Thursday, October 2, 2008

முதல்வர் பதவி - இராமதாசு அய்யாவிடம் கொள்ளிமலை குப்புவின் கேள்விகள்!


முதல்வர் பதவிக்குப் போட்டியிடுபவர்களிடம் கொள்ளிமலை குப்புவின் கேள்விகள் -2

தமிழகத்தின் அடுத்த முதல்வராக வருவதற்கு பலர் முயற்சி செய்கிற இந்த நேரத்தில், அவர்கள் அனைவரிடமும் கொள்ளிமலை குப்பு என்பவர் கேள்வி கேட்க விரும்புகிறார்.

இதோ கொள்ளிமலை குப்பு அவர்கள்!

வணக்கமுங்க! கும்புடுறேனுங்க சாமியோவ்!! நான் தான் கொள்ளிமலை குப்புங்க! நானும் உங்க சாதி தானுங்க. எனக்கும் மொதலமைச்ச்சரா வர ஆசைதானுங்க. ஆனா வரமுயாதுன்னு சொல்ராங்கங்க. ஏன்னு கேட்டா உன்கிட்ட என்ன இருக்குன்னு பல்லு மேல நாக்க போட்டு கேக்குராங்கங்கோ!

சமூக நீதிப் போராளி, தமிழ்க்குடிதாங்கி மருத்துவர் திரு இராமதாசு அய்யா அவர்களே வணக்கமுங்க. உங்க கட்சி 2011-ல ஆட்சிக்கு வரும்னு சொல்லி இருக்கீங்க. உங்ககிட்ட நாலு கேள்வி கேக்கனும்னு நினைக்கிறேங்க.

1)உங்க கட்சி 2011-ல ஆட்சிக்கு வரும்னு சொல்லி இருக்கீங்க. உங்க ஆட்சியில் தலைமைச் செயலகம்(செயின்ட் ஜார்ஜ் கோட்டை) சென்னையில் இருக்குமுங்களா? இல்ல திண்டிவனத்துல(கோட்டைதான், என்ன கோட்டைனு சனங்க தான் சொல்லணும்) கட்டுறீங்களா?

2)நீங்க சமூக நீதிப் போராளிங்க சாமியோவ். சமூகங்கிறது எல்லா சாதிகளையும் உள்ளடக்கியது. இல்லைன்னு சொல்லமுடியுங்களா? அப்ப ஒரு சாதிக்கு மட்டும் நிறைய நன்மைகளை எதிர்பார்ப்பது சரிங்களா? எல்லா மக்களும் நிம்மதியா வாழனுமுங்களே? அது தானே சமூக நீதி?

3)ஐந்தாம் வகுப்பு வரைத் தமிழைப் பயிற்று மொழியாக வைக்கனும்னு சொல்றீங்க சாமி. ஆனா உங்க குடுப்பத்து பிள்ளைகளை இந்தியும் ஆங்கிலமும் படிக்க வைக்கிறீங்க அப்படின்னு சொல்றாங்களே. அது உண்மையா? ஊருக்கு உபதேசம் செய்றது முன்னாடி நம்ம குடுப்பத்தையும் பாக்கலாங்களே?

4) எங்களுக்கு காடு தானுங்க வாழ்க்கை. பசுமைத்தாயகம்னு ஒன்னு ஆரம்பிச்சு மரம் வளப்போம்னு சொல்லி எங்க வயித்தில பால வாத்தீங்க அய்யா. ஆனா, 80-களில் ரோட்டில மரத்த வெட்டி போட்டது யாருங்க சாமியோவ்? இல்ல முன்னாடி மரம் வெட்டுனத்துக்கு இப்ப பரிகாரம் தேடுறீங்களா அய்யா?

5) திருமாவளவனொடு நட்பு பாராட்டுறீங்க. ஆனா, அவங்க கட்சிக்காரங்களும் உங்க கட்சிக்காரங்களும் அவ்வப்போது அடித்துக் கொள்கிறார்களே? இதைத் திருமாவோடு சேர்ந்து தடுத்து நிறுத்தலாமே?

6)"இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்" என்று வள்ளுவர் சாமி சொன்னது போல் சிறந்த இடிப்பாறையாக அரசுக்கு இருக்குறீங்க. மகிழ்ச்சி அடையுரோமுங்க சாமியோவ். நீங்க சட்ட,நாடளுமற்றத்தில் கால் வைக்க மாட்டேன் என்று சொல்லி இருக்கிறீர்கள். உங்க கட்சி ஆட்சிக்கு வந்தா கோ.க.மணிதானே முதலமைச்சர்? ஆளை மாத்த மாட்டீங்களே?

7) தனித்தமிழை, பொங்குதமிழை ஊக்கு விக்கிறீங்க(எங்களை மாதிரி! நாங்களும் ஊக்கு விக்கிறவங்க தான் சாமியோவ்). நல்லதுங்க. தனித் தமிழ் நாட்டை ஊக்கு விக்கிறீங்களா? இல்லை தமிழ் நாட்டையே...!?

8)நீங்க நடிகர்களை எதுக்குறீங்களா? இல்லை நடிப்புத்தொழிலையே எதுக்குறீங்களா? காந்துகளை(விஷய கந்து, ரசினி காந்து) கண்டு கொள்ளுங்கள். ஏன் அவர்களிடம் காண்டு கொல்றீங்க?

9)ஈழத்தமிழர்களை ஆதரிப்பதாகச் சொல்கிறீங்க. ஆனா, அவங்களை அழிக்கும் இலங்கை அரசுக்கு ஆயுதம் வழங்கும் இந்திய மத்திய அரிசில் இடம்பெற்றுக் கொண்டு(சின்னையா மத்திய சுகாதார அமைச்சரா இருக்காருங்களே) வாய் மூடி மொனியாக இருப்பது ஏன்? சோனியாவிடம் எதிர்ப்பைக் காட்டாமல், நடு ரோட்டில காட்டுனா என்னங்க சாமி நடக்கும்?

10)விஷய காந்தை பயங்கரமாகத் தாக்குறீங்க. ஆனா அவரு உங்க கோட்டை விருதாலத்துல கொடி ஏத்திட்டாருங்களே? அவரைத் தோற்கடிக்க சரத்குமாரை நாடும் எண்ணம் உள்ளதா?(வடிவேலு கூட தயாராத்தான் அய்யா இருக்கார், ஆனா முதல்வர் பதவி கேக்குறார் பரவால்லையா?)

11) கொஞ்ச நாளைக்கு கலைஞர் அய்யாவை பாராட்டுறீங்க, பின்னாடி எதிர்குறீங்க, அதேமாதிரி ஜெயலலிதா அம்மாவை அன்புச் சகோதரிங்கிறீங்க. பின்னாடி எதுக்கிறீங்க. மூன்றவதா விஷய காந்தை இப்படி செய்யமாட்டீங்கன்னு என்ன நிச்ச்சயங்க சாமி.

12) நடிகர் ரசினி சாமியோட படம் பாபாவை போடவிடாம தடுத்தீர்கள் சாமியோவ். அதுக்கு என்ன காரணங்க சாமி. அது இருக்கட்டும். பண்பாட்டுச் சீரழிவை தொடர்ந்து கிராமம் தோறும் கலைவிழா என்ற பெயரில் நடத்திக் கொண்டு இருப்போரை தடுக்கும் உத்தேசம் இருக்கிறதா? காலை 11 மணி காட்சிகளில் பொங்கி வழியும் இளைஞர் கூட்டங்களை தடுக்கும் உத்தேசம் இருக்குங்களா சாமி?


இன்னும் நிறையா கேக்கனும்னு நினைச்சேன். நீங்க ஆட்சிக்கு வந்தா! கேக்குறேங்க. அதனால் உங்களிடம் இதுவரைக்கும் கேள்வி கேட்டது போதும்னு நினைக்கிறேங்க. கேள்வி பத்தலைன்னு கோவிக்காதீங்க சாமியோவ்.

நாலு கேள்வி கேக்குறேன்னு சொல்லிபுட்டு பன்னெண்டு கேள்வி கேட்டதுக்கு, மன்னித்துக் கொள்ளுங்க சாமியோவ்.நான் இன்னும், கலைஞர் சாமி, ஜெயலலிதா ஆச்சி, விசயகாந்து சாமி, எல்லோரையும் கேள்வி கேட்கனுங்க சாமியோவ். வரட்டுங்களா சாமி! நன்றிங்க சாமி!

29 கருத்துக்கள்:

கோவி.கண்ணன் said...

//தனித்தமிழை, பொங்குதமிழை ஊக்கு விக்கிறீங்க(எங்களை மாதிரி! நாங்களும் ஊக்கு விக்கிறவங்க தான் சாமியோவ்). //

சூப்பரு. :)

ஜெகதீசன் said...

:))))))))))))))

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

// கோவி.கண்ணன் said...
//தனித்தமிழை, பொங்குதமிழை ஊக்கு விக்கிறீங்க(எங்களை மாதிரி! நாங்களும் ஊக்கு விக்கிறவங்க தான் சாமியோவ்). //

சூப்பரு. :)//

கோவியாரே வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

// கோவி.கண்ணன் said...
//தனித்தமிழை, பொங்குதமிழை ஊக்கு விக்கிறீங்க(எங்களை மாதிரி! நாங்களும் ஊக்கு விக்கிறவங்க தான் சாமியோவ்). //

சூப்பரு. :)//

கோவியாரே வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//ஜெகதீசன் said...
:))))))))))))))//



சமைத்துப் பார் புகழ்(பார் என்றால் உலகம் என்று அர்த்தம் கொள்ளவும்) ஜெகதீசன் அவர்களே வருக!
சிரிப்பானை அழுத்துவதற்கு முன் படித்தீர்களா?
வருகைக்கு நன்றி!

//ஜெகதீசன் said...
:))))))))))))))//



சமைத்துப் பார் புகழ்(பார் என்றால் உலகம் என்று அர்த்தம் கொள்ளவும்) ஜெகதீசன் அவர்களே வருக!
சிரிப்பானை அழுத்துவதற்கு முன் படித்தீர்களா?
வருகைக்கு நன்றி!

RATHNESH said...

//இன்னும் நிறையா கேக்கனும்னு நினைச்சேன். நீங்க ஆட்சிக்கு வந்தா! கேக்குறேங்க. //

அதாவது, இவரைப்பற்றி நீங்க எழுதற கடைசிப் பதிவுன்னு சொல்லாம சொல்றீங்க?

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//RATHNESH said...
//இன்னும் நிறையா கேக்கனும்னு நினைச்சேன். நீங்க ஆட்சிக்கு வந்தா! கேக்குறேங்க. //

அதாவது, இவரைப்பற்றி நீங்க எழுதற கடைசிப் பதிவுன்னு சொல்லாம சொல்றீங்க?//

எப்ப்பவும் "க்" வைச்சுகிட்டா நல்லதுதானே. எப்பவேணும்னாலும் எழுதலாமே.
தங்கள் வருகைக்கு நன்றி!

//RATHNESH said...
//இன்னும் நிறையா கேக்கனும்னு நினைச்சேன். நீங்க ஆட்சிக்கு வந்தா! கேக்குறேங்க. //

அதாவது, இவரைப்பற்றி நீங்க எழுதற கடைசிப் பதிவுன்னு சொல்லாம சொல்றீங்க?//

எப்ப்பவும் "க்" வைச்சுகிட்டா நல்லதுதானே. எப்பவேணும்னாலும் எழுதலாமே.
தங்கள் வருகைக்கு நன்றி!

Anonymous said...

என்ன தைரியம் இருந்தால் எங்கய்யாவை இந்த கொல்லிமலை குப்பு கேள்வி கேப்பான்.

Anonymous said...

எங்க சின்னையவைப் பற்றி கேள்வி கேட்காததற்கு எனது கண்டனங்கள்.

Anonymous said...

கேள்விகள் இப்படித்தான் கேட்க வேண்டும். எந்த கேள்விக்கும் பதில் கிடைக்காது.

ஜோசப் பால்ராஜ் said...

அண்ணாச்சி,
சிங்கப்பூர்ல இருக்கீங்கன்ற தைரியத்துல எழுதுறீங்க, நடத்துங்க சாமியோவ்.

சி தயாளன் said...

:)

அடுத்தது யாரு கைப்புள்ள வடிவேலா..?

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//siva sinnapodi said...
http://sivasinnapodi1955.blogspot.com/ //


உங்கள் ஆதங்கப் பதிவுகளைப் பார்த்தேன். நேரம் கிடைக்கும் போது ஒன்றொன்றாக படிக்கிறேன். நியாயமான ஆதங்கங்கள்! நன்றி!

//siva sinnapodi said...
http://sivasinnapodi1955.blogspot.com/ //


உங்கள் ஆதங்கப் பதிவுகளைப் பார்த்தேன். நேரம் கிடைக்கும் போது ஒன்றொன்றாக படிக்கிறேன். நியாயமான ஆதங்கங்கள்! நன்றி!

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//அய்யாவின் அடிமை said...
என்ன தைரியம் இருந்தால் எங்கய்யாவை இந்த கொல்லிமலை குப்பு கேள்வி கேப்பான்.//




கொள்ளிமலை குப்பு என்னங்க செய்வான். அவனும் நம்பல மாதிரி வாழணும்னு நினைக்கிறான்?

//அய்யாவின் அடிமை said...
என்ன தைரியம் இருந்தால் எங்கய்யாவை இந்த கொல்லிமலை குப்பு கேள்வி கேப்பான்.//




கொள்ளிமலை குப்பு என்னங்க செய்வான். அவனும் நம்பல மாதிரி வாழணும்னு நினைக்கிறான்?

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//சின்னையாவின் தளபதி said...
எங்க சின்னையவைப் பற்றி கேள்வி கேட்காததற்கு எனது கண்டனங்கள்.//


கொள்ளிமலை குப்பு அவர்களிடம் உங்கள் கண்டனத்தைத் தெரிவிக்கிறேன்.

//சின்னையாவின் தளபதி said...
எங்க சின்னையவைப் பற்றி கேள்வி கேட்காததற்கு எனது கண்டனங்கள்.//


கொள்ளிமலை குப்பு அவர்களிடம் உங்கள் கண்டனத்தைத் தெரிவிக்கிறேன்.

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//செந்தழல் ரவி said...
கேள்விகள் இப்படித்தான் கேட்க வேண்டும். எந்த கேள்விக்கும் பதில் கிடைக்காது.//


வருகைக்கு நன்றி. நீங்கள் யார் என்று தெரியாமல் ஒரு கணம் விழித்துபோய் விட்டேன்.

//செந்தழல் ரவி said...
கேள்விகள் இப்படித்தான் கேட்க வேண்டும். எந்த கேள்விக்கும் பதில் கிடைக்காது.//


வருகைக்கு நன்றி. நீங்கள் யார் என்று தெரியாமல் ஒரு கணம் விழித்துபோய் விட்டேன்.

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//ஜோசப் பால்ராஜ் said...
அண்ணாச்சி,
சிங்கப்பூர்ல இருக்கீங்கன்ற தைரியத்துல எழுதுறீங்க, நடத்துங்க சாமியோவ்.//

கொள்ளிமலை குப்பு கேட்டது தப்பா?
சிங்கை அங்காடிக் கடைகளில் கொள்ளிமலை குப்பு நரிக்கொம்பு, புலிநகம், முடிகயிறு, யானைமுடி கை வளையம் போற்ற அரிய பொருட்களை விக்க வந்தான். அப்போது அவனோட ஆதங்கத்தை என்னிடம் கொட்டித் தீர்த்தான். அதாங்க இது. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜோசப்!

//ஜோசப் பால்ராஜ் said...
அண்ணாச்சி,
சிங்கப்பூர்ல இருக்கீங்கன்ற தைரியத்துல எழுதுறீங்க, நடத்துங்க சாமியோவ்.//

கொள்ளிமலை குப்பு கேட்டது தப்பா?
சிங்கை அங்காடிக் கடைகளில் கொள்ளிமலை குப்பு நரிக்கொம்பு, புலிநகம், முடிகயிறு, யானைமுடி கை வளையம் போற்ற அரிய பொருட்களை விக்க வந்தான். அப்போது அவனோட ஆதங்கத்தை என்னிடம் கொட்டித் தீர்த்தான். அதாங்க இது. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜோசப்!

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//'டொன்' லீ said...
:)

அடுத்தது யாரு கைப்புள்ள வடிவேலா..?//



நம்ம கைப்புள்ள வருத்தப்படாத வாலிபர் சங்கத்தை அப்படியே அரசியல் கட்சியாக மாத்த திட்டம் போடுறாருங்க. அவரு வந்தா தாங்க தமிழ் நாட்டைக் காப்பாத்த முடியும். வேறு யாரும் இல்லீங்களே? வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தயாளன்!

//'டொன்' லீ said...
:)

அடுத்தது யாரு கைப்புள்ள வடிவேலா..?//



நம்ம கைப்புள்ள வருத்தப்படாத வாலிபர் சங்கத்தை அப்படியே அரசியல் கட்சியாக மாத்த திட்டம் போடுறாருங்க. அவரு வந்தா தாங்க தமிழ் நாட்டைக் காப்பாத்த முடியும். வேறு யாரும் இல்லீங்களே? வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தயாளன்!

Anonymous said...

ஹா ஹா!

Anonymous said...

உடன்பிறப்பு said...
ஹா ஹா!


???

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

உடன்பிறப்பும் மூக்கையாவும் என்ன சொல்ல வர்றீங்க.

உடன்பிறப்பும் மூக்கையாவும் என்ன சொல்ல வர்றீங்க.

தீபா said...

Good post! like the guts

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//Deepa said...
Good post! like the guts//



தீபா! தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!!

//Deepa said...
Good post! like the guts//



தீபா! தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!!

Anonymous said...

டாக்டர் அய்யாவிற்கு இதுவும் வேணும் இன்னும் வேணும். அது யாரு குப்பு.

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//Anonymous said...
டாக்டர் அய்யாவிற்கு இதுவும் வேணும் இன்னும் வேணும். அது யாரு குப்பு.//


குப்பு என்பவன் அப்பாவித் தமிழன்.

//Anonymous said...
டாக்டர் அய்யாவிற்கு இதுவும் வேணும் இன்னும் வேணும். அது யாரு குப்பு.//


குப்பு என்பவன் அப்பாவித் தமிழன்.

Anonymous said...

கேள்விகளில் சுவாரசியம் இல்லை. எழுத்து நடை அறுவையாக உள்ளது. பெரிய பதிவாக உள்ளதால் நேரமும் வேஸ்ட். நச் என்று பன்ஞ்சாக எழுதுங்கள். பின்னூட்டம் இடுபவர்கள் உண்மையை எழுதுவதில்லை. எதெற்கெடுத்தாலும் சூப்பர் என கூறுவது என்ன ஞாயமோ?

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//வடிவேலு said...
கேள்விகளில் சுவாரசியம் இல்லை. எழுத்து நடை அறுவையாக உள்ளது. பெரிய பதிவாக உள்ளதால் நேரமும் வேஸ்ட். நச் என்று பன்ஞ்சாக எழுதுங்கள். பின்னூட்டம் இடுபவர்கள் உண்மையை எழுதுவதில்லை. எதெற்கெடுத்தாலும் சூப்பர் என கூறுவது என்ன ஞாயமோ?
//

வடிவேலு அவர்களே! தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
தங்கள் வேண்டுகோளைக் கவனத்தில் கொள்கிறேன்.
மொழிநடை என்பது குப்பு என்கிற கொள்ளிமலையில் வசிக்கிற ஒரு மலை சாதித் தமிழனின் கேள்விகளாக எழுதியதால் அவ்வாறு எழுத நேரிட்டது. என்னுடைய அண்மைய பதிவில் மொழிநடையைப் பற்றி பின்னூட்டத்தில் ஒருவருக்குத் தெரிவித்திருக்கிறேன்.

எல்லோருக்கும் ஒரே விடயம் பிடிப்பதில்லை. பத்து பேர் படித்தால் ஒரு நான்கு பேருக்குப் பிடிக்கலாம். ஒருவருக்குப் பின்னூட்டம் போடத் தோணலாம்.

//வடிவேலு said...
கேள்விகளில் சுவாரசியம் இல்லை. எழுத்து நடை அறுவையாக உள்ளது. பெரிய பதிவாக உள்ளதால் நேரமும் வேஸ்ட். நச் என்று பன்ஞ்சாக எழுதுங்கள். பின்னூட்டம் இடுபவர்கள் உண்மையை எழுதுவதில்லை. எதெற்கெடுத்தாலும் சூப்பர் என கூறுவது என்ன ஞாயமோ?
//

வடிவேலு அவர்களே! தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
தங்கள் வேண்டுகோளைக் கவனத்தில் கொள்கிறேன்.
மொழிநடை என்பது குப்பு என்கிற கொள்ளிமலையில் வசிக்கிற ஒரு மலை சாதித் தமிழனின் கேள்விகளாக எழுதியதால் அவ்வாறு எழுத நேரிட்டது. என்னுடைய அண்மைய பதிவில் மொழிநடையைப் பற்றி பின்னூட்டத்தில் ஒருவருக்குத் தெரிவித்திருக்கிறேன்.

எல்லோருக்கும் ஒரே விடயம் பிடிப்பதில்லை. பத்து பேர் படித்தால் ஒரு நான்கு பேருக்குப் பிடிக்கலாம். ஒருவருக்குப் பின்னூட்டம் போடத் தோணலாம்.

Anonymous said...

// 2)நீங்க சமூக நீதிப் போராளிங்க சாமியோவ். சமூகங்கிறது எல்லா சாதிகளையும் உள்ளடக்கியது. இல்லைன்னு சொல்லமுடியுங்களா? அப்ப ஒரு சாதிக்கு மட்டும் நிறைய நன்மைகளை எதிர்பார்ப்பது சரிங்களா? எல்லா மக்களும் நிம்மதியா வாழனுமுங்களே? அது தானே சமூக நீதி?//

மருத்துவர் ஐயா சமூகநீதி போராளிதான்.

சமூகம் என்பது எல்லா சாதியையும் உள்ளடக்கியதுதான்.

வன்னியர் சமூதாயத்திற்கு கிடைக்க வேண்டிய சமூகநீதி கிடைக்கவில்லை என்றுதான் அவர்கள் போராடுகிறார்கள். எங்களுக்கு மட்டுமே நிறைய நன்மைகள் செய்யவேண்டும் என்று எப்போதுமே அவர்கள் போராடவில்லை.

அனைத்து சமூகத்தினருக்கும் நன்மை கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் அனைத்துதுறைகளிலும் அனைத்து சமூகங்களுக்கும் சமூகநீதி கிடைப்பதற்காகத்தான் அவர்கள் போராடுகிறார்கள்.

அவர்களின் இலக்கு; வருகின்ற 2011-ல் நடைபெறவுள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பில் சாதியை கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். அதன் அடிப்படையில் 100 விழுக்காடு இடக்கீடு இருக்க வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கையாகும்.

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//அரியாங்குப்பத்தார் said...
// 2)நீங்க சமூக நீதிப் போராளிங்க சாமியோவ். சமூகங்கிறது எல்லா சாதிகளையும் உள்ளடக்கியது. இல்லைன்னு சொல்லமுடியுங்களா? அப்ப ஒரு சாதிக்கு மட்டும் நிறைய நன்மைகளை எதிர்பார்ப்பது சரிங்களா? எல்லா மக்களும் நிம்மதியா வாழனுமுங்களே? அது தானே சமூக நீதி?//

மருத்துவர் ஐயா சமூகநீதி போராளிதான்.

சமூகம் என்பது எல்லா சாதியையும் உள்ளடக்கியதுதான்.

வன்னியர் சமூதாயத்திற்கு கிடைக்க வேண்டிய சமூகநீதி கிடைக்கவில்லை என்றுதான் அவர்கள் போராடுகிறார்கள். எங்களுக்கு மட்டுமே நிறைய நன்மைகள் செய்யவேண்டும் என்று எப்போதுமே அவர்கள் போராடவில்லை.

அனைத்து சமூகத்தினருக்கும் நன்மை கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் அனைத்துதுறைகளிலும் அனைத்து சமூகங்களுக்கும் சமூகநீதி கிடைப்பதற்காகத்தான் அவர்கள் போராடுகிறார்கள்.

அவர்களின் இலக்கு; வருகின்ற 2011-ல் நடைபெறவுள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பில் சாதியை கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். அதன் அடிப்படையில் 100 விழுக்காடு இடக்கீடு இருக்க வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கையாகும்.
//


திரு அரியாங்குப்பத்தார், தங்கள் வருகைக்கும் விளக்கமான கருத்துக்கும் நன்றி. ஏற்றுக்கொள்கிறேன். எல்லா மக்களுக்கும் சமூக நீதி கிடைக்க வேண்டும் என்று போராடுகிறார் என்று சொன்னீர்கள். வன்னிய மக்களுக்கு இட ஒதுக்கீட்டுக்காகப் போராடினார். ஒரு வன்னியரை புதுச்சேரி முதல்வராக்குவேன் என்று சொன்னார். அது முடியாத பட்சத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ரெங்கசாமி, தனது சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், சமாதானம் அடைந்தார். மற்ற எந்தெந்த சமூகத்தை சேர்ந்த மக்களுக்கு எந்தெந்த வகையில் போராடி இருக்கிறார் என்று சொன்னால் நன்றாக இருக்கும்.

//அரியாங்குப்பத்தார் said...
// 2)நீங்க சமூக நீதிப் போராளிங்க சாமியோவ். சமூகங்கிறது எல்லா சாதிகளையும் உள்ளடக்கியது. இல்லைன்னு சொல்லமுடியுங்களா? அப்ப ஒரு சாதிக்கு மட்டும் நிறைய நன்மைகளை எதிர்பார்ப்பது சரிங்களா? எல்லா மக்களும் நிம்மதியா வாழனுமுங்களே? அது தானே சமூக நீதி?//

மருத்துவர் ஐயா சமூகநீதி போராளிதான்.

சமூகம் என்பது எல்லா சாதியையும் உள்ளடக்கியதுதான்.

வன்னியர் சமூதாயத்திற்கு கிடைக்க வேண்டிய சமூகநீதி கிடைக்கவில்லை என்றுதான் அவர்கள் போராடுகிறார்கள். எங்களுக்கு மட்டுமே நிறைய நன்மைகள் செய்யவேண்டும் என்று எப்போதுமே அவர்கள் போராடவில்லை.

அனைத்து சமூகத்தினருக்கும் நன்மை கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் அனைத்துதுறைகளிலும் அனைத்து சமூகங்களுக்கும் சமூகநீதி கிடைப்பதற்காகத்தான் அவர்கள் போராடுகிறார்கள்.

அவர்களின் இலக்கு; வருகின்ற 2011-ல் நடைபெறவுள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பில் சாதியை கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். அதன் அடிப்படையில் 100 விழுக்காடு இடக்கீடு இருக்க வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கையாகும்.
//


திரு அரியாங்குப்பத்தார், தங்கள் வருகைக்கும் விளக்கமான கருத்துக்கும் நன்றி. ஏற்றுக்கொள்கிறேன். எல்லா மக்களுக்கும் சமூக நீதி கிடைக்க வேண்டும் என்று போராடுகிறார் என்று சொன்னீர்கள். வன்னிய மக்களுக்கு இட ஒதுக்கீட்டுக்காகப் போராடினார். ஒரு வன்னியரை புதுச்சேரி முதல்வராக்குவேன் என்று சொன்னார். அது முடியாத பட்சத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ரெங்கசாமி, தனது சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், சமாதானம் அடைந்தார். மற்ற எந்தெந்த சமூகத்தை சேர்ந்த மக்களுக்கு எந்தெந்த வகையில் போராடி இருக்கிறார் என்று சொன்னால் நன்றாக இருக்கும்.

ராம கிருஷ்ணன் said...

//// வன்னிய மக்களுக்கு இட ஒதுக்கீட்டுக்காகப் போராடினார். ஒரு வன்னியரை புதுச்சேரி முதல்வராக்குவேன் என்று சொன்னார். அது முடியாத பட்சத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ரெங்கசாமி, தனது சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், சமாதானம் அடைந்தார். மற்ற எந்தெந்த சமூகத்தை சேர்ந்த மக்களுக்கு எந்தெந்த வகையில் போராடி இருக்கிறார் என்று சொன்னால் நன்றாக இருக்கும் ////

ஒரு பத்திரிகையாளன் என்ற முறையில் மருத்துவரை பற்றி 1980ம் வருடம் முதல் ஆராயுங்களேன். விடை கிடைக்கலாம். இயலாவிடில் செலவு பார்க்காமல் தமிழ் ஓசை நாளிதழ் ரெண்டே ரூபாய்தான். வாங்கித்தான் பாருங்களேன்.

வட மொழி - தமிழ் மொழி

பின் நவீனத்துவம் - பின் புதுமையியல்

அகங்காரம் - செருக்கு,இறுமாப்பு,முனைப்பு,யானெனல்

அகடவிகடம் - குறும்பு,மாற்று,மாறுபட்டது

அகதி - அறவை,வறியன்,எதிலி,புகலிலான்,யாருமற்றவன்,ஏழை

அகந்தை - இறுமாப்பு,செருக்கு

அகம் - உள்ளே,உயிர்,நான்,மனம்,மனநிலை,எண்ணம்

அகம்பாவம் - தற்பெருமை,செருக்கு

அகராதி - அகரமுதலி,அகரவரிசை,அகரநிரல்,அகரமுதல்

அகிம்சை - இன்னா செய்யாமை,கொல்லாமை

அஹிம்சை - இன்னா செய்யாமை,கொல்லாமை

அகோரம் - அழகின்மை,கொடுமை,நடுக்கம்

அக்கணம் - அப்பொழுது,அந்நொடி

அக்கரம் - எழுத்து

அட்சரம் - அழிவில்லாதது

அக்கியாணி - அறிவிலான்

அஞ்ஞானி - புல்லறிவாளன்

அக்கிரகாரம் - பார்ப்பனச் சேரி

அக்கிரமம் - ஒழுன்கின்மை,முறைகேடு

அக்கிராசனம் - முதலிருக்கை,தலைமை

அக்கினி,அக்நி - நெருப்பு,தீ,அனல்,எரி

அங்கப்பிரதட்சணம் - உடல் வலமுருளல், வலம் புரளல்

அங்கீகாரம்,அங்கீகரணம் - உடன்,செப்பு

அங்குலம் - விறக்கட்டை,விரலளவு

அசத்தை,அசத்தியம் - பொய்

அசரம்- அசைவில்லாதது,இயங்காதது,நிலையியல்

அசரீரி - வானொலி,உருவற்றது

அசித்து - பயனின்மை

அஜீரணம்,அசீரணம்- செரியாமை,பசியின்மை,அழிவுபடாமை

அசுத்தம் - அழுக்கு,துப்புரவின்மை,தூய்மையின்மை

அசேதனம் - அறிவில்லாதது,அறிவிலி,அறிவில் பொருள்

அசெளரியம் - நலமின்மை,இடைஞ்சல்

அஞ்சலி - கும்பிடல்,வணக்கம்

அஞ்சனம் - மை,கறுப்பு,இருள்

அஞ்சிட்டம் - கதிரவன்

அஞ்ஞாதம் - மறைவு,அறியப்படாதது

அஞ்ஞாத வாசஸ்தலம் - மறைந்துறைவிடம்

அட்சயப் பாத்திரம் - திருவோடு,ஏற்போடு,அள்ள அள்ளக் குறையாதது

அட்டதிக்கு பாலகர் - எண்புறக்காவலர்

அட்டபந்தனம் - எண்புறக்கட்டு

அண்டம் - முட்டை,உலகம்,வித்து,மூலம்

அதமம் - கீழ்மை,கடைத்திரம்

அதர்மம்,அதருமம் - தீவினை,அறமின்மை,மறம்

அதிகப்பிரசங்கம் - மிகுபேச்சு,தன் மேம்பாட்டுரை,மற்றொன்று விரித்தல்

அதிகாரி - அலுவலர்,தலைவன்,முதல்வன்,உடையவன்

அதிகாலம் - விடியற்காலம்

அதிகாலை - விடியற்காலம்,புலரிக்காலை

அதிஷ்டவசம் - நல்வினைப்பயன், நல்வினை வயம்

அநந்தகோடி - எண்ணத்தொலையாதன

அநந்தம் - அளவின்மை,முடிவில்லது

அநாதை - யாருமற்றவன்,தாய்தந்தையிலான்

அநித்தம்,அநித்தியம் - அழிவு,நிலையற்றது,நிலையாமை

அநீதி - முறைகேடு

அநுக்கிரகம் - அருளிரக்கம்,அருள்

அநுசரணை - சார்பு,சார்பு நிலை

அநுசிதம் - பொய்,தகாதது

அனுபவம் - பழக்கம்,வழக்கம்,நுகர்ச்சி

அனுமினம் - ஐயம்,வழியளவை,கருதலளவை

அனுமானப் புரமானம் - கருதலளவை

அநேகர் - பலர்

அந்தகன் - அழிப்போன்,குருடன்

அந்தகாரம் - இருள்,அறியாமை

அந்தக்கரணங்கள் - அகக்கருவிகள்

அந்தஸ்து - நிலைமை,ஒழுங்கு,நிலை

அந்தரம் - வான்வெளி,இடைவெளி,துணையின்மை,காலம்

அந்தி - முடிவு,மாலைக்காலம்

அந்திய கிரியை - இறுதிச் சடங்கு

அந்நியர் - பிறர்,அயலார்

அந்நியோந்நியம் - நெருக்கம்,ஒற்றுமை,ஒருவொருக்கொருவர்

அபயம் - அடைக்கலம்,அச்சமின்மை,புகலிடம்,அஞ்சேலெனல்

அபாயம் - பேரிடர்,அழிவு,கேடு,துன்பம்,இடுக்கண்,இக்கட்டு

அபாரம் - சிறப்பு,அளவின்மை,கேடு

அபிதானம் - பெயர்

அபிநயம் - நடிப்பு,கூத்து,கைமைய்காட்டல்,உள்ளக் குறிகாட்டல்

அபிப்பிராயம் - நோக்கம்,எண்ணம்,உட்கருத்து,உள்ளப்போக்கு

அபிமானம் - பற்று,நேயம்,செருக்கு

அபூர்வம் - அரிது,அருமை,அரிய பொருள்

அபேச்சை -அவா,விருப்பம்

அபேதம் - ஒற்றுமை,வேற்றுமையின்மை,வேறன்மை

அப்பியாசம் -பழக்கம்,பயிற்சி

அப்பிரதட்சிணம் - இடப்புறச் சுற்று, இடப்பக்கச் சுற்று

அமரத்துவம் - அழிவின்மை

அமலன் - துயோன்,கடவுள்,வாலறிவன்

அந்நியர் - பிறர்,அயலார்

அதிகம் - மிகுதி,அளவின்மை

அமிர்தம்,அமிருதம் - இனிமை,அருமருந்து,சாவா மருந்து,அழிவினமை

அமச்ம் - வகை,பங்கு,காலம்,எண்,அன்னப்புள்

அம்பாரம் - குவியல்

அயோக்கியம் - தகுதியினமை,தகாதது

அயோக்க்கியன் - தகுதியற்றவன்,தகவிலான்,கெட்டவன்

அரணியம் - காடு

அருச்சனை,அர்ச்சனை - வழிபாடு, பூ வழிபாடு,மலர் வழிபாடு

அருத்தம்,அர்த்தம் -பொருள்,பாதி

அருவம் - உருவின்மை,அழகின்மை

அர்த்தநாசம் - பேரழிவு,பொருளழிவு

அர்ப்பணம் - உரிமை கொடுத்தல், ஒப்புவித்தல், நீரோடு கொடுத்தல்

அலங்காரம் - அழகு,ஒப்பனை,அணி,புனைவு

அலச்சியம் - பாராமுகம்,பொருட்படுத்தாமை,கருத்தின்மை

அவகீர்த்தி - இழிவு,புகழின்மை

அவக்கியாதி - வசை,இகழ்ச்சி

அவசரம் - விரைவு,பரபரப்பு,சுருக்கு,பதைப்பு

அவசியம் - முதன்மை,கட்டாயம்,இன்றியமையாமை

அவதரித்தல் - பிறத்தல்

அவதாரம் - பிறப்பு,இறங்குகை

அவதானம் - எச்சரிக்கை,ஒழிவு,நினைவு,விரித்தல்,மறப்பின்மை

அவநம்பிக்கை - நம்ப்பிக்கைக்குறை

அவமரியாதை - முறைதவறல்,வணக்கமின்மை,தீயமுறை

அவமானம் - மானக்கேடு,இழிவு,குறைவு,இளிவரவு

அவயவம்,அவையவம் - உறுப்பு

அவலன் - உடற்குறையன்,வீணன்

அவசு,ஹவிசு - தூய உணவு,சோறு,நெய்,

அற்பம்,அல்பம் - சிறுமை,அணு,புன்மை,இழிவு

அனங்கன் - உடலிலான்,கடவுள்,காமவேள்

அனாதி - கடவுள்,தனியன்,பழமை,தொன்மை

அனுதாபம் - இரக்கம்

அனுபவம் - பழக்கம்,வழக்கம்,அழுந்தியறிதல்,பட்டறிவு

அனுமானம் - உய்த்துணர்தல்,கருதல்ளவை,வழியளவை

அனேகம் - பல,எல்லாம்

அன்னதானம் - சோற்றறம்,சோற்றுக்கொடை,உணாக்கொடை

அன்னம் - சோறு,உணவு,அடிசில்

அன்னியன் - பிறர்,அயலார்

அன்னியோன்னியம் - ஒற்றுமை,நெருக்கம்,ஒருவர்க்கொருவர்

ஆகம் -உடல்,மார்பு

ஆகரு(ர்)ஷண சக்தி - இழுப்பாற்றல்,இழுவழி,சேர்வழி

ஆகாசம்,ஆகாயம் - விண்,வெளி,வான்,விசும்பு,வர்னம்

ஆகாய விமானம் - வான ஊர்தி

ஆகாரம் - உணவு,அடிசில்,உடம்பு,வடிவு

ஆக்கியாபித்தல்,ஆஞ்ஞாபித்தல் - கட்டளையிடல்

ஆக்கிரமித்தல் - வலிந்து கவர்தல்,வலிமை காட்டல்

ஆட்சேபம் - மறுமொழி,மறுத்துக்கூறல்,தடைமொழி

ஆங்காரம் - இறுமாப்பு,செருக்கு,தருக்கு

ஆச சங்கை -ஐயம்

ஆசாபாசம் -அன்பு,பற்று,அவா

ஆசாரம் - ஒழுக்கம்,வழக்கம்,நன்னடை,வழிபாடு,துப்புரவு

ஆசியம்,ஹாசியம் - எள்ளல்,நகை,சிரிப்பு

ஆசீர்வாதம் - வாழ்த்துரை

ஆசுவாசம் - இளைப்பாறுகை

ஆசை - விருப்பம்,அவா,பற்று,வேட்கை,விழைவு

ஆச்சரியம் - புதுமை,வியப்பு,இறும்பூது

ஆ(ச்)சிரமம் - இலைக்குடில்,பாழி,முனிவருறயுள்

ஆஸ்திகம் - கடவுளுண்டெனுங்கொள்கை

ஆஸ்பத்திரி - மருத்துவச்சாலை

ஆஞ்ஞாபித்தல் -கட்டளையிடல்

ஆஞ்ஞை -ஆணை,கட்டளை

ஆடம்பரம் - ஆரவாரம்,பகட்டு

ஆட்சேபம்,ஆட்சேபனம் - தடைமொழி,மறுமொழி,எதிர்மொழி,மறுப்பு

ஆதங்கம் - ஆற்றாமை,அச்சம்,நோய்

அந்நியர் - பிறர்,அயலார்

ஆதவ(ப)ன் - பகலோன்,கதிரோன்

ஆதரவு - துணை,உதவி,சார்பு,பற்றுக்கொடு

ஆதி - முதல்,பழமை,அடி,தொடக்கம்,காரணம்,எழுவாய்,கடவுள்

ஆப்தம்,ஆத்தம் - அன்பு,நட்பு

ஆத்தானம்,ஆஸ்தானம் - நகரவாயில்,அறமன்றம்,கொடிமுடிவாயில்

ஆத்திரம்,ஆத்திரியம்,ஆத்திரவம் - உளக்கொதிப்பு,விரைவு,பரபரப்பு

ஆத்துமா,ஆன்மா - உயிர்

ஆந்ந்தம் - இன்பம்

ஆபத்து -இடர்,துன்பம்,இக்கெட்டு,ஊறுபாடு,இடுக்கண்

ஆபரணம் - அணிகலம்,இழை,நகை,அணி,பூண்

ஆபாசம் - அருவருப்பு,சிதைவு,கெடுதல்,பொய்,அளவைப்பொலி

அபூர்வம் - வினைப்பயன்

ஆமோதித்தல் - உடன்படல்,வழிமொழிதல்,மகிழ்தல்

ஆயக்கட்டு(துளுவம்) - மொத்த நஞ்சை நிலம்,களப்புரவு

ஆயத்தம்(இந்தி) - முயற்சி,எத்தனம்,முன்னேற்பாடு

ஆயா(போர்ச்சுக்கீஸ்) - செவலித்தாய்,கைத்தாய்

ஆயாசம்,ஆயாஸம் - களைப்பு,இளைப்பு,சோர்வு,அயர்வு,மயக்கம்

ஆயுசு,ஆயுள் - வாழ்நாள்,ஆண்டு

ஆயுதம் - கருவு,படைக்கலம்,படை,வாள்

ஆரணியம்,ஆரண்ணியம் - காடு

ஆரம்,ஹாரம் - பூமாலை,தொடையல்

ஆரம்பம் - தொடக்கம்

ஆரம்பித்தல் - தொடங்கல்

ஆராதனம் - வணக்கம்,மகிழ்வித்தல்

ஆரோகம்,ஆரோபம்,ஆரோக்கியஸ்நானம் - நல முழுக்கு,நோய் தீர்ந்தபின் முழுகல்

ஆரோக்கியம் - நலம்,நோயின்மை

ஆரோபணம்- நாட்டுதல்,ஏற்றுதல்

ஆரோபித்தல் - ஏற்றுதல்

ஆர்ச்சிதம் - தேட்டம்,தேடிய பொருள்

ஆர்மோனியம் - இசைக்கருவி

ஆர்வம் - அன்பு,விருப்பம்

ஆலகண்டண் - சிவன்,நஞ்சுமிடற்றன்,கறைமிடற்றன்

ஆலகம்- நெல்லிமரம்

ஆலம் - நஞ்சு

ஆலயம் - கோயில்

ஆலாபம்,ஆலாபனம் - அலப்பு,பேச்சு,உரையாடல்

ஆலோசனை - சூழ்தல்,சூழ்ச்சி,ஓர்வு,எண்ணம்,ஆராய்ச்சி

ஆவசியம் - கட்டாயம்,முதன்மை,இன்றியமையாமை

ஆவத்து,ஆபத்து - இக்கெட்டு,இடர்,பொல்லாங்கு

ஆவர்த்தி,ஆவருத்தம்,ஆவிருத்தி - தடவை,வரிசை,சுற்று,வழக்கம்

ஆவாகனம் - அழைத்தல்,உட்புகல்

ஆனந்தபரவசம் - இன்பக்களிப்பு,பேரின்பக்களிப்பு

ஆனந்தம் - இன்பம்,பேரின்பம்

ஆன்மா - உயிர்

இகம் - இவ்வுலகம்,இவ்விடம்,இப்பிறப்பு

இங்கிதம் - இனிமை,அடையாளம்,கருத்து,இடம் பொருள்

இச்சகம் - முகமன்

இச்சை - விருப்பம்,அவா,விழைவு,வேட்கை

இடபம்,ரிஷபம் - எருது,காளை,ஏறு,விடை

இட்டசித்தி - விருப்பப்பேறு

இதம்,ஹிதம் - இனிமை,நன்மை,அன்பு,அறம்

இதயம்,இதையம்,ஹிருதயம் - நெஞ்சம்,உள்ளம்

இதரம் - வேறு,இயல்,அழிவு,பகைமை

இதிகாசம் - பண்டை வரலாறு,பழங்கதை

இந்திர ஜாலம் - இமயவர்கோன்,வானவர் தலைவன்

இந்து - நிலா,திங்கள்,அம்புலி

இமாலயம்,ஹிமாலயம் - பனிமலை

இரகசியம் - மறைபொருள்,மறை,அற்றம்

இராசாபாசம் - அருவருப்பு,ஒழுங்கின்மை

இரசாயனம் - பொருளியைபு

இரட்சகம் - பாதுகாப்பு,மீட்பு

இரட்சை - காப்பு

இரணம்,ரணம் - புண்

இரதம்,ரதம் - தேர்

இரத்தம் - குருதி,செந்நீர்

இரத்தினம்,ரத்தினம் - மாமணி,செம்மணி

இரம்பம்,ரம்பம் - ஈர்வாள்

இராகம்,ராகம் - இசை,பண்,அவா,விருப்பு

இராகு - கருங்கோள்

இராக்கதர் - அரக்கர்

இராசசூயம் - அரசர் வேள்வி

இராசா - அரையன்,மன்னன்,அரசன்

இராச்சியம் - நாடு,அரசியல்

இராத்திரி - இரவு,கங்குல்

இருஷி,இருடி - முனிவன்,தவசி,துறவி

இதய கமலம் - நெஞ்சத்தாமரை

இருது - பருவம்,மகளிர் முதற்பூப்பு

இரேகை - வரி,எழுத்து,கையிறை,நிறை,தொடர்

இலகிரி,லகிரி,லாகிரி - வெறி,மயக்கம்

இலகு,லகு - எளிது,நொய்மை,நுண்மை,ஈரம்,பலா மரம்

இலங்கணம் - பட்டினி

இலஞ்சம் - கைக்கூலி,கையூட்டு,கையுறை

இலட்சணம்,லட்சணம் - அழகு,பார்வை

இலயித்தல் - ஒடுங்குதல்,சேர்ந்தொன்றித்தல்

இலெளகீகம்,இலவுகீகம் - உலகியல்,உலகப்போக்கு

இலாஞ்சனம்,இலாஞ்சனை - புகழ்,அடியாளம்,கறை

இலாபம்,லாபம் - ஊதியம்,மிச்சம்,பேறு

இலீலை,லீலை - விளையாட்டு

யுகம்,உகம் - உலக முடிவு,இரண்டு

உக்கிராணம் -களஞ்சியம்,சரக்கறை

உஷ்ணம் - வெப்பம்,சூடு

உசிதம் - உயர்வு,சிறப்பு,மேன்மை,தகுதி,ஒழுங்கு

உசிதன் - தக்கோன்

உச்சம் - உயர்ச்சி,சிறப்பு

உச்சரித்தல் - சொல்லுதல்,ஒலித்தல்,ஓதல்

உச்சரிப்பு - எழுத்தோசை

உச்சாட்டியம் - பேய கற்றல்,ஒட்டுதல்

உச்சி - மேடு,முகடு

உச்சிக்காலம்,உச்சிச்சமயம் - நண் பகல், நடுப் பகல்

உதயன் - பகலோன்

உதாரணம்,திருட்டாந்தம் - எடுத்துக்காட்டு,சான்று

உத்தமம் - உண்மை,மேன்மை

உத்தரியம்,உத்தரீயம் - மேலாடை

உத்தரவு - கட்டளை

உத்தி,யுத்தி - அறிவு,இணக்கம்,இசைவு,சூழ்ச்சி,சொல்

உத்தேசம்,உத்தேகம் - கருத்து,மதிப்பு,ஏறக்குறைய

உபகரணம் - கொடுத்தல்,உதபிபொருள்கள்,கருவி,துணைக்காரணம்

உபதேசம் - அருண்மொழி,அறிவுரை

உபயம் - உதவி,நன்கொடை,இரண்டு

உபாசநம்,உபாசநை,உபாசனை - வழிபாடு,வணக்கம்

உபாதி,உபாதை - நோய்,துன்பம்,வருத்தம்

உபாத்தியாயன் - கணக்காயன்,ஆசிரியன்,கற்பிப்போன்

உபாயம் - சூழ்ச்சி,நொய்மை,எளிது,சிறிது

உயுக்கம்,உயுத்தம்,யுத்தம் - போர்,தகுதி

உருசி,ருசி - சுவை

உருத்திராக்கம் - சிவமணி,சுக்குமணி

உரூபம்,ரூபம் - உருவம்,வடிவம்

உரொக்கம்,ரொக்கம் - கைப்பணம்,இருப்பு,கையிருப்பு

உரோமம்,ரோமம் - மயிர்,முடி,குஞ்சி

உல்லாசம் - மகிழ்ச்சி,விளையாட்டு,களிப்பு,உள்ளக்களிப்பு

உவதி,யுவதி, - மங்கை,பதினாறாண்டுப் பெண்

ஊகம் - கருதல்,ஓர்தல்,கருத்து,நினைவு

ஊர்ச்சிதம்,ஊர்ஜ்ஜிதம் - உட்பொருளுணர்தல், நிலைப்படுதல்,உறுதி,கருங்குரங்கு

எசமானன்,எஜமான் - தலைவன்,முதல்வன்,முதலாளி

எந்திரம் - பொறி

எமன் - கூற்றுவன்,மறலி

ஏகதேசம் - ஒருபால்,ஒருபுடை,சிறுபான்மை

ஏகம் - ஒன்று,தனிமை

ஏகாந்தம் - தனிமை,ஒரு முடிவு

ஏகோபித்தல் - ஒன்றுபடுதல்

ஏடணை,ஏஷணை - விருப்பம்

ஐது,ஹேது - காரணம்

ஏக்கம்,ஐக்கியம் - ஒற்றுமை

ஐஸ்வர்யம்,ஐச்வரியம் - செல்வம்,பொருள்,திரு

ஐதீகம்,ஐதிகம் - உலகுரை

ஐம் பூதம்,பஞ்ச பூதம் - ஐந்து முதற்பொருள்

ஓமம்,ஹோமம் - வேள்வி

ஒளடதம்,ஒளஷதம்- மருந்து

களோகம் - வான் வட்டம்,வளி மண்டலம்

கடகம் - கைவளை,வளையம்

கடம் - கடம்,யானைக்கதுப்பு

கடாட்சித்தல் - அருளல்

கடாரம் - கொப்பரை,தேங்காய்

கடிகாரம் - நாழிகை வட்டில்,பொழுது காட்டுங்கருவி

கடிகை - நாழிகை,தாழ்க்கோல்

கடினசித்தம் - வன்னெஞ்சம்

கடினம் - வன்மை,கடுமை,வருத்தம்,கொடுமை

கடூரம்,கொடூரம் - கொடுமை

கட்டம்,கஷ்டம் - துன்பம்,வருத்தம்

கணம்,ஹணம் - குழாம்,கூட்டம்,தொகுதி,நொடிப்பொழுது

கணி - கோள் நூல், கோல் நூல் வல்லான்

கணிகை - பொதுமகள்

கணிசம் - அளவு,மேம்பாடு

கணிதம் - கணக்கு

கண்டம் - நிலப்பிரிவு,துண்டு,கட்டி,மிடறு,கழுத்து

கண்திட்டி,கண்திருஷ்டி - கண்ணேறு

கதம்பகம்,கதம்பம் - கூட்டம்,மணப்பொருட் கூட்டு,சேர்ந்தது,இணைத்தது

கதலி - வாழை

கதி - நடை,செலவு,வழி,புகலிடம்,பற்றுக்கோடு,நிலை

கனகம்,கநகம் - பொன்

கனவான்,கநவான் - பெரியோன்,பெருமையாளன்,பெருந்தகை

கனிஷ்டை,கநிஷ்டை - பின்னோள்,தங்கை

கன்னிகை,கந்நிகை - மணமாகாதவள்,இளம்பெண்

கந்மம்,கருமம் - தொழில்,வினை

கபடம்,கவடம்,கபடு - கரவு,படிறு,வஞ்சகம்,மோசம்,சூது,ஒளிப்பு

கபாலம் - தலையோடு,மண்டையோடு

கபோதி - குருடன்

கப்பம் - இறை

கமண்டலம் - நீர்க்குடுவை

கமலம் - தாமரை,நீர்

கம்பீரம் - உயர்தோற்றம்,பெருமை,ஆழம்,செருக்கு

கயம்,ஹயம் - குளம்,ஆழம்,யானை

கரகம் - வட்டில்,நீர்க்குடுவை

கரகோசம்,கரகோஷம் - கைதட்டுதல்

கரணம் - கருவி,ஐம்பொறி

கரம் - கை

கருச் சித்தல் - முழங்கல்,இரைதல்

கருணை - அருள்,இரக்கம்

கர்த்தா,கருத்தா - தலைவன்,வினைமுதல்,ஆக்கியோன்,நூலாசிரியன்,முதல்வன்,கடவுள்

கர்ப்பவதி - சூலி

கர்ப்பாசயம் - கருப்பை

கர்வம் - செருக்கு,இறுமாப்பு

கலாபம்,கலபம் - மயில்,மயிற்றோகை

கலி - வறுமை,துன்பம்

கலியாணம் - மனம்,மன்றல்,பொன்,மகிழ்ச்சி

கவளீகரித்தல்,கபளீகரம்,கபளீகரித்தல் - முற்றிலும் விழுங்குதல்,விழுங்குதல்

கவனம் - கருத்து நோக்கம்,உன்னித்தல்

கவாத்து - படைக்கலப் பயிற்சி,வெட்டி விடுதல்

கவி - செய்யுள்,புலவன்,பாட்டு

கவுளி,கெளளி - பல்லி

களேபரம் - குழப்பம்,உடல்,பிணம்

கற்பம் - ஊழிக்காலம்,நெடுவாழ்க்கை மருந்து

கனம் - சுமை,பளு,பளுவு

காசம் - ஈளை,ஈளைநோய்,இருமல் நோய்

கசாயம்,கஷாயம் - காவி

காஞ்சிரம் - எட்டி மரம்

காட்டம்,காஷ்டம் - விறகு,வெகுளி

காதகன் - கொலையாளி

காயசித்தி - நீடுவாழ்ப் பேறு

காயம் - உடல்,யாக்கை,வான்

காரிய கர்த்தா - வினைமுதல்வன்

காரியதரிசி - அமைச்சன்,செயலாளன்

கலாட்சேபம் - பொழுதுபோக்கல்,நாட்கழித்தல்,வாழ்க்கை

கால நியமம் - காலமுறை,காலக்கடன்,கால்,ஒழுங்கு

கிஸ்தி - திறை,வரி

கிரகணம்,கிராணம் - பற்றுதல்,பிடித்தல்

கிரகஸ்தம் - இல்லற நிலை

கிரகம் - வீடு,கோள்,பற்றுதல்,பிடிப்பு

கிரணம் - ஒளி,கதிர்

கிரந்தம் - நூல்,எழுத்து

கிரமம் - ஒழுங்கு,முறைமை

கிரயம் - விலை

கிராதன் - குறவன்,வேட்டுவன்

கிரி - மலை,பன்றி

கிரிகை - தொழில்,செயல்,வினை,சடங்கு

கிரிமி,கிருமி - உயிரி,பூச்சி,புழு

கிரீடம் - முடி

கிருஷி - பயிர்,உழவு,பயிர் செய்கை

கிலம் - கழிவு,அழிவு,சிறுமை

கிலேசம் - அச்சம்,கவலை,துன்பம்

கீதம் - இசை,பாட்டு,பாடல்,இசைப்பாட்டு

கீர்த்தனம்,கீர்த்தனை - புகழ்ச்சி,புகழ்ப்பா

கீலகம் - ஆணி,பொருத்து

குஞ்சரம் - யானை

குஷ்டம் - தொழு நோய்,பெரு நோய்

குணஷ்டை - தொல்லை,துன்பம்

குதர்க்கம் - அழிவழக்கு

குதூகலம்,குதுகலம் - பெருங்களிப்பு,பெருமகிழ்வு

குபேரன் - பெருஞ்செல்வன்,செல்வக்கடவுள்

குமரி,குமாரி - நங்கை,மணமாகாப்பெண்,புதல்வி,மகள்

கும்பம் - குடம்

குருகடாட்சம் - ஆசிரியனருட்பார்வை

குரோதம் - உட்பகை

குலாலன் - குயவன்

குலிசம் - வேற்படை

குன்மம் - சூலை,வயிற்று வலி

கேதம் - துன்பம்,இடர்,குற்றம்

கேவலம் - சிறுமை,தனிமை

கோகிலம் - குயில்

கோடம்,கோஷம்,கோஷ்டம் - முழக்கம்,பேரோசை

கோஷ்டி - கூட்டம்

கோடி - நூறு நூறாயிரம்

கோதண்டம் - வில்

கோளகை,கோளம் - உருண்டை,வட்டம்

கெளரவம் - மேன்மை,பெருமை

சக - கூட,உடன்

சகசம்,ஸகஸம் - இயற்கை,ஒற்றுமை

சகஸ்ரநாமம் - ஆயிரந்திருமொழி,ஆயிரந்திருப்பெயர்

சகமார்க்கம் - தோழமை நெறி

சகலம் - எல்லாம்

சகவாசம் - கூடவிருத்தல்,உடனுரைதல்,பழக்கம்,சேர்க்கை,நட்பு

சகா - தோழன்,துணை

சகாப்தம் - ஆண்டு,நூறாண்டு

சகாயம் - நயம்,நன்மை,மலிவு,பயன்,உதவி,துணை

சகி,சகீ - தோழி

சகிதம் - உடன்

சகுணம் - குணத்தோடு கூடியது

சகுந்தம் - கழுகு,பறவை

சகுனம் - குறி

சகோதரம் - உடன்பிறப்பு

சகோதரி - உடன்பிறந்தாள்

சக்கரம் - உருளை,வட்டம்

சக்தி - ஆற்றல்,வல்லமை,வலி

சங்கடம்,சங்கட்டம் - இக்கெட்டு,நெருக்கடி,இடர்,கண்மூடுதல்

சங்கிதை - தொகுதி,வரலாறு

சடுதி,சடிதி - விரைவு

சஷ்டியப்த பூர்த்தி - அறுபதாமாண்டு நிறைவு

சண்டப்பிரசண்டம் - மிகு விரைவு

சண்டமாருதம் - பெருங்காற்று,கடியகாற்று,புயற்காற்று

சண்டாளம் - தீமை,புலைத்தன்மை,நம்பிக்கை கேடு

சண்டாளர் - தீவினையாளர்,இழிஞர்

சண்டித்தனம் - முருட்டுத்தன்மை,முரட்டுத்தன்மை

சதகோடி - நூறு கோடி

சதசு - அவை

சதம் - நூறு நிலை

சதானந்தம் - இடையறா வின்பம்

சதி - இறைவி,அழிவு,வஞ்சனை,சூழ்ச்சி

சந்தகம் - எப்பொழுதும்

சந்தானம் - வழி,வழித்தொடர்பு

சந்தித்தல் - எதிர்படுதல்,கூடுதல்

சந்திரலோகம் - திங்கள் உலகு,அம்புலியுலகம்

சந்திரன் - பிறை,கலையோன்,இரவோன்,அலவன்,அல்லோன்

சந்து - முடுக்கு,இயங்கும் உயிர்,தூது,பிளப்பு,பொருத்து

சந்துட்டம்,சந்துஷ்டி,சந்தோஷம் - மகிழ்ச்சி

சந்தேகம் - ஐயம்,ஐயுறவு

சந்தோஷம் - மகிழ்ச்சி,உவகை,களிப்பு

சன்னதி,சந்நதி,சந்நிதானம் - திருமுன்

சந்நியாசம் - துறவு,துறவறம்

சபதம் - ஆணை,உறுதிமொழி,வஞ்சினம்

சபம்,ஜெபம் - உருவேற்றல்

சபலம் - நிறைவேறல்,வெற்றி,நடுக்கம்,ஏக்கம்,இச்சை,அவா

சபா,சபை - அவை,மன்றம்,கழகம்,அரங்கம்

சபித்தல் - தீமொழி கூறல்,சினந்துரைத்தல்

சமஷ்டி - தொகுதி,எல்லாம்

சமதை - ஒப்பு

சமர்த்தன்,சமத்தன் - வல்லான்,வல்லவன்,திறமையாளன்

சமஸ்தானம்,சமத்தானம் - அரசவை,தலை நகர்

சமம் - இணை,ஈடு,மட்டம்,போர்,நடு,ஓர்மை

சமரச தத்துவம் - பொதுநிலையுண்மை

சமரசம் - பொது,வேறுபாடின்மை,ஒற்றுமை

சமர்ப்பணம் - ஒப்பித்தல்,உயர்ந்தோர்க்குக் கொடுத்தல்

சமாதானம் - அமைதி,இணக்கம்,தணிவு,உடன்பாடு,தக்கவிடை

சமாதி - அமைதி,பிணக்குழி,பேசாதிருத்தல்,இறப்பு,மரித்தல்

சமாப்தம்,சமாப்தி - முற்றுப்பெற்றது

சமாராதனை - உளநிறைவு

சமி,ஷமி - பொறு

சமிதை - வேள்வி விறகு,உலர்ந்த குச்சி

சமீபம் - அருகு,அணமை,மருங்கு

சமீன்தார்,ஜமீந்தார் - நிலக்காரன்,பெருநிலக்கிழார்

சமுதாயம் - குமுகம்,கூட்டம்

சமுத்திரம் - கடல்

சமை,ஷமை - பொறுமை

சம்சாரம்,சம்ஸாரம் - குடும்பம்,இல்லாள்,இல்லத்தரசி

சம்பத்து - செல்வம்,பொருள்

சம்பந்தம -உறவு,பற்று,இயைபு,சார்பு,தொடர்பு,பொருத்தம்

சம்பிரதாயம் - தொல்வழக்கு,முன்னோர் முறை,பண்டை முறை

சம்பு ரேட்சணம் - தெளித்தல்

சம்பூரணம் - நிறைவு

சம்மதம் - உடன்பாடு,ஒப்புமை,இயைபு

சம்ரஷணை - பாதுகாப்பு

சயம்,ஜெயம் - வெற்றி

சரணம்,சரண் -அடைக்கலம்,வணக்கம்,கால்,திருவடி

சரணாகதி - புகலடைதல்,அடைக்கலம்

சராசரம்,ஜங்கமா - இயங்கியற் பொருள், நிலையியற் பொருள்

சரிதம்,சரிதை,சரித்திரம் - வரலாறு

சரீரம் - உடல்,யாக்கை,மெய்

சருமம்,சர்மம் - தோல்

சர்ப்பம் - பாம்பு

சர்வகலாசாலை -

பல்கழைக் கழகம்

சலதளம்- அரசமரம்

சலதாரை - நீர்க்கால்,நீரோட்டம்,மதகு

சலதோசம் - நீர்க்கோர்வை,தடுமம், நீர்க்கோவை

சல்லாபம் - உரையாடல்

சவம் - பிணம்

சவுகரியம்,செளக்கியம்,செளகரியம் -நலம்

சவுந்தரியம்,செளந்தரியம்,சவுந்தரம் - அழகு

செளபாக்கியம்,சவுபாக்கியம் - செல்வம்

சற்காரியம் - உற்பொருளினின்று தோன்றும் வினை

சற்குணம் - நல்லியல்பு

சனனம்,ஜனனம்,சனிப்பு,சன்மம் - பிறப்பு

சாகசம் - ஆற்றல்,துணிவு,நெருக்கிடை

சாகரம் - கடல்

சாகுபடி - பயிர் செய்தல்

சாகை,ஜாகை(உருது) - தங்குமிடம்

சாக்கிரதை,ஜாக்கிரதை - விழிப்பு,உன்னிப்பு,எச்சரிக்கை