Wednesday, October 15, 2008

கனிமொழி ராஜினாமா ஒரு அரசியல் காய் நகர்த்தல்!


கனிமொழி ராஜினாமா ஒரு அரசியல் காய் நகர்த்தல்.

நேற்று, அனைத்துக் கட்சி கூட்டத்தில் இரண்டு வாரத்தில் இலங்கையில் தமிழர்களைத் தாக்குவதை இந்திய மத்திய அரசு தடுத்து நிறுத்தாவிட்டால் தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து எம்.பிக்களும் ராஜினாமா செய்வார்கள் என்று தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறார்கள். இதில் ம.தி.மு.க வைச் சேர்ந்த இரண்டு எம்.பிக்களும் அடங்குவார்களா என்று தெரிய வில்லை. திரு.எல்.கணேசனும் செஞ்சியும் மட்டுமே கூட்டத்தில் கலந்து கொண்டிருக்கிறார்கள். அ.தி.மு.க. வைப் பொருத்தவரை அவர்களும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. அவர்களிடமும் சில ராஜ்ய சபை எம்.பிக்கள் இருக்கிறார்கள். அனைத்துக் கட்சிக்கூட்டம் ஒரு காலம் கடந்த முயற்சியாக இருந்தாலும். இதில் அ.தி.மு.கவும், ம.தி.மு.க வும் கலந்து கொள்ளாதது வருந்தத்தக்கது. அ.தி.மு.க. சமீப காலமாக மட்டுமே ஈழத்தமிருக்காகக் வெளிப்படையாகக் குரல் கொடுக்கிறது. ம.தி.மு.க வைப் பொறுத்தவரை அந்த கட்சியும் அதன் பொதுச் செயலாளருமான திரு.வைகோ அக்காலந்தொட்டே இலங்கைத் தமிழர்களுக்காகக் குரல் கொடுத்து வருகிறார்கள்.

இதில் என்னுடைய சில கேள்விகளை இங்கு பதிவு செய்ய விருபுகிறேன்.

1) ஈழத்தமிழர்களுக்காக எத்தனை முறை தமிழக எம்.பிக்கள் (ம.தி.மு.க நீங்கலாக) பிரதமரையும், மத்திய அரசாங்கத்தின் அதிகார பீடம் திருமதி.சோனியாவையும் சந்தித்திருக்கிறார்கள். என்னவெல்லாம் எடுத்துச்சொல்லியிருக்கிறார்கள்?

2)மத்திய அரசின் துறையைத் தக்கவைத்துக் கொள்ள தில்லி சென்று அதிகார பீடத்தைச் சந்திக்க முடிகிறது. குடியரசு தலைவர் தேர்தலில் பொதுவுடமை வாதிகளை சந்தித்து சமரசம் செய்ய தில்லி செல்ல முடிகிறது. நம் இனம் பக்கத்து நாட்டில் அழிக்கப் படுகிறது. அதற்கு இந்திய அரசு ராணுவத் தொழில் நுட்ப உதவியும், ஆயுத உதவியும் செய்கிறது. இதை ஓராண்டுக்கு முன்னர், இந்திய ராணுவத் தளபதியே பகிரங்கமாக காஷ்மீரில் தெரிவித்திருக்கிறார். அப்போது ஏன் மத்திய அரசை இவர்கள் நிர்பந்தம் செய்ய வில்லை? அப்போது தில்லி செல்ல விமான வசதி இல்லையா? அப்போது நாற்பது எம்.பிக்கள், ராஜ்ய சபா எம்.பிக்கள் மற்றும் தமிழக அரசும் எந்த பக்கம் தூங்கிக் கொண்டு இருந்தனர்?

3) இலங்கையில் செஞ்சோலையில் பள்ளிக் குழ்ந்தைகளைக் படுகொலை செய்தபோது, தமிழக அரசும், தமிழக அரசியல் வாதிகளும் செய்து கொண்டு இருந்தது என்ன? (ஒரு சிலர் இதற்கு விதிவிலக்கு) அதை அனைத்துலக சமுதாயத்தின் கவனத்திற்கு சரியான முறையில் கொண்டு செல்லாதது ஏன்?

4) இலங்கையில் தமிழர்களைப் படுகொலை செய்து குப்பை வண்டியில் ஏற்றிக் கொண்டு சென்றபோது, வெளிப்படையாக மனித உரிமை மீறல், இனப்படுகொலை நடந்ததே.(வெகு சன ஊடகங்களில் படம் வந்தது) அப்போது இவர்கள் தூங்கியது எங்கே?

5) இலங்கையைச் சேர்ந்தவர்களுக்கு தமிழகத்தில் பயிற்சி வழங்கப்பட்டதே. அது தமிழக அரசுக்கு தெரியாமல் போனது எப்படி? சமீபத்தில் வட இந்தியாவில் ஒரு மாநிலத்தில் இலங்கை ராணுவத்தினருக்குப் பயிற்சி அளிக்கப் பட்டதே. அப்போது இவர்கள் செய்தது என்ன?

6)திரு பழ.நெடுமாறன் அவர்கள் மனிதாபிமான உணர்வுடன் ஈழத்தமிழர்களுக்காகத் திரட்டிய உணவுபொருட்கள், ஆடைகளை செஞ்சிலுவை சங்கம் மூலமாக அனுப்ப அனுமதிக்காது, தானே கொண்டு செல்கிறேன் என்றவரை கைது செய்தது ஏன்? அப்போது உங்கள் இன உணர்வு, மனிதாபிமான உணர்வு எங்கே போனது?

இப்படி நிறைய கேள்விகளைக் கேட்டுக் கொண்டே போகலாம். ஆனால் இதில் எந்த கேள்விக்கும் உங்களிடத்தில் பதில் இல்லை என்பது தெரியும்.

இருப்பினும், தற்போது தூங்கிக் கொண்டிருந்த பூனைக்கு பெரிய மணி கட்டிய திரு.தா.பாண்டியன் அய்யாவை மனதார வாழ்த்துகிறேன். தூங்கிக் கொண்டிருந்த உங்கள் முகத்தில், தண்ணியை ஊற்றி முதலில் எழும்பிய தா.பாண்டியன் அய்யாவை நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறேன்.
இதில் கனிமொழி எங்கே வருகிறார் என்று கேட்பது தெரிகிறது.
அனைத்து கட்சி எம்.பிக்கள் ராஜினாமா முடிவு, நாடாளுமன்ற தேர்தல் விரைவில் வருவதால் எடுத்த முடிவு என்றே கருதுகிறேன்.
கனிமொழி ராஜினாமா என்பது, மேற்கூறியவற்றை பொய்யாக்கும் ஒரு நாடகம்.(அவர் ராஜ்ய சபா எம்.பி) அவருடைய ராஜினாமா, ராஜ்யசபாத் தலைவர் அன்சாரிக்கு அனுப்பப் பட வேண்டும். கலைஞருக்கு அனுப்பப் பட்டது, அதை ஊடகங்களுக்குத் தெரிவித்தது எல்லாம் கேலிக்கூத்து!

51 கருத்துக்கள்:

அத்திரி said...

நச் கேள்விகள். எல்லாமே வயித்துக்குத்தாண்டா அதே மாதிரி தான் எல்லாமே அரசியல்தான். தன் கட்சிக்காரனுக்கு மந்திரி பதவினா 100 தடவைனாலும் டெல்லிக்கு காவடி தூக்க தயார். தேர்தல் வரும்போதுதான் ஈழத்தமிழன் ஞாபகம் வரும்.

Anonymous said...

எல்லாமே அரசியல்தான்...repeat

Anonymous said...

திரு தா. பாண்டியனின் ஈ மெயில் தெரிந்தால் தரவும். ஒரு வார்த்தை நன்றி சொல்ல வேண்டும்.

ஒரு ஈழத்துத் தமிழன்

Rajaraman said...

கனிமொழி ராஜினாமா மிகப்பெரிய அரசியல் Stunt. அவர் Spectrum ஊழலில் வகையாக மாட்டிகொண்டிருக்கிறார். அதை திசை திருப்ப இந்த நாடகம். இன்னும் எத்தனை காலத்துக்கு தான் தமிழக மக்களை இந்த குடும்பம் ஏமாற்றி பிழைத்துக்கொண்டிருக்க போகிறது. ஈழ தமிழர் பிரச்சனையை இவர்களின் சுய லாபத்துக்காக பயன் படுத்துவது மகா கேவலம். தமிழக மக்கள் இவர்களை இப்போது நன்கு புரிந்து கொண்டு விட்டார்கள். சாயம் வெளுத்து விட்டது. இவர்களை மக்கள் விரட்டும் காலம் விரைவில்.

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//அத்திரி said...
நச் கேள்விகள். எல்லாமே வயித்துக்குத்தாண்டா அதே மாதிரி தான் எல்லாமே அரசியல்தான். தன் கட்சிக்காரனுக்கு மந்திரி பதவினா 100 தடவைனாலும் டெல்லிக்கு காவடி தூக்க தயார். தேர்தல் வரும்போதுதான் ஈழத்தமிழன் ஞாபகம் வரும்//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

தூங்கியவர்களுக்கு திரு. தா.பாண்டியன் மூலம் திடீர் ஞானதோயம் வந்தது வரவேற்கத்தக்கது. எனது அத்தங்கக் கேள்விகளுக்கு எப்போதும் பதில் இல்லாமல் நீர்த்துப் போகும் வாய்ப்பு பிரகாசமாய்த் தெரிகிறது.

இதே திரு.தா.பாண்டியன் அவர்கள், திரு.இராஜீவ் காந்தி இறந்தபோது பலத்த காயங்களுக்குள்ளானார் என்பது நம்மில் பலருக்குத் தெரியும். அன்றைய இராஜீவின் ஆங்கில உரையைத் தமிழில் மொழிபெயர்க்க வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது அவர் ஐக்கிய பொதுவுடமைக் கட்சியின் தலைவராக இருந்தார்.

//அத்திரி said...
நச் கேள்விகள். எல்லாமே வயித்துக்குத்தாண்டா அதே மாதிரி தான் எல்லாமே அரசியல்தான். தன் கட்சிக்காரனுக்கு மந்திரி பதவினா 100 தடவைனாலும் டெல்லிக்கு காவடி தூக்க தயார். தேர்தல் வரும்போதுதான் ஈழத்தமிழன் ஞாபகம் வரும்//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

தூங்கியவர்களுக்கு திரு. தா.பாண்டியன் மூலம் திடீர் ஞானதோயம் வந்தது வரவேற்கத்தக்கது. எனது அத்தங்கக் கேள்விகளுக்கு எப்போதும் பதில் இல்லாமல் நீர்த்துப் போகும் வாய்ப்பு பிரகாசமாய்த் தெரிகிறது.

இதே திரு.தா.பாண்டியன் அவர்கள், திரு.இராஜீவ் காந்தி இறந்தபோது பலத்த காயங்களுக்குள்ளானார் என்பது நம்மில் பலருக்குத் தெரியும். அன்றைய இராஜீவின் ஆங்கில உரையைத் தமிழில் மொழிபெயர்க்க வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது அவர் ஐக்கிய பொதுவுடமைக் கட்சியின் தலைவராக இருந்தார்.

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//Anonymous said...
திரு தா. பாண்டியனின் ஈ மெயில் தெரிந்தால் தரவும். ஒரு வார்த்தை நன்றி சொல்ல வேண்டும்.

ஒரு ஈழத்துத் தமிழன்//


வருகைக்கும் கருத்துக்கும் நன்றி எம் ஈழத்தமிழரே!
அவருடைய மின்னஞ்சல் தொடர்பு தெரியவில்லை. அவரும் இந்தப் பதிவைப் படிப்பார் என்று நம்புவோம். அதுவே அவருக்கு நாம் தெரிவிக்கும் நன்றியாக அமையும்.

//Anonymous said...
திரு தா. பாண்டியனின் ஈ மெயில் தெரிந்தால் தரவும். ஒரு வார்த்தை நன்றி சொல்ல வேண்டும்.

ஒரு ஈழத்துத் தமிழன்//


வருகைக்கும் கருத்துக்கும் நன்றி எம் ஈழத்தமிழரே!
அவருடைய மின்னஞ்சல் தொடர்பு தெரியவில்லை. அவரும் இந்தப் பதிவைப் படிப்பார் என்று நம்புவோம். அதுவே அவருக்கு நாம் தெரிவிக்கும் நன்றியாக அமையும்.

தமிழ் அமுதன் said...

நல்ல கேள்விகள்!

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//Rajaraman said...
கனிமொழி ராஜினாமா மிகப்பெரிய அரசியல் Stunt. அவர் Spectrum ஊழலில் வகையாக மாட்டிகொண்டிருக்கிறார். அதை திசை திருப்ப இந்த நாடகம். இன்னும் எத்தனை காலத்துக்கு தான் தமிழக மக்களை இந்த குடும்பம் ஏமாற்றி பிழைத்துக்கொண்டிருக்க போகிறது. ஈழ தமிழர் பிரச்சனையை இவர்களின் சுய லாபத்துக்காக பயன் படுத்துவது மகா கேவலம். தமிழக மக்கள் இவர்களை இப்போது நன்கு புரிந்து கொண்டு விட்டார்கள். சாயம் வெளுத்து விட்டது. இவர்களை மக்கள் விரட்டும் காலம் விரைவில்.//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு இராசாராமன்!

//Rajaraman said...
கனிமொழி ராஜினாமா மிகப்பெரிய அரசியல் Stunt. அவர் Spectrum ஊழலில் வகையாக மாட்டிகொண்டிருக்கிறார். அதை திசை திருப்ப இந்த நாடகம். இன்னும் எத்தனை காலத்துக்கு தான் தமிழக மக்களை இந்த குடும்பம் ஏமாற்றி பிழைத்துக்கொண்டிருக்க போகிறது. ஈழ தமிழர் பிரச்சனையை இவர்களின் சுய லாபத்துக்காக பயன் படுத்துவது மகா கேவலம். தமிழக மக்கள் இவர்களை இப்போது நன்கு புரிந்து கொண்டு விட்டார்கள். சாயம் வெளுத்து விட்டது. இவர்களை மக்கள் விரட்டும் காலம் விரைவில்.//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு இராசாராமன்!

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//ஜீவன் said...
நல்ல கேள்விகள்!//



வாங்க ஜீவன் தங்கள் வருகைக்கு நன்றி!
அனைத்துக் கேள்விகளுக்கும் பதிலே கிடைக்காது.
அந்த வகையில் இந்த கேள்விகள்
"பதிலே இல்லாத கேள்விகள்"

//ஜீவன் said...
நல்ல கேள்விகள்!//



வாங்க ஜீவன் தங்கள் வருகைக்கு நன்றி!
அனைத்துக் கேள்விகளுக்கும் பதிலே கிடைக்காது.
அந்த வகையில் இந்த கேள்விகள்
"பதிலே இல்லாத கேள்விகள்"

ஜோசப் பால்ராஜ் said...

அண்ணே,
ஏதோ இப்பவாச்சும் எழுந்திரிச்சுருக்காங்களே, எப்படியோ நம்ம தேர்தலுக்குள்ள ஒரு தீர்வு நம்ம ஈழச் சகோதரர்களுக்கு கிடைச்சா சரி.

இதை அரசியலாக்க வேணாம். தேர்தலுக்காகத்தான் இப்ப எல்லாருக்கும் ஞானோதயம் வந்துருக்குன்னு எல்லாருக்கும் தெரியும். இந்த சந்தர்பத்தையாவது பயன்படுத்தி ஈழத்துக்கு ஒரு தீர்வு கிடைச்சா சரி.

ஜோசப் பால்ராஜ் said...

அண்ணே,
ஏதோ இப்பவாச்சும் எழுந்திரிச்சுருக்காங்களே, எப்படியோ நம்ம தேர்தலுக்குள்ள ஒரு தீர்வு நம்ம ஈழச் சகோதரர்களுக்கு கிடைச்சா சரி.

இதை அரசியலாக்க வேணாம். தேர்தலுக்காகத்தான் இப்ப எல்லாருக்கும் ஞானோதயம் வந்துருக்குன்னு எல்லாருக்கும் தெரியும். இந்த சந்தர்பத்தையாவது பயன்படுத்தி ஈழத்துக்கு ஒரு தீர்வு கிடைச்சா சரி.

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//ஜோசப் பால்ராஜ் said...
அண்ணே,
ஏதோ இப்பவாச்சும் எழுந்திரிச்சுருக்காங்களே, எப்படியோ நம்ம தேர்தலுக்குள்ள ஒரு தீர்வு நம்ம ஈழச் சகோதரர்களுக்கு கிடைச்சா சரி.

இதை அரசியலாக்க வேணாம். தேர்தலுக்காகத்தான் இப்ப எல்லாருக்கும் ஞானோதயம் வந்துருக்குன்னு எல்லாருக்கும் தெரியும். இந்த சந்தர்பத்தையாவது பயன்படுத்தி ஈழத்துக்கு ஒரு தீர்வு கிடைச்சா சரி.//


"இதில் அ.தி.மு.கவும், ம.தி.மு.க வும் கலந்து கொள்ளாதது வருந்தத்தக்கது."

என்று எழுதியதே அனைவரும் ஒன்று பட்டு நிற்கவேண்டும் என்பதற்காகத்தான். நான் இதை அரசியலாக்கவில்லை. அனைத்து கட்சியினரும், தமிழக அரசும் ஈழப்பிரச்சனையை அரசியலாக்கிக்கொண்டே இருக்கக் கூடாது என்கிற ஆதங்கப் பதிவுதான். என்னுள் எழுந்த கேள்விகளைப் பதிவு செய்தேன். இனியாவது நம்மவர்களுக்கு நல்ல பொழுது விடியும் என்று நம்புவோம்.

//ஜோசப் பால்ராஜ் said...
அண்ணே,
ஏதோ இப்பவாச்சும் எழுந்திரிச்சுருக்காங்களே, எப்படியோ நம்ம தேர்தலுக்குள்ள ஒரு தீர்வு நம்ம ஈழச் சகோதரர்களுக்கு கிடைச்சா சரி.

இதை அரசியலாக்க வேணாம். தேர்தலுக்காகத்தான் இப்ப எல்லாருக்கும் ஞானோதயம் வந்துருக்குன்னு எல்லாருக்கும் தெரியும். இந்த சந்தர்பத்தையாவது பயன்படுத்தி ஈழத்துக்கு ஒரு தீர்வு கிடைச்சா சரி.//


"இதில் அ.தி.மு.கவும், ம.தி.மு.க வும் கலந்து கொள்ளாதது வருந்தத்தக்கது."

என்று எழுதியதே அனைவரும் ஒன்று பட்டு நிற்கவேண்டும் என்பதற்காகத்தான். நான் இதை அரசியலாக்கவில்லை. அனைத்து கட்சியினரும், தமிழக அரசும் ஈழப்பிரச்சனையை அரசியலாக்கிக்கொண்டே இருக்கக் கூடாது என்கிற ஆதங்கப் பதிவுதான். என்னுள் எழுந்த கேள்விகளைப் பதிவு செய்தேன். இனியாவது நம்மவர்களுக்கு நல்ல பொழுது விடியும் என்று நம்புவோம்.

கோவி.கண்ணன் said...

ஈழத்தமிழர்கள் பற்றி நிறைய அறிந்து வைத்திருக்கும் தங்களைத் தவிர வேறு எவரும் இவ்வளவு சிறப்பான கேள்விகளைக் கேட்டு இருக்க முடியாது.

நல்ல அலசல், பார்ப்போம்... நீதி விழிக்கிறதா என்று.

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//கோவி.கண்ணன் said...
ஈழத்தமிழர்கள் பற்றி நிறைய அறிந்து வைத்திருக்கும் தங்களைத் தவிர வேறு எவரும் இவ்வளவு சிறப்பான கேள்விகளைக் கேட்டு இருக்க முடியாது.

நல்ல அலசல், பார்ப்போம்... நீதி விழிக்கிறதா என்று.//

கோவியாரே வருகைக்கு நன்றி!
நீதி கிடைக்க நெடுந்தூரம் பயணம் செய்ய வேண்டும். தற்போதைய முதல்வரின் கூற்று!
நான் பீனிக்ஸ் பறவை சூரியனை நோக்கிப் பறந்து கொண்டே இருப்பேன். முன்னாள் முதல்வரின் கூற்று!

எல்லோரும் ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு!
ஒற்றுமை நீங்கிடில் அனைவருக்கும் தாழ்வுதான்!
நல்ல செய்திகள் காதில் கேட்கின்றன.
வைகோ இரண்டு எம்.பிக்களையும் ராஜினாமா செய்யச் சொல்வேன் என்று சொல்லி இருக்கிறார்.
பாரதிராஜா போராட்ட அழைப்பு விடுத்திருக்கிறார்.
ஊடகத் தமிழனும் நாடகத் தமிழனும் நம் பக்கம் இருந்தால்
அரசியல் பண்ணுகிறவன்(அவனும் தமிழன் தான்) தானாக வருவான்.
நம் தமிழர்களுக்கு நல்ல பொழுது விடியும்.

//கோவி.கண்ணன் said...
ஈழத்தமிழர்கள் பற்றி நிறைய அறிந்து வைத்திருக்கும் தங்களைத் தவிர வேறு எவரும் இவ்வளவு சிறப்பான கேள்விகளைக் கேட்டு இருக்க முடியாது.

நல்ல அலசல், பார்ப்போம்... நீதி விழிக்கிறதா என்று.//

கோவியாரே வருகைக்கு நன்றி!
நீதி கிடைக்க நெடுந்தூரம் பயணம் செய்ய வேண்டும். தற்போதைய முதல்வரின் கூற்று!
நான் பீனிக்ஸ் பறவை சூரியனை நோக்கிப் பறந்து கொண்டே இருப்பேன். முன்னாள் முதல்வரின் கூற்று!

எல்லோரும் ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு!
ஒற்றுமை நீங்கிடில் அனைவருக்கும் தாழ்வுதான்!
நல்ல செய்திகள் காதில் கேட்கின்றன.
வைகோ இரண்டு எம்.பிக்களையும் ராஜினாமா செய்யச் சொல்வேன் என்று சொல்லி இருக்கிறார்.
பாரதிராஜா போராட்ட அழைப்பு விடுத்திருக்கிறார்.
ஊடகத் தமிழனும் நாடகத் தமிழனும் நம் பக்கம் இருந்தால்
அரசியல் பண்ணுகிறவன்(அவனும் தமிழன் தான்) தானாக வருவான்.
நம் தமிழர்களுக்கு நல்ல பொழுது விடியும்.

Anonymous said...

அற்புதமான கேள்விகள்,ஆனால் இந்த அறிவிப்பு வரும்போது அவர்களுக்குள்ளேயும் இந்த கேள்விகள் வராமல் போயிருக்காது, இதெல்லாம் ஒரு கேவலமான நாடகம் என்பது மக்களுக்கு புரிய வேண்டும் என்பதுதான் இப்போதைய தேவை, என்ன செய்வது ஒரு நல்ல சுயநலமில்லாத தலைவரை இனி நமது முதல்வராக பார்க்கவே முடியாதோ?

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//செல்வன் said...
அற்புதமான கேள்விகள்,ஆனால் இந்த அறிவிப்பு வரும்போது அவர்களுக்குள்ளேயும் இந்த கேள்விகள் வராமல் போயிருக்காது, இதெல்லாம் ஒரு கேவலமான நாடகம் என்பது மக்களுக்கு புரிய வேண்டும் என்பதுதான் இப்போதைய தேவை, என்ன செய்வது ஒரு நல்ல சுயநலமில்லாத தலைவரை இனி நமது முதல்வராக பார்க்கவே முடியாதோ?//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி செல்வன்!

//செல்வன் said...
அற்புதமான கேள்விகள்,ஆனால் இந்த அறிவிப்பு வரும்போது அவர்களுக்குள்ளேயும் இந்த கேள்விகள் வராமல் போயிருக்காது, இதெல்லாம் ஒரு கேவலமான நாடகம் என்பது மக்களுக்கு புரிய வேண்டும் என்பதுதான் இப்போதைய தேவை, என்ன செய்வது ஒரு நல்ல சுயநலமில்லாத தலைவரை இனி நமது முதல்வராக பார்க்கவே முடியாதோ?//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி செல்வன்!

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

அன்சாரிக்குப் பதில் சட்டர்ஜியை போட்டதை சரியாக சுட்டிக்காட்டிய ஜோசப் பால்ராஜுக்கு நன்றி!
மாற்றிவிட்டேன்

அன்சாரிக்குப் பதில் சட்டர்ஜியை போட்டதை சரியாக சுட்டிக்காட்டிய ஜோசப் பால்ராஜுக்கு நன்றி!
மாற்றிவிட்டேன்

Anonymous said...

சரி

இப்ப ராஜினாமா பண்ண வேண்டும் என்கிறீர்களா

அல்லது

வேண்டாம் என்கிறீர்களா

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//Anonymous said...
சரி

இப்ப ராஜினாமா பண்ண வேண்டும் என்கிறீர்களா

அல்லது

வேண்டாம் என்கிறீர்களா//

பெயர் குறிப்பிட விரும்பாதவரின் வருகைக்கு நன்றி.
நான் சொல்லி ஒன்னும் நடந்துவிடாது.
ஒரு கவன ஈர்ப்பு செய்து மத்திய அரசை நிலைகுலையச் செய்ய வேண்டும் என்றால், எல்லா எம்.பிக்களும் ராஜினாமா செய்ய வேண்டும். அது கனிமொழி மட்டும் என்கிற போது, அதனால் ஈழத்தமிழருக்கு எந்த பலனும் இருக்காது. கலைஞருக்கு பலன் கிடைக்கலாம்.
நமது குரல் தில்லியில் ஒலிக்க வேண்டும்.
இல்லை என்றால்,
நாம் தில்லியை ஒழிக்க வேண்டும்.
(அதான் சென்னை, கோவை,திருச்சி,மதுரை, இவற்றில் எதாவது ஒற்றை வைத்துக்கொள்ளலாம் என்று சொல்ல வருகிறேன்)

//Anonymous said...
சரி

இப்ப ராஜினாமா பண்ண வேண்டும் என்கிறீர்களா

அல்லது

வேண்டாம் என்கிறீர்களா//

பெயர் குறிப்பிட விரும்பாதவரின் வருகைக்கு நன்றி.
நான் சொல்லி ஒன்னும் நடந்துவிடாது.
ஒரு கவன ஈர்ப்பு செய்து மத்திய அரசை நிலைகுலையச் செய்ய வேண்டும் என்றால், எல்லா எம்.பிக்களும் ராஜினாமா செய்ய வேண்டும். அது கனிமொழி மட்டும் என்கிற போது, அதனால் ஈழத்தமிழருக்கு எந்த பலனும் இருக்காது. கலைஞருக்கு பலன் கிடைக்கலாம்.
நமது குரல் தில்லியில் ஒலிக்க வேண்டும்.
இல்லை என்றால்,
நாம் தில்லியை ஒழிக்க வேண்டும்.
(அதான் சென்னை, கோவை,திருச்சி,மதுரை, இவற்றில் எதாவது ஒற்றை வைத்துக்கொள்ளலாம் என்று சொல்ல வருகிறேன்)

Darren said...

///இதை அரசியலாக்க வேணாம். தேர்தலுக்காகத்தான் இப்ப எல்லாருக்கும் ஞானோதயம் வந்துருக்குன்னு எல்லாருக்கும் தெரியும். ///

நல்ல காமெடி. தேர்தலில் செயிப்பதற்கு ஈழத்தமிழர் விவகாரமா???


எந்த காலத்தில இருக்கீங்க. அப்படி பார்த்தால் வைகோ எப்பவோ CM ஆகியிருப்பார்.
ஈழத்தமிழர் பிரச்சினை தேர்தலில் ஒரு கடுகளவு பாதிப்பை கூட ஏற்படுத்தாது என்பதுதான் இன்றைய நிலை.

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//Dharan said...
///இதை அரசியலாக்க வேணாம். தேர்தலுக்காகத்தான் இப்ப எல்லாருக்கும் ஞானோதயம் வந்துருக்குன்னு எல்லாருக்கும் தெரியும். ///

நல்ல காமெடி. தேர்தலில் செயிப்பதற்கு ஈழத்தமிழர் விவகாரமா???


எந்த காலத்தில இருக்கீங்க. அப்படி பார்த்தால் வைகோ எப்பவோ CM ஆகியிருப்பார்.
ஈழத்தமிழர் பிரச்சினை தேர்தலில் ஒரு கடுகளவு பாதிப்பை கூட ஏற்படுத்தாது என்பதுதான் இன்றைய நிலை.//


வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தரன்!
ஈழப்பிரச்சனையை அரசியலுக்குப் பயன்படுத்துகிரவனை
வேறொரு கண்ணகி பிறந்து வந்துதான் எரிக்க வேண்டும்.

தமிழக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் பட்சத்தில், தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

//Dharan said...
///இதை அரசியலாக்க வேணாம். தேர்தலுக்காகத்தான் இப்ப எல்லாருக்கும் ஞானோதயம் வந்துருக்குன்னு எல்லாருக்கும் தெரியும். ///

நல்ல காமெடி. தேர்தலில் செயிப்பதற்கு ஈழத்தமிழர் விவகாரமா???


எந்த காலத்தில இருக்கீங்க. அப்படி பார்த்தால் வைகோ எப்பவோ CM ஆகியிருப்பார்.
ஈழத்தமிழர் பிரச்சினை தேர்தலில் ஒரு கடுகளவு பாதிப்பை கூட ஏற்படுத்தாது என்பதுதான் இன்றைய நிலை.//


வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தரன்!
ஈழப்பிரச்சனையை அரசியலுக்குப் பயன்படுத்துகிரவனை
வேறொரு கண்ணகி பிறந்து வந்துதான் எரிக்க வேண்டும்.

தமிழக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் பட்சத்தில், தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//Anonymous said...
report
//
உங்கள் ரிப்போட்டைப் படித்தேன். தமிழக அரசுக்கும், அரசியல் வாதிகளுக்கும் நன்றி சொல்லும் டக்லஸ், தமிழர்களின் பிரதிநிதி என்பதில் அர்த்தமில்லை. மகிந்த அரசில் அமைச்சராக ஒட்டிக் கொண்டிருப்பதிலும் அர்த்தம் இல்லை. போராடும் தமிழர்களோடு போராட வேண்டியதுதானே?

//Anonymous said...
report
//
உங்கள் ரிப்போட்டைப் படித்தேன். தமிழக அரசுக்கும், அரசியல் வாதிகளுக்கும் நன்றி சொல்லும் டக்லஸ், தமிழர்களின் பிரதிநிதி என்பதில் அர்த்தமில்லை. மகிந்த அரசில் அமைச்சராக ஒட்டிக் கொண்டிருப்பதிலும் அர்த்தம் இல்லை. போராடும் தமிழர்களோடு போராட வேண்டியதுதானே?

Anonymous said...

நியாயமான கேள்விகள்!!!!

ஆனால் மனசட்சி இருந்தால்தானே அவர்களுக்கு உறுத்தும் :(

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//நரேஷ் said...
நியாயமான கேள்விகள்!!!!

ஆனால் மனசட்சி இருந்தால்தானே அவர்களுக்கு உறுத்தும் :(
//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நரேஷ்!
நீங்கள் சொல்வதும் சரிதான்.

//நரேஷ் said...
நியாயமான கேள்விகள்!!!!

ஆனால் மனசட்சி இருந்தால்தானே அவர்களுக்கு உறுத்தும் :(
//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நரேஷ்!
நீங்கள் சொல்வதும் சரிதான்.

குடுகுடுப்பை said...

நன்றி ஜோதிபாரதி,தா.பாண்டியன்.

ஈழத்தமிழர் துயர் ஒரு நாள் துடைக்கப்படும் என்ற் நம்பிக்கையில்.

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

வாங்க குடுகுடுப்பை!
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!!
நல்ல பொழுது விடியும் என்கிற நம்பிக்கையுடன் இருக்கிறோம்.

வாங்க குடுகுடுப்பை!
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!!
நல்ல பொழுது விடியும் என்கிற நம்பிக்கையுடன் இருக்கிறோம்.

Anonymous said...

எந்தக் கட்சியை மட்டம் தட்டவேண்டும் எந்தக் கட்சியை உயர்த்திப்பிடிக்கவேண்டும் என்ற நோக்கத்திலேயே ஈழத்தமிழர் பிரச்சனையை விமர்சிக்கிற உங்களைப் போன்ற பதிவர்களுக்கும் தமிழக அரசியல்வாதிகளுக்கும் என்ன வித்தியாசம் என்பதை எண்ணிப் பார்த்தீர்களா, அன்பேய் ஆருயிரேய் என் அத்தானே?

சுரேஷ் ஜீவானந்தம் said...

// நமது குரல் தில்லியில் ஒலிக்க வேண்டும்.
இல்லை என்றால்,
நாம் தில்லியை ஒழிக்க வேண்டும்.
(அதான் சென்னை, கோவை,திருச்சி,மதுரை, இவற்றில் எதாவது ஒற்றை வைத்துக்கொள்ளலாம் என்று சொல்ல வருகிறேன்) //
கலக்கல்.

Anonymous said...

புலிகளைக் காப்பாற்ற கருணாநிதி முயல்கிறார்: கனிமொழியின் ராஜிநாமா நடவடிக்கை வடிகட்டிய மோசடி நாடகம்
- அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா

சென்னை, அக். 15: இலங்கையில் போரை நிறுத்த வேண்டும் என்று கோருவதன் மூலம் விடுதலைப் புலிகள் அமைப்பைக் காப்பாற்றுவதற்கான முயற்சியில் முதல்வர் கருணாநிதி ஈடுபட்டிருக்கிறார் என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:

"2 வாரங்களுக்குள் போர் நிறுத்தம் வர நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழக எம்.பி.க்கள் ராஜிநாமா என்று ஒரு தீர்மானத்தை அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றி உள்ளனர். இதன் மூலம் விடுதலைப் புலிகளைக் காப்பாற்ற முதல்வர் முயல்கிறாரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இலங்கையில் இப்போது நடக்கும் உள்நாட்டுப் போரை நிறுத்தும் அதிகாரம் இந்திய அரசிடம் இல்லை என்பதை 5 முறை முதல்வராக இருந்த கருணாநிதி புரிந்து கொள்ளாதது விந்தையாக உள்ளது.

இலங்கையில் இப்போது நடப்பது விடுதலைப் புலிகள் எனும் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்திற்கு எதிரான யுத்தம். இதில் அங்கு வசிக்கும் அப்பாவித் தமிழர்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவிடாமல், அவர்களை விடுதலைப் புலிகள் மனிதக் கேடயங்களாக பயன்படுத்துவதாகச் செய்திகள் கூறுகின்றன. இது உடனே நிறுத்தப்பட வேண்டும்.

இலங்கைத் தமிழர்கள் அனைவரும் பாதுகாப்பான இடத்துச் செல்ல விடுதலைப் புலிகள் தடை செய்யக் கூடாது என்று விடுதலைப்புலி நண்பர்கள் மூலம் கருணாநிதி வலியுறுத்தி இருக்கலாம்.

மத்திய அரசுக்கு 2 வார அவகாசம் கொடுத்து தீர்மானம் நிறைவேற்றி இருப்பது மிகப் பெரிய மோசடி நாடகம்.

மக்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் இன்னும் 6 மாதங்களில் முடியவுள்ளது. அதனால் பெரிய நஷ்டமில்லை என கருணாநிதி கருதுகிறார் போலும். ஆனால், மத்திய அமைச்சர்களைப் பற்றி தீர்மானத்தில் ஏதும் குறிப்பிடவில்லை.

எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது, இலங்கைத் தமிழர்களுக்காக சட்டமன்ற உறுப்பினர் பதவியையே ராஜிநாமா செய்ததாகச் சொல்லும் கருணாநிதி, இன்னும் 30 மாதங்கள் பதவிக் காலம் இருக்கும் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்வோம் என ஏன் சொல்லவில்லை? மாநில அரசே பதவி விலகும் என ஏன் அறிவிக்கவில்லை?

கருணாநிதி சொன்னதை செய்யக் கூடிய மத்திய அரசு இருக்கிறது. எனவே, கருணாநிதி வேண்டுகோளை ஏற்று, பிரதமர் தொலைபேசியில் இலங்கை அதிபரை தொடர்புகொண்டு பேசுவார் அல்லது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணனை இலங்கைக்கு அனுப்பி இந்தியாவின் கவலையை தெரிவிக்கச் சொல்வார். பின்னர் ""மத்திய அரசு சரியான பாதையில் செல்கிறது'' என்று அறிக்கைவிட்டு, தனக்கு வெற்றி கிடைத்ததாக கருணாநிதி சொல்வார். இதுதான் அவர் நடத்தப்போகும் நாடகம்.

தமிழக மக்களவை உறுப்பினர்கள் ராஜிநாமா செய்தாலும், பிரதமரை அறிக்கை விடச் செய்து அமைச்சர்கள் பதவியில் நீடிக்க வைக்க தேவையான ஏற்பாட்டினை கருணாநிதி செய்வார்.

இதுபோன்ற கண்துடைப்பு நாடகத்திற்கு கடும் கண்டனத்தை தெரிவிக்கிறேன்.

உண்மையில் இலங்கைத் தமிழர் மீது அக்கறை இருந்தால் அமைச்சரவையில் இருந்து திமுக விலகுவதாக உடனே அறிவிக்க வேண்டும். அனைத்து தமிழக மக்களவை உறுப்பினர்களும் அரசுக்கு அளிக்கும் ஆதரவை திரும்பப் பெற வேண்டும். தமிழகத்தில் திமுக அரசு பதவி விலக முன்வர வேண்டும்' என ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.

சென்னை, அக். 15: கனிமொழியின் ராஜிநாமா நடவடிக்கை வடிகட்டிய மோசடி நாடகம் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இலங்கைத் தமிழர் பிரச்னைக்காக கருணாநிதியின் மகள் தன்னுடைய ராஜிநாமா கடிதத்தை கருணாநிதியிடம் கொடுத்து விட்டதாக செய்திகள் வந்திருக்கின்றன. உண்மையிலேயே இலங்கைத் தமிழர்கள் மீது கனிமொழிக்கு அக்கறை இருந்தால், மாநிலங்களவைத் தலைவரிடம் தன்னுடைய ராஜிநாமா கடிதத்தை இன்றைய தேதியிட்டு கொடுத்திருக்க வேண்டும். தன் தந்தையிடம் பின் தேதியிட்டு கொடுத்துள்ளார். கனிமொழியின் ராஜிநாமாவுக்கு அது எழுதப்பட்டிருக்கும் காகிதத்தின் மதிப்புக் கூட கிடையாது. இது வடிகட்டிய மோசடி நாடகம் என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.


http://www.thenee.com/html/161008-3.html

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//Anonymous said...
புலிகளைக் காப்பாற்ற கருணாநிதி முயல்கிறார்: கனிமொழியின் ராஜிநாமா நடவடிக்கை வடிகட்டிய மோசடி நாடகம்
- அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா

சென்னை, அக். 15: இலங்கையில் போரை நிறுத்த வேண்டும் என்று கோருவதன் மூலம் விடுதலைப் புலிகள் அமைப்பைக் காப்பாற்றுவதற்கான முயற்சியில் முதல்வர் கருணாநிதி ஈடுபட்டிருக்கிறார் என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:

"2 வாரங்களுக்குள் போர் நிறுத்தம் வர நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழக எம்.பி.க்கள் ராஜிநாமா என்று ஒரு தீர்மானத்தை அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றி உள்ளனர். இதன் மூலம் விடுதலைப் புலிகளைக் காப்பாற்ற முதல்வர் முயல்கிறாரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இலங்கையில் இப்போது நடக்கும் உள்நாட்டுப் போரை நிறுத்தும் அதிகாரம் இந்திய அரசிடம் இல்லை என்பதை 5 முறை முதல்வராக இருந்த கருணாநிதி புரிந்து கொள்ளாதது விந்தையாக உள்ளது.

இலங்கையில் இப்போது நடப்பது விடுதலைப் புலிகள் எனும் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்திற்கு எதிரான யுத்தம். இதில் அங்கு வசிக்கும் அப்பாவித் தமிழர்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவிடாமல், அவர்களை விடுதலைப் புலிகள் மனிதக் கேடயங்களாக பயன்படுத்துவதாகச் செய்திகள் கூறுகின்றன. இது உடனே நிறுத்தப்பட வேண்டும்.

இலங்கைத் தமிழர்கள் அனைவரும் பாதுகாப்பான இடத்துச் செல்ல விடுதலைப் புலிகள் தடை செய்யக் கூடாது என்று விடுதலைப்புலி நண்பர்கள் மூலம் கருணாநிதி வலியுறுத்தி இருக்கலாம்.

மத்திய அரசுக்கு 2 வார அவகாசம் கொடுத்து தீர்மானம் நிறைவேற்றி இருப்பது மிகப் பெரிய மோசடி நாடகம்.

மக்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் இன்னும் 6 மாதங்களில் முடியவுள்ளது. அதனால் பெரிய நஷ்டமில்லை என கருணாநிதி கருதுகிறார் போலும். ஆனால், மத்திய அமைச்சர்களைப் பற்றி தீர்மானத்தில் ஏதும் குறிப்பிடவில்லை.

எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது, இலங்கைத் தமிழர்களுக்காக சட்டமன்ற உறுப்பினர் பதவியையே ராஜிநாமா செய்ததாகச் சொல்லும் கருணாநிதி, இன்னும் 30 மாதங்கள் பதவிக் காலம் இருக்கும் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்வோம் என ஏன் சொல்லவில்லை? மாநில அரசே பதவி விலகும் என ஏன் அறிவிக்கவில்லை?

கருணாநிதி சொன்னதை செய்யக் கூடிய மத்திய அரசு இருக்கிறது. எனவே, கருணாநிதி வேண்டுகோளை ஏற்று, பிரதமர் தொலைபேசியில் இலங்கை அதிபரை தொடர்புகொண்டு பேசுவார் அல்லது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணனை இலங்கைக்கு அனுப்பி இந்தியாவின் கவலையை தெரிவிக்கச் சொல்வார். பின்னர் ""மத்திய அரசு சரியான பாதையில் செல்கிறது'' என்று அறிக்கைவிட்டு, தனக்கு வெற்றி கிடைத்ததாக கருணாநிதி சொல்வார். இதுதான் அவர் நடத்தப்போகும் நாடகம்.

தமிழக மக்களவை உறுப்பினர்கள் ராஜிநாமா செய்தாலும், பிரதமரை அறிக்கை விடச் செய்து அமைச்சர்கள் பதவியில் நீடிக்க வைக்க தேவையான ஏற்பாட்டினை கருணாநிதி செய்வார்.

இதுபோன்ற கண்துடைப்பு நாடகத்திற்கு கடும் கண்டனத்தை தெரிவிக்கிறேன்.

உண்மையில் இலங்கைத் தமிழர் மீது அக்கறை இருந்தால் அமைச்சரவையில் இருந்து திமுக விலகுவதாக உடனே அறிவிக்க வேண்டும். அனைத்து தமிழக மக்களவை உறுப்பினர்களும் அரசுக்கு அளிக்கும் ஆதரவை திரும்பப் பெற வேண்டும். தமிழகத்தில் திமுக அரசு பதவி விலக முன்வர வேண்டும்' என ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.

சென்னை, அக். 15: கனிமொழியின் ராஜிநாமா நடவடிக்கை வடிகட்டிய மோசடி நாடகம் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இலங்கைத் தமிழர் பிரச்னைக்காக கருணாநிதியின் மகள் தன்னுடைய ராஜிநாமா கடிதத்தை கருணாநிதியிடம் கொடுத்து விட்டதாக செய்திகள் வந்திருக்கின்றன. உண்மையிலேயே இலங்கைத் தமிழர்கள் மீது கனிமொழிக்கு அக்கறை இருந்தால், மாநிலங்களவைத் தலைவரிடம் தன்னுடைய ராஜிநாமா கடிதத்தை இன்றைய தேதியிட்டு கொடுத்திருக்க வேண்டும். தன் தந்தையிடம் பின் தேதியிட்டு கொடுத்துள்ளார். கனிமொழியின் ராஜிநாமாவுக்கு அது எழுதப்பட்டிருக்கும் காகிதத்தின் மதிப்புக் கூட கிடையாது. இது வடிகட்டிய மோசடி நாடகம் என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.


http://www.thenee.com/html/161008-3.html
//

இதில் ஜெயலலிதா பதவிக்கு வரவேண்டும் என்கிற நோக்கம் மேலோங்கி இருப்பது அப்பட்டமாகத் தெரிகிறது. ஆரம்பத்திலிருந்து ஈழப்பிரச்சனையில் தெளிவான கருத்து இல்லாதவர்.

//Anonymous said...
புலிகளைக் காப்பாற்ற கருணாநிதி முயல்கிறார்: கனிமொழியின் ராஜிநாமா நடவடிக்கை வடிகட்டிய மோசடி நாடகம்
- அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா

சென்னை, அக். 15: இலங்கையில் போரை நிறுத்த வேண்டும் என்று கோருவதன் மூலம் விடுதலைப் புலிகள் அமைப்பைக் காப்பாற்றுவதற்கான முயற்சியில் முதல்வர் கருணாநிதி ஈடுபட்டிருக்கிறார் என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:

"2 வாரங்களுக்குள் போர் நிறுத்தம் வர நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழக எம்.பி.க்கள் ராஜிநாமா என்று ஒரு தீர்மானத்தை அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றி உள்ளனர். இதன் மூலம் விடுதலைப் புலிகளைக் காப்பாற்ற முதல்வர் முயல்கிறாரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இலங்கையில் இப்போது நடக்கும் உள்நாட்டுப் போரை நிறுத்தும் அதிகாரம் இந்திய அரசிடம் இல்லை என்பதை 5 முறை முதல்வராக இருந்த கருணாநிதி புரிந்து கொள்ளாதது விந்தையாக உள்ளது.

இலங்கையில் இப்போது நடப்பது விடுதலைப் புலிகள் எனும் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்திற்கு எதிரான யுத்தம். இதில் அங்கு வசிக்கும் அப்பாவித் தமிழர்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவிடாமல், அவர்களை விடுதலைப் புலிகள் மனிதக் கேடயங்களாக பயன்படுத்துவதாகச் செய்திகள் கூறுகின்றன. இது உடனே நிறுத்தப்பட வேண்டும்.

இலங்கைத் தமிழர்கள் அனைவரும் பாதுகாப்பான இடத்துச் செல்ல விடுதலைப் புலிகள் தடை செய்யக் கூடாது என்று விடுதலைப்புலி நண்பர்கள் மூலம் கருணாநிதி வலியுறுத்தி இருக்கலாம்.

மத்திய அரசுக்கு 2 வார அவகாசம் கொடுத்து தீர்மானம் நிறைவேற்றி இருப்பது மிகப் பெரிய மோசடி நாடகம்.

மக்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் இன்னும் 6 மாதங்களில் முடியவுள்ளது. அதனால் பெரிய நஷ்டமில்லை என கருணாநிதி கருதுகிறார் போலும். ஆனால், மத்திய அமைச்சர்களைப் பற்றி தீர்மானத்தில் ஏதும் குறிப்பிடவில்லை.

எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது, இலங்கைத் தமிழர்களுக்காக சட்டமன்ற உறுப்பினர் பதவியையே ராஜிநாமா செய்ததாகச் சொல்லும் கருணாநிதி, இன்னும் 30 மாதங்கள் பதவிக் காலம் இருக்கும் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்வோம் என ஏன் சொல்லவில்லை? மாநில அரசே பதவி விலகும் என ஏன் அறிவிக்கவில்லை?

கருணாநிதி சொன்னதை செய்யக் கூடிய மத்திய அரசு இருக்கிறது. எனவே, கருணாநிதி வேண்டுகோளை ஏற்று, பிரதமர் தொலைபேசியில் இலங்கை அதிபரை தொடர்புகொண்டு பேசுவார் அல்லது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணனை இலங்கைக்கு அனுப்பி இந்தியாவின் கவலையை தெரிவிக்கச் சொல்வார். பின்னர் ""மத்திய அரசு சரியான பாதையில் செல்கிறது'' என்று அறிக்கைவிட்டு, தனக்கு வெற்றி கிடைத்ததாக கருணாநிதி சொல்வார். இதுதான் அவர் நடத்தப்போகும் நாடகம்.

தமிழக மக்களவை உறுப்பினர்கள் ராஜிநாமா செய்தாலும், பிரதமரை அறிக்கை விடச் செய்து அமைச்சர்கள் பதவியில் நீடிக்க வைக்க தேவையான ஏற்பாட்டினை கருணாநிதி செய்வார்.

இதுபோன்ற கண்துடைப்பு நாடகத்திற்கு கடும் கண்டனத்தை தெரிவிக்கிறேன்.

உண்மையில் இலங்கைத் தமிழர் மீது அக்கறை இருந்தால் அமைச்சரவையில் இருந்து திமுக விலகுவதாக உடனே அறிவிக்க வேண்டும். அனைத்து தமிழக மக்களவை உறுப்பினர்களும் அரசுக்கு அளிக்கும் ஆதரவை திரும்பப் பெற வேண்டும். தமிழகத்தில் திமுக அரசு பதவி விலக முன்வர வேண்டும்' என ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.

சென்னை, அக். 15: கனிமொழியின் ராஜிநாமா நடவடிக்கை வடிகட்டிய மோசடி நாடகம் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இலங்கைத் தமிழர் பிரச்னைக்காக கருணாநிதியின் மகள் தன்னுடைய ராஜிநாமா கடிதத்தை கருணாநிதியிடம் கொடுத்து விட்டதாக செய்திகள் வந்திருக்கின்றன. உண்மையிலேயே இலங்கைத் தமிழர்கள் மீது கனிமொழிக்கு அக்கறை இருந்தால், மாநிலங்களவைத் தலைவரிடம் தன்னுடைய ராஜிநாமா கடிதத்தை இன்றைய தேதியிட்டு கொடுத்திருக்க வேண்டும். தன் தந்தையிடம் பின் தேதியிட்டு கொடுத்துள்ளார். கனிமொழியின் ராஜிநாமாவுக்கு அது எழுதப்பட்டிருக்கும் காகிதத்தின் மதிப்புக் கூட கிடையாது. இது வடிகட்டிய மோசடி நாடகம் என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.


http://www.thenee.com/html/161008-3.html
//

இதில் ஜெயலலிதா பதவிக்கு வரவேண்டும் என்கிற நோக்கம் மேலோங்கி இருப்பது அப்பட்டமாகத் தெரிகிறது. ஆரம்பத்திலிருந்து ஈழப்பிரச்சனையில் தெளிவான கருத்து இல்லாதவர்.

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//Anonymous said...
எந்தக் கட்சியை மட்டம் தட்டவேண்டும் எந்தக் கட்சியை உயர்த்திப்பிடிக்கவேண்டும் என்ற நோக்கத்திலேயே ஈழத்தமிழர் பிரச்சனையை விமர்சிக்கிற உங்களைப் போன்ற பதிவர்களுக்கும் தமிழக அரசியல்வாதிகளுக்கும் என்ன வித்தியாசம் என்பதை எண்ணிப் பார்த்தீர்களா, அன்பேய் ஆருயிரேய் என் அத்தானே?//


பொதுவான விமர்சனத்தில் எந்த கட்சியை உயர்த்திப் பிடிப்பதாக உணர்கிறீர்கள்.

யாரையும் உயர்த்தியோ தாழ்த்தியோ பிடிக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை. என்னக்கு யாரும் படி அளக்கவில்லை.

எனக்கும் இந்த அரசியல் வாதிகளுக்கும் வித்தியாசம் இல்லையா?

பொது சேவை செய்வதாகச் சொல்லி அரசாங்கம் மற்றும் மக்கள் பணத்தை பங்கு போட்டு சாப்பிடத்தெரியாது.

இந்த வித்தியாசம் போதும் என்று நினைக்கிறேன். தங்களிடம் தன்னிலை விளக்கம் கொடுக்க எனக்கு அவசியம் இருப்பதாகத் தோன்றவில்லை.

முடிந்தால் எனது பதிவுகளை மட்டும் படியுங்கள், அவசரமாக என்னைப் படிக்க வேண்டாம்.

//Anonymous said...
எந்தக் கட்சியை மட்டம் தட்டவேண்டும் எந்தக் கட்சியை உயர்த்திப்பிடிக்கவேண்டும் என்ற நோக்கத்திலேயே ஈழத்தமிழர் பிரச்சனையை விமர்சிக்கிற உங்களைப் போன்ற பதிவர்களுக்கும் தமிழக அரசியல்வாதிகளுக்கும் என்ன வித்தியாசம் என்பதை எண்ணிப் பார்த்தீர்களா, அன்பேய் ஆருயிரேய் என் அத்தானே?//


பொதுவான விமர்சனத்தில் எந்த கட்சியை உயர்த்திப் பிடிப்பதாக உணர்கிறீர்கள்.

யாரையும் உயர்த்தியோ தாழ்த்தியோ பிடிக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை. என்னக்கு யாரும் படி அளக்கவில்லை.

எனக்கும் இந்த அரசியல் வாதிகளுக்கும் வித்தியாசம் இல்லையா?

பொது சேவை செய்வதாகச் சொல்லி அரசாங்கம் மற்றும் மக்கள் பணத்தை பங்கு போட்டு சாப்பிடத்தெரியாது.

இந்த வித்தியாசம் போதும் என்று நினைக்கிறேன். தங்களிடம் தன்னிலை விளக்கம் கொடுக்க எனக்கு அவசியம் இருப்பதாகத் தோன்றவில்லை.

முடிந்தால் எனது பதிவுகளை மட்டும் படியுங்கள், அவசரமாக என்னைப் படிக்க வேண்டாம்.

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//சுரேஷ் ஜீவானந்தம் said...
// நமது குரல் தில்லியில் ஒலிக்க வேண்டும்.
இல்லை என்றால்,
நாம் தில்லியை ஒழிக்க வேண்டும்.
(அதான் சென்னை, கோவை,திருச்சி,மதுரை, இவற்றில் எதாவது ஒற்றை வைத்துக்கொள்ளலாம் என்று சொல்ல வருகிறேன்) //
கலக்கல்.//


வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு சுரேஷ் ஜீவானந்தம்!

//சுரேஷ் ஜீவானந்தம் said...
// நமது குரல் தில்லியில் ஒலிக்க வேண்டும்.
இல்லை என்றால்,
நாம் தில்லியை ஒழிக்க வேண்டும்.
(அதான் சென்னை, கோவை,திருச்சி,மதுரை, இவற்றில் எதாவது ஒற்றை வைத்துக்கொள்ளலாம் என்று சொல்ல வருகிறேன்) //
கலக்கல்.//


வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு சுரேஷ் ஜீவானந்தம்!

துளசி கோபால் said...

ஆரம்ப காலத்துலேயே நடவடிக்கை எடுக்காம( இதுலே அப்ப ஆட்சியில் இருந்த எல்லாக் கட்சிகளும் சேர்த்தி) நல்லா முப்பதுவருசமா முற்ற விட்டுட்டு இப்பதான் குரல் கொடுக்கறோமுன்னு (பல்லு)தந்தி அடிச்சா என்னங்க செய்யறது?

அதான் அப்பப்பக் கவிதை எழுதுனாங்க. நீங்களும் கவிஞர் என்பதால் கவிதைக்குள்ள பலம் புரிஞ்சுருக்கும் இல்லீங்களா?

நாடகமே உலகம்..... அரசியல் நாடகமே உலகம்......

Anonymous said...

கனிமொழியின் ராஜ்யசபா பதவி ராஜினாமா, அன்புமணிக்கு வைக்கப் பட்டிருக்கும் செக்! என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

கோவி.கண்ணன் said...

ஜோபா,

உங்கள் பதிவும் ஹீலியம் பலூன் மாதிரி மேலே போய்விட்டது

Anonymous said...

யாரையும் உயர்த்தியோ தாழ்த்தியோ பிடிக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை. என்னக்கு யாரும் படி அளக்கவில்லை.

எனக்கும் இந்த அரசியல் வாதிகளுக்கும் வித்தியாசம் இல்லையா?


//////


கண்டிப்பாக பெரிய வித்தியாசம் ஒன்றுமில்லை திரு.ஜோதிபாரதி..இந்த சூழலைப்பயன்படுத்தி எப்படி ஈழத்தமிழர் விடயத்தில் காரியம் சாதிக்கலாம் என்று பதிவிட்டிருந்தால் கண்டிப்பாக நீங்களும் சாதாரண அரசியல்வியாதி அல்ல என்று புரிபட்டிருக்கும்...ஆனால் இத்தகைய சூழலில் நதிமூலம் , ரிஷிமூலம் பார்ப்பதென்பது சற்றேறக்குறைய ஒரு மூணாந்தர அரசியல்வியாதி போலவே இருக்கிறது...


///////////////////////


முடிந்தால் எனது பதிவுகளை மட்டும் படியுங்கள், அவசரமாக என்னைப் படிக்க வேண்டாம்.

////

கனிமொழி ராஜினாமா என்பது, மேற்கூறியவற்றை பொய்யாக்கும் ஒரு நாடகம்.(அவர் ராஜ்ய சபா எம்.பி) அவருடைய ராஜினாமா, ராஜ்யசபாத் தலைவர் அன்சாரிக்கு அனுப்பப் பட வேண்டும். கலைஞருக்கு அனுப்பப் பட்டது, அதை ஊடகங்களுக்குத் தெரிவித்தது எல்லாம் கேலிக்கூத்து!///

இந்த இரண்டும் மிகவும் முரண்பாடாக தெரியவில்லையா ? நீங்கள் ஒன்றும் உங்கள் வீட்டில் இந்தக்கருத்துக்களையும் , கட்டுரைகளையும் வைக்கவில்லை.....பொதுமேடைகளில் வைக்கப்படும் கருத்துக்களுக்கு விமர்சனம் வந்தால் அதைத்தாங்கிக்கொள்ளும் பக்குவம் இருந்தால் பதியுங்கள்...அதைவிடுத்து நீங்கள் சொல்வதை விமர்சனமில்லாமல் எல்லாரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றால் நீங்கள் பொதுமேடைகளில் நிற்கவே லாயக்கற்றவர்..ஏனென்றால் நீங்கள் கனிமொழி பற்றி விமர்சிப்பதும் , அந்த அனானி உங்களைப்பற்றி விமர்சிப்பதும் ஒரே மாதிரிதான் எனக்குத்தோணுகிறது.

Anonymous said...

"இதில் அ.தி.மு.கவும், ம.தி.மு.க வும் கலந்து கொள்ளாதது வருந்தத்தக்கது."

என்று எழுதியதே அனைவரும் ஒன்று பட்டு நிற்கவேண்டும் என்பதற்காகத்தான். நான் இதை அரசியலாக்கவில்லை. அனைத்து கட்சியினரும், தமிழக அரசும் ஈழப்பிரச்சனையை அரசியலாக்கிக்கொண்டே இருக்கக் கூடாது என்கிற ஆதங்கப் பதிவுதான். என்னுள் எழுந்த கேள்விகளைப் பதிவு செய்தேன். இனியாவது நம்மவர்களுக்கு நல்ல பொழுது விடியும் என்று நம்புவோம்.////////

அட்டா , உங்கள் கரிசனம் புல்லரிக்க வைக்கிறது....

அனைத்துக்கட்சி கூட்டத்தை புறக்கணித்ததற்கு வருத்தம் மட்டுமே தெரிவிக்கிறீர்கள்...ஆனால் பின் தேதியிட்டு ராஜினாமா செய்த கனிமொழி நாடகம் நடத்துகிறார்...நல்லாத்தான் அளக்கறீங்க போங்க...

ஜோ/Joe said...

ஜெகதீஷ்-ன் கருத்துக்களை முழுவதுமாக வழி மொழிகிறேன்.

Anonymous said...

கனிமொழியின் பதவி விலகல் வரவேற்கப்படவேண்டிய ஒன்று. ஊடகங்களில் வெளிவந்ததும் நன்றே.

மக்களவை மற்றுமல்ல மாநிலங்களவை உறுப்பினர்களும் பதவி விலகவேண்டிய நிர்பந்தத்தை ஏற்படுத்தும்.

அனைத்துக்கட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் தீவிரத்தன்மையை மத்திய அரசுக்கு உணர்த்துவதாக இருக்கும்.

நல்ல முன்னோட்டமாக இதைப் பார்க்கவேண்டும்.

Anonymous said...

//உங்கள் ரிப்போட்டைப் படித்தேன். தமிழக அரசுக்கும், அரசியல் வாதிகளுக்கும் நன்றி சொல்லும் டக்லஸ், தமிழர்களின் பிரதிநிதி என்பதில் அர்த்தமில்லை. மகிந்த அரசில் அமைச்சராக ஒட்டிக் கொண்டிருப்பதிலும் அர்த்தம் இல்லை. போராடும் தமிழர்களோடு போராட வேண்டியதுதானே?//
நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள்.
பிரபாகரனுக்காக மற்ற தமிழர்கள் அழியவதையா?

Anonymous said...

தமிழ்நாட்டு தலைவர்களிடமும், மக்களிடமும் வேண்டுகோள்
விடுதலைப் புலிகள் தமது இரும்புக் கதவை எப்போ திறக்கின்றார்களோ உடனடியாக மக்கள் வெளியேறி தத்தம் இருப்பிடங்களுக்கு போகத் தயாராக உள்ளனர்.
அன்புள்ள தமிழ்நாட்டு தலைவர்களே, மக்களே!

விடுதலைப் புலிகளால் தமது கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இருந்து வெளி செல்லவிடாது அவர்களின் பொறிக்குள் அகப்பட்டுள்ள தமிழ் மக்களை காப்பாற்ற வேண்டியது தமிழ் நாட்டின் முதல் கடமையாகும். விடுதலைப் புலிகளை காப்பாற்றும் நோக்கோடு தற்போது சென்னையில் தங்கியிருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்களின் தவறான வழிநடத்தலைத் தவிர்த்து தமிழ் நாட்டு மக்கள் தற்போது இலங்கையில் நிலவும் நிலைமை பற்றிய உண்மையை அறிந்திருக்க வேண்டிய இரண்டாவது கடமையாகும்.

தமிழக தலைவர்கள் அரசியல் கட்சி தலைவர்கள் பொது மக்கள் ஆகியோர் இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள துன்பகரமான நிலைமைபற்றி அக்கறையும் மனக்கிலேசமும், உற்சாகமும் கொண்டுள்ளமை எனது உள்ளத்தை ஆழமாக தொடுகிறது. ஆனால் தற்போதைய நிலைமையை விளக்குவதற்கு கையாளப்பட்ட வார்த்தை எனக்கு அதிர்ச்சியை தருகிறது. வேண்டுமென்றோ அன்றி வேறு வழி மூலமோ யாரையும் யார் ஒழித்துக்கட்ட எந்த முயற்சியும் இலங்கையில் எடுக்கவில்லை. யுத்த பிரதேசத்தில் சில அப்பாவி மக்கள் கொல்லப்பட்டிருப்பது உண்மையே. ஆனால் இதை இன ஒழி;ப்பாக வர்ணிப்பது தவறானதாகும். அரசுக்கும், நாட்டுத் தலைவர்களையே விட்டு வைக்காத கொடூரமான பயங்கரவாத இயக்கமாகிய விடுதலைப் புலிகளுக்கும் இடையே ஓர் யுத்தம் நடைபெறுகிறது. தமது நாட்டு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பூதவுடலை உருக்குலைந்த சதைப்பிண்டமாக எவ்வாறு கையேற்றோம் என்பதை தமிழகம் இவ்வளவு இலகுவாக மறந்திருக்க முடியாது. இலங்கையில் சிங்கள தமிழ் பிரதேசங்களில் இது போன்ற பல சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. நூற்றுக்கணக்கான பௌத்தர்களும், இஸ்லாமிய சகோதரர்களும் அவரவர் மத ஸ்தனங்களில் வைத்து படுகொலை செய்யப்பட்டிருக்கின்றார்கள். த.தே.கூ பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழ் நாட்டின் உதவியோடு விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்குள் அகப்பட்டுள்ள அப்பாவி தமிழ் மக்களை உடனடியாக விடுவிக்க தவறினால் அவர்களுக்கும் இதேபோன்ற நிலைமை ஏற்படலாம்.

தற்போது ஏற்பட்டுள்ள நிலைமைக்கேற்ப பொருத்தமான ஓர் நிலைப்பாட்டை எடுக்க தமிழ்நாட்டுக்கு இன்னும் காலம் கடக்கவில்லை. பாக்குத் தொடுவாய்க்கு அப்பால் வாழும் மக்களுக்கு தமிழ்நாடு எடுக்கக்கூடிய நடவடிக்கை சாதகமானதாக அமைய வேண்டுமேயன்றி பாதகமாக அமையக்கூடாது என்பதை வற்புறுத்தி கூற விரும்புகின்றேன். யுத்தமுனை தற்போது கிளிநொச்சிக்கு நகர்ந்துள்ளமையால் கிளிநொச்சியின் களநிலைமை பற்றி நன்கு அறிந்து கொண்டால் மட்டுமே நம் பிரச்சினை பற்றி எவரேனும் பேச முடியும். தமிழ்நாட்டு தலைவர்கள் சிலரும் மக்கள் பலரும் கடந்த பல ஆண்டுகளாக மிகைப்படுத்தப்பட்ட உண்மைக்குப் புறம்பான கட்டுக்கதைகளை விடுதலைப் புலிகளில் அக்கறை கொண்ட சிலர் அவர்களை மேம்படுத்தும் நோக்குடன், அவிழ்த்து விட்டமையால் பல வருடங்களாக அவர்கள் தப்பாக வழிநடத்தப்பட்டு வந்துள்ளனர். ஆனால் இலங்கை தமிழரின் பிரச்சினைக்கு அவர்களுக்கு ஏற்புடையதான நியாயமான ஓர் தீர்வை சிபாரிசு செய்யக்கூடிய அறிவுமிக்க தலைவர்கள் தமிழ் நாட்டில் நிறைய உள்ளனர். துரதிஷ்டவசமாக விடுதலைப் புலிகள் விடாப்பிடியாக கொண்டிருந்த பிரிவினை கோரிக்கையினால் இவ் வாய்ப்புக்கள் உபயோகிக்காது தவறவிடப்பட்டது.

இக்கட்டத்தில் தமிழ்நாடு ஓர் உறுதியான நிலைப்பாட்டை எடுத்து செயல்பட முடியுமானால் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை பற்றி தமிழ் நாட்டவர்களுக்கு தெளிவுபடுத்த வேண்டிய தார்மீக கடமை எனக்குண்டு. கிளிநொச்சி மக்கள் மீது அதிக அக்கறை கொண்டவன் நானே என்பதால் கிளிநொச்சியுடன் எனக்குள்ள தொடர்பை அறிந்த யாரும் எனது நாணயத்துக்கு சவால்விட மாட்டார்கள்.

நான் 50 ஆண்டுகளுக்கு மேல் அரசியலில் உள்ளேன். கிளிநொச்சி மக்களுடன் உண்டு வாழ்ந்தவன். முதலில் என்னை அம் மக்கள் கிளிநொச்சி கிராமசபைத் தலைவராகவும், அதன் பின் கிளிநொச்சி பட்டினசபைத் தலைவராகவும் கடைசியாக என்னை தமது பிரதிநிதியாக கிளிநொச்சி பாராளுமன்ற உறுப்பினராக 1970ம் ஆண்டு ஜூலை மாதம் தெரிவு செய்தனர். 1983ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஏனைய 17 தமிழர் விடுதலைக் கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர்களுடன் சேர்ந்து பாராளுமன்றத்தின் காலை எல்லையை ஆறு ஆண்டுகளுக்கு பொதுஜன வாக்கெடுப்பின் மூலம் நீடிப்பதை ஆட்சேபித்து பதவியை ராஜினாமா செய்தோம். இரண்டாவது உலக யுத்தத்தின் போது நடந்தது போல் உலக யுத்த காலத்தை தவிர வேறு சந்தர்ப்பத்தில் பாராளுமன்ற காலத்தை நீடிக்கும் வழக்கம் எந்த நாட்டிலும் நடைபெறவில்லை. இலங்கையில் ஜனநாயகத்தை பாதுகாக்க தமிழர் விடுதலைக் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர்களின் அர்ப்பணிப்பு இதுவாகும். அவர்கள் 18 பேரின் இடங்கள் தொடர்ந்து ஆறு ஆண்டுகள் காலியாகவே இருந்தன. இவ் வேண்டுதல் மிதவாத தமிழ் அரசியற் கட்சியாகிய இக் கட்சியின் ஆரம்பகால உறுப்பினரும் தற்போதைய தலைவராக பணியாற்றி வருவபவருபவரிடமிருந்து வருகிறது..

கடந்த சில ஆண்டுகளாக விடுதலைப் புலிகள் தம் கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குள் அடிமைப்படுத்தி வைத்திருக்கும் தமிழ் மக்களை விடுவித்துத் தருமாறு ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் நாயகம், பல்நாட்டு தலைவர்கள், பல் நாட்டுத் தூதுவர்கள், சமய குரவர்கள் போன்றோரை வேண்டி வந்துள்ளேன். இம் மக்கள் தம் ஜனநாயக உரிமைகள், அடிப்படை உரிமைகள் அத்தனையும் இழந்து வாழ்ந்து வருகின்றனர். ஒருவரின் கற்பனைக்கெட்டாத அளவுக்கு அவர்களின் மனித உரிமைகள் மீறப்பட்டிருந்தன. தங்கு தடையின்றி அவர்கள் பலாத்காரமாக தமது அணிக்கு ஆட்களைச் சேர்;த்தனர். முதியோரை கூட விட்டு வைக்காது ஏதோ பயிற்சிகளை பலாத்காரமாக கொடுத்தனர். அவர்கள் கடத்தியவர்கள் அநேகரை காணவில்லை. அவர்களிடம் சித்திரவதை முகாம்களும், இருட்டறை முகாம்களும் இருப்பதோடு அவர்கள் சித்திரவதைக்கு கையாளும் முறை நாகரீக உலகில் அறியாதவையாகும். அவர்கள் சித்திரவதைக்கு கையாளும் முறைகளில் ஒன்று முக்கோண வடிவம் கொண்ட முட்கம்பியால் சுற்றப்பட்ட ஓர் கூடு. தண்டனைக்குரியவரின் உயரத்திலும் குறைவான அக் கூட்டுக்குள் விடப்படுவார். கை கால் அசைக்கவோ, நிமிர்ந்து நிற்கவோ போதிய இடம் அக்கூட்டுக்குள் இருக்காது. இருட்டறைக்குள் பாம்பை விடுவது மற்றும் ஓர் முறையாகும். அவர்களின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் வாழும் மக்களின் ஒவ்வொரு வீடும் மரண ஓலம் கேட்கும் வீடாகும். புலிகளின் இயக்கத்தில் சேர்வதை தடுக்கும் பெற்றோரை ஈவிரக்கமின்றி தாக்குகின்றனர். இரும்புத்திரை பிரதேசம் என வர்ணிக்கப்படும் அவர்களின் கட்டுப்பாட்டு பிரதேசத்தில் நடப்பவை. வெளி உலகறிய வாய்ப்பில்லை. என்னுடைய இக் குற்றச்சாட்டை சரியென தற்போது தமிழ் நாட்டில் ஆர்ப்பாட்டங்கள், சத்தியாக்கிரகம் ஆகியவற்றில் கலந்து கொள்ளும் தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் உறுதிப்படுத்துவார்கள் என நம்புகின்றேன். அத்துடன் விடுதலைப் புலிகளின் பிரதேசத்தில் அடிமைகள் போல் வாழும் தமிழ் மக்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்ற எனது கோரிக்கையை அவர்கள் ஆமோதிக்க வேண்டும். தவறின் அவர்கள் இலங்கை சம்பந்தமாக நடக்கும் எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாது கௌரவமாக விலகிக் கொள்ள வேண்டும்.

தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களின் மக்களின் உணர்வுகளை தூண்டும் பேச்சுக்கள் தமிழ் நாட்டில் தவிர்க்கப்பட வேண்டும். 50 வீதத்துக்கு மேற்பட்ட தமிழ் மக்கள் தென்னிலங்கையில் சிங்கள, முஸ்லீம் மக்கள் மத்தியில் வாழ்வதால் இவர்களுடைய பேச்சுக்கள் அவர்களுக்கு ஓர் சங்கடமான நிலைமையை உருவாக்கலாம். இப்; பாராளுமன்ற உறுப்பினர்கள் விடுதலைப் புலிகளின் ஆயுத பலத்தால் மோசடி மூலம் தெரிவாகி விடுதலைப் புலிகளின் பினாமிகளாக செயற்படுகிறார்களே அன்றி தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக அல்ல. என்னுடைய கூற்றை யாரும் மறுத்துரைப்பின் அவர்களை கடந்த தேர்தல் காலத்தில் இலங்கையில் தேர்தல் கண்காணிப்பு குழுவாக செயற்பட்ட நான்கு அமைப்புக்களி;ன் அறிக்கைகளை படிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். அக் குழுக்களில் ஐரோப்பிய யூனியனும், பொதுநலவாய நாடுகளின் பிரதிநிதிகளும், வெளிநாட்டிலிருந்தும் வந்திருந்தனர். உள்ளுர் அமைப்புக்களாக பவ்ரல், சி.எம்.ஈ.வி ஆகியவை நடந்த தேர்தலை தள்ளுபடி செய்து புதிய தேர்தலை நடத்த வேண்டுமென சிபாரிசும் செய்திருந்தன.

சர்வதேச சமூகத்திடம் பல தடவை நான் வேண்டுகோள் விடுத்தும் அவர்களால் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்குள் புகும் அனுமதியின்மையால் அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. போர் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ் விடுதலைப் புலிகள் அரச கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குள் செல்ல அனுமதியிருந்ததே அன்றி அதேபோன்று புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்கு எவரும் போகக்கூடிய மாற்று ஒழுங்கு செய்யப்பட்டிருக்கவில்லை. அதன் விளைவாக விடுதலைப் புலிகள் தமது கட்டுப்பாட்டுப் பிரதேசத்தோடு, அரச கட்டு;ப்பாட்டுப் பிரதேசத்தையும் தம் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரக் கூடிய வாய்ப்பு இருந்தது. அவர்கள் பிரதேசத்தில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள் பற்றிய செய்திகள் வெளிவருவதே இல்லை. விடுதலைப் புலிகளே அரச கட்டுப்பாட்டுப் பிரதேசத்திலும் ஆதிக்கம் செலுத்தி வந்தமையால் அங்கே நடைபெறும் அனேக மனித உரிமை மீறல்களுக்கு விடுதலைப் புலிகளே பொறுப்பேற்க வேண்டும்.

இலங்கையில் நடைபெறும் அனைத்து மனித உரிமை மீறல்களும் விடுதலைப் புலிகளால் ஏற்படுவதாக நான் கூற வரவில்லை. நான் கூறுவதெல்லாம் மனித உரிமை மீறல்களில் பெரும் பகுதிக்கு இவர்களே பொறுப்பென்றும் அவர்களின் நடவடிக்கையால் உண்மையான குற்றவாளிகள் பிடிபடாமல் தப்பித்துக் கொள்கின்றார்கள் என்பதேயாகும். தமிழ் பொலிஸ் அதிகாரிகள் பலரை விடுதலைப் புலிகள் ஏற்கனவே கொன்று விட்டனர். புதிதாக எவரும் பொலிசாக விண்ணப்பிக்க முடியாது தடை விதித்திருந்தனர். அதன் விளைவாக மிகக் குறைந்த எண்ணிக்கையுள்ள தமிழ் அதிகாரிகள் இருப்பதால் தமிழ் பிரதேசத்தில் இயங்கும் அநேக பொலிஸ் நிலையங்கள் சிங்கள அதிகாரிகளின் கீழே இயங்கி வருகின்றன. தவறுதலாக ஏற்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தால் ஏற்பட்ட மரண விசாரணையை நடத்த ஒரு சிங்கள பொலிஸ் அதிகாரி சென்றபோது நிராயுதபாணியாகவும், பாதுகாப்பு அதிகாரிகள் எதுவும் இல்லாமலும் வரவேண்டுமென சில இளைஞர்கள் வற்புறுத்தியதற்கு இணங்க பொதுவாக நல்ல பெயருடன் செயற்பட்ட இவ் அதிகாரி சென்ற போது சொற்ப நேரத்துக்குள் வெட்டிக் கொலை செய்யப்பட்டு வீதியில் வீசப்பட்டிருந்த அவரது புகைப்படம் விடுதலைப் புலிகளின் சார்பான இணையத் தளத்தில் வெளியாகியிருந்தது. இத்தகைய சூழ்நிலையில் இன்னொரு சிங்கள அதிகாரி சுதந்திரமாக செயற்பட முடியுமா? இச் சம்பவம் ஏன் எப்படி? குற்றவாளிகள் பிடிபடாமல் தப்பிக் கொள்கின்றனர் என்பதற்கு ஒரு உதாரணமாகும். மேலும் அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையில் யுத்தம் நடைபெறுகிறது. அரசுடன் சம நிலையை கோரி நிற்கும் விடுதலைப் புலிகளை யாரால் என்ன செய்ய முடியும்? விடுதலைப் புலிகள் விமான மூலம் குண்டுபோடும் போது அரசு படைகள் விமானத் தாக்குதல் நடத்தும் போது அவர்களை எவ்வாறு குற்றம் கூற முடியும்? இருப்பினும் விமானத் தாக்குதலால் அப்பாவி மக்கள் பாதிக்கப்படும் வேளையில் அதைச் சுட்டிக்காட்ட நான் தவறவில்லை. இரவு வேளையில் குண்டுத் தாக்குதலை தவிர்க்குமாறு விடப்பட்ட எனது கோரிக்கைக்கு அரசு செவிமடுத்து வந்துள்ளது.

இனப்படுகொலையில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதென்ற விடுதலைப் புலிகளின் குற்றச்சாட்டு மிக அபாண்டமானது. 50 வீதத்துக்கு மேற்பட்ட தமிழ் மக்கள் சிங்கள, முஸ்லீம் மக்கள் மத்தியில் வாழ்கின்றார்கள். அவர்களில் அநேகர் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திலிருந்து தப்பியோடியவர்களே. ஓர் இனக்கலவரத்தை தூண்டுவதற்கு புலிகள் எடுத்த பல்வேறு முயற்சிகள் படுதோல்வியில் முடிந்தது. சிங்கள பிரதேசத்தில் புலிகளால் மேற்கொள்ளப்படும் கிளேமோர் தாக்குதல், அரச படையினரையும், பொது மக்களையும் இலக்கு வைத்து இனக்கலவரத்தைத் தூண்டும் முயற்சிகளாக அமைகின்றன. இத்தகைய சம்பவங்களில் அப்பாவி பொது மக்கள் பலியாகின்றனர். விடுதலைப் புலிகளால் கொலை செய்யப்பட்ட தமிழ் அரசியல்வாதிகள், கல்விமான்கள், அதிபர்கள், வர்த்தகர்கள் பல்வேறு இயக்கங்களின் உறுப்பினர்கள் போன்றோர்கள் பல்லாயிரக்கணக்கானவர்கள். ஒப்பிட்டுப் பார்ப்பின் இத்தகைய கொலைகள் ஒன்றேனும் சிங்கள மக்களால் செய்யப்பட வில்லை. 1983ம் ஆண்டு நடைபெற்ற கறுப்பு ஜூலை கலவரமே கடைசியாக நடந்தேறிய கலவரமாகும். அதைத் தூண்டியவர்கள் கூட விடுதலைப் புலிகளே. 13 இராணுவ வீரர்களின் படுகொலையே இதற்குக் காரணமாக இருந்தது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டு கொலைகள், தீ வைப்பு ஆகியவற்றில் ஈடுபட்டவர்கள் சிங்கள காடையர்களே. பல லட்சக்கணக்கான தமிழ் மக்களின் உயிர்களை பாதுகாத்துக் கொடுத்த பெருமை சிங்கள மக்களுக்கே உரியதாகும்.

1983ம் ஆண்டு இருந்த சனத்தொகை அரைவாசியாக குறைந்து விட்டது. சிலர் தென்னிலங்கையில் சிங்கள, முஸ்லீம்களோடும், சிலர் தமிழ்நாட்டிலும், பலர் வெளிநாடு சென்று இங்கிலாந்து, ஐரோப்பியா, ஸ்கண்டிநேவியா, கனடா, அமெரிக்க போன்ற நாடுகளில் குடியேறி உள்ளனர். இலங்கைத் தமிழருக்கு விடுதலை பெற்றுத் தருவோம் என்று கூறிய போராளிகள் இறுதியில் தமிழ் மக்களை இக் கதிக்கு ஆளாக்கியுள்ளனர். இறந்த பொது மக்களும், போர் வீரர்களும் ஒரு லட்சத்துக்கு மேல் ஆகும். பல்லாயிரக்கணக்கானோர் வாழ்விழந்தவர்களாகவும் விதவைகளாகவும், கை கால்கள் கண்பார்வையை இழந்துள்ளவர்களாகவும் உள்ளனர். விடுதலைப் புலிகளின் கணக்கின்படி தமது போராளிகள் 20,000 பேருக்கு மேற்பட்டவர்களை போர்முனையில் பலிகொடுத்துள்ளனர். அவர்களால் ஏற்பட்ட பொருள் சேதம் பல கோடி.

நவீன ஆயுதங்களோடு ஒரு யுத்தத்திலேயே விடுதலைப் புலிகள் ஈடுபட்டுள்ளனர். பெரிதோ, சிறிதோ யுத்தத்துக்கு விமானங்களையும் பாவிக்கின்றனர். ஏறக்குறைய சகல உரிமைகளும் பறிக்கப்பட்டு ஒரு பகுதி மக்களை அடிமைகள் போல் வாழ வைத்துள்ளனர். சில பகுதிகளில் இந்நிலை கால்நூற்றாண்டுக்கு மேல் நீடிக்கிறது. 20-25 வயதுக்குட்பட்ட பிள்ளைகள் தம் வாழ்நாளில் ஒரு புகையிரதத்தை தன்னும் காணவில்லை. அவர்கள் அறிந்துள்ள தலைவர்கள் பிரபாகரன், பொட்டுஅம்மான், தமிழ்ச்செல்வன் போன்றவர்களே. சட்ட விரோதமான ஓர் பயங்கரவாத இயக்கமாகிய விடுதலைப் புலிகளின் கெடுபிடியிலிருந்து தம் மக்களை மீட்டெடுக்க வேண்டிய கடமைப்பாடு அரசுக்குண்டு. நீண்ட காலமாக இம் மக்கள் தம் விடுதலையை வேண்டி நிற்கின்றனர். சில அப்பாவி ஆண், பெண் பிள்ளைகள் அநியாயமாக கொல்லப்படுவது மிக்க வேதனையை தருகிறது. இவ்வாறு நானும் சில நண்பர்களையும், உறவினர்களையும் இழந்துள்ளேன். பிரபாகரனுடைய தற்கொலை குண்டுதாரிகள் கிளேமோர் குண்டுத் தாக்குதல் போன்ற சம்பவத்தால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையை பார்க்கும் போது யுத்தத்தால் இறந்தவர்களி;ன் எண்ணிக்கை கணக்கில் கொள்ள முடியாதளவுக்கு மிகச் சிறியளவே. இவ்வாறு கூறுவது அரச படைகளின் தாக்குதலால் கொல்லப்படுவதற்கு அங்கீகாரம் அளிப்பதல்ல. ஆனால் இந்தச் சந்தர்ப்பத்தில் யாரைக் குற்றம் காண்பது என்ற கேள்விக்கு எனக்கு விடை தெரியவில்லை. இனப்படுகொலை என்ற வார்த்தை உபயோகிப்பதை நான் எதிர்க்கிறேன். ஏனெனில் அப்படி நடக்கவில்லை. அதைத் தவிர இவ்வாறு கொல்லப்படுபவர்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டு போவது பெரும் துன்பத்தை தருகிறது. அதிலும் குறிப்பாக மக்களை பிரதிநிதித்துவப் படுத்துவதாக கூறிக்கொண்டிருக்கின்ற சில இலங்கை பா.உ க்கள் தமிழ் நாட்டில் வாழும் ஆறு கோடி தமிழ் பேசும் மக்களுக்கு பிழையான தகவலை கொடுப்பதோடு உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாகிய இந்தியாவுக்கு தவறான வழிநடத்தலை செய்வதும் வேதனையை தருகிறது.

கடந்த கால் நூற்றாண்டு காலமாக விடுதலைப் புலிகள் தமிழ் மக்களை ஏமாற்றி வந்துள்ளனர். அவர்களிடமிருந்தே தமி;ழ் மக்களுக்கு விடுதலை வேண்டும். விடுதலைப் புலிகளிடமிருந்து பெரும் பகுதியை - கிழக்கை முற்றாகவும், வடக்கின் 75 வீத பிரதேசத்தையும் மீட்டுள்ளனர். எஞ்சியுள்ளது ஒரு சிறு பகுதியே. மன்னார் வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய பகுதியில் இடம்பெயர்ந்த அத்தனை பேரும் இச் சிறு பகுதிக்குள்ளே தள்ளப்பட்டுள்ளனர். விடுதலைப்புலிகள் தமது பாதுகாப்புக்காக இவர்களை கட்டாயப்படுத்தியே இங்கே கொண்டு வந்துள்ளனர். இப்பொழுது அவர்களை மனித கேடயமாக பாவிக்கின்றனர். அவர்களுக்கு முறையான உணவோ, இருப்பிடமோ இல்லை. ஒவ்வொருவரும் விடுதலைப் புலிகளை காப்பாற்றுவதிலேயே அக்கறை காட்டுகின்றனர். இரு தினங்களுக்கு முன் இடம் பெயர்ந்த மக்கள் இராணுவத்துக்கு பயந்தே கிளிநொச்சியை விட்டுப்போக விரும்புகிறார்கள் இல்லையென பாராளுமன்றத்தில் ஒரு த.தே.கூ உறுப்பினர் புழுகியிருந்தார். இது வெறும் புரட்டாகும். விடுதலைப் புலிகள் தமது இரும்புக் கதவை எப்போ திறக்கின்றார்களோ உடனடியாக மக்கள் வெளியேறி தத்தம் இருப்பிடங்களுக்கு போகத் தயாராக உள்ளனர். மக்களின் துன்பங்களை பொருட்படுத்தாது புலிகளால் உருவாக்கப்பட்ட ஒரு செயற்கையான சிருஷ்டிப்பாகும். இன்றைய நிலைப்பாடு கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் வவுனியா போன்ற பகுதிகளில் பெரும் பகுதி காட்டுப்பிரதேசமாகவும், விஷப் பாம்புகள் நிறைந்த பிரதேசமாகும். பலர் பாம்புக்கடியால் இறந்துள்ளனர். விரைவில் மழை காலம் ஆரம்பித்துவிடும். இக் கொடுமையை மக்களால் மேலும் தாங்க முடியாது. இதில் கூடுதலாக பாதிக்கப்பட்டவர்கள் பெண்களும், குழந்தைகளுமே. விடுதலைப் புலிகளை சமாதானப் படுத்தியோ அன்றேல் ஆதரவு நல்குவதை நிறுத்தி விடுவோம் என அச்சுறுத்தியோ புலிகளை கொண்டு மக்கள் தப்பிப் போகக் கூடிய வகையிலே பாதையை திறந்துவிட வற்புறுத்த வேண்டிய புனிதமான கடமை தமிழ் நாட்டுக்கு உண்டு. பல ஆண்டு காலமாக விடுதலைப் புலிகளின் அடிமைத்தனத்தால் பல துன்பங்களை அனுபவித்து வரும் மக்கள் மீது தமிழ் நாட்டுக்கு அக்கறை இருப்பதால் தாம் இருக்கும் இடத்தை தாமே தெரிவு செய்ய வேண்டும் என்ற அடிப்படை உரிமையை அவர்களுக்கு பெற்றுக் கொடுக்க வேண்டும். யுத்த சூழ்நிலையில் பயத்துடனும், பீதியுடனும் கிளிநொச்சியில் வாழும் மக்களை விடுதலை புலிகளுக்கு அழுத்தம் கொடுத்தேனும் தமிழ்நாடு பாதுகாக்க வேண்டும்.

இந் நாட்டிலுள்ள பிரச்சினை பல்வேறு இனத்தவர்களுக்கிடையிலானது அல்ல. ஒருவருக்குரிய உரிமைகள், சலுகைகள் போன்றவை சம்பந்தமானதால் அப்பிரச்சினைகள் பேச்சுவார்த்தை மேசையில் வைத்தே தீர்க்கக்கூடியவை. விடுதலைப் புலிகள் பிரிவினை கோரிக்கையை கைவிட்டு ஆயுதங்களையும் கைவிடுவார்களேயானால் பேச்சுவார்த்தையில் முக்கிய பாத்திரம் ஏற்கக்கூடிய வகையில் எம்மால் உதவ முடியும். இந்தியாவிலும், இலங்கையிலும் உலகி;ன் பல்வேறு பகுதிகளிலும் உள்ள மக்கள் ஒவ்வொருவரும் தனித் தமிழீழம் அமைப்பது முடியாத காரியமென அறிவர். இந்திய அரசு இதை வன்மையாக எதிர்க்கிறது. அதேபோன்றே சர்வதேச சமூகமும் எதிர்க்கிறது. நமக்குள்ள ஒரேயொரு வழி ஓர் சமஷ்டி அமைப்பை உருவாக்குவது அன்றேல் அதற்கு ஒரேயொரு மாற்றாக இந்திய சாசனத்தை ஒத்ததாக இலங்கையின் பல்வேறு பிரதேசங்களுக்கு தமிழ் நாடு போன்று பல்வேறு மாநிலங்களுக்கு வழங்கப்பட்டிருப்பது போன்ற ஓர் அமைப்பு முறையை ஏற்படுத்துவதாகும்.

மறைந்த தலைவி கௌரவ இந்திராகாந்தி அவர்களும், மறைந்த தலைவர் கௌரவ ராஜீவ்காந்தி அவர்கள் போன்றோர் தமிழ் மக்களுக்கு ஆற்றிய அரும் பெரும் சேவையை நன்றியுடன் நினைவு கூர்கிறோம். அதேபோன்று மறைந்த கௌரவ டாக்டர் எம்.ஜி. இராமச்சந்திரன் அவர்களுக்கும், கௌரவ டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்களுக்கும் நன்றியுடையவர்களாக உள்ளோம். இந்திய - இலங்கை ஒப்பந்தத்தை முறைப்படி செயற்படுத்த வேண்டுமென இத் தலைவர்கள் கூறிய நல்ல ஆலோசனையை பிரபாகரன் ஏற்று நடந்திருப்பாரேயானால் எமது நாட்டு மக்கள் சம உரிமையுடனும் பரஸ்பர நல்லெண்ணத்தையும், நம்பிக்கையையும் கட்டியெழுப்பி மிகச் சிறப்பாகவும், செழிப்பாகவும் எமது நாடு மாறியிருக்கும். பல்லாயிரக்கணக்கான உயிர்களும் கோடானுகோடி பெறுமதியான சொத்துக்களும் காப்பாற்றப்பட்டிருக்கும். ஆனால் திரு. பிரபாகரன் அவர்கள் நாடு திரும்பியதும் நன்றி கெட்டத்தனமாக அவர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை மீறி இந்திய-இலங்கை ஒப்பந்தத்துக்கு மாறாக செயல்பட்டமையே நம் நாடு இன்று எதிர்நோக்கும் சீhகெட்ட நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

கௌரவ செல்வி டாக்டர் ஜெயலலிதா ஜெயராமன் அவர்கள் தீவிரவாத இயக்கமான விடுதலைப் புலிகள் பற்றி எடுத்துள்ள நிலைப்பாட்டையும் மற்ற அத்தனை விடயங்களிலும் முழு ஒத்துழைப்புக் கொடுத்து மக்களை இன்றுள்ள இக்கட்டான நிலையில் இருந்து மீட்டெடுக்க உறுதி பூண்டுள்ளதையும் நாம் மிகவும் பாராட்டுகின்றோம்.

தமக்குள்ள வேற்றுமைகளை மறந்து தமது உரிமைகள், சொத்துக்கள், சுய கௌரவம் ஆகியவற்றை இழந்து நிற்கும் இலங்கைத் தமிழ் மக்களை மீட்டெடுக்க வேண்டிய நேரம் தமிழ் நாட்டு தலைவர்களுக்கு வந்துள்ளது. வெளியேறும் உரிமை மறுக்கப்பட்டு கிளிநொச்சிக்குள் அகப்பட்டு தவிக்கும் மக்களை காப்பதே அவர்களின் உடனடி நடவடிக்கையாகும். இதை செய்யத் தவறின் மக்களின் எதிர்காலம் பெரும் அனர்த்தத்தில் முடியும் என்பது உறுதி.

அன்புடன்

வீ. ஆனந்தசங்கரி
தலைவர்-த.வி.கூ

http://www.thenee.com/html/161008-4.html

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//துளசி கோபால் said...
ஆரம்ப காலத்துலேயே நடவடிக்கை எடுக்காம( இதுலே அப்ப ஆட்சியில் இருந்த எல்லாக் கட்சிகளும் சேர்த்தி) நல்லா முப்பதுவருசமா முற்ற விட்டுட்டு இப்பதான் குரல் கொடுக்கறோமுன்னு (பல்லு)தந்தி அடிச்சா என்னங்க செய்யறது?

அதான் அப்பப்பக் கவிதை எழுதுனாங்க. நீங்களும் கவிஞர் என்பதால் கவிதைக்குள்ள பலம் புரிஞ்சுருக்கும் இல்லீங்களா?

நாடகமே உலகம்..... அரசியல் நாடகமே உலகம்......//

துளசியம்மா,
யாரும் மனதார பிரச்சனை தீர உழைப்பதாகத் தெரியவில்லை.
அதுதான் வேதனையான உண்மையாக இருக்கிறது.

//துளசி கோபால் said...
ஆரம்ப காலத்துலேயே நடவடிக்கை எடுக்காம( இதுலே அப்ப ஆட்சியில் இருந்த எல்லாக் கட்சிகளும் சேர்த்தி) நல்லா முப்பதுவருசமா முற்ற விட்டுட்டு இப்பதான் குரல் கொடுக்கறோமுன்னு (பல்லு)தந்தி அடிச்சா என்னங்க செய்யறது?

அதான் அப்பப்பக் கவிதை எழுதுனாங்க. நீங்களும் கவிஞர் என்பதால் கவிதைக்குள்ள பலம் புரிஞ்சுருக்கும் இல்லீங்களா?

நாடகமே உலகம்..... அரசியல் நாடகமே உலகம்......//

துளசியம்மா,
யாரும் மனதார பிரச்சனை தீர உழைப்பதாகத் தெரியவில்லை.
அதுதான் வேதனையான உண்மையாக இருக்கிறது.

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

வெளங்காதவன் said...
கனிமொழியின் ராஜ்யசபா பதவி ராஜினாமா, அன்புமணிக்கு வைக்கப் பட்டிருக்கும் செக்! என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

வெளங்காதவன் said...
கனிமொழியின் ராஜ்யசபா பதவி ராஜினாமா, அன்புமணிக்கு வைக்கப் பட்டிருக்கும் செக்! என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//கோவி.கண்ணன் said...
ஜோபா,

உங்கள் பதிவும் ஹீலியம் பலூன் மாதிரி மேலே போய்விட்டது//


ஈழத்தமிழருக்காக சூடாகியிருந்தால் மகிழ்ச்சியடைவேன்.

//கோவி.கண்ணன் said...
ஜோபா,

உங்கள் பதிவும் ஹீலியம் பலூன் மாதிரி மேலே போய்விட்டது//


ஈழத்தமிழருக்காக சூடாகியிருந்தால் மகிழ்ச்சியடைவேன்.

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

ஜெகதீஷ் said...
யாரையும் உயர்த்தியோ தாழ்த்தியோ பிடிக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை. என்னக்கு யாரும் படி அளக்கவில்லை.

எனக்கும் இந்த அரசியல் வாதிகளுக்கும் வித்தியாசம் இல்லையா?


//////


கண்டிப்பாக பெரிய வித்தியாசம் ஒன்றுமில்லை திரு.ஜோதிபாரதி..இந்த சூழலைப்பயன்படுத்தி எப்படி ஈழத்தமிழர் விடயத்தில் காரியம் சாதிக்கலாம் என்று பதிவிட்டிருந்தால் கண்டிப்பாக நீங்களும் சாதாரண அரசியல்வியாதி அல்ல என்று புரிபட்டிருக்கும்...ஆனால் இத்தகைய சூழலில் நதிமூலம் , ரிஷிமூலம் பார்ப்பதென்பது சற்றேறக்குறைய ஒரு மூணாந்தர அரசியல்வியாதி போலவே இருக்கிறது...


///////////////////////


முடிந்தால் எனது பதிவுகளை மட்டும் படியுங்கள், அவசரமாக என்னைப் படிக்க வேண்டாம்.

////

கனிமொழி ராஜினாமா என்பது, மேற்கூறியவற்றை பொய்யாக்கும் ஒரு நாடகம்.(அவர் ராஜ்ய சபா எம்.பி) அவருடைய ராஜினாமா, ராஜ்யசபாத் தலைவர் அன்சாரிக்கு அனுப்பப் பட வேண்டும். கலைஞருக்கு அனுப்பப் பட்டது, அதை ஊடகங்களுக்குத் தெரிவித்தது எல்லாம் கேலிக்கூத்து!///

இந்த இரண்டும் மிகவும் முரண்பாடாக தெரியவில்லையா ? நீங்கள் ஒன்றும் உங்கள் வீட்டில் இந்தக்கருத்துக்களையும் , கட்டுரைகளையும் வைக்கவில்லை.....பொதுமேடைகளில் வைக்கப்படும் கருத்துக்களுக்கு விமர்சனம் வந்தால் அதைத்தாங்கிக்கொள்ளும் பக்குவம் இருந்தால் பதியுங்கள்...அதைவிடுத்து நீங்கள் சொல்வதை விமர்சனமில்லாமல் எல்லாரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றால் நீங்கள் பொதுமேடைகளில் நிற்கவே லாயக்கற்றவர்..ஏனென்றால் நீங்கள் கனிமொழி பற்றி விமர்சிப்பதும் , அந்த அனானி உங்களைப்பற்றி விமர்சிப்பதும் ஒரே மாதிரிதான் எனக்குத்தோணுகிறது.

ஜெகதீஷ் said...
"இதில் அ.தி.மு.கவும், ம.தி.மு.க வும் கலந்து கொள்ளாதது வருந்தத்தக்கது."

என்று எழுதியதே அனைவரும் ஒன்று பட்டு நிற்கவேண்டும் என்பதற்காகத்தான். நான் இதை அரசியலாக்கவில்லை. அனைத்து கட்சியினரும், தமிழக அரசும் ஈழப்பிரச்சனையை அரசியலாக்கிக்கொண்டே இருக்கக் கூடாது என்கிற ஆதங்கப் பதிவுதான். என்னுள் எழுந்த கேள்விகளைப் பதிவு செய்தேன். இனியாவது நம்மவர்களுக்கு நல்ல பொழுது விடியும் என்று நம்புவோம்.////////

அட்டா , உங்கள் கரிசனம் புல்லரிக்க வைக்கிறது....

அனைத்துக்கட்சி கூட்டத்தை புறக்கணித்ததற்கு வருத்தம் மட்டுமே தெரிவிக்கிறீர்கள்...ஆனால் பின் தேதியிட்டு ராஜினாமா செய்த கனிமொழி நாடகம் நடத்துகிறார்...நல்லாத்தான் அளக்கறீங்க போங்க...//

என்னோட கரிசனத்துக்கு உங்கள் அங்கீகாரம் எனக்குத் தேவை இல்லை.
உங்கள் கரிசனம் ரசிக்கத்தக்கது.

ஜெகதீஷ் said...
யாரையும் உயர்த்தியோ தாழ்த்தியோ பிடிக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை. என்னக்கு யாரும் படி அளக்கவில்லை.

எனக்கும் இந்த அரசியல் வாதிகளுக்கும் வித்தியாசம் இல்லையா?


//////


கண்டிப்பாக பெரிய வித்தியாசம் ஒன்றுமில்லை திரு.ஜோதிபாரதி..இந்த சூழலைப்பயன்படுத்தி எப்படி ஈழத்தமிழர் விடயத்தில் காரியம் சாதிக்கலாம் என்று பதிவிட்டிருந்தால் கண்டிப்பாக நீங்களும் சாதாரண அரசியல்வியாதி அல்ல என்று புரிபட்டிருக்கும்...ஆனால் இத்தகைய சூழலில் நதிமூலம் , ரிஷிமூலம் பார்ப்பதென்பது சற்றேறக்குறைய ஒரு மூணாந்தர அரசியல்வியாதி போலவே இருக்கிறது...


///////////////////////


முடிந்தால் எனது பதிவுகளை மட்டும் படியுங்கள், அவசரமாக என்னைப் படிக்க வேண்டாம்.

////

கனிமொழி ராஜினாமா என்பது, மேற்கூறியவற்றை பொய்யாக்கும் ஒரு நாடகம்.(அவர் ராஜ்ய சபா எம்.பி) அவருடைய ராஜினாமா, ராஜ்யசபாத் தலைவர் அன்சாரிக்கு அனுப்பப் பட வேண்டும். கலைஞருக்கு அனுப்பப் பட்டது, அதை ஊடகங்களுக்குத் தெரிவித்தது எல்லாம் கேலிக்கூத்து!///

இந்த இரண்டும் மிகவும் முரண்பாடாக தெரியவில்லையா ? நீங்கள் ஒன்றும் உங்கள் வீட்டில் இந்தக்கருத்துக்களையும் , கட்டுரைகளையும் வைக்கவில்லை.....பொதுமேடைகளில் வைக்கப்படும் கருத்துக்களுக்கு விமர்சனம் வந்தால் அதைத்தாங்கிக்கொள்ளும் பக்குவம் இருந்தால் பதியுங்கள்...அதைவிடுத்து நீங்கள் சொல்வதை விமர்சனமில்லாமல் எல்லாரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றால் நீங்கள் பொதுமேடைகளில் நிற்கவே லாயக்கற்றவர்..ஏனென்றால் நீங்கள் கனிமொழி பற்றி விமர்சிப்பதும் , அந்த அனானி உங்களைப்பற்றி விமர்சிப்பதும் ஒரே மாதிரிதான் எனக்குத்தோணுகிறது.

ஜெகதீஷ் said...
"இதில் அ.தி.மு.கவும், ம.தி.மு.க வும் கலந்து கொள்ளாதது வருந்தத்தக்கது."

என்று எழுதியதே அனைவரும் ஒன்று பட்டு நிற்கவேண்டும் என்பதற்காகத்தான். நான் இதை அரசியலாக்கவில்லை. அனைத்து கட்சியினரும், தமிழக அரசும் ஈழப்பிரச்சனையை அரசியலாக்கிக்கொண்டே இருக்கக் கூடாது என்கிற ஆதங்கப் பதிவுதான். என்னுள் எழுந்த கேள்விகளைப் பதிவு செய்தேன். இனியாவது நம்மவர்களுக்கு நல்ல பொழுது விடியும் என்று நம்புவோம்.////////

அட்டா , உங்கள் கரிசனம் புல்லரிக்க வைக்கிறது....

அனைத்துக்கட்சி கூட்டத்தை புறக்கணித்ததற்கு வருத்தம் மட்டுமே தெரிவிக்கிறீர்கள்...ஆனால் பின் தேதியிட்டு ராஜினாமா செய்த கனிமொழி நாடகம் நடத்துகிறார்...நல்லாத்தான் அளக்கறீங்க போங்க...//

என்னோட கரிசனத்துக்கு உங்கள் அங்கீகாரம் எனக்குத் தேவை இல்லை.
உங்கள் கரிசனம் ரசிக்கத்தக்கது.

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//ஜோ / Joe said...
ஜெகதீஷ்-ன் கருத்துக்களை முழுவதுமாக வழி மொழிகிறேன்.
//

வருகைக்கும் வழிமொழிதலுக்கும் நன்றி ஜோ!

//ஜோ / Joe said...
ஜெகதீஷ்-ன் கருத்துக்களை முழுவதுமாக வழி மொழிகிறேன்.
//

வருகைக்கும் வழிமொழிதலுக்கும் நன்றி ஜோ!

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//ஜோ / Joe said...
ஜெகதீஷ்-ன் கருத்துக்களை முழுவதுமாக வழி மொழிகிறேன்.
//

வருகைக்கும் வழிமொழிதலுக்கும் நன்றி ஜோ!

//ஜோ / Joe said...
ஜெகதீஷ்-ன் கருத்துக்களை முழுவதுமாக வழி மொழிகிறேன்.
//

வருகைக்கும் வழிமொழிதலுக்கும் நன்றி ஜோ!

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//ராம் said...
கனிமொழியின் பதவி விலகல் வரவேற்கப்படவேண்டிய ஒன்று. ஊடகங்களில் வெளிவந்ததும் நன்றே.

மக்களவை மற்றுமல்ல மாநிலங்களவை உறுப்பினர்களும் பதவி விலகவேண்டிய நிர்பந்தத்தை ஏற்படுத்தும்.

அனைத்துக்கட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் தீவிரத்தன்மையை மத்திய அரசுக்கு உணர்த்துவதாக இருக்கும்.

நல்ல முன்னோட்டமாக இதைப் பார்க்கவேண்டும்.
//

ராம் உங்கள் கருத்தை ஆமோதிக்கிறேன்.
இது கனிமொழி அவர்களாக முடிவெடுத்ததாக இருந்தால், வரவேற்கத்தக்கது. அவரை ராஜினாமா செய்யச் சொல்லி இருந்தால், திரு.திருச்சி சிவா அவர்களையும் அல்லவா ராஜினாமா செய்யச்சொல்லி இருக்க வேண்டும்.

//ராம் said...
கனிமொழியின் பதவி விலகல் வரவேற்கப்படவேண்டிய ஒன்று. ஊடகங்களில் வெளிவந்ததும் நன்றே.

மக்களவை மற்றுமல்ல மாநிலங்களவை உறுப்பினர்களும் பதவி விலகவேண்டிய நிர்பந்தத்தை ஏற்படுத்தும்.

அனைத்துக்கட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் தீவிரத்தன்மையை மத்திய அரசுக்கு உணர்த்துவதாக இருக்கும்.

நல்ல முன்னோட்டமாக இதைப் பார்க்கவேண்டும்.
//

ராம் உங்கள் கருத்தை ஆமோதிக்கிறேன்.
இது கனிமொழி அவர்களாக முடிவெடுத்ததாக இருந்தால், வரவேற்கத்தக்கது. அவரை ராஜினாமா செய்யச் சொல்லி இருந்தால், திரு.திருச்சி சிவா அவர்களையும் அல்லவா ராஜினாமா செய்யச்சொல்லி இருக்க வேண்டும்.

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

வருகைக்கும், தங்களது விரிவான மறுமொழிக்கும் நன்றி திரு ஆனந்தசங்கரி அவர்களே! உங்களின் கருத்துக்களில் எனக்கு உடன்பாடு கிடையாது.

வருகைக்கும், தங்களது விரிவான மறுமொழிக்கும் நன்றி திரு ஆனந்தசங்கரி அவர்களே! உங்களின் கருத்துக்களில் எனக்கு உடன்பாடு கிடையாது.

Anonymous said...

Statement by N. Ram, Editor-in-Chief, The Hindu on three incidents targeting The Hindu and freedom of expression by pro-LTTE and anti-social elements in Tamil Nadu
October 16, 2008
“On behalf of our 130-year-old newspaper, its 3528 employees, and four million readers, I wish to strongly condemn the illegal acts of mischief and violence in Coimbatore and Erode by activists of the pro-LTTE fringe group calling itself the Periyar Dravidar Kazhagam (PDK) along with a handful of anti-social elements.
“These unruly and illegal acts were an expression of intolerance of the newspaper’s criticism of pro-LTTE and pro-Eelam chauvinism in the Tamil Nadu political arena. In our considered editorial assessment, these chauvinistic, pro-separatist tendencies are deeply inimical to the interests of the Indian people. Hearteningly, the overwhelming majority of the people of Tamil Nadu, who do not want a replay of the propaganda campaigns and violent activities of the terrorist Tamil Tigers in one of India’s most peaceful States, firmly oppose these chauvinistic tendencies. This is evidenced, among other things, by the fact that, post-1991, even the small pro-LTTE parties have not dared campaign on a pro-LTTE platform in any State or general election.
“The latest act of mischief and violence against our newspaper occurred around 5 a.m. on Thursday, October 16 at the Erode Bus Stand. A group of about half a dozen persons raising pro-LTTE slogans invaded the point of distribution, assaulted the person in charge of this distribution point, indulged in filthy slogans and threats, distributed hand bills extolling the LTTE, snatched 2400 copies of The Hindu and 390 copies of Business Line, doused them with petrol, and set them on fire. Thanks to the vigilance of our staff and the outrage of hawkers, two of the culprits were apprehended on the spot. The police have registered a case at the Erode Town Police Station under Sections 147, 323, 294(b), 285, 427, 506, and 506(i) of the IPC and arrested the leaders of the group, Kumaragurubaran, 42, district organiser of the PDK, and M. Jayakumar, 30, of the ‘Tamil Desiya Podhu Udaimai Katchi.’ The police are on the look-out for the other culprits.
“Earlier, on Tuesday, October 14, there were two incidents targeting our Coimbatore office on LIC Road. Some activists of the lawyers’ group of the PDK demanded that The Hindu reverse its editorial stand against pro-LTTE and pro-Eelam chauvinism, burnt some copies of the newspaper, and attempted to march to our office. The police effectively prevented them from doing so, thus preventing possible violence, and registered a case under Sections 143 (unlawful assembly) and 285 (negligent conduct with regard to fire or combustible matter) of the Indian Penal Code. The second incident, involving about ten persons, including PDK activists and law college students, was more serious. The group marched towards The Hindu office in Coimbatore, two persons sneaked through the police cordon, and tried to scale the iron gate and force their way past our staff and security personnel. One of them hurled a stone, which fortunately caused no injury or damage. The police arrested ten persons, who were later released on bail, and registered a case against this group under Sections 147 (unlawful assembly), 285, 447 (criminal trespass), 336 (act endangered life or personal safety of others), and 506 (i) (criminal intimidation) of the IPC.
“While we are satisfied with the response of the police in Coimbatore and Erode to these criminal acts – which constituted a threat to the physical safety of our journalists, non-journalistic staff, and others working for us, and to freedom of expression, guaranteed under Article 19(1)(a) of the Indian Constitution – we would like the police as well as the Tamil Nadu Government to take stronger action under the law of the land against the extremist fringe outfits and the individuals, including lawyers, behind these illegal acts.
“We expect the police and the State government to monitor and pursue seriously the prosecution of these cases, so that exemplary punishment under the law of the land is meted out to those who menace freedom of expression in the cause of a banned terrorist organisation.”

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

இந்தப் பதிவில் உள்ள நியாயமான கேள்விகளைப் படித்துவிட்டு வேதனையை என்னுடன் பகிர்ந்து கொண்ட அன்பு உள்ளங்களுக்கு எனது உளங்கனிந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். மாறாக பதிவை படித்துவிட்டு தலைப்பையும் கடைசி பத்தியும் மட்டும் சிலர் விமர்சனம் செய்ததை மனதார ஏற்றுக் கொள்கிறேன். இருப்பினும் அந்த கேள்விகளை பற்றி வாய் திறக்காமல் சென்றது சற்று வருத்தத்தை ஏற்படுத்துகிறது. எப்படி இருந்தாலும் மாற்றங்களால் ஈழத்தமிழருக்கு ஒரு நல்ல பொழுது விடியும் என்ற நம்பிக்கையுடன் இருப்போம். இதை வைத்து நான் அரசில் பண்ணுவதாக சிலர் சொல்வதை முற்றிலும் நிராகரிக்கிறேன். எனக்கு அப்படி எந்த அவசியமும் இல்லை. அரசியல்வாதிகளும், ஆட்சியாளர்களும் அரசியல் செய்து விடாமல் இருக்கவேண்டும் என்கிற ஆதாங்கம் தான் இந்த பதிவே தவிர வேறொன்றும் இல்லை. பெரும்பாலான தமிழர்களுக்கு உள் மனசு உறுத்திக்கொண்டிருப்பது உண்மைதான். நாம், உண்மையில் நம் உறவுகளுக்கு கடன் பட்டிருக்கிறோம். நம்மிடம் சன நாயகம் இருக்கிறது அதை பயன்படுத்தி, ஏன் அவர்களுக்கு உதவக்கூடாது. சிந்திப்போம்! செயல் படுவோம்!!

இந்தப் பதிவில் உள்ள நியாயமான கேள்விகளைப் படித்துவிட்டு வேதனையை என்னுடன் பகிர்ந்து கொண்ட அன்பு உள்ளங்களுக்கு எனது உளங்கனிந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். மாறாக பதிவை படித்துவிட்டு தலைப்பையும் கடைசி பத்தியும் மட்டும் சிலர் விமர்சனம் செய்ததை மனதார ஏற்றுக் கொள்கிறேன். இருப்பினும் அந்த கேள்விகளை பற்றி வாய் திறக்காமல் சென்றது சற்று வருத்தத்தை ஏற்படுத்துகிறது. எப்படி இருந்தாலும் மாற்றங்களால் ஈழத்தமிழருக்கு ஒரு நல்ல பொழுது விடியும் என்ற நம்பிக்கையுடன் இருப்போம். இதை வைத்து நான் அரசில் பண்ணுவதாக சிலர் சொல்வதை முற்றிலும் நிராகரிக்கிறேன். எனக்கு அப்படி எந்த அவசியமும் இல்லை. அரசியல்வாதிகளும், ஆட்சியாளர்களும் அரசியல் செய்து விடாமல் இருக்கவேண்டும் என்கிற ஆதாங்கம் தான் இந்த பதிவே தவிர வேறொன்றும் இல்லை. பெரும்பாலான தமிழர்களுக்கு உள் மனசு உறுத்திக்கொண்டிருப்பது உண்மைதான். நாம், உண்மையில் நம் உறவுகளுக்கு கடன் பட்டிருக்கிறோம். நம்மிடம் சன நாயகம் இருக்கிறது அதை பயன்படுத்தி, ஏன் அவர்களுக்கு உதவக்கூடாது. சிந்திப்போம்! செயல் படுவோம்!!

வட மொழி - தமிழ் மொழி

பின் நவீனத்துவம் - பின் புதுமையியல்

அகங்காரம் - செருக்கு,இறுமாப்பு,முனைப்பு,யானெனல்

அகடவிகடம் - குறும்பு,மாற்று,மாறுபட்டது

அகதி - அறவை,வறியன்,எதிலி,புகலிலான்,யாருமற்றவன்,ஏழை

அகந்தை - இறுமாப்பு,செருக்கு

அகம் - உள்ளே,உயிர்,நான்,மனம்,மனநிலை,எண்ணம்

அகம்பாவம் - தற்பெருமை,செருக்கு

அகராதி - அகரமுதலி,அகரவரிசை,அகரநிரல்,அகரமுதல்

அகிம்சை - இன்னா செய்யாமை,கொல்லாமை

அஹிம்சை - இன்னா செய்யாமை,கொல்லாமை

அகோரம் - அழகின்மை,கொடுமை,நடுக்கம்

அக்கணம் - அப்பொழுது,அந்நொடி

அக்கரம் - எழுத்து

அட்சரம் - அழிவில்லாதது

அக்கியாணி - அறிவிலான்

அஞ்ஞானி - புல்லறிவாளன்

அக்கிரகாரம் - பார்ப்பனச் சேரி

அக்கிரமம் - ஒழுன்கின்மை,முறைகேடு

அக்கிராசனம் - முதலிருக்கை,தலைமை

அக்கினி,அக்நி - நெருப்பு,தீ,அனல்,எரி

அங்கப்பிரதட்சணம் - உடல் வலமுருளல், வலம் புரளல்

அங்கீகாரம்,அங்கீகரணம் - உடன்,செப்பு

அங்குலம் - விறக்கட்டை,விரலளவு

அசத்தை,அசத்தியம் - பொய்

அசரம்- அசைவில்லாதது,இயங்காதது,நிலையியல்

அசரீரி - வானொலி,உருவற்றது

அசித்து - பயனின்மை

அஜீரணம்,அசீரணம்- செரியாமை,பசியின்மை,அழிவுபடாமை

அசுத்தம் - அழுக்கு,துப்புரவின்மை,தூய்மையின்மை

அசேதனம் - அறிவில்லாதது,அறிவிலி,அறிவில் பொருள்

அசெளரியம் - நலமின்மை,இடைஞ்சல்

அஞ்சலி - கும்பிடல்,வணக்கம்

அஞ்சனம் - மை,கறுப்பு,இருள்

அஞ்சிட்டம் - கதிரவன்

அஞ்ஞாதம் - மறைவு,அறியப்படாதது

அஞ்ஞாத வாசஸ்தலம் - மறைந்துறைவிடம்

அட்சயப் பாத்திரம் - திருவோடு,ஏற்போடு,அள்ள அள்ளக் குறையாதது

அட்டதிக்கு பாலகர் - எண்புறக்காவலர்

அட்டபந்தனம் - எண்புறக்கட்டு

அண்டம் - முட்டை,உலகம்,வித்து,மூலம்

அதமம் - கீழ்மை,கடைத்திரம்

அதர்மம்,அதருமம் - தீவினை,அறமின்மை,மறம்

அதிகப்பிரசங்கம் - மிகுபேச்சு,தன் மேம்பாட்டுரை,மற்றொன்று விரித்தல்

அதிகாரி - அலுவலர்,தலைவன்,முதல்வன்,உடையவன்

அதிகாலம் - விடியற்காலம்

அதிகாலை - விடியற்காலம்,புலரிக்காலை

அதிஷ்டவசம் - நல்வினைப்பயன், நல்வினை வயம்

அநந்தகோடி - எண்ணத்தொலையாதன

அநந்தம் - அளவின்மை,முடிவில்லது

அநாதை - யாருமற்றவன்,தாய்தந்தையிலான்

அநித்தம்,அநித்தியம் - அழிவு,நிலையற்றது,நிலையாமை

அநீதி - முறைகேடு

அநுக்கிரகம் - அருளிரக்கம்,அருள்

அநுசரணை - சார்பு,சார்பு நிலை

அநுசிதம் - பொய்,தகாதது

அனுபவம் - பழக்கம்,வழக்கம்,நுகர்ச்சி

அனுமினம் - ஐயம்,வழியளவை,கருதலளவை

அனுமானப் புரமானம் - கருதலளவை

அநேகர் - பலர்

அந்தகன் - அழிப்போன்,குருடன்

அந்தகாரம் - இருள்,அறியாமை

அந்தக்கரணங்கள் - அகக்கருவிகள்

அந்தஸ்து - நிலைமை,ஒழுங்கு,நிலை

அந்தரம் - வான்வெளி,இடைவெளி,துணையின்மை,காலம்

அந்தி - முடிவு,மாலைக்காலம்

அந்திய கிரியை - இறுதிச் சடங்கு

அந்நியர் - பிறர்,அயலார்

அந்நியோந்நியம் - நெருக்கம்,ஒற்றுமை,ஒருவொருக்கொருவர்

அபயம் - அடைக்கலம்,அச்சமின்மை,புகலிடம்,அஞ்சேலெனல்

அபாயம் - பேரிடர்,அழிவு,கேடு,துன்பம்,இடுக்கண்,இக்கட்டு

அபாரம் - சிறப்பு,அளவின்மை,கேடு

அபிதானம் - பெயர்

அபிநயம் - நடிப்பு,கூத்து,கைமைய்காட்டல்,உள்ளக் குறிகாட்டல்

அபிப்பிராயம் - நோக்கம்,எண்ணம்,உட்கருத்து,உள்ளப்போக்கு

அபிமானம் - பற்று,நேயம்,செருக்கு

அபூர்வம் - அரிது,அருமை,அரிய பொருள்

அபேச்சை -அவா,விருப்பம்

அபேதம் - ஒற்றுமை,வேற்றுமையின்மை,வேறன்மை

அப்பியாசம் -பழக்கம்,பயிற்சி

அப்பிரதட்சிணம் - இடப்புறச் சுற்று, இடப்பக்கச் சுற்று

அமரத்துவம் - அழிவின்மை

அமலன் - துயோன்,கடவுள்,வாலறிவன்

அந்நியர் - பிறர்,அயலார்

அதிகம் - மிகுதி,அளவின்மை

அமிர்தம்,அமிருதம் - இனிமை,அருமருந்து,சாவா மருந்து,அழிவினமை

அமச்ம் - வகை,பங்கு,காலம்,எண்,அன்னப்புள்

அம்பாரம் - குவியல்

அயோக்கியம் - தகுதியினமை,தகாதது

அயோக்க்கியன் - தகுதியற்றவன்,தகவிலான்,கெட்டவன்

அரணியம் - காடு

அருச்சனை,அர்ச்சனை - வழிபாடு, பூ வழிபாடு,மலர் வழிபாடு

அருத்தம்,அர்த்தம் -பொருள்,பாதி

அருவம் - உருவின்மை,அழகின்மை

அர்த்தநாசம் - பேரழிவு,பொருளழிவு

அர்ப்பணம் - உரிமை கொடுத்தல், ஒப்புவித்தல், நீரோடு கொடுத்தல்

அலங்காரம் - அழகு,ஒப்பனை,அணி,புனைவு

அலச்சியம் - பாராமுகம்,பொருட்படுத்தாமை,கருத்தின்மை

அவகீர்த்தி - இழிவு,புகழின்மை

அவக்கியாதி - வசை,இகழ்ச்சி

அவசரம் - விரைவு,பரபரப்பு,சுருக்கு,பதைப்பு

அவசியம் - முதன்மை,கட்டாயம்,இன்றியமையாமை

அவதரித்தல் - பிறத்தல்

அவதாரம் - பிறப்பு,இறங்குகை

அவதானம் - எச்சரிக்கை,ஒழிவு,நினைவு,விரித்தல்,மறப்பின்மை

அவநம்பிக்கை - நம்ப்பிக்கைக்குறை

அவமரியாதை - முறைதவறல்,வணக்கமின்மை,தீயமுறை

அவமானம் - மானக்கேடு,இழிவு,குறைவு,இளிவரவு

அவயவம்,அவையவம் - உறுப்பு

அவலன் - உடற்குறையன்,வீணன்

அவசு,ஹவிசு - தூய உணவு,சோறு,நெய்,

அற்பம்,அல்பம் - சிறுமை,அணு,புன்மை,இழிவு

அனங்கன் - உடலிலான்,கடவுள்,காமவேள்

அனாதி - கடவுள்,தனியன்,பழமை,தொன்மை

அனுதாபம் - இரக்கம்

அனுபவம் - பழக்கம்,வழக்கம்,அழுந்தியறிதல்,பட்டறிவு

அனுமானம் - உய்த்துணர்தல்,கருதல்ளவை,வழியளவை

அனேகம் - பல,எல்லாம்

அன்னதானம் - சோற்றறம்,சோற்றுக்கொடை,உணாக்கொடை

அன்னம் - சோறு,உணவு,அடிசில்

அன்னியன் - பிறர்,அயலார்

அன்னியோன்னியம் - ஒற்றுமை,நெருக்கம்,ஒருவர்க்கொருவர்

ஆகம் -உடல்,மார்பு

ஆகரு(ர்)ஷண சக்தி - இழுப்பாற்றல்,இழுவழி,சேர்வழி

ஆகாசம்,ஆகாயம் - விண்,வெளி,வான்,விசும்பு,வர்னம்

ஆகாய விமானம் - வான ஊர்தி

ஆகாரம் - உணவு,அடிசில்,உடம்பு,வடிவு

ஆக்கியாபித்தல்,ஆஞ்ஞாபித்தல் - கட்டளையிடல்

ஆக்கிரமித்தல் - வலிந்து கவர்தல்,வலிமை காட்டல்

ஆட்சேபம் - மறுமொழி,மறுத்துக்கூறல்,தடைமொழி

ஆங்காரம் - இறுமாப்பு,செருக்கு,தருக்கு

ஆச சங்கை -ஐயம்

ஆசாபாசம் -அன்பு,பற்று,அவா

ஆசாரம் - ஒழுக்கம்,வழக்கம்,நன்னடை,வழிபாடு,துப்புரவு

ஆசியம்,ஹாசியம் - எள்ளல்,நகை,சிரிப்பு

ஆசீர்வாதம் - வாழ்த்துரை

ஆசுவாசம் - இளைப்பாறுகை

ஆசை - விருப்பம்,அவா,பற்று,வேட்கை,விழைவு

ஆச்சரியம் - புதுமை,வியப்பு,இறும்பூது

ஆ(ச்)சிரமம் - இலைக்குடில்,பாழி,முனிவருறயுள்

ஆஸ்திகம் - கடவுளுண்டெனுங்கொள்கை

ஆஸ்பத்திரி - மருத்துவச்சாலை

ஆஞ்ஞாபித்தல் -கட்டளையிடல்

ஆஞ்ஞை -ஆணை,கட்டளை

ஆடம்பரம் - ஆரவாரம்,பகட்டு

ஆட்சேபம்,ஆட்சேபனம் - தடைமொழி,மறுமொழி,எதிர்மொழி,மறுப்பு

ஆதங்கம் - ஆற்றாமை,அச்சம்,நோய்

அந்நியர் - பிறர்,அயலார்

ஆதவ(ப)ன் - பகலோன்,கதிரோன்

ஆதரவு - துணை,உதவி,சார்பு,பற்றுக்கொடு

ஆதி - முதல்,பழமை,அடி,தொடக்கம்,காரணம்,எழுவாய்,கடவுள்

ஆப்தம்,ஆத்தம் - அன்பு,நட்பு

ஆத்தானம்,ஆஸ்தானம் - நகரவாயில்,அறமன்றம்,கொடிமுடிவாயில்

ஆத்திரம்,ஆத்திரியம்,ஆத்திரவம் - உளக்கொதிப்பு,விரைவு,பரபரப்பு

ஆத்துமா,ஆன்மா - உயிர்

ஆந்ந்தம் - இன்பம்

ஆபத்து -இடர்,துன்பம்,இக்கெட்டு,ஊறுபாடு,இடுக்கண்

ஆபரணம் - அணிகலம்,இழை,நகை,அணி,பூண்

ஆபாசம் - அருவருப்பு,சிதைவு,கெடுதல்,பொய்,அளவைப்பொலி

அபூர்வம் - வினைப்பயன்

ஆமோதித்தல் - உடன்படல்,வழிமொழிதல்,மகிழ்தல்

ஆயக்கட்டு(துளுவம்) - மொத்த நஞ்சை நிலம்,களப்புரவு

ஆயத்தம்(இந்தி) - முயற்சி,எத்தனம்,முன்னேற்பாடு

ஆயா(போர்ச்சுக்கீஸ்) - செவலித்தாய்,கைத்தாய்

ஆயாசம்,ஆயாஸம் - களைப்பு,இளைப்பு,சோர்வு,அயர்வு,மயக்கம்

ஆயுசு,ஆயுள் - வாழ்நாள்,ஆண்டு

ஆயுதம் - கருவு,படைக்கலம்,படை,வாள்

ஆரணியம்,ஆரண்ணியம் - காடு

ஆரம்,ஹாரம் - பூமாலை,தொடையல்

ஆரம்பம் - தொடக்கம்

ஆரம்பித்தல் - தொடங்கல்

ஆராதனம் - வணக்கம்,மகிழ்வித்தல்

ஆரோகம்,ஆரோபம்,ஆரோக்கியஸ்நானம் - நல முழுக்கு,நோய் தீர்ந்தபின் முழுகல்

ஆரோக்கியம் - நலம்,நோயின்மை

ஆரோபணம்- நாட்டுதல்,ஏற்றுதல்

ஆரோபித்தல் - ஏற்றுதல்

ஆர்ச்சிதம் - தேட்டம்,தேடிய பொருள்

ஆர்மோனியம் - இசைக்கருவி

ஆர்வம் - அன்பு,விருப்பம்

ஆலகண்டண் - சிவன்,நஞ்சுமிடற்றன்,கறைமிடற்றன்

ஆலகம்- நெல்லிமரம்

ஆலம் - நஞ்சு

ஆலயம் - கோயில்

ஆலாபம்,ஆலாபனம் - அலப்பு,பேச்சு,உரையாடல்

ஆலோசனை - சூழ்தல்,சூழ்ச்சி,ஓர்வு,எண்ணம்,ஆராய்ச்சி

ஆவசியம் - கட்டாயம்,முதன்மை,இன்றியமையாமை

ஆவத்து,ஆபத்து - இக்கெட்டு,இடர்,பொல்லாங்கு

ஆவர்த்தி,ஆவருத்தம்,ஆவிருத்தி - தடவை,வரிசை,சுற்று,வழக்கம்

ஆவாகனம் - அழைத்தல்,உட்புகல்

ஆனந்தபரவசம் - இன்பக்களிப்பு,பேரின்பக்களிப்பு

ஆனந்தம் - இன்பம்,பேரின்பம்

ஆன்மா - உயிர்

இகம் - இவ்வுலகம்,இவ்விடம்,இப்பிறப்பு

இங்கிதம் - இனிமை,அடையாளம்,கருத்து,இடம் பொருள்

இச்சகம் - முகமன்

இச்சை - விருப்பம்,அவா,விழைவு,வேட்கை

இடபம்,ரிஷபம் - எருது,காளை,ஏறு,விடை

இட்டசித்தி - விருப்பப்பேறு

இதம்,ஹிதம் - இனிமை,நன்மை,அன்பு,அறம்

இதயம்,இதையம்,ஹிருதயம் - நெஞ்சம்,உள்ளம்

இதரம் - வேறு,இயல்,அழிவு,பகைமை

இதிகாசம் - பண்டை வரலாறு,பழங்கதை

இந்திர ஜாலம் - இமயவர்கோன்,வானவர் தலைவன்

இந்து - நிலா,திங்கள்,அம்புலி

இமாலயம்,ஹிமாலயம் - பனிமலை

இரகசியம் - மறைபொருள்,மறை,அற்றம்

இராசாபாசம் - அருவருப்பு,ஒழுங்கின்மை

இரசாயனம் - பொருளியைபு

இரட்சகம் - பாதுகாப்பு,மீட்பு

இரட்சை - காப்பு

இரணம்,ரணம் - புண்

இரதம்,ரதம் - தேர்

இரத்தம் - குருதி,செந்நீர்

இரத்தினம்,ரத்தினம் - மாமணி,செம்மணி

இரம்பம்,ரம்பம் - ஈர்வாள்

இராகம்,ராகம் - இசை,பண்,அவா,விருப்பு

இராகு - கருங்கோள்

இராக்கதர் - அரக்கர்

இராசசூயம் - அரசர் வேள்வி

இராசா - அரையன்,மன்னன்,அரசன்

இராச்சியம் - நாடு,அரசியல்

இராத்திரி - இரவு,கங்குல்

இருஷி,இருடி - முனிவன்,தவசி,துறவி

இதய கமலம் - நெஞ்சத்தாமரை

இருது - பருவம்,மகளிர் முதற்பூப்பு

இரேகை - வரி,எழுத்து,கையிறை,நிறை,தொடர்

இலகிரி,லகிரி,லாகிரி - வெறி,மயக்கம்

இலகு,லகு - எளிது,நொய்மை,நுண்மை,ஈரம்,பலா மரம்

இலங்கணம் - பட்டினி

இலஞ்சம் - கைக்கூலி,கையூட்டு,கையுறை

இலட்சணம்,லட்சணம் - அழகு,பார்வை

இலயித்தல் - ஒடுங்குதல்,சேர்ந்தொன்றித்தல்

இலெளகீகம்,இலவுகீகம் - உலகியல்,உலகப்போக்கு

இலாஞ்சனம்,இலாஞ்சனை - புகழ்,அடியாளம்,கறை

இலாபம்,லாபம் - ஊதியம்,மிச்சம்,பேறு

இலீலை,லீலை - விளையாட்டு

யுகம்,உகம் - உலக முடிவு,இரண்டு

உக்கிராணம் -களஞ்சியம்,சரக்கறை

உஷ்ணம் - வெப்பம்,சூடு

உசிதம் - உயர்வு,சிறப்பு,மேன்மை,தகுதி,ஒழுங்கு

உசிதன் - தக்கோன்

உச்சம் - உயர்ச்சி,சிறப்பு

உச்சரித்தல் - சொல்லுதல்,ஒலித்தல்,ஓதல்

உச்சரிப்பு - எழுத்தோசை

உச்சாட்டியம் - பேய கற்றல்,ஒட்டுதல்

உச்சி - மேடு,முகடு

உச்சிக்காலம்,உச்சிச்சமயம் - நண் பகல், நடுப் பகல்

உதயன் - பகலோன்

உதாரணம்,திருட்டாந்தம் - எடுத்துக்காட்டு,சான்று

உத்தமம் - உண்மை,மேன்மை

உத்தரியம்,உத்தரீயம் - மேலாடை

உத்தரவு - கட்டளை

உத்தி,யுத்தி - அறிவு,இணக்கம்,இசைவு,சூழ்ச்சி,சொல்

உத்தேசம்,உத்தேகம் - கருத்து,மதிப்பு,ஏறக்குறைய

உபகரணம் - கொடுத்தல்,உதபிபொருள்கள்,கருவி,துணைக்காரணம்

உபதேசம் - அருண்மொழி,அறிவுரை

உபயம் - உதவி,நன்கொடை,இரண்டு

உபாசநம்,உபாசநை,உபாசனை - வழிபாடு,வணக்கம்

உபாதி,உபாதை - நோய்,துன்பம்,வருத்தம்

உபாத்தியாயன் - கணக்காயன்,ஆசிரியன்,கற்பிப்போன்

உபாயம் - சூழ்ச்சி,நொய்மை,எளிது,சிறிது

உயுக்கம்,உயுத்தம்,யுத்தம் - போர்,தகுதி

உருசி,ருசி - சுவை

உருத்திராக்கம் - சிவமணி,சுக்குமணி

உரூபம்,ரூபம் - உருவம்,வடிவம்

உரொக்கம்,ரொக்கம் - கைப்பணம்,இருப்பு,கையிருப்பு

உரோமம்,ரோமம் - மயிர்,முடி,குஞ்சி

உல்லாசம் - மகிழ்ச்சி,விளையாட்டு,களிப்பு,உள்ளக்களிப்பு

உவதி,யுவதி, - மங்கை,பதினாறாண்டுப் பெண்

ஊகம் - கருதல்,ஓர்தல்,கருத்து,நினைவு

ஊர்ச்சிதம்,ஊர்ஜ்ஜிதம் - உட்பொருளுணர்தல், நிலைப்படுதல்,உறுதி,கருங்குரங்கு

எசமானன்,எஜமான் - தலைவன்,முதல்வன்,முதலாளி

எந்திரம் - பொறி

எமன் - கூற்றுவன்,மறலி

ஏகதேசம் - ஒருபால்,ஒருபுடை,சிறுபான்மை

ஏகம் - ஒன்று,தனிமை

ஏகாந்தம் - தனிமை,ஒரு முடிவு

ஏகோபித்தல் - ஒன்றுபடுதல்

ஏடணை,ஏஷணை - விருப்பம்

ஐது,ஹேது - காரணம்

ஏக்கம்,ஐக்கியம் - ஒற்றுமை

ஐஸ்வர்யம்,ஐச்வரியம் - செல்வம்,பொருள்,திரு

ஐதீகம்,ஐதிகம் - உலகுரை

ஐம் பூதம்,பஞ்ச பூதம் - ஐந்து முதற்பொருள்

ஓமம்,ஹோமம் - வேள்வி

ஒளடதம்,ஒளஷதம்- மருந்து

களோகம் - வான் வட்டம்,வளி மண்டலம்

கடகம் - கைவளை,வளையம்

கடம் - கடம்,யானைக்கதுப்பு

கடாட்சித்தல் - அருளல்

கடாரம் - கொப்பரை,தேங்காய்

கடிகாரம் - நாழிகை வட்டில்,பொழுது காட்டுங்கருவி

கடிகை - நாழிகை,தாழ்க்கோல்

கடினசித்தம் - வன்னெஞ்சம்

கடினம் - வன்மை,கடுமை,வருத்தம்,கொடுமை

கடூரம்,கொடூரம் - கொடுமை

கட்டம்,கஷ்டம் - துன்பம்,வருத்தம்

கணம்,ஹணம் - குழாம்,கூட்டம்,தொகுதி,நொடிப்பொழுது

கணி - கோள் நூல், கோல் நூல் வல்லான்

கணிகை - பொதுமகள்

கணிசம் - அளவு,மேம்பாடு

கணிதம் - கணக்கு

கண்டம் - நிலப்பிரிவு,துண்டு,கட்டி,மிடறு,கழுத்து

கண்திட்டி,கண்திருஷ்டி - கண்ணேறு

கதம்பகம்,கதம்பம் - கூட்டம்,மணப்பொருட் கூட்டு,சேர்ந்தது,இணைத்தது

கதலி - வாழை

கதி - நடை,செலவு,வழி,புகலிடம்,பற்றுக்கோடு,நிலை

கனகம்,கநகம் - பொன்

கனவான்,கநவான் - பெரியோன்,பெருமையாளன்,பெருந்தகை

கனிஷ்டை,கநிஷ்டை - பின்னோள்,தங்கை

கன்னிகை,கந்நிகை - மணமாகாதவள்,இளம்பெண்

கந்மம்,கருமம் - தொழில்,வினை

கபடம்,கவடம்,கபடு - கரவு,படிறு,வஞ்சகம்,மோசம்,சூது,ஒளிப்பு

கபாலம் - தலையோடு,மண்டையோடு

கபோதி - குருடன்

கப்பம் - இறை

கமண்டலம் - நீர்க்குடுவை

கமலம் - தாமரை,நீர்

கம்பீரம் - உயர்தோற்றம்,பெருமை,ஆழம்,செருக்கு

கயம்,ஹயம் - குளம்,ஆழம்,யானை

கரகம் - வட்டில்,நீர்க்குடுவை

கரகோசம்,கரகோஷம் - கைதட்டுதல்

கரணம் - கருவி,ஐம்பொறி

கரம் - கை

கருச் சித்தல் - முழங்கல்,இரைதல்

கருணை - அருள்,இரக்கம்

கர்த்தா,கருத்தா - தலைவன்,வினைமுதல்,ஆக்கியோன்,நூலாசிரியன்,முதல்வன்,கடவுள்

கர்ப்பவதி - சூலி

கர்ப்பாசயம் - கருப்பை

கர்வம் - செருக்கு,இறுமாப்பு

கலாபம்,கலபம் - மயில்,மயிற்றோகை

கலி - வறுமை,துன்பம்

கலியாணம் - மனம்,மன்றல்,பொன்,மகிழ்ச்சி

கவளீகரித்தல்,கபளீகரம்,கபளீகரித்தல் - முற்றிலும் விழுங்குதல்,விழுங்குதல்

கவனம் - கருத்து நோக்கம்,உன்னித்தல்

கவாத்து - படைக்கலப் பயிற்சி,வெட்டி விடுதல்

கவி - செய்யுள்,புலவன்,பாட்டு

கவுளி,கெளளி - பல்லி

களேபரம் - குழப்பம்,உடல்,பிணம்

கற்பம் - ஊழிக்காலம்,நெடுவாழ்க்கை மருந்து

கனம் - சுமை,பளு,பளுவு

காசம் - ஈளை,ஈளைநோய்,இருமல் நோய்

கசாயம்,கஷாயம் - காவி

காஞ்சிரம் - எட்டி மரம்

காட்டம்,காஷ்டம் - விறகு,வெகுளி

காதகன் - கொலையாளி

காயசித்தி - நீடுவாழ்ப் பேறு

காயம் - உடல்,யாக்கை,வான்

காரிய கர்த்தா - வினைமுதல்வன்

காரியதரிசி - அமைச்சன்,செயலாளன்

கலாட்சேபம் - பொழுதுபோக்கல்,நாட்கழித்தல்,வாழ்க்கை

கால நியமம் - காலமுறை,காலக்கடன்,கால்,ஒழுங்கு

கிஸ்தி - திறை,வரி

கிரகணம்,கிராணம் - பற்றுதல்,பிடித்தல்

கிரகஸ்தம் - இல்லற நிலை

கிரகம் - வீடு,கோள்,பற்றுதல்,பிடிப்பு

கிரணம் - ஒளி,கதிர்

கிரந்தம் - நூல்,எழுத்து

கிரமம் - ஒழுங்கு,முறைமை

கிரயம் - விலை

கிராதன் - குறவன்,வேட்டுவன்

கிரி - மலை,பன்றி

கிரிகை - தொழில்,செயல்,வினை,சடங்கு

கிரிமி,கிருமி - உயிரி,பூச்சி,புழு

கிரீடம் - முடி

கிருஷி - பயிர்,உழவு,பயிர் செய்கை

கிலம் - கழிவு,அழிவு,சிறுமை

கிலேசம் - அச்சம்,கவலை,துன்பம்

கீதம் - இசை,பாட்டு,பாடல்,இசைப்பாட்டு

கீர்த்தனம்,கீர்த்தனை - புகழ்ச்சி,புகழ்ப்பா

கீலகம் - ஆணி,பொருத்து

குஞ்சரம் - யானை

குஷ்டம் - தொழு நோய்,பெரு நோய்

குணஷ்டை - தொல்லை,துன்பம்

குதர்க்கம் - அழிவழக்கு

குதூகலம்,குதுகலம் - பெருங்களிப்பு,பெருமகிழ்வு

குபேரன் - பெருஞ்செல்வன்,செல்வக்கடவுள்

குமரி,குமாரி - நங்கை,மணமாகாப்பெண்,புதல்வி,மகள்

கும்பம் - குடம்

குருகடாட்சம் - ஆசிரியனருட்பார்வை

குரோதம் - உட்பகை

குலாலன் - குயவன்

குலிசம் - வேற்படை

குன்மம் - சூலை,வயிற்று வலி

கேதம் - துன்பம்,இடர்,குற்றம்

கேவலம் - சிறுமை,தனிமை

கோகிலம் - குயில்

கோடம்,கோஷம்,கோஷ்டம் - முழக்கம்,பேரோசை

கோஷ்டி - கூட்டம்

கோடி - நூறு நூறாயிரம்

கோதண்டம் - வில்

கோளகை,கோளம் - உருண்டை,வட்டம்

கெளரவம் - மேன்மை,பெருமை

சக - கூட,உடன்

சகசம்,ஸகஸம் - இயற்கை,ஒற்றுமை

சகஸ்ரநாமம் - ஆயிரந்திருமொழி,ஆயிரந்திருப்பெயர்

சகமார்க்கம் - தோழமை நெறி

சகலம் - எல்லாம்

சகவாசம் - கூடவிருத்தல்,உடனுரைதல்,பழக்கம்,சேர்க்கை,நட்பு

சகா - தோழன்,துணை

சகாப்தம் - ஆண்டு,நூறாண்டு

சகாயம் - நயம்,நன்மை,மலிவு,பயன்,உதவி,துணை

சகி,சகீ - தோழி

சகிதம் - உடன்

சகுணம் - குணத்தோடு கூடியது

சகுந்தம் - கழுகு,பறவை

சகுனம் - குறி

சகோதரம் - உடன்பிறப்பு

சகோதரி - உடன்பிறந்தாள்

சக்கரம் - உருளை,வட்டம்

சக்தி - ஆற்றல்,வல்லமை,வலி

சங்கடம்,சங்கட்டம் - இக்கெட்டு,நெருக்கடி,இடர்,கண்மூடுதல்

சங்கிதை - தொகுதி,வரலாறு

சடுதி,சடிதி - விரைவு

சஷ்டியப்த பூர்த்தி - அறுபதாமாண்டு நிறைவு

சண்டப்பிரசண்டம் - மிகு விரைவு

சண்டமாருதம் - பெருங்காற்று,கடியகாற்று,புயற்காற்று

சண்டாளம் - தீமை,புலைத்தன்மை,நம்பிக்கை கேடு

சண்டாளர் - தீவினையாளர்,இழிஞர்

சண்டித்தனம் - முருட்டுத்தன்மை,முரட்டுத்தன்மை

சதகோடி - நூறு கோடி

சதசு - அவை

சதம் - நூறு நிலை

சதானந்தம் - இடையறா வின்பம்

சதி - இறைவி,அழிவு,வஞ்சனை,சூழ்ச்சி

சந்தகம் - எப்பொழுதும்

சந்தானம் - வழி,வழித்தொடர்பு

சந்தித்தல் - எதிர்படுதல்,கூடுதல்

சந்திரலோகம் - திங்கள் உலகு,அம்புலியுலகம்

சந்திரன் - பிறை,கலையோன்,இரவோன்,அலவன்,அல்லோன்

சந்து - முடுக்கு,இயங்கும் உயிர்,தூது,பிளப்பு,பொருத்து

சந்துட்டம்,சந்துஷ்டி,சந்தோஷம் - மகிழ்ச்சி

சந்தேகம் - ஐயம்,ஐயுறவு

சந்தோஷம் - மகிழ்ச்சி,உவகை,களிப்பு

சன்னதி,சந்நதி,சந்நிதானம் - திருமுன்

சந்நியாசம் - துறவு,துறவறம்

சபதம் - ஆணை,உறுதிமொழி,வஞ்சினம்

சபம்,ஜெபம் - உருவேற்றல்

சபலம் - நிறைவேறல்,வெற்றி,நடுக்கம்,ஏக்கம்,இச்சை,அவா

சபா,சபை - அவை,மன்றம்,கழகம்,அரங்கம்

சபித்தல் - தீமொழி கூறல்,சினந்துரைத்தல்

சமஷ்டி - தொகுதி,எல்லாம்

சமதை - ஒப்பு

சமர்த்தன்,சமத்தன் - வல்லான்,வல்லவன்,திறமையாளன்

சமஸ்தானம்,சமத்தானம் - அரசவை,தலை நகர்

சமம் - இணை,ஈடு,மட்டம்,போர்,நடு,ஓர்மை

சமரச தத்துவம் - பொதுநிலையுண்மை

சமரசம் - பொது,வேறுபாடின்மை,ஒற்றுமை

சமர்ப்பணம் - ஒப்பித்தல்,உயர்ந்தோர்க்குக் கொடுத்தல்

சமாதானம் - அமைதி,இணக்கம்,தணிவு,உடன்பாடு,தக்கவிடை

சமாதி - அமைதி,பிணக்குழி,பேசாதிருத்தல்,இறப்பு,மரித்தல்

சமாப்தம்,சமாப்தி - முற்றுப்பெற்றது

சமாராதனை - உளநிறைவு

சமி,ஷமி - பொறு

சமிதை - வேள்வி விறகு,உலர்ந்த குச்சி

சமீபம் - அருகு,அணமை,மருங்கு

சமீன்தார்,ஜமீந்தார் - நிலக்காரன்,பெருநிலக்கிழார்

சமுதாயம் - குமுகம்,கூட்டம்

சமுத்திரம் - கடல்

சமை,ஷமை - பொறுமை

சம்சாரம்,சம்ஸாரம் - குடும்பம்,இல்லாள்,இல்லத்தரசி

சம்பத்து - செல்வம்,பொருள்

சம்பந்தம -உறவு,பற்று,இயைபு,சார்பு,தொடர்பு,பொருத்தம்

சம்பிரதாயம் - தொல்வழக்கு,முன்னோர் முறை,பண்டை முறை

சம்பு ரேட்சணம் - தெளித்தல்

சம்பூரணம் - நிறைவு

சம்மதம் - உடன்பாடு,ஒப்புமை,இயைபு

சம்ரஷணை - பாதுகாப்பு

சயம்,ஜெயம் - வெற்றி

சரணம்,சரண் -அடைக்கலம்,வணக்கம்,கால்,திருவடி

சரணாகதி - புகலடைதல்,அடைக்கலம்

சராசரம்,ஜங்கமா - இயங்கியற் பொருள், நிலையியற் பொருள்

சரிதம்,சரிதை,சரித்திரம் - வரலாறு

சரீரம் - உடல்,யாக்கை,மெய்

சருமம்,சர்மம் - தோல்

சர்ப்பம் - பாம்பு

சர்வகலாசாலை -

பல்கழைக் கழகம்

சலதளம்- அரசமரம்

சலதாரை - நீர்க்கால்,நீரோட்டம்,மதகு

சலதோசம் - நீர்க்கோர்வை,தடுமம், நீர்க்கோவை

சல்லாபம் - உரையாடல்

சவம் - பிணம்

சவுகரியம்,செளக்கியம்,செளகரியம் -நலம்

சவுந்தரியம்,செளந்தரியம்,சவுந்தரம் - அழகு

செளபாக்கியம்,சவுபாக்கியம் - செல்வம்

சற்காரியம் - உற்பொருளினின்று தோன்றும் வினை

சற்குணம் - நல்லியல்பு

சனனம்,ஜனனம்,சனிப்பு,சன்மம் - பிறப்பு

சாகசம் - ஆற்றல்,துணிவு,நெருக்கிடை

சாகரம் - கடல்

சாகுபடி - பயிர் செய்தல்

சாகை,ஜாகை(உருது) - தங்குமிடம்

சாக்கிரதை,ஜாக்கிரதை - விழிப்பு,உன்னிப்பு,எச்சரிக்கை