Thursday, January 3, 2008

ராமர் பாலம் - ஜோதிபாரதியின் பதில்கள்

ராமர் பாலம் - ஜோதிபாரதியின் பதில்கள்



சேது சமுத்திரத் திட்டத்தால் யாருக்கு லாபம்?

இப்போதைய நிலவரத்தை பார்க்கும் பொழுது, கான்ட்ராக்ட்காரர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் தான் லாபம் கிடைக்கும் போல் தெரிகிறது.

சேது சமுத்திர திட்டம் நிறைவேறுமா?

மிகப்பெரிய நகரமாம் சென்னையில் துர்நாற்றம் அடித்துக்கொண்டு இருக்கும் கூவத்தை தூர்வாரி சுத்தம் செய்ய முடியாத சரித்திரத்தலைவர்கள், சமுத்திரத்தை தூர்வாருகிறேன் என்பது வெட்டிவேலை. வெற்றிகரமாக நிறைவேறுவது கடினம்.
தன் குடும்பத்தை நிர்வகிக்க தெரியாதவன், நான் நாடாளுவேன் என்பதற்குச் சமம்.

ராமர் பாலத்தை இடிப்போம் என்று கலைஞரும், மத்திய அமைச்சர் டி.ஆர். பாலுவும் சொல்வது சரியா?


சரியா சரியில்லையா என்பதை விட, இந்தவிடயம் ஒரு குறிப்பிட்ட மதத்தினரின் மனதை, உணர்வை புண் படுத்துகிறதென்றால், அதை அரசாங்கம் விட்டுவிடுவது நல்லது. கொள்கையில் வேறுபட்டவர்களாக கலைஞரும், டி.ஆர். பாலுவும் இருந்தாலும். பதவியில் இருக்கும் போது தனது சொந்த கொள்கைத் திணிப்பை செய்யக்கூடாது. இது விருப்பு வெறுப்பின்றி உறுதி கூறப்பட்ட பதவி பிரமாணத்துக்கு முரணானதாகும். நம் பாரதியே “சிங்களத்தீவினுக்கோர் பாலம் அமைப்போம் சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்” என்று சொல்லி இருக்கிறான்.
அவன் சொன்னதை சிலர் தவறாக புரிந்து கொள்கிறார்கள். அதன் அர்த்தமாக எனக்கு படுவது, இலங்கைத் தீவில் நம் ஈழத்தமிழர்கள் வாழ்கிறார்கள், நாம் சேது பாலத்தை மேடாக்கி ரோடு போட்டு நம் சொந்தங்களாகிய, ஈழத்தமிழர்களுடன் நம் உறவுகளை மேம்படுத்துவோம் என்பது தான்.

சேது பாலத்திற்கும் ராமனுக்கும் என்ன சம்பத்தம்?

ஒரு உதாரணம் சொன்னால் போதும் என்று நினைக்கிறேன். அந்த காலந்தொட்டு நம் நாட்டில் சேதுராமன் என்று நிறைய பேருக்கு பெயர் இருக்கிறது. ராமேஸ்வரம் என்று இடம் இருக்கிறது. அது எப்படி வந்திருக்கும் என்று ஆராய்ந்தால் நல்ல பதில் கிடைக்கும்.

ராமன் எந்த பொறியியல் கல்லூரியில் படித்தான் என்று கலைஞர் கேட்டிருப்பது பற்றி?

ஒரு கேள்வியை நாம் மற்றவர்களிடம் கேட்கும் போது அதற்கு நமக்கு தகுதி இருக்கிறதா என்பதை தெரிந்துகொண்டு கேட்க வேண்டும். அதேபோன்று நாமும் அவரிடம் சில கேள்விகளை சுலபமாகக் கேட்டுவிடலாம். நீங்கள் எந்த பல்கலைக்கழகத்தில் பொருளாதாரப் பட்டம் பெற்றீர்கள் தமிழ்நாட்டிற்க்கே பட்ஜெட் போடுவதற்கு? பொருளாதார பட்டம் பெற்ற முன்னணி தலைவர்களான நாவலர் நெடுஞ்செழியன், கே.ஏ.மதியழகன், என்.வி.நடராசன், பேராசிரியர் அன்பழகன் ஆகியோரை பின்னுக்குத் தள்ளிவிட்டு, பத்தாம் வகுப்பில் தோல்வி கண்டு மாடர்ன் தியேட்டரில் வேலைபார்த்த நீங்கள் பேரறிஞர் அண்ணா மறைவிற்கு பிறகு, எம்.ஜி.ஆர் உதவியுடன் முதலமைச்ச்சர் பதவியை சூடிக்கொண்டது ஏன்? அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் அண்ணா கண்டெடுத்த முத்துக்கள், தகுதியும் திறமையும் ஒரு சேர பொருளாதார பட்டமும் பெற்றிருந்தார்களே?

பா.ஜ.க, ஜெயலலிதா ஆகியோர் சேது பாலத்தை இடிப்பதை எதிர்ப்பது ஏன்?

அது ராமர் கட்டிய பாலம் என்பதால் எதிர்க்கிறார்களா அல்லது இதை வைத்து அரசியல் லாபம் தேடுவதற்காக எதிர்க்கிறார்களா என்பது தெரியவில்லை.

கலைஞர்களுக்கு பத்வா அறிவித்த சாமியார் வேதாந்தி பற்றி?

இப்போதெல்லாம் சாமியார்கள், அந்த பெயருக்கே அர்த்தம் தெரியாமல் திரிகிறார்கள்.
கண்டிக்கத்தக்கது.

ஆதாம் பாலம் உள்ளது என்று அமெரிக்காவின் நாசா உறுதிசெய்துள்ளது என்று நம் அரசியல் வாதிகள் கூறுவது?

நாம் இன்னும் அந்த அளவுக்கு வளரவில்லை என்று காட்டுகிறது. அவமானப்பட வேண்டிய விடயம்

இந்துக்கடவுள்களை அடிக்கடித் தாக்கும் கலைஞர் பற்றி?

பாதுகாக்கப்பட்ட வீட்டில் இருந்து கொண்டு கல் வீசுவதாக நினைத்துக்கொள்கிறார். பதவியைத் துறந்து சமுக விழிப்புணர்வு இயக்கத்தை ஆரம்ப்பித்து எல்லா மதக்கடவுள்களையும் தாக்கிப் பார்க்கட்டும். பின்பு என்ன நடக்கும் என்று தெரிந்து கொள்ளலாம்.



அன்புடன் ஜோதிபாரதி

8 கருத்துக்கள்:

மாலன் said...

இது குறித்து நான் எழுதியுள்ள பதிவு உங்கள் பார்வைக்கு: http://jannal.blogspot.com/2007_09_01_archive.html
மாலன்

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

வருகைக்கு நன்றி திரு மாலன் அவர்களே,

ராமர் பாலம் பற்றிய உங்கள் பதிவு பல்வேறு பயனுள்ள தகவல்களை தன்னகத்தே கொண்டுள்ளது. நான் தெரிவித்த கருத்துக்களும், தங்கள் கருத்துக்களை ஒத்தே இருப்பதாகக் கருதுகிறேன். எனக்கு பட்டதை எனது பதிவில் தெரிவித்திருக்கிறேன்.

நன்றி!
அன்புடன்,
ஜோதிபாரதி.

வருகைக்கு நன்றி திரு மாலன் அவர்களே,

ராமர் பாலம் பற்றிய உங்கள் பதிவு பல்வேறு பயனுள்ள தகவல்களை தன்னகத்தே கொண்டுள்ளது. நான் தெரிவித்த கருத்துக்களும், தங்கள் கருத்துக்களை ஒத்தே இருப்பதாகக் கருதுகிறேன். எனக்கு பட்டதை எனது பதிவில் தெரிவித்திருக்கிறேன்.

நன்றி!
அன்புடன்,
ஜோதிபாரதி.

Mangai said...

நல்லா எழுதி இருக்கீங்க

Border line cross பண்ணுவதாக யாராவது வந்து எச்சரிக்கை விடுக்கக் கூடும்.



ராமாயணத்தில் சொல்லப் பட்ட பாலம் மாதிரி ஒன்று இருப்பதை ஒரு coincidence என்றும் பாலம் அல்ல என்றும் சொல்ல முயற்சி செய்பவர்கள்,

ஒரு காலத்தில் உள் நாட்டு சண்டை போட்டே ஆங்கிலேயன் காலடியில் வீழ்ந்து விட்ட் நிலை புரிந்தும் தன் சுய லாபதிற்கு இப்படி சொல்லி திரிகிறார்கள்.

குரங்கு கையில் பூமாலையாக இராக் அமேரிகா கையில் சிக்கித் தவிப்பதைப் பார்த்தும் நம் மக்களுக்கு புத்தி வர மாட்டேன் என்கிறது.

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி மங்கை!

அன்புடன்,
ஜோதிபாரதி.

வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி மங்கை!

அன்புடன்,
ஜோதிபாரதி.

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

சேது திட்டம் கைவிடப்படும்?

Friday, 01 February, 2008 12:48 PM
புதுடெல்லி, பிப்.1: சேது சமுத்திர கால்வாய் திட்டத்தை நிறைவேற்றுவதால் வர்த்தக ரீதியிலான பெரிய கப்பல்கள் வரமுடியாது என்பதோடு, இந்திய பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்படும் என்று கடற்படை மற்றும் கடலோர காவல் படை தலைவர்கள் கருத்து கூறியுள்ளனர். இந்நிலையில் இத்திட்டம் கைவிடப் படுவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இத்திட்டத்தை தொடருவதா, வேண்டாமா என்பது குறித்து பல்வேறு அம்சங்களை மத்திய அரசு ஆய்வு செய்து இறுதி முடிவு எடுக்கவுள்ளதாக மத்திய கலாச்சாரத் துறை அமைச்சர் அம்பிகாசோனி தெரிவித்துள்ளார்.

.
ராமர் பாலத்தை தகர்த்து சேது சமுத்திர கால்வாய் திட்டத்தை அமைக்க வேண்டும் என்பதில் மத்தியில் ஆளும் கூட்டணியில் இடம் பெற்றுள்ள திமுக தீவிரம் காட்டி வருகிறது. இதற்கு பல்வேறு மக்களிடம் இருந்து எதிர்ப்பு எழுந் துள்ளதோடு, உச்ச நீதிமன்றத்திலும் வழக்குகள் போடப்பட்டுள்ளன.

இந்நிலையில் இத்திட்டத்தை நிறைவேற்றினாலும் பெரிய வர்த்தக கப்பல்கள் இந்த கால்வாய் வழியாக வர முடியாது என்பதால், இதனால் வருவாய் ரீதியில் பயனில்லை என்று இந்திய கப்பல் படை தலைவர் அட்மிரல் சுரேஷ் மேத்தா கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும், சேது சமுத்திர கால்வாய் திட்டத்தை நிறைவேற்றினால் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்று கடலோர காவல் படைத் தலைவர் வைஸ் அட்மிரல் காண்ட்ராக்டர் எச்சரித்துள்ளார். அப்பகுதியில் செயல்படும் தீவிர வாதிகள் இந்த கால்வாய் வழியாக செல்லும் கப்பல்களை தாக்குவதற்கு வாய்ப்புள்ளது என்றும் கூறியுள்ளார்.

இந்நிலையில், இத்திட்டம் குறித்த இறுதி முடிவு எடுப்பதற்கு முன்பாக நாட்டின் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்களை ஆராய வேண்டி உள்ளது என்று மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் அம்பிகாசோனி கூறியுள்ளார். இத்திட்டம் குறித்து இந்திய தொல்லியல் ஆய்வுத்துறை தீர்மானமான கருத்து எதையும் இதுவரை தெரிவிக்கவில்லை.

தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இடமாக இதனை அறிவிப்பதா என்பது குறித்தும் முடிவு எடுக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார். இதனிடையே, ஜனதா கட்சித் தலைவர் டாக்டர் சுப்பிரமணியசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், இந்திய கப்பல் படை, உளவு அமைப்புகள் ஆகியவற்றின் அனு மதியை பெறாமல் திட்டத்திற்காக வீணாக செலவழிக்கப்பட்டுள்ள 800 கோடி ரூபாயை மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுவிடம் இருந்து வசூலிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டு மென்று கூறியுள்ளார்.

முன்கூட்டியே நாடாளுமன்றத்திற்கு தேர்தல் வருவதற்கான வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால், இத் திட்டத்தை தொடர்ந்து செயல் படுத்துவதன் மூலம் ராமபக்தர்களின் எதிர்ப்பை சம்பாதித்துக்கொள்ள காங்கிரஸ் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில் இத்திட்டத் தினால் ஏற்படக்கூடிய பாதகங்களை இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல் படை தலைவர்கள் வெளிப் படுத்தி உள்ளதால் சேது சமுத்திர கால்வாய் திட்டத்தை மத்திய அரசு கைவிடுவதற்கான வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.

நன்றி-மாலைச்சுடர்

அன்புடன்,
ஜோதிபாரதி.

சேது திட்டம் கைவிடப்படும்?

Friday, 01 February, 2008 12:48 PM
புதுடெல்லி, பிப்.1: சேது சமுத்திர கால்வாய் திட்டத்தை நிறைவேற்றுவதால் வர்த்தக ரீதியிலான பெரிய கப்பல்கள் வரமுடியாது என்பதோடு, இந்திய பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்படும் என்று கடற்படை மற்றும் கடலோர காவல் படை தலைவர்கள் கருத்து கூறியுள்ளனர். இந்நிலையில் இத்திட்டம் கைவிடப் படுவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இத்திட்டத்தை தொடருவதா, வேண்டாமா என்பது குறித்து பல்வேறு அம்சங்களை மத்திய அரசு ஆய்வு செய்து இறுதி முடிவு எடுக்கவுள்ளதாக மத்திய கலாச்சாரத் துறை அமைச்சர் அம்பிகாசோனி தெரிவித்துள்ளார்.

.
ராமர் பாலத்தை தகர்த்து சேது சமுத்திர கால்வாய் திட்டத்தை அமைக்க வேண்டும் என்பதில் மத்தியில் ஆளும் கூட்டணியில் இடம் பெற்றுள்ள திமுக தீவிரம் காட்டி வருகிறது. இதற்கு பல்வேறு மக்களிடம் இருந்து எதிர்ப்பு எழுந் துள்ளதோடு, உச்ச நீதிமன்றத்திலும் வழக்குகள் போடப்பட்டுள்ளன.

இந்நிலையில் இத்திட்டத்தை நிறைவேற்றினாலும் பெரிய வர்த்தக கப்பல்கள் இந்த கால்வாய் வழியாக வர முடியாது என்பதால், இதனால் வருவாய் ரீதியில் பயனில்லை என்று இந்திய கப்பல் படை தலைவர் அட்மிரல் சுரேஷ் மேத்தா கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும், சேது சமுத்திர கால்வாய் திட்டத்தை நிறைவேற்றினால் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்று கடலோர காவல் படைத் தலைவர் வைஸ் அட்மிரல் காண்ட்ராக்டர் எச்சரித்துள்ளார். அப்பகுதியில் செயல்படும் தீவிர வாதிகள் இந்த கால்வாய் வழியாக செல்லும் கப்பல்களை தாக்குவதற்கு வாய்ப்புள்ளது என்றும் கூறியுள்ளார்.

இந்நிலையில், இத்திட்டம் குறித்த இறுதி முடிவு எடுப்பதற்கு முன்பாக நாட்டின் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்களை ஆராய வேண்டி உள்ளது என்று மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் அம்பிகாசோனி கூறியுள்ளார். இத்திட்டம் குறித்து இந்திய தொல்லியல் ஆய்வுத்துறை தீர்மானமான கருத்து எதையும் இதுவரை தெரிவிக்கவில்லை.

தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இடமாக இதனை அறிவிப்பதா என்பது குறித்தும் முடிவு எடுக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார். இதனிடையே, ஜனதா கட்சித் தலைவர் டாக்டர் சுப்பிரமணியசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், இந்திய கப்பல் படை, உளவு அமைப்புகள் ஆகியவற்றின் அனு மதியை பெறாமல் திட்டத்திற்காக வீணாக செலவழிக்கப்பட்டுள்ள 800 கோடி ரூபாயை மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுவிடம் இருந்து வசூலிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டு மென்று கூறியுள்ளார்.

முன்கூட்டியே நாடாளுமன்றத்திற்கு தேர்தல் வருவதற்கான வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால், இத் திட்டத்தை தொடர்ந்து செயல் படுத்துவதன் மூலம் ராமபக்தர்களின் எதிர்ப்பை சம்பாதித்துக்கொள்ள காங்கிரஸ் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில் இத்திட்டத் தினால் ஏற்படக்கூடிய பாதகங்களை இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல் படை தலைவர்கள் வெளிப் படுத்தி உள்ளதால் சேது சமுத்திர கால்வாய் திட்டத்தை மத்திய அரசு கைவிடுவதற்கான வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.

நன்றி-மாலைச்சுடர்

அன்புடன்,
ஜோதிபாரதி.

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

மாற்றுப்பாதையில் சேது சமுத்திர திட்டமா? * வாய்ப்பே இல்லை : மத்திய அரசு பதிலடி! (5 பிப்ரவரி 2008)

சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற தற்போது எந்த பாதை தேர்வு செய்யப்பட்டதோ, அதே பாதையிலேயே இந்த திட்டத்தை நிறைவேற்ற அனுமதி கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்ய மத்திய அரசு தீர்மானித்துள்ளது.



இதுகுறித்து, வரும் 14ம் தேதி நடைபெறும் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இறுதி முடிவெடுக்கப்படவுள்ளது.சேது சமுத்திர திட்டம் நடந்து வரும் பாதையில் இந்தியாவுக்கும்-இலங்கைக்கும் இடையே ராமரால் கட்டப்பட்ட பாலம் உள்ளது என்றும், அதை இடிக்கக் கூடாது என்றும் இந்து அமைப்புகள் போர்க்கொடி உயர்த்தின.

இந்த எதிர்ப்பு தீவிரம் பெற்று அ.தி.மு.க., பா.ஜ., உள்ளிட்ட கட்சிகளும் கையிலெடுத்து, சுப்ரீம் கோர்ட் வரை சென்று வழக்கு தொடரப்பட்டது. ராமர் பாலம் இருப்பதாகக் கூறப்படும் பகுதியில் பணிகளை நிறுத்தி வைக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.

இந்த திட்டத்தை மாற்றுப்பாதையில் நிறைவேற்ற வேண்டுமென கோரிக்கையும் வைக்கப்பட்டுள்ளது. அரசியல் நெருக்கடி காரணமாக காங்கிரஸ், பா.ம.க., அ.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகளும் மாற்றுப்பாதையை வலியுறுத்த துவங்கியுள்ளன. மாற்றுப்பாதை என்பது சாத்தியமானதா என்ற முக்கிய கேள்வி தற்போது எழுந்துள்ளது.

இதுகுறித்து டில்லியில் நேற்று முன்தினம் அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜி, சிதம்பரம், பாலு, பரத்வாஜ், கபில்சிபல் மற்றும் அம்பிகா சோனி ஆகியோர் ஆலோசனை நடத்தினர். அதிகாரப்பூர்வமற்ற வகையில் நடந்த இந்த கூட்டத்தில், மத்திய அமைச்சரவையின் செயலரும் பங்கேற்றார். இந்த ஆலோசனைக் கூட்டம் குறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது:

சேது சமுத்திர திட்டம் தீட்டப்பட்ட போது இதற்கென மொத்தம் ஆறு பாதைகள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. வருமானத்திற்கு உத்தரவாதம் மற்றும் சுற்றுப்புற சூழல், கடல்வாழ் உயிரினங்களின் பாதுகாப்பு ஆகிய விஷயங்கள் முக்கியமாக கவனத்தில் கொள்ளப்பட்டன. முதல் ஐந்து பாதைகளுமே மேற்கண்ட விஷயங்களில் ஏதாவது ஒன்றிற்கு பாதகமாக இருப்பது தெரிய வந்தது.

கடந்த 2003-04ம் ஆண்டில் சுற்றுச்சூழல் ஆய்வு மையமான நீரி, தனது ஆய்வறிக்கையில் இதை தெளிவுபடுத்தியிருந்தது. இந்த கடல் பகுதியில் 21 தீவுகள் உள்ளன. கடல் வாழ் உயிரினங்கள் அதிகம் உள்ளன. முதல் ஐந்து பாதைகளில் எந்தவொரு பாதையை தேர்வு செய்தாலும், இந்த பகுதிகள் வழியாகத்தான் சென்றாக வேண்டியிருக்கிறது. கடற்பாசி போன்றவற்றிற்கும் பாதிப்பு ஏற்படும்.

ஐந்து பாதைகளில் இரு பாதைகள் சர்வதேச கடல் பகுதிக்குள் சென்றாக வேண்டியுள்ளது. மற்ற இரண்டை தேர்வு செய்தால், கடல் வாழ் உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும். இன்னொரு பாதையை தேர்வு செய்தால், அண்டை நாடான இலங்கையின் தலையீடும் தவிர்க்க இயலாத காரியமாகி விடும். இது போன்ற பிரச்னைகள் காரணமாகத்தான் ஐந்து பாதைகளையும் கைவிட்டு விட்டு ஆறாவது பாதை தேர்வு செய்யப்பட்டது. தற்போது தேர்வு செய்யப்பட்டிருக்கும் ஆறாவது பாதை என்பதே எல்லா பிரச்னைகளுக்கும் தீர்வாக உள்ளது.

கடற்படை மற்றும் கடலோர காவற்படை ஆகியவற்றின் அதிகாரிகள், தற்போது இந்த திட்டம் குறித்து அதிருப்தி கருத்துக்களை வெளியிடுகின்றனர். ஆனால், முந்தைய தே.ஜ., ஆட்சியின் போது ராணுவ அமைச்சராக இருந்தவர் ஜார்ஜ் பெர்னாண்டஸ். இந்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டுமென்று வலியுறுத்தியும், இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டால், நாட்டின் எல்லையோர பாதுகாப்பு மேம்படும் என்றும் கருத்து தெரிவித்திருந்தார்.

கடலோர காவல்படையின் கமாண்டர், சென்னை துறைமுக தலைவருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், `கடலோர காவல்படை வசம் உள்ள கப்பல்கள் அனைத்துமே சிறியவை. 12 மீட்டர் ஆழம் அளவுக்கே இவை பயணம் செய்ய தகுந்தவை. சேது சமுத்திர திட்டம் நிறைவேற்றப்பட்டால், கடலோர காவல் படையின் ரோந்துப் பணிக்கும், கடலோர கிராமங்களை கண்காணிக்கும் பணிக்கும் பேருதவியாக இருக்கும். சுனாமி போன்ற பேரழிவு சம்பவங்களின் போது மீட்புப் பணிகளில் ஈடுபட வசதியாகவும் இருக்கும்' என்று கூறியுள்ளார். ஆக தற்போது தேர்வு செய்யப்பட்டிருக்கும் ஆறாவது பாதை தான் இறுதியான ஒன்று. இதை தவிர்த்து விட்டு, வேற்றுப்பாதையை தேர்வு செய்வது என்பது இயலாத காரியம்.

ஆகவே, தற்போதுள்ள நிலைமையில் ஒன்று, சேது திட்டத்தை திட்டமிட்டபடி ஆறாவது பாதையிலேயே நிறைவேற்ற நடவடிக்கை எடுத்தாக வேண்டும் அல்லது திட்டத்தையே கைவிட வேண்டும். திட்டத்தை கைவிடுவது என்பது முடியாத காரியமென்பதால், ஆறாவது பாதையிலேயே திட்டத்தை நிறைவேற்ற அனுமதி வழங்கும்படி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்படும்.

வரும் 14ம் தேதி அதிகாரப்பூர்வமான ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. சேது திட்டம் குறித்து பல்வேறு சர்ச்சைகளுக்கும் மொத்தமாக சேர்த்து ஒரே மனுவை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யவும் முடிவெடுக்கப்படும்.இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.


அன்புடன்,
ஜோதிபாரதி.

மாற்றுப்பாதையில் சேது சமுத்திர திட்டமா? * வாய்ப்பே இல்லை : மத்திய அரசு பதிலடி! (5 பிப்ரவரி 2008)

சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற தற்போது எந்த பாதை தேர்வு செய்யப்பட்டதோ, அதே பாதையிலேயே இந்த திட்டத்தை நிறைவேற்ற அனுமதி கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்ய மத்திய அரசு தீர்மானித்துள்ளது.



இதுகுறித்து, வரும் 14ம் தேதி நடைபெறும் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இறுதி முடிவெடுக்கப்படவுள்ளது.சேது சமுத்திர திட்டம் நடந்து வரும் பாதையில் இந்தியாவுக்கும்-இலங்கைக்கும் இடையே ராமரால் கட்டப்பட்ட பாலம் உள்ளது என்றும், அதை இடிக்கக் கூடாது என்றும் இந்து அமைப்புகள் போர்க்கொடி உயர்த்தின.

இந்த எதிர்ப்பு தீவிரம் பெற்று அ.தி.மு.க., பா.ஜ., உள்ளிட்ட கட்சிகளும் கையிலெடுத்து, சுப்ரீம் கோர்ட் வரை சென்று வழக்கு தொடரப்பட்டது. ராமர் பாலம் இருப்பதாகக் கூறப்படும் பகுதியில் பணிகளை நிறுத்தி வைக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.

இந்த திட்டத்தை மாற்றுப்பாதையில் நிறைவேற்ற வேண்டுமென கோரிக்கையும் வைக்கப்பட்டுள்ளது. அரசியல் நெருக்கடி காரணமாக காங்கிரஸ், பா.ம.க., அ.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகளும் மாற்றுப்பாதையை வலியுறுத்த துவங்கியுள்ளன. மாற்றுப்பாதை என்பது சாத்தியமானதா என்ற முக்கிய கேள்வி தற்போது எழுந்துள்ளது.

இதுகுறித்து டில்லியில் நேற்று முன்தினம் அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜி, சிதம்பரம், பாலு, பரத்வாஜ், கபில்சிபல் மற்றும் அம்பிகா சோனி ஆகியோர் ஆலோசனை நடத்தினர். அதிகாரப்பூர்வமற்ற வகையில் நடந்த இந்த கூட்டத்தில், மத்திய அமைச்சரவையின் செயலரும் பங்கேற்றார். இந்த ஆலோசனைக் கூட்டம் குறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது:

சேது சமுத்திர திட்டம் தீட்டப்பட்ட போது இதற்கென மொத்தம் ஆறு பாதைகள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. வருமானத்திற்கு உத்தரவாதம் மற்றும் சுற்றுப்புற சூழல், கடல்வாழ் உயிரினங்களின் பாதுகாப்பு ஆகிய விஷயங்கள் முக்கியமாக கவனத்தில் கொள்ளப்பட்டன. முதல் ஐந்து பாதைகளுமே மேற்கண்ட விஷயங்களில் ஏதாவது ஒன்றிற்கு பாதகமாக இருப்பது தெரிய வந்தது.

கடந்த 2003-04ம் ஆண்டில் சுற்றுச்சூழல் ஆய்வு மையமான நீரி, தனது ஆய்வறிக்கையில் இதை தெளிவுபடுத்தியிருந்தது. இந்த கடல் பகுதியில் 21 தீவுகள் உள்ளன. கடல் வாழ் உயிரினங்கள் அதிகம் உள்ளன. முதல் ஐந்து பாதைகளில் எந்தவொரு பாதையை தேர்வு செய்தாலும், இந்த பகுதிகள் வழியாகத்தான் சென்றாக வேண்டியிருக்கிறது. கடற்பாசி போன்றவற்றிற்கும் பாதிப்பு ஏற்படும்.

ஐந்து பாதைகளில் இரு பாதைகள் சர்வதேச கடல் பகுதிக்குள் சென்றாக வேண்டியுள்ளது. மற்ற இரண்டை தேர்வு செய்தால், கடல் வாழ் உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும். இன்னொரு பாதையை தேர்வு செய்தால், அண்டை நாடான இலங்கையின் தலையீடும் தவிர்க்க இயலாத காரியமாகி விடும். இது போன்ற பிரச்னைகள் காரணமாகத்தான் ஐந்து பாதைகளையும் கைவிட்டு விட்டு ஆறாவது பாதை தேர்வு செய்யப்பட்டது. தற்போது தேர்வு செய்யப்பட்டிருக்கும் ஆறாவது பாதை என்பதே எல்லா பிரச்னைகளுக்கும் தீர்வாக உள்ளது.

கடற்படை மற்றும் கடலோர காவற்படை ஆகியவற்றின் அதிகாரிகள், தற்போது இந்த திட்டம் குறித்து அதிருப்தி கருத்துக்களை வெளியிடுகின்றனர். ஆனால், முந்தைய தே.ஜ., ஆட்சியின் போது ராணுவ அமைச்சராக இருந்தவர் ஜார்ஜ் பெர்னாண்டஸ். இந்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டுமென்று வலியுறுத்தியும், இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டால், நாட்டின் எல்லையோர பாதுகாப்பு மேம்படும் என்றும் கருத்து தெரிவித்திருந்தார்.

கடலோர காவல்படையின் கமாண்டர், சென்னை துறைமுக தலைவருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், `கடலோர காவல்படை வசம் உள்ள கப்பல்கள் அனைத்துமே சிறியவை. 12 மீட்டர் ஆழம் அளவுக்கே இவை பயணம் செய்ய தகுந்தவை. சேது சமுத்திர திட்டம் நிறைவேற்றப்பட்டால், கடலோர காவல் படையின் ரோந்துப் பணிக்கும், கடலோர கிராமங்களை கண்காணிக்கும் பணிக்கும் பேருதவியாக இருக்கும். சுனாமி போன்ற பேரழிவு சம்பவங்களின் போது மீட்புப் பணிகளில் ஈடுபட வசதியாகவும் இருக்கும்' என்று கூறியுள்ளார். ஆக தற்போது தேர்வு செய்யப்பட்டிருக்கும் ஆறாவது பாதை தான் இறுதியான ஒன்று. இதை தவிர்த்து விட்டு, வேற்றுப்பாதையை தேர்வு செய்வது என்பது இயலாத காரியம்.

ஆகவே, தற்போதுள்ள நிலைமையில் ஒன்று, சேது திட்டத்தை திட்டமிட்டபடி ஆறாவது பாதையிலேயே நிறைவேற்ற நடவடிக்கை எடுத்தாக வேண்டும் அல்லது திட்டத்தையே கைவிட வேண்டும். திட்டத்தை கைவிடுவது என்பது முடியாத காரியமென்பதால், ஆறாவது பாதையிலேயே திட்டத்தை நிறைவேற்ற அனுமதி வழங்கும்படி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்படும்.

வரும் 14ம் தேதி அதிகாரப்பூர்வமான ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. சேது திட்டம் குறித்து பல்வேறு சர்ச்சைகளுக்கும் மொத்தமாக சேர்த்து ஒரே மனுவை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யவும் முடிவெடுக்கப்படும்.இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.


அன்புடன்,
ஜோதிபாரதி.

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

பிப்ரவரி 7, 2008

ராமர் பாலம் (ஆதாம் பாலம்) குறித்து அகழ்வாராய்ச்சி நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

ராமர் பாலத்தை வைத்து சேது சமுத்திரத் திட்டத்தை முடக்கிவிட்டதோடு, மத்திய அரசுக்கும் பெரும் தலைவலி தந்து வருகிறது பாஜக. இந்த விவகாரத்தில் பாஜகவின் நிலைக்கு வட மாநிலங்களில் ஆதரவு அதிகரித்து வருவதால் சேது திட்டத்தில் எந்த அவசர முடிவையும் எடுக்க காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு தயாராக இல்லை.

இந் நிலையில் சேது திட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் பதில் மனு தாக்கல் செய்யாமல் இழுத்தடித்து வருகிறது மத்திய அரசு.

திட்டத்தை நிறைவேற்றிய ஆக வேண்டும் என ஒரு பக்கம் திமுக நெருக்கி வருவதால் என்ன பதில் தாக்கல் செய்வது என்று தெரியாமல் குழம்பிப் போயுள்ளது மத்திய அரசு. ஆனால், அடுத்த மாதம் பதில் மனு தாக்கல் செய்தே ஆக வேண்டிய நிலை.

இந் நிலையில் ராமர் பாலம் எனப்படும் ஆதாம் பாலம் மனிதனால் கட்டப்பட்டதா என்பது குறித்து அகழ்வராய்ச்சி நடத்தி முடிவெடுப்பதாக பதில் மனு தாக்கல் செய்ய மத்திய அரசு தயாராகி வருவதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதே நேரத்தில் இத் திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு தீவிரமாக இருப்பதாகவும் அந்த மனுவில் கூறப்படுமாம் (இது திமுகவை தாஜா செய்ய).

இந்த பதில் மனுவுக்கு கூட்டணியில் உள்ள பிற கட்சிகள் ஒப்புக் கொண்டுவிட்ட நிலையில் திமுக தலைமையையும் ஒப்புக் கொள்ள வைக்கும் வேலையில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

ஆனால், இந்த அகவ்வாராய்ச்சிப் பணி என்பது பல ஆண்டுகள் பிடிக்கும் வேலை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் சேது சமுத்திரத் திட்டத்துக்கு பெரிய பிரேக் விழலாம்.

விரைவில் நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க வேண்டிய நிலையில் உள்ள காங்கிரஸ் ராமர் பால விவகாரத்தில் பாஜகவிடம் சிக்கிக் கொள்ள தயாராக இல்லை.


அன்புடன்,
ஜோதிபாரதி.

பிப்ரவரி 7, 2008

ராமர் பாலம் (ஆதாம் பாலம்) குறித்து அகழ்வாராய்ச்சி நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

ராமர் பாலத்தை வைத்து சேது சமுத்திரத் திட்டத்தை முடக்கிவிட்டதோடு, மத்திய அரசுக்கும் பெரும் தலைவலி தந்து வருகிறது பாஜக. இந்த விவகாரத்தில் பாஜகவின் நிலைக்கு வட மாநிலங்களில் ஆதரவு அதிகரித்து வருவதால் சேது திட்டத்தில் எந்த அவசர முடிவையும் எடுக்க காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு தயாராக இல்லை.

இந் நிலையில் சேது திட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் பதில் மனு தாக்கல் செய்யாமல் இழுத்தடித்து வருகிறது மத்திய அரசு.

திட்டத்தை நிறைவேற்றிய ஆக வேண்டும் என ஒரு பக்கம் திமுக நெருக்கி வருவதால் என்ன பதில் தாக்கல் செய்வது என்று தெரியாமல் குழம்பிப் போயுள்ளது மத்திய அரசு. ஆனால், அடுத்த மாதம் பதில் மனு தாக்கல் செய்தே ஆக வேண்டிய நிலை.

இந் நிலையில் ராமர் பாலம் எனப்படும் ஆதாம் பாலம் மனிதனால் கட்டப்பட்டதா என்பது குறித்து அகழ்வராய்ச்சி நடத்தி முடிவெடுப்பதாக பதில் மனு தாக்கல் செய்ய மத்திய அரசு தயாராகி வருவதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதே நேரத்தில் இத் திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு தீவிரமாக இருப்பதாகவும் அந்த மனுவில் கூறப்படுமாம் (இது திமுகவை தாஜா செய்ய).

இந்த பதில் மனுவுக்கு கூட்டணியில் உள்ள பிற கட்சிகள் ஒப்புக் கொண்டுவிட்ட நிலையில் திமுக தலைமையையும் ஒப்புக் கொள்ள வைக்கும் வேலையில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

ஆனால், இந்த அகவ்வாராய்ச்சிப் பணி என்பது பல ஆண்டுகள் பிடிக்கும் வேலை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் சேது சமுத்திரத் திட்டத்துக்கு பெரிய பிரேக் விழலாம்.

விரைவில் நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க வேண்டிய நிலையில் உள்ள காங்கிரஸ் ராமர் பால விவகாரத்தில் பாஜகவிடம் சிக்கிக் கொள்ள தயாராக இல்லை.


அன்புடன்,
ஜோதிபாரதி.

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

சேது சமுத்திரத் திட்டம் விஞ்ஞான அடிப்படையில் சாத்தியம் இல்லை என்பதால் அத்திட்டத்தை மத்திய அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கடல்சார் நிபுணர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
.
சேது சமுத்திரத்திட்டத்தால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து "கோஸ்டல் ஆக்ஷன் நெட்வொர்க்' என்ற புத்தகம் எழுதப்பட்டுள்ளது. இப்புத்தகத்தை இந்திய புவியியல் ஆய்வு மையத்தின் முன்னாள் தலைவர் கோபாலகிருஷ்ணன் வெளியிட, இந்திய கடற்படை முன்னாள் கேப்டன் பாலகிருஷ்ணன் பெற்றுக் கொண்டார்.

பின்னர் , "கோஸ்டல் ஆக்ஷன் நெட்வொர்க்' நூலின் ஒருங்கிணைப்பாளர் ஜேசு ரத்தினம் செய்தியாளர்களிடம் பேசியதாவது: சேது திட்டம் தொடர்பான விவரங்களை மத்திய அரசிடம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கோரியிருந்தோம். இந்த திட்டத்தை நிறைவேற்ற மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள், செயற்கை கோள் மூலம் எடுக்கப்பட்டபுகைப்படம் ஆகியவற்றை கேட்டிருந்தோம். ஆனால், எதுவும் தரப்படவில்லை.

விஞ்ஞானப்பூர்மாக இந்த திட்டம் சாத்தியம் இல்லை என்று பல்வேறு நிபுணர்களின் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ராமர் பாலம் பெயரைக் கூறி இத்திட்டத்தை கைவிட வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. மத ரீதியாக மட்டுமல்லாது விஞ்ஞான ரீதிமாகவும் இத்திட்டம் நிறைவேற சாத்தியம் இல்லை என்றார். முன்னாள் கடற்படை கேப்டன் பாலகிருஷ்ணன் பேசியதாவது:

இத்திட்டத்திற்காக கடலில் 12 மீட்டர் ஆழத்திற்கு தோண்டப்படுகிறது. 30 ஆயிரம் கிலோ எடைகொண்ட கப்பல்கள் மட்டுமே இந்த ஆழத்தில் செல்லமுடியும். இந்த வகை கப்பல்களே பத்தரை மீட்டருக்கு செல்லும். அதிக எடை கொண்ட கப்பல்கள் வந்தால் சில சமயங்களில் மணலில் சிக்கிக் கொள்ள நேரிடும்.

மேலும், கொல்கத்தாவில் இருந்து தூத்துக்குடிக்கு வரும் கப்பல் நிறுவனங்களால் 19.40 லட்சம் நஷ்டம் ஏற்படும். அதே போன்று சிங்கபூரில் இருந்து ஏடன் நகருக்கு செல்லும் கப்பல்களால் 60 லட்சம் நஷ்டம் ஏற்படும். அதனால் எந்த ஒரு கப்பல் நிறுவனங்களும் சேது கால்வாய் வழியை பயன்படுத்த மாட்டார்கள். வீணாக 2 ஆயிரத்து 400 கோடி ரூபாய் இத்திட்டத்திற்காக செலவு செய்யப்படுகிறது.

இப்பகுதிகளில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும். கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதால் இந்த வழித்தடத்தில் எந்த கப்பல்களும் செல்லாது என்றார்.
இந்திய புவியியல் ஆய்வு மையத்தின் முன்னாள் தலைவர் கோபாலகிருஷ்ணன் பேசுகையில், இயற்கை நிலைப்பாடுகள் எப்படி இருக்கிறது என்பது குறித்து அப்பகுதியில் ஆய்வுகள் செய்யப்படவில்லை. தனிப்பட்ட முறையில் நான் ஆய்வு செய்தபோது 4 வகை புவியியல் நிகழ்வுகள் அங்கு நடைபெறுகின்றன.

அங்கு வெந்நீர் ஊற்றுகள் உள்ளன. கடலுக்கு அடியில் எரிமலைகள் இருக்க வாய்ப்பு உள்ளது. போதுமான ஆய்வுகள் செய்யாமல் இந்த திட்டம் துவங்கப்பட்டுள்ளது என்றார்.
ஜான் ஜேக்கப் புதூர் என்பவர் பேசுகையில், இலங்கையில் பருவமழை அதிகம். இதனால், அங்கு மழை பெய்யும் போது கடலின் மேற்பரப்பில் ஏற்படும் மணல் துகள்கள் மீண்டும் கால்வாயை அடைத்துக் கொள்ளும். இதனை சரி செய்ய ஆண்டுக்கு 200 கோடி தேவைப்படும். ஆனால், அரசு 20 கோடி தான் ஒதுக்க மதிப்பீடு செய்துள்ளது என்றார்.


அன்புடன்,
ஜோதிபாரதி.

சேது சமுத்திரத் திட்டம் விஞ்ஞான அடிப்படையில் சாத்தியம் இல்லை என்பதால் அத்திட்டத்தை மத்திய அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கடல்சார் நிபுணர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
.
சேது சமுத்திரத்திட்டத்தால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து "கோஸ்டல் ஆக்ஷன் நெட்வொர்க்' என்ற புத்தகம் எழுதப்பட்டுள்ளது. இப்புத்தகத்தை இந்திய புவியியல் ஆய்வு மையத்தின் முன்னாள் தலைவர் கோபாலகிருஷ்ணன் வெளியிட, இந்திய கடற்படை முன்னாள் கேப்டன் பாலகிருஷ்ணன் பெற்றுக் கொண்டார்.

பின்னர் , "கோஸ்டல் ஆக்ஷன் நெட்வொர்க்' நூலின் ஒருங்கிணைப்பாளர் ஜேசு ரத்தினம் செய்தியாளர்களிடம் பேசியதாவது: சேது திட்டம் தொடர்பான விவரங்களை மத்திய அரசிடம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கோரியிருந்தோம். இந்த திட்டத்தை நிறைவேற்ற மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள், செயற்கை கோள் மூலம் எடுக்கப்பட்டபுகைப்படம் ஆகியவற்றை கேட்டிருந்தோம். ஆனால், எதுவும் தரப்படவில்லை.

விஞ்ஞானப்பூர்மாக இந்த திட்டம் சாத்தியம் இல்லை என்று பல்வேறு நிபுணர்களின் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ராமர் பாலம் பெயரைக் கூறி இத்திட்டத்தை கைவிட வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. மத ரீதியாக மட்டுமல்லாது விஞ்ஞான ரீதிமாகவும் இத்திட்டம் நிறைவேற சாத்தியம் இல்லை என்றார். முன்னாள் கடற்படை கேப்டன் பாலகிருஷ்ணன் பேசியதாவது:

இத்திட்டத்திற்காக கடலில் 12 மீட்டர் ஆழத்திற்கு தோண்டப்படுகிறது. 30 ஆயிரம் கிலோ எடைகொண்ட கப்பல்கள் மட்டுமே இந்த ஆழத்தில் செல்லமுடியும். இந்த வகை கப்பல்களே பத்தரை மீட்டருக்கு செல்லும். அதிக எடை கொண்ட கப்பல்கள் வந்தால் சில சமயங்களில் மணலில் சிக்கிக் கொள்ள நேரிடும்.

மேலும், கொல்கத்தாவில் இருந்து தூத்துக்குடிக்கு வரும் கப்பல் நிறுவனங்களால் 19.40 லட்சம் நஷ்டம் ஏற்படும். அதே போன்று சிங்கபூரில் இருந்து ஏடன் நகருக்கு செல்லும் கப்பல்களால் 60 லட்சம் நஷ்டம் ஏற்படும். அதனால் எந்த ஒரு கப்பல் நிறுவனங்களும் சேது கால்வாய் வழியை பயன்படுத்த மாட்டார்கள். வீணாக 2 ஆயிரத்து 400 கோடி ரூபாய் இத்திட்டத்திற்காக செலவு செய்யப்படுகிறது.

இப்பகுதிகளில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும். கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதால் இந்த வழித்தடத்தில் எந்த கப்பல்களும் செல்லாது என்றார்.
இந்திய புவியியல் ஆய்வு மையத்தின் முன்னாள் தலைவர் கோபாலகிருஷ்ணன் பேசுகையில், இயற்கை நிலைப்பாடுகள் எப்படி இருக்கிறது என்பது குறித்து அப்பகுதியில் ஆய்வுகள் செய்யப்படவில்லை. தனிப்பட்ட முறையில் நான் ஆய்வு செய்தபோது 4 வகை புவியியல் நிகழ்வுகள் அங்கு நடைபெறுகின்றன.

அங்கு வெந்நீர் ஊற்றுகள் உள்ளன. கடலுக்கு அடியில் எரிமலைகள் இருக்க வாய்ப்பு உள்ளது. போதுமான ஆய்வுகள் செய்யாமல் இந்த திட்டம் துவங்கப்பட்டுள்ளது என்றார்.
ஜான் ஜேக்கப் புதூர் என்பவர் பேசுகையில், இலங்கையில் பருவமழை அதிகம். இதனால், அங்கு மழை பெய்யும் போது கடலின் மேற்பரப்பில் ஏற்படும் மணல் துகள்கள் மீண்டும் கால்வாயை அடைத்துக் கொள்ளும். இதனை சரி செய்ய ஆண்டுக்கு 200 கோடி தேவைப்படும். ஆனால், அரசு 20 கோடி தான் ஒதுக்க மதிப்பீடு செய்துள்ளது என்றார்.


அன்புடன்,
ஜோதிபாரதி.

வட மொழி - தமிழ் மொழி

பின் நவீனத்துவம் - பின் புதுமையியல்

அகங்காரம் - செருக்கு,இறுமாப்பு,முனைப்பு,யானெனல்

அகடவிகடம் - குறும்பு,மாற்று,மாறுபட்டது

அகதி - அறவை,வறியன்,எதிலி,புகலிலான்,யாருமற்றவன்,ஏழை

அகந்தை - இறுமாப்பு,செருக்கு

அகம் - உள்ளே,உயிர்,நான்,மனம்,மனநிலை,எண்ணம்

அகம்பாவம் - தற்பெருமை,செருக்கு

அகராதி - அகரமுதலி,அகரவரிசை,அகரநிரல்,அகரமுதல்

அகிம்சை - இன்னா செய்யாமை,கொல்லாமை

அஹிம்சை - இன்னா செய்யாமை,கொல்லாமை

அகோரம் - அழகின்மை,கொடுமை,நடுக்கம்

அக்கணம் - அப்பொழுது,அந்நொடி

அக்கரம் - எழுத்து

அட்சரம் - அழிவில்லாதது

அக்கியாணி - அறிவிலான்

அஞ்ஞானி - புல்லறிவாளன்

அக்கிரகாரம் - பார்ப்பனச் சேரி

அக்கிரமம் - ஒழுன்கின்மை,முறைகேடு

அக்கிராசனம் - முதலிருக்கை,தலைமை

அக்கினி,அக்நி - நெருப்பு,தீ,அனல்,எரி

அங்கப்பிரதட்சணம் - உடல் வலமுருளல், வலம் புரளல்

அங்கீகாரம்,அங்கீகரணம் - உடன்,செப்பு

அங்குலம் - விறக்கட்டை,விரலளவு

அசத்தை,அசத்தியம் - பொய்

அசரம்- அசைவில்லாதது,இயங்காதது,நிலையியல்

அசரீரி - வானொலி,உருவற்றது

அசித்து - பயனின்மை

அஜீரணம்,அசீரணம்- செரியாமை,பசியின்மை,அழிவுபடாமை

அசுத்தம் - அழுக்கு,துப்புரவின்மை,தூய்மையின்மை

அசேதனம் - அறிவில்லாதது,அறிவிலி,அறிவில் பொருள்

அசெளரியம் - நலமின்மை,இடைஞ்சல்

அஞ்சலி - கும்பிடல்,வணக்கம்

அஞ்சனம் - மை,கறுப்பு,இருள்

அஞ்சிட்டம் - கதிரவன்

அஞ்ஞாதம் - மறைவு,அறியப்படாதது

அஞ்ஞாத வாசஸ்தலம் - மறைந்துறைவிடம்

அட்சயப் பாத்திரம் - திருவோடு,ஏற்போடு,அள்ள அள்ளக் குறையாதது

அட்டதிக்கு பாலகர் - எண்புறக்காவலர்

அட்டபந்தனம் - எண்புறக்கட்டு

அண்டம் - முட்டை,உலகம்,வித்து,மூலம்

அதமம் - கீழ்மை,கடைத்திரம்

அதர்மம்,அதருமம் - தீவினை,அறமின்மை,மறம்

அதிகப்பிரசங்கம் - மிகுபேச்சு,தன் மேம்பாட்டுரை,மற்றொன்று விரித்தல்

அதிகாரி - அலுவலர்,தலைவன்,முதல்வன்,உடையவன்

அதிகாலம் - விடியற்காலம்

அதிகாலை - விடியற்காலம்,புலரிக்காலை

அதிஷ்டவசம் - நல்வினைப்பயன், நல்வினை வயம்

அநந்தகோடி - எண்ணத்தொலையாதன

அநந்தம் - அளவின்மை,முடிவில்லது

அநாதை - யாருமற்றவன்,தாய்தந்தையிலான்

அநித்தம்,அநித்தியம் - அழிவு,நிலையற்றது,நிலையாமை

அநீதி - முறைகேடு

அநுக்கிரகம் - அருளிரக்கம்,அருள்

அநுசரணை - சார்பு,சார்பு நிலை

அநுசிதம் - பொய்,தகாதது

அனுபவம் - பழக்கம்,வழக்கம்,நுகர்ச்சி

அனுமினம் - ஐயம்,வழியளவை,கருதலளவை

அனுமானப் புரமானம் - கருதலளவை

அநேகர் - பலர்

அந்தகன் - அழிப்போன்,குருடன்

அந்தகாரம் - இருள்,அறியாமை

அந்தக்கரணங்கள் - அகக்கருவிகள்

அந்தஸ்து - நிலைமை,ஒழுங்கு,நிலை

அந்தரம் - வான்வெளி,இடைவெளி,துணையின்மை,காலம்

அந்தி - முடிவு,மாலைக்காலம்

அந்திய கிரியை - இறுதிச் சடங்கு

அந்நியர் - பிறர்,அயலார்

அந்நியோந்நியம் - நெருக்கம்,ஒற்றுமை,ஒருவொருக்கொருவர்

அபயம் - அடைக்கலம்,அச்சமின்மை,புகலிடம்,அஞ்சேலெனல்

அபாயம் - பேரிடர்,அழிவு,கேடு,துன்பம்,இடுக்கண்,இக்கட்டு

அபாரம் - சிறப்பு,அளவின்மை,கேடு

அபிதானம் - பெயர்

அபிநயம் - நடிப்பு,கூத்து,கைமைய்காட்டல்,உள்ளக் குறிகாட்டல்

அபிப்பிராயம் - நோக்கம்,எண்ணம்,உட்கருத்து,உள்ளப்போக்கு

அபிமானம் - பற்று,நேயம்,செருக்கு

அபூர்வம் - அரிது,அருமை,அரிய பொருள்

அபேச்சை -அவா,விருப்பம்

அபேதம் - ஒற்றுமை,வேற்றுமையின்மை,வேறன்மை

அப்பியாசம் -பழக்கம்,பயிற்சி

அப்பிரதட்சிணம் - இடப்புறச் சுற்று, இடப்பக்கச் சுற்று

அமரத்துவம் - அழிவின்மை

அமலன் - துயோன்,கடவுள்,வாலறிவன்

அந்நியர் - பிறர்,அயலார்

அதிகம் - மிகுதி,அளவின்மை

அமிர்தம்,அமிருதம் - இனிமை,அருமருந்து,சாவா மருந்து,அழிவினமை

அமச்ம் - வகை,பங்கு,காலம்,எண்,அன்னப்புள்

அம்பாரம் - குவியல்

அயோக்கியம் - தகுதியினமை,தகாதது

அயோக்க்கியன் - தகுதியற்றவன்,தகவிலான்,கெட்டவன்

அரணியம் - காடு

அருச்சனை,அர்ச்சனை - வழிபாடு, பூ வழிபாடு,மலர் வழிபாடு

அருத்தம்,அர்த்தம் -பொருள்,பாதி

அருவம் - உருவின்மை,அழகின்மை

அர்த்தநாசம் - பேரழிவு,பொருளழிவு

அர்ப்பணம் - உரிமை கொடுத்தல், ஒப்புவித்தல், நீரோடு கொடுத்தல்

அலங்காரம் - அழகு,ஒப்பனை,அணி,புனைவு

அலச்சியம் - பாராமுகம்,பொருட்படுத்தாமை,கருத்தின்மை

அவகீர்த்தி - இழிவு,புகழின்மை

அவக்கியாதி - வசை,இகழ்ச்சி

அவசரம் - விரைவு,பரபரப்பு,சுருக்கு,பதைப்பு

அவசியம் - முதன்மை,கட்டாயம்,இன்றியமையாமை

அவதரித்தல் - பிறத்தல்

அவதாரம் - பிறப்பு,இறங்குகை

அவதானம் - எச்சரிக்கை,ஒழிவு,நினைவு,விரித்தல்,மறப்பின்மை

அவநம்பிக்கை - நம்ப்பிக்கைக்குறை

அவமரியாதை - முறைதவறல்,வணக்கமின்மை,தீயமுறை

அவமானம் - மானக்கேடு,இழிவு,குறைவு,இளிவரவு

அவயவம்,அவையவம் - உறுப்பு

அவலன் - உடற்குறையன்,வீணன்

அவசு,ஹவிசு - தூய உணவு,சோறு,நெய்,

அற்பம்,அல்பம் - சிறுமை,அணு,புன்மை,இழிவு

அனங்கன் - உடலிலான்,கடவுள்,காமவேள்

அனாதி - கடவுள்,தனியன்,பழமை,தொன்மை

அனுதாபம் - இரக்கம்

அனுபவம் - பழக்கம்,வழக்கம்,அழுந்தியறிதல்,பட்டறிவு

அனுமானம் - உய்த்துணர்தல்,கருதல்ளவை,வழியளவை

அனேகம் - பல,எல்லாம்

அன்னதானம் - சோற்றறம்,சோற்றுக்கொடை,உணாக்கொடை

அன்னம் - சோறு,உணவு,அடிசில்

அன்னியன் - பிறர்,அயலார்

அன்னியோன்னியம் - ஒற்றுமை,நெருக்கம்,ஒருவர்க்கொருவர்

ஆகம் -உடல்,மார்பு

ஆகரு(ர்)ஷண சக்தி - இழுப்பாற்றல்,இழுவழி,சேர்வழி

ஆகாசம்,ஆகாயம் - விண்,வெளி,வான்,விசும்பு,வர்னம்

ஆகாய விமானம் - வான ஊர்தி

ஆகாரம் - உணவு,அடிசில்,உடம்பு,வடிவு

ஆக்கியாபித்தல்,ஆஞ்ஞாபித்தல் - கட்டளையிடல்

ஆக்கிரமித்தல் - வலிந்து கவர்தல்,வலிமை காட்டல்

ஆட்சேபம் - மறுமொழி,மறுத்துக்கூறல்,தடைமொழி

ஆங்காரம் - இறுமாப்பு,செருக்கு,தருக்கு

ஆச சங்கை -ஐயம்

ஆசாபாசம் -அன்பு,பற்று,அவா

ஆசாரம் - ஒழுக்கம்,வழக்கம்,நன்னடை,வழிபாடு,துப்புரவு

ஆசியம்,ஹாசியம் - எள்ளல்,நகை,சிரிப்பு

ஆசீர்வாதம் - வாழ்த்துரை

ஆசுவாசம் - இளைப்பாறுகை

ஆசை - விருப்பம்,அவா,பற்று,வேட்கை,விழைவு

ஆச்சரியம் - புதுமை,வியப்பு,இறும்பூது

ஆ(ச்)சிரமம் - இலைக்குடில்,பாழி,முனிவருறயுள்

ஆஸ்திகம் - கடவுளுண்டெனுங்கொள்கை

ஆஸ்பத்திரி - மருத்துவச்சாலை

ஆஞ்ஞாபித்தல் -கட்டளையிடல்

ஆஞ்ஞை -ஆணை,கட்டளை

ஆடம்பரம் - ஆரவாரம்,பகட்டு

ஆட்சேபம்,ஆட்சேபனம் - தடைமொழி,மறுமொழி,எதிர்மொழி,மறுப்பு

ஆதங்கம் - ஆற்றாமை,அச்சம்,நோய்

அந்நியர் - பிறர்,அயலார்

ஆதவ(ப)ன் - பகலோன்,கதிரோன்

ஆதரவு - துணை,உதவி,சார்பு,பற்றுக்கொடு

ஆதி - முதல்,பழமை,அடி,தொடக்கம்,காரணம்,எழுவாய்,கடவுள்

ஆப்தம்,ஆத்தம் - அன்பு,நட்பு

ஆத்தானம்,ஆஸ்தானம் - நகரவாயில்,அறமன்றம்,கொடிமுடிவாயில்

ஆத்திரம்,ஆத்திரியம்,ஆத்திரவம் - உளக்கொதிப்பு,விரைவு,பரபரப்பு

ஆத்துமா,ஆன்மா - உயிர்

ஆந்ந்தம் - இன்பம்

ஆபத்து -இடர்,துன்பம்,இக்கெட்டு,ஊறுபாடு,இடுக்கண்

ஆபரணம் - அணிகலம்,இழை,நகை,அணி,பூண்

ஆபாசம் - அருவருப்பு,சிதைவு,கெடுதல்,பொய்,அளவைப்பொலி

அபூர்வம் - வினைப்பயன்

ஆமோதித்தல் - உடன்படல்,வழிமொழிதல்,மகிழ்தல்

ஆயக்கட்டு(துளுவம்) - மொத்த நஞ்சை நிலம்,களப்புரவு

ஆயத்தம்(இந்தி) - முயற்சி,எத்தனம்,முன்னேற்பாடு

ஆயா(போர்ச்சுக்கீஸ்) - செவலித்தாய்,கைத்தாய்

ஆயாசம்,ஆயாஸம் - களைப்பு,இளைப்பு,சோர்வு,அயர்வு,மயக்கம்

ஆயுசு,ஆயுள் - வாழ்நாள்,ஆண்டு

ஆயுதம் - கருவு,படைக்கலம்,படை,வாள்

ஆரணியம்,ஆரண்ணியம் - காடு

ஆரம்,ஹாரம் - பூமாலை,தொடையல்

ஆரம்பம் - தொடக்கம்

ஆரம்பித்தல் - தொடங்கல்

ஆராதனம் - வணக்கம்,மகிழ்வித்தல்

ஆரோகம்,ஆரோபம்,ஆரோக்கியஸ்நானம் - நல முழுக்கு,நோய் தீர்ந்தபின் முழுகல்

ஆரோக்கியம் - நலம்,நோயின்மை

ஆரோபணம்- நாட்டுதல்,ஏற்றுதல்

ஆரோபித்தல் - ஏற்றுதல்

ஆர்ச்சிதம் - தேட்டம்,தேடிய பொருள்

ஆர்மோனியம் - இசைக்கருவி

ஆர்வம் - அன்பு,விருப்பம்

ஆலகண்டண் - சிவன்,நஞ்சுமிடற்றன்,கறைமிடற்றன்

ஆலகம்- நெல்லிமரம்

ஆலம் - நஞ்சு

ஆலயம் - கோயில்

ஆலாபம்,ஆலாபனம் - அலப்பு,பேச்சு,உரையாடல்

ஆலோசனை - சூழ்தல்,சூழ்ச்சி,ஓர்வு,எண்ணம்,ஆராய்ச்சி

ஆவசியம் - கட்டாயம்,முதன்மை,இன்றியமையாமை

ஆவத்து,ஆபத்து - இக்கெட்டு,இடர்,பொல்லாங்கு

ஆவர்த்தி,ஆவருத்தம்,ஆவிருத்தி - தடவை,வரிசை,சுற்று,வழக்கம்

ஆவாகனம் - அழைத்தல்,உட்புகல்

ஆனந்தபரவசம் - இன்பக்களிப்பு,பேரின்பக்களிப்பு

ஆனந்தம் - இன்பம்,பேரின்பம்

ஆன்மா - உயிர்

இகம் - இவ்வுலகம்,இவ்விடம்,இப்பிறப்பு

இங்கிதம் - இனிமை,அடையாளம்,கருத்து,இடம் பொருள்

இச்சகம் - முகமன்

இச்சை - விருப்பம்,அவா,விழைவு,வேட்கை

இடபம்,ரிஷபம் - எருது,காளை,ஏறு,விடை

இட்டசித்தி - விருப்பப்பேறு

இதம்,ஹிதம் - இனிமை,நன்மை,அன்பு,அறம்

இதயம்,இதையம்,ஹிருதயம் - நெஞ்சம்,உள்ளம்

இதரம் - வேறு,இயல்,அழிவு,பகைமை

இதிகாசம் - பண்டை வரலாறு,பழங்கதை

இந்திர ஜாலம் - இமயவர்கோன்,வானவர் தலைவன்

இந்து - நிலா,திங்கள்,அம்புலி

இமாலயம்,ஹிமாலயம் - பனிமலை

இரகசியம் - மறைபொருள்,மறை,அற்றம்

இராசாபாசம் - அருவருப்பு,ஒழுங்கின்மை

இரசாயனம் - பொருளியைபு

இரட்சகம் - பாதுகாப்பு,மீட்பு

இரட்சை - காப்பு

இரணம்,ரணம் - புண்

இரதம்,ரதம் - தேர்

இரத்தம் - குருதி,செந்நீர்

இரத்தினம்,ரத்தினம் - மாமணி,செம்மணி

இரம்பம்,ரம்பம் - ஈர்வாள்

இராகம்,ராகம் - இசை,பண்,அவா,விருப்பு

இராகு - கருங்கோள்

இராக்கதர் - அரக்கர்

இராசசூயம் - அரசர் வேள்வி

இராசா - அரையன்,மன்னன்,அரசன்

இராச்சியம் - நாடு,அரசியல்

இராத்திரி - இரவு,கங்குல்

இருஷி,இருடி - முனிவன்,தவசி,துறவி

இதய கமலம் - நெஞ்சத்தாமரை

இருது - பருவம்,மகளிர் முதற்பூப்பு

இரேகை - வரி,எழுத்து,கையிறை,நிறை,தொடர்

இலகிரி,லகிரி,லாகிரி - வெறி,மயக்கம்

இலகு,லகு - எளிது,நொய்மை,நுண்மை,ஈரம்,பலா மரம்

இலங்கணம் - பட்டினி

இலஞ்சம் - கைக்கூலி,கையூட்டு,கையுறை

இலட்சணம்,லட்சணம் - அழகு,பார்வை

இலயித்தல் - ஒடுங்குதல்,சேர்ந்தொன்றித்தல்

இலெளகீகம்,இலவுகீகம் - உலகியல்,உலகப்போக்கு

இலாஞ்சனம்,இலாஞ்சனை - புகழ்,அடியாளம்,கறை

இலாபம்,லாபம் - ஊதியம்,மிச்சம்,பேறு

இலீலை,லீலை - விளையாட்டு

யுகம்,உகம் - உலக முடிவு,இரண்டு

உக்கிராணம் -களஞ்சியம்,சரக்கறை

உஷ்ணம் - வெப்பம்,சூடு

உசிதம் - உயர்வு,சிறப்பு,மேன்மை,தகுதி,ஒழுங்கு

உசிதன் - தக்கோன்

உச்சம் - உயர்ச்சி,சிறப்பு

உச்சரித்தல் - சொல்லுதல்,ஒலித்தல்,ஓதல்

உச்சரிப்பு - எழுத்தோசை

உச்சாட்டியம் - பேய கற்றல்,ஒட்டுதல்

உச்சி - மேடு,முகடு

உச்சிக்காலம்,உச்சிச்சமயம் - நண் பகல், நடுப் பகல்

உதயன் - பகலோன்

உதாரணம்,திருட்டாந்தம் - எடுத்துக்காட்டு,சான்று

உத்தமம் - உண்மை,மேன்மை

உத்தரியம்,உத்தரீயம் - மேலாடை

உத்தரவு - கட்டளை

உத்தி,யுத்தி - அறிவு,இணக்கம்,இசைவு,சூழ்ச்சி,சொல்

உத்தேசம்,உத்தேகம் - கருத்து,மதிப்பு,ஏறக்குறைய

உபகரணம் - கொடுத்தல்,உதபிபொருள்கள்,கருவி,துணைக்காரணம்

உபதேசம் - அருண்மொழி,அறிவுரை

உபயம் - உதவி,நன்கொடை,இரண்டு

உபாசநம்,உபாசநை,உபாசனை - வழிபாடு,வணக்கம்

உபாதி,உபாதை - நோய்,துன்பம்,வருத்தம்

உபாத்தியாயன் - கணக்காயன்,ஆசிரியன்,கற்பிப்போன்

உபாயம் - சூழ்ச்சி,நொய்மை,எளிது,சிறிது

உயுக்கம்,உயுத்தம்,யுத்தம் - போர்,தகுதி

உருசி,ருசி - சுவை

உருத்திராக்கம் - சிவமணி,சுக்குமணி

உரூபம்,ரூபம் - உருவம்,வடிவம்

உரொக்கம்,ரொக்கம் - கைப்பணம்,இருப்பு,கையிருப்பு

உரோமம்,ரோமம் - மயிர்,முடி,குஞ்சி

உல்லாசம் - மகிழ்ச்சி,விளையாட்டு,களிப்பு,உள்ளக்களிப்பு

உவதி,யுவதி, - மங்கை,பதினாறாண்டுப் பெண்

ஊகம் - கருதல்,ஓர்தல்,கருத்து,நினைவு

ஊர்ச்சிதம்,ஊர்ஜ்ஜிதம் - உட்பொருளுணர்தல், நிலைப்படுதல்,உறுதி,கருங்குரங்கு

எசமானன்,எஜமான் - தலைவன்,முதல்வன்,முதலாளி

எந்திரம் - பொறி

எமன் - கூற்றுவன்,மறலி

ஏகதேசம் - ஒருபால்,ஒருபுடை,சிறுபான்மை

ஏகம் - ஒன்று,தனிமை

ஏகாந்தம் - தனிமை,ஒரு முடிவு

ஏகோபித்தல் - ஒன்றுபடுதல்

ஏடணை,ஏஷணை - விருப்பம்

ஐது,ஹேது - காரணம்

ஏக்கம்,ஐக்கியம் - ஒற்றுமை

ஐஸ்வர்யம்,ஐச்வரியம் - செல்வம்,பொருள்,திரு

ஐதீகம்,ஐதிகம் - உலகுரை

ஐம் பூதம்,பஞ்ச பூதம் - ஐந்து முதற்பொருள்

ஓமம்,ஹோமம் - வேள்வி

ஒளடதம்,ஒளஷதம்- மருந்து

களோகம் - வான் வட்டம்,வளி மண்டலம்

கடகம் - கைவளை,வளையம்

கடம் - கடம்,யானைக்கதுப்பு

கடாட்சித்தல் - அருளல்

கடாரம் - கொப்பரை,தேங்காய்

கடிகாரம் - நாழிகை வட்டில்,பொழுது காட்டுங்கருவி

கடிகை - நாழிகை,தாழ்க்கோல்

கடினசித்தம் - வன்னெஞ்சம்

கடினம் - வன்மை,கடுமை,வருத்தம்,கொடுமை

கடூரம்,கொடூரம் - கொடுமை

கட்டம்,கஷ்டம் - துன்பம்,வருத்தம்

கணம்,ஹணம் - குழாம்,கூட்டம்,தொகுதி,நொடிப்பொழுது

கணி - கோள் நூல், கோல் நூல் வல்லான்

கணிகை - பொதுமகள்

கணிசம் - அளவு,மேம்பாடு

கணிதம் - கணக்கு

கண்டம் - நிலப்பிரிவு,துண்டு,கட்டி,மிடறு,கழுத்து

கண்திட்டி,கண்திருஷ்டி - கண்ணேறு

கதம்பகம்,கதம்பம் - கூட்டம்,மணப்பொருட் கூட்டு,சேர்ந்தது,இணைத்தது

கதலி - வாழை

கதி - நடை,செலவு,வழி,புகலிடம்,பற்றுக்கோடு,நிலை

கனகம்,கநகம் - பொன்

கனவான்,கநவான் - பெரியோன்,பெருமையாளன்,பெருந்தகை

கனிஷ்டை,கநிஷ்டை - பின்னோள்,தங்கை

கன்னிகை,கந்நிகை - மணமாகாதவள்,இளம்பெண்

கந்மம்,கருமம் - தொழில்,வினை

கபடம்,கவடம்,கபடு - கரவு,படிறு,வஞ்சகம்,மோசம்,சூது,ஒளிப்பு

கபாலம் - தலையோடு,மண்டையோடு

கபோதி - குருடன்

கப்பம் - இறை

கமண்டலம் - நீர்க்குடுவை

கமலம் - தாமரை,நீர்

கம்பீரம் - உயர்தோற்றம்,பெருமை,ஆழம்,செருக்கு

கயம்,ஹயம் - குளம்,ஆழம்,யானை

கரகம் - வட்டில்,நீர்க்குடுவை

கரகோசம்,கரகோஷம் - கைதட்டுதல்

கரணம் - கருவி,ஐம்பொறி

கரம் - கை

கருச் சித்தல் - முழங்கல்,இரைதல்

கருணை - அருள்,இரக்கம்

கர்த்தா,கருத்தா - தலைவன்,வினைமுதல்,ஆக்கியோன்,நூலாசிரியன்,முதல்வன்,கடவுள்

கர்ப்பவதி - சூலி

கர்ப்பாசயம் - கருப்பை

கர்வம் - செருக்கு,இறுமாப்பு

கலாபம்,கலபம் - மயில்,மயிற்றோகை

கலி - வறுமை,துன்பம்

கலியாணம் - மனம்,மன்றல்,பொன்,மகிழ்ச்சி

கவளீகரித்தல்,கபளீகரம்,கபளீகரித்தல் - முற்றிலும் விழுங்குதல்,விழுங்குதல்

கவனம் - கருத்து நோக்கம்,உன்னித்தல்

கவாத்து - படைக்கலப் பயிற்சி,வெட்டி விடுதல்

கவி - செய்யுள்,புலவன்,பாட்டு

கவுளி,கெளளி - பல்லி

களேபரம் - குழப்பம்,உடல்,பிணம்

கற்பம் - ஊழிக்காலம்,நெடுவாழ்க்கை மருந்து

கனம் - சுமை,பளு,பளுவு

காசம் - ஈளை,ஈளைநோய்,இருமல் நோய்

கசாயம்,கஷாயம் - காவி

காஞ்சிரம் - எட்டி மரம்

காட்டம்,காஷ்டம் - விறகு,வெகுளி

காதகன் - கொலையாளி

காயசித்தி - நீடுவாழ்ப் பேறு

காயம் - உடல்,யாக்கை,வான்

காரிய கர்த்தா - வினைமுதல்வன்

காரியதரிசி - அமைச்சன்,செயலாளன்

கலாட்சேபம் - பொழுதுபோக்கல்,நாட்கழித்தல்,வாழ்க்கை

கால நியமம் - காலமுறை,காலக்கடன்,கால்,ஒழுங்கு

கிஸ்தி - திறை,வரி

கிரகணம்,கிராணம் - பற்றுதல்,பிடித்தல்

கிரகஸ்தம் - இல்லற நிலை

கிரகம் - வீடு,கோள்,பற்றுதல்,பிடிப்பு

கிரணம் - ஒளி,கதிர்

கிரந்தம் - நூல்,எழுத்து

கிரமம் - ஒழுங்கு,முறைமை

கிரயம் - விலை

கிராதன் - குறவன்,வேட்டுவன்

கிரி - மலை,பன்றி

கிரிகை - தொழில்,செயல்,வினை,சடங்கு

கிரிமி,கிருமி - உயிரி,பூச்சி,புழு

கிரீடம் - முடி

கிருஷி - பயிர்,உழவு,பயிர் செய்கை

கிலம் - கழிவு,அழிவு,சிறுமை

கிலேசம் - அச்சம்,கவலை,துன்பம்

கீதம் - இசை,பாட்டு,பாடல்,இசைப்பாட்டு

கீர்த்தனம்,கீர்த்தனை - புகழ்ச்சி,புகழ்ப்பா

கீலகம் - ஆணி,பொருத்து

குஞ்சரம் - யானை

குஷ்டம் - தொழு நோய்,பெரு நோய்

குணஷ்டை - தொல்லை,துன்பம்

குதர்க்கம் - அழிவழக்கு

குதூகலம்,குதுகலம் - பெருங்களிப்பு,பெருமகிழ்வு

குபேரன் - பெருஞ்செல்வன்,செல்வக்கடவுள்

குமரி,குமாரி - நங்கை,மணமாகாப்பெண்,புதல்வி,மகள்

கும்பம் - குடம்

குருகடாட்சம் - ஆசிரியனருட்பார்வை

குரோதம் - உட்பகை

குலாலன் - குயவன்

குலிசம் - வேற்படை

குன்மம் - சூலை,வயிற்று வலி

கேதம் - துன்பம்,இடர்,குற்றம்

கேவலம் - சிறுமை,தனிமை

கோகிலம் - குயில்

கோடம்,கோஷம்,கோஷ்டம் - முழக்கம்,பேரோசை

கோஷ்டி - கூட்டம்

கோடி - நூறு நூறாயிரம்

கோதண்டம் - வில்

கோளகை,கோளம் - உருண்டை,வட்டம்

கெளரவம் - மேன்மை,பெருமை

சக - கூட,உடன்

சகசம்,ஸகஸம் - இயற்கை,ஒற்றுமை

சகஸ்ரநாமம் - ஆயிரந்திருமொழி,ஆயிரந்திருப்பெயர்

சகமார்க்கம் - தோழமை நெறி

சகலம் - எல்லாம்

சகவாசம் - கூடவிருத்தல்,உடனுரைதல்,பழக்கம்,சேர்க்கை,நட்பு

சகா - தோழன்,துணை

சகாப்தம் - ஆண்டு,நூறாண்டு

சகாயம் - நயம்,நன்மை,மலிவு,பயன்,உதவி,துணை

சகி,சகீ - தோழி

சகிதம் - உடன்

சகுணம் - குணத்தோடு கூடியது

சகுந்தம் - கழுகு,பறவை

சகுனம் - குறி

சகோதரம் - உடன்பிறப்பு

சகோதரி - உடன்பிறந்தாள்

சக்கரம் - உருளை,வட்டம்

சக்தி - ஆற்றல்,வல்லமை,வலி

சங்கடம்,சங்கட்டம் - இக்கெட்டு,நெருக்கடி,இடர்,கண்மூடுதல்

சங்கிதை - தொகுதி,வரலாறு

சடுதி,சடிதி - விரைவு

சஷ்டியப்த பூர்த்தி - அறுபதாமாண்டு நிறைவு

சண்டப்பிரசண்டம் - மிகு விரைவு

சண்டமாருதம் - பெருங்காற்று,கடியகாற்று,புயற்காற்று

சண்டாளம் - தீமை,புலைத்தன்மை,நம்பிக்கை கேடு

சண்டாளர் - தீவினையாளர்,இழிஞர்

சண்டித்தனம் - முருட்டுத்தன்மை,முரட்டுத்தன்மை

சதகோடி - நூறு கோடி

சதசு - அவை

சதம் - நூறு நிலை

சதானந்தம் - இடையறா வின்பம்

சதி - இறைவி,அழிவு,வஞ்சனை,சூழ்ச்சி

சந்தகம் - எப்பொழுதும்

சந்தானம் - வழி,வழித்தொடர்பு

சந்தித்தல் - எதிர்படுதல்,கூடுதல்

சந்திரலோகம் - திங்கள் உலகு,அம்புலியுலகம்

சந்திரன் - பிறை,கலையோன்,இரவோன்,அலவன்,அல்லோன்

சந்து - முடுக்கு,இயங்கும் உயிர்,தூது,பிளப்பு,பொருத்து

சந்துட்டம்,சந்துஷ்டி,சந்தோஷம் - மகிழ்ச்சி

சந்தேகம் - ஐயம்,ஐயுறவு

சந்தோஷம் - மகிழ்ச்சி,உவகை,களிப்பு

சன்னதி,சந்நதி,சந்நிதானம் - திருமுன்

சந்நியாசம் - துறவு,துறவறம்

சபதம் - ஆணை,உறுதிமொழி,வஞ்சினம்

சபம்,ஜெபம் - உருவேற்றல்

சபலம் - நிறைவேறல்,வெற்றி,நடுக்கம்,ஏக்கம்,இச்சை,அவா

சபா,சபை - அவை,மன்றம்,கழகம்,அரங்கம்

சபித்தல் - தீமொழி கூறல்,சினந்துரைத்தல்

சமஷ்டி - தொகுதி,எல்லாம்

சமதை - ஒப்பு

சமர்த்தன்,சமத்தன் - வல்லான்,வல்லவன்,திறமையாளன்

சமஸ்தானம்,சமத்தானம் - அரசவை,தலை நகர்

சமம் - இணை,ஈடு,மட்டம்,போர்,நடு,ஓர்மை

சமரச தத்துவம் - பொதுநிலையுண்மை

சமரசம் - பொது,வேறுபாடின்மை,ஒற்றுமை

சமர்ப்பணம் - ஒப்பித்தல்,உயர்ந்தோர்க்குக் கொடுத்தல்

சமாதானம் - அமைதி,இணக்கம்,தணிவு,உடன்பாடு,தக்கவிடை

சமாதி - அமைதி,பிணக்குழி,பேசாதிருத்தல்,இறப்பு,மரித்தல்

சமாப்தம்,சமாப்தி - முற்றுப்பெற்றது

சமாராதனை - உளநிறைவு

சமி,ஷமி - பொறு

சமிதை - வேள்வி விறகு,உலர்ந்த குச்சி

சமீபம் - அருகு,அணமை,மருங்கு

சமீன்தார்,ஜமீந்தார் - நிலக்காரன்,பெருநிலக்கிழார்

சமுதாயம் - குமுகம்,கூட்டம்

சமுத்திரம் - கடல்

சமை,ஷமை - பொறுமை

சம்சாரம்,சம்ஸாரம் - குடும்பம்,இல்லாள்,இல்லத்தரசி

சம்பத்து - செல்வம்,பொருள்

சம்பந்தம -உறவு,பற்று,இயைபு,சார்பு,தொடர்பு,பொருத்தம்

சம்பிரதாயம் - தொல்வழக்கு,முன்னோர் முறை,பண்டை முறை

சம்பு ரேட்சணம் - தெளித்தல்

சம்பூரணம் - நிறைவு

சம்மதம் - உடன்பாடு,ஒப்புமை,இயைபு

சம்ரஷணை - பாதுகாப்பு

சயம்,ஜெயம் - வெற்றி

சரணம்,சரண் -அடைக்கலம்,வணக்கம்,கால்,திருவடி

சரணாகதி - புகலடைதல்,அடைக்கலம்

சராசரம்,ஜங்கமா - இயங்கியற் பொருள், நிலையியற் பொருள்

சரிதம்,சரிதை,சரித்திரம் - வரலாறு

சரீரம் - உடல்,யாக்கை,மெய்

சருமம்,சர்மம் - தோல்

சர்ப்பம் - பாம்பு

சர்வகலாசாலை -

பல்கழைக் கழகம்

சலதளம்- அரசமரம்

சலதாரை - நீர்க்கால்,நீரோட்டம்,மதகு

சலதோசம் - நீர்க்கோர்வை,தடுமம், நீர்க்கோவை

சல்லாபம் - உரையாடல்

சவம் - பிணம்

சவுகரியம்,செளக்கியம்,செளகரியம் -நலம்

சவுந்தரியம்,செளந்தரியம்,சவுந்தரம் - அழகு

செளபாக்கியம்,சவுபாக்கியம் - செல்வம்

சற்காரியம் - உற்பொருளினின்று தோன்றும் வினை

சற்குணம் - நல்லியல்பு

சனனம்,ஜனனம்,சனிப்பு,சன்மம் - பிறப்பு

சாகசம் - ஆற்றல்,துணிவு,நெருக்கிடை

சாகரம் - கடல்

சாகுபடி - பயிர் செய்தல்

சாகை,ஜாகை(உருது) - தங்குமிடம்

சாக்கிரதை,ஜாக்கிரதை - விழிப்பு,உன்னிப்பு,எச்சரிக்கை