Saturday, February 14, 2009

தேடிப் பிடி(த்)தேன் தமிழை! - வழக்கொழிந்த சொற்கள்

தேடிப் பிடி(த்)தேன் தமிழை! - வழக்கொழிந்த சொற்கள்



வழக்கொழிந்த சொற்கள் என்னும் தொடர் பதிவில் ஐக்கியப்படுத்தி என்னையும் அந்த ஜோதியில் கலக்க வைத்தது வேறு யாரும் அல்ல, ஒரு வண்ணத்துப் பூச்சி. இந்த வண்ணத்துப் பூச்சிக்குப் பல பரிணாமங்கள் இருக்கும் என்று கருதுகிறேன். இதுவரை இது போன்ற வண்ணத்துப் பூச்சியை நான் பாத்ததில்லை. ஆம், இந்த வண்ணத்துப் பூச்சியைக் கூட நான் பார்த்ததில்லை. சிங்கப்பூரில் இருக்கும் இந்த வண்ணத்துப் பூச்சியின் வலைப்பூக்களை அவ்வப்போது மேய்ந்த பாவத்திற்காக இங்கு பரிகாரம் தேட வந்திருக்கிறேன். பெரிய தாமரைப் பூவில் தடுக்கி விழாமல், சிறு தும்பைப் பூவில் கூட துயரத்தையோ, துள்ளலையோ, துடிப்பையோ அடுக்கி வைக்கும் பாங்குடைய வண்ணத்துப் பூச்சி இது. தனக்குத் தரிக்கின்ற சிந்தனையை வலி உணர்ந்து அழகாகப் பிரசவிக்கும் தாய் போன்றது. இந்த வண்ணத்துப் பூச்சி புகழுடன் திகழ்வதில் மகிழ்வே! மிளிர்வது ஒன்றும் வியப்பல்ல. வண்ணத்துப் பூச்சிக்கு பெயர் சூட்டப் பட்டிருந்தாலும், மீண்டும் பெயர் சூட்டுகிறேன் திகழ்மிளிர்! இந்த வண்ணத்துப் பூச்சி தனி ஆளு இல்ல. இவரின் வலைப்பூக்களை கண்டு களியுங்கள். இவரோடு வண்ணத்துப் பூச்சிகள் ஏராளம்.


ஐயகோ! இது அரசியல் வாதிகள் மட்டும் பயன்படுத்தக் கூடிய மொழி அல்லது வார்த்தை அல்ல. ஒரு தடங்கலை ஏற்படுத்தும் வார்த்தையாக இருந்தாலும். இப்போதைய தமிழ் பேச்சு வழக்கு மற்றும் வட்டார வழக்குகளை உற்று கவனித்தால், பல்வேறு மொழிகளை உள்ளிருத்தி நம் தாய்த்தமிழை விரட்டிக் கொண்டிருப்பது அப்பட்டமாகத் தெரியும்.

பிரதான ஊடகமாகிய தொலைக் காட்சி தமிழைப் பிய்த்து தின்று கொண்டிருப்பது அனைவருக்கும் தெரியும். தற்போது அந்தப் பணியை செவ்வனே செய்ய ஒரு சில பண்பலை வானொலிகளும், தமிழை விட்டேனா பார் என்று எழுந்திருக்கிறார்கள். கிடக்கட்டும் அவர்களின் பணி. மெல்லத் தமிழினி சாகும் என்று தமிழ் ஆர்வலர்களும், உணர்வாளர்களும் வெந்து தணிந்து கொண்டிருக்கும் போது வலைப்பூக்கள் தமிழுக்கு சாமரம் வீசத் தொடங்கியது, இதனால் அனைவரும் தமிழைப் பயன்படுத்தி எழுத, அதனை மற்றவர்கள் படித்து பாராட்ட, வாசிப்பு பெருக, சிறந்த படைப்புகளைக் கொடுக்க வேண்டும் என்கிற மனநிலை உருவாக இந்த வகையில் வலை தளங்களில் தமிழ் வளர்ந்து கொண்டிருக்கிறது. திரட்டிகளை நடத்தும் தமிழ் அன்பர்களின் பணி அனைவராலும் பாராட்டத்தக்க ஒன்று என்பதைக் குறிப்பிட விரும்புகிறோம். இந்த சூழல் மெல்லத் தமிழினி சாகும் என்ற சாபத்தில் இருந்து மெல்லத் தமிழினிதாகும் என்று நமக்கு நாமே முரசு கொட்ட வைக்கிறது என்றால் அது மிகையாகது.

எனினும் பேச்சு வழக்குகளில் நாம் இன்னும் கலவி தான் செய்துகொண்டிருக்கிறோம் என்பது நிதர்சன உண்மை.

ஒரு திரைப்படத்தில் தொடக்கத்தில் ஒவ்வொரு பங்களிப்பாளர்களின் பெயர்களையும் போட்டு விட்டு இறுதியாக கதை,வசனம்,டைரக்ஷன் என்று போட்டு ஒருவருடைய பெயரைப் குறிப்பிடுவார்கள். அதில் கதை என்பது மட்டும் தான் தமிழ், வசனம் என்பது வடமொழி, டைரக்ஷன் என்பது ஆங்கிலம். வசனம் என்பதற்கு சரியான தமிழ்ச் சொல் உரையாடல். கலைஞரை வசனகர்த்தா என்று சொல்வோரை நாமெல்லாம் வன்மையாகக் கண்டிக்க வேண்டாமா? டைரக்ஷன் என்பதற்கு சரியான தமிழ்ச் சொல் இயக்கம். பாதிக்கும் மேற்பட்டவர்கள் இயக்கம் என்றுதான் பயன் படுத்துகிறார்கள். நாயகன் என்பதற்கு தலைவன் என்று தமிழிலும், ஹீரோ என்று ஆங்கிலத்திலும் பயன்படுத்தலாம். நாயகன் என்பது வடமொழி. வில்லன் என்பதை ஆங்கிலத்திலும் தமிழிலும் வில்லன் என்றே கொள்ளலாம். விரும்பினால் தீயோன் என்று கூட சொல்லலாம்.

தொலைக்காட்சியில் வரும் தொடர் நாடகங்களை, மெகா தொடர் என்று சொல்கிறோம், இதை நெடுந்தொடர் என்று தமிழில் சொல்லலாம்.


அடுத்தபடியாக சாப்பாட்டுக்கு வருவோம், (நாம் எப்பவும் நெடுந்தொடர் எல்லாம் முடிந்தவுடன் தான் சாப்பாட்டுக்கு வருவோம்). சாப்பாடு வைக்கும் பொழுது சாதம் போதுமா இன்னும் கொஞ்சம் வைக்கவா? என்று கேட்போம் அல்லவா? சாதம் என்ற சொல்லை எதோ மரியாதையாகச் சொல்வதாக எடுத்துக் கொள்கிறோம் என்று நினைக்கிறேன். அது இல்லை! அது சோறு என்னும் தமிழ்ச் சொல்லை மரிக்க வைத்துக் கொணர்ந்த மாற்றுச் சொல். சோறு என்று பயன்படுத்தினால் ஒன்றும் குடி முழுகிப் போய் விடாது.

சோற்றுக்குப் பக்கத்தில் வைக்கப் படுவதை சைடு டிஷ் என்று இப்போதெல்லாம் ஆங்கில மோகத்தில் சொல்வது உண்டு. சிலர் தொட்டுக்க என்று சொல்வார்கள், சிலர் கூட்டு என்பார்கள், சிலர் கூட்டுக்கறி என்பார்கள், தமிழில் மேங்கறி என்று சொன்னால் இன்னும் நன்றாக இருக்கும். எங்கள் இல்லத்தில் கூட இதைதான் பயன் படுத்துகிறோம்.

உணவு வகைகளில் மற்ற சொற்கள் எல்லாம் பெரும்பாலும் தமிழில் தான் பயன் படுத்துகிறோம் என்று நினைக்கிறேன், காலை உணவை சிற்றுண்டி என்று சொல்பவர்கள் எத்தனை பேர்?


காலையில் குறைவான உணவையே உட்கொள்ள வேண்டும் என்கிற அறிவியல் நுட்பத்தை தாங்கிவருகிற சொல்லாக இருப்பதால் இதையே பயன்படுத்தலாம்.

சிற்றுண்டி என்பது குறைவான அளவு உணவு உண்பது. செவிக்குணவில்லாத போது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும் என்று வள்ளுவர் சொன்னது சிற்றுண்டியாகத் தான் இருக்கும்.

நாஸ்தா, பிரேக் பாஸ்ட் போன்ற சொற்களுக்கு நிரந்தர விடுப்பு கொடுத்தால் நன்றாக இருக்கும். மாலை நான்கு மணிக்கு சிறிய அளவில் வடை போன்ற உணவு எடுத்துக் கொண்டாலும் சிற்றுண்டி என்றே சொல்லலாம். ஆங்கில சொற்களை ஆங்கிலத்தில் பேசுகிறவர்களிடம் புலமையோடு பேசினால் நன்றாக இருக்கும், பாராட்டப் படுவோம்.

சர்க்கார் என்னும் வட சொல்லுக்கு அரசாங்கம் என்னும் தமிழ்ச் சொல் இருக்கும் போது சில தமிழ் அரசியல்வாதிகளே சர்க்கார் என்று பயன்படுத்துவதைப் பார்த்துத் திகைக்க வேண்டியுள்ளது.

சிங்கையில் வசிப்பதால் சிங்கப்பூர் வட்டார வழக்குகளில் சிலவற்றை கொஞ்சம் தொட்டுச் செல்லலாம் என்று நினைக்கிறேன்.

காப்பி என்ற ஆங்கில சொல்லை பயன்படுத்துவதற்கு பதிலாக குளம்பி என்ற தமிழ்ச் சொல்லைப் பயன்படுத்தலாம். கொட்டை வடிநீர், கோப்பி என்று பயமுறுத்த வேண்டியதில்லை. எளிதான சொற்கள் தமிழில் மலிந்து கிடக்கும் போது அதையே பயன்படுத்தலாம்.


டீ என்பதை தேநீர் என்ற அழகானத் தமிழ்ச் சொல் இருக்கிறது அதையே பயன்படுத்திக் கொள்ளலாம். தே, தே தண்ணி, சா, சாயி போன்ற சொற்களை பயன் படுத்த வேண்டியதில்லை. இன்னொரு செய்தி தேநீருக்கு சீன மொழியான மாண்டரினில் சா என்று சொல்லுவார்கள்.

கார் என்பதற்கு மகிழுந்து என்னும் தமிழ்ச் சொல்லைப் பயன்படுத்திப் பார்க்கலாம். ஆங்கிலத்தில் பிளசர் கார் என்று சொல்வது வழக்கம். இங்கு பயன்படுத்தப் படும் சொல் காடி. காடி என்பது இந்தி சொல், அது மலாய் மொழியிலும் அவ்வாறே வழங்கப்படுகிறது. நமக்கென்று தமிழ்ச் சொல் இருக்கும் போது அதைப் பயன் படுத்துவானேன்.

இந்த வேலையைச் சின்னாங்கா செய்யலாம் என்று சொல்வார்கள். எளிதாக செய்யலாம் என்று எளிதாக தமிழில் சொல்வதை விட்டுவிட்டு....!

இந்த வேலையை சீலாப்பா செஞ்சுட்டேன் லா! என்று சொல்லுவார்கள். லா என்பது சிவில் லாவோ, கிரிமினல் லாவோ, கம்பெனி லாவோ அல்லது ஷகிலாவோ அல்ல. சிங்கப்பூர் மலேசியாவில் பேசும் போது இறுதியில் சார் அல்லது ஐயாவிற்கு பதிலாக சேர்க்கப்படும் வட்டார வழக்கு. சீலாப்பா என்பதற்கு பதிலாக தவறாக என்ற தமிழ்ச் சொல்லைப் பயன்படுத்தலாம்.

இந்த சாமானைப் கொஞ்ச நேரம் பிஞ்சான் பண்ணிக்கிறேன் லா! என்பார்கள். அதற்குப் பதிலாக இந்தப் பொருளை கொஞ்ச நேரம் இரவல் பெற்றுக்கொள்கிறேன் என்று சொல்லலாம். சாமான் என்பது வட சொல், பிஞ்சான் என்பது மலாய் சொல்.

உங்களுக்கு பதவி உயர்வு கிடைச்சதுக்கு எனக்கு பிலாஞ்சா பண்ணுங்க லா என்பார்கள்.

பிலாஞ்சா என்னும் மலாய் சொல்லுக்குப் பதில் விருந்து என்னும் தமிழ்ச் சொல்லைப் பயன் படுத்தலாம்.

இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். வேறொரு வாய்ப்பில் மற்ற சொற்களைப் பற்றி சிந்திக்கலாம்.

வழக்கொழிந்த சொற்கள் என்ற தலைப்பில் அழகிய தமிழ் இடுகைகளை இடுவதற்கு நான் அழைக்கும் உறவுகள்,

1) நட்புடன் ஜமால்

2) கோவி.கண்ணன்

3) தூயா

4) வெண்பூ

5) முகவை மைந்தன்

6) டொன் லீ

7) பாரி அரசு

8) எம்.எம்.அப்துல்லா(புதுகை அப்துல்லா)

9) நீதிபதி பாண்டித்துரை

10) ஜோசப் பால்ராஜ்

11) சுரேஷ் குமார்

12) டி.வி.இராதாகிருஷ்ணன்

13) ஜோ

14) கிஷோர்

15) ஜெகதீசன்

16) இறக்குவானை நிர்ஷன்

17) கிரி

18) வால்ப்பையன்

19) இளையமதி

20) விக்னேசுவரன்


அனைவருக்கும் நன்றி!

71 கருத்துக்கள்:

நசரேயன் said...

"தமிழரிடம் தமிழ் பேசுங்கள்"
அப்படியே வழிமொழிகிறேன்

ஜோசப் பால்ராஜ் said...

நல்ல பல தமிழ் சொற்களை அறிமுகம் செய்துள்ளீர்கள். உங்கள் அளவுக்கு என்னால் எழுத இயலுமா என தெரியவில்லை. கொஞ்சம் கால அவகாசம் கொடுங்கள்.

சிற்றுண்டி என்பது சிறிய அளவு உண்ணப்படுவதாக இருப்பின் காலை உணவை சிற்றுண்டி எனச் சொல்லக்கூடாது. ஏனென்றால் காலையில் அதிகமாகவும், நண்பகலில் சற்று குறைவாகவும், இரவில் மிகக் குறைவாகவும் உண்ண வேண்டும் எனச் சொல்வார்கள்.

Break fast like a king
Lunch like a Prince
Dinner Like a beggar அப்டின்னு ஒரு சொல்லாடல் இருக்கு.

கோவி.கண்ணன் said...

//விருந்து உபச்சாரம் //

விருந்து சரி.

உபச்சாரம் ? வடமொழி !

விருந்து என்றாலே அதில் கவனிப்பும் சேர்ந்து உபச்சாரம் என்று தான் பொருள்.

விருந்து உபச்சாரத்துக்கு பதில் விருந்து கொடுத்தல் என்று சொல்லலாம்.

மன்னிக்கவும் வெளிச்சப்பதிவரே, தமிழென்று தாங்களும் எண்ணியிருப்பவற்றில் பல வடசொற்களே.

பரிணாமங்கள் > பருவம் அல்லது வளர்ச்சி

பரிகாரம் > ஈடுசெய்தல் அல்லது ஈடு

பிரதான > முதன்மை

சாமரம் > விசிறி

அப்பட்டம் > முழுமை

நிதர்சன > எதிரே பார்க்கும் அல்லது பார்க்கும்

பாதகன் > கெட்டவன்

மோகத்தில் > ஈடுபாட்டில் அல்லது பற்றில்

நிரந்தர > நிலையான

மெச்சப்படுவோம் > பாராட்டப்படுவோம்

கோவி.கண்ணன் said...

//ஏனென்றால் காலையில் அதிகமாகவும், //

அதிகம் என்பது வடசொல்

எளிமையாக மிகுதி என்று பயன்படுத்தலாம்

கோவி.கண்ணன் said...

//அந்த ஜோதியில் கலக்க வைத்தது வேறு யாரும் அல்ல//

ஜோதி ஜோதியில் கலந்ததால் ஜெகஜோதி ! பெருஞ்சுடர் ! சூரியன் ! ஆகுகிறீர்கள்

:)

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

// கோவி.கண்ணன் said...
//விருந்து உபச்சாரம் //

விருந்து சரி.

உபச்சாரம் ? வடமொழி !

விருந்து என்றாலே அதில் கவனிப்பும் சேர்ந்து உபச்சாரம் என்று தான் பொருள்.

விருந்து உபச்சாரத்துக்கு பதில் விருந்து கொடுத்தல் என்று சொல்லலாம்.

மன்னிக்கவும் வெளிச்சப்பதிவரே, தமிழென்று தாங்களும் எண்ணியிருப்பவற்றில் பல வடசொற்களே.

பரிணாமங்கள் > பருவம் அல்லது வளர்ச்சி

பரிகாரம் > ஈடுசெய்தல் அல்லது ஈடு

பிரதான > முதன்மை

சாமரம் > விசிறி

அப்பட்டம் > முழுமை

நிதர்சன > எதிரே பார்க்கும் அல்லது பார்க்கும்

பாதகன் > கெட்டவன்

மோகத்தில் > ஈடுபாட்டில் அல்லது பற்றில்

நிரந்தர > நிலையான

மெச்சப்படுவோம் > பாராட்டப்படுவோம்
//


முதல் மூன்று பத்திகளில் நல்ல களை எடுத்திருக்கிறீர்கள். அதைத் தான் எதிர்பார்த்தேன். நான் அறிமுகப் படுத்திய சொற்கள் சரியாகத் தான் அறிமுகப் படுத்தியிருக்கிறேன் என்று நினைக்கிறேன். முள்ளை முள்ளால் தான் எடுக்க வேண்டும் என்று சொல்வார்கள். ஒரு நெடுந்தொடருக்கு இடைவெளியில் விளம்பரம் போட்டுக் கொள்வது போல் முதல் மூன்று பத்திகளை அமைத்திருந்தேன். அப்படி இல்லை என்றால், யாரும் இந்தப் பக்கம் தலைவைத்துப் படுக்க மாட்டார்கள். இது ஒரு விவாதக் களமாக உருவாக வேண்டும் என்பதே எமது விருப்பம். நமது தமிழ்ச் சொற்கள் சிலவற்றை வடமொழிச் சொற்கள் என்று நினைத்துக் கொண்டிருப்பது, பல வடமொழி சொற்கள் தமிழில் ஊடுருவி இருப்பது, இது போன்ற அவிழ்க்கப் பாடாத வினாக்களுக்கு விடை கிடைக்கும். சமத்துவம் என்பது வடமொழிச் சொல். நாம் சமத்துவ புரம் வைத்திருக்கிறோம், சமத்துவ மக்கள் கட்சி வைத்திருக்கிறோம். அதை யாரும் வடமொழி என்று சொன்னதுண்டா?
திராவிட இயக்கங்கள் தோன்றிய பிறகு ஏற்பட்ட சொற்கள் மட்டுமே தமிழ்ச் சொற்கள் என்கிற ஒரு எண்ணமும் நம்மிடையே உண்டு. இப்படி நிறைய கேள்விகளை உருவாக்கிக் கொண்டே போகலாம். அறிந்தவர்கள் பதில் தருவார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

// கோவி.கண்ணன் said...
//விருந்து உபச்சாரம் //

விருந்து சரி.

உபச்சாரம் ? வடமொழி !

விருந்து என்றாலே அதில் கவனிப்பும் சேர்ந்து உபச்சாரம் என்று தான் பொருள்.

விருந்து உபச்சாரத்துக்கு பதில் விருந்து கொடுத்தல் என்று சொல்லலாம்.

மன்னிக்கவும் வெளிச்சப்பதிவரே, தமிழென்று தாங்களும் எண்ணியிருப்பவற்றில் பல வடசொற்களே.

பரிணாமங்கள் > பருவம் அல்லது வளர்ச்சி

பரிகாரம் > ஈடுசெய்தல் அல்லது ஈடு

பிரதான > முதன்மை

சாமரம் > விசிறி

அப்பட்டம் > முழுமை

நிதர்சன > எதிரே பார்க்கும் அல்லது பார்க்கும்

பாதகன் > கெட்டவன்

மோகத்தில் > ஈடுபாட்டில் அல்லது பற்றில்

நிரந்தர > நிலையான

மெச்சப்படுவோம் > பாராட்டப்படுவோம்
//


முதல் மூன்று பத்திகளில் நல்ல களை எடுத்திருக்கிறீர்கள். அதைத் தான் எதிர்பார்த்தேன். நான் அறிமுகப் படுத்திய சொற்கள் சரியாகத் தான் அறிமுகப் படுத்தியிருக்கிறேன் என்று நினைக்கிறேன். முள்ளை முள்ளால் தான் எடுக்க வேண்டும் என்று சொல்வார்கள். ஒரு நெடுந்தொடருக்கு இடைவெளியில் விளம்பரம் போட்டுக் கொள்வது போல் முதல் மூன்று பத்திகளை அமைத்திருந்தேன். அப்படி இல்லை என்றால், யாரும் இந்தப் பக்கம் தலைவைத்துப் படுக்க மாட்டார்கள். இது ஒரு விவாதக் களமாக உருவாக வேண்டும் என்பதே எமது விருப்பம். நமது தமிழ்ச் சொற்கள் சிலவற்றை வடமொழிச் சொற்கள் என்று நினைத்துக் கொண்டிருப்பது, பல வடமொழி சொற்கள் தமிழில் ஊடுருவி இருப்பது, இது போன்ற அவிழ்க்கப் பாடாத வினாக்களுக்கு விடை கிடைக்கும். சமத்துவம் என்பது வடமொழிச் சொல். நாம் சமத்துவ புரம் வைத்திருக்கிறோம், சமத்துவ மக்கள் கட்சி வைத்திருக்கிறோம். அதை யாரும் வடமொழி என்று சொன்னதுண்டா?
திராவிட இயக்கங்கள் தோன்றிய பிறகு ஏற்பட்ட சொற்கள் மட்டுமே தமிழ்ச் சொற்கள் என்கிற ஒரு எண்ணமும் நம்மிடையே உண்டு. இப்படி நிறைய கேள்விகளை உருவாக்கிக் கொண்டே போகலாம். அறிந்தவர்கள் பதில் தருவார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//கோவி.கண்ணன் said...
//அந்த ஜோதியில் கலக்க வைத்தது வேறு யாரும் அல்ல//

ஜோதி ஜோதியில் கலந்ததால் ஜெகஜோதி ! பெருஞ்சுடர் ! சூரியன் ! ஆகுகிறீர்கள்

:)//


ஜோதி என்பது வடமொழி, என்பது தெரியாமல் பயன்படுத்த வில்லை.

//கோவி.கண்ணன் said...
//அந்த ஜோதியில் கலக்க வைத்தது வேறு யாரும் அல்ல//

ஜோதி ஜோதியில் கலந்ததால் ஜெகஜோதி ! பெருஞ்சுடர் ! சூரியன் ! ஆகுகிறீர்கள்

:)//


ஜோதி என்பது வடமொழி, என்பது தெரியாமல் பயன்படுத்த வில்லை.

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//ஜோசப் பால்ராஜ் said...
நல்ல பல தமிழ் சொற்களை அறிமுகம் செய்துள்ளீர்கள். உங்கள் அளவுக்கு என்னால் எழுத இயலுமா என தெரியவில்லை. கொஞ்சம் கால அவகாசம் கொடுங்கள்.

சிற்றுண்டி என்பது சிறிய அளவு உண்ணப்படுவதாக இருப்பின் காலை உணவை சிற்றுண்டி எனச் சொல்லக்கூடாது. ஏனென்றால் காலையில் அதிகமாகவும், நண்பகலில் சற்று குறைவாகவும், இரவில் மிகக் குறைவாகவும் உண்ண வேண்டும் எனச் சொல்வார்கள்.

Break fast like a king
Lunch like a Prince
Dinner Like a beggar அப்டின்னு ஒரு சொல்லாடல் இருக்கு.//

பிரேக் பாஸ்ட் என்பது Break the Fasting என்னும் ஆங்கில சொற்றொடர். இரவு நெடுந்தூக்கத்திற்கு பிறகு உணவு உண்ணுவதை குறிக்கிறது.

காலையில் அதிகமாக உண்ண வேண்டும் என்று சொல்வதாக அறியவில்லை.

//ஜோசப் பால்ராஜ் said...
நல்ல பல தமிழ் சொற்களை அறிமுகம் செய்துள்ளீர்கள். உங்கள் அளவுக்கு என்னால் எழுத இயலுமா என தெரியவில்லை. கொஞ்சம் கால அவகாசம் கொடுங்கள்.

சிற்றுண்டி என்பது சிறிய அளவு உண்ணப்படுவதாக இருப்பின் காலை உணவை சிற்றுண்டி எனச் சொல்லக்கூடாது. ஏனென்றால் காலையில் அதிகமாகவும், நண்பகலில் சற்று குறைவாகவும், இரவில் மிகக் குறைவாகவும் உண்ண வேண்டும் எனச் சொல்வார்கள்.

Break fast like a king
Lunch like a Prince
Dinner Like a beggar அப்டின்னு ஒரு சொல்லாடல் இருக்கு.//

பிரேக் பாஸ்ட் என்பது Break the Fasting என்னும் ஆங்கில சொற்றொடர். இரவு நெடுந்தூக்கத்திற்கு பிறகு உணவு உண்ணுவதை குறிக்கிறது.

காலையில் அதிகமாக உண்ண வேண்டும் என்று சொல்வதாக அறியவில்லை.

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//நசரேயன் said...
"தமிழரிடம் தமிழ் பேசுங்கள்"
அப்படியே வழிமொழிகிறேன்//


அனைவரும் வழிமொழிவோம்.

//நசரேயன் said...
"தமிழரிடம் தமிழ் பேசுங்கள்"
அப்படியே வழிமொழிகிறேன்//


அனைவரும் வழிமொழிவோம்.

கோவி.கண்ணன் said...

//ஜோதி என்பது வடமொழி, என்பது தெரியாமல் பயன்படுத்த வில்லை.//

நான் அதுகுறித்து சொல்லவில்லை. உங்கள் திருநாமத்தைக் குறிப்பிட்டு சொன்னேன்
:)

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//மன்னிக்கவும் வெளிச்சப்பதிவரே, தமிழென்று தாங்களும் எண்ணியிருப்பவற்றில் பல வடசொற்களே. //

மன்னிப்பெல்லாம் எதற்கு கோவியாரே!
நம்முடைய தவறை வெளிக் கொணராமல் பூட்டி வைப்பதில் ஒப்புதல் இல்லாதவன் நான்.
ஒருவர் செய்கிற தவறு அவர் கண்ணில் படுவதில்லை. மற்றவர் கண்ணில் எளிதில் பட்டுவிடும் என்பதை நான் பலமாக நம்புவதுண்டு.
நான் தவறில்லாமல் எழுதுபவன் என்று சொல்லிக் கொள்வதும் இல்லை.
இருப்பினும் தாங்கள் குறிப்பிட்ட சொற்களை நான் அறிமுகப்படுத்தவில்லை. எனது முன்னுரையில் நீங்கள் குறிப்பிட்ட சொற்களை எல்லாம் பிரபல எழுத்தாளர்களின் எழுத்துக்களில் பார்த்திருக்கிறேன். அது இல்லை என்றால் அவர்களுடைய எழுத்துக்கள் மிளிராது என்று அவர்களே நம்புகிறார்கள் என்றும் தெரியும். நாமெல்லாம் அவர்களோடு ஒப்பிடுகையில் சிறிய கடுகு என்று நினைத்துக் கொள்வதுண்டு.
பல சொற்கள் தமிழிலும் வடமொழியில் வழங்கப்பட்டு வருகின்றன. வடமொழி என்பது இப்போது பேச்சு வழக்கில் இல்லை. வழிபாட்டு முறைக்கு மட்டும் சிலர் பயன்படுத்துகிறார்கள். வடமொழியில் வழங்கப்படும் சொற்கள் தமிழில் இருந்தால் அது வடமொழிச் சொற்கள் தான் என்று அடித்துச் சொல்லும் மனநிலை தமிழர்களுக்கு உண்டு. ஏன் தமிழ்ச் சொற்கள் வடமொழியிலும் இந்தியிலும் கலந்திருக்க வாய்ப்பு இல்லையா? அது தமிழ் மீது உள்ள நம்பிக்கையா என்று தெரியவில்லை. அதற்காக நான் தமிழை தற்காத்து பேசுவதாக எண்ண வேண்டாம்.
எடுத்துக்காட்டாக,
சங்கம் என்பது தமிழ்ச் சொல்லா அல்லது வடமொழியா?
இடைச்சங்கம்,கடைச்சங்கம், ஏன் சங்ககாலம், சங்ககாலப் புலவர்கள் என்று குறிப்பிடுகிறோமே அது எந்த மொழி என்று வினவ விரும்புகிறேன்? சங்க காலத்தில் ஏன் மன்றம்,கழகம் எல்லாம் இல்லை? விடை தெரிந்தவர்கள் சொல்லலாம்.

பேச்சு வழக்கில் இருக்கும், வெகுவாகப் பயன்படுத்த படும் சொற்களுக்காகவே இந்தப் பதிவு. மற்றபடி ஒரே நாளில் மாற்றிவிடலாம் என்று நினைக்கவில்லை.

//மன்னிக்கவும் வெளிச்சப்பதிவரே, தமிழென்று தாங்களும் எண்ணியிருப்பவற்றில் பல வடசொற்களே. //

மன்னிப்பெல்லாம் எதற்கு கோவியாரே!
நம்முடைய தவறை வெளிக் கொணராமல் பூட்டி வைப்பதில் ஒப்புதல் இல்லாதவன் நான்.
ஒருவர் செய்கிற தவறு அவர் கண்ணில் படுவதில்லை. மற்றவர் கண்ணில் எளிதில் பட்டுவிடும் என்பதை நான் பலமாக நம்புவதுண்டு.
நான் தவறில்லாமல் எழுதுபவன் என்று சொல்லிக் கொள்வதும் இல்லை.
இருப்பினும் தாங்கள் குறிப்பிட்ட சொற்களை நான் அறிமுகப்படுத்தவில்லை. எனது முன்னுரையில் நீங்கள் குறிப்பிட்ட சொற்களை எல்லாம் பிரபல எழுத்தாளர்களின் எழுத்துக்களில் பார்த்திருக்கிறேன். அது இல்லை என்றால் அவர்களுடைய எழுத்துக்கள் மிளிராது என்று அவர்களே நம்புகிறார்கள் என்றும் தெரியும். நாமெல்லாம் அவர்களோடு ஒப்பிடுகையில் சிறிய கடுகு என்று நினைத்துக் கொள்வதுண்டு.
பல சொற்கள் தமிழிலும் வடமொழியில் வழங்கப்பட்டு வருகின்றன. வடமொழி என்பது இப்போது பேச்சு வழக்கில் இல்லை. வழிபாட்டு முறைக்கு மட்டும் சிலர் பயன்படுத்துகிறார்கள். வடமொழியில் வழங்கப்படும் சொற்கள் தமிழில் இருந்தால் அது வடமொழிச் சொற்கள் தான் என்று அடித்துச் சொல்லும் மனநிலை தமிழர்களுக்கு உண்டு. ஏன் தமிழ்ச் சொற்கள் வடமொழியிலும் இந்தியிலும் கலந்திருக்க வாய்ப்பு இல்லையா? அது தமிழ் மீது உள்ள நம்பிக்கையா என்று தெரியவில்லை. அதற்காக நான் தமிழை தற்காத்து பேசுவதாக எண்ண வேண்டாம்.
எடுத்துக்காட்டாக,
சங்கம் என்பது தமிழ்ச் சொல்லா அல்லது வடமொழியா?
இடைச்சங்கம்,கடைச்சங்கம், ஏன் சங்ககாலம், சங்ககாலப் புலவர்கள் என்று குறிப்பிடுகிறோமே அது எந்த மொழி என்று வினவ விரும்புகிறேன்? சங்க காலத்தில் ஏன் மன்றம்,கழகம் எல்லாம் இல்லை? விடை தெரிந்தவர்கள் சொல்லலாம்.

பேச்சு வழக்கில் இருக்கும், வெகுவாகப் பயன்படுத்த படும் சொற்களுக்காகவே இந்தப் பதிவு. மற்றபடி ஒரே நாளில் மாற்றிவிடலாம் என்று நினைக்கவில்லை.

பாண்டித்துரை said...

எனக்கு இதெல்லாம் சரிபட்டுவருமா! நம்ம ராம் மற்றும் அகரம் அமுதாவிடம் ஒரு வகுப்புக்கு சென்றால் பதிவு எழுதலாம்.

கிரி said...

//பாண்டித்துரை said...
எனக்கு இதெல்லாம் சரிபட்டுவருமா! நம்ம ராம் மற்றும் அகரம் அமுதாவிடம் ஒரு வகுப்புக்கு சென்றால் பதிவு எழுதலாம்.//

வழிமொழிகிறேன் :-)

ஜோதிபாரதி உங்கள் அளவிற்கு சிறப்பாக தமிழ் வார்த்தைகள் எனக்கு தெரியாது, இதை கூற வருத்தமாக தான் உள்ளது.

வாய்ப்பு கிடைக்கும் போது முயற்சி செய்கிறேன்

கிரி said...

//ஐயகோ! இது அரசியல் வாதிகள் மட்டும் பயன்படுத்தக் கூடிய மொழி அல்லது வார்த்தை அல்ல. //

ஹா ஹா ஹா கலக்கல்.....ஆரம்பமே அதிரடி!

//ஒரு திரைப்படத்தில் தொடக்கத்தில் ஒவ்வொரு பங்களிப்பாளர்களின் பெயர்களையும் போட்டு விட்டு இறுதியாக கதை,வசனம்,டைரக்ஷன் என்று போட்டு ஒருவருடைய பெயரைப் குறிப்பிடுவார்கள்//

நீண்ட நாட்களாக இதை நினைக்கிறேன்... ஏன் தமிழை பயன்படுத்தாமல் இருக்கிறார்கள் என்று!

//கொட்டை வடிநீர், கோப்பி என்று பயமுறுத்த வேண்டியதில்லை//

ஹா ஹா ஹா

கிரி said...

முடிந்த வரை என் பதிவில் பிழையில்லாமல் எழுத முயற்சி செய்கிறேன், அதுவே நான் தமிழுக்கு செய்யும் பெரும் தொண்டு :-)

தமிழ் said...

இதுவரை படித்த தொடர்பதிவிலே ஒரு அழகான மற்றும் அருமையான பதிவு

/வழக்கொழிந்த சொற்கள் என்னும் தொடர் பதிவில் ஐக்கியப்படுத்தி என்னையும் அந்த ஜோதியில் கலக்க வைத்தது/

இந்த ஒளியில் இணைந்துக் கொண்டதற்கு மிக்க மகிழ்ச்சி .

/மேய்ந்த பாவத்திற்காக இங்கு பரிகாரம் தேட வந்திருக்கிறேன். /

இதில் தங்கள் கலந்துக்கொண்ட காரணத்தால் தான் இவ்வளவு அருமையான இடுகையைச் சுவைக்க முடிந்தது.

இது நாங்கள் செய்த பயன் என்றே பகர வேண்டும்.

/இப்போதைய தமிழ் பேச்சு வழக்கு மற்றும் வட்டார வழக்குகளை உற்று கவனித்தால், பல்வேறு மொழிகளை உள்ளிருத்தி நம் தாய்த்தமிழை விரட்டிக் கொண்டிருப்பது அப்பட்டமாகத் தெரியும்./

சரியாகச் சொன்னீர்கள்

தமிழ் said...

தொடர் பதிவை நெடுந்தொடராக மாற்றியதற்கு மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது.

தமிழ் said...

/
உபச்சாரம்
பரிணாமங்கள்
பரிகாரம்
சாமரம்
அப்பட்டம்

//

இவை எல்லாம் நமக்கு வடமொழியா அல்லது தமிழா என்று மயக்கம்.

தேவநேயம் பாவணரின் அதிகாரம், அலங்காரம் போன்ற சொற்களின் விளக்கத்தைப் படிக்கையில் படிகாரம் போன்ற சொற்கள் எல்லாம் தமிழ் என்ற எண்ணத்தை ஏற்படுத்தும்.

சாமரை என்பதே சாமரம் என்று மாறியது.

தாமரை என்பதை மலர் என்றும்,
தா+மரை அதாவது தாவுகின்ற மான் என்றும் பொருள் கூறுவதுண்டு.

மரை என்பது மான் என்று பொருள் படும்.

விலங்குகளின் முடியைக் கொண்டு செய்யப்பட்ட காரணத்தாலே வெண்சாமரை என்றும் வெண்சாமரம் என்றும் விளம்பப் பட்டது.

தேவநேயம் பாவணரின் வழிவந்தவர்களான முனைவர் கு.அரசேந்திரன் அவர்களின் கிராமம், தருமம் போன்ற சொற்களின் விளக்கத்தை விரிவாகப் படிக்கும்பொழுது விளங்கும் அது எல்லாம் தமிழா? அதை அறியாமலே நாம் எல்லாம் இத்தனை நாட்கள் இருந்தோமா என்னும் எண்ணத்தை உள்ளத்தில் விளைவிப்பதைக் காண முடியும்.

நமக்கே தமிழை தாய்மொழியாக கொண்டு சொற்களை இனங் காணாமல் தவிக்கும் தவிப்பைப் பார்க்கையில் பிற மாநிலத்தவர் இயம்புவதை என்னவென்று உரைப்பது ?

சொற்களைப் பற்றி உரையாடல்கள் தொடரும் போது உண்மைகள் எல்லாம் உள்ளிருந்து ஒளிந்துகொள்ளவே அச்சம் கொண்டு நாம் முன்னே நிற்கும் என்பதை உணர்வோம். அதை உலகத்திற்கு உரைப்போம் என்று உறுதி கொள்வோம்

என்றும் அன்புடன்
திகழ்மிளிர்

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//பாண்டித்துரை said...
எனக்கு இதெல்லாம் சரிபட்டுவருமா! நம்ம ராம் மற்றும் அகரம் அமுதாவிடம் ஒரு வகுப்புக்கு சென்றால் பதிவு எழுதலாம்.//



நீங்கள் எழுதுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. தங்களுடைய இல்லத்தில் பயன்படுத்தப் படும் எளிய தமிழ் சொற்களைப் பகிர்ந்து கொள்ளலாம், அல்லது தங்கள் பகுதியில் வழங்கப் படும் வட்டார வழக்கைப் பகிரலாம். அதற்கு தான் பல பகுதிகளைச் சேர்ந்தவர்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறேன்.

//பாண்டித்துரை said...
எனக்கு இதெல்லாம் சரிபட்டுவருமா! நம்ம ராம் மற்றும் அகரம் அமுதாவிடம் ஒரு வகுப்புக்கு சென்றால் பதிவு எழுதலாம்.//



நீங்கள் எழுதுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. தங்களுடைய இல்லத்தில் பயன்படுத்தப் படும் எளிய தமிழ் சொற்களைப் பகிர்ந்து கொள்ளலாம், அல்லது தங்கள் பகுதியில் வழங்கப் படும் வட்டார வழக்கைப் பகிரலாம். அதற்கு தான் பல பகுதிகளைச் சேர்ந்தவர்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறேன்.

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//கிரி said...
//பாண்டித்துரை said...
எனக்கு இதெல்லாம் சரிபட்டுவருமா! நம்ம ராம் மற்றும் அகரம் அமுதாவிடம் ஒரு வகுப்புக்கு சென்றால் பதிவு எழுதலாம்.//

வழிமொழிகிறேன் :-)

ஜோதிபாரதி உங்கள் அளவிற்கு சிறப்பாக தமிழ் வார்த்தைகள் எனக்கு தெரியாது, இதை கூற வருத்தமாக தான் உள்ளது.

வாய்ப்பு கிடைக்கும் போது முயற்சி செய்கிறேன்//

எழுதுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. எழுதுங்கள்!

//கிரி said...
//பாண்டித்துரை said...
எனக்கு இதெல்லாம் சரிபட்டுவருமா! நம்ம ராம் மற்றும் அகரம் அமுதாவிடம் ஒரு வகுப்புக்கு சென்றால் பதிவு எழுதலாம்.//

வழிமொழிகிறேன் :-)

ஜோதிபாரதி உங்கள் அளவிற்கு சிறப்பாக தமிழ் வார்த்தைகள் எனக்கு தெரியாது, இதை கூற வருத்தமாக தான் உள்ளது.

வாய்ப்பு கிடைக்கும் போது முயற்சி செய்கிறேன்//

எழுதுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. எழுதுங்கள்!

Suresh Kumar said...

நன்றி ஜோதிபாரதி அவர்களே உங்கள் முயற்சிக்கு எப்போதும் நானும் உடனிருப்பேன்

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

// கோவி.கண்ணன் said...
//ஜோதி என்பது வடமொழி, என்பது தெரியாமல் பயன்படுத்த வில்லை.//

நான் அதுகுறித்து சொல்லவில்லை. உங்கள் திருநாமத்தைக் குறிப்பிட்டு சொன்னேன்
:)//

எனது பெயரையா குறிப்பிட்டீர்கள். அது வழக்கொழிந்த சொல் ஆயிற்றே!

// கோவி.கண்ணன் said...
//ஜோதி என்பது வடமொழி, என்பது தெரியாமல் பயன்படுத்த வில்லை.//

நான் அதுகுறித்து சொல்லவில்லை. உங்கள் திருநாமத்தைக் குறிப்பிட்டு சொன்னேன்
:)//

எனது பெயரையா குறிப்பிட்டீர்கள். அது வழக்கொழிந்த சொல் ஆயிற்றே!

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//கிரி said...
//ஐயகோ! இது அரசியல் வாதிகள் மட்டும் பயன்படுத்தக் கூடிய மொழி அல்லது வார்த்தை அல்ல. //

ஹா ஹா ஹா கலக்கல்.....ஆரம்பமே அதிரடி!

//ஒரு திரைப்படத்தில் தொடக்கத்தில் ஒவ்வொரு பங்களிப்பாளர்களின் பெயர்களையும் போட்டு விட்டு இறுதியாக கதை,வசனம்,டைரக்ஷன் என்று போட்டு ஒருவருடைய பெயரைப் குறிப்பிடுவார்கள்//

நீண்ட நாட்களாக இதை நினைக்கிறேன்... ஏன் தமிழை பயன்படுத்தாமல் இருக்கிறார்கள் என்று!

//கொட்டை வடிநீர், கோப்பி என்று பயமுறுத்த வேண்டியதில்லை//

ஹா ஹா ஹா
//

இதை சிறந்த கருத்துக் களமாக, விவாதக் களமாக உருவாக்கினால் பல கேள்விகளுக்கு விடை கிடைக்கும் கிரி!

//கிரி said...
//ஐயகோ! இது அரசியல் வாதிகள் மட்டும் பயன்படுத்தக் கூடிய மொழி அல்லது வார்த்தை அல்ல. //

ஹா ஹா ஹா கலக்கல்.....ஆரம்பமே அதிரடி!

//ஒரு திரைப்படத்தில் தொடக்கத்தில் ஒவ்வொரு பங்களிப்பாளர்களின் பெயர்களையும் போட்டு விட்டு இறுதியாக கதை,வசனம்,டைரக்ஷன் என்று போட்டு ஒருவருடைய பெயரைப் குறிப்பிடுவார்கள்//

நீண்ட நாட்களாக இதை நினைக்கிறேன்... ஏன் தமிழை பயன்படுத்தாமல் இருக்கிறார்கள் என்று!

//கொட்டை வடிநீர், கோப்பி என்று பயமுறுத்த வேண்டியதில்லை//

ஹா ஹா ஹா
//

இதை சிறந்த கருத்துக் களமாக, விவாதக் களமாக உருவாக்கினால் பல கேள்விகளுக்கு விடை கிடைக்கும் கிரி!

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//திகழ்மிளிர் said...
இதுவரை படித்த தொடர்பதிவிலே ஒரு அழகான மற்றும் அருமையான பதிவு

/வழக்கொழிந்த சொற்கள் என்னும் தொடர் பதிவில் ஐக்கியப்படுத்தி என்னையும் அந்த ஜோதியில் கலக்க வைத்தது/

இந்த ஒளியில் இணைந்துக் கொண்டதற்கு மிக்க மகிழ்ச்சி .

/மேய்ந்த பாவத்திற்காக இங்கு பரிகாரம் தேட வந்திருக்கிறேன். /

இதில் தங்கள் கலந்துக்கொண்ட காரணத்தால் தான் இவ்வளவு அருமையான இடுகையைச் சுவைக்க முடிந்தது.

இது நாங்கள் செய்த பயன் என்றே பகர வேண்டும்.

/இப்போதைய தமிழ் பேச்சு வழக்கு மற்றும் வட்டார வழக்குகளை உற்று கவனித்தால், பல்வேறு மொழிகளை உள்ளிருத்தி நம் தாய்த்தமிழை விரட்டிக் கொண்டிருப்பது அப்பட்டமாகத் தெரியும்.///


வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி திகழ்மிளிர்!

//திகழ்மிளிர் said...
இதுவரை படித்த தொடர்பதிவிலே ஒரு அழகான மற்றும் அருமையான பதிவு

/வழக்கொழிந்த சொற்கள் என்னும் தொடர் பதிவில் ஐக்கியப்படுத்தி என்னையும் அந்த ஜோதியில் கலக்க வைத்தது/

இந்த ஒளியில் இணைந்துக் கொண்டதற்கு மிக்க மகிழ்ச்சி .

/மேய்ந்த பாவத்திற்காக இங்கு பரிகாரம் தேட வந்திருக்கிறேன். /

இதில் தங்கள் கலந்துக்கொண்ட காரணத்தால் தான் இவ்வளவு அருமையான இடுகையைச் சுவைக்க முடிந்தது.

இது நாங்கள் செய்த பயன் என்றே பகர வேண்டும்.

/இப்போதைய தமிழ் பேச்சு வழக்கு மற்றும் வட்டார வழக்குகளை உற்று கவனித்தால், பல்வேறு மொழிகளை உள்ளிருத்தி நம் தாய்த்தமிழை விரட்டிக் கொண்டிருப்பது அப்பட்டமாகத் தெரியும்.///


வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி திகழ்மிளிர்!

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//திகழ்மிளிர் said...
/
உபச்சாரம்
பரிணாமங்கள்
பரிகாரம்
சாமரம்
அப்பட்டம்

//

இவை எல்லாம் நமக்கு வடமொழியா அல்லது தமிழா என்று மயக்கம்.

தேவநேயம் பாவணரின் அதிகாரம், அலங்காரம் போன்ற சொற்களின் விளக்கத்தைப் படிக்கையில் படிகாரம் போன்ற சொற்கள் எல்லாம் தமிழ் என்ற எண்ணத்தை ஏற்படுத்தும்.

சாமரை என்பதே சாமரம் என்று மாறியது.

தாமரை என்பதை மலர் என்றும்,
தா+மரை அதாவது தாவுகின்ற மான் என்றும் பொருள் கூறுவதுண்டு.

மரை என்பது மான் என்று பொருள் படும்.

விலங்குகளின் முடியைக் கொண்டு செய்யப்பட்ட காரணத்தாலே வெண்சாமரை என்றும் வெண்சாமரம் என்றும் விளம்பப் பட்டது.

தேவநேயம் பாவணரின் வழிவந்தவர்களான முனைவர் கு.அரசேந்திரன் அவர்களின் கிராமம், தருமம் போன்ற சொற்களின் விளக்கத்தை விரிவாகப் படிக்கும்பொழுது விளங்கும் அது எல்லாம் தமிழா? அதை அறியாமலே நாம் எல்லாம் இத்தனை நாட்கள் இருந்தோமா என்னும் எண்ணத்தை உள்ளத்தில் விளைவிப்பதைக் காண முடியும்.

நமக்கே தமிழை தாய்மொழியாக கொண்டு சொற்களை இனங் காணாமல் தவிக்கும் தவிப்பைப் பார்க்கையில் பிற மாநிலத்தவர் இயம்புவதை என்னவென்று உரைப்பது ?

சொற்களைப் பற்றி உரையாடல்கள் தொடரும் போது உண்மைகள் எல்லாம் உள்ளிருந்து ஒளிந்துகொள்ளவே அச்சம் கொண்டு நாம் முன்னே நிற்கும் என்பதை உணர்வோம். அதை உலகத்திற்கு உரைப்போம் என்று உறுதி கொள்வோம்

என்றும் அன்புடன்
திகழ்மிளிர்//



இதே போன்று பேராசிரியர் மா.நன்னன் அவர்கள் எழுதிய தமிழ் எழுத்துக்கள், எழுத்துப் பிழைகள் பற்றிய நூல் ஒன்று படித்தேன். அதில் நாம் வழக்கத்தில் பயன்படுத்திக் கொண்டிருக்கும் பல சொற்களை இன்றும் தவறாகத் தான் எழுத்துப் பிழையுடன் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம் என்பது அவரது வாதம். அவர் பரிந்துரைத்த படி எழுத ஆரம்பித்தால், நாம் எழுதுவது பிழை என்று பெரும்பாலான வாசிப்பாளர்களுக்குத் தோன்றலாம். விவாதங்களும்,கருத்துக் களங்களும், ஆதாரங்களும் மட்டுமே விடை கொடுக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை.

//திகழ்மிளிர் said...
/
உபச்சாரம்
பரிணாமங்கள்
பரிகாரம்
சாமரம்
அப்பட்டம்

//

இவை எல்லாம் நமக்கு வடமொழியா அல்லது தமிழா என்று மயக்கம்.

தேவநேயம் பாவணரின் அதிகாரம், அலங்காரம் போன்ற சொற்களின் விளக்கத்தைப் படிக்கையில் படிகாரம் போன்ற சொற்கள் எல்லாம் தமிழ் என்ற எண்ணத்தை ஏற்படுத்தும்.

சாமரை என்பதே சாமரம் என்று மாறியது.

தாமரை என்பதை மலர் என்றும்,
தா+மரை அதாவது தாவுகின்ற மான் என்றும் பொருள் கூறுவதுண்டு.

மரை என்பது மான் என்று பொருள் படும்.

விலங்குகளின் முடியைக் கொண்டு செய்யப்பட்ட காரணத்தாலே வெண்சாமரை என்றும் வெண்சாமரம் என்றும் விளம்பப் பட்டது.

தேவநேயம் பாவணரின் வழிவந்தவர்களான முனைவர் கு.அரசேந்திரன் அவர்களின் கிராமம், தருமம் போன்ற சொற்களின் விளக்கத்தை விரிவாகப் படிக்கும்பொழுது விளங்கும் அது எல்லாம் தமிழா? அதை அறியாமலே நாம் எல்லாம் இத்தனை நாட்கள் இருந்தோமா என்னும் எண்ணத்தை உள்ளத்தில் விளைவிப்பதைக் காண முடியும்.

நமக்கே தமிழை தாய்மொழியாக கொண்டு சொற்களை இனங் காணாமல் தவிக்கும் தவிப்பைப் பார்க்கையில் பிற மாநிலத்தவர் இயம்புவதை என்னவென்று உரைப்பது ?

சொற்களைப் பற்றி உரையாடல்கள் தொடரும் போது உண்மைகள் எல்லாம் உள்ளிருந்து ஒளிந்துகொள்ளவே அச்சம் கொண்டு நாம் முன்னே நிற்கும் என்பதை உணர்வோம். அதை உலகத்திற்கு உரைப்போம் என்று உறுதி கொள்வோம்

என்றும் அன்புடன்
திகழ்மிளிர்//



இதே போன்று பேராசிரியர் மா.நன்னன் அவர்கள் எழுதிய தமிழ் எழுத்துக்கள், எழுத்துப் பிழைகள் பற்றிய நூல் ஒன்று படித்தேன். அதில் நாம் வழக்கத்தில் பயன்படுத்திக் கொண்டிருக்கும் பல சொற்களை இன்றும் தவறாகத் தான் எழுத்துப் பிழையுடன் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம் என்பது அவரது வாதம். அவர் பரிந்துரைத்த படி எழுத ஆரம்பித்தால், நாம் எழுதுவது பிழை என்று பெரும்பாலான வாசிப்பாளர்களுக்குத் தோன்றலாம். விவாதங்களும்,கருத்துக் களங்களும், ஆதாரங்களும் மட்டுமே விடை கொடுக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை.

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//Suresh Kumar said...
நன்றி ஜோதிபாரதி அவர்களே உங்கள் முயற்சிக்கு எப்போதும் நானும் உடனிருப்பேன்//


அப்படியே ஆகட்டும். அதையே உங்களுக்கும் சொல்லிக் கொள்கிறேன். தாங்களும் இடுகை இட வேண்டும் என்பது எனது விருப்பம். எழுதுவீர்கள் என்று நம்புகிறேன். நன்றி!

//Suresh Kumar said...
நன்றி ஜோதிபாரதி அவர்களே உங்கள் முயற்சிக்கு எப்போதும் நானும் உடனிருப்பேன்//


அப்படியே ஆகட்டும். அதையே உங்களுக்கும் சொல்லிக் கொள்கிறேன். தாங்களும் இடுகை இட வேண்டும் என்பது எனது விருப்பம். எழுதுவீர்கள் என்று நம்புகிறேன். நன்றி!

வடுவூர் குமார் said...

நல்ல தொகுப்பு,அருமையாக இருந்தது.சிங்கை தமிழ் - சிலாப்புக்கு அர்தமே இப்போது தான் எனக்கு தெரிந்தது.

வடுவூர் குமார் said...

உங்கள் பக்கம் திறந்த உடனே கீழே போய்விடுகிறது (பயர் பாக்ஸில்),ஏதோ நீங்கள் போட்டிருக்கும் கோடு அங்கு கொண்டுபோய் விடுகிறது போல் தோன்றுகிறது,முடிந்தால் பார்க்கவும்.

na.jothi said...

நிறைய வார்த்தைகள் சொல்லியிருக்கிங்க
இந்த வார்த்தை
குழம்பி-குழப்பம்
குளம்பி-காபி

na.jothi said...
This comment has been removed by the author.
அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//smile said...

நிறைய வார்த்தைகள் சொல்லியிருக்கிங்க
இந்த வார்த்தை
குழம்பி-குழப்பம்
குளம்பி-காபி//

எழுத்துப் பிழையை சுட்டிக் காட்டியதற்கு நன்றி ஸ்மைல்!
திருத்திவிட்டேன்

//smile said...

நிறைய வார்த்தைகள் சொல்லியிருக்கிங்க
இந்த வார்த்தை
குழம்பி-குழப்பம்
குளம்பி-காபி//

எழுத்துப் பிழையை சுட்டிக் காட்டியதற்கு நன்றி ஸ்மைல்!
திருத்திவிட்டேன்

தமிழ் said...

//வடுவூர் குமார் said...

உங்கள் பக்கம் திறந்த உடனே கீழே போய்விடுகிறது (பயர் பாக்ஸில்),ஏதோ நீங்கள் போட்டிருக்கும் கோடு அங்கு கொண்டுபோய் விடுகிறது போல் தோன்றுகிறது,முடிந்தால் பார்க்கவும்.//

குமார் அவர்கள் சொல்லுவது உண்மை

தங்களின் வலைப்பதிவைப் படிக்க தொடங்குவதற்கு முன்னே
தமிழில் எழுத( எ.கா: ammaa=அம்மா)
என்ற பகுதிக்கு சென்று விடுகிறது

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//வடுவூர் குமார் said...

நல்ல தொகுப்பு,அருமையாக இருந்தது.சிங்கை தமிழ் - சிலாப்புக்கு அர்தமே இப்போது தான் எனக்கு தெரிந்தது.//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு.வடுவூர் குமார்!
நான் சிங்கைக்கு வந்து முதலில் கற்றுக் கொண்ட மலாய் சொல் சீலாப்பு.

//வடுவூர் குமார் said...

நல்ல தொகுப்பு,அருமையாக இருந்தது.சிங்கை தமிழ் - சிலாப்புக்கு அர்தமே இப்போது தான் எனக்கு தெரிந்தது.//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு.வடுவூர் குமார்!
நான் சிங்கைக்கு வந்து முதலில் கற்றுக் கொண்ட மலாய் சொல் சீலாப்பு.

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//வடுவூர் குமார் said...

உங்கள் பக்கம் திறந்த உடனே கீழே போய்விடுகிறது (பயர் பாக்ஸில்),ஏதோ நீங்கள் போட்டிருக்கும் கோடு அங்கு கொண்டுபோய் விடுகிறது போல் தோன்றுகிறது,முடிந்தால் பார்க்கவும்.//

எனக்கு பைர் பாக்ஸிலும், இன்டர்நெட் எக்ஸ்ப்லோரரிலும் சரியாகத்தான் தெரிகிறது. ஏன் உங்களுக்கு சரியாகத் தெரியவில்லை என்று தெரியவில்லையே?

//வடுவூர் குமார் said...

உங்கள் பக்கம் திறந்த உடனே கீழே போய்விடுகிறது (பயர் பாக்ஸில்),ஏதோ நீங்கள் போட்டிருக்கும் கோடு அங்கு கொண்டுபோய் விடுகிறது போல் தோன்றுகிறது,முடிந்தால் பார்க்கவும்.//

எனக்கு பைர் பாக்ஸிலும், இன்டர்நெட் எக்ஸ்ப்லோரரிலும் சரியாகத்தான் தெரிகிறது. ஏன் உங்களுக்கு சரியாகத் தெரியவில்லை என்று தெரியவில்லையே?

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//திகழ்மிளிர் said...
//வடுவூர் குமார் said...

உங்கள் பக்கம் திறந்த உடனே கீழே போய்விடுகிறது (பயர் பாக்ஸில்),ஏதோ நீங்கள் போட்டிருக்கும் கோடு அங்கு கொண்டுபோய் விடுகிறது போல் தோன்றுகிறது,முடிந்தால் பார்க்கவும்.//

குமார் அவர்கள் சொல்லுவது உண்மை

தங்களின் வலைப்பதிவைப் படிக்க தொடங்குவதற்கு முன்னே
தமிழில் எழுத( எ.கா: ammaa=அம்மா)
என்ற பகுதிக்கு சென்று விடுகிறது//

சில கேட்ஜெட்டுகளை இடமாற்றம் செய்திருக்கிறேன்.
திரும்பவும் திறந்து பார்க்கவும். எதனால் இப்படி ஏற்படுகிறது என்று தெரியவில்லை.

//திகழ்மிளிர் said...
//வடுவூர் குமார் said...

உங்கள் பக்கம் திறந்த உடனே கீழே போய்விடுகிறது (பயர் பாக்ஸில்),ஏதோ நீங்கள் போட்டிருக்கும் கோடு அங்கு கொண்டுபோய் விடுகிறது போல் தோன்றுகிறது,முடிந்தால் பார்க்கவும்.//

குமார் அவர்கள் சொல்லுவது உண்மை

தங்களின் வலைப்பதிவைப் படிக்க தொடங்குவதற்கு முன்னே
தமிழில் எழுத( எ.கா: ammaa=அம்மா)
என்ற பகுதிக்கு சென்று விடுகிறது//

சில கேட்ஜெட்டுகளை இடமாற்றம் செய்திருக்கிறேன்.
திரும்பவும் திறந்து பார்க்கவும். எதனால் இப்படி ஏற்படுகிறது என்று தெரியவில்லை.

தமிழ் said...

/இப்போது பதிவர் சந்திப்புக்கு புறப்படுகிறேன். வர இயலுமா?
மாக் ரிட்சி ரேசொர்வோயர்/

நன்றி நண்பரே

வேலையில் உள்ளேன்

தங்களின் அழைப்பிற்கு மிக்க நன்றி

உங்கள் ராட் மாதவ் said...

இதைத்தான் நான் எதிர்பார்த்திருந்தேன். அதிலும் தொடராக வருவது பெரும் மன நிறைவை அளிக்கிறது. தமிழ் இன்று பல மொழிகளின் கூடலால் கலப்படத் தமிழாகி விட்டது. நம்மால் முடிந்தவரை குறைகளை களையெடுப்போம். உங்களது முன்னார்வத்திற்கு வாழ்த்துக்கள்.

Anonymous said...

நல்ல பதிவு.
இந்த நேரத்தில் ஈழத்தமிழன் என்ற முறையில் ஒன்றைப் பெருமையுடன் சொல்ல விரும்புகிறேன்.
நாங்கள் பேசும் தமிழில் கலப்படம் குறைவு. அதிலும் தமிழகத்தில் வழக்கொழிந்து போன பல சங்க காலத் தமிழ் சொற்கள் எமது பேச்சு வழக்கில் இருப்பதாக மொழி இயல் வல்லுனர்கள் சொல்கிறார்கள்.
தமிழர்கள் பல மொழிகளையும் கற்று தமது அறிவை விருத்தி செய்ய வேண்டும் என்பதுதான் எனது கருத்து.
ஆனால் தமிழைப் பேசும்போது கூடிய வரையில் கலப்படம் செய்யமால் பேசுவது நல்லது.
தமிழ் பேசும்போது தமிழ் மாதிரிப் பேச வேண்டும். ஆங்கிலம் பேசும்போது ஆங்கிலம் மாதிரிப் பேச வேண்டும்.அதை விட்டு தங்கலீஷ் என்ற பெயரில் தமிழையும் கொலை செய்து ஆங்கிலைத்தையும் கொலை செய்கிறார்கள்.
இன்னொரு விடயம் , நாங்கள் சில வேளைகளில் தமிழ் சொற்களை வட மொழி சொற்கள் என்று தவறாகக் கருதுகிறோம்.
தமிழ், வட மொழி இரண்டுமே பழமை வாய்ந்த மொழிகள் .அதனால் எப்படி தமிழில் வடமொழியின் தாக்கம் இருந்ததோ ,அப்படியே வடமொழியிலும் தமிழின் தாக்கம் இருந்திருக்கும்.தமிழில் இருந்து வட மொழிக்குப் போன சொற்கள் திரும்பவும் தமிழுக்கு வந்திருந்தாலும் நாங்கள் அந்த சொற்களை வட மொழிச் சொற்கள் என்று கருதுகிறோம். ரிக் வேதத்தில் நிறைய திராவிட அதாவது பழந்தமிழ் சொற்கள் இருப்பதாகச் சொல்லப் படுகிறது.
பேச்சு வாக்கில் நூறு வீதம் தூய தமிழில் பேசுவது கடினம்தான்.ஆனால் கூடிய வரை எண்பது தொண்ணூறு வீதமாவது தமிழ் சொற்களைப் .பயன்படுத்துவோம்.
எந்த மொழியிலும் கிட்டத்தட்ட அறுபது வீதத்துக்கு மேலே வேற்றுமொழியின் ஆதிக்கம் உண்டானால் அந்த மொழி இன்னொரு மொழியாக உரு மாறிவிடக் கூடிய நிலைமை உண்டாகிவிடும்.
அப்படித்தான் அன்றைய பழந்தமிழ் இன்றைய மலையாளமாக மாறிவிட்டது.
அன்றைய சேர நாட்டுப் பழந்தமிழர் இன்றைய மலையாளிகளாக மாறி விட்டார்கள்.
இந்த நிலைமை திரும்பவும் வராமல் நாங்கள் தமிழ் மொழியைக் காப்பாற்ற வேண்டும்

வெண்பூ said...

ஜோதிண்ணே.. நானெல்லாம் மொக்கச்சாமிண்ணே (இதுவாவது தமிழா).. இப்படி தேடித்தேடியெல்லாம் தமிழ் வார்த்தை பேசுறவன் இல்லை, ஏன்னா தெரியாதுன்றதுதான் நிஜம்.. மற்றபடி எழுதும்போது முடிந்தவரை (எனக்குத் தெரிந்த) தமிழ் வார்த்தைகளையே உபயோகப்படுத்துறேன்.. இந்த பதிவு போடுற அளவுக்கெல்லாம் ஞானம் பத்தாது.. தப்பா நெனச்சிகாதீங்க..

தமிழ் அமுதன் said...

அருமை! வாழ்த்துக்கள்!

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//திகழ்மிளிர் said...
/இப்போது பதிவர் சந்திப்புக்கு புறப்படுகிறேன். வர இயலுமா?
மாக் ரிட்சி ரேசொர்வோயர்/

நன்றி நண்பரே

வேலையில் உள்ளேன்

தங்களின் அழைப்பிற்கு மிக்க நன்றி//

அடுத்த முறை சந்திக்கலாம் என்று நம்புகிறேன்.

//திகழ்மிளிர் said...
/இப்போது பதிவர் சந்திப்புக்கு புறப்படுகிறேன். வர இயலுமா?
மாக் ரிட்சி ரேசொர்வோயர்/

நன்றி நண்பரே

வேலையில் உள்ளேன்

தங்களின் அழைப்பிற்கு மிக்க நன்றி//

அடுத்த முறை சந்திக்கலாம் என்று நம்புகிறேன்.

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//RAD MADHAV said...
இதைத்தான் நான் எதிர்பார்த்திருந்தேன். அதிலும் தொடராக வருவது பெரும் மன நிறைவை அளிக்கிறது. தமிழ் இன்று பல மொழிகளின் கூடலால் கலப்படத் தமிழாகி விட்டது. நம்மால் முடிந்தவரை குறைகளை களையெடுப்போம். உங்களது முன்னார்வத்திற்கு வாழ்த்துக்கள்.//


தங்கள் பாராட்டுதலுக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி RAD MADHAV!

//RAD MADHAV said...
இதைத்தான் நான் எதிர்பார்த்திருந்தேன். அதிலும் தொடராக வருவது பெரும் மன நிறைவை அளிக்கிறது. தமிழ் இன்று பல மொழிகளின் கூடலால் கலப்படத் தமிழாகி விட்டது. நம்மால் முடிந்தவரை குறைகளை களையெடுப்போம். உங்களது முன்னார்வத்திற்கு வாழ்த்துக்கள்.//


தங்கள் பாராட்டுதலுக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி RAD MADHAV!

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

// sivakumar said...
நல்ல பதிவு.
இந்த நேரத்தில் ஈழத்தமிழன் என்ற முறையில் ஒன்றைப் பெருமையுடன் சொல்ல விரும்புகிறேன்.
நாங்கள் பேசும் தமிழில் கலப்படம் குறைவு. அதிலும் தமிழகத்தில் வழக்கொழிந்து போன பல சங்க காலத் தமிழ் சொற்கள் எமது பேச்சு வழக்கில் இருப்பதாக மொழி இயல் வல்லுனர்கள் சொல்கிறார்கள்.
தமிழர்கள் பல மொழிகளையும் கற்று தமது அறிவை விருத்தி செய்ய வேண்டும் என்பதுதான் எனது கருத்து.
ஆனால் தமிழைப் பேசும்போது கூடிய வரையில் கலப்படம் செய்யமால் பேசுவது நல்லது.
தமிழ் பேசும்போது தமிழ் மாதிரிப் பேச வேண்டும். ஆங்கிலம் பேசும்போது ஆங்கிலம் மாதிரிப் பேச வேண்டும்.அதை விட்டு தங்கலீஷ் என்ற பெயரில் தமிழையும் கொலை செய்து ஆங்கிலைத்தையும் கொலை செய்கிறார்கள்.
இன்னொரு விடயம் , நாங்கள் சில வேளைகளில் தமிழ் சொற்களை வட மொழி சொற்கள் என்று தவறாகக் கருதுகிறோம்.
தமிழ், வட மொழி இரண்டுமே பழமை வாய்ந்த மொழிகள் .அதனால் எப்படி தமிழில் வடமொழியின் தாக்கம் இருந்ததோ ,அப்படியே வடமொழியிலும் தமிழின் தாக்கம் இருந்திருக்கும்.தமிழில் இருந்து வட மொழிக்குப் போன சொற்கள் திரும்பவும் தமிழுக்கு வந்திருந்தாலும் நாங்கள் அந்த சொற்களை வட மொழிச் சொற்கள் என்று கருதுகிறோம். ரிக் வேதத்தில் நிறைய திராவிட அதாவது பழந்தமிழ் சொற்கள் இருப்பதாகச் சொல்லப் படுகிறது.
பேச்சு வாக்கில் நூறு வீதம் தூய தமிழில் பேசுவது கடினம்தான்.ஆனால் கூடிய வரை எண்பது தொண்ணூறு வீதமாவது தமிழ் சொற்களைப் .பயன்படுத்துவோம்.
எந்த மொழியிலும் கிட்டத்தட்ட அறுபது வீதத்துக்கு மேலே வேற்றுமொழியின் ஆதிக்கம் உண்டானால் அந்த மொழி இன்னொரு மொழியாக உரு மாறிவிடக் கூடிய நிலைமை உண்டாகிவிடும்.
அப்படித்தான் அன்றைய பழந்தமிழ் இன்றைய மலையாளமாக மாறிவிட்டது.
அன்றைய சேர நாட்டுப் பழந்தமிழர் இன்றைய மலையாளிகளாக மாறி விட்டார்கள்.
இந்த நிலைமை திரும்பவும் வராமல் நாங்கள் தமிழ் மொழியைக் காப்பாற்ற வேண்டும்//

அருமையான பின்னூட்டத்தை வழங்கியிருக்கும் திரு சிவக்குமார் அவர்களுக்கு நன்றி! உங்களது கருத்தைத் தான் நானும் கொண்டிருக்கிறேன்.

// sivakumar said...
நல்ல பதிவு.
இந்த நேரத்தில் ஈழத்தமிழன் என்ற முறையில் ஒன்றைப் பெருமையுடன் சொல்ல விரும்புகிறேன்.
நாங்கள் பேசும் தமிழில் கலப்படம் குறைவு. அதிலும் தமிழகத்தில் வழக்கொழிந்து போன பல சங்க காலத் தமிழ் சொற்கள் எமது பேச்சு வழக்கில் இருப்பதாக மொழி இயல் வல்லுனர்கள் சொல்கிறார்கள்.
தமிழர்கள் பல மொழிகளையும் கற்று தமது அறிவை விருத்தி செய்ய வேண்டும் என்பதுதான் எனது கருத்து.
ஆனால் தமிழைப் பேசும்போது கூடிய வரையில் கலப்படம் செய்யமால் பேசுவது நல்லது.
தமிழ் பேசும்போது தமிழ் மாதிரிப் பேச வேண்டும். ஆங்கிலம் பேசும்போது ஆங்கிலம் மாதிரிப் பேச வேண்டும்.அதை விட்டு தங்கலீஷ் என்ற பெயரில் தமிழையும் கொலை செய்து ஆங்கிலைத்தையும் கொலை செய்கிறார்கள்.
இன்னொரு விடயம் , நாங்கள் சில வேளைகளில் தமிழ் சொற்களை வட மொழி சொற்கள் என்று தவறாகக் கருதுகிறோம்.
தமிழ், வட மொழி இரண்டுமே பழமை வாய்ந்த மொழிகள் .அதனால் எப்படி தமிழில் வடமொழியின் தாக்கம் இருந்ததோ ,அப்படியே வடமொழியிலும் தமிழின் தாக்கம் இருந்திருக்கும்.தமிழில் இருந்து வட மொழிக்குப் போன சொற்கள் திரும்பவும் தமிழுக்கு வந்திருந்தாலும் நாங்கள் அந்த சொற்களை வட மொழிச் சொற்கள் என்று கருதுகிறோம். ரிக் வேதத்தில் நிறைய திராவிட அதாவது பழந்தமிழ் சொற்கள் இருப்பதாகச் சொல்லப் படுகிறது.
பேச்சு வாக்கில் நூறு வீதம் தூய தமிழில் பேசுவது கடினம்தான்.ஆனால் கூடிய வரை எண்பது தொண்ணூறு வீதமாவது தமிழ் சொற்களைப் .பயன்படுத்துவோம்.
எந்த மொழியிலும் கிட்டத்தட்ட அறுபது வீதத்துக்கு மேலே வேற்றுமொழியின் ஆதிக்கம் உண்டானால் அந்த மொழி இன்னொரு மொழியாக உரு மாறிவிடக் கூடிய நிலைமை உண்டாகிவிடும்.
அப்படித்தான் அன்றைய பழந்தமிழ் இன்றைய மலையாளமாக மாறிவிட்டது.
அன்றைய சேர நாட்டுப் பழந்தமிழர் இன்றைய மலையாளிகளாக மாறி விட்டார்கள்.
இந்த நிலைமை திரும்பவும் வராமல் நாங்கள் தமிழ் மொழியைக் காப்பாற்ற வேண்டும்//

அருமையான பின்னூட்டத்தை வழங்கியிருக்கும் திரு சிவக்குமார் அவர்களுக்கு நன்றி! உங்களது கருத்தைத் தான் நானும் கொண்டிருக்கிறேன்.

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//வெண்பூ said...
ஜோதிண்ணே.. நானெல்லாம் மொக்கச்சாமிண்ணே (இதுவாவது தமிழா).. இப்படி தேடித்தேடியெல்லாம் தமிழ் வார்த்தை பேசுறவன் இல்லை, ஏன்னா தெரியாதுன்றதுதான் நிஜம்.. மற்றபடி எழுதும்போது முடிந்தவரை (எனக்குத் தெரிந்த) தமிழ் வார்த்தைகளையே உபயோகப்படுத்துறேன்.. இந்த பதிவு போடுற அளவுக்கெல்லாம் ஞானம் பத்தாது.. தப்பா நெனச்சிகாதீங்க..
//

உங்கள் சிறுகதைகளைப் படித்திருக்கிறேன். நீங்கள் எழுதுவீர்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. எழுதுங்கள்!

//வெண்பூ said...
ஜோதிண்ணே.. நானெல்லாம் மொக்கச்சாமிண்ணே (இதுவாவது தமிழா).. இப்படி தேடித்தேடியெல்லாம் தமிழ் வார்த்தை பேசுறவன் இல்லை, ஏன்னா தெரியாதுன்றதுதான் நிஜம்.. மற்றபடி எழுதும்போது முடிந்தவரை (எனக்குத் தெரிந்த) தமிழ் வார்த்தைகளையே உபயோகப்படுத்துறேன்.. இந்த பதிவு போடுற அளவுக்கெல்லாம் ஞானம் பத்தாது.. தப்பா நெனச்சிகாதீங்க..
//

உங்கள் சிறுகதைகளைப் படித்திருக்கிறேன். நீங்கள் எழுதுவீர்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. எழுதுங்கள்!

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//ஜீவன் said...
அருமை! வாழ்த்துக்கள்!//



தமிழ், வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி!

//ஜீவன் said...
அருமை! வாழ்த்துக்கள்!//



தமிழ், வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி!

நிஜமா நல்லவன் said...

அருமையான பதிவு. வாழ்த்துக்கள்!

நிஜமா நல்லவன் said...

/தேடிப் பிடி(த்)தேன் தமிழை! - /

தேடிப் பிடி தேன் தமிழை!(வார்த்தையாடல் மிக நன்று)

தேடிப் படி(க்கிறேன்) தேன் தமிழை( உங்கள் வலைப்பூவில்)

நிஜமா நல்லவன் said...

/வண்ணத்துப் பூச்சியின் வலைப்பூக்களை அவ்வப்போது மேய்ந்த பாவத்திற்காக இங்கு பரிகாரம் தேட வந்திருக்கிறேன்./

பரிகாரம் நன்று.
வேற்று மொழியை பயன்படுத்துவோருக்கு மட்டும் கொஞ்சம் உங்கள் பரிகாரம் கொஞ்சம் 'காரமாக' இருக்கும்..:)

நிஜமா நல்லவன் said...

/பிரதான ஊடகமாகிய தொலைக் காட்சி தமிழைப் பிய்த்து தின்று கொண்டிருப்பது அனைவருக்கும் தெரியும்./

தொ(ல்)லைக்காட்சிகளின் அடங்காப் பசிக்கு கிடைத்த தமிழ் செய்த பாவம் தான் என்னவோ?

நிஜமா நல்லவன் said...

/தற்போது அந்தப் பணியை செவ்வனே செய்ய ஒரு சில பண்பலை வானொலிகளும், தமிழை விட்டேனா பார் என்று எழுந்திருக்கிறார்கள்./

எழுச்சி தேவை தான்....ஆனால் வீழ்ச்சிக்காக(தமிழின்) எழுச்சி பெற்றிருக்கிறார்கள் போலும்..:)

நிஜமா நல்லவன் said...

/தமிழில் மேங்கறி என்று சொன்னால் இன்னும் நன்றாக இருக்கும்./

கிராமங்களில் சில இடங்களில் இன்னமும் மேங்கறி என்ற சொல் பயன்பாட்டில் இருக்கின்றது.

நிஜமா நல்லவன் said...

/காப்பி என்ற ஆங்கில சொல்லை பயன்படுத்துவதற்கு பதிலாக குளம்பி என்ற தமிழ்ச் சொல்லைப் பயன்படுத்தலாம்./

தற்போது காப்பி என்று கூட சொல்வது இல்லை....கோப்பி தான்...:)

நிஜமா நல்லவன் said...

/இலகுவான சொற்கள் தமிழில் மலிந்து கிடக்கும் போது அதையே பயன்படுத்தலாம்/

மலிந்து கிடப்பதால் தமிழ் மலிவாகி விட்டது போலும்...:)

நிஜமா நல்லவன் said...

/லா என்பது சிவில் லாவோ, கிரிமினல் லாவோ, கம்பெனி லாவோ அல்லது ஷகிலாவோ அல்ல./

டக்கீலா விடுபட்டு இருக்கிறது....:)

நிஜமா நல்லவன் said...

உங்களுக்கு மிக்க நன்றி.

இந்த நன்றி இந்த பதிவிற்காக அல்ல... என்னையும் இதை தொடர அழைக்காததற்காக...(ஒரு வேளை
என்னை அழைத்திருந்தால் 'மெல்லத் தமிழினி சாகும்' என்பதற்கு பதிலாக 'தமிழினி உடனே சாகும்' என்றொரு சொற்றொடர் உருவாகி இருக்கும்)

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//நிஜமா நல்லவன் said...
அருமையான பதிவு. வாழ்த்துக்கள்!//

வாழ்த்துகளுக்கு நன்றி பாரதி!
பதிவை பகுதி பகுதியா பிரிச்சு விமர்சனம் செய்துள்ளது நெகிழவைக்கிறது.

//நிஜமா நல்லவன் said...
அருமையான பதிவு. வாழ்த்துக்கள்!//

வாழ்த்துகளுக்கு நன்றி பாரதி!
பதிவை பகுதி பகுதியா பிரிச்சு விமர்சனம் செய்துள்ளது நெகிழவைக்கிறது.

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

// நிஜமா நல்லவன் said...
/தேடிப் பிடி(த்)தேன் தமிழை! - /

தேடிப் பிடி தேன் தமிழை!(வார்த்தையாடல் மிக நன்று)

தேடிப் படி(க்கிறேன்) தேன் தமிழை( உங்கள் வலைப்பூவில்)
//


எனது பதிவில் தமிழை நான் ஒழித்து வைத்து விட்டேனா?

// நிஜமா நல்லவன் said...
/தேடிப் பிடி(த்)தேன் தமிழை! - /

தேடிப் பிடி தேன் தமிழை!(வார்த்தையாடல் மிக நன்று)

தேடிப் படி(க்கிறேன்) தேன் தமிழை( உங்கள் வலைப்பூவில்)
//


எனது பதிவில் தமிழை நான் ஒழித்து வைத்து விட்டேனா?

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

// நிஜமா நல்லவன் said...
/வண்ணத்துப் பூச்சியின் வலைப்பூக்களை அவ்வப்போது மேய்ந்த பாவத்திற்காக இங்கு பரிகாரம் தேட வந்திருக்கிறேன்./

பரிகாரம் நன்று.
வேற்று மொழியை பயன்படுத்துவோருக்கு மட்டும் கொஞ்சம் உங்கள் பரிகாரம் கொஞ்சம் 'காரமாக' இருக்கும்..:)//

மிகச்சரி! காரம் மட்டுமே கொண்டிருக்கும், கரம் கொண்டிருந்ததில்லை!

// நிஜமா நல்லவன் said...
/வண்ணத்துப் பூச்சியின் வலைப்பூக்களை அவ்வப்போது மேய்ந்த பாவத்திற்காக இங்கு பரிகாரம் தேட வந்திருக்கிறேன்./

பரிகாரம் நன்று.
வேற்று மொழியை பயன்படுத்துவோருக்கு மட்டும் கொஞ்சம் உங்கள் பரிகாரம் கொஞ்சம் 'காரமாக' இருக்கும்..:)//

மிகச்சரி! காரம் மட்டுமே கொண்டிருக்கும், கரம் கொண்டிருந்ததில்லை!

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//நிஜமா நல்லவன் said...
/தமிழில் மேங்கறி என்று சொன்னால் இன்னும் நன்றாக இருக்கும்./

கிராமங்களில் சில இடங்களில் இன்னமும் மேங்கறி என்ற சொல் பயன்பாட்டில் இருக்கின்றது.//

அதை எல்லோரும் பயன் படுத்த வேண்டும் என்பது எமது விருப்பம்!

//நிஜமா நல்லவன் said...
/தமிழில் மேங்கறி என்று சொன்னால் இன்னும் நன்றாக இருக்கும்./

கிராமங்களில் சில இடங்களில் இன்னமும் மேங்கறி என்ற சொல் பயன்பாட்டில் இருக்கின்றது.//

அதை எல்லோரும் பயன் படுத்த வேண்டும் என்பது எமது விருப்பம்!

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

// நிஜமா நல்லவன் said...
/இலகுவான சொற்கள் தமிழில் மலிந்து கிடக்கும் போது அதையே பயன்படுத்தலாம்/

மலிந்து கிடப்பதால் தமிழ் மலிவாகி விட்டது போலும்...:)//

மலிந்து என்பதை நிறைய என்று எடுத்துக் கொள்ளலாம். அதை சிலர் மலிவு என்று நினைத்துவிடுவது விரும்பப்பத்தக்கது அல்ல!

// நிஜமா நல்லவன் said...
/இலகுவான சொற்கள் தமிழில் மலிந்து கிடக்கும் போது அதையே பயன்படுத்தலாம்/

மலிந்து கிடப்பதால் தமிழ் மலிவாகி விட்டது போலும்...:)//

மலிந்து என்பதை நிறைய என்று எடுத்துக் கொள்ளலாம். அதை சிலர் மலிவு என்று நினைத்துவிடுவது விரும்பப்பத்தக்கது அல்ல!

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

// நிஜமா நல்லவன் said...
உங்களுக்கு மிக்க நன்றி.

இந்த நன்றி இந்த பதிவிற்காக அல்ல... என்னையும் இதை தொடர அழைக்காததற்காக...(ஒரு வேளை
என்னை அழைத்திருந்தால் 'மெல்லத் தமிழினி சாகும்' என்பதற்கு பதிலாக 'தமிழினி உடனே சாகும்' என்றொரு சொற்றொடர் உருவாகி இருக்கும்)
//
உங்களையும் இதில் சேர்த்திருக்கிறேன் நீங்களும் வழக்கொழிந்த சொற்களுக்காக ஒரு பதிவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன். தங்கள் பகுதியில் வழங்கப்படும் வட்டார வழக்கில் இடம்பெற்றால் மகிழ்வேன்!

// நிஜமா நல்லவன் said...
உங்களுக்கு மிக்க நன்றி.

இந்த நன்றி இந்த பதிவிற்காக அல்ல... என்னையும் இதை தொடர அழைக்காததற்காக...(ஒரு வேளை
என்னை அழைத்திருந்தால் 'மெல்லத் தமிழினி சாகும்' என்பதற்கு பதிலாக 'தமிழினி உடனே சாகும்' என்றொரு சொற்றொடர் உருவாகி இருக்கும்)
//
உங்களையும் இதில் சேர்த்திருக்கிறேன் நீங்களும் வழக்கொழிந்த சொற்களுக்காக ஒரு பதிவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன். தங்கள் பகுதியில் வழங்கப்படும் வட்டார வழக்கில் இடம்பெற்றால் மகிழ்வேன்!

Anonymous said...

தமிழ் இனி மெல்ல சாகும்
என்பதை தமிழ்
"இனி மெல்ல அச்சாகும்"(by computer)
எனக் கருத வேண்டும்

பழமைபேசி said...

இனிய பதிவினையொட்டி, ஆக்கப்பூர்வ மறுமொழிகள்! நன்றி நண்பா!!!

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//Anonymous said...

தமிழ் இனி மெல்ல சாகும்
என்பதை தமிழ்
"இனி மெல்ல அச்சாகும்"(by computer)
எனக் கருத வேண்டும்//


தாங்கள் சொல்வது சரி பெயரிலி அவர்களே!
கையால் எழுதுவதை மறந்து கொண்டிருக்கிறோம்.

//Anonymous said...

தமிழ் இனி மெல்ல சாகும்
என்பதை தமிழ்
"இனி மெல்ல அச்சாகும்"(by computer)
எனக் கருத வேண்டும்//


தாங்கள் சொல்வது சரி பெயரிலி அவர்களே!
கையால் எழுதுவதை மறந்து கொண்டிருக்கிறோம்.

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//பழமைபேசி said...

இனிய பதிவினையொட்டி, ஆக்கப்பூர்வ மறுமொழிகள்! நன்றி நண்பா!!!//


வருக திரு பழமைபேசி,
கருத்துக்கு நன்றி!
தாங்களும், பழைமையான, இனிமையான மறக்கப் பட்ட தமிழ்ச் சொற்களை அறிமுகப் படுத்தலாமே!

//பழமைபேசி said...

இனிய பதிவினையொட்டி, ஆக்கப்பூர்வ மறுமொழிகள்! நன்றி நண்பா!!!//


வருக திரு பழமைபேசி,
கருத்துக்கு நன்றி!
தாங்களும், பழைமையான, இனிமையான மறக்கப் பட்ட தமிழ்ச் சொற்களை அறிமுகப் படுத்தலாமே!

நட்புடன் ஜமால் said...

ஐயா! மிக்க நன்றி.

என் மேல் இவ்வளவு பாசம் வைத்ததற்கு, நானும் முயல்கிறேன்.

(முயல் வேகத்தில் தான்)

இறக்குவானை நிர்ஷன் said...

என்னையும் அழைத்தமைக்கு நன்றி ஜோதிபாரதி.
நேரம் தாருங்கள். வேலைகள் அதிகமாக உள்ளதால் திருப்தியாக எழுத முடியவில்லை. நிச்சயமாக பதில்பதிவிடுகிறேன்.

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//நட்புடன் ஜமால் said...

ஐயா! மிக்க நன்றி.

என் மேல் இவ்வளவு பாசம் வைத்ததற்கு, நானும் முயல்கிறேன்.

(முயல் வேகத்தில் தான்)//

முயலுங்கள் முடியாதது இல்லை.
நம்பிக்கை நிறையவே இருக்கிறது.
வாழ்த்துகள்!

//நட்புடன் ஜமால் said...

ஐயா! மிக்க நன்றி.

என் மேல் இவ்வளவு பாசம் வைத்ததற்கு, நானும் முயல்கிறேன்.

(முயல் வேகத்தில் தான்)//

முயலுங்கள் முடியாதது இல்லை.
நம்பிக்கை நிறையவே இருக்கிறது.
வாழ்த்துகள்!

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//இறக்குவானை நிர்ஷன் said...

என்னையும் அழைத்தமைக்கு நன்றி ஜோதிபாரதி.
நேரம் தாருங்கள். வேலைகள் அதிகமாக உள்ளதால் திருப்தியாக எழுத முடியவில்லை. நிச்சயமாக பதில்பதிவிடுகிறேன்.//

அழகிய தமிழ் பதிவிடுவீர்கள் என்று ஆவலோடு காத்திருக்கிறேன் நிர்ஷன்!

//இறக்குவானை நிர்ஷன் said...

என்னையும் அழைத்தமைக்கு நன்றி ஜோதிபாரதி.
நேரம் தாருங்கள். வேலைகள் அதிகமாக உள்ளதால் திருப்தியாக எழுத முடியவில்லை. நிச்சயமாக பதில்பதிவிடுகிறேன்.//

அழகிய தமிழ் பதிவிடுவீர்கள் என்று ஆவலோடு காத்திருக்கிறேன் நிர்ஷன்!

கிஷோர் said...

அண்ணே எழுதியாச்சு. :)

http://pathividukiren.blogspot.com/2009/03/blog-post.html

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//கிஷோர் said...

அண்ணே எழுதியாச்சு. :)

http://pathividukiren.blogspot.com/2009/03/blog-post.html//

பதிவுக்கு நன்றி கிஷோர்!
தங்கள் பதிவு அருமை!!

//கிஷோர் said...

அண்ணே எழுதியாச்சு. :)

http://pathividukiren.blogspot.com/2009/03/blog-post.html//

பதிவுக்கு நன்றி கிஷோர்!
தங்கள் பதிவு அருமை!!

வட மொழி - தமிழ் மொழி

பின் நவீனத்துவம் - பின் புதுமையியல்

அகங்காரம் - செருக்கு,இறுமாப்பு,முனைப்பு,யானெனல்

அகடவிகடம் - குறும்பு,மாற்று,மாறுபட்டது

அகதி - அறவை,வறியன்,எதிலி,புகலிலான்,யாருமற்றவன்,ஏழை

அகந்தை - இறுமாப்பு,செருக்கு

அகம் - உள்ளே,உயிர்,நான்,மனம்,மனநிலை,எண்ணம்

அகம்பாவம் - தற்பெருமை,செருக்கு

அகராதி - அகரமுதலி,அகரவரிசை,அகரநிரல்,அகரமுதல்

அகிம்சை - இன்னா செய்யாமை,கொல்லாமை

அஹிம்சை - இன்னா செய்யாமை,கொல்லாமை

அகோரம் - அழகின்மை,கொடுமை,நடுக்கம்

அக்கணம் - அப்பொழுது,அந்நொடி

அக்கரம் - எழுத்து

அட்சரம் - அழிவில்லாதது

அக்கியாணி - அறிவிலான்

அஞ்ஞானி - புல்லறிவாளன்

அக்கிரகாரம் - பார்ப்பனச் சேரி

அக்கிரமம் - ஒழுன்கின்மை,முறைகேடு

அக்கிராசனம் - முதலிருக்கை,தலைமை

அக்கினி,அக்நி - நெருப்பு,தீ,அனல்,எரி

அங்கப்பிரதட்சணம் - உடல் வலமுருளல், வலம் புரளல்

அங்கீகாரம்,அங்கீகரணம் - உடன்,செப்பு

அங்குலம் - விறக்கட்டை,விரலளவு

அசத்தை,அசத்தியம் - பொய்

அசரம்- அசைவில்லாதது,இயங்காதது,நிலையியல்

அசரீரி - வானொலி,உருவற்றது

அசித்து - பயனின்மை

அஜீரணம்,அசீரணம்- செரியாமை,பசியின்மை,அழிவுபடாமை

அசுத்தம் - அழுக்கு,துப்புரவின்மை,தூய்மையின்மை

அசேதனம் - அறிவில்லாதது,அறிவிலி,அறிவில் பொருள்

அசெளரியம் - நலமின்மை,இடைஞ்சல்

அஞ்சலி - கும்பிடல்,வணக்கம்

அஞ்சனம் - மை,கறுப்பு,இருள்

அஞ்சிட்டம் - கதிரவன்

அஞ்ஞாதம் - மறைவு,அறியப்படாதது

அஞ்ஞாத வாசஸ்தலம் - மறைந்துறைவிடம்

அட்சயப் பாத்திரம் - திருவோடு,ஏற்போடு,அள்ள அள்ளக் குறையாதது

அட்டதிக்கு பாலகர் - எண்புறக்காவலர்

அட்டபந்தனம் - எண்புறக்கட்டு

அண்டம் - முட்டை,உலகம்,வித்து,மூலம்

அதமம் - கீழ்மை,கடைத்திரம்

அதர்மம்,அதருமம் - தீவினை,அறமின்மை,மறம்

அதிகப்பிரசங்கம் - மிகுபேச்சு,தன் மேம்பாட்டுரை,மற்றொன்று விரித்தல்

அதிகாரி - அலுவலர்,தலைவன்,முதல்வன்,உடையவன்

அதிகாலம் - விடியற்காலம்

அதிகாலை - விடியற்காலம்,புலரிக்காலை

அதிஷ்டவசம் - நல்வினைப்பயன், நல்வினை வயம்

அநந்தகோடி - எண்ணத்தொலையாதன

அநந்தம் - அளவின்மை,முடிவில்லது

அநாதை - யாருமற்றவன்,தாய்தந்தையிலான்

அநித்தம்,அநித்தியம் - அழிவு,நிலையற்றது,நிலையாமை

அநீதி - முறைகேடு

அநுக்கிரகம் - அருளிரக்கம்,அருள்

அநுசரணை - சார்பு,சார்பு நிலை

அநுசிதம் - பொய்,தகாதது

அனுபவம் - பழக்கம்,வழக்கம்,நுகர்ச்சி

அனுமினம் - ஐயம்,வழியளவை,கருதலளவை

அனுமானப் புரமானம் - கருதலளவை

அநேகர் - பலர்

அந்தகன் - அழிப்போன்,குருடன்

அந்தகாரம் - இருள்,அறியாமை

அந்தக்கரணங்கள் - அகக்கருவிகள்

அந்தஸ்து - நிலைமை,ஒழுங்கு,நிலை

அந்தரம் - வான்வெளி,இடைவெளி,துணையின்மை,காலம்

அந்தி - முடிவு,மாலைக்காலம்

அந்திய கிரியை - இறுதிச் சடங்கு

அந்நியர் - பிறர்,அயலார்

அந்நியோந்நியம் - நெருக்கம்,ஒற்றுமை,ஒருவொருக்கொருவர்

அபயம் - அடைக்கலம்,அச்சமின்மை,புகலிடம்,அஞ்சேலெனல்

அபாயம் - பேரிடர்,அழிவு,கேடு,துன்பம்,இடுக்கண்,இக்கட்டு

அபாரம் - சிறப்பு,அளவின்மை,கேடு

அபிதானம் - பெயர்

அபிநயம் - நடிப்பு,கூத்து,கைமைய்காட்டல்,உள்ளக் குறிகாட்டல்

அபிப்பிராயம் - நோக்கம்,எண்ணம்,உட்கருத்து,உள்ளப்போக்கு

அபிமானம் - பற்று,நேயம்,செருக்கு

அபூர்வம் - அரிது,அருமை,அரிய பொருள்

அபேச்சை -அவா,விருப்பம்

அபேதம் - ஒற்றுமை,வேற்றுமையின்மை,வேறன்மை

அப்பியாசம் -பழக்கம்,பயிற்சி

அப்பிரதட்சிணம் - இடப்புறச் சுற்று, இடப்பக்கச் சுற்று

அமரத்துவம் - அழிவின்மை

அமலன் - துயோன்,கடவுள்,வாலறிவன்

அந்நியர் - பிறர்,அயலார்

அதிகம் - மிகுதி,அளவின்மை

அமிர்தம்,அமிருதம் - இனிமை,அருமருந்து,சாவா மருந்து,அழிவினமை

அமச்ம் - வகை,பங்கு,காலம்,எண்,அன்னப்புள்

அம்பாரம் - குவியல்

அயோக்கியம் - தகுதியினமை,தகாதது

அயோக்க்கியன் - தகுதியற்றவன்,தகவிலான்,கெட்டவன்

அரணியம் - காடு

அருச்சனை,அர்ச்சனை - வழிபாடு, பூ வழிபாடு,மலர் வழிபாடு

அருத்தம்,அர்த்தம் -பொருள்,பாதி

அருவம் - உருவின்மை,அழகின்மை

அர்த்தநாசம் - பேரழிவு,பொருளழிவு

அர்ப்பணம் - உரிமை கொடுத்தல், ஒப்புவித்தல், நீரோடு கொடுத்தல்

அலங்காரம் - அழகு,ஒப்பனை,அணி,புனைவு

அலச்சியம் - பாராமுகம்,பொருட்படுத்தாமை,கருத்தின்மை

அவகீர்த்தி - இழிவு,புகழின்மை

அவக்கியாதி - வசை,இகழ்ச்சி

அவசரம் - விரைவு,பரபரப்பு,சுருக்கு,பதைப்பு

அவசியம் - முதன்மை,கட்டாயம்,இன்றியமையாமை

அவதரித்தல் - பிறத்தல்

அவதாரம் - பிறப்பு,இறங்குகை

அவதானம் - எச்சரிக்கை,ஒழிவு,நினைவு,விரித்தல்,மறப்பின்மை

அவநம்பிக்கை - நம்ப்பிக்கைக்குறை

அவமரியாதை - முறைதவறல்,வணக்கமின்மை,தீயமுறை

அவமானம் - மானக்கேடு,இழிவு,குறைவு,இளிவரவு

அவயவம்,அவையவம் - உறுப்பு

அவலன் - உடற்குறையன்,வீணன்

அவசு,ஹவிசு - தூய உணவு,சோறு,நெய்,

அற்பம்,அல்பம் - சிறுமை,அணு,புன்மை,இழிவு

அனங்கன் - உடலிலான்,கடவுள்,காமவேள்

அனாதி - கடவுள்,தனியன்,பழமை,தொன்மை

அனுதாபம் - இரக்கம்

அனுபவம் - பழக்கம்,வழக்கம்,அழுந்தியறிதல்,பட்டறிவு

அனுமானம் - உய்த்துணர்தல்,கருதல்ளவை,வழியளவை

அனேகம் - பல,எல்லாம்

அன்னதானம் - சோற்றறம்,சோற்றுக்கொடை,உணாக்கொடை

அன்னம் - சோறு,உணவு,அடிசில்

அன்னியன் - பிறர்,அயலார்

அன்னியோன்னியம் - ஒற்றுமை,நெருக்கம்,ஒருவர்க்கொருவர்

ஆகம் -உடல்,மார்பு

ஆகரு(ர்)ஷண சக்தி - இழுப்பாற்றல்,இழுவழி,சேர்வழி

ஆகாசம்,ஆகாயம் - விண்,வெளி,வான்,விசும்பு,வர்னம்

ஆகாய விமானம் - வான ஊர்தி

ஆகாரம் - உணவு,அடிசில்,உடம்பு,வடிவு

ஆக்கியாபித்தல்,ஆஞ்ஞாபித்தல் - கட்டளையிடல்

ஆக்கிரமித்தல் - வலிந்து கவர்தல்,வலிமை காட்டல்

ஆட்சேபம் - மறுமொழி,மறுத்துக்கூறல்,தடைமொழி

ஆங்காரம் - இறுமாப்பு,செருக்கு,தருக்கு

ஆச சங்கை -ஐயம்

ஆசாபாசம் -அன்பு,பற்று,அவா

ஆசாரம் - ஒழுக்கம்,வழக்கம்,நன்னடை,வழிபாடு,துப்புரவு

ஆசியம்,ஹாசியம் - எள்ளல்,நகை,சிரிப்பு

ஆசீர்வாதம் - வாழ்த்துரை

ஆசுவாசம் - இளைப்பாறுகை

ஆசை - விருப்பம்,அவா,பற்று,வேட்கை,விழைவு

ஆச்சரியம் - புதுமை,வியப்பு,இறும்பூது

ஆ(ச்)சிரமம் - இலைக்குடில்,பாழி,முனிவருறயுள்

ஆஸ்திகம் - கடவுளுண்டெனுங்கொள்கை

ஆஸ்பத்திரி - மருத்துவச்சாலை

ஆஞ்ஞாபித்தல் -கட்டளையிடல்

ஆஞ்ஞை -ஆணை,கட்டளை

ஆடம்பரம் - ஆரவாரம்,பகட்டு

ஆட்சேபம்,ஆட்சேபனம் - தடைமொழி,மறுமொழி,எதிர்மொழி,மறுப்பு

ஆதங்கம் - ஆற்றாமை,அச்சம்,நோய்

அந்நியர் - பிறர்,அயலார்

ஆதவ(ப)ன் - பகலோன்,கதிரோன்

ஆதரவு - துணை,உதவி,சார்பு,பற்றுக்கொடு

ஆதி - முதல்,பழமை,அடி,தொடக்கம்,காரணம்,எழுவாய்,கடவுள்

ஆப்தம்,ஆத்தம் - அன்பு,நட்பு

ஆத்தானம்,ஆஸ்தானம் - நகரவாயில்,அறமன்றம்,கொடிமுடிவாயில்

ஆத்திரம்,ஆத்திரியம்,ஆத்திரவம் - உளக்கொதிப்பு,விரைவு,பரபரப்பு

ஆத்துமா,ஆன்மா - உயிர்

ஆந்ந்தம் - இன்பம்

ஆபத்து -இடர்,துன்பம்,இக்கெட்டு,ஊறுபாடு,இடுக்கண்

ஆபரணம் - அணிகலம்,இழை,நகை,அணி,பூண்

ஆபாசம் - அருவருப்பு,சிதைவு,கெடுதல்,பொய்,அளவைப்பொலி

அபூர்வம் - வினைப்பயன்

ஆமோதித்தல் - உடன்படல்,வழிமொழிதல்,மகிழ்தல்

ஆயக்கட்டு(துளுவம்) - மொத்த நஞ்சை நிலம்,களப்புரவு

ஆயத்தம்(இந்தி) - முயற்சி,எத்தனம்,முன்னேற்பாடு

ஆயா(போர்ச்சுக்கீஸ்) - செவலித்தாய்,கைத்தாய்

ஆயாசம்,ஆயாஸம் - களைப்பு,இளைப்பு,சோர்வு,அயர்வு,மயக்கம்

ஆயுசு,ஆயுள் - வாழ்நாள்,ஆண்டு

ஆயுதம் - கருவு,படைக்கலம்,படை,வாள்

ஆரணியம்,ஆரண்ணியம் - காடு

ஆரம்,ஹாரம் - பூமாலை,தொடையல்

ஆரம்பம் - தொடக்கம்

ஆரம்பித்தல் - தொடங்கல்

ஆராதனம் - வணக்கம்,மகிழ்வித்தல்

ஆரோகம்,ஆரோபம்,ஆரோக்கியஸ்நானம் - நல முழுக்கு,நோய் தீர்ந்தபின் முழுகல்

ஆரோக்கியம் - நலம்,நோயின்மை

ஆரோபணம்- நாட்டுதல்,ஏற்றுதல்

ஆரோபித்தல் - ஏற்றுதல்

ஆர்ச்சிதம் - தேட்டம்,தேடிய பொருள்

ஆர்மோனியம் - இசைக்கருவி

ஆர்வம் - அன்பு,விருப்பம்

ஆலகண்டண் - சிவன்,நஞ்சுமிடற்றன்,கறைமிடற்றன்

ஆலகம்- நெல்லிமரம்

ஆலம் - நஞ்சு

ஆலயம் - கோயில்

ஆலாபம்,ஆலாபனம் - அலப்பு,பேச்சு,உரையாடல்

ஆலோசனை - சூழ்தல்,சூழ்ச்சி,ஓர்வு,எண்ணம்,ஆராய்ச்சி

ஆவசியம் - கட்டாயம்,முதன்மை,இன்றியமையாமை

ஆவத்து,ஆபத்து - இக்கெட்டு,இடர்,பொல்லாங்கு

ஆவர்த்தி,ஆவருத்தம்,ஆவிருத்தி - தடவை,வரிசை,சுற்று,வழக்கம்

ஆவாகனம் - அழைத்தல்,உட்புகல்

ஆனந்தபரவசம் - இன்பக்களிப்பு,பேரின்பக்களிப்பு

ஆனந்தம் - இன்பம்,பேரின்பம்

ஆன்மா - உயிர்

இகம் - இவ்வுலகம்,இவ்விடம்,இப்பிறப்பு

இங்கிதம் - இனிமை,அடையாளம்,கருத்து,இடம் பொருள்

இச்சகம் - முகமன்

இச்சை - விருப்பம்,அவா,விழைவு,வேட்கை

இடபம்,ரிஷபம் - எருது,காளை,ஏறு,விடை

இட்டசித்தி - விருப்பப்பேறு

இதம்,ஹிதம் - இனிமை,நன்மை,அன்பு,அறம்

இதயம்,இதையம்,ஹிருதயம் - நெஞ்சம்,உள்ளம்

இதரம் - வேறு,இயல்,அழிவு,பகைமை

இதிகாசம் - பண்டை வரலாறு,பழங்கதை

இந்திர ஜாலம் - இமயவர்கோன்,வானவர் தலைவன்

இந்து - நிலா,திங்கள்,அம்புலி

இமாலயம்,ஹிமாலயம் - பனிமலை

இரகசியம் - மறைபொருள்,மறை,அற்றம்

இராசாபாசம் - அருவருப்பு,ஒழுங்கின்மை

இரசாயனம் - பொருளியைபு

இரட்சகம் - பாதுகாப்பு,மீட்பு

இரட்சை - காப்பு

இரணம்,ரணம் - புண்

இரதம்,ரதம் - தேர்

இரத்தம் - குருதி,செந்நீர்

இரத்தினம்,ரத்தினம் - மாமணி,செம்மணி

இரம்பம்,ரம்பம் - ஈர்வாள்

இராகம்,ராகம் - இசை,பண்,அவா,விருப்பு

இராகு - கருங்கோள்

இராக்கதர் - அரக்கர்

இராசசூயம் - அரசர் வேள்வி

இராசா - அரையன்,மன்னன்,அரசன்

இராச்சியம் - நாடு,அரசியல்

இராத்திரி - இரவு,கங்குல்

இருஷி,இருடி - முனிவன்,தவசி,துறவி

இதய கமலம் - நெஞ்சத்தாமரை

இருது - பருவம்,மகளிர் முதற்பூப்பு

இரேகை - வரி,எழுத்து,கையிறை,நிறை,தொடர்

இலகிரி,லகிரி,லாகிரி - வெறி,மயக்கம்

இலகு,லகு - எளிது,நொய்மை,நுண்மை,ஈரம்,பலா மரம்

இலங்கணம் - பட்டினி

இலஞ்சம் - கைக்கூலி,கையூட்டு,கையுறை

இலட்சணம்,லட்சணம் - அழகு,பார்வை

இலயித்தல் - ஒடுங்குதல்,சேர்ந்தொன்றித்தல்

இலெளகீகம்,இலவுகீகம் - உலகியல்,உலகப்போக்கு

இலாஞ்சனம்,இலாஞ்சனை - புகழ்,அடியாளம்,கறை

இலாபம்,லாபம் - ஊதியம்,மிச்சம்,பேறு

இலீலை,லீலை - விளையாட்டு

யுகம்,உகம் - உலக முடிவு,இரண்டு

உக்கிராணம் -களஞ்சியம்,சரக்கறை

உஷ்ணம் - வெப்பம்,சூடு

உசிதம் - உயர்வு,சிறப்பு,மேன்மை,தகுதி,ஒழுங்கு

உசிதன் - தக்கோன்

உச்சம் - உயர்ச்சி,சிறப்பு

உச்சரித்தல் - சொல்லுதல்,ஒலித்தல்,ஓதல்

உச்சரிப்பு - எழுத்தோசை

உச்சாட்டியம் - பேய கற்றல்,ஒட்டுதல்

உச்சி - மேடு,முகடு

உச்சிக்காலம்,உச்சிச்சமயம் - நண் பகல், நடுப் பகல்

உதயன் - பகலோன்

உதாரணம்,திருட்டாந்தம் - எடுத்துக்காட்டு,சான்று

உத்தமம் - உண்மை,மேன்மை

உத்தரியம்,உத்தரீயம் - மேலாடை

உத்தரவு - கட்டளை

உத்தி,யுத்தி - அறிவு,இணக்கம்,இசைவு,சூழ்ச்சி,சொல்

உத்தேசம்,உத்தேகம் - கருத்து,மதிப்பு,ஏறக்குறைய

உபகரணம் - கொடுத்தல்,உதபிபொருள்கள்,கருவி,துணைக்காரணம்

உபதேசம் - அருண்மொழி,அறிவுரை

உபயம் - உதவி,நன்கொடை,இரண்டு

உபாசநம்,உபாசநை,உபாசனை - வழிபாடு,வணக்கம்

உபாதி,உபாதை - நோய்,துன்பம்,வருத்தம்

உபாத்தியாயன் - கணக்காயன்,ஆசிரியன்,கற்பிப்போன்

உபாயம் - சூழ்ச்சி,நொய்மை,எளிது,சிறிது

உயுக்கம்,உயுத்தம்,யுத்தம் - போர்,தகுதி

உருசி,ருசி - சுவை

உருத்திராக்கம் - சிவமணி,சுக்குமணி

உரூபம்,ரூபம் - உருவம்,வடிவம்

உரொக்கம்,ரொக்கம் - கைப்பணம்,இருப்பு,கையிருப்பு

உரோமம்,ரோமம் - மயிர்,முடி,குஞ்சி

உல்லாசம் - மகிழ்ச்சி,விளையாட்டு,களிப்பு,உள்ளக்களிப்பு

உவதி,யுவதி, - மங்கை,பதினாறாண்டுப் பெண்

ஊகம் - கருதல்,ஓர்தல்,கருத்து,நினைவு

ஊர்ச்சிதம்,ஊர்ஜ்ஜிதம் - உட்பொருளுணர்தல், நிலைப்படுதல்,உறுதி,கருங்குரங்கு

எசமானன்,எஜமான் - தலைவன்,முதல்வன்,முதலாளி

எந்திரம் - பொறி

எமன் - கூற்றுவன்,மறலி

ஏகதேசம் - ஒருபால்,ஒருபுடை,சிறுபான்மை

ஏகம் - ஒன்று,தனிமை

ஏகாந்தம் - தனிமை,ஒரு முடிவு

ஏகோபித்தல் - ஒன்றுபடுதல்

ஏடணை,ஏஷணை - விருப்பம்

ஐது,ஹேது - காரணம்

ஏக்கம்,ஐக்கியம் - ஒற்றுமை

ஐஸ்வர்யம்,ஐச்வரியம் - செல்வம்,பொருள்,திரு

ஐதீகம்,ஐதிகம் - உலகுரை

ஐம் பூதம்,பஞ்ச பூதம் - ஐந்து முதற்பொருள்

ஓமம்,ஹோமம் - வேள்வி

ஒளடதம்,ஒளஷதம்- மருந்து

களோகம் - வான் வட்டம்,வளி மண்டலம்

கடகம் - கைவளை,வளையம்

கடம் - கடம்,யானைக்கதுப்பு

கடாட்சித்தல் - அருளல்

கடாரம் - கொப்பரை,தேங்காய்

கடிகாரம் - நாழிகை வட்டில்,பொழுது காட்டுங்கருவி

கடிகை - நாழிகை,தாழ்க்கோல்

கடினசித்தம் - வன்னெஞ்சம்

கடினம் - வன்மை,கடுமை,வருத்தம்,கொடுமை

கடூரம்,கொடூரம் - கொடுமை

கட்டம்,கஷ்டம் - துன்பம்,வருத்தம்

கணம்,ஹணம் - குழாம்,கூட்டம்,தொகுதி,நொடிப்பொழுது

கணி - கோள் நூல், கோல் நூல் வல்லான்

கணிகை - பொதுமகள்

கணிசம் - அளவு,மேம்பாடு

கணிதம் - கணக்கு

கண்டம் - நிலப்பிரிவு,துண்டு,கட்டி,மிடறு,கழுத்து

கண்திட்டி,கண்திருஷ்டி - கண்ணேறு

கதம்பகம்,கதம்பம் - கூட்டம்,மணப்பொருட் கூட்டு,சேர்ந்தது,இணைத்தது

கதலி - வாழை

கதி - நடை,செலவு,வழி,புகலிடம்,பற்றுக்கோடு,நிலை

கனகம்,கநகம் - பொன்

கனவான்,கநவான் - பெரியோன்,பெருமையாளன்,பெருந்தகை

கனிஷ்டை,கநிஷ்டை - பின்னோள்,தங்கை

கன்னிகை,கந்நிகை - மணமாகாதவள்,இளம்பெண்

கந்மம்,கருமம் - தொழில்,வினை

கபடம்,கவடம்,கபடு - கரவு,படிறு,வஞ்சகம்,மோசம்,சூது,ஒளிப்பு

கபாலம் - தலையோடு,மண்டையோடு

கபோதி - குருடன்

கப்பம் - இறை

கமண்டலம் - நீர்க்குடுவை

கமலம் - தாமரை,நீர்

கம்பீரம் - உயர்தோற்றம்,பெருமை,ஆழம்,செருக்கு

கயம்,ஹயம் - குளம்,ஆழம்,யானை

கரகம் - வட்டில்,நீர்க்குடுவை

கரகோசம்,கரகோஷம் - கைதட்டுதல்

கரணம் - கருவி,ஐம்பொறி

கரம் - கை

கருச் சித்தல் - முழங்கல்,இரைதல்

கருணை - அருள்,இரக்கம்

கர்த்தா,கருத்தா - தலைவன்,வினைமுதல்,ஆக்கியோன்,நூலாசிரியன்,முதல்வன்,கடவுள்

கர்ப்பவதி - சூலி

கர்ப்பாசயம் - கருப்பை

கர்வம் - செருக்கு,இறுமாப்பு

கலாபம்,கலபம் - மயில்,மயிற்றோகை

கலி - வறுமை,துன்பம்

கலியாணம் - மனம்,மன்றல்,பொன்,மகிழ்ச்சி

கவளீகரித்தல்,கபளீகரம்,கபளீகரித்தல் - முற்றிலும் விழுங்குதல்,விழுங்குதல்

கவனம் - கருத்து நோக்கம்,உன்னித்தல்

கவாத்து - படைக்கலப் பயிற்சி,வெட்டி விடுதல்

கவி - செய்யுள்,புலவன்,பாட்டு

கவுளி,கெளளி - பல்லி

களேபரம் - குழப்பம்,உடல்,பிணம்

கற்பம் - ஊழிக்காலம்,நெடுவாழ்க்கை மருந்து

கனம் - சுமை,பளு,பளுவு

காசம் - ஈளை,ஈளைநோய்,இருமல் நோய்

கசாயம்,கஷாயம் - காவி

காஞ்சிரம் - எட்டி மரம்

காட்டம்,காஷ்டம் - விறகு,வெகுளி

காதகன் - கொலையாளி

காயசித்தி - நீடுவாழ்ப் பேறு

காயம் - உடல்,யாக்கை,வான்

காரிய கர்த்தா - வினைமுதல்வன்

காரியதரிசி - அமைச்சன்,செயலாளன்

கலாட்சேபம் - பொழுதுபோக்கல்,நாட்கழித்தல்,வாழ்க்கை

கால நியமம் - காலமுறை,காலக்கடன்,கால்,ஒழுங்கு

கிஸ்தி - திறை,வரி

கிரகணம்,கிராணம் - பற்றுதல்,பிடித்தல்

கிரகஸ்தம் - இல்லற நிலை

கிரகம் - வீடு,கோள்,பற்றுதல்,பிடிப்பு

கிரணம் - ஒளி,கதிர்

கிரந்தம் - நூல்,எழுத்து

கிரமம் - ஒழுங்கு,முறைமை

கிரயம் - விலை

கிராதன் - குறவன்,வேட்டுவன்

கிரி - மலை,பன்றி

கிரிகை - தொழில்,செயல்,வினை,சடங்கு

கிரிமி,கிருமி - உயிரி,பூச்சி,புழு

கிரீடம் - முடி

கிருஷி - பயிர்,உழவு,பயிர் செய்கை

கிலம் - கழிவு,அழிவு,சிறுமை

கிலேசம் - அச்சம்,கவலை,துன்பம்

கீதம் - இசை,பாட்டு,பாடல்,இசைப்பாட்டு

கீர்த்தனம்,கீர்த்தனை - புகழ்ச்சி,புகழ்ப்பா

கீலகம் - ஆணி,பொருத்து

குஞ்சரம் - யானை

குஷ்டம் - தொழு நோய்,பெரு நோய்

குணஷ்டை - தொல்லை,துன்பம்

குதர்க்கம் - அழிவழக்கு

குதூகலம்,குதுகலம் - பெருங்களிப்பு,பெருமகிழ்வு

குபேரன் - பெருஞ்செல்வன்,செல்வக்கடவுள்

குமரி,குமாரி - நங்கை,மணமாகாப்பெண்,புதல்வி,மகள்

கும்பம் - குடம்

குருகடாட்சம் - ஆசிரியனருட்பார்வை

குரோதம் - உட்பகை

குலாலன் - குயவன்

குலிசம் - வேற்படை

குன்மம் - சூலை,வயிற்று வலி

கேதம் - துன்பம்,இடர்,குற்றம்

கேவலம் - சிறுமை,தனிமை

கோகிலம் - குயில்

கோடம்,கோஷம்,கோஷ்டம் - முழக்கம்,பேரோசை

கோஷ்டி - கூட்டம்

கோடி - நூறு நூறாயிரம்

கோதண்டம் - வில்

கோளகை,கோளம் - உருண்டை,வட்டம்

கெளரவம் - மேன்மை,பெருமை

சக - கூட,உடன்

சகசம்,ஸகஸம் - இயற்கை,ஒற்றுமை

சகஸ்ரநாமம் - ஆயிரந்திருமொழி,ஆயிரந்திருப்பெயர்

சகமார்க்கம் - தோழமை நெறி

சகலம் - எல்லாம்

சகவாசம் - கூடவிருத்தல்,உடனுரைதல்,பழக்கம்,சேர்க்கை,நட்பு

சகா - தோழன்,துணை

சகாப்தம் - ஆண்டு,நூறாண்டு

சகாயம் - நயம்,நன்மை,மலிவு,பயன்,உதவி,துணை

சகி,சகீ - தோழி

சகிதம் - உடன்

சகுணம் - குணத்தோடு கூடியது

சகுந்தம் - கழுகு,பறவை

சகுனம் - குறி

சகோதரம் - உடன்பிறப்பு

சகோதரி - உடன்பிறந்தாள்

சக்கரம் - உருளை,வட்டம்

சக்தி - ஆற்றல்,வல்லமை,வலி

சங்கடம்,சங்கட்டம் - இக்கெட்டு,நெருக்கடி,இடர்,கண்மூடுதல்

சங்கிதை - தொகுதி,வரலாறு

சடுதி,சடிதி - விரைவு

சஷ்டியப்த பூர்த்தி - அறுபதாமாண்டு நிறைவு

சண்டப்பிரசண்டம் - மிகு விரைவு

சண்டமாருதம் - பெருங்காற்று,கடியகாற்று,புயற்காற்று

சண்டாளம் - தீமை,புலைத்தன்மை,நம்பிக்கை கேடு

சண்டாளர் - தீவினையாளர்,இழிஞர்

சண்டித்தனம் - முருட்டுத்தன்மை,முரட்டுத்தன்மை

சதகோடி - நூறு கோடி

சதசு - அவை

சதம் - நூறு நிலை

சதானந்தம் - இடையறா வின்பம்

சதி - இறைவி,அழிவு,வஞ்சனை,சூழ்ச்சி

சந்தகம் - எப்பொழுதும்

சந்தானம் - வழி,வழித்தொடர்பு

சந்தித்தல் - எதிர்படுதல்,கூடுதல்

சந்திரலோகம் - திங்கள் உலகு,அம்புலியுலகம்

சந்திரன் - பிறை,கலையோன்,இரவோன்,அலவன்,அல்லோன்

சந்து - முடுக்கு,இயங்கும் உயிர்,தூது,பிளப்பு,பொருத்து

சந்துட்டம்,சந்துஷ்டி,சந்தோஷம் - மகிழ்ச்சி

சந்தேகம் - ஐயம்,ஐயுறவு

சந்தோஷம் - மகிழ்ச்சி,உவகை,களிப்பு

சன்னதி,சந்நதி,சந்நிதானம் - திருமுன்

சந்நியாசம் - துறவு,துறவறம்

சபதம் - ஆணை,உறுதிமொழி,வஞ்சினம்

சபம்,ஜெபம் - உருவேற்றல்

சபலம் - நிறைவேறல்,வெற்றி,நடுக்கம்,ஏக்கம்,இச்சை,அவா

சபா,சபை - அவை,மன்றம்,கழகம்,அரங்கம்

சபித்தல் - தீமொழி கூறல்,சினந்துரைத்தல்

சமஷ்டி - தொகுதி,எல்லாம்

சமதை - ஒப்பு

சமர்த்தன்,சமத்தன் - வல்லான்,வல்லவன்,திறமையாளன்

சமஸ்தானம்,சமத்தானம் - அரசவை,தலை நகர்

சமம் - இணை,ஈடு,மட்டம்,போர்,நடு,ஓர்மை

சமரச தத்துவம் - பொதுநிலையுண்மை

சமரசம் - பொது,வேறுபாடின்மை,ஒற்றுமை

சமர்ப்பணம் - ஒப்பித்தல்,உயர்ந்தோர்க்குக் கொடுத்தல்

சமாதானம் - அமைதி,இணக்கம்,தணிவு,உடன்பாடு,தக்கவிடை

சமாதி - அமைதி,பிணக்குழி,பேசாதிருத்தல்,இறப்பு,மரித்தல்

சமாப்தம்,சமாப்தி - முற்றுப்பெற்றது

சமாராதனை - உளநிறைவு

சமி,ஷமி - பொறு

சமிதை - வேள்வி விறகு,உலர்ந்த குச்சி

சமீபம் - அருகு,அணமை,மருங்கு

சமீன்தார்,ஜமீந்தார் - நிலக்காரன்,பெருநிலக்கிழார்

சமுதாயம் - குமுகம்,கூட்டம்

சமுத்திரம் - கடல்

சமை,ஷமை - பொறுமை

சம்சாரம்,சம்ஸாரம் - குடும்பம்,இல்லாள்,இல்லத்தரசி

சம்பத்து - செல்வம்,பொருள்

சம்பந்தம -உறவு,பற்று,இயைபு,சார்பு,தொடர்பு,பொருத்தம்

சம்பிரதாயம் - தொல்வழக்கு,முன்னோர் முறை,பண்டை முறை

சம்பு ரேட்சணம் - தெளித்தல்

சம்பூரணம் - நிறைவு

சம்மதம் - உடன்பாடு,ஒப்புமை,இயைபு

சம்ரஷணை - பாதுகாப்பு

சயம்,ஜெயம் - வெற்றி

சரணம்,சரண் -அடைக்கலம்,வணக்கம்,கால்,திருவடி

சரணாகதி - புகலடைதல்,அடைக்கலம்

சராசரம்,ஜங்கமா - இயங்கியற் பொருள், நிலையியற் பொருள்

சரிதம்,சரிதை,சரித்திரம் - வரலாறு

சரீரம் - உடல்,யாக்கை,மெய்

சருமம்,சர்மம் - தோல்

சர்ப்பம் - பாம்பு

சர்வகலாசாலை -

பல்கழைக் கழகம்

சலதளம்- அரசமரம்

சலதாரை - நீர்க்கால்,நீரோட்டம்,மதகு

சலதோசம் - நீர்க்கோர்வை,தடுமம், நீர்க்கோவை

சல்லாபம் - உரையாடல்

சவம் - பிணம்

சவுகரியம்,செளக்கியம்,செளகரியம் -நலம்

சவுந்தரியம்,செளந்தரியம்,சவுந்தரம் - அழகு

செளபாக்கியம்,சவுபாக்கியம் - செல்வம்

சற்காரியம் - உற்பொருளினின்று தோன்றும் வினை

சற்குணம் - நல்லியல்பு

சனனம்,ஜனனம்,சனிப்பு,சன்மம் - பிறப்பு

சாகசம் - ஆற்றல்,துணிவு,நெருக்கிடை

சாகரம் - கடல்

சாகுபடி - பயிர் செய்தல்

சாகை,ஜாகை(உருது) - தங்குமிடம்

சாக்கிரதை,ஜாக்கிரதை - விழிப்பு,உன்னிப்பு,எச்சரிக்கை