பணக்கார விவசாயிகளுக்கு பலன் கிடைத்தது உண்மைதான்(குறுகிய கால பலன்) மூன்று லட்ச ரூபாய்க்கு டிராக்டர் லோன் தள்ளுபடி, ஐம்பதாயிரத்துக்கு எடுத்த பயிர்க்கடன் தள்ளுபடி. இதனால் அவர்களுக்கு ஏற்படும் சிற்றின்பம் நீண்ட காலப் பலனைத் தராது. இது போற்ற செயல்பாடுகள் நல்லதல்ல என்று தனிமையில் பசியைச் சந்தித்தால் ஆப் த ரேகார்டாகவே சொல்லுவார்.

கிரி said...

நல்ல விரிவா கூறி இருக்கீங்க. எனக்கு இன்னும் இது பற்றி அதிக விவரங்கள் எதுவும் தெரியாததால் கருத்து கூற விரும்பவில்லை.

தொடர்ந்து இதை போல பதிவுகளை எழுதுங்கள்.

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//கிரி said...
நல்ல விரிவா கூறி இருக்கீங்க. எனக்கு இன்னும் இது பற்றி அதிக விவரங்கள் எதுவும் தெரியாததால் கருத்து கூற விரும்பவில்லை.

தொடர்ந்து இதை போல பதிவுகளை எழுதுங்கள்.
//

வாங்க கிரி! வருகைக்கு நன்றி!!

கண்டிப்பாக எழுத ஆசைதான்.

நமக்கு(எல்லோருக்கும்) இட்லி அரிசி என்ன விலை விற்கிறது என்றாவது தெரியும் அல்லவா? அதுவே போதும்...!

//கிரி said...
நல்ல விரிவா கூறி இருக்கீங்க. எனக்கு இன்னும் இது பற்றி அதிக விவரங்கள் எதுவும் தெரியாததால் கருத்து கூற விரும்பவில்லை.

தொடர்ந்து இதை போல பதிவுகளை எழுதுங்கள்.
//

வாங்க கிரி! வருகைக்கு நன்றி!!

கண்டிப்பாக எழுத ஆசைதான்.

நமக்கு(எல்லோருக்கும்) இட்லி அரிசி என்ன விலை விற்கிறது என்றாவது தெரியும் அல்லவா? அதுவே போதும்...!

Anonymous said...

Oru rubaaiku oru kilo arisi. Apram Ilavasa colour TV. Naadu uruppaduma??

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

Barathi said...
Oru rubaaiku oru kilo arisi. Apram Ilavasa colour TV. Naadu uruppaduma??

ஆண்டவனுக்கே வெளிச்சம்= ஆண்ட+அவனுக்கே வெளிச்சம்

Barathi said...
Oru rubaaiku oru kilo arisi. Apram Ilavasa colour TV. Naadu uruppaduma??

ஆண்டவனுக்கே வெளிச்சம்= ஆண்ட+அவனுக்கே வெளிச்சம்

Anonymous said...

Appa Jayalalitha seithathellaam niyayamnu solreengala?

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//Anonymous said...
Appa Jayalalitha seithathellaam niyayamnu solreengala?//



நான் சொல்லாதவற்றை நீங்களே எடுத்துக் கொண்டால் அதற்கு நான் என்ன செய்ய முடியும். பதிவை ஒட்டி கருத்து தெரிவித்தால் நன்றாக இருக்கும். நீங்கள் வெட்டி கருத்து சொல்கிறீர்கள். நன்றி!

//Anonymous said...
Appa Jayalalitha seithathellaam niyayamnu solreengala?//



நான் சொல்லாதவற்றை நீங்களே எடுத்துக் கொண்டால் அதற்கு நான் என்ன செய்ய முடியும். பதிவை ஒட்டி கருத்து தெரிவித்தால் நன்றாக இருக்கும். நீங்கள் வெட்டி கருத்து சொல்கிறீர்கள். நன்றி!

ஜோ/Joe said...

ஜோதிபாரதி,
நீங்கள் சொல்லுகிற விவசாயி பிரச்சனையெல்லாம் சரி தாங்க ..ஆனா இப்போ ரேஷன் அரிசி 2 ரூபாய்க்கு பதிலா 1 ருபாய்க்கு கொடுக்குறதுக்கும் அதுக்கெல்லாம் என்ன சம்பந்தம்-ன்னு தான் எனக்கு புரியல்ல.

//அந்த ஒரு ரூபாயும் அவனுக்குக் கிடைக்காத பட்சத்தில் அவன் எப்படி அந்த அரிசியை வாங்கிச் சாப்பிட முடியும்.//

என்ன தான் சொல்ல வர்றீங்க ? ரெண்டு ரூபாயா இருந்த போது அவனுக்கு கிடைச்சது ..இப்போ ஒரு ரூபாய் கிடைக்காதா ? சரிங்க ..இப்போ அவனுக்கு ஒரு ரூபா கிடைக்குறதுக்கு என்ன பண்ணனும்கிறீங்க ? மாசா மாசம் காசு கொடுத்துடலாம்.. ஓ..சரி..சரி.. வாழ்க்கை தரத்தை உயர்த்தணும் ..ஒகே ..அதுவரைக்கும் அவனுக்கு 2 ரூபாய்க்கு பதிலா 1 ரூபாய்க்கு அரிசி கிடைக்குறதுல உங்களுக்கு என்ன கோவம் ?

வேற உருப்படியான ஏதாவது பண்ணினா ..சாப்பாட்டுக்கே வழியில்லை ..இது ரொம்ப முக்கியமா-ன்னு கேப்பீங்க .. குறைந்த பட்சம் சாப்பாட்டுக்கு வழி பண்ணினா பெரிய பொருளாதாரம் பேசுவீங்க .

எனக்கு தான் புரியல்ல.

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//ஜோ / Joe said...
ஜோதிபாரதி,
நீங்கள் சொல்லுகிற விவசாயி பிரச்சனையெல்லாம் சரி தாங்க ..ஆனா இப்போ ரேஷன் அரிசி 2 ரூபாய்க்கு பதிலா 1 ருபாய்க்கு கொடுக்குறதுக்கும் அதுக்கெல்லாம் என்ன சம்பந்தம்-ன்னு தான் எனக்கு புரியல்ல.

//அந்த ஒரு ரூபாயும் அவனுக்குக் கிடைக்காத பட்சத்தில் அவன் எப்படி அந்த அரிசியை வாங்கிச் சாப்பிட முடியும்.//

என்ன தான் சொல்ல வர்றீங்க ? ரெண்டு ரூபாயா இருந்த போது அவனுக்கு கிடைச்சது ..இப்போ ஒரு ரூபாய் கிடைக்காதா ? சரிங்க ..இப்போ அவனுக்கு ஒரு ரூபா கிடைக்குறதுக்கு என்ன பண்ணனும்கிறீங்க ? மாசா மாசம் காசு கொடுத்துடலாம்.. ஓ..சரி..சரி.. வாழ்க்கை தரத்தை உயர்த்தணும் ..ஒகே ..அதுவரைக்கும் அவனுக்கு 2 ரூபாய்க்கு பதிலா 1 ரூபாய்க்கு அரிசி கிடைக்குறதுல உங்களுக்கு என்ன கோவம் ?

வேற உருப்படியான ஏதாவது பண்ணினா ..சாப்பாட்டுக்கே வழியில்லை ..இது ரொம்ப முக்கியமா-ன்னு கேப்பீங்க .. குறைந்த பட்சம் சாப்பாட்டுக்கு வழி பண்ணினா பெரிய பொருளாதாரம் பேசுவீங்க .

எனக்கு தான் புரியல்ல.//

நீங்களே சில கேள்விகளைக் கேட்டுக்கொண்டு பதிலையும் சொல்லி விட்டீர்கள். நன்றி ஜோ! நான் அந்த பதிலை சொல்வேன் என்று எப்படி அனுமானித்தீர்கள்.

விவசாயத் தொழிலையே குழிதோண்டி புதைத்தற்கு அப்புறம், அந்த தொழிலையே நம்பி வாழும் விவசாயக் கூலி எந்த வேலையை செய்து சம்பாதிப்பான். அவனுக்குக் காசு எங்கிருந்து வரும்? நான் நகரத்தில் இருக்கும் தினக்கூலியை வைத்து சொல்லவில்லை. நகரத்தில் நிறைய கட்டிடம் கட்டுகிறார்கள் அவன் பிழைக்க ஓரளவு வழி இருக்கிறது.(ப.சிதம்பரம் அவர்களின் பணம் வீங்காத வரை)
அரைக்கும் சாமான் இருக்கு இல்லைங்களா? அவைகள் என்ன விலை விற்கின்றன? ஏன் அதன் விலையைக் கொஞ்சம் கூடக் குறைக்க இயலவில்லை. சும்மா அண்ணாமலை சைக்கிள் மாதிரி ரெக்கை கட்டி அல்லவா பறக்கிறது.
தினமும் தமிழன் நாக்கு செத்து கிடக்கணும் என்று நினைக்கிறீர்களா? கஞ்சி தொட்டி திறந்து ஊற்றி பிச்சைக்காரர்களாக்கினார்கள்.(அதை நெசவாளர்களே விரும்பவில்லை என்பது வேறு விடயம்). தஞ்சை விவசாயி எலிக்கறி திண்கிறான் சாப்பிட அரிசியில்லை என்று சொன்னார்கள். அது பொய்! சுத்தப் பொய்! கோடையில் வரப்பில் எலி வெட்டுவது ஏழை விவசாயிகளின் வழக்கம். எலி வெட்டும் பொது அது சேமித்து வைத்திருக்கும் நெல்லை எடுத்து விற்றுக் கொள்வார்கள். எலியையும் சமைத்து சாப்பிடுவார்கள். இதையும் ஊடகங்களில் போட்டு ஆதாயம் தேடிக்கொண்டார்கள்.
இந்த பதிவின் நோக்கமே விவசாயிகளுக்கு நெல்லுக்கு நியாயமான விலை. அது கிடைக்காத பட்சத்தில் ஒரு ரூபாய்க்கோ அரை ரூபாய்க்கோ அரிசி போட்டாலும், விவசாயத் தொழில் அழிய மிகபெரிய காரணமாக அமைந்துவிடும் என்பதே!

//ஜோ / Joe said...
ஜோதிபாரதி,
நீங்கள் சொல்லுகிற விவசாயி பிரச்சனையெல்லாம் சரி தாங்க ..ஆனா இப்போ ரேஷன் அரிசி 2 ரூபாய்க்கு பதிலா 1 ருபாய்க்கு கொடுக்குறதுக்கும் அதுக்கெல்லாம் என்ன சம்பந்தம்-ன்னு தான் எனக்கு புரியல்ல.

//அந்த ஒரு ரூபாயும் அவனுக்குக் கிடைக்காத பட்சத்தில் அவன் எப்படி அந்த அரிசியை வாங்கிச் சாப்பிட முடியும்.//

என்ன தான் சொல்ல வர்றீங்க ? ரெண்டு ரூபாயா இருந்த போது அவனுக்கு கிடைச்சது ..இப்போ ஒரு ரூபாய் கிடைக்காதா ? சரிங்க ..இப்போ அவனுக்கு ஒரு ரூபா கிடைக்குறதுக்கு என்ன பண்ணனும்கிறீங்க ? மாசா மாசம் காசு கொடுத்துடலாம்.. ஓ..சரி..சரி.. வாழ்க்கை தரத்தை உயர்த்தணும் ..ஒகே ..அதுவரைக்கும் அவனுக்கு 2 ரூபாய்க்கு பதிலா 1 ரூபாய்க்கு அரிசி கிடைக்குறதுல உங்களுக்கு என்ன கோவம் ?

வேற உருப்படியான ஏதாவது பண்ணினா ..சாப்பாட்டுக்கே வழியில்லை ..இது ரொம்ப முக்கியமா-ன்னு கேப்பீங்க .. குறைந்த பட்சம் சாப்பாட்டுக்கு வழி பண்ணினா பெரிய பொருளாதாரம் பேசுவீங்க .

எனக்கு தான் புரியல்ல.//

நீங்களே சில கேள்விகளைக் கேட்டுக்கொண்டு பதிலையும் சொல்லி விட்டீர்கள். நன்றி ஜோ! நான் அந்த பதிலை சொல்வேன் என்று எப்படி அனுமானித்தீர்கள்.

விவசாயத் தொழிலையே குழிதோண்டி புதைத்தற்கு அப்புறம், அந்த தொழிலையே நம்பி வாழும் விவசாயக் கூலி எந்த வேலையை செய்து சம்பாதிப்பான். அவனுக்குக் காசு எங்கிருந்து வரும்? நான் நகரத்தில் இருக்கும் தினக்கூலியை வைத்து சொல்லவில்லை. நகரத்தில் நிறைய கட்டிடம் கட்டுகிறார்கள் அவன் பிழைக்க ஓரளவு வழி இருக்கிறது.(ப.சிதம்பரம் அவர்களின் பணம் வீங்காத வரை)
அரைக்கும் சாமான் இருக்கு இல்லைங்களா? அவைகள் என்ன விலை விற்கின்றன? ஏன் அதன் விலையைக் கொஞ்சம் கூடக் குறைக்க இயலவில்லை. சும்மா அண்ணாமலை சைக்கிள் மாதிரி ரெக்கை கட்டி அல்லவா பறக்கிறது.
தினமும் தமிழன் நாக்கு செத்து கிடக்கணும் என்று நினைக்கிறீர்களா? கஞ்சி தொட்டி திறந்து ஊற்றி பிச்சைக்காரர்களாக்கினார்கள்.(அதை நெசவாளர்களே விரும்பவில்லை என்பது வேறு விடயம்). தஞ்சை விவசாயி எலிக்கறி திண்கிறான் சாப்பிட அரிசியில்லை என்று சொன்னார்கள். அது பொய்! சுத்தப் பொய்! கோடையில் வரப்பில் எலி வெட்டுவது ஏழை விவசாயிகளின் வழக்கம். எலி வெட்டும் பொது அது சேமித்து வைத்திருக்கும் நெல்லை எடுத்து விற்றுக் கொள்வார்கள். எலியையும் சமைத்து சாப்பிடுவார்கள். இதையும் ஊடகங்களில் போட்டு ஆதாயம் தேடிக்கொண்டார்கள்.
இந்த பதிவின் நோக்கமே விவசாயிகளுக்கு நெல்லுக்கு நியாயமான விலை. அது கிடைக்காத பட்சத்தில் ஒரு ரூபாய்க்கோ அரை ரூபாய்க்கோ அரிசி போட்டாலும், விவசாயத் தொழில் அழிய மிகபெரிய காரணமாக அமைந்துவிடும் என்பதே!

Anonymous said...

///
ஆள் கூலி, உர விலை, பூச்சி மருந்து விலை இவற்றை நெல் கொள்முதல் விலையுடன் ஒப்பிட்டால் எங்கேயோ போய் நிற்கிறது என்பது உண்மை. இதைவிட பயிர்க்கடன் தள்ளுபடி என்பது மிகப்பெரிய மோசடி, அப்ப காத்திருந்தவன் அறிவாளி! ஒழுக்கா கட்டியவன் பாவமா?///

வெச்சிருந்தான் கட்டினான். இல்லாதவன் கட்டலை. அவ்ளோதான். எங்க ஊருல 100 ஏக்கர் வெச்சிருக்கறவது 90 ஆயிரம் தள்ளுபடி ஆச்சு. அதுக்காக இப்படி ஒரு திட்டமே அறிவிக்காம இருக்கமுடியுமா ? நெல்லுக்கு பாயும்போது புல்லுக்கும் பாயுறமாதிரி, நிறைய விவசாயிங்க வயித்துல பாலை ஊத்தின அறிவிப்பு இது. இதை குறைசொல்வது தவறுங்ணா.

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//செந்தழல் ரவி said...
///
ஆள் கூலி, உர விலை, பூச்சி மருந்து விலை இவற்றை நெல் கொள்முதல் விலையுடன் ஒப்பிட்டால் எங்கேயோ போய் நிற்கிறது என்பது உண்மை. இதைவிட பயிர்க்கடன் தள்ளுபடி என்பது மிகப்பெரிய மோசடி, அப்ப காத்திருந்தவன் அறிவாளி! ஒழுக்கா கட்டியவன் பாவமா?///

வெச்சிருந்தான் கட்டினான். இல்லாதவன் கட்டலை. அவ்ளோதான். எங்க ஊருல 100 ஏக்கர் வெச்சிருக்கறவது 90 ஆயிரம் தள்ளுபடி ஆச்சு. அதுக்காக இப்படி ஒரு திட்டமே அறிவிக்காம இருக்கமுடியுமா ? நெல்லுக்கு பாயும்போது புல்லுக்கும் பாயுறமாதிரி, நிறைய விவசாயிங்க வயித்துல பாலை ஊத்தின அறிவிப்பு இது. இதை குறைசொல்வது தவறுங்ணா.//

இல்லாதவன் நிலம் வாங்கியிருக்கலாம், வங்கியில் வைத்திருக்கலாம், ஏன் பெட்டியில் கூட வைத்திருக்கலாம், யார் கண்டார்கள்? அவர்களை இல்லாதவர்கள் என்று எப்படி சொல்ல முடியும்?


பணத்தை வட்டியுடன் கட்டிய விவசாயியின் பணத்தைத் திருப்பித் தராததை எந்த வகையில் நியாயமாகக் கருதுகிறீர்கள். இரண்டு கண்களில்(இரண்டும் நம் கண்கள்) ஒரு கண்ணுக்கு வெண்ணெய், மற்றொன்றுக்கு சுண்ணாம்பா? என்று என்னும் பொது கொஞ்சம் வேதனையாகத் தான் உள்ளது.

//செந்தழல் ரவி said...
///
ஆள் கூலி, உர விலை, பூச்சி மருந்து விலை இவற்றை நெல் கொள்முதல் விலையுடன் ஒப்பிட்டால் எங்கேயோ போய் நிற்கிறது என்பது உண்மை. இதைவிட பயிர்க்கடன் தள்ளுபடி என்பது மிகப்பெரிய மோசடி, அப்ப காத்திருந்தவன் அறிவாளி! ஒழுக்கா கட்டியவன் பாவமா?///

வெச்சிருந்தான் கட்டினான். இல்லாதவன் கட்டலை. அவ்ளோதான். எங்க ஊருல 100 ஏக்கர் வெச்சிருக்கறவது 90 ஆயிரம் தள்ளுபடி ஆச்சு. அதுக்காக இப்படி ஒரு திட்டமே அறிவிக்காம இருக்கமுடியுமா ? நெல்லுக்கு பாயும்போது புல்லுக்கும் பாயுறமாதிரி, நிறைய விவசாயிங்க வயித்துல பாலை ஊத்தின அறிவிப்பு இது. இதை குறைசொல்வது தவறுங்ணா.//

இல்லாதவன் நிலம் வாங்கியிருக்கலாம், வங்கியில் வைத்திருக்கலாம், ஏன் பெட்டியில் கூட வைத்திருக்கலாம், யார் கண்டார்கள்? அவர்களை இல்லாதவர்கள் என்று எப்படி சொல்ல முடியும்?


பணத்தை வட்டியுடன் கட்டிய விவசாயியின் பணத்தைத் திருப்பித் தராததை எந்த வகையில் நியாயமாகக் கருதுகிறீர்கள். இரண்டு கண்களில்(இரண்டும் நம் கண்கள்) ஒரு கண்ணுக்கு வெண்ணெய், மற்றொன்றுக்கு சுண்ணாம்பா? என்று என்னும் பொது கொஞ்சம் வேதனையாகத் தான் உள்ளது.

Anonymous said...

//ஓர் ஏழை நடுத்தர விவசாயி ஓர் ஏக்கர் நிலம் வைத்திருக்கிறான் என்று வைத்துக் கொள்வோம். அவனுடைய செலவுகளைப் கொஞ்சம் சிந்திப்போம், ஒரு ஆள் கூலி 100 முதல் 150 வரை. நடவாள்(பெரும்பாலும் பெண்கள்) ரூபாய் 75 முதல் 100 வரை. ஒரு மூட்டை DAP 1000 ரூபாய் வரை விற்கிறது. இதில் கூலி ஆள் கிடைப்பது குதிரைக் கொம்பாய் இருக்கிறது. ஏன் என்றால் இப்படி விவசாயிகள் படும் கஷ்டத்தில் அவன் எப்படி கூலி கொடுக்கப்போகிறான் என்று எண்ணி அனைவரும் வெளி மாநிலங்கள், வெளிநாடு என்று சென்று விட்டார்கள். இந்த சூழ்நிலையில் இன்னும் விவசாயம் செய்யும் ஏழை நடுத்தர விவசாயிகள் பாவப் பட்ட ஜென்மங்களாக இருக்கிறார்கள். இவ்வளவும் கஷ்டப்பட்டு, அவன் நெல் விற்க வரும் போது அரசாங்கம் நெல் வாங்குவதற்கு பிகு பண்ணுவதைப் பார்த்திருக்கிறோம். அதைவிடக் கொடுமை அடிமாட்டு விலைக்கு எடுத்துக் கொள்வதைப் பார்த்திருக்கிறோம். அதில் எடை போடுபவனுக்கும், வாங்கும் ஊழியனுக்கும் கையூட்டு வேறு.//


அனுபவப் பட்டது மாதிரி சொல்றீங்களே, அது எப்படீங்கண்ணா?

கோவி.கண்ணன் said...

கலக்கலாக எழுதி இருக்கிங்க, 1ரூபாய் திட்டத்தினால் பாதிக்கப்படும் விவாசாயிகளின் விவசாய நிலமெல்லாம் வீட்டுமனை ஆக்கப் போகிறார்கள் !

:(

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//Anonymous said...
//ஓர் ஏழை நடுத்தர விவசாயி ஓர் ஏக்கர் நிலம் வைத்திருக்கிறான் என்று வைத்துக் கொள்வோம். அவனுடைய செலவுகளைப் கொஞ்சம் சிந்திப்போம், ஒரு ஆள் கூலி 100 முதல் 150 வரை. நடவாள்(பெரும்பாலும் பெண்கள்) ரூபாய் 75 முதல் 100 வரை. ஒரு மூட்டை DAP 1000 ரூபாய் வரை விற்கிறது. இதில் கூலி ஆள் கிடைப்பது குதிரைக் கொம்பாய் இருக்கிறது. ஏன் என்றால் இப்படி விவசாயிகள் படும் கஷ்டத்தில் அவன் எப்படி கூலி கொடுக்கப்போகிறான் என்று எண்ணி அனைவரும் வெளி மாநிலங்கள், வெளிநாடு என்று சென்று விட்டார்கள். இந்த சூழ்நிலையில் இன்னும் விவசாயம் செய்யும் ஏழை நடுத்தர விவசாயிகள் பாவப் பட்ட ஜென்மங்களாக இருக்கிறார்கள். இவ்வளவும் கஷ்டப்பட்டு, அவன் நெல் விற்க வரும் போது அரசாங்கம் நெல் வாங்குவதற்கு பிகு பண்ணுவதைப் பார்த்திருக்கிறோம். அதைவிடக் கொடுமை அடிமாட்டு விலைக்கு எடுத்துக் கொள்வதைப் பார்த்திருக்கிறோம். அதில் எடை போடுபவனுக்கும், வாங்கும் ஊழியனுக்கும் கையூட்டு வேறு.//


அனுபவப் பட்டது மாதிரி சொல்றீங்களே, அது எப்படீங்கண்ணா?//

அது ஒரு சுகமான சுமைகள்!

//Anonymous said...
//ஓர் ஏழை நடுத்தர விவசாயி ஓர் ஏக்கர் நிலம் வைத்திருக்கிறான் என்று வைத்துக் கொள்வோம். அவனுடைய செலவுகளைப் கொஞ்சம் சிந்திப்போம், ஒரு ஆள் கூலி 100 முதல் 150 வரை. நடவாள்(பெரும்பாலும் பெண்கள்) ரூபாய் 75 முதல் 100 வரை. ஒரு மூட்டை DAP 1000 ரூபாய் வரை விற்கிறது. இதில் கூலி ஆள் கிடைப்பது குதிரைக் கொம்பாய் இருக்கிறது. ஏன் என்றால் இப்படி விவசாயிகள் படும் கஷ்டத்தில் அவன் எப்படி கூலி கொடுக்கப்போகிறான் என்று எண்ணி அனைவரும் வெளி மாநிலங்கள், வெளிநாடு என்று சென்று விட்டார்கள். இந்த சூழ்நிலையில் இன்னும் விவசாயம் செய்யும் ஏழை நடுத்தர விவசாயிகள் பாவப் பட்ட ஜென்மங்களாக இருக்கிறார்கள். இவ்வளவும் கஷ்டப்பட்டு, அவன் நெல் விற்க வரும் போது அரசாங்கம் நெல் வாங்குவதற்கு பிகு பண்ணுவதைப் பார்த்திருக்கிறோம். அதைவிடக் கொடுமை அடிமாட்டு விலைக்கு எடுத்துக் கொள்வதைப் பார்த்திருக்கிறோம். அதில் எடை போடுபவனுக்கும், வாங்கும் ஊழியனுக்கும் கையூட்டு வேறு.//


அனுபவப் பட்டது மாதிரி சொல்றீங்களே, அது எப்படீங்கண்ணா?//

அது ஒரு சுகமான சுமைகள்!

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//கோவி.கண்ணன் said...
கலக்கலாக எழுதி இருக்கிங்க, 1ரூபாய் திட்டத்தினால் பாதிக்கப்படும் விவாசாயிகளின் விவசாய நிலமெல்லாம் வீட்டுமனை ஆக்கப் போகிறார்கள் !

:(//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு கோவி.கண்ணன்.


//1ரூபாய் திட்டத்தினால் பாதிக்கப்படும் விவாசாயிகளின் விவசாய நிலமெல்லாம் வீட்டுமனை ஆக்கப் போகிறார்கள் !//

அப்படியா! அப்படின்னா செங்கல் இட்லி, ஜல்லி சிமெண்ட் சாலட் இப்படி கட புடன்னு சாப்பிட்டுப் பழகிக்க வேண்டியதுதான். தண்ணீர் கிடைக்குமல்லவா? அதிகம் சம்பளம் கொடுப்பார்களேனில் பணங்காசு சாப்பிட்டு பழகிக்கலாம்.

//கோவி.கண்ணன் said...
கலக்கலாக எழுதி இருக்கிங்க, 1ரூபாய் திட்டத்தினால் பாதிக்கப்படும் விவாசாயிகளின் விவசாய நிலமெல்லாம் வீட்டுமனை ஆக்கப் போகிறார்கள் !

:(//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு கோவி.கண்ணன்.


//1ரூபாய் திட்டத்தினால் பாதிக்கப்படும் விவாசாயிகளின் விவசாய நிலமெல்லாம் வீட்டுமனை ஆக்கப் போகிறார்கள் !//

அப்படியா! அப்படின்னா செங்கல் இட்லி, ஜல்லி சிமெண்ட் சாலட் இப்படி கட புடன்னு சாப்பிட்டுப் பழகிக்க வேண்டியதுதான். தண்ணீர் கிடைக்குமல்லவா? அதிகம் சம்பளம் கொடுப்பார்களேனில் பணங்காசு சாப்பிட்டு பழகிக்கலாம்.

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

மக்கள் அன்றாடம் மன்றாடி கேட்பதெல்லாம் ரெக்கை கட்டிப் பறக்கும் அரவைசாமான் விலை வாசியைக் குறையுங்கள் அய்யா என்று. யாரும் ஒரு ரூபாய்க்கு அரிசி போடுங்கள் என்று கேட்கவில்லை. மக்கள் கேட்பதை செய்ய மாட்டார்கள். கேட்காததை செய்கிறேன் என்று மல்லுக்கட்டுகிறார்கள். சிலநேரம் இவர்கள் சொல்வது மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்று...! எல்லாம் வேடிக்கைதான். வாடிக்கையும் கூட...! 67 -ல் சொன்னதை
இப்போது செய்கிறேன் என்பது செண்டிமெண்டா? பொருளாதாரம் படித்த பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள் இப்போது இருந்தால்...! இது நாட்டைக் குட்டிச் சுவராக்கும் வேலை என்று சொல்லி இருப்பார். கூலி ஆளை வேலைக்கு எடுத்து அவனுக்கு சம்பளம் கொடுத்தால், அவன் வாங்கிச் சாப்பிட்டுவிட்டுப் போகிறான். நிறைய வேலை இருக்கிறது. அதை கண்டறியும் பொறுப்பை அதிகாரிகளிடம் விடலாம். இதனால் மக்களுக்கு வாங்கும் சக்தி அதிகரிக்கும்.

மக்கள் அன்றாடம் மன்றாடி கேட்பதெல்லாம் ரெக்கை கட்டிப் பறக்கும் அரவைசாமான் விலை வாசியைக் குறையுங்கள் அய்யா என்று. யாரும் ஒரு ரூபாய்க்கு அரிசி போடுங்கள் என்று கேட்கவில்லை. மக்கள் கேட்பதை செய்ய மாட்டார்கள். கேட்காததை செய்கிறேன் என்று மல்லுக்கட்டுகிறார்கள். சிலநேரம் இவர்கள் சொல்வது மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்று...! எல்லாம் வேடிக்கைதான். வாடிக்கையும் கூட...! 67 -ல் சொன்னதை
இப்போது செய்கிறேன் என்பது செண்டிமெண்டா? பொருளாதாரம் படித்த பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள் இப்போது இருந்தால்...! இது நாட்டைக் குட்டிச் சுவராக்கும் வேலை என்று சொல்லி இருப்பார். கூலி ஆளை வேலைக்கு எடுத்து அவனுக்கு சம்பளம் கொடுத்தால், அவன் வாங்கிச் சாப்பிட்டுவிட்டுப் போகிறான். நிறைய வேலை இருக்கிறது. அதை கண்டறியும் பொறுப்பை அதிகாரிகளிடம் விடலாம். இதனால் மக்களுக்கு வாங்கும் சக்தி அதிகரிக்கும்.

Anonymous said...

//வெளிநாடுகளில், உலகம் முழுவதும் ஏற்பட்டிருக்கும் உணவு தட்டுப்பாட்டில்(Food Crisis). நீங்கள் கற்றுக் கொண்ட பாடம் என்ன? குறைந்த பட்சம் அது தெரியுமா உங்களுக்கு? நம் விவசாயி உற்பத்தி செய்யும் 9 ரூபாய் மதிப்புள்ள வெகு சன்ன ரக அரிசி இன்று வெளிநாட்டில் 150 ரூபாய் விற்கிறது.(கிடைப்பது அரிதாக இருக்கிறது) ஏன் நமது விவசாயிகளின் உழைப்பால் விளைந்த நெல்லை உபயோகம் போக உபரியை வெளிநாட்டிற்கு அனுப்பி அவனை நிம்மதியாக வாழவிட்டால் என்ன? விவசாயிகள் வாழ்ந்தால் தான் ஏழை மக்கள் வாழ்க்கை தன்னிறைவு அடையும். இல்லை என்றால் எல்லா விவசாய குடும்பத்தில் உள்ளவர்களும் வெளி மாநிலத்திற்கு,வெளிநாட்டிற்கு வேலை தேடிச் செல்லும் படலம் தொடர்வது உறுதி.
விவசாயம் செய்ய யாரும் இல்லாத துர்பாக்கிய நிலை ஏற்பட்டுவிடும் அபாயம் இருக்கிறது. இதை தடுக்க வேண்டியது ஆட்சியில் இருப்பவர்களின் கடமை அல்லவா?//


அரிசி 20 டாலர் அய்யா.

ஜோ/Joe said...

ஜோதிபாரதி,
உங்கள் பொறுமையான பதிலுக்கு நன்றி!

//இந்த பதிவின் நோக்கமே விவசாயிகளுக்கு நெல்லுக்கு நியாயமான விலை. அது கிடைக்காத பட்சத்தில் ஒரு ரூபாய்க்கோ அரை ரூபாய்க்கோ அரிசி போட்டாலும், விவசாயத் தொழில் அழிய மிகபெரிய காரணமாக அமைந்துவிடும் என்பதே!//

இந்த பதிவின் நோக்கம் விவசாயிகளுக்கு நெல்லுக்கு நியாயமான விலை கிடைக்க வேண்டும் என்பதே என்றால் நீங்கள் அதைப்பற்றி ஆலோசனைகள் சொல்லலாமே .அதையும் 1 ரூபாய்க்கு அரிசியையும் முடிச்சு போடுவது எதனால் ? ரேஷன் அரிசி விலை குறைக்கப்பட்டுள்ளதால் , நெல் கொள்முதல் விலை குறைக்கப்பட்டுள்ளதா என்ன ?

மேலும் இந்த திட்டம் விவசாயிகளுக்காக கொண்டுவரப்படவில்லை .தமிழகத்தில் உள்ள ஏழை மக்களுக்கு குறைந்த விலையில் அரிசி கிடைக்க கொண்டுவரப்பட்டுள்ளது . நெல்லுக்கு நியாயமான விலை கிடைக்காததற்கும் மக்களுக்கு குறைந்த விலையில் அரிசி கொடுப்பதற்கு என்ன சம்பந்தம் ? இரண்டும் வேறு வேறு அல்லவா?

குறைந்த விலைக்கு அரிசி கொடுப்பதால் "வெளிமாநிலத்திற்கு நம் ரேஷன் அரிசி கடத்தப் பட்டு அங்குள்ளவர்கள் குறைந்த விலையில் அரிசி சாப்பிட எதுவாக அமையும். " என்று குற்றம் சாட்டுகிறீர்கள் ..ஆனால் "சாப்பிடக்கூடிய அரிசியா என்பது வேறு விடயம்" என்றும் சொல்லுகிறீர்கள் .. முரண்பாடாக இல்லையா ? சாப்பிட முடியாத அரிசியாக இருந்தால் எப்படி வெளிமாநில காரர்கள் வாங்கி சாப்பிடுகிறார்கள்?

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//இந்த பதிவின் நோக்கம் விவசாயிகளுக்கு நெல்லுக்கு நியாயமான விலை கிடைக்க வேண்டும் என்பதே என்றால் நீங்கள் அதைப்பற்றி ஆலோசனைகள் சொல்லலாமே .அதையும் 1 ரூபாய்க்கு அரிசியையும் முடிச்சு போடுவது எதனால் ? ரேஷன் அரிசி விலை குறைக்கப்பட்டுள்ளதால் , நெல் கொள்முதல் விலை குறைக்கப்பட்டுள்ளதா என்ன ?//


உதாரணத்திற்கு Intel Microprocessor 10 காசுக்கு வெளி மார்க்கெட்டில் விற்றால் Intel மட்டும் அல்ல AMD, Motorola எல்லோரும் கடையை மூட வேண்டியதுதான். இதில் உங்கள் கேள்விக்கு பதில் இருக்கிறது.

//மேலும் இந்த திட்டம் விவசாயிகளுக்காக கொண்டுவரப்படவில்லை .தமிழகத்தில் உள்ள ஏழை மக்களுக்கு குறைந்த விலையில் அரிசி கிடைக்க கொண்டுவரப்பட்டுள்ளது . நெல்லுக்கு நியாயமான விலை கிடைக்காததற்கும் மக்களுக்கு குறைந்த விலையில் அரிசி கொடுப்பதற்கு என்ன சம்பந்தம் ? இரண்டும் வேறு வேறு அல்லவா?//


நிறைய சம்பந்தம் இருக்கிறது ஜோ!
ரேஷனில் விவசாயியின் உற்பத்திப் பொருளான அரிசி அடிமாட்டு விலைக்கு விற்கும் பொது, வெளிமார்கேட்டில் அவனுடைய நெல்லுக்கு விலை கிடைக்காது என்பது இயற்கையான உண்மை. விவசாயத் தொழில் நசிந்து போகும் பட்சத்தில், ஒரு ரூபாய் அரிசி என்ன பத்து ரூபாய் அரிசி கூட கனவாகத்தான் இருக்கும். பிலிப்பின்ஸ் போன்ற நாடுகளில் அரிசி தட்டுப்பாட்டால் எவ்வளவு கஷ்டப் படுகிறார்கள் என்பதற்கு அந்த நாட்டின் அரசியல்வாதிகளின் தவறான கொள்கை முடிவுகளும், மறைமுக சந்தை, பதுக்கல்களும் முக்கிய காரணமாக அமைந்து விட்டது.

//குறைந்த விலைக்கு அரிசி கொடுப்பதால் "வெளிமாநிலத்திற்கு நம் ரேஷன் அரிசி கடத்தப் பட்டு அங்குள்ளவர்கள் குறைந்த விலையில் அரிசி சாப்பிட எதுவாக அமையும். " என்று குற்றம் சாட்டுகிறீர்கள் ..ஆனால் "சாப்பிடக்கூடிய அரிசியா என்பது வேறு விடயம்" என்றும் சொல்லுகிறீர்கள் .. முரண்பாடாக இல்லையா ? சாப்பிட முடியாத அரிசியாக இருந்தால் எப்படி வெளிமாநில காரர்கள் வாங்கி சாப்பிடுகிறார்கள்?//

இரண்டு ரூபாய்க்கு அவர்கள் போடும் அரிசியைப் பார்த்திருக்கிறேன் ஜோ. அதை எங்கள் ஊரில் கூலி வேலை செய்பவர்கள் கூட, அந்த அரிசியை வாங்கி அதை ஒருமுறை மில்லில் கொடுத்து தீட்டாமல் சாப்பிடுவது இல்லை. அப்படியே சாப்பிடலாம் என்று சொன்னால் மூக்கையும் நாக்கையும் பிடித்துக் கொண்டுதான் சாப்பிடவேண்டும்.

//இந்த பதிவின் நோக்கம் விவசாயிகளுக்கு நெல்லுக்கு நியாயமான விலை கிடைக்க வேண்டும் என்பதே என்றால் நீங்கள் அதைப்பற்றி ஆலோசனைகள் சொல்லலாமே .அதையும் 1 ரூபாய்க்கு அரிசியையும் முடிச்சு போடுவது எதனால் ? ரேஷன் அரிசி விலை குறைக்கப்பட்டுள்ளதால் , நெல் கொள்முதல் விலை குறைக்கப்பட்டுள்ளதா என்ன ?//


உதாரணத்திற்கு Intel Microprocessor 10 காசுக்கு வெளி மார்க்கெட்டில் விற்றால் Intel மட்டும் அல்ல AMD, Motorola எல்லோரும் கடையை மூட வேண்டியதுதான். இதில் உங்கள் கேள்விக்கு பதில் இருக்கிறது.

//மேலும் இந்த திட்டம் விவசாயிகளுக்காக கொண்டுவரப்படவில்லை .தமிழகத்தில் உள்ள ஏழை மக்களுக்கு குறைந்த விலையில் அரிசி கிடைக்க கொண்டுவரப்பட்டுள்ளது . நெல்லுக்கு நியாயமான விலை கிடைக்காததற்கும் மக்களுக்கு குறைந்த விலையில் அரிசி கொடுப்பதற்கு என்ன சம்பந்தம் ? இரண்டும் வேறு வேறு அல்லவா?//


நிறைய சம்பந்தம் இருக்கிறது ஜோ!
ரேஷனில் விவசாயியின் உற்பத்திப் பொருளான அரிசி அடிமாட்டு விலைக்கு விற்கும் பொது, வெளிமார்கேட்டில் அவனுடைய நெல்லுக்கு விலை கிடைக்காது என்பது இயற்கையான உண்மை. விவசாயத் தொழில் நசிந்து போகும் பட்சத்தில், ஒரு ரூபாய் அரிசி என்ன பத்து ரூபாய் அரிசி கூட கனவாகத்தான் இருக்கும். பிலிப்பின்ஸ் போன்ற நாடுகளில் அரிசி தட்டுப்பாட்டால் எவ்வளவு கஷ்டப் படுகிறார்கள் என்பதற்கு அந்த நாட்டின் அரசியல்வாதிகளின் தவறான கொள்கை முடிவுகளும், மறைமுக சந்தை, பதுக்கல்களும் முக்கிய காரணமாக அமைந்து விட்டது.

//குறைந்த விலைக்கு அரிசி கொடுப்பதால் "வெளிமாநிலத்திற்கு நம் ரேஷன் அரிசி கடத்தப் பட்டு அங்குள்ளவர்கள் குறைந்த விலையில் அரிசி சாப்பிட எதுவாக அமையும். " என்று குற்றம் சாட்டுகிறீர்கள் ..ஆனால் "சாப்பிடக்கூடிய அரிசியா என்பது வேறு விடயம்" என்றும் சொல்லுகிறீர்கள் .. முரண்பாடாக இல்லையா ? சாப்பிட முடியாத அரிசியாக இருந்தால் எப்படி வெளிமாநில காரர்கள் வாங்கி சாப்பிடுகிறார்கள்?//

இரண்டு ரூபாய்க்கு அவர்கள் போடும் அரிசியைப் பார்த்திருக்கிறேன் ஜோ. அதை எங்கள் ஊரில் கூலி வேலை செய்பவர்கள் கூட, அந்த அரிசியை வாங்கி அதை ஒருமுறை மில்லில் கொடுத்து தீட்டாமல் சாப்பிடுவது இல்லை. அப்படியே சாப்பிடலாம் என்று சொன்னால் மூக்கையும் நாக்கையும் பிடித்துக் கொண்டுதான் சாப்பிடவேண்டும்.

Ramesh said...

ஒரு கோடி ரூபாய்க்கு எவ்வள்வு ஏக்கர் நிலம் கிடைக்கும், அரிசி சாகுபடி செய்ய?

எவ்வளவு போகம் எடுக்கலாம்?

எவ்வளவு வருமானம் வரும்?

என் அருமை நண்பர் ரிலைய்ன்ஸ் நிறுவனத்திற்கு சேலம் ராசிபுரம் பகுதியில் நல்ல அரிசி சுமார் பதிமூன்று முதல் பதினைந்து வரை கிலோவிற்கு எடுக்கிறார். பணம் வாங்கியவுடன் கந்து வட்டிகாரர்கள் வந்து பணம் பிடுங்கும் கட்சி மிகவும் கொடியது என்கிறார்.

அவரும் நானும் ஒரு கோடி முதலீடு செய்து (ரிஸ்க் காபிடல்), அரிசி சாகுபடி செய்து, வருமானம் பார்க்கலாம் என்று இருக்கிறோம். விவரம் தெரிந்த நீங்கள் சொல்லுங்கள்.

டெக்கான் கோபிநாத் மற்றும் சிலர் அரிசி சாகுபடி செய்ய திட்டம் தீட்டுகிறார்கள். ஏற்கனவே அவர் நோர்மல் விட ஏழு பங்கு அதிகம் லாபம் நிலத்தில் பார்த்தவர், இயற்கை உரம் மூலமாக. நான் அரசாங்கத்தில் வேலை பார்த்த பொது விவசாயிகள் சொன்னது, பீயை எவனாவது போட்டு அரிசி வளப்பானா என்று.

சுமார் ஆயிரம் கோடி ருபாய் மணியம் வழங்கும் அரசு, வியேட்நாம் போலே ஏன் செய்யவில்லை? கையுட்டு. லஞ்சம்.

RATHNESH said...

தங்கள் அக்கறை பாராட்டுக்குரியது. ஆனால் சார், ரேஷன் கடையில் அரிசி போடப்படும் விலைக்கும் விவசாயியின் கஷ்டத்துக்கும் சம்பந்தம் இருக்காது என்பதே என் கருத்து.

ஒரு ரூபாயில் அரிசி போடுவதால் ஏழை விவசாயக் கூலிகள் மற்றும் தினக்கூலித் தொழிலாளர்களின் மூலம் டாஸ்மாக் கூடுதல் விற்பனை மூலமாக அரசாங்கத்துக்குத் திரும்பக் கிடைத்துவிடும் என்பதே இது போன்ற இலவசத் திட்டங்களின் உள்குத்து.

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//Ram said...
ஒரு கோடி ரூபாய்க்கு எவ்வள்வு ஏக்கர் நிலம் கிடைக்கும், அரிசி சாகுபடி செய்ய?

எவ்வளவு போகம் எடுக்கலாம்?

எவ்வளவு வருமானம் வரும்?

என் அருமை நண்பர் ரிலைய்ன்ஸ் நிறுவனத்திற்கு சேலம் ராசிபுரம் பகுதியில் நல்ல அரிசி சுமார் பதிமூன்று முதல் பதினைந்து வரை கிலோவிற்கு எடுக்கிறார். பணம் வாங்கியவுடன் கந்து வட்டிகாரர்கள் வந்து பணம் பிடுங்கும் கட்சி மிகவும் கொடியது என்கிறார்.

அவரும் நானும் ஒரு கோடி முதலீடு செய்து (ரிஸ்க் காபிடல்), அரிசி சாகுபடி செய்து, வருமானம் பார்க்கலாம் என்று இருக்கிறோம். விவரம் தெரிந்த நீங்கள் சொல்லுங்கள்.

டெக்கான் கோபிநாத் மற்றும் சிலர் அரிசி சாகுபடி செய்ய திட்டம் தீட்டுகிறார்கள். ஏற்கனவே அவர் நோர்மல் விட ஏழு பங்கு அதிகம் லாபம் நிலத்தில் பார்த்தவர், இயற்கை உரம் மூலமாக. நான் அரசாங்கத்தில் வேலை பார்த்த பொது விவசாயிகள் சொன்னது, பீயை எவனாவது போட்டு அரிசி வளப்பானா என்று.

சுமார் ஆயிரம் கோடி ருபாய் மணியம் வழங்கும் அரசு, வியேட்நாம் போலே ஏன் செய்யவில்லை? கையுட்டு. லஞ்சம்.//


வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு ராம்,

தாங்கள் அதிக முதலீடு விவசாயம் செய்யப்போவதாகச் சொல்கிறீர்கள். மகிழ்ச்சியான விடயம். செய்யுங்கள். அதிக முதலீடு போடுகிறீர்கள். ஒரு வேளாண்மை பட்டதாரியையே பொறுப்பான பணியில் அமர்த்தலாமே.

இயற்கை உரங்களால் பயிரிடப்படும் அரிசி,காய்கறிகளை உண்டு வாழ்பவர்கள் இளமையாகவும் நோய் நோடியின்றியும் வாழ்வதைப் பார்த்திருக்கிறேன். இயற்கை உரத்தால் பயிரிடப்பட்ட விலை பொருட்களை நாம் உண்டால் நலமாக இருக்கலாம். உபரியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தால் நல்ல வருமானமும் கிடைக்கும்.

நிலத்து விலையெல்லாம் அந்தந்த இடத்தின் மார்க்கெட் விலையைப் பொருத்தது.

//Ram said...
ஒரு கோடி ரூபாய்க்கு எவ்வள்வு ஏக்கர் நிலம் கிடைக்கும், அரிசி சாகுபடி செய்ய?

எவ்வளவு போகம் எடுக்கலாம்?

எவ்வளவு வருமானம் வரும்?

என் அருமை நண்பர் ரிலைய்ன்ஸ் நிறுவனத்திற்கு சேலம் ராசிபுரம் பகுதியில் நல்ல அரிசி சுமார் பதிமூன்று முதல் பதினைந்து வரை கிலோவிற்கு எடுக்கிறார். பணம் வாங்கியவுடன் கந்து வட்டிகாரர்கள் வந்து பணம் பிடுங்கும் கட்சி மிகவும் கொடியது என்கிறார்.

அவரும் நானும் ஒரு கோடி முதலீடு செய்து (ரிஸ்க் காபிடல்), அரிசி சாகுபடி செய்து, வருமானம் பார்க்கலாம் என்று இருக்கிறோம். விவரம் தெரிந்த நீங்கள் சொல்லுங்கள்.

டெக்கான் கோபிநாத் மற்றும் சிலர் அரிசி சாகுபடி செய்ய திட்டம் தீட்டுகிறார்கள். ஏற்கனவே அவர் நோர்மல் விட ஏழு பங்கு அதிகம் லாபம் நிலத்தில் பார்த்தவர், இயற்கை உரம் மூலமாக. நான் அரசாங்கத்தில் வேலை பார்த்த பொது விவசாயிகள் சொன்னது, பீயை எவனாவது போட்டு அரிசி வளப்பானா என்று.

சுமார் ஆயிரம் கோடி ருபாய் மணியம் வழங்கும் அரசு, வியேட்நாம் போலே ஏன் செய்யவில்லை? கையுட்டு. லஞ்சம்.//


வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு ராம்,

தாங்கள் அதிக முதலீடு விவசாயம் செய்யப்போவதாகச் சொல்கிறீர்கள். மகிழ்ச்சியான விடயம். செய்யுங்கள். அதிக முதலீடு போடுகிறீர்கள். ஒரு வேளாண்மை பட்டதாரியையே பொறுப்பான பணியில் அமர்த்தலாமே.

இயற்கை உரங்களால் பயிரிடப்படும் அரிசி,காய்கறிகளை உண்டு வாழ்பவர்கள் இளமையாகவும் நோய் நோடியின்றியும் வாழ்வதைப் பார்த்திருக்கிறேன். இயற்கை உரத்தால் பயிரிடப்பட்ட விலை பொருட்களை நாம் உண்டால் நலமாக இருக்கலாம். உபரியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தால் நல்ல வருமானமும் கிடைக்கும்.

நிலத்து விலையெல்லாம் அந்தந்த இடத்தின் மார்க்கெட் விலையைப் பொருத்தது.

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//RATHNESH said...
தங்கள் அக்கறை பாராட்டுக்குரியது. ஆனால் சார், ரேஷன் கடையில் அரிசி போடப்படும் விலைக்கும் விவசாயியின் கஷ்டத்துக்கும் சம்பந்தம் இருக்காது என்பதே என் கருத்து.

ஒரு ரூபாயில் அரிசி போடுவதால் ஏழை விவசாயக் கூலிகள் மற்றும் தினக்கூலித் தொழிலாளர்களின் மூலம் டாஸ்மாக் கூடுதல் விற்பனை மூலமாக அரசாங்கத்துக்குத் திரும்பக் கிடைத்துவிடும் என்பதே இது போன்ற இலவசத் திட்டங்களின் உள்குத்து.
//


ரத்தினேஷ் அவர்களே வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

நமது அரசாங்கம் டாஸ்மாக்கில் எடுத்துதான் அரிசி போட வேண்டுமா? வேறு வழிகளே இல்லையா? இதனால் ஒட்டுமொத்த பாதிப்பு ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்குத்தான். அதுதான் வேதனையான விடையமே.

//RATHNESH said...
தங்கள் அக்கறை பாராட்டுக்குரியது. ஆனால் சார், ரேஷன் கடையில் அரிசி போடப்படும் விலைக்கும் விவசாயியின் கஷ்டத்துக்கும் சம்பந்தம் இருக்காது என்பதே என் கருத்து.

ஒரு ரூபாயில் அரிசி போடுவதால் ஏழை விவசாயக் கூலிகள் மற்றும் தினக்கூலித் தொழிலாளர்களின் மூலம் டாஸ்மாக் கூடுதல் விற்பனை மூலமாக அரசாங்கத்துக்குத் திரும்பக் கிடைத்துவிடும் என்பதே இது போன்ற இலவசத் திட்டங்களின் உள்குத்து.
//


ரத்தினேஷ் அவர்களே வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

நமது அரசாங்கம் டாஸ்மாக்கில் எடுத்துதான் அரிசி போட வேண்டுமா? வேறு வழிகளே இல்லையா? இதனால் ஒட்டுமொத்த பாதிப்பு ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்குத்தான். அதுதான் வேதனையான விடையமே.

Vishnu... said...

இப்போது தான் பார்க்கிறேன் உங்கள் ஆக்கபூர்வமான பதிவை ...
உண்மையில் மிக தெளிவாக சொல்லி இருக்குறீர்கள் .. எனக்கு இந்த துறையில் அதிக அனுபவம் இல்லாததால் அதிகமாக கருத்து சொல்ல தெரியவில்லை ..
ஆனால் ஆக்கபூர்வமான
ஒரு பதிவு படித்த திருப்தி ..
நமது மக்கள் புரிந்து நடந்துகொண்டால் நல்லது என மட்டுமே சொல்ல தோன்றுகிறது

இது போன்ற விழிப்புணர்வு பதிவுகளை எதிர்பார்த்து ...

விஷ்ணு ...

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//Vishnu... said...
இப்போது தான் பார்க்கிறேன் உங்கள் ஆக்கபூர்வமான பதிவை ...
உண்மையில் மிக தெளிவாக சொல்லி இருக்குறீர்கள் .. எனக்கு இந்த துறையில் அதிக அனுபவம் இல்லாததால் அதிகமாக கருத்து சொல்ல தெரியவில்லை ..
ஆனால் ஆக்கபூர்வமான
ஒரு பதிவு படித்த திருப்தி ..
நமது மக்கள் புரிந்து நடந்துகொண்டால் நல்லது என மட்டுமே சொல்ல தோன்றுகிறது

இது போன்ற விழிப்புணர்வு பதிவுகளை எதிர்பார்த்து ...

விஷ்ணு ...//


வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி திரு விஷ்ணு!

//Vishnu... said...
இப்போது தான் பார்க்கிறேன் உங்கள் ஆக்கபூர்வமான பதிவை ...
உண்மையில் மிக தெளிவாக சொல்லி இருக்குறீர்கள் .. எனக்கு இந்த துறையில் அதிக அனுபவம் இல்லாததால் அதிகமாக கருத்து சொல்ல தெரியவில்லை ..
ஆனால் ஆக்கபூர்வமான
ஒரு பதிவு படித்த திருப்தி ..
நமது மக்கள் புரிந்து நடந்துகொண்டால் நல்லது என மட்டுமே சொல்ல தோன்றுகிறது

இது போன்ற விழிப்புணர்வு பதிவுகளை எதிர்பார்த்து ...

விஷ்ணு ...//


வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி திரு விஷ்ணு!

ஜோசப் பால்ராஜ் said...

செந்தழல் ரவி என்ற பெயரில் பின்னூட்டமிட்டுள்ளவர் சொல்லியுள்ள கருத்துக்களை பார்த்தீர்களா? 2003 ஆம் ஆண்டே அறுவடை இயந்திரத்துக்கு ஒரு மணி நேர கூலி 1000 ரூபாய், இவரு 600 ரூபான்னு சொல்லியிருக்காரு. போனவருட கூலி 1500 + 100 டிரைவர் பேட்டா.


இதையெல்லாம் விட அவரு சொல்லியிருக்க ஒரு விசயம் அதிசயிக்க வைக்குது.

//மேலும் வெள்ள நிவாரணமும் சரியாக கிடைக்கும் வகையில் செய்துள்ளார்கள் ( சென்ற வெள்ளத்தில் 4 ஏக்கர் நெல் ஏரித்தண்ணீர் கோடி போனதால் மூழ்கியது, அதுக்கு ஏக்கருக்கு பத்தாயிரம் கொடுத்துவிட்டார்கள் க்ளீனாக.) //


எந்த‌ ஆட்சியிம் இதுவ‌ரைக்கும் ஒரு ஏக்க‌ருக்கு 3000 ரூபாய‌த் தாண்டி நிவார‌ண‌ம் கொடுக்க‌வே இல்ல‌. இவ‌ரு ப‌த்தாயிர‌ம் கொடுத்த‌தா சொல்றாரு.

த‌ஞ்சை மாவ‌ட்ட‌ விவசாய‌க் குடும்ப‌த்துல‌ இருந்து வ‌ந்துருக்க‌ என‌க்கு தெரிஞ்சு எங்க‌ மாவ‌ட்ட‌த்துல‌ எல்லாம் எந்த‌ மார்கெட் க‌மிட்டியும் இல்ல‌.
செந்த‌ழ‌ல் ர‌வி என்ற‌ ப‌திவ‌ரை என‌க்கு தெரியும், ஆனால் இந்த‌ பின்னூட்ட‌ம் அவ‌ர் பெய‌ரில் அத‌ர் ஆப்ச‌னில் இட‌ப்ப‌ட்டுள்ள‌து. அவ‌ர்தானா இது என‌த் தெரிய‌வில்லை.

விவ‌சாய‌ம் என்ப‌து ஒரு முன்னோடித் தொழில், இந்தியா போன்ற‌ நாடுக‌ளின் மிக‌ முக்கிய‌த் தொழில். அதை செய்வ‌து எவ்வ‌ள‌வு சிர‌ம‌ம் என்ப‌து எங்க‌ளுக்குத் தான் தெரியும். இப்ப‌டி த‌வ‌றான‌ த‌க‌வ‌ல்க‌ளை கொடுத்து ப‌டிப்ப‌வ‌ர்க‌ளை குழ‌ப்ப‌ வேண்டாம் என்று அந்த‌ பின்னூட்ட‌த்தை எழுதிய‌வ‌ரை கேட்டுக்கொள்கிறேன்.

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//ஜோசப் பால்ராஜ் said...
செந்தழல் ரவி என்ற பெயரில் பின்னூட்டமிட்டுள்ளவர் சொல்லியுள்ள கருத்துக்களை பார்த்தீர்களா? 2003 ஆம் ஆண்டே அறுவடை இயந்திரத்துக்கு ஒரு மணி நேர கூலி 1000 ரூபாய், இவரு 600 ரூபான்னு சொல்லியிருக்காரு. போனவருட கூலி 1500 + 100 டிரைவர் பேட்டா. //

துல்லியமான தகவலை, தஞ்சை நிலவரத்தை தெரிவித்ததற்கு நன்றி திரு பால்ராஜ். எனக்கு துல்லியமாகத் தெரியவில்லை, அதனால் அது பற்றி பதிலளிக்க இயலவில்லை.
அது மூத்த பதிவர் திரு செந்தழல் ரவி என்று தான் நினைக்கிறேன். அவரது பெயரை யாரும் தவறாகப் பயன் படுத்தியிருக்க மாட்டார்கள் என்று நம்புவோம். அவர் சொன்ன வாடகை எல்லாம் அவர் இருக்கும் இடத்தில் நடக்குதோ என்னவோ?


//எந்த‌ ஆட்சியிம் இதுவ‌ரைக்கும் ஒரு ஏக்க‌ருக்கு 3000 ரூபாய‌த் தாண்டி நிவார‌ண‌ம் கொடுக்க‌வே இல்ல‌. இவ‌ரு ப‌த்தாயிர‌ம் கொடுத்த‌தா சொல்றாரு.

த‌ஞ்சை மாவ‌ட்ட‌ விவசாய‌க் குடும்ப‌த்துல‌ இருந்து வ‌ந்துருக்க‌ என‌க்கு தெரிஞ்சு எங்க‌ மாவ‌ட்ட‌த்துல‌ எல்லாம் எந்த‌ மார்கெட் க‌மிட்டியும் இல்ல‌.
செந்த‌ழ‌ல் ர‌வி என்ற‌ ப‌திவ‌ரை என‌க்கு தெரியும், ஆனால் இந்த‌ பின்னூட்ட‌ம் அவ‌ர் பெய‌ரில் அத‌ர் ஆப்ச‌னில் இட‌ப்ப‌ட்டுள்ள‌து. அவ‌ர்தானா இது என‌த் தெரிய‌வில்லை.

விவ‌சாய‌ம் என்ப‌து ஒரு முன்னோடித் தொழில், இந்தியா போன்ற‌ நாடுக‌ளின் மிக‌ முக்கிய‌த் தொழில். அதை செய்வ‌து எவ்வ‌ள‌வு சிர‌ம‌ம் என்ப‌து எங்க‌ளுக்குத் தான் தெரியும். இப்ப‌டி த‌வ‌றான‌ த‌க‌வ‌ல்க‌ளை கொடுத்து ப‌டிப்ப‌வ‌ர்க‌ளை குழ‌ப்ப‌ வேண்டாம் என்று அந்த‌ பின்னூட்ட‌த்தை எழுதிய‌வ‌ரை கேட்டுக்கொள்கிறேன்.//

உண்மை உண்மை.
எங்களுக்கும் வெள்ளம் போகிற, ஏரிப்பாசனத்தில் கொஞ்சம் நிலம் இருக்கிறது. ஒரு போதும் யாரும் இவ்வளவு வாங்கியாத நான் கேள்விப் பட்டதில்லை.
உங்கள் கருத்துப் பகிர்வு ஒரு தெளிவை ஏற்படுத்தி இருக்கிறது.
மொத்தத்தில் பார்க்கும் போது விவாசாயிகள் நொடித்துப் போகத்தான் அரசுகள் ஆவண செய்கின்றன.

//ஜோசப் பால்ராஜ் said...
செந்தழல் ரவி என்ற பெயரில் பின்னூட்டமிட்டுள்ளவர் சொல்லியுள்ள கருத்துக்களை பார்த்தீர்களா? 2003 ஆம் ஆண்டே அறுவடை இயந்திரத்துக்கு ஒரு மணி நேர கூலி 1000 ரூபாய், இவரு 600 ரூபான்னு சொல்லியிருக்காரு. போனவருட கூலி 1500 + 100 டிரைவர் பேட்டா. //

துல்லியமான தகவலை, தஞ்சை நிலவரத்தை தெரிவித்ததற்கு நன்றி திரு பால்ராஜ். எனக்கு துல்லியமாகத் தெரியவில்லை, அதனால் அது பற்றி பதிலளிக்க இயலவில்லை.
அது மூத்த பதிவர் திரு செந்தழல் ரவி என்று தான் நினைக்கிறேன். அவரது பெயரை யாரும் தவறாகப் பயன் படுத்தியிருக்க மாட்டார்கள் என்று நம்புவோம். அவர் சொன்ன வாடகை எல்லாம் அவர் இருக்கும் இடத்தில் நடக்குதோ என்னவோ?


//எந்த‌ ஆட்சியிம் இதுவ‌ரைக்கும் ஒரு ஏக்க‌ருக்கு 3000 ரூபாய‌த் தாண்டி நிவார‌ண‌ம் கொடுக்க‌வே இல்ல‌. இவ‌ரு ப‌த்தாயிர‌ம் கொடுத்த‌தா சொல்றாரு.

த‌ஞ்சை மாவ‌ட்ட‌ விவசாய‌க் குடும்ப‌த்துல‌ இருந்து வ‌ந்துருக்க‌ என‌க்கு தெரிஞ்சு எங்க‌ மாவ‌ட்ட‌த்துல‌ எல்லாம் எந்த‌ மார்கெட் க‌மிட்டியும் இல்ல‌.
செந்த‌ழ‌ல் ர‌வி என்ற‌ ப‌திவ‌ரை என‌க்கு தெரியும், ஆனால் இந்த‌ பின்னூட்ட‌ம் அவ‌ர் பெய‌ரில் அத‌ர் ஆப்ச‌னில் இட‌ப்ப‌ட்டுள்ள‌து. அவ‌ர்தானா இது என‌த் தெரிய‌வில்லை.

விவ‌சாய‌ம் என்ப‌து ஒரு முன்னோடித் தொழில், இந்தியா போன்ற‌ நாடுக‌ளின் மிக‌ முக்கிய‌த் தொழில். அதை செய்வ‌து எவ்வ‌ள‌வு சிர‌ம‌ம் என்ப‌து எங்க‌ளுக்குத் தான் தெரியும். இப்ப‌டி த‌வ‌றான‌ த‌க‌வ‌ல்க‌ளை கொடுத்து ப‌டிப்ப‌வ‌ர்க‌ளை குழ‌ப்ப‌ வேண்டாம் என்று அந்த‌ பின்னூட்ட‌த்தை எழுதிய‌வ‌ரை கேட்டுக்கொள்கிறேன்.//

உண்மை உண்மை.
எங்களுக்கும் வெள்ளம் போகிற, ஏரிப்பாசனத்தில் கொஞ்சம் நிலம் இருக்கிறது. ஒரு போதும் யாரும் இவ்வளவு வாங்கியாத நான் கேள்விப் பட்டதில்லை.
உங்கள் கருத்துப் பகிர்வு ஒரு தெளிவை ஏற்படுத்தி இருக்கிறது.
மொத்தத்தில் பார்க்கும் போது விவாசாயிகள் நொடித்துப் போகத்தான் அரசுகள் ஆவண செய்கின்றன.

குடுகுடுப்பை said...

மிகவும் அருமையான பதிவு

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//குடுகுடுப்பை said...
மிகவும் அருமையான பதிவு//



வாங்க குடுகுடுப்பைக்காரரே!

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

//குடுகுடுப்பை said...
மிகவும் அருமையான பதிவு//



வாங்க குடுகுடுப்பைக்காரரே!

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

Anonymous said...

நல்ல கட்டுரை.

அன்புடன்.
சங்கர்.

SurveySan said...

//விவ‌சாய‌ம் என்ப‌து ஒரு முன்னோடித் தொழில், இந்தியா போன்ற‌ நாடுக‌ளின் மிக‌ முக்கிய‌த் தொழில். அதை செய்வ‌து எவ்வ‌ள‌வு சிர‌ம‌ம் என்ப‌து எங்க‌ளுக்குத் தான் தெரியும். இப்ப‌டி த‌வ‌றான‌ த‌க‌வ‌ல்க‌ளை கொடுத்து ப‌டிப்ப‌வ‌ர்க‌ளை குழ‌ப்ப‌ வேண்டாம் என்று அந்த‌ பின்னூட்ட‌த்தை எழுதிய‌வ‌ரை கேட்டுக்கொள்கிறேன்.////

வழிமொழிகிறேன்.

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//SurveySan said...
//விவ‌சாய‌ம் என்ப‌து ஒரு முன்னோடித் தொழில், இந்தியா போன்ற‌ நாடுக‌ளின் மிக‌ முக்கிய‌த் தொழில். அதை செய்வ‌து எவ்வ‌ள‌வு சிர‌ம‌ம் என்ப‌து எங்க‌ளுக்குத் தான் தெரியும். இப்ப‌டி த‌வ‌றான‌ த‌க‌வ‌ல்க‌ளை கொடுத்து ப‌டிப்ப‌வ‌ர்க‌ளை குழ‌ப்ப‌ வேண்டாம் என்று அந்த‌ பின்னூட்ட‌த்தை எழுதிய‌வ‌ரை கேட்டுக்கொள்கிறேன்.////

வழிமொழிகிறேன்.//


வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு.சர்வேசன்!
அந்த கருத்தை தெரிவித்து பின்னூட்டம் இட்டவர் யாருமல்ல. நம்ம ஜோசப் பால்ராஜ்தான். அவரும் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர்தான். அந்த வலி தெரிந்ததனால் அதை கொஞ்சம் விளக்கமாக எழுதியிருக்கிறார்.

//SurveySan said...
//விவ‌சாய‌ம் என்ப‌து ஒரு முன்னோடித் தொழில், இந்தியா போன்ற‌ நாடுக‌ளின் மிக‌ முக்கிய‌த் தொழில். அதை செய்வ‌து எவ்வ‌ள‌வு சிர‌ம‌ம் என்ப‌து எங்க‌ளுக்குத் தான் தெரியும். இப்ப‌டி த‌வ‌றான‌ த‌க‌வ‌ல்க‌ளை கொடுத்து ப‌டிப்ப‌வ‌ர்க‌ளை குழ‌ப்ப‌ வேண்டாம் என்று அந்த‌ பின்னூட்ட‌த்தை எழுதிய‌வ‌ரை கேட்டுக்கொள்கிறேன்.////

வழிமொழிகிறேன்.//


வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு.சர்வேசன்!
அந்த கருத்தை தெரிவித்து பின்னூட்டம் இட்டவர் யாருமல்ல. நம்ம ஜோசப் பால்ராஜ்தான். அவரும் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர்தான். அந்த வலி தெரிந்ததனால் அதை கொஞ்சம் விளக்கமாக எழுதியிருக்கிறார்.

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//Anonymous said...
நல்ல கட்டுரை.

அன்புடன்.
சங்கர்.//



சங்கர்! வருகைக்கு நன்றி!

//Anonymous said...
நல்ல கட்டுரை.

அன்புடன்.
சங்கர்.//



சங்கர்! வருகைக்கு நன்றி!

வட மொழி - தமிழ் மொழி

பின் நவீனத்துவம் - பின் புதுமையியல்

அகங்காரம் - செருக்கு,இறுமாப்பு,முனைப்பு,யானெனல்

அகடவிகடம் - குறும்பு,மாற்று,மாறுபட்டது

அகதி - அறவை,வறியன்,எதிலி,புகலிலான்,யாருமற்றவன்,ஏழை

அகந்தை - இறுமாப்பு,செருக்கு

அகம் - உள்ளே,உயிர்,நான்,மனம்,மனநிலை,எண்ணம்

அகம்பாவம் - தற்பெருமை,செருக்கு

அகராதி - அகரமுதலி,அகரவரிசை,அகரநிரல்,அகரமுதல்

அகிம்சை - இன்னா செய்யாமை,கொல்லாமை

அஹிம்சை - இன்னா செய்யாமை,கொல்லாமை

அகோரம் - அழகின்மை,கொடுமை,நடுக்கம்

அக்கணம் - அப்பொழுது,அந்நொடி

அக்கரம் - எழுத்து

அட்சரம் - அழிவில்லாதது

அக்கியாணி - அறிவிலான்

அஞ்ஞானி - புல்லறிவாளன்

அக்கிரகாரம் - பார்ப்பனச் சேரி

அக்கிரமம் - ஒழுன்கின்மை,முறைகேடு

அக்கிராசனம் - முதலிருக்கை,தலைமை

அக்கினி,அக்நி - நெருப்பு,தீ,அனல்,எரி

அங்கப்பிரதட்சணம் - உடல் வலமுருளல், வலம் புரளல்

அங்கீகாரம்,அங்கீகரணம் - உடன்,செப்பு

அங்குலம் - விறக்கட்டை,விரலளவு

அசத்தை,அசத்தியம் - பொய்

அசரம்- அசைவில்லாதது,இயங்காதது,நிலையியல்

அசரீரி - வானொலி,உருவற்றது

அசித்து - பயனின்மை

அஜீரணம்,அசீரணம்- செரியாமை,பசியின்மை,அழிவுபடாமை

அசுத்தம் - அழுக்கு,துப்புரவின்மை,தூய்மையின்மை

அசேதனம் - அறிவில்லாதது,அறிவிலி,அறிவில் பொருள்

அசெளரியம் - நலமின்மை,இடைஞ்சல்

அஞ்சலி - கும்பிடல்,வணக்கம்

அஞ்சனம் - மை,கறுப்பு,இருள்

அஞ்சிட்டம் - கதிரவன்

அஞ்ஞாதம் - மறைவு,அறியப்படாதது

அஞ்ஞாத வாசஸ்தலம் - மறைந்துறைவிடம்

அட்சயப் பாத்திரம் - திருவோடு,ஏற்போடு,அள்ள அள்ளக் குறையாதது

அட்டதிக்கு பாலகர் - எண்புறக்காவலர்

அட்டபந்தனம் - எண்புறக்கட்டு

அண்டம் - முட்டை,உலகம்,வித்து,மூலம்

அதமம் - கீழ்மை,கடைத்திரம்

அதர்மம்,அதருமம் - தீவினை,அறமின்மை,மறம்

அதிகப்பிரசங்கம் - மிகுபேச்சு,தன் மேம்பாட்டுரை,மற்றொன்று விரித்தல்

அதிகாரி - அலுவலர்,தலைவன்,முதல்வன்,உடையவன்

அதிகாலம் - விடியற்காலம்

அதிகாலை - விடியற்காலம்,புலரிக்காலை

அதிஷ்டவசம் - நல்வினைப்பயன், நல்வினை வயம்

அநந்தகோடி - எண்ணத்தொலையாதன

அநந்தம் - அளவின்மை,முடிவில்லது

அநாதை - யாருமற்றவன்,தாய்தந்தையிலான்

அநித்தம்,அநித்தியம் - அழிவு,நிலையற்றது,நிலையாமை

அநீதி - முறைகேடு

அநுக்கிரகம் - அருளிரக்கம்,அருள்

அநுசரணை - சார்பு,சார்பு நிலை

அநுசிதம் - பொய்,தகாதது

அனுபவம் - பழக்கம்,வழக்கம்,நுகர்ச்சி

அனுமினம் - ஐயம்,வழியளவை,கருதலளவை

அனுமானப் புரமானம் - கருதலளவை

அநேகர் - பலர்

அந்தகன் - அழிப்போன்,குருடன்

அந்தகாரம் - இருள்,அறியாமை

அந்தக்கரணங்கள் - அகக்கருவிகள்

அந்தஸ்து - நிலைமை,ஒழுங்கு,நிலை

அந்தரம் - வான்வெளி,இடைவெளி,துணையின்மை,காலம்

அந்தி - முடிவு,மாலைக்காலம்

அந்திய கிரியை - இறுதிச் சடங்கு

அந்நியர் - பிறர்,அயலார்

அந்நியோந்நியம் - நெருக்கம்,ஒற்றுமை,ஒருவொருக்கொருவர்

அபயம் - அடைக்கலம்,அச்சமின்மை,புகலிடம்,அஞ்சேலெனல்

அபாயம் - பேரிடர்,அழிவு,கேடு,துன்பம்,இடுக்கண்,இக்கட்டு

அபாரம் - சிறப்பு,அளவின்மை,கேடு

அபிதானம் - பெயர்

அபிநயம் - நடிப்பு,கூத்து,கைமைய்காட்டல்,உள்ளக் குறிகாட்டல்

அபிப்பிராயம் - நோக்கம்,எண்ணம்,உட்கருத்து,உள்ளப்போக்கு

அபிமானம் - பற்று,நேயம்,செருக்கு

அபூர்வம் - அரிது,அருமை,அரிய பொருள்

அபேச்சை -அவா,விருப்பம்

அபேதம் - ஒற்றுமை,வேற்றுமையின்மை,வேறன்மை

அப்பியாசம் -பழக்கம்,பயிற்சி

அப்பிரதட்சிணம் - இடப்புறச் சுற்று, இடப்பக்கச் சுற்று

அமரத்துவம் - அழிவின்மை

அமலன் - துயோன்,கடவுள்,வாலறிவன்

அந்நியர் - பிறர்,அயலார்

அதிகம் - மிகுதி,அளவின்மை

அமிர்தம்,அமிருதம் - இனிமை,அருமருந்து,சாவா மருந்து,அழிவினமை

அமச்ம் - வகை,பங்கு,காலம்,எண்,அன்னப்புள்

அம்பாரம் - குவியல்

அயோக்கியம் - தகுதியினமை,தகாதது

அயோக்க்கியன் - தகுதியற்றவன்,தகவிலான்,கெட்டவன்

அரணியம் - காடு

அருச்சனை,அர்ச்சனை - வழிபாடு, பூ வழிபாடு,மலர் வழிபாடு

அருத்தம்,அர்த்தம் -பொருள்,பாதி

அருவம் - உருவின்மை,அழகின்மை

அர்த்தநாசம் - பேரழிவு,பொருளழிவு

அர்ப்பணம் - உரிமை கொடுத்தல், ஒப்புவித்தல், நீரோடு கொடுத்தல்

அலங்காரம் - அழகு,ஒப்பனை,அணி,புனைவு

அலச்சியம் - பாராமுகம்,பொருட்படுத்தாமை,கருத்தின்மை

அவகீர்த்தி - இழிவு,புகழின்மை

அவக்கியாதி - வசை,இகழ்ச்சி

அவசரம் - விரைவு,பரபரப்பு,சுருக்கு,பதைப்பு

அவசியம் - முதன்மை,கட்டாயம்,இன்றியமையாமை

அவதரித்தல் - பிறத்தல்

அவதாரம் - பிறப்பு,இறங்குகை

அவதானம் - எச்சரிக்கை,ஒழிவு,நினைவு,விரித்தல்,மறப்பின்மை

அவநம்பிக்கை - நம்ப்பிக்கைக்குறை

அவமரியாதை - முறைதவறல்,வணக்கமின்மை,தீயமுறை

அவமானம் - மானக்கேடு,இழிவு,குறைவு,இளிவரவு

அவயவம்,அவையவம் - உறுப்பு

அவலன் - உடற்குறையன்,வீணன்

அவசு,ஹவிசு - தூய உணவு,சோறு,நெய்,

அற்பம்,அல்பம் - சிறுமை,அணு,புன்மை,இழிவு

அனங்கன் - உடலிலான்,கடவுள்,காமவேள்

அனாதி - கடவுள்,தனியன்,பழமை,தொன்மை

அனுதாபம் - இரக்கம்

அனுபவம் - பழக்கம்,வழக்கம்,அழுந்தியறிதல்,பட்டறிவு

அனுமானம் - உய்த்துணர்தல்,கருதல்ளவை,வழியளவை

அனேகம் - பல,எல்லாம்

அன்னதானம் - சோற்றறம்,சோற்றுக்கொடை,உணாக்கொடை

அன்னம் - சோறு,உணவு,அடிசில்

அன்னியன் - பிறர்,அயலார்

அன்னியோன்னியம் - ஒற்றுமை,நெருக்கம்,ஒருவர்க்கொருவர்

ஆகம் -உடல்,மார்பு

ஆகரு(ர்)ஷண சக்தி - இழுப்பாற்றல்,இழுவழி,சேர்வழி

ஆகாசம்,ஆகாயம் - விண்,வெளி,வான்,விசும்பு,வர்னம்

ஆகாய விமானம் - வான ஊர்தி

ஆகாரம் - உணவு,அடிசில்,உடம்பு,வடிவு

ஆக்கியாபித்தல்,ஆஞ்ஞாபித்தல் - கட்டளையிடல்

ஆக்கிரமித்தல் - வலிந்து கவர்தல்,வலிமை காட்டல்

ஆட்சேபம் - மறுமொழி,மறுத்துக்கூறல்,தடைமொழி

ஆங்காரம் - இறுமாப்பு,செருக்கு,தருக்கு

ஆச சங்கை -ஐயம்

ஆசாபாசம் -அன்பு,பற்று,அவா

ஆசாரம் - ஒழுக்கம்,வழக்கம்,நன்னடை,வழிபாடு,துப்புரவு

ஆசியம்,ஹாசியம் - எள்ளல்,நகை,சிரிப்பு

ஆசீர்வாதம் - வாழ்த்துரை

ஆசுவாசம் - இளைப்பாறுகை

ஆசை - விருப்பம்,அவா,பற்று,வேட்கை,விழைவு

ஆச்சரியம் - புதுமை,வியப்பு,இறும்பூது

ஆ(ச்)சிரமம் - இலைக்குடில்,பாழி,முனிவருறயுள்

ஆஸ்திகம் - கடவுளுண்டெனுங்கொள்கை

ஆஸ்பத்திரி - மருத்துவச்சாலை

ஆஞ்ஞாபித்தல் -கட்டளையிடல்

ஆஞ்ஞை -ஆணை,கட்டளை

ஆடம்பரம் - ஆரவாரம்,பகட்டு

ஆட்சேபம்,ஆட்சேபனம் - தடைமொழி,மறுமொழி,எதிர்மொழி,மறுப்பு

ஆதங்கம் - ஆற்றாமை,அச்சம்,நோய்

அந்நியர் - பிறர்,அயலார்

ஆதவ(ப)ன் - பகலோன்,கதிரோன்

ஆதரவு - துணை,உதவி,சார்பு,பற்றுக்கொடு

ஆதி - முதல்,பழமை,அடி,தொடக்கம்,காரணம்,எழுவாய்,கடவுள்

ஆப்தம்,ஆத்தம் - அன்பு,நட்பு

ஆத்தானம்,ஆஸ்தானம் - நகரவாயில்,அறமன்றம்,கொடிமுடிவாயில்

ஆத்திரம்,ஆத்திரியம்,ஆத்திரவம் - உளக்கொதிப்பு,விரைவு,பரபரப்பு

ஆத்துமா,ஆன்மா - உயிர்

ஆந்ந்தம் - இன்பம்

ஆபத்து -இடர்,துன்பம்,இக்கெட்டு,ஊறுபாடு,இடுக்கண்

ஆபரணம் - அணிகலம்,இழை,நகை,அணி,பூண்

ஆபாசம் - அருவருப்பு,சிதைவு,கெடுதல்,பொய்,அளவைப்பொலி

அபூர்வம் - வினைப்பயன்

ஆமோதித்தல் - உடன்படல்,வழிமொழிதல்,மகிழ்தல்

ஆயக்கட்டு(துளுவம்) - மொத்த நஞ்சை நிலம்,களப்புரவு

ஆயத்தம்(இந்தி) - முயற்சி,எத்தனம்,முன்னேற்பாடு

ஆயா(போர்ச்சுக்கீஸ்) - செவலித்தாய்,கைத்தாய்

ஆயாசம்,ஆயாஸம் - களைப்பு,இளைப்பு,சோர்வு,அயர்வு,மயக்கம்

ஆயுசு,ஆயுள் - வாழ்நாள்,ஆண்டு

ஆயுதம் - கருவு,படைக்கலம்,படை,வாள்

ஆரணியம்,ஆரண்ணியம் - காடு

ஆரம்,ஹாரம் - பூமாலை,தொடையல்

ஆரம்பம் - தொடக்கம்

ஆரம்பித்தல் - தொடங்கல்

ஆராதனம் - வணக்கம்,மகிழ்வித்தல்

ஆரோகம்,ஆரோபம்,ஆரோக்கியஸ்நானம் - நல முழுக்கு,நோய் தீர்ந்தபின் முழுகல்

ஆரோக்கியம் - நலம்,நோயின்மை

ஆரோபணம்- நாட்டுதல்,ஏற்றுதல்

ஆரோபித்தல் - ஏற்றுதல்

ஆர்ச்சிதம் - தேட்டம்,தேடிய பொருள்

ஆர்மோனியம் - இசைக்கருவி

ஆர்வம் - அன்பு,விருப்பம்

ஆலகண்டண் - சிவன்,நஞ்சுமிடற்றன்,கறைமிடற்றன்

ஆலகம்- நெல்லிமரம்

ஆலம் - நஞ்சு

ஆலயம் - கோயில்

ஆலாபம்,ஆலாபனம் - அலப்பு,பேச்சு,உரையாடல்

ஆலோசனை - சூழ்தல்,சூழ்ச்சி,ஓர்வு,எண்ணம்,ஆராய்ச்சி

ஆவசியம் - கட்டாயம்,முதன்மை,இன்றியமையாமை

ஆவத்து,ஆபத்து - இக்கெட்டு,இடர்,பொல்லாங்கு

ஆவர்த்தி,ஆவருத்தம்,ஆவிருத்தி - தடவை,வரிசை,சுற்று,வழக்கம்

ஆவாகனம் - அழைத்தல்,உட்புகல்

ஆனந்தபரவசம் - இன்பக்களிப்பு,பேரின்பக்களிப்பு

ஆனந்தம் - இன்பம்,பேரின்பம்

ஆன்மா - உயிர்

இகம் - இவ்வுலகம்,இவ்விடம்,இப்பிறப்பு

இங்கிதம் - இனிமை,அடையாளம்,கருத்து,இடம் பொருள்

இச்சகம் - முகமன்

இச்சை - விருப்பம்,அவா,விழைவு,வேட்கை

இடபம்,ரிஷபம் - எருது,காளை,ஏறு,விடை

இட்டசித்தி - விருப்பப்பேறு

இதம்,ஹிதம் - இனிமை,நன்மை,அன்பு,அறம்

இதயம்,இதையம்,ஹிருதயம் - நெஞ்சம்,உள்ளம்

இதரம் - வேறு,இயல்,அழிவு,பகைமை

இதிகாசம் - பண்டை வரலாறு,பழங்கதை

இந்திர ஜாலம் - இமயவர்கோன்,வானவர் தலைவன்

இந்து - நிலா,திங்கள்,அம்புலி

இமாலயம்,ஹிமாலயம் - பனிமலை

இரகசியம் - மறைபொருள்,மறை,அற்றம்

இராசாபாசம் - அருவருப்பு,ஒழுங்கின்மை

இரசாயனம் - பொருளியைபு

இரட்சகம் - பாதுகாப்பு,மீட்பு

இரட்சை - காப்பு

இரணம்,ரணம் - புண்

இரதம்,ரதம் - தேர்

இரத்தம் - குருதி,செந்நீர்

இரத்தினம்,ரத்தினம் - மாமணி,செம்மணி

இரம்பம்,ரம்பம் - ஈர்வாள்

இராகம்,ராகம் - இசை,பண்,அவா,விருப்பு

இராகு - கருங்கோள்

இராக்கதர் - அரக்கர்

இராசசூயம் - அரசர் வேள்வி

இராசா - அரையன்,மன்னன்,அரசன்

இராச்சியம் - நாடு,அரசியல்

இராத்திரி - இரவு,கங்குல்

இருஷி,இருடி - முனிவன்,தவசி,துறவி

இதய கமலம் - நெஞ்சத்தாமரை

இருது - பருவம்,மகளிர் முதற்பூப்பு

இரேகை - வரி,எழுத்து,கையிறை,நிறை,தொடர்

இலகிரி,லகிரி,லாகிரி - வெறி,மயக்கம்

இலகு,லகு - எளிது,நொய்மை,நுண்மை,ஈரம்,பலா மரம்

இலங்கணம் - பட்டினி

இலஞ்சம் - கைக்கூலி,கையூட்டு,கையுறை

இலட்சணம்,லட்சணம் - அழகு,பார்வை

இலயித்தல் - ஒடுங்குதல்,சேர்ந்தொன்றித்தல்

இலெளகீகம்,இலவுகீகம் - உலகியல்,உலகப்போக்கு

இலாஞ்சனம்,இலாஞ்சனை - புகழ்,அடியாளம்,கறை

இலாபம்,லாபம் - ஊதியம்,மிச்சம்,பேறு

இலீலை,லீலை - விளையாட்டு

யுகம்,உகம் - உலக முடிவு,இரண்டு

உக்கிராணம் -களஞ்சியம்,சரக்கறை

உஷ்ணம் - வெப்பம்,சூடு

உசிதம் - உயர்வு,சிறப்பு,மேன்மை,தகுதி,ஒழுங்கு

உசிதன் - தக்கோன்

உச்சம் - உயர்ச்சி,சிறப்பு

உச்சரித்தல் - சொல்லுதல்,ஒலித்தல்,ஓதல்

உச்சரிப்பு - எழுத்தோசை

உச்சாட்டியம் - பேய கற்றல்,ஒட்டுதல்

உச்சி - மேடு,முகடு

உச்சிக்காலம்,உச்சிச்சமயம் - நண் பகல், நடுப் பகல்

உதயன் - பகலோன்

உதாரணம்,திருட்டாந்தம் - எடுத்துக்காட்டு,சான்று

உத்தமம் - உண்மை,மேன்மை

உத்தரியம்,உத்தரீயம் - மேலாடை

உத்தரவு - கட்டளை

உத்தி,யுத்தி - அறிவு,இணக்கம்,இசைவு,சூழ்ச்சி,சொல்

உத்தேசம்,உத்தேகம் - கருத்து,மதிப்பு,ஏறக்குறைய

உபகரணம் - கொடுத்தல்,உதபிபொருள்கள்,கருவி,துணைக்காரணம்

உபதேசம் - அருண்மொழி,அறிவுரை

உபயம் - உதவி,நன்கொடை,இரண்டு

உபாசநம்,உபாசநை,உபாசனை - வழிபாடு,வணக்கம்

உபாதி,உபாதை - நோய்,துன்பம்,வருத்தம்

உபாத்தியாயன் - கணக்காயன்,ஆசிரியன்,கற்பிப்போன்

உபாயம் - சூழ்ச்சி,நொய்மை,எளிது,சிறிது

உயுக்கம்,உயுத்தம்,யுத்தம் - போர்,தகுதி

உருசி,ருசி - சுவை

உருத்திராக்கம் - சிவமணி,சுக்குமணி

உரூபம்,ரூபம் - உருவம்,வடிவம்

உரொக்கம்,ரொக்கம் - கைப்பணம்,இருப்பு,கையிருப்பு

உரோமம்,ரோமம் - மயிர்,முடி,குஞ்சி

உல்லாசம் - மகிழ்ச்சி,விளையாட்டு,களிப்பு,உள்ளக்களிப்பு

உவதி,யுவதி, - மங்கை,பதினாறாண்டுப் பெண்

ஊகம் - கருதல்,ஓர்தல்,கருத்து,நினைவு

ஊர்ச்சிதம்,ஊர்ஜ்ஜிதம் - உட்பொருளுணர்தல், நிலைப்படுதல்,உறுதி,கருங்குரங்கு

எசமானன்,எஜமான் - தலைவன்,முதல்வன்,முதலாளி

எந்திரம் - பொறி

எமன் - கூற்றுவன்,மறலி

ஏகதேசம் - ஒருபால்,ஒருபுடை,சிறுபான்மை

ஏகம் - ஒன்று,தனிமை

ஏகாந்தம் - தனிமை,ஒரு முடிவு

ஏகோபித்தல் - ஒன்றுபடுதல்

ஏடணை,ஏஷணை - விருப்பம்

ஐது,ஹேது - காரணம்

ஏக்கம்,ஐக்கியம் - ஒற்றுமை

ஐஸ்வர்யம்,ஐச்வரியம் - செல்வம்,பொருள்,திரு

ஐதீகம்,ஐதிகம் - உலகுரை

ஐம் பூதம்,பஞ்ச பூதம் - ஐந்து முதற்பொருள்

ஓமம்,ஹோமம் - வேள்வி

ஒளடதம்,ஒளஷதம்- மருந்து

களோகம் - வான் வட்டம்,வளி மண்டலம்

கடகம் - கைவளை,வளையம்

கடம் - கடம்,யானைக்கதுப்பு

கடாட்சித்தல் - அருளல்

கடாரம் - கொப்பரை,தேங்காய்

கடிகாரம் - நாழிகை வட்டில்,பொழுது காட்டுங்கருவி

கடிகை - நாழிகை,தாழ்க்கோல்

கடினசித்தம் - வன்னெஞ்சம்

கடினம் - வன்மை,கடுமை,வருத்தம்,கொடுமை

கடூரம்,கொடூரம் - கொடுமை

கட்டம்,கஷ்டம் - துன்பம்,வருத்தம்

கணம்,ஹணம் - குழாம்,கூட்டம்,தொகுதி,நொடிப்பொழுது

கணி - கோள் நூல், கோல் நூல் வல்லான்

கணிகை - பொதுமகள்

கணிசம் - அளவு,மேம்பாடு

கணிதம் - கணக்கு

கண்டம் - நிலப்பிரிவு,துண்டு,கட்டி,மிடறு,கழுத்து

கண்திட்டி,கண்திருஷ்டி - கண்ணேறு

கதம்பகம்,கதம்பம் - கூட்டம்,மணப்பொருட் கூட்டு,சேர்ந்தது,இணைத்தது

கதலி - வாழை

கதி - நடை,செலவு,வழி,புகலிடம்,பற்றுக்கோடு,நிலை

கனகம்,கநகம் - பொன்

கனவான்,கநவான் - பெரியோன்,பெருமையாளன்,பெருந்தகை

கனிஷ்டை,கநிஷ்டை - பின்னோள்,தங்கை

கன்னிகை,கந்நிகை - மணமாகாதவள்,இளம்பெண்

கந்மம்,கருமம் - தொழில்,வினை

கபடம்,கவடம்,கபடு - கரவு,படிறு,வஞ்சகம்,மோசம்,சூது,ஒளிப்பு

கபாலம் - தலையோடு,மண்டையோடு

கபோதி - குருடன்

கப்பம் - இறை

கமண்டலம் - நீர்க்குடுவை

கமலம் - தாமரை,நீர்

கம்பீரம் - உயர்தோற்றம்,பெருமை,ஆழம்,செருக்கு

கயம்,ஹயம் - குளம்,ஆழம்,யானை

கரகம் - வட்டில்,நீர்க்குடுவை

கரகோசம்,கரகோஷம் - கைதட்டுதல்

கரணம் - கருவி,ஐம்பொறி

கரம் - கை

கருச் சித்தல் - முழங்கல்,இரைதல்

கருணை - அருள்,இரக்கம்

கர்த்தா,கருத்தா - தலைவன்,வினைமுதல்,ஆக்கியோன்,நூலாசிரியன்,முதல்வன்,கடவுள்

கர்ப்பவதி - சூலி

கர்ப்பாசயம் - கருப்பை

கர்வம் - செருக்கு,இறுமாப்பு

கலாபம்,கலபம் - மயில்,மயிற்றோகை

கலி - வறுமை,துன்பம்

கலியாணம் - மனம்,மன்றல்,பொன்,மகிழ்ச்சி

கவளீகரித்தல்,கபளீகரம்,கபளீகரித்தல் - முற்றிலும் விழுங்குதல்,விழுங்குதல்

கவனம் - கருத்து நோக்கம்,உன்னித்தல்

கவாத்து - படைக்கலப் பயிற்சி,வெட்டி விடுதல்

கவி - செய்யுள்,புலவன்,பாட்டு

கவுளி,கெளளி - பல்லி

களேபரம் - குழப்பம்,உடல்,பிணம்

கற்பம் - ஊழிக்காலம்,நெடுவாழ்க்கை மருந்து

கனம் - சுமை,பளு,பளுவு

காசம் - ஈளை,ஈளைநோய்,இருமல் நோய்

கசாயம்,கஷாயம் - காவி

காஞ்சிரம் - எட்டி மரம்

காட்டம்,காஷ்டம் - விறகு,வெகுளி

காதகன் - கொலையாளி

காயசித்தி - நீடுவாழ்ப் பேறு

காயம் - உடல்,யாக்கை,வான்

காரிய கர்த்தா - வினைமுதல்வன்

காரியதரிசி - அமைச்சன்,செயலாளன்

கலாட்சேபம் - பொழுதுபோக்கல்,நாட்கழித்தல்,வாழ்க்கை

கால நியமம் - காலமுறை,காலக்கடன்,கால்,ஒழுங்கு

கிஸ்தி - திறை,வரி

கிரகணம்,கிராணம் - பற்றுதல்,பிடித்தல்

கிரகஸ்தம் - இல்லற நிலை

கிரகம் - வீடு,கோள்,பற்றுதல்,பிடிப்பு

கிரணம் - ஒளி,கதிர்

கிரந்தம் - நூல்,எழுத்து

கிரமம் - ஒழுங்கு,முறைமை

கிரயம் - விலை

கிராதன் - குறவன்,வேட்டுவன்

கிரி - மலை,பன்றி

கிரிகை - தொழில்,செயல்,வினை,சடங்கு

கிரிமி,கிருமி - உயிரி,பூச்சி,புழு

கிரீடம் - முடி

கிருஷி - பயிர்,உழவு,பயிர் செய்கை

கிலம் - கழிவு,அழிவு,சிறுமை

கிலேசம் - அச்சம்,கவலை,துன்பம்

கீதம் - இசை,பாட்டு,பாடல்,இசைப்பாட்டு

கீர்த்தனம்,கீர்த்தனை - புகழ்ச்சி,புகழ்ப்பா

கீலகம் - ஆணி,பொருத்து

குஞ்சரம் - யானை

குஷ்டம் - தொழு நோய்,பெரு நோய்

குணஷ்டை - தொல்லை,துன்பம்

குதர்க்கம் - அழிவழக்கு

குதூகலம்,குதுகலம் - பெருங்களிப்பு,பெருமகிழ்வு

குபேரன் - பெருஞ்செல்வன்,செல்வக்கடவுள்

குமரி,குமாரி - நங்கை,மணமாகாப்பெண்,புதல்வி,மகள்

கும்பம் - குடம்

குருகடாட்சம் - ஆசிரியனருட்பார்வை

குரோதம் - உட்பகை

குலாலன் - குயவன்

குலிசம் - வேற்படை

குன்மம் - சூலை,வயிற்று வலி

கேதம் - துன்பம்,இடர்,குற்றம்

கேவலம் - சிறுமை,தனிமை

கோகிலம் - குயில்

கோடம்,கோஷம்,கோஷ்டம் - முழக்கம்,பேரோசை

கோஷ்டி - கூட்டம்

கோடி - நூறு நூறாயிரம்

கோதண்டம் - வில்

கோளகை,கோளம் - உருண்டை,வட்டம்

கெளரவம் - மேன்மை,பெருமை

சக - கூட,உடன்

சகசம்,ஸகஸம் - இயற்கை,ஒற்றுமை

சகஸ்ரநாமம் - ஆயிரந்திருமொழி,ஆயிரந்திருப்பெயர்

சகமார்க்கம் - தோழமை நெறி

சகலம் - எல்லாம்

சகவாசம் - கூடவிருத்தல்,உடனுரைதல்,பழக்கம்,சேர்க்கை,நட்பு

சகா - தோழன்,துணை

சகாப்தம் - ஆண்டு,நூறாண்டு

சகாயம் - நயம்,நன்மை,மலிவு,பயன்,உதவி,துணை

சகி,சகீ - தோழி

சகிதம் - உடன்

சகுணம் - குணத்தோடு கூடியது

சகுந்தம் - கழுகு,பறவை

சகுனம் - குறி

சகோதரம் - உடன்பிறப்பு

சகோதரி - உடன்பிறந்தாள்

சக்கரம் - உருளை,வட்டம்

சக்தி - ஆற்றல்,வல்லமை,வலி

சங்கடம்,சங்கட்டம் - இக்கெட்டு,நெருக்கடி,இடர்,கண்மூடுதல்

சங்கிதை - தொகுதி,வரலாறு

சடுதி,சடிதி - விரைவு

சஷ்டியப்த பூர்த்தி - அறுபதாமாண்டு நிறைவு

சண்டப்பிரசண்டம் - மிகு விரைவு

சண்டமாருதம் - பெருங்காற்று,கடியகாற்று,புயற்காற்று

சண்டாளம் - தீமை,புலைத்தன்மை,நம்பிக்கை கேடு

சண்டாளர் - தீவினையாளர்,இழிஞர்

சண்டித்தனம் - முருட்டுத்தன்மை,முரட்டுத்தன்மை

சதகோடி - நூறு கோடி

சதசு - அவை

சதம் - நூறு நிலை

சதானந்தம் - இடையறா வின்பம்

சதி - இறைவி,அழிவு,வஞ்சனை,சூழ்ச்சி

சந்தகம் - எப்பொழுதும்

சந்தானம் - வழி,வழித்தொடர்பு

சந்தித்தல் - எதிர்படுதல்,கூடுதல்

சந்திரலோகம் - திங்கள் உலகு,அம்புலியுலகம்

சந்திரன் - பிறை,கலையோன்,இரவோன்,அலவன்,அல்லோன்

சந்து - முடுக்கு,இயங்கும் உயிர்,தூது,பிளப்பு,பொருத்து

சந்துட்டம்,சந்துஷ்டி,சந்தோஷம் - மகிழ்ச்சி

சந்தேகம் - ஐயம்,ஐயுறவு

சந்தோஷம் - மகிழ்ச்சி,உவகை,களிப்பு

சன்னதி,சந்நதி,சந்நிதானம் - திருமுன்

சந்நியாசம் - துறவு,துறவறம்

சபதம் - ஆணை,உறுதிமொழி,வஞ்சினம்

சபம்,ஜெபம் - உருவேற்றல்

சபலம் - நிறைவேறல்,வெற்றி,நடுக்கம்,ஏக்கம்,இச்சை,அவா

சபா,சபை - அவை,மன்றம்,கழகம்,அரங்கம்

சபித்தல் - தீமொழி கூறல்,சினந்துரைத்தல்

சமஷ்டி - தொகுதி,எல்லாம்

சமதை - ஒப்பு

சமர்த்தன்,சமத்தன் - வல்லான்,வல்லவன்,திறமையாளன்

சமஸ்தானம்,சமத்தானம் - அரசவை,தலை நகர்

சமம் - இணை,ஈடு,மட்டம்,போர்,நடு,ஓர்மை

சமரச தத்துவம் - பொதுநிலையுண்மை

சமரசம் - பொது,வேறுபாடின்மை,ஒற்றுமை

சமர்ப்பணம் - ஒப்பித்தல்,உயர்ந்தோர்க்குக் கொடுத்தல்

சமாதானம் - அமைதி,இணக்கம்,தணிவு,உடன்பாடு,தக்கவிடை

சமாதி - அமைதி,பிணக்குழி,பேசாதிருத்தல்,இறப்பு,மரித்தல்

சமாப்தம்,சமாப்தி - முற்றுப்பெற்றது

சமாராதனை - உளநிறைவு

சமி,ஷமி - பொறு

சமிதை - வேள்வி விறகு,உலர்ந்த குச்சி

சமீபம் - அருகு,அணமை,மருங்கு

சமீன்தார்,ஜமீந்தார் - நிலக்காரன்,பெருநிலக்கிழார்

சமுதாயம் - குமுகம்,கூட்டம்

சமுத்திரம் - கடல்

சமை,ஷமை - பொறுமை

சம்சாரம்,சம்ஸாரம் - குடும்பம்,இல்லாள்,இல்லத்தரசி

சம்பத்து - செல்வம்,பொருள்

சம்பந்தம -உறவு,பற்று,இயைபு,சார்பு,தொடர்பு,பொருத்தம்

சம்பிரதாயம் - தொல்வழக்கு,முன்னோர் முறை,பண்டை முறை

சம்பு ரேட்சணம் - தெளித்தல்

சம்பூரணம் - நிறைவு

சம்மதம் - உடன்பாடு,ஒப்புமை,இயைபு

சம்ரஷணை - பாதுகாப்பு

சயம்,ஜெயம் - வெற்றி

சரணம்,சரண் -அடைக்கலம்,வணக்கம்,கால்,திருவடி

சரணாகதி - புகலடைதல்,அடைக்கலம்

சராசரம்,ஜங்கமா - இயங்கியற் பொருள், நிலையியற் பொருள்

சரிதம்,சரிதை,சரித்திரம் - வரலாறு

சரீரம் - உடல்,யாக்கை,மெய்

சருமம்,சர்மம் - தோல்

சர்ப்பம் - பாம்பு

சர்வகலாசாலை -

பல்கழைக் கழகம்

சலதளம்- அரசமரம்

சலதாரை - நீர்க்கால்,நீரோட்டம்,மதகு

சலதோசம் - நீர்க்கோர்வை,தடுமம், நீர்க்கோவை

சல்லாபம் - உரையாடல்

சவம் - பிணம்

சவுகரியம்,செளக்கியம்,செளகரியம் -நலம்

சவுந்தரியம்,செளந்தரியம்,சவுந்தரம் - அழகு

செளபாக்கியம்,சவுபாக்கியம் - செல்வம்

சற்காரியம் - உற்பொருளினின்று தோன்றும் வினை

சற்குணம் - நல்லியல்பு

சனனம்,ஜனனம்,சனிப்பு,சன்மம் - பிறப்பு

சாகசம் - ஆற்றல்,துணிவு,நெருக்கிடை

சாகரம் - கடல்

சாகுபடி - பயிர் செய்தல்

சாகை,ஜாகை(உருது) - தங்குமிடம்

சாக்கிரதை,ஜாக்கிரதை - விழிப்பு,உன்னிப்பு,எச்சரிக்கை