Saturday, March 21, 2009

கருணாநிதி எச்சரிக்கைக் கடிதம் - பிடித்த வரிகள்

நான் ஆட்சிப் பொறுப்பிலோ-பதவிப் பொறுப்பிலோ இருந்து புரிந்த சாதனைகளை விட - அவை என் புகழ் பாடும் கல்வெட்டுகள் என்பதை விட - நான் பதவிப் பொறுப்பிலே இருந்த நேரத்தில் - தவறு செய்வோர் எவராயினும் - என் நண்பராயினும் - கழகத்தவராயினும் - உற்றார் உறவினராயினும் - பெற்ற பிள்ளைகள் ஆயினும்; அறவழி நின்று அவர்களைக் கண்டிப்பேன், தண்டிப்பேன் என்று கூறியுள்ளார் முதல்வர் கருணாநிதி.உள்ளார்.

இது குறித்து கருணாநிதி எழுதியுள்ள கடிதம்:
அடித்தட்டு மக்களையும், விவசாயப்பெருங்குடி மக்களையும், நடுத்தர மக்களையும்-அவர்களுள் குறிப்பாக பிற்படுத்தப்பட்டோர், ஆதி திராவிட மக்கள் ஆகியோரும் அணி அணியாகச்சேர்ந்து திராவிடர் கழகம் திக்கெட்டும் கொள்கைபரப்பிய அந்தக் கால கட்டத்தில், 1949-ம் ஆண்டில் பிரளயம் ஒன்று வந்தது போல் இயக்கத்தில் ஒரு பிளவு வந்தது.

பெரியார் தலைமையில் திராவிடர் கழகமும், அண்ணாவின் வழி காட்டுதலில் திராவிட முன்னேற்றக் கழகமும் திராவிட தமிழ் மக்களுக்கு இரட்டைக் குழல் துப்பாக்கியாக அமைந்து-சமுதாய முற்போக்குப் பணியை; திராவிடர் கழகமும் - சமுதாயம் முற்போக்கு அடைய அரசியல் துணையும் தேவையென்ற வகையில்; திராவிட முன்னேற்றக் கழகமும்-நிலைகள் எடுத்து இயங்கின.

திராவிட முன்னேற்றக் கழகத்தினரின் சிந்தனையோட்டத்தில் பெரியாரின் சுயமரியாதை லட்சியங்களையும்-சாதி சமய வேறுபாடற்றதுமான சமுதாய நலத் திட்டங்களை சட்டங்களாக்குவதற்கும்-எல்லோருக்கும் கல்வி, வேலை வாய்ப்பு போன்றவற்றில் சமூக நீதியை நிலைநாட்டுவதற்கும்-திராவிடர் கழகத்தின் பிரச்சாரமெனும் பெரும் தொண்டு ஒரு புறம் இருந்தாலும், அந்தத் தொண்டினைச் செயல்வடிவம் கொடுத்து சட்ட ரீதியாக ஆக்குவதற்கு தி.மு.கழகம் ஆட்சி மன்றங்களுக்கு சென்றால் என்ன என்ற கேள்வியெழுந்து அது விரிவாக கழகத்தின் அமைப்புகளிலே விவாதிக்கப்பட்ட போது தான் 1956-ம் ஆண்டு திருச்சியில் தி.மு.க. மாநில மாநாடு நடைபெற்றது.

இந்த மாநாட்டில் பல்லாயிரக்கணக்கில் குழுமியிருக்கிற கழகத்தினரிடத்தில் நாம் ஆட்சி மன்றங்களுக்குச் செல்லலாமா? வேண்டாமா? என்பதை வாக்கெடுப்பு நடத்தி முடிவு செய்வோம் என்று அண்ணா கூறியதற்கிணங்க அந்த மாநாட்டில் நடைபெற்ற வாக்கெடுப்பில் மிகப் பெரும்பாலான வாக்குகள் தி.மு.க.; தனது லட்சியங்களையும் சமூக முன்னேற்றத்திற்கான கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதற்கு தேர்தலில் நின்று ஆட்சி மன்றங்களுக்குச் செல்ல வேண்டும் என்ற அளவில் தேர்தலுக்கு நிற்பது என்று முடிவெடுக்கப்பட்டது.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் கருத்துப்படி தேர்தலிலே நின்று வெற்றி பெற்று ஆட்சிப் பொறுப்பிலும் அமர்ந்த காரணத்தால் தான் பெண் உரிமைக்கான தீர்மானங்களைப் போல-புரட்சிகரமான தீர்மானங்களை-சட்டங்களாக ஆக்க முடிந்தது என்கிற போது-அரசியல்-தேர்தல்-ஆட்சிப் பொறுப்பு- இவை சமுதாய முன்னேற்றத்திற்கானதும், சமத்துவ நெறிகளைக் கடைப்பிடிக்கக் கூடியதுமான தீர்மானங்களுக்கு உயிர் கொடுக்கும் சட்டங்களை நிறைவேற்ற முடிந்தது.

உடன்பிறப்பே, எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. சென்னையில் நுங்கம்பாக்கத்தில் அண்ணா இல்லத்தில் மாடி தாழ்வாரத்தில் அண்ணாவும், நாவலர் நெடுஞ்செழியனும், நானும், பேராசிரியர் அன்பழகனாரும், அமைப்புச் செயலாளர் என்.வி. நடராசனும் மற்றும் கழக முன்னணியினரும் ஆவலோடு அமர்ந்திருக்கிறோம். எதற்காக அந்த ஆவல் தெரியுமா?

1967-ல் நடைபெற்ற பொதுத் தேர்தல் முடிவுகள் அன்று பிற்பகலில் இருந்து வானொலி மூலமாக வெளியிடப்பட்டன. பிற்பகல் 3 மணி அளவில் மொத்தம் எண்ணப்பட்ட வாக்குகள் அடிப்படையில் 50 தொகுதிகளில் தி.மு. கழகம் வெற்றி பெற்றது என்று வானொலி அறிவித்தது. அடுத்து எந்த தொகுதி, யாருக்கு வெற்றி என்று அறிவதிலே தான் எங்களுடைய கவனம் எல்லாம் இருந்தது. 50 என்ற எண்ணிக்கைக்கு பிறகு 60, 70, 80, 100 என்று கழக வேட்பாளர்களின் வெற்றிச் செய்திகள் அறிவிக்கப்பட்டுக் கொண்டே இருந்தன.

அண்ணாவோடு அமர்ந்திருந்த எங்கள் அனைவருக்கும் மட்டற்ற மகிழ்ச்சி. நுங்கம்பாக்கம் தெருக்களில் எல்லாம் கழகத்தினர் பட்டாசு கொளுத்திக்கொண்டிருந்தனர். 100 பேர் வெற்றி என்றிருந்த கணக்கு- 101 என்றும், 102 என்றும் பெருகத் தொடங்கியது.

எல்லோருடைய முகத்திலும் "பளீர்'' சிரிப்பு. அண்ணா முகம் மாத்திரம் வாடியிருந்தது. நாங்கள் கேட்டோம் அண்ணாவைப் பார்த்து. "என்ன அண்ணா? வெற்றி செய்திகள் வரவர நாங்கள் எல்லாம் மகிழ்ந்து கொண்டாடுகிறோம். நீங்கள் மாத்திரம் சோகமாக இருக்கிறீர்களே'' என்று கேட்டோம். அதற்கு அண்ணா சற்று தழுதழுத்த குரலிலே சொன்னார். "நாம் பெற்ற வெற்றி 100 பேர் என்ற அளவில் நின்றிருந்தால் ஒரு பலமான எதிர்க்கட்சியாக இருந்து- சட்டமன்றத்திலே செயல்பட்டு-மேலும் நம்முடைய கழகத்தை வலிவும் பொலிவும் உள்ளதாக ஆக்கியிருக்கலாம். 100-க்கு மேல் போய் விட்டது. ஆட்சி வந்து விட்டால் கழகத்தை எப்படி காப்பாற்ற போகிறோமோ என்ற சிந்தனை தான் என் சோகத்திற்குக் காரணம்'' என்று சொன்னார்.

எனக்கு நன்றாகப் புரிந்து விட்டது அண்ணாவின் நிலை. பரிசு சீட்டில் திடீரென்று ஆயிரமோ, பத்தாயிரமோ கிடைத்தால்-அது கிடைத்தவன் எப்படி துள்ளிக் குதித்து என்னென்ன செலவு செய்யலாம் என்று "டாம்பீகமாக'' கனவுகளைக் காண்பானோ-அது போன்று கழகமும் இருந்து விடக் கூடாதே என்பது தான் அண்ணாவுக்கு ஏற்பட்ட கவலை. அந்தக் கவலை அண்ணாவிற்கு ஏற்படாமல் நாங்கள் எல்லாம் துணை நிற்போம் என்று அவருக்கு உறுதி அளித்த பிறகு தான் 1967-ல் கிடைத்த அந்த வெற்றி மலரின் இதழை முகர்ந்து பார்க்க முனைந்தார்.

அவர் அன்று அடைந்த கவலையின் எதிரொலி போல- சில மாதங்களுக்கெல்லாம் தஞ்சை கீழ்வெண்மணியில் நடைபெற்ற நிகழ்ச்சி அமைந்து அவர் கண்களைக் குளமாக்கியது. உடனடியாக அங்கே செல்லுமாறு அண்ணா என்னையும், அமைச்சராக இருந்த சத்தியவாணி முத்துவையும், மன்னையையும் பணித்தார். அதற்கடுத்து-இரண்டாண்டு கால அவருடைய ஆட்சியிலே தான் பஸ் தொழிலாளர்கள்-மாணவர்கள் கலவரம். மாணவர் விடுதிக்கு அண்ணாவே நேராகச் சென்றார். என்னையும், அமைச்சர் கோவிந்தசாமியையும் கிளர்ச்சி நடக்கும் இடத்திற்கே அனுப்பினார். அமைதியை ஏற்படுத்த அவர் மேற்கொண்ட முயற்சிகளும், அவர் பட்டபாடுகளும் இன்றைக்கும் என் கண் முன்னால் காட்சிகளாக நிற்கின்றன.

இரண்டு ஆண்டு காலத்திற்குப் பிறகு- அவரை நம்மிடமிருந்து பிரிக்க யாராலும் இயலாது என்று நாம் இறுமாந்திருந்த நேரத்தில்-"இதோ, நான் இருக்கிறேன், அந்தக் காரியத்தைச் செய்ய'' என்று ஒரு கொடிய நோய் அவரைப் பற்றிக் கொண்டு - உள்ளத்தால் அல்ல, உடலால் அவரை நம்மிடமிருந்து பிரித்தது.

அவருக்குப் பிறகு அவர் ஏற்றிருந்த பொறுப்பு என் தோளில் சுமத்தப்பட்டது. அந்தப் பொறுப்பை ஏற்கும்போதும் சரி, இன்றைக்கும் சரி-அதன் பின் தேர்தல் முடிவுகள் வரும்போதெல்லாம் அண்ணா சொன்னாரே- "நாம் பெற்ற வெற்றி 100 பேர் என்ற அளவில் நின்றிருந்தால் ஒரு பலமான எதிர்க் கட்சியாக இருந்து-சட்டமன்றத்திலே செயல்பட்டு-மேலும் நம்முடைய கழகத்தை வலிவும் பொலிவும் உள்ளதாக ஆக்கியிருக்கலாம். 100-க்கு மேல் போய் விட்டது. ஆட்சி வந்து விட்டால் கழகத்தை எப்படி காப்பாற்ற போகிறோமோ என்ற சிந்தனை தான் என் சோகத்திற்குக் காரணம்''- என்ற அந்த வாசகம் தான் என் இதயத்தின் அடித்தளத்தில் பதிந்து என்னை இயக்கிக் கொண்டிருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது.

அண்ணாவிற்குப் பிறகு- அவர் வழியில் ஆட்சி நடத்தி வந்த நான்-முதல் சோதனையாக சென்னை மாநகராட்சி மன்றத்தில் "மஸ்டர் ரோல்'' என்ற ஒரு பயங்கரமான பூதத்தைச் சந்தித்து- அதை விரட்டியடிக்க வேண்டிய நிலையில் ஆட்சி சக்கரத்தை சுழற்ற வேண்டியவன் ஆனேன்.

சட்டமன்றத்தில் ஒரு நாள் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சென்னை மாநகராட்சி மன்றத்தில் "மஸ்டர் ரோல்'' ஊழல் என்று ஆரம்பித்தது தான் தாமதம் - நான் உடனே எழுந்து "எனக்கு அந்த ஊழலைப் பற்றித் தெரியும்;'' என்று கூறியதோடு-அதிலே ஈடுபட்டவர்கள் யார் யார் என்பதும்-அவர்கள் யாராக இருந்தாலும் சட்டம் அவர்களைக் கொட்டியே தீரும் என்பதையும் எடுத்துரைத்து-நானே அப்போதே மேலும் அறிவித்தேன்.

சென்னை மாநகராட்சி மன்றம் உடனடியாகக் கலைக்கப்படும்-மஸ்டர் ரோல் ஊழலில் ஈடுபட்டோர் யாராக இருந்தாலும் - எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் - அவர்கள் ஆளுங்கட்சி ஆனாலும், எதிர்க் கட்சி ஆனாலும்- என் ஆருயிர் நண்பர் ஆனாலும் - அல்லாதவரானாலும் தண்டிக்கப்படுவார்கள் - என்றுரைத்தேன்.

அதற்கேற்ப மாநகராட்சி மன்றத்தில் மேயராக இருந்தவர்கள், முக்கிய புள்ளிகளாக இருந்த உறுப்பினர்கள் -பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் சுமார் 25 பேர் அந்த ஊழலில் சிக்கியவர்கள் அன்று கண்டு பிடிக்கப்பட்டு, கைது செய்யப்பட்டு கூண்டிலே ஏற்றப்பட்டனர். இந்தப் பாரபட்சமற்ற நடவடிக்கைகளை புகழ்ந்து அந்த வழக்கை நடத்திய ஒரு பெரிய போலீஸ் அதிகாரி பின்னாளில் ஒரு பத்திரிகையில் நான் தயவு தாட்சண்யமின்றி எடுத்த நடவடிக்கையை பாராட்டி எழுதினார்.

அதைப் போல தஞ்சை கூட்டுறவு மத்திய வங்கியில் என்னுடைய ஆருயிர் நண்பர், இளமைக்கால நண்பர், வழக்கறிஞர், கழகத்தின் அந்தப் பகுதியைக் கட்டிக் காத்த தூண் போன்றவர் கையாடல் செய்தார் என்ற குற்றச்சாட்டை விசாரித்து அவரை கைது செய்யவும், அவருடைய வழக்கறிஞர் பதவியே பறிபோகவுமான நிலை நான் எடுத்த நடவடிக்கையால் ஏற்பட்டது என்பதை அனைவரும் அறிவார்கள்.

நான் ஆட்சிப் பொறுப்பிலோ-பதவிப் பொறுப்பிலோ இருந்து புரிந்த சாதனைகளை விட - அவை என் புகழ் பாடும் கல்வெட்டுகள் என்பதை விட - நான் பதவிப் பொறுப்பிலே இருந்த நேரத்தில் - தவறு செய்வோர் எவராயினும் - என் நண்பராயினும் - கழகத்தவராயினும் - உற்றார் உறவினராயினும் - பெற்ற பிள்ளைகள் ஆயினும்; அறவழி நின்று அவர்களைக் கண்டிப்பேன், தண்டிப்பேன் என்பது தான் என் சாதனைகளை விளக்கும் கல் வெட்டுகளை விட - உயர்ந்த கல் வெட்டாகும்.

இப்போது பதவிகளில் இருப்போரும்-பதவி பெற விழைவோரும்- யார் தலைமையிலே இயங்குகிற இயக்கத்தின் கீழ் நாம் பணி புரிய வேண்டும் என்பதை நினைவிலே அழுத்தமாக பதிய வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகத் தான் தொடக்க காலத்திலிருந்து இன்றைக்கும் தொடர் வெற்றி பெற தொண்டூழியம் செய்ய தோள் தட்டிப் புறப்படும் கழகத்தினர் அனைவருக்கும் ஒரு மானசீக அறிவுரையாகவே இந்த மடல் தீட்டியுள்ளேன் என்று கூறியுள்ளார் கருணாநிதி.

19 கருத்துக்கள்:

ரவி said...

இதுக்கு எல்லாம் எப்படி நேரம் ஒதுக்குறார் என்று ஆச்சர்யமாக இருக்கிறது....

ஆ.ஞானசேகரன் said...

//நான் பதவிப் பொறுப்பிலே இருந்த நேரத்தில் - தவறு செய்வோர் எவராயினும் - என் நண்பராயினும் - கழகத்தவராயினும் - உற்றார் உறவினராயினும் - பெற்ற பிள்ளைகள் ஆயினும்; அறவழி நின்று அவர்களைக் கண்டிப்பேன், தண்டிப்பேன் என்பது தான் என் சாதனைகளை விளக்கும் கல் வெட்டுகளை விட - உயர்ந்த கல் வெட்டாகும்.//

இவர் எழுதும் மடல்களும், கவிகளும் முக்கியமாக இரங்கல் பாக்களும்தான்.... கலைஞரை ஞாபகப்படுத்தி வழிநடத்தி வந்துக்கொண்டுள்ளது,..

greatlover said...

"இப்பொழுது, உலகத் தமிழினத் தலைவர் என்ற பட்டப்பெயரைச் சூடிக்கொள்ளவும், தமிழ்நாட்டில் இருக்கும் பணத்தையெல்லாம் தன் குடும்பத்திற்கே உரித்தாக்கவும் விரும்புகிற தேர்தல் காலத் தமிழர் கலைஞர் மக்களின் கோபத்தை எதிர்கொள்ள பயந்து மருத்துவமனையில் போய் ஒளிந்துகொண்டுள்ளார். தனது மந்திரிகளுக்கு அவசியப்பட்ட துறைகளுக்காக சண்டப்பிரசண்டம் செய்து சதிராடிய இந்த சூரப்புலி உண்மையில் தமிழுக்காகவோ, தமிழருக்காகவோ செய்ததென்ன?
ஒருமுறை அவரே சொன்னார், "தேனெடுத்தவன் புறங்கையை நக்காமலா இருப்பா"னென்று. இவருடைய பம்மலாட்டத்தையெல்லாம் பார்த்தால் ரொம்பவே நக்கியிருப்பார் போலிருக்கிறேதே…"இதெல்லாம் முத்துக்குமாரின் வரிகள்.கலைஞரின் கடந்தகால் அறிக்கைகளை எல்லாம் படித்தால் ஒரு உண்மை புலப்படும் .அது அவர் எவ்வளவு சூழ்ச்சிகாரர் வேடதாரி என்பது!!

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//செந்தழல் ரவி said...

இதுக்கு எல்லாம் எப்படி நேரம் ஒதுக்குறார் என்று ஆச்சர்யமாக இருக்கிறது....//

அதுக்கு சண்முகநாதன் ஐயா அடிக்கட்டு எடுத்துக் கொடுப்பார். ஐயாவிற்கும் ஞாபக சக்தி மிகுதி தானே! அவர் சொன்னா எழுதுறதுக்கு ஆளா இல்லை?
கருத்துக்கு நன்றி ரவி!

//செந்தழல் ரவி said...

இதுக்கு எல்லாம் எப்படி நேரம் ஒதுக்குறார் என்று ஆச்சர்யமாக இருக்கிறது....//

அதுக்கு சண்முகநாதன் ஐயா அடிக்கட்டு எடுத்துக் கொடுப்பார். ஐயாவிற்கும் ஞாபக சக்தி மிகுதி தானே! அவர் சொன்னா எழுதுறதுக்கு ஆளா இல்லை?
கருத்துக்கு நன்றி ரவி!

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//ஆ.ஞானசேகரன் said...

//நான் பதவிப் பொறுப்பிலே இருந்த நேரத்தில் - தவறு செய்வோர் எவராயினும் - என் நண்பராயினும் - கழகத்தவராயினும் - உற்றார் உறவினராயினும் - பெற்ற பிள்ளைகள் ஆயினும்; அறவழி நின்று அவர்களைக் கண்டிப்பேன், தண்டிப்பேன் என்பது தான் என் சாதனைகளை விளக்கும் கல் வெட்டுகளை விட - உயர்ந்த கல் வெட்டாகும்.//

இவர் எழுதும் மடல்களும், கவிகளும் முக்கியமாக இரங்கல் பாக்களும்தான்.... கலைஞரை ஞாபகப்படுத்தி வழிநடத்தி வந்துக்கொண்டுள்ளது,..//

ஒரு கவிஞராக, இலக்கியவாதியாக, கட்டுரையாளராக பாவித்து ரசிக்கலாம்.
நன்றி ஞானம்!

//ஆ.ஞானசேகரன் said...

//நான் பதவிப் பொறுப்பிலே இருந்த நேரத்தில் - தவறு செய்வோர் எவராயினும் - என் நண்பராயினும் - கழகத்தவராயினும் - உற்றார் உறவினராயினும் - பெற்ற பிள்ளைகள் ஆயினும்; அறவழி நின்று அவர்களைக் கண்டிப்பேன், தண்டிப்பேன் என்பது தான் என் சாதனைகளை விளக்கும் கல் வெட்டுகளை விட - உயர்ந்த கல் வெட்டாகும்.//

இவர் எழுதும் மடல்களும், கவிகளும் முக்கியமாக இரங்கல் பாக்களும்தான்.... கலைஞரை ஞாபகப்படுத்தி வழிநடத்தி வந்துக்கொண்டுள்ளது,..//

ஒரு கவிஞராக, இலக்கியவாதியாக, கட்டுரையாளராக பாவித்து ரசிக்கலாம்.
நன்றி ஞானம்!

ttpian said...

உடன்பிறப்பே!
என் உடல்,மயிர் ந்ல்லாம் சிலிர்க்கிரது!
உன்னை நம்பி மோசம் போனேனே!
கதை வசனம் எழுதும் ஆள் என்று நினைத்தேன் -ஆனால்,பெரிய நடிகன்
மேக்கப்-போடாமல்.....

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

// greatlover said...

"இப்பொழுது, உலகத் தமிழினத் தலைவர் என்ற பட்டப்பெயரைச் சூடிக்கொள்ளவும், தமிழ்நாட்டில் இருக்கும் பணத்தையெல்லாம் தன் குடும்பத்திற்கே உரித்தாக்கவும் விரும்புகிற தேர்தல் காலத் தமிழர் கலைஞர் மக்களின் கோபத்தை எதிர்கொள்ள பயந்து மருத்துவமனையில் போய் ஒளிந்துகொண்டுள்ளார். தனது மந்திரிகளுக்கு அவசியப்பட்ட துறைகளுக்காக சண்டப்பிரசண்டம் செய்து சதிராடிய இந்த சூரப்புலி உண்மையில் தமிழுக்காகவோ, தமிழருக்காகவோ செய்ததென்ன?
ஒருமுறை அவரே சொன்னார், "தேனெடுத்தவன் புறங்கையை நக்காமலா இருப்பா"னென்று. இவருடைய பம்மலாட்டத்தையெல்லாம் பார்த்தால் ரொம்பவே நக்கியிருப்பார் போலிருக்கிறேதே…"இதெல்லாம் முத்துக்குமாரின் வரிகள்.கலைஞரின் கடந்தகால் அறிக்கைகளை எல்லாம் படித்தால் ஒரு உண்மை புலப்படும் .அது அவர் எவ்வளவு சூழ்ச்சிகாரர் வேடதாரி என்பது!!//

தங்கள் தெளிவான கருத்துக்கு நன்றி கிரேட் லவர்!
தங்கள் கருத்து உண்மை!

// greatlover said...

"இப்பொழுது, உலகத் தமிழினத் தலைவர் என்ற பட்டப்பெயரைச் சூடிக்கொள்ளவும், தமிழ்நாட்டில் இருக்கும் பணத்தையெல்லாம் தன் குடும்பத்திற்கே உரித்தாக்கவும் விரும்புகிற தேர்தல் காலத் தமிழர் கலைஞர் மக்களின் கோபத்தை எதிர்கொள்ள பயந்து மருத்துவமனையில் போய் ஒளிந்துகொண்டுள்ளார். தனது மந்திரிகளுக்கு அவசியப்பட்ட துறைகளுக்காக சண்டப்பிரசண்டம் செய்து சதிராடிய இந்த சூரப்புலி உண்மையில் தமிழுக்காகவோ, தமிழருக்காகவோ செய்ததென்ன?
ஒருமுறை அவரே சொன்னார், "தேனெடுத்தவன் புறங்கையை நக்காமலா இருப்பா"னென்று. இவருடைய பம்மலாட்டத்தையெல்லாம் பார்த்தால் ரொம்பவே நக்கியிருப்பார் போலிருக்கிறேதே…"இதெல்லாம் முத்துக்குமாரின் வரிகள்.கலைஞரின் கடந்தகால் அறிக்கைகளை எல்லாம் படித்தால் ஒரு உண்மை புலப்படும் .அது அவர் எவ்வளவு சூழ்ச்சிகாரர் வேடதாரி என்பது!!//

தங்கள் தெளிவான கருத்துக்கு நன்றி கிரேட் லவர்!
தங்கள் கருத்து உண்மை!

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

// நிஜமா நல்லவன் said...

:)//

இப்போதெல்லாம் நகைச்சுவை படைப்புகளை அரசியல் வாதிகளே நமக்கு வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். அப்படியாவது மக்கள் மகிழ்ச்சியாக இருக்கட்டும் என்கிற நல்ல எண்ணம்!
நீங்க தான் கலைஞருக்கு நன்றி சொல்லணும் பாரதி!

// நிஜமா நல்லவன் said...

:)//

இப்போதெல்லாம் நகைச்சுவை படைப்புகளை அரசியல் வாதிகளே நமக்கு வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். அப்படியாவது மக்கள் மகிழ்ச்சியாக இருக்கட்டும் என்கிற நல்ல எண்ணம்!
நீங்க தான் கலைஞருக்கு நன்றி சொல்லணும் பாரதி!

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

// ttpian said...

உடன்பிறப்பே!
என் உடல்,மயிர் ந்ல்லாம் சிலிர்க்கிரது!
உன்னை நம்பி மோசம் போனேனே!
கதை வசனம் எழுதும் ஆள் என்று நினைத்தேன் -ஆனால்,பெரிய நடிகன்
மேக்கப்-போடாமல்.....//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ttpian!

// ttpian said...

உடன்பிறப்பே!
என் உடல்,மயிர் ந்ல்லாம் சிலிர்க்கிரது!
உன்னை நம்பி மோசம் போனேனே!
கதை வசனம் எழுதும் ஆள் என்று நினைத்தேன் -ஆனால்,பெரிய நடிகன்
மேக்கப்-போடாமல்.....//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ttpian!

ஜெகதீசன் said...

ஒருவர் தன்னைத்தானே புகழ்ந்துகொள்ளுதல் தற்கொலை செய்வதற்குச் சமம்..

ராஜ நடராஜன் said...

மன்னிக்கவும்.இரண்டு வரிகள் கண்ணில் பட்டவுடன் நேராக பின்னூட்டத்துக்கு வந்து விட்டேன்.

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//ஜெகதீசன் said...

ஒருவர் தன்னைத்தானே புகழ்ந்துகொள்ளுதல் தற்கொலை செய்வதற்குச் சமம்..//

அது பொதுவானவர்களுக்குத் தெரிகிறது. அவர்களுக்குத் தெரியவில்லையே!?

தன்னை தானே புகழ்கிறவர்களை விட இகழ்கிறவர்கள் தான் வெகுவாக தற்கொலை செய்து கொள்கிறார்கள்.

//ஜெகதீசன் said...

ஒருவர் தன்னைத்தானே புகழ்ந்துகொள்ளுதல் தற்கொலை செய்வதற்குச் சமம்..//

அது பொதுவானவர்களுக்குத் தெரிகிறது. அவர்களுக்குத் தெரியவில்லையே!?

தன்னை தானே புகழ்கிறவர்களை விட இகழ்கிறவர்கள் தான் வெகுவாக தற்கொலை செய்து கொள்கிறார்கள்.

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

// ராஜ நடராஜன் said...

மன்னிக்கவும்.இரண்டு வரிகள் கண்ணில் பட்டவுடன் நேராக பின்னூட்டத்துக்கு வந்து விட்டேன்.//

மன்னிக்கவும்,
ஒரு வரி படித்தாலே போதுமே!
நகைச்சுவை கலை(ளை) கட்டுதே!

// ராஜ நடராஜன் said...

மன்னிக்கவும்.இரண்டு வரிகள் கண்ணில் பட்டவுடன் நேராக பின்னூட்டத்துக்கு வந்து விட்டேன்.//

மன்னிக்கவும்,
ஒரு வரி படித்தாலே போதுமே!
நகைச்சுவை கலை(ளை) கட்டுதே!

முரளிதீர தொண்டைமான் said...

..... still see MR. CM you are wasting valuable time for this kind of "Mokkai" stories... instead of you can have more problem towards our state.... there are more things to have to change but.. first you will change your attitude like "Thai month is Tamil new year" what a foolish thoughts this.. we have strong reason and culture for Cithirai Ist is our Tamil New year.. should not obey this all pure Tamil People..

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

// Muralisamy said...

..... still see MR. CM you are wasting valuable time for this kind of "Mokkai" stories... instead of you can have more problem towards our state.... there are more things to have to change but.. first you will change your attitude like "Thai month is Tamil new year" what a foolish thoughts this.. we have strong reason and culture for Cithirai Ist is our Tamil New year.. should not obey this all pure Tamil People..//

ஆதாரங்களைக் கொடுங்கள் முரளிசாமி ஐயா,
பின்னர் விவாதிப்போம்!?
தை ஒன்று தமிழ்ப் புத்தாண்டு நான் ஏற்றுக்கொண்டிருக்கிறேன்.
கலைஞரை கண்ணை மூடிக்கொண்டு எதிர்க்கவில்லை.
நல்ல செயல்களை ஆதரிக்கிறோம்,
துரோகங்களையும், ஏமாற்று வேலையையும் தான் விமர்சிக்கிறோம்!
மற்றபடி உங்கள் கருத்து, பதிவின் நோக்கமல்ல!
நன்றி!!

// Muralisamy said...

..... still see MR. CM you are wasting valuable time for this kind of "Mokkai" stories... instead of you can have more problem towards our state.... there are more things to have to change but.. first you will change your attitude like "Thai month is Tamil new year" what a foolish thoughts this.. we have strong reason and culture for Cithirai Ist is our Tamil New year.. should not obey this all pure Tamil People..//

ஆதாரங்களைக் கொடுங்கள் முரளிசாமி ஐயா,
பின்னர் விவாதிப்போம்!?
தை ஒன்று தமிழ்ப் புத்தாண்டு நான் ஏற்றுக்கொண்டிருக்கிறேன்.
கலைஞரை கண்ணை மூடிக்கொண்டு எதிர்க்கவில்லை.
நல்ல செயல்களை ஆதரிக்கிறோம்,
துரோகங்களையும், ஏமாற்று வேலையையும் தான் விமர்சிக்கிறோம்!
மற்றபடி உங்கள் கருத்து, பதிவின் நோக்கமல்ல!
நன்றி!!

கோவி.கண்ணன் said...

இவ்வளவும் குடும்ப கவலைகளிலும் உடன்பிறப்புகளுக்கான கடிதத்தில் அந் நாவினால் வளர்ந்ததை மறக்காமல் குறிப்பிடுகிறார்.

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//கோவி.கண்ணன் said...

இவ்வளவும் குடும்ப கவலைகளிலும் உடன்பிறப்புகளுக்கான கடிதத்தில் அந் நாவினால் வளர்ந்ததை மறக்காமல் குறிப்பிடுகிறார்.//

ஆமா!
தொண்டர்களுக்கும், செயல்வீரர்களுக்கும் மட்டுமே எச்சரிக்கைக் கடிதம் எழுதுவார்.
குடும்ப உறுப்பினர்களுக்கு???
போஸ்டரில் தொண்டர்களின் குடும்ப உறுப்பினர்களின் படம் போட்டா நல்லா இல்லை என்று சொன்னவர்.
இவரின் குடும்ப உறுப்பினர்களின் மட்டும் போடலாம்?!

//கோவி.கண்ணன் said...

இவ்வளவும் குடும்ப கவலைகளிலும் உடன்பிறப்புகளுக்கான கடிதத்தில் அந் நாவினால் வளர்ந்ததை மறக்காமல் குறிப்பிடுகிறார்.//

ஆமா!
தொண்டர்களுக்கும், செயல்வீரர்களுக்கும் மட்டுமே எச்சரிக்கைக் கடிதம் எழுதுவார்.
குடும்ப உறுப்பினர்களுக்கு???
போஸ்டரில் தொண்டர்களின் குடும்ப உறுப்பினர்களின் படம் போட்டா நல்லா இல்லை என்று சொன்னவர்.
இவரின் குடும்ப உறுப்பினர்களின் மட்டும் போடலாம்?!

கிரி said...

//நான் பதவிப் பொறுப்பிலே இருந்த நேரத்தில் - தவறு செய்வோர் எவராயினும் - என் நண்பராயினும் - கழகத்தவராயினும் - உற்றார் உறவினராயினும் - பெற்ற பிள்ளைகள் ஆயினும்; அறவழி நின்று அவர்களைக் கண்டிப்பேன், தண்டிப்பேன் என்பது தான் என் சாதனைகளை விளக்கும் கல் வெட்டுகளை விட - உயர்ந்த கல் வெட்டாகும்//

அடிக்கடி கலைஞர் கிச்சு கிச்சு மூட்டுவதே வேலையா போச்சு..

ஒரு வேளை மக்களை சந்தோசமாக வைத்துகொள்ளும் முயற்சியில்!! இதுவும் ஒன்றா! ;-)

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//கிரி said...

//நான் பதவிப் பொறுப்பிலே இருந்த நேரத்தில் - தவறு செய்வோர் எவராயினும் - என் நண்பராயினும் - கழகத்தவராயினும் - உற்றார் உறவினராயினும் - பெற்ற பிள்ளைகள் ஆயினும்; அறவழி நின்று அவர்களைக் கண்டிப்பேன், தண்டிப்பேன் என்பது தான் என் சாதனைகளை விளக்கும் கல் வெட்டுகளை விட - உயர்ந்த கல் வெட்டாகும்//

அடிக்கடி கலைஞர் கிச்சு கிச்சு மூட்டுவதே வேலையா போச்சு..

ஒரு வேளை மக்களை சந்தோசமாக வைத்துகொள்ளும் முயற்சியில்!! இதுவும் ஒன்றா! ;-)//

கண்டிப்பாக!
நல்லா இருக்கட்டும்!!
நகைச்சுவை கொடுக்கட்டும் தொடர்ந்து!!!

//கிரி said...

//நான் பதவிப் பொறுப்பிலே இருந்த நேரத்தில் - தவறு செய்வோர் எவராயினும் - என் நண்பராயினும் - கழகத்தவராயினும் - உற்றார் உறவினராயினும் - பெற்ற பிள்ளைகள் ஆயினும்; அறவழி நின்று அவர்களைக் கண்டிப்பேன், தண்டிப்பேன் என்பது தான் என் சாதனைகளை விளக்கும் கல் வெட்டுகளை விட - உயர்ந்த கல் வெட்டாகும்//

அடிக்கடி கலைஞர் கிச்சு கிச்சு மூட்டுவதே வேலையா போச்சு..

ஒரு வேளை மக்களை சந்தோசமாக வைத்துகொள்ளும் முயற்சியில்!! இதுவும் ஒன்றா! ;-)//

கண்டிப்பாக!
நல்லா இருக்கட்டும்!!
நகைச்சுவை கொடுக்கட்டும் தொடர்ந்து!!!

வட மொழி - தமிழ் மொழி

பின் நவீனத்துவம் - பின் புதுமையியல்

அகங்காரம் - செருக்கு,இறுமாப்பு,முனைப்பு,யானெனல்

அகடவிகடம் - குறும்பு,மாற்று,மாறுபட்டது

அகதி - அறவை,வறியன்,எதிலி,புகலிலான்,யாருமற்றவன்,ஏழை

அகந்தை - இறுமாப்பு,செருக்கு

அகம் - உள்ளே,உயிர்,நான்,மனம்,மனநிலை,எண்ணம்

அகம்பாவம் - தற்பெருமை,செருக்கு

அகராதி - அகரமுதலி,அகரவரிசை,அகரநிரல்,அகரமுதல்

அகிம்சை - இன்னா செய்யாமை,கொல்லாமை

அஹிம்சை - இன்னா செய்யாமை,கொல்லாமை

அகோரம் - அழகின்மை,கொடுமை,நடுக்கம்

அக்கணம் - அப்பொழுது,அந்நொடி

அக்கரம் - எழுத்து

அட்சரம் - அழிவில்லாதது

அக்கியாணி - அறிவிலான்

அஞ்ஞானி - புல்லறிவாளன்

அக்கிரகாரம் - பார்ப்பனச் சேரி

அக்கிரமம் - ஒழுன்கின்மை,முறைகேடு

அக்கிராசனம் - முதலிருக்கை,தலைமை

அக்கினி,அக்நி - நெருப்பு,தீ,அனல்,எரி

அங்கப்பிரதட்சணம் - உடல் வலமுருளல், வலம் புரளல்

அங்கீகாரம்,அங்கீகரணம் - உடன்,செப்பு

அங்குலம் - விறக்கட்டை,விரலளவு

அசத்தை,அசத்தியம் - பொய்

அசரம்- அசைவில்லாதது,இயங்காதது,நிலையியல்

அசரீரி - வானொலி,உருவற்றது

அசித்து - பயனின்மை

அஜீரணம்,அசீரணம்- செரியாமை,பசியின்மை,அழிவுபடாமை

அசுத்தம் - அழுக்கு,துப்புரவின்மை,தூய்மையின்மை

அசேதனம் - அறிவில்லாதது,அறிவிலி,அறிவில் பொருள்

அசெளரியம் - நலமின்மை,இடைஞ்சல்

அஞ்சலி - கும்பிடல்,வணக்கம்

அஞ்சனம் - மை,கறுப்பு,இருள்

அஞ்சிட்டம் - கதிரவன்

அஞ்ஞாதம் - மறைவு,அறியப்படாதது

அஞ்ஞாத வாசஸ்தலம் - மறைந்துறைவிடம்

அட்சயப் பாத்திரம் - திருவோடு,ஏற்போடு,அள்ள அள்ளக் குறையாதது

அட்டதிக்கு பாலகர் - எண்புறக்காவலர்

அட்டபந்தனம் - எண்புறக்கட்டு

அண்டம் - முட்டை,உலகம்,வித்து,மூலம்

அதமம் - கீழ்மை,கடைத்திரம்

அதர்மம்,அதருமம் - தீவினை,அறமின்மை,மறம்

அதிகப்பிரசங்கம் - மிகுபேச்சு,தன் மேம்பாட்டுரை,மற்றொன்று விரித்தல்

அதிகாரி - அலுவலர்,தலைவன்,முதல்வன்,உடையவன்

அதிகாலம் - விடியற்காலம்

அதிகாலை - விடியற்காலம்,புலரிக்காலை

அதிஷ்டவசம் - நல்வினைப்பயன், நல்வினை வயம்

அநந்தகோடி - எண்ணத்தொலையாதன

அநந்தம் - அளவின்மை,முடிவில்லது

அநாதை - யாருமற்றவன்,தாய்தந்தையிலான்

அநித்தம்,அநித்தியம் - அழிவு,நிலையற்றது,நிலையாமை

அநீதி - முறைகேடு

அநுக்கிரகம் - அருளிரக்கம்,அருள்

அநுசரணை - சார்பு,சார்பு நிலை

அநுசிதம் - பொய்,தகாதது

அனுபவம் - பழக்கம்,வழக்கம்,நுகர்ச்சி

அனுமினம் - ஐயம்,வழியளவை,கருதலளவை

அனுமானப் புரமானம் - கருதலளவை

அநேகர் - பலர்

அந்தகன் - அழிப்போன்,குருடன்

அந்தகாரம் - இருள்,அறியாமை

அந்தக்கரணங்கள் - அகக்கருவிகள்

அந்தஸ்து - நிலைமை,ஒழுங்கு,நிலை

அந்தரம் - வான்வெளி,இடைவெளி,துணையின்மை,காலம்

அந்தி - முடிவு,மாலைக்காலம்

அந்திய கிரியை - இறுதிச் சடங்கு

அந்நியர் - பிறர்,அயலார்

அந்நியோந்நியம் - நெருக்கம்,ஒற்றுமை,ஒருவொருக்கொருவர்

அபயம் - அடைக்கலம்,அச்சமின்மை,புகலிடம்,அஞ்சேலெனல்

அபாயம் - பேரிடர்,அழிவு,கேடு,துன்பம்,இடுக்கண்,இக்கட்டு

அபாரம் - சிறப்பு,அளவின்மை,கேடு

அபிதானம் - பெயர்

அபிநயம் - நடிப்பு,கூத்து,கைமைய்காட்டல்,உள்ளக் குறிகாட்டல்

அபிப்பிராயம் - நோக்கம்,எண்ணம்,உட்கருத்து,உள்ளப்போக்கு

அபிமானம் - பற்று,நேயம்,செருக்கு

அபூர்வம் - அரிது,அருமை,அரிய பொருள்

அபேச்சை -அவா,விருப்பம்

அபேதம் - ஒற்றுமை,வேற்றுமையின்மை,வேறன்மை

அப்பியாசம் -பழக்கம்,பயிற்சி

அப்பிரதட்சிணம் - இடப்புறச் சுற்று, இடப்பக்கச் சுற்று

அமரத்துவம் - அழிவின்மை

அமலன் - துயோன்,கடவுள்,வாலறிவன்

அந்நியர் - பிறர்,அயலார்

அதிகம் - மிகுதி,அளவின்மை

அமிர்தம்,அமிருதம் - இனிமை,அருமருந்து,சாவா மருந்து,அழிவினமை

அமச்ம் - வகை,பங்கு,காலம்,எண்,அன்னப்புள்

அம்பாரம் - குவியல்

அயோக்கியம் - தகுதியினமை,தகாதது

அயோக்க்கியன் - தகுதியற்றவன்,தகவிலான்,கெட்டவன்

அரணியம் - காடு

அருச்சனை,அர்ச்சனை - வழிபாடு, பூ வழிபாடு,மலர் வழிபாடு

அருத்தம்,அர்த்தம் -பொருள்,பாதி

அருவம் - உருவின்மை,அழகின்மை

அர்த்தநாசம் - பேரழிவு,பொருளழிவு

அர்ப்பணம் - உரிமை கொடுத்தல், ஒப்புவித்தல், நீரோடு கொடுத்தல்

அலங்காரம் - அழகு,ஒப்பனை,அணி,புனைவு

அலச்சியம் - பாராமுகம்,பொருட்படுத்தாமை,கருத்தின்மை

அவகீர்த்தி - இழிவு,புகழின்மை

அவக்கியாதி - வசை,இகழ்ச்சி

அவசரம் - விரைவு,பரபரப்பு,சுருக்கு,பதைப்பு

அவசியம் - முதன்மை,கட்டாயம்,இன்றியமையாமை

அவதரித்தல் - பிறத்தல்

அவதாரம் - பிறப்பு,இறங்குகை

அவதானம் - எச்சரிக்கை,ஒழிவு,நினைவு,விரித்தல்,மறப்பின்மை

அவநம்பிக்கை - நம்ப்பிக்கைக்குறை

அவமரியாதை - முறைதவறல்,வணக்கமின்மை,தீயமுறை

அவமானம் - மானக்கேடு,இழிவு,குறைவு,இளிவரவு

அவயவம்,அவையவம் - உறுப்பு

அவலன் - உடற்குறையன்,வீணன்

அவசு,ஹவிசு - தூய உணவு,சோறு,நெய்,

அற்பம்,அல்பம் - சிறுமை,அணு,புன்மை,இழிவு

அனங்கன் - உடலிலான்,கடவுள்,காமவேள்

அனாதி - கடவுள்,தனியன்,பழமை,தொன்மை

அனுதாபம் - இரக்கம்

அனுபவம் - பழக்கம்,வழக்கம்,அழுந்தியறிதல்,பட்டறிவு

அனுமானம் - உய்த்துணர்தல்,கருதல்ளவை,வழியளவை

அனேகம் - பல,எல்லாம்

அன்னதானம் - சோற்றறம்,சோற்றுக்கொடை,உணாக்கொடை

அன்னம் - சோறு,உணவு,அடிசில்

அன்னியன் - பிறர்,அயலார்

அன்னியோன்னியம் - ஒற்றுமை,நெருக்கம்,ஒருவர்க்கொருவர்

ஆகம் -உடல்,மார்பு

ஆகரு(ர்)ஷண சக்தி - இழுப்பாற்றல்,இழுவழி,சேர்வழி

ஆகாசம்,ஆகாயம் - விண்,வெளி,வான்,விசும்பு,வர்னம்

ஆகாய விமானம் - வான ஊர்தி

ஆகாரம் - உணவு,அடிசில்,உடம்பு,வடிவு

ஆக்கியாபித்தல்,ஆஞ்ஞாபித்தல் - கட்டளையிடல்

ஆக்கிரமித்தல் - வலிந்து கவர்தல்,வலிமை காட்டல்

ஆட்சேபம் - மறுமொழி,மறுத்துக்கூறல்,தடைமொழி

ஆங்காரம் - இறுமாப்பு,செருக்கு,தருக்கு

ஆச சங்கை -ஐயம்

ஆசாபாசம் -அன்பு,பற்று,அவா

ஆசாரம் - ஒழுக்கம்,வழக்கம்,நன்னடை,வழிபாடு,துப்புரவு

ஆசியம்,ஹாசியம் - எள்ளல்,நகை,சிரிப்பு

ஆசீர்வாதம் - வாழ்த்துரை

ஆசுவாசம் - இளைப்பாறுகை

ஆசை - விருப்பம்,அவா,பற்று,வேட்கை,விழைவு

ஆச்சரியம் - புதுமை,வியப்பு,இறும்பூது

ஆ(ச்)சிரமம் - இலைக்குடில்,பாழி,முனிவருறயுள்

ஆஸ்திகம் - கடவுளுண்டெனுங்கொள்கை

ஆஸ்பத்திரி - மருத்துவச்சாலை

ஆஞ்ஞாபித்தல் -கட்டளையிடல்

ஆஞ்ஞை -ஆணை,கட்டளை

ஆடம்பரம் - ஆரவாரம்,பகட்டு

ஆட்சேபம்,ஆட்சேபனம் - தடைமொழி,மறுமொழி,எதிர்மொழி,மறுப்பு

ஆதங்கம் - ஆற்றாமை,அச்சம்,நோய்

அந்நியர் - பிறர்,அயலார்

ஆதவ(ப)ன் - பகலோன்,கதிரோன்

ஆதரவு - துணை,உதவி,சார்பு,பற்றுக்கொடு

ஆதி - முதல்,பழமை,அடி,தொடக்கம்,காரணம்,எழுவாய்,கடவுள்

ஆப்தம்,ஆத்தம் - அன்பு,நட்பு

ஆத்தானம்,ஆஸ்தானம் - நகரவாயில்,அறமன்றம்,கொடிமுடிவாயில்

ஆத்திரம்,ஆத்திரியம்,ஆத்திரவம் - உளக்கொதிப்பு,விரைவு,பரபரப்பு

ஆத்துமா,ஆன்மா - உயிர்

ஆந்ந்தம் - இன்பம்

ஆபத்து -இடர்,துன்பம்,இக்கெட்டு,ஊறுபாடு,இடுக்கண்

ஆபரணம் - அணிகலம்,இழை,நகை,அணி,பூண்

ஆபாசம் - அருவருப்பு,சிதைவு,கெடுதல்,பொய்,அளவைப்பொலி

அபூர்வம் - வினைப்பயன்

ஆமோதித்தல் - உடன்படல்,வழிமொழிதல்,மகிழ்தல்

ஆயக்கட்டு(துளுவம்) - மொத்த நஞ்சை நிலம்,களப்புரவு

ஆயத்தம்(இந்தி) - முயற்சி,எத்தனம்,முன்னேற்பாடு

ஆயா(போர்ச்சுக்கீஸ்) - செவலித்தாய்,கைத்தாய்

ஆயாசம்,ஆயாஸம் - களைப்பு,இளைப்பு,சோர்வு,அயர்வு,மயக்கம்

ஆயுசு,ஆயுள் - வாழ்நாள்,ஆண்டு

ஆயுதம் - கருவு,படைக்கலம்,படை,வாள்

ஆரணியம்,ஆரண்ணியம் - காடு

ஆரம்,ஹாரம் - பூமாலை,தொடையல்

ஆரம்பம் - தொடக்கம்

ஆரம்பித்தல் - தொடங்கல்

ஆராதனம் - வணக்கம்,மகிழ்வித்தல்

ஆரோகம்,ஆரோபம்,ஆரோக்கியஸ்நானம் - நல முழுக்கு,நோய் தீர்ந்தபின் முழுகல்

ஆரோக்கியம் - நலம்,நோயின்மை

ஆரோபணம்- நாட்டுதல்,ஏற்றுதல்

ஆரோபித்தல் - ஏற்றுதல்

ஆர்ச்சிதம் - தேட்டம்,தேடிய பொருள்

ஆர்மோனியம் - இசைக்கருவி

ஆர்வம் - அன்பு,விருப்பம்

ஆலகண்டண் - சிவன்,நஞ்சுமிடற்றன்,கறைமிடற்றன்

ஆலகம்- நெல்லிமரம்

ஆலம் - நஞ்சு

ஆலயம் - கோயில்

ஆலாபம்,ஆலாபனம் - அலப்பு,பேச்சு,உரையாடல்

ஆலோசனை - சூழ்தல்,சூழ்ச்சி,ஓர்வு,எண்ணம்,ஆராய்ச்சி

ஆவசியம் - கட்டாயம்,முதன்மை,இன்றியமையாமை

ஆவத்து,ஆபத்து - இக்கெட்டு,இடர்,பொல்லாங்கு

ஆவர்த்தி,ஆவருத்தம்,ஆவிருத்தி - தடவை,வரிசை,சுற்று,வழக்கம்

ஆவாகனம் - அழைத்தல்,உட்புகல்

ஆனந்தபரவசம் - இன்பக்களிப்பு,பேரின்பக்களிப்பு

ஆனந்தம் - இன்பம்,பேரின்பம்

ஆன்மா - உயிர்

இகம் - இவ்வுலகம்,இவ்விடம்,இப்பிறப்பு

இங்கிதம் - இனிமை,அடையாளம்,கருத்து,இடம் பொருள்

இச்சகம் - முகமன்

இச்சை - விருப்பம்,அவா,விழைவு,வேட்கை

இடபம்,ரிஷபம் - எருது,காளை,ஏறு,விடை

இட்டசித்தி - விருப்பப்பேறு

இதம்,ஹிதம் - இனிமை,நன்மை,அன்பு,அறம்

இதயம்,இதையம்,ஹிருதயம் - நெஞ்சம்,உள்ளம்

இதரம் - வேறு,இயல்,அழிவு,பகைமை

இதிகாசம் - பண்டை வரலாறு,பழங்கதை

இந்திர ஜாலம் - இமயவர்கோன்,வானவர் தலைவன்

இந்து - நிலா,திங்கள்,அம்புலி

இமாலயம்,ஹிமாலயம் - பனிமலை

இரகசியம் - மறைபொருள்,மறை,அற்றம்

இராசாபாசம் - அருவருப்பு,ஒழுங்கின்மை

இரசாயனம் - பொருளியைபு

இரட்சகம் - பாதுகாப்பு,மீட்பு

இரட்சை - காப்பு

இரணம்,ரணம் - புண்

இரதம்,ரதம் - தேர்

இரத்தம் - குருதி,செந்நீர்

இரத்தினம்,ரத்தினம் - மாமணி,செம்மணி

இரம்பம்,ரம்பம் - ஈர்வாள்

இராகம்,ராகம் - இசை,பண்,அவா,விருப்பு

இராகு - கருங்கோள்

இராக்கதர் - அரக்கர்

இராசசூயம் - அரசர் வேள்வி

இராசா - அரையன்,மன்னன்,அரசன்

இராச்சியம் - நாடு,அரசியல்

இராத்திரி - இரவு,கங்குல்

இருஷி,இருடி - முனிவன்,தவசி,துறவி

இதய கமலம் - நெஞ்சத்தாமரை

இருது - பருவம்,மகளிர் முதற்பூப்பு

இரேகை - வரி,எழுத்து,கையிறை,நிறை,தொடர்

இலகிரி,லகிரி,லாகிரி - வெறி,மயக்கம்

இலகு,லகு - எளிது,நொய்மை,நுண்மை,ஈரம்,பலா மரம்

இலங்கணம் - பட்டினி

இலஞ்சம் - கைக்கூலி,கையூட்டு,கையுறை

இலட்சணம்,லட்சணம் - அழகு,பார்வை

இலயித்தல் - ஒடுங்குதல்,சேர்ந்தொன்றித்தல்

இலெளகீகம்,இலவுகீகம் - உலகியல்,உலகப்போக்கு

இலாஞ்சனம்,இலாஞ்சனை - புகழ்,அடியாளம்,கறை

இலாபம்,லாபம் - ஊதியம்,மிச்சம்,பேறு

இலீலை,லீலை - விளையாட்டு

யுகம்,உகம் - உலக முடிவு,இரண்டு

உக்கிராணம் -களஞ்சியம்,சரக்கறை

உஷ்ணம் - வெப்பம்,சூடு

உசிதம் - உயர்வு,சிறப்பு,மேன்மை,தகுதி,ஒழுங்கு

உசிதன் - தக்கோன்

உச்சம் - உயர்ச்சி,சிறப்பு

உச்சரித்தல் - சொல்லுதல்,ஒலித்தல்,ஓதல்

உச்சரிப்பு - எழுத்தோசை

உச்சாட்டியம் - பேய கற்றல்,ஒட்டுதல்

உச்சி - மேடு,முகடு

உச்சிக்காலம்,உச்சிச்சமயம் - நண் பகல், நடுப் பகல்

உதயன் - பகலோன்

உதாரணம்,திருட்டாந்தம் - எடுத்துக்காட்டு,சான்று

உத்தமம் - உண்மை,மேன்மை

உத்தரியம்,உத்தரீயம் - மேலாடை

உத்தரவு - கட்டளை

உத்தி,யுத்தி - அறிவு,இணக்கம்,இசைவு,சூழ்ச்சி,சொல்

உத்தேசம்,உத்தேகம் - கருத்து,மதிப்பு,ஏறக்குறைய

உபகரணம் - கொடுத்தல்,உதபிபொருள்கள்,கருவி,துணைக்காரணம்

உபதேசம் - அருண்மொழி,அறிவுரை

உபயம் - உதவி,நன்கொடை,இரண்டு

உபாசநம்,உபாசநை,உபாசனை - வழிபாடு,வணக்கம்

உபாதி,உபாதை - நோய்,துன்பம்,வருத்தம்

உபாத்தியாயன் - கணக்காயன்,ஆசிரியன்,கற்பிப்போன்

உபாயம் - சூழ்ச்சி,நொய்மை,எளிது,சிறிது

உயுக்கம்,உயுத்தம்,யுத்தம் - போர்,தகுதி

உருசி,ருசி - சுவை

உருத்திராக்கம் - சிவமணி,சுக்குமணி

உரூபம்,ரூபம் - உருவம்,வடிவம்

உரொக்கம்,ரொக்கம் - கைப்பணம்,இருப்பு,கையிருப்பு

உரோமம்,ரோமம் - மயிர்,முடி,குஞ்சி

உல்லாசம் - மகிழ்ச்சி,விளையாட்டு,களிப்பு,உள்ளக்களிப்பு

உவதி,யுவதி, - மங்கை,பதினாறாண்டுப் பெண்

ஊகம் - கருதல்,ஓர்தல்,கருத்து,நினைவு

ஊர்ச்சிதம்,ஊர்ஜ்ஜிதம் - உட்பொருளுணர்தல், நிலைப்படுதல்,உறுதி,கருங்குரங்கு

எசமானன்,எஜமான் - தலைவன்,முதல்வன்,முதலாளி

எந்திரம் - பொறி

எமன் - கூற்றுவன்,மறலி

ஏகதேசம் - ஒருபால்,ஒருபுடை,சிறுபான்மை

ஏகம் - ஒன்று,தனிமை

ஏகாந்தம் - தனிமை,ஒரு முடிவு

ஏகோபித்தல் - ஒன்றுபடுதல்

ஏடணை,ஏஷணை - விருப்பம்

ஐது,ஹேது - காரணம்

ஏக்கம்,ஐக்கியம் - ஒற்றுமை

ஐஸ்வர்யம்,ஐச்வரியம் - செல்வம்,பொருள்,திரு

ஐதீகம்,ஐதிகம் - உலகுரை

ஐம் பூதம்,பஞ்ச பூதம் - ஐந்து முதற்பொருள்

ஓமம்,ஹோமம் - வேள்வி

ஒளடதம்,ஒளஷதம்- மருந்து

களோகம் - வான் வட்டம்,வளி மண்டலம்

கடகம் - கைவளை,வளையம்

கடம் - கடம்,யானைக்கதுப்பு

கடாட்சித்தல் - அருளல்

கடாரம் - கொப்பரை,தேங்காய்

கடிகாரம் - நாழிகை வட்டில்,பொழுது காட்டுங்கருவி

கடிகை - நாழிகை,தாழ்க்கோல்

கடினசித்தம் - வன்னெஞ்சம்

கடினம் - வன்மை,கடுமை,வருத்தம்,கொடுமை

கடூரம்,கொடூரம் - கொடுமை

கட்டம்,கஷ்டம் - துன்பம்,வருத்தம்

கணம்,ஹணம் - குழாம்,கூட்டம்,தொகுதி,நொடிப்பொழுது

கணி - கோள் நூல், கோல் நூல் வல்லான்

கணிகை - பொதுமகள்

கணிசம் - அளவு,மேம்பாடு

கணிதம் - கணக்கு

கண்டம் - நிலப்பிரிவு,துண்டு,கட்டி,மிடறு,கழுத்து

கண்திட்டி,கண்திருஷ்டி - கண்ணேறு

கதம்பகம்,கதம்பம் - கூட்டம்,மணப்பொருட் கூட்டு,சேர்ந்தது,இணைத்தது

கதலி - வாழை

கதி - நடை,செலவு,வழி,புகலிடம்,பற்றுக்கோடு,நிலை

கனகம்,கநகம் - பொன்

கனவான்,கநவான் - பெரியோன்,பெருமையாளன்,பெருந்தகை

கனிஷ்டை,கநிஷ்டை - பின்னோள்,தங்கை

கன்னிகை,கந்நிகை - மணமாகாதவள்,இளம்பெண்

கந்மம்,கருமம் - தொழில்,வினை

கபடம்,கவடம்,கபடு - கரவு,படிறு,வஞ்சகம்,மோசம்,சூது,ஒளிப்பு

கபாலம் - தலையோடு,மண்டையோடு

கபோதி - குருடன்

கப்பம் - இறை

கமண்டலம் - நீர்க்குடுவை

கமலம் - தாமரை,நீர்

கம்பீரம் - உயர்தோற்றம்,பெருமை,ஆழம்,செருக்கு

கயம்,ஹயம் - குளம்,ஆழம்,யானை

கரகம் - வட்டில்,நீர்க்குடுவை

கரகோசம்,கரகோஷம் - கைதட்டுதல்

கரணம் - கருவி,ஐம்பொறி

கரம் - கை

கருச் சித்தல் - முழங்கல்,இரைதல்

கருணை - அருள்,இரக்கம்

கர்த்தா,கருத்தா - தலைவன்,வினைமுதல்,ஆக்கியோன்,நூலாசிரியன்,முதல்வன்,கடவுள்

கர்ப்பவதி - சூலி

கர்ப்பாசயம் - கருப்பை

கர்வம் - செருக்கு,இறுமாப்பு

கலாபம்,கலபம் - மயில்,மயிற்றோகை

கலி - வறுமை,துன்பம்

கலியாணம் - மனம்,மன்றல்,பொன்,மகிழ்ச்சி

கவளீகரித்தல்,கபளீகரம்,கபளீகரித்தல் - முற்றிலும் விழுங்குதல்,விழுங்குதல்

கவனம் - கருத்து நோக்கம்,உன்னித்தல்

கவாத்து - படைக்கலப் பயிற்சி,வெட்டி விடுதல்

கவி - செய்யுள்,புலவன்,பாட்டு

கவுளி,கெளளி - பல்லி

களேபரம் - குழப்பம்,உடல்,பிணம்

கற்பம் - ஊழிக்காலம்,நெடுவாழ்க்கை மருந்து

கனம் - சுமை,பளு,பளுவு

காசம் - ஈளை,ஈளைநோய்,இருமல் நோய்

கசாயம்,கஷாயம் - காவி

காஞ்சிரம் - எட்டி மரம்

காட்டம்,காஷ்டம் - விறகு,வெகுளி

காதகன் - கொலையாளி

காயசித்தி - நீடுவாழ்ப் பேறு

காயம் - உடல்,யாக்கை,வான்

காரிய கர்த்தா - வினைமுதல்வன்

காரியதரிசி - அமைச்சன்,செயலாளன்

கலாட்சேபம் - பொழுதுபோக்கல்,நாட்கழித்தல்,வாழ்க்கை

கால நியமம் - காலமுறை,காலக்கடன்,கால்,ஒழுங்கு

கிஸ்தி - திறை,வரி

கிரகணம்,கிராணம் - பற்றுதல்,பிடித்தல்

கிரகஸ்தம் - இல்லற நிலை

கிரகம் - வீடு,கோள்,பற்றுதல்,பிடிப்பு

கிரணம் - ஒளி,கதிர்

கிரந்தம் - நூல்,எழுத்து

கிரமம் - ஒழுங்கு,முறைமை

கிரயம் - விலை

கிராதன் - குறவன்,வேட்டுவன்

கிரி - மலை,பன்றி

கிரிகை - தொழில்,செயல்,வினை,சடங்கு

கிரிமி,கிருமி - உயிரி,பூச்சி,புழு

கிரீடம் - முடி

கிருஷி - பயிர்,உழவு,பயிர் செய்கை

கிலம் - கழிவு,அழிவு,சிறுமை

கிலேசம் - அச்சம்,கவலை,துன்பம்

கீதம் - இசை,பாட்டு,பாடல்,இசைப்பாட்டு

கீர்த்தனம்,கீர்த்தனை - புகழ்ச்சி,புகழ்ப்பா

கீலகம் - ஆணி,பொருத்து

குஞ்சரம் - யானை

குஷ்டம் - தொழு நோய்,பெரு நோய்

குணஷ்டை - தொல்லை,துன்பம்

குதர்க்கம் - அழிவழக்கு

குதூகலம்,குதுகலம் - பெருங்களிப்பு,பெருமகிழ்வு

குபேரன் - பெருஞ்செல்வன்,செல்வக்கடவுள்

குமரி,குமாரி - நங்கை,மணமாகாப்பெண்,புதல்வி,மகள்

கும்பம் - குடம்

குருகடாட்சம் - ஆசிரியனருட்பார்வை

குரோதம் - உட்பகை

குலாலன் - குயவன்

குலிசம் - வேற்படை

குன்மம் - சூலை,வயிற்று வலி

கேதம் - துன்பம்,இடர்,குற்றம்

கேவலம் - சிறுமை,தனிமை

கோகிலம் - குயில்

கோடம்,கோஷம்,கோஷ்டம் - முழக்கம்,பேரோசை

கோஷ்டி - கூட்டம்

கோடி - நூறு நூறாயிரம்

கோதண்டம் - வில்

கோளகை,கோளம் - உருண்டை,வட்டம்

கெளரவம் - மேன்மை,பெருமை

சக - கூட,உடன்

சகசம்,ஸகஸம் - இயற்கை,ஒற்றுமை

சகஸ்ரநாமம் - ஆயிரந்திருமொழி,ஆயிரந்திருப்பெயர்

சகமார்க்கம் - தோழமை நெறி

சகலம் - எல்லாம்

சகவாசம் - கூடவிருத்தல்,உடனுரைதல்,பழக்கம்,சேர்க்கை,நட்பு

சகா - தோழன்,துணை

சகாப்தம் - ஆண்டு,நூறாண்டு

சகாயம் - நயம்,நன்மை,மலிவு,பயன்,உதவி,துணை

சகி,சகீ - தோழி

சகிதம் - உடன்

சகுணம் - குணத்தோடு கூடியது

சகுந்தம் - கழுகு,பறவை

சகுனம் - குறி

சகோதரம் - உடன்பிறப்பு

சகோதரி - உடன்பிறந்தாள்

சக்கரம் - உருளை,வட்டம்

சக்தி - ஆற்றல்,வல்லமை,வலி

சங்கடம்,சங்கட்டம் - இக்கெட்டு,நெருக்கடி,இடர்,கண்மூடுதல்

சங்கிதை - தொகுதி,வரலாறு

சடுதி,சடிதி - விரைவு

சஷ்டியப்த பூர்த்தி - அறுபதாமாண்டு நிறைவு

சண்டப்பிரசண்டம் - மிகு விரைவு

சண்டமாருதம் - பெருங்காற்று,கடியகாற்று,புயற்காற்று

சண்டாளம் - தீமை,புலைத்தன்மை,நம்பிக்கை கேடு

சண்டாளர் - தீவினையாளர்,இழிஞர்

சண்டித்தனம் - முருட்டுத்தன்மை,முரட்டுத்தன்மை

சதகோடி - நூறு கோடி

சதசு - அவை

சதம் - நூறு நிலை

சதானந்தம் - இடையறா வின்பம்

சதி - இறைவி,அழிவு,வஞ்சனை,சூழ்ச்சி

சந்தகம் - எப்பொழுதும்

சந்தானம் - வழி,வழித்தொடர்பு

சந்தித்தல் - எதிர்படுதல்,கூடுதல்

சந்திரலோகம் - திங்கள் உலகு,அம்புலியுலகம்

சந்திரன் - பிறை,கலையோன்,இரவோன்,அலவன்,அல்லோன்

சந்து - முடுக்கு,இயங்கும் உயிர்,தூது,பிளப்பு,பொருத்து

சந்துட்டம்,சந்துஷ்டி,சந்தோஷம் - மகிழ்ச்சி

சந்தேகம் - ஐயம்,ஐயுறவு

சந்தோஷம் - மகிழ்ச்சி,உவகை,களிப்பு

சன்னதி,சந்நதி,சந்நிதானம் - திருமுன்

சந்நியாசம் - துறவு,துறவறம்

சபதம் - ஆணை,உறுதிமொழி,வஞ்சினம்

சபம்,ஜெபம் - உருவேற்றல்

சபலம் - நிறைவேறல்,வெற்றி,நடுக்கம்,ஏக்கம்,இச்சை,அவா

சபா,சபை - அவை,மன்றம்,கழகம்,அரங்கம்

சபித்தல் - தீமொழி கூறல்,சினந்துரைத்தல்

சமஷ்டி - தொகுதி,எல்லாம்

சமதை - ஒப்பு

சமர்த்தன்,சமத்தன் - வல்லான்,வல்லவன்,திறமையாளன்

சமஸ்தானம்,சமத்தானம் - அரசவை,தலை நகர்

சமம் - இணை,ஈடு,மட்டம்,போர்,நடு,ஓர்மை

சமரச தத்துவம் - பொதுநிலையுண்மை

சமரசம் - பொது,வேறுபாடின்மை,ஒற்றுமை

சமர்ப்பணம் - ஒப்பித்தல்,உயர்ந்தோர்க்குக் கொடுத்தல்

சமாதானம் - அமைதி,இணக்கம்,தணிவு,உடன்பாடு,தக்கவிடை

சமாதி - அமைதி,பிணக்குழி,பேசாதிருத்தல்,இறப்பு,மரித்தல்

சமாப்தம்,சமாப்தி - முற்றுப்பெற்றது

சமாராதனை - உளநிறைவு

சமி,ஷமி - பொறு

சமிதை - வேள்வி விறகு,உலர்ந்த குச்சி

சமீபம் - அருகு,அணமை,மருங்கு

சமீன்தார்,ஜமீந்தார் - நிலக்காரன்,பெருநிலக்கிழார்

சமுதாயம் - குமுகம்,கூட்டம்

சமுத்திரம் - கடல்

சமை,ஷமை - பொறுமை

சம்சாரம்,சம்ஸாரம் - குடும்பம்,இல்லாள்,இல்லத்தரசி

சம்பத்து - செல்வம்,பொருள்

சம்பந்தம -உறவு,பற்று,இயைபு,சார்பு,தொடர்பு,பொருத்தம்

சம்பிரதாயம் - தொல்வழக்கு,முன்னோர் முறை,பண்டை முறை

சம்பு ரேட்சணம் - தெளித்தல்

சம்பூரணம் - நிறைவு

சம்மதம் - உடன்பாடு,ஒப்புமை,இயைபு

சம்ரஷணை - பாதுகாப்பு

சயம்,ஜெயம் - வெற்றி

சரணம்,சரண் -அடைக்கலம்,வணக்கம்,கால்,திருவடி

சரணாகதி - புகலடைதல்,அடைக்கலம்

சராசரம்,ஜங்கமா - இயங்கியற் பொருள், நிலையியற் பொருள்

சரிதம்,சரிதை,சரித்திரம் - வரலாறு

சரீரம் - உடல்,யாக்கை,மெய்

சருமம்,சர்மம் - தோல்

சர்ப்பம் - பாம்பு

சர்வகலாசாலை -

பல்கழைக் கழகம்

சலதளம்- அரசமரம்

சலதாரை - நீர்க்கால்,நீரோட்டம்,மதகு

சலதோசம் - நீர்க்கோர்வை,தடுமம், நீர்க்கோவை

சல்லாபம் - உரையாடல்

சவம் - பிணம்

சவுகரியம்,செளக்கியம்,செளகரியம் -நலம்

சவுந்தரியம்,செளந்தரியம்,சவுந்தரம் - அழகு

செளபாக்கியம்,சவுபாக்கியம் - செல்வம்

சற்காரியம் - உற்பொருளினின்று தோன்றும் வினை

சற்குணம் - நல்லியல்பு

சனனம்,ஜனனம்,சனிப்பு,சன்மம் - பிறப்பு

சாகசம் - ஆற்றல்,துணிவு,நெருக்கிடை

சாகரம் - கடல்

சாகுபடி - பயிர் செய்தல்

சாகை,ஜாகை(உருது) - தங்குமிடம்

சாக்கிரதை,ஜாக்கிரதை - விழிப்பு,உன்னிப்பு,எச்சரிக்கை