Saturday, August 29, 2009

இதைத் தட்டிக் கேட்க தமிழகத்தில் யார் உளர்?



இந்திய கடலோரக் காவல் படையினர் இதுவரை பயன்படுத்தி வந்த விக்ரஹா என்ற கடலோர ரோந்துக் கப்பல், இலங்கைக் கடற்படைக்கு வழங்கப்பட்டுள்ளது. இலங்கைப் போருக்குப் பின்னர் இந்தியா வழங்கியுள்ள முதல் பகிரங்க உதவி இது என்பது குறிப்பிடத்தக்கது.

திரிகோணமலையில் நடந்த நிகழ்ச்சியில் இந்தக் கப்பலை கோத்தபயா ராஜபக்சே தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் பேசுகையில், எஸ்.எல்.என்.எஸ். சயுரலா என்று பெயரிடப்பட்டுள்ள இந்தக் கப்பலை வழங்கியதற்காக இந்தியாவுக்கு நன்றிக் கடன் பட்டுள்ளோம். இந்த நல்லெண்ண நடவடிக்கையால், இரு நாடுகளின் உறவுகளும் மேம்படும் என்றார்.

இந்திய கடலோரக் காவல் படை இந்தக் கப்பலை விக்ரஹா என்ற பெயரில் கடந்த 1990ம் ஆண்டிலிருந்து பயன்படுத்தி வந்தது. மும்பையில் இந்தக் கப்பல் கட்டப்பட்டது. இதன் நீளம் 74.10 மீட்டராகும். அகலம் 11.4 மீட்டர். அதிகபட்சம் 21.5 நாட்ஸ் வேகத்தில் இது போகக் கூடியது.

கடல் கண்காணிப்பு ரேடார் இதில் பொருத்தப்பட்டுள்ளது. தகவல் தொடர்பு சாதனங்களும் பொருத்தப்பட்டுள்ளன.

இலங்கைப் போரில் இந்தியா பெருமளவில் உதவிகள் செய்ததாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகின. அதை நியாயப்படுத்துவது போல பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் பல்லம் ராஜுவும் பேசியிருந்தார். இந்த நிலையில் இலங்கைக் கடற்படைக்கு நவீன ரோந்துக் கப்பலை இந்தியா வழங்கியுள்ளது.

இந்தக் கப்பலை வைத்து தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்கவும் தயங்க மாட்டார்கள் என்பது திண்ணம்.



இதைத் தட்டிக் கேட்க தமிழகத்தில் யார் உளர்?


நாதியத்த இனத்திற்கு

நரிகள் உதவின

பிணங்கள் மிச்சம்



நற்றமிழர் - அடிமை நாற்றம்

உன்னை நிர்வாணப்
படுத்திச் சுடுகிறார்கள்
என்னுறவே
உருக்குலைந்து
விட்டாய்
நிலை குலையாமல்
உனக்காக நாங்கள்
இங்கு எவ்வளவு காலம்
மௌன விரதம் இருப்போம்
மூஞ்சிக் கூடும்
மூக்குச் சரடும்
போடப்பட்ட உறவுகள்
விடுதலைக்குப் பின்னும்
அஞ்சடி அரசியல்
அடிமைகளாய்
வியர்த்தாலும்
துடைக்க முடியாமல்
நாற்றத்துடன்
நற்றமிழர்


இந்த கொடுமையைப் பாருங்கள் மனிதம் போற்றும் மானிடர்களே!

Friday, August 28, 2009

துணை முதல்வர் மு.க.ஸ்டாலினின் உறுப்பு தானமும், பொறுப்பும்







உடல் உறுப்புகளை தானம் செய்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக சென்னை மியாட் மருத்துவமனை சார்பில் ஒரு இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த விழிப்புணர்வு இயக்க துவக்க விழாவுக்கு ஸ்டாலின் தலைமை தாங்கினார். அவரது மனைவி துர்கா குத்து விளக்கேற்றி இயக்கத்தைத் துவக்கி வைத்தார்.
பின்னர் துர்கா, தனது வாழ்க்கைக்கு பின் தனது உடல் உறுப்புகளை தானம் அளிப்பதாக அறிவித்து அதற்கான உறுதிமொழிப் பத்திரம் மற்றும் ஆவணங்களில் கையெழுத்திட்டார்.

அவரைத் தொடர்ந்து ஸ்டாலினும், தனது உடல் உறுப்புக்களை தானம் செய்வதாக அறிவித்து அதற்கான ஆவணங்களில் கையெழுத்திட்டார்.

இவர்களைத் தொடர்ந்து 1,500 பேர் உறுப்புகள் தானம் செய்வதற்கான உறுதிமொழி பத்திரங்களில் கையெழுத்திட்டனர்.

விழாவில் பேசிய ஸ்டாலின் ,

உடல் உறுப்புகளை தானம் செய்வது இன்று நேற்றல்ல கடந்த கால வரலாற்றிலும் இடம் பெற்றுள்ளது. மன்னர்கள், நாயன்மார்கள் உறுப்புகளை தானம் செய்துள்ளனர்.

கண்ணப்ப நாயனார் தனது இரண்டு கண்களையும் தானமாக வழங்கியதாக புராணம் கூறுகிறது.

இன்றைய அறிவியல் வளர்ச்சி காரணமாக ஒருவர் உடலில் உள்ள உறுப்புகளை எடுத்து வேறு ஒருவருக்கு பொருத்தி உயிர் வாழ வைக்கும் சம்பவங்கள் பெருகி வருகின்றன.

2008 செப்டம்பர் மாதம் திருக்கழுகுன்றத்தை சேர்ந்த ஹிதேந்திரனுக்கு சாலை விபத்தில் மூளை சாவு ஏற்பட்டது. அவரது இதயம் மாற்று அறுவை சிகிச்சை மூலம் பெங்களூரில் உள்ள ஒரு சிறுமிக்கு பொருத்தப்பட்டது. சென்னை டாக்டர்களின் இந்த சாதனையை மறக்க முடியாது. அவரது பெற்றோரின் நற்செயலை நான் நேரில் பாராட்டினேன்.

அதே போல எல்.ஐ.சி. கிளை மேலாளர் ராமகிருஷ்ணன் மகள் சுகன்யாவுக்கு சாலை விபத்தில் மூளை சாவு ஏற்பட்டது. அவரது கண்கள், சிறு நீரகம் உள்பட 7 உறுப்புகள் எடுக்கப்பட்டு தேவையானர்களுக்கு பொருத்தப்பட்டது.

இது போல திருச்சியை சேர்ந்த வைத்தியநாதன் மகன் நிர்மல்குமாரின் இரண்டு சிறுநீரகங்கள், கண்கள், கல்லீரல், அகற்றப்பட்டு பலருக்கு பொருத்தப்பட்டது. இப்படி பல சம்பவங்கள் நடந்து வருகின்றன.

உறுப்புகளை பலர் தானம் செய்ய முன் வந்தாலும் எப்படி வழங்குவது என்று தெரியாமல் இருக்கிறார்கள். அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த இயக்கம் பயன்படும் என்றார்.

நல்ல முயற்சி, முன்னுதாரணம்.

துணை முதல்வரும், வருங்கால முதல்வருமான திரு.மு.க.ஸ்டாலின் அவர்களைப் பின்பற்றி அனைத்து அரசியல்வாதிகளும், தங்கள் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தால் மகிழ்வைக் கொடுக்கும்.



Wednesday, August 26, 2009

எங்கள் பாரதி - இது என்ன வேசம்?


Saturday, August 22, 2009

இந்திய அணு நீர்மூழ்கிக் கப்பலில் இத்தாலிய தேசியக் கொடி?






இந்திய தேசியக் கொடி









இத்தாலிய தேசியக் கொடி







இந்திய அணு நீர்மூழ்கிக் கப்பல்?




உண்மையான
இந்திய அணு நீர்மூழ்கிக்கப்பல் இப்படித்தான் இருக்கும்




INS Arihant-India's nuclear submarine


Class and type: Arihant Class

Type:
SSBN

Displacement:
5,500 – 6,500 tons
Length:
104m (341.2ft)
Beam:
15m (49.2ft)
Draft:
9m (29.5ft)
Propulsion: PWR using 40% enriched uranium fuel (80MW); one turbine (47,000hp/70MW); one shaft; one 7-bladed, high-skew propeller.
Speed:
12-15 (surfaced) 30-34 (submerged).
Range:
unlimited except by food supplies

Test depth:
300 m (984.2ft).
Complement:
100

Sensors and
processing systems: USHUS Sonar

Armament:
Torpedoes: 6 21" (533mm) torpedo tubes
Total capacity (torpedoes, and missiles): 30 weapons
SLBM - 12 launch tubes (each with 2.4 meter diameter)
12 x K15 SLBM (3 in each launch tube)
4 x Agni III (SLBM)(Under development)
Torpedoes and Mines


Friday, August 21, 2009

கொலைவெறி கவுஜைகள் - ஏனெனக்கு பிடிக்கும்...! ஏனெனக்கு பிடிக்கும்...!

கதவு

சரியான

சாவியிட்டதால்

கள்வனுக்கும்

கட்டுப்பட்ட

கதவு



சமூக நீதி

வரிசையாக

நிற்க வைக்கப்பட்ட

சாதித் தலைகளில்

எதிலும் கொம்பில்லாததால்

எல்லாம்

ஒன்றெனப்பட்டது



மூக்கு

உயிருக்கு

உள் வாங்கும் காற்றை

தூசி தட்டி

தடுத்து

தூய்மைப்படுத்தும்

பயிர்த் தோட்டம்





திருமதி ஜெயலலிதா - கருணாநிதி விளக்கம் - கொள்ளிமலை குப்பு கேள்வி

அண்மையில் தமிழக முதல்வர் திரு.மு.கருணாநிதி அவர்கள் ஒரு பேட்டியின் போது அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவைப்
பற்றி குறிப்பிடும் போது திருமதி என்று உரைத்திருந்தார். அது சரியா தவறா என்கிற குருட்டு விவாதத்திற்கு செல்வது அறிவு ஜீவிகளுக்கும்
உளவியல் வல்லுநர்களுக்கும் உகந்ததாக இருக்குமேயொழிய என்னைப்(கொள்ளிமலை குப்பு) போன்றவர்களுக்கு அது உகந்ததும் இல்லை, அதில்
ஆர்வமும் இல்லை.

திருமதி ஜெயலலிதா என்ற கருணாநிதியின் விளிப்பிற்கு, அடைந்தால் தமிழ் நாடு இல்லையேல் கொடநாடு என்ற கொள்கையுடைய கொள்கைத் தங்கம்
பொன்மனச்செல்வி, சிந்தனைச் செல்வி, தங்கத்தாரகை, பீனிக்குசு பறவை, தங்கத்தலைவி, புரட்சித் தலைவி டாக்டர் ஜெ.ஜெயலலிதா அவர்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்து எழுந்து அண்மையில் கண்டனம் தெரிவித்திருந்தார்.

அதுசமயம், கொள்ளிமலை குப்புவாகிய நான், அடைந்தால் திராவிட நாடு, இல்லையேல் சுடுகாடு என்று சூழுரைத்த கொள்கைத் தங்கம், முத்தமிழ் அறிஞர்,
தமிழினத் தலைவர், தொல்காப்பிய பூங்கா, வாழும் வள்ளுவன், டாக்டர் கலைஞர். மு.கருணாநிதி அவர்களை சந்திக்காத போது, கேட்காத கேள்விக்கு,
அளிக்காத பதிலை இங்கு தருகிறேன்.


கேள்வி: கொள்ளிமலை குப்பு:
வணக்கம் ஐயா, கும்ப்புடுறேனுங்க... நான் கொள்ளிமலை குப்புங்க... கொள்ளிமலையில இருந்து வர்றேங்க...

அண்மையில் நீங்கள் எதிர்க்கட்சித் தலைவரை, செல்வி ஜெயலலிதா, ஜெயலலிதா அம்மையார் அல்லது ”அந்த” அம்மையார் என்று கூட குறிப்பிடாமல் திருமதி.ஜெயலலிதா என்று குறிப்பிட்டது ஏனுங்க சாமி...?

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் சாமியோவ்...!


பதில்: கலைஞர் மு.கருணாநிதி
தமிழ் தெரியாத, புரியாத, அறியாத, விளங்காத தரிகெட்டவர்களின் புலம்பலுக்கு பதில் சொல்லும் நிலையில் நான் இல்லை. இனம் இனத்தோடு சேரும் என்னும், நாம்( நான் என்றால் உதடுகள் ஒட்டாது) விரும்பும் சொற்றொடருக்கிணங்க, கொள்ளிமலை குப்பு அவர்களுக்கு பதிலளிப்பதில் பெருமிதம்
கொள்கிறேன். மலைசாதி மக்களுக்கான இட ஒதுக்கீட்டுக்காக நானும் கழகமும் எவ்வாறெல்லாம் போராடினோம் என்பதை இந்த நேரத்திலே நினைவு கூர்கிறேன்.

இப்போது உங்கள் கேள்விக்கு வருகிறேன். சிலருக்கு கேள்விகள் கேட்பது எளிது, சிலருக்கு பதிலளிப்பது எளிது.
எனக்கு இரண்டுமே தண்ணி பட்ட பாடு. கேள்விகளை வேள்விகளாகக் கருதுபவன் நான்!

திருமதி என்று நான் குறிப்பிட்டதை தவறாகப் புரிந்து கொண்ட தமிழறியா குழந்தைக்கு பாடம் சொல்லிக் கொடுப்பதாக நினைத்து என்னுடைய பதிலைத் தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன். கடமை,கண்ணியம்,கட்டுப்பாடு - எங்கள் தலைவன் அண்ணா சொல்லிக் கொடுத்த பாடம். மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு - எங்கள் தலைவனின் மதியுரை. இது கூட தெரியாமல் எங்கள் தலைவரின் பெயரைச் சுமந்து கொண்டு கட்சி நடத்துவது கேலிக்கூத்து.

திருமதிக்கு வருகிறேன்.

திரு என்றால் அழகு, மதி என்றால் அறிவு. அழகையும் அறிவையும் ஒருங்கே பெற்ற பெண்மணி என்றல்லவா நான் சொல்ல
வந்தேன். அதை தவறாக பயன்படுத்தியதாக கூக்குரலிட்டால் அவர் பொருள் தெரியாதவராகிவிடுகிறார். தமிழ் தெரியாவராகிறார்.

இன்னும் சொல்லப் போனால், வேறொரு பொருளிலும் குறிப்பிட்டேன். எனக்கு சிலேடை வரும் என்பதை நான் சொல்லி உங்களுக்குத் தெரியப்படுத்த வேண்டியதில்லை. எனது கவிதைகள் என்னைப் பற்றி கூறும்.

திரு என்றால் அழகு, மதி என்றால் நிலா. நிலாவைப் போன்ற அழகை உடைய அழகு
நிலா என்று சொல்லாமல் சுறுக்கமாக திருமதி என்று குறிப்பிட்டிருக்கிறேன் அவ்வளவுதானே!?

இன்னும் நிறைய வகைகளில் பொருள் கொள்ளலாம். திரு என்றால் மேன்மை பொருந்திய, மதி என்றால் அறிவுடையார். அதனால் அவர் மேன்மை பொருந்திய அறிவுடையார் என்று நான் சொன்னதாகத் தானே எடுத்துக் கொள்ள வேண்டும்!?

திரு என்றால் விழி, மதி என்றால் நிலா. நிலவை ஒத்த விழிகளைக் கொண்ட அழகிய பெண்மணி என்றல்லவா பொருள் கொள்ள வேண்டும்!?

திருமதி என்பவர் திருமகள் ஆவார். அதனால் அவரை செல்வத்துக்குத் தலைவியாக உருவகப் படுத்தி இருப்பதாகத் தானே எடுத்துக் கொள்ள வேண்டும்!?

திரு என்றால் நன்மை, மதி என்றால் அறிவு. நன்மை பயக்கக் கூடிய அறிவுக்குச் சொந்தக்காரர் என்றுதானே அவருக்குப் புரிந்திருக்க வேண்டும்!?

திரு என்றால் மாண்பு. மாண்புமிக்க, மதிப்புமிக்க பெண்மணி என்றாவது அவர் பொருள் கொண்டிருக்க வேண்டும்!?

திரு என்றால் தலை, மதி என்றால் நெற்றியிலே நிறைமதியைப் போல வீற்றிருக்கும் குங்குமம். அந்த திலகத்தை அல்லவா குறிப்பிட்டேன். அதில் மக்கள் திலகம்,தங்கத் தலைவன், சத்துணவு கண்ட சரித்திர நாயகன், பொன்மனச்செம்மல், புரட்சித்தலைவர், டாக்டர். எம்.ஜி.ஆர் நிறைமதியப் போல் ஒளி வீசுகிறார் என்றல்லவா புகழ்ந்துரைத்தேன். அதைத் தவறாகப் புரிந்து கொண்டது ஏனோ......!?

இதனால் நான் ஆற்றொணாத்துயரடைந்தேன்.

அடலேறுகளை அமைதி காக்கச் செய்தேன்.

உடன்பிறப்புகளை ஓய்வாய் இருக்கச் சொன்னேன்.

தொண்டர்களை துயரமின்றி இருக்கச் சொன்னேன்.

கழகக் கண்மணிகளை கலவரம் இன்றி நிலவரம் அறியச் சொன்னேன்.

எல்லா துயரத்தையும் நானே தாங்கிக் கொள்கிறேன். எனக்குத் தானே என் தலைவன் எதையும் தாங்கும் இதயத்தை இரவலாகக் கொடுத்தான்.

நன்றி கொள்ளிமலை குப்பு!

மீண்டும் சந்திப்போம்!! சிந்திப்போம்!!!

Saturday, August 15, 2009

சுதந்திரம் யாருக்கு? - பிணங்கள்

தேசியக் கொடி

ஏற்றி வைத்த பிரதமர்

கண்ணாடிப் பெட்டிக்குள்

சமத்துவம்

சகோதரத்துவம்

சமதர்மம்

நாட்டுப்பற்று

வெளிப்பட்டது

ஒலிபெருக்கியில்

கைதட்டல்

விண்ணைப் பிளந்தது

அப்பாவி மக்களின் நெஞ்சை

தீவிரவாதிகளின் துப்பாக்கி ரவைகள்

பிளந்திருந்த தருணத்தில்

கண்ணாடிப் பெட்டிக்குள்

பிணங்கள்





Friday, August 14, 2009

எனக்குப் பிடித்த முத்துகள்

தெப்பம்

கொழு கொம்பில்லாமல்

வெள்ளத்துக்குள்

தவிக்கும்

வீடிழந்த மக்கள்

தண்ணீர் பாய்ச்சப்பட்ட

கோயில் குளத்தில்

தேனிலவுக்குக் காத்திருக்கிறது

தெப்பம்




கறவை மாடு

வத்தல்

போடப்பட்ட

கன்றுக் குட்டி

புண்ணாக்குக்காக

பால் கறந்தது

பசுமாடு




சோத்துமணி

ஓயாது

ஓடி உழைத்து

சோறு போட்டது

கடிகாரம்





விக்கிரமணிய சாமியிடம் கொள்ளிமலை குப்பு சரமாரி கேள்வி-பதில்

அண்மைய காலங்களில் மதிப்பிற்குரிய கொள்ளிமலை குப்பு ஐயா அவர்கள் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களை சந்தித்து
வருவது அனைவரும் அறிந்ததே. கொள்ளிமலை குப்பு அவர்களின் நீண்ட கால ஆசை திரு விக்கிரமணிய சாமியை சந்திக்க வேண்டும்
என்பது தான் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? அந்த ஆசையும் இப்போது நிறைவேறிவிட்டது.
இதை ஒரு செவ்வியாகவே நிகழ்த்திய கொள்ளிமலை குப்பு அவர்களுக்கு நன்றி!

கொள்ளிமலை குப்பு அவர்களின் அனுமதியோடு இங்கு அதனைத் தருகிறேன்.

கொள்ளிமலை குப்பு: வணக்கம்ங்க சாமியோவ்!

விக்கிரமணிய சாமி : யாருய்யா நீ? உன்னை யாருய்யா உள்ள விட்டது? யூ டோண்ட் ஹேவ் மேன்னர்ஸ்? என்ன தைரியம் இருந்தா என் பேர சொல்லிக் கூப்பிடுவே?
உன்ன சுப்ரீம் கோர்ட் வரைக்கும் இழுப்பேன். என்னை யாருன்னு நெனைச்ச நீ?

கொள்ளிமலை குப்பு: ஐயோ சாமியோவ்!

விக்கிரமணிய சாமி : திருப்பியும் என் பேரசொல்ற உனக்கு அறிவுல்ல? நீ பெரிய ஆளா?
எதுலடா வந்த?

கொள்ளிமலை குப்பு: நான் எல்லோரையும் சாமின்னு கூப்புடுறது என் பழக்கம் சாமியோவ். கோவிக்காதீங்க சாமியொவ்! நான் பழய சைக்கிள்ல தானுங்க சாமி வந்தன்.


விக்கிரமணிய சாமி : நெற்ய இண்டியன் கவர்மண்டை கவுத்தவன் இந்த சுவாமி, உன் ஓட்டை சைக்கிளை கவுக்க எவ்ளோ நேரம் ஆவும்.


கொள்ளிமலை குப்பு: ஏன் சாமி என் பாவத்துல விழுவுறிய... நான் எழை சாமி...

விக்கிரமணிய சாமி : ஏழையாடா நீ... ஏழையா இருந்தா குளிக்கக் கூடாதுன்னு சுப்ரீம் கோர்ட்டுல சொல்லி இருக்காளா? நீ நல்ல என்விரான்மெண்ட
நாசமாக்கிட்ட... இவாள எல்லாம் ஏன் உள்ள விடுறேள்.

கொள்ளிமலை குப்பு: நான் செவனேன்னு கிடக்குறேன் சாமி, நான் கவர்மெண்டை எல்லாம் நாசமாக்க மாட்டேன் சாமியோவ்!

விக்கிரமணிய சாமி : டேய்... டேய்... டேய்... டேய்... அது என்னடா சைக்கில்ல துப்பாக்கி, நீ ஸ்ரீலங்காலற்ந்து வற்றியா, தமில் காரனா? நீ தீவிரவாதியா தான் இருப்பே...
நான் யாருன்னு நினைச்சே. மாஜீவ் காந்தியே நான் சொன்னா கை கட்டி நிப்பா... சிஆர்பிஎப் -காரங்கள கால் பண்றன். இங்க வர்ணாநிதி போலீஸ்
நான் சொன்னா கேக்க மாட்டா!? இங்க லா அண்ட் ஆர்டரே இல்லயே... நம்ம உயிரை எடுத்துடுவா போலருக்கு... அந்தம்மாகிட்ட சொல்லிட்டேன்
இதான் நல்ல நேரம் லா அண்ட் ஆர்டர் இல்லைன்னு சொல்லி வர்ணாநிதி ஆட்சிய கலைச்சு தாரேன்ன்னு. அவா எங்க நான் சொன்னா கேக்குறா...

கொள்ளிமலை குப்பு: ஏன் சாமி பொழம்புறிய... நான் கொண்டுவந்தது குருவி சுடுற துப்பாக்கிதாங்க... கவர் மண்டு அனுமதியோட லைசன்சும் வச்சுருக்கேன்ங்க.

விக்கிரமணிய சாமி : பெர்மிஸ்ஸன் இல்லாம உள்ள நுழஞ்சிட்டே... உன்னை ட்ரெஸ் பாஸ் கேஸ்ல உள்ள தள்ளலாம். பாவன்னு விடுறேன். தரையில உக்கார்.

கொள்ளிமலை குப்பு: நன்றிங்க சாமியொவ்! உங்கள்ட்ட பேட்டி..........

விக்கிரமணிய சாமி : உங்கிட்டேர்ந்து பெட்டியா? ஐ அம் டூயிங் இட் இன் ஸ்டேட்ஸ் லெவல். மைண்ட் இட்.

கொள்ளிமலை குப்பு: பெட்டி இல்லைங்க சாமி. பேட்டிங்கோ... எனக்கு இன்கிலீசு தெரியாதுங்க சாமி கொஞ்சம் தமிழ்ல பேசுங்களேன் சாமியோவ்!

விக்கிரமணிய சாமி : நீ பட்டிக்காடுன்னு பாத்தா தெர்யுது. உனக்கெல்லாம் படிக்கிறதுக்கு என்ன கேடு.

கொள்ளிமலை குப்பு: கேடு இல்லீங்கோ... எனக்கு வீடும் இல்லை. வாசலும் இல்லைங்க சாமியோவ். ஏழை வேறங்லா எப்படிங்க எடம் கிடைக்கும்.

விக்கிரமணிய சாமி : உனக்கெல்லாம் தான் ரிசர்வேசன் வாங்கி வச்சுருக்காளே அவாளுகிட்ட போய் அழு. ஏன் இங்க வந்து என் கழுத்தருக்கிற.

கொள்ளிமலை குப்பு: சர்வேங்லா சாமி. நாங்க இருக்கிறது கொள்ளிமலை சாமி. அதை சர்வே பண்ணி அளந்து எழைக்கு கொடுக்குறது நிறைய இடர்பாடுகள்
இருக்குன்னு மொதல்வர் விலைஞர் சொல்லி இருக்கிறாருங்கோ. இருந்தாலும் இருக்குறத்த பிரிச்சு கா குழி இருந்தாலும், முடிந்தவரை மீதம் இருந்தால், கொஞ்சமாச்சும் தர்றேன்னு கண்டிசனா சொல்லி இருக்காருங்கோ.

விக்கிரமணிய சாமி : அவா குடுக்குற வரைக்கும் நீ நம்பிகிட்டு இரு. ஓட்டு போட்டியா? முடிஞ்சுது விடு.

கொள்ளிமலை குப்பு: உங்க கிட்ட கேள்வி கேக்கலாமுன்னு வந்திருக்கேன் சாமியோவ்.

விக்கிரமணிய சாமி : என் கிட்ட ஆக்ஸ்போடு யுனிவெர்சிட்டி புரபசரே சந்தேகம் கேப்பான். நீ என்னத்த கேக்கப் போற கேளு.

கொள்ளிமலை குப்பு: திடீர் திடீர்னு காணாம போய்ர்றியளே எங்க போறீங்க சாமி?

விக்கிரமணிய சாமி : அறிவாளிங்கள பல இடத்துல கூப்புடுவா... என்னை இஸ்ரேல்ல அழைக்கிறா! அமெரிக்க யுனிவெர்சிட்டில செமினார் எடுக்கக் கூப்பிடுறா! நம்ம டெல்லிக்காரா கூப்பிடுறா...
ஸ்ரீலங்கா காரா கூப்புடுரா,அவாடெல்லாம் கொடுக்குறா. அவாளுக்கெல்லாம் தெர்யுது நம்ம வால்யூ. இவாளுக்கு தான் தெரியமாட்டேங்குது.

கொள்ளிமலை குப்பு: இவ்வளவு சுத்துறீங்களே... உங்க சொந்த ஊரு எதுங்க சாமியோவ்?

விக்கிரமணிய சாமி : என் நேட்டிவ் மத்ரைக்கு பக்கத்துல இருக்குற சோளவந்தான். ஆனா இந்தியாவில் ஒரு அகில இந்திய கட்சியின் தலைவர். எத்தனை பிரதமர்களை,
முதல்வர்களை உர்வாக்கி இருக்கேன் தெரியுமா? உனக்கெல்லாம் எங்க தெரியபோவுது. என் தலைவிதி உங்கிட்ட பேஷுரேன்.

கொள்ளிமலை குப்பு: நீங்க ஆளவந்தான்னு தெரியும். ஆனா சோளவந்தான்னு இப்ப தான் தெரிஞ்சுது. உங்க கட்சியில நீங்க பிந்திரலேகா அம்மா
தவுத்து எத்தனை உறுப்பினர்கள் சாமியோவ்?

விக்கிரமணிய சாமி : இதே மூணு பேராச்சே, அப்ப ஆந்திராவுக்கும் ஒரு தலைவர நியமிச்சிர வேண்டியதுதான்.

கொள்ளிமலை குப்பு: ரெண்டு பேருன்னு( நீங்க, சந்திரலேகா அம்மா) தானே சொன்னேன் சாமி. நீங்க மூணு பேருங்கிறியளே?

விக்கிரமணிய சாமி : அம்மான்னு சொன்னியோன்னோ அதோட மூணு கணக்கு ஆவுது.

கொள்ளிமலை குப்பு: சரிங்க சாமி... உங்களுக்கு எதோ பற்றாக்குறையா இருக்குற மாதிரி தெரியுது.

விக்கிரமணிய சாமி : எனக்கு என்னடா கொரைச்சல். பில் விளிண்டன் பொண்டாட்டிக்கே பதவி வாங்கிக் கொடுத்தவன் நான், போனியாவுக்கு
பிரதமர் பதவிய கையில கொண்டு போய் கொடுத்தேன். நான் கொடுத்த சீதேவிய வேண்டானுட்டா... மூ...தேவி! வர்ணாநிதி ஆட்சிய கலைச்சு இவாளுக்கு மொத மந்திரி
பதவி வாங்கி கொடுத்தேன். இவாளெல்லாம் நம்மல எங்க மதிக்கிறா?

கொள்ளிமலை குப்பு: உங்கள மதிக்கிறத்த பத்தி பேசும் போது இன்னொன்னு ஞாபகத்துக்கு வருது சாமியோவ். உங்களுக்கு அதிகமாக கோர்ட்டுலதான் மருவாதி கிடைக்கிதுன்னு பேசிக்கிறாங்களே உண்மையா?

விக்கிரமணிய சாமி : இட்ஸ் ட்ரு. இங்க இருக்குற ஜட்ஜுகள்,லீடிங் லாயர்ஸ் எல்லாம் நம்மள்ட்ட லா கத்துண்டவா தான். அதனால அவாள்ட்ட எப்பவும் நமக்கு மர்யாத இர்க்கு.

கொள்ளிமலை குப்பு: கோர்ட்டுல வதிமுக மகளிர் அணி காரவங்கள பாத்திருக்கீங்களா?

விக்கிரமணிய சாமி : அவா உருப்புட மாட்டா. உண்ட வீட்டுக்கு இரண்டவம் பண்றவா... சுபிட்சமா வாழமாட்டா...


பேட்டி தொடரும்...

வட மொழி - தமிழ் மொழி

பின் நவீனத்துவம் - பின் புதுமையியல்

அகங்காரம் - செருக்கு,இறுமாப்பு,முனைப்பு,யானெனல்

அகடவிகடம் - குறும்பு,மாற்று,மாறுபட்டது

அகதி - அறவை,வறியன்,எதிலி,புகலிலான்,யாருமற்றவன்,ஏழை

அகந்தை - இறுமாப்பு,செருக்கு

அகம் - உள்ளே,உயிர்,நான்,மனம்,மனநிலை,எண்ணம்

அகம்பாவம் - தற்பெருமை,செருக்கு

அகராதி - அகரமுதலி,அகரவரிசை,அகரநிரல்,அகரமுதல்

அகிம்சை - இன்னா செய்யாமை,கொல்லாமை

அஹிம்சை - இன்னா செய்யாமை,கொல்லாமை

அகோரம் - அழகின்மை,கொடுமை,நடுக்கம்

அக்கணம் - அப்பொழுது,அந்நொடி

அக்கரம் - எழுத்து

அட்சரம் - அழிவில்லாதது

அக்கியாணி - அறிவிலான்

அஞ்ஞானி - புல்லறிவாளன்

அக்கிரகாரம் - பார்ப்பனச் சேரி

அக்கிரமம் - ஒழுன்கின்மை,முறைகேடு

அக்கிராசனம் - முதலிருக்கை,தலைமை

அக்கினி,அக்நி - நெருப்பு,தீ,அனல்,எரி

அங்கப்பிரதட்சணம் - உடல் வலமுருளல், வலம் புரளல்

அங்கீகாரம்,அங்கீகரணம் - உடன்,செப்பு

அங்குலம் - விறக்கட்டை,விரலளவு

அசத்தை,அசத்தியம் - பொய்

அசரம்- அசைவில்லாதது,இயங்காதது,நிலையியல்

அசரீரி - வானொலி,உருவற்றது

அசித்து - பயனின்மை

அஜீரணம்,அசீரணம்- செரியாமை,பசியின்மை,அழிவுபடாமை

அசுத்தம் - அழுக்கு,துப்புரவின்மை,தூய்மையின்மை

அசேதனம் - அறிவில்லாதது,அறிவிலி,அறிவில் பொருள்

அசெளரியம் - நலமின்மை,இடைஞ்சல்

அஞ்சலி - கும்பிடல்,வணக்கம்

அஞ்சனம் - மை,கறுப்பு,இருள்

அஞ்சிட்டம் - கதிரவன்

அஞ்ஞாதம் - மறைவு,அறியப்படாதது

அஞ்ஞாத வாசஸ்தலம் - மறைந்துறைவிடம்

அட்சயப் பாத்திரம் - திருவோடு,ஏற்போடு,அள்ள அள்ளக் குறையாதது

அட்டதிக்கு பாலகர் - எண்புறக்காவலர்

அட்டபந்தனம் - எண்புறக்கட்டு

அண்டம் - முட்டை,உலகம்,வித்து,மூலம்

அதமம் - கீழ்மை,கடைத்திரம்

அதர்மம்,அதருமம் - தீவினை,அறமின்மை,மறம்

அதிகப்பிரசங்கம் - மிகுபேச்சு,தன் மேம்பாட்டுரை,மற்றொன்று விரித்தல்

அதிகாரி - அலுவலர்,தலைவன்,முதல்வன்,உடையவன்

அதிகாலம் - விடியற்காலம்

அதிகாலை - விடியற்காலம்,புலரிக்காலை

அதிஷ்டவசம் - நல்வினைப்பயன், நல்வினை வயம்

அநந்தகோடி - எண்ணத்தொலையாதன

அநந்தம் - அளவின்மை,முடிவில்லது

அநாதை - யாருமற்றவன்,தாய்தந்தையிலான்

அநித்தம்,அநித்தியம் - அழிவு,நிலையற்றது,நிலையாமை

அநீதி - முறைகேடு

அநுக்கிரகம் - அருளிரக்கம்,அருள்

அநுசரணை - சார்பு,சார்பு நிலை

அநுசிதம் - பொய்,தகாதது

அனுபவம் - பழக்கம்,வழக்கம்,நுகர்ச்சி

அனுமினம் - ஐயம்,வழியளவை,கருதலளவை

அனுமானப் புரமானம் - கருதலளவை

அநேகர் - பலர்

அந்தகன் - அழிப்போன்,குருடன்

அந்தகாரம் - இருள்,அறியாமை

அந்தக்கரணங்கள் - அகக்கருவிகள்

அந்தஸ்து - நிலைமை,ஒழுங்கு,நிலை

அந்தரம் - வான்வெளி,இடைவெளி,துணையின்மை,காலம்

அந்தி - முடிவு,மாலைக்காலம்

அந்திய கிரியை - இறுதிச் சடங்கு

அந்நியர் - பிறர்,அயலார்

அந்நியோந்நியம் - நெருக்கம்,ஒற்றுமை,ஒருவொருக்கொருவர்

அபயம் - அடைக்கலம்,அச்சமின்மை,புகலிடம்,அஞ்சேலெனல்

அபாயம் - பேரிடர்,அழிவு,கேடு,துன்பம்,இடுக்கண்,இக்கட்டு

அபாரம் - சிறப்பு,அளவின்மை,கேடு

அபிதானம் - பெயர்

அபிநயம் - நடிப்பு,கூத்து,கைமைய்காட்டல்,உள்ளக் குறிகாட்டல்

அபிப்பிராயம் - நோக்கம்,எண்ணம்,உட்கருத்து,உள்ளப்போக்கு

அபிமானம் - பற்று,நேயம்,செருக்கு

அபூர்வம் - அரிது,அருமை,அரிய பொருள்

அபேச்சை -அவா,விருப்பம்

அபேதம் - ஒற்றுமை,வேற்றுமையின்மை,வேறன்மை

அப்பியாசம் -பழக்கம்,பயிற்சி

அப்பிரதட்சிணம் - இடப்புறச் சுற்று, இடப்பக்கச் சுற்று

அமரத்துவம் - அழிவின்மை

அமலன் - துயோன்,கடவுள்,வாலறிவன்

அந்நியர் - பிறர்,அயலார்

அதிகம் - மிகுதி,அளவின்மை

அமிர்தம்,அமிருதம் - இனிமை,அருமருந்து,சாவா மருந்து,அழிவினமை

அமச்ம் - வகை,பங்கு,காலம்,எண்,அன்னப்புள்

அம்பாரம் - குவியல்

அயோக்கியம் - தகுதியினமை,தகாதது

அயோக்க்கியன் - தகுதியற்றவன்,தகவிலான்,கெட்டவன்

அரணியம் - காடு

அருச்சனை,அர்ச்சனை - வழிபாடு, பூ வழிபாடு,மலர் வழிபாடு

அருத்தம்,அர்த்தம் -பொருள்,பாதி

அருவம் - உருவின்மை,அழகின்மை

அர்த்தநாசம் - பேரழிவு,பொருளழிவு

அர்ப்பணம் - உரிமை கொடுத்தல், ஒப்புவித்தல், நீரோடு கொடுத்தல்

அலங்காரம் - அழகு,ஒப்பனை,அணி,புனைவு

அலச்சியம் - பாராமுகம்,பொருட்படுத்தாமை,கருத்தின்மை

அவகீர்த்தி - இழிவு,புகழின்மை

அவக்கியாதி - வசை,இகழ்ச்சி

அவசரம் - விரைவு,பரபரப்பு,சுருக்கு,பதைப்பு

அவசியம் - முதன்மை,கட்டாயம்,இன்றியமையாமை

அவதரித்தல் - பிறத்தல்

அவதாரம் - பிறப்பு,இறங்குகை

அவதானம் - எச்சரிக்கை,ஒழிவு,நினைவு,விரித்தல்,மறப்பின்மை

அவநம்பிக்கை - நம்ப்பிக்கைக்குறை

அவமரியாதை - முறைதவறல்,வணக்கமின்மை,தீயமுறை

அவமானம் - மானக்கேடு,இழிவு,குறைவு,இளிவரவு

அவயவம்,அவையவம் - உறுப்பு

அவலன் - உடற்குறையன்,வீணன்

அவசு,ஹவிசு - தூய உணவு,சோறு,நெய்,

அற்பம்,அல்பம் - சிறுமை,அணு,புன்மை,இழிவு

அனங்கன் - உடலிலான்,கடவுள்,காமவேள்

அனாதி - கடவுள்,தனியன்,பழமை,தொன்மை

அனுதாபம் - இரக்கம்

அனுபவம் - பழக்கம்,வழக்கம்,அழுந்தியறிதல்,பட்டறிவு

அனுமானம் - உய்த்துணர்தல்,கருதல்ளவை,வழியளவை

அனேகம் - பல,எல்லாம்

அன்னதானம் - சோற்றறம்,சோற்றுக்கொடை,உணாக்கொடை

அன்னம் - சோறு,உணவு,அடிசில்

அன்னியன் - பிறர்,அயலார்

அன்னியோன்னியம் - ஒற்றுமை,நெருக்கம்,ஒருவர்க்கொருவர்

ஆகம் -உடல்,மார்பு

ஆகரு(ர்)ஷண சக்தி - இழுப்பாற்றல்,இழுவழி,சேர்வழி

ஆகாசம்,ஆகாயம் - விண்,வெளி,வான்,விசும்பு,வர்னம்

ஆகாய விமானம் - வான ஊர்தி

ஆகாரம் - உணவு,அடிசில்,உடம்பு,வடிவு

ஆக்கியாபித்தல்,ஆஞ்ஞாபித்தல் - கட்டளையிடல்

ஆக்கிரமித்தல் - வலிந்து கவர்தல்,வலிமை காட்டல்

ஆட்சேபம் - மறுமொழி,மறுத்துக்கூறல்,தடைமொழி

ஆங்காரம் - இறுமாப்பு,செருக்கு,தருக்கு

ஆச சங்கை -ஐயம்

ஆசாபாசம் -அன்பு,பற்று,அவா

ஆசாரம் - ஒழுக்கம்,வழக்கம்,நன்னடை,வழிபாடு,துப்புரவு

ஆசியம்,ஹாசியம் - எள்ளல்,நகை,சிரிப்பு

ஆசீர்வாதம் - வாழ்த்துரை

ஆசுவாசம் - இளைப்பாறுகை

ஆசை - விருப்பம்,அவா,பற்று,வேட்கை,விழைவு

ஆச்சரியம் - புதுமை,வியப்பு,இறும்பூது

ஆ(ச்)சிரமம் - இலைக்குடில்,பாழி,முனிவருறயுள்

ஆஸ்திகம் - கடவுளுண்டெனுங்கொள்கை

ஆஸ்பத்திரி - மருத்துவச்சாலை

ஆஞ்ஞாபித்தல் -கட்டளையிடல்

ஆஞ்ஞை -ஆணை,கட்டளை

ஆடம்பரம் - ஆரவாரம்,பகட்டு

ஆட்சேபம்,ஆட்சேபனம் - தடைமொழி,மறுமொழி,எதிர்மொழி,மறுப்பு

ஆதங்கம் - ஆற்றாமை,அச்சம்,நோய்

அந்நியர் - பிறர்,அயலார்

ஆதவ(ப)ன் - பகலோன்,கதிரோன்

ஆதரவு - துணை,உதவி,சார்பு,பற்றுக்கொடு

ஆதி - முதல்,பழமை,அடி,தொடக்கம்,காரணம்,எழுவாய்,கடவுள்

ஆப்தம்,ஆத்தம் - அன்பு,நட்பு

ஆத்தானம்,ஆஸ்தானம் - நகரவாயில்,அறமன்றம்,கொடிமுடிவாயில்

ஆத்திரம்,ஆத்திரியம்,ஆத்திரவம் - உளக்கொதிப்பு,விரைவு,பரபரப்பு

ஆத்துமா,ஆன்மா - உயிர்

ஆந்ந்தம் - இன்பம்

ஆபத்து -இடர்,துன்பம்,இக்கெட்டு,ஊறுபாடு,இடுக்கண்

ஆபரணம் - அணிகலம்,இழை,நகை,அணி,பூண்

ஆபாசம் - அருவருப்பு,சிதைவு,கெடுதல்,பொய்,அளவைப்பொலி

அபூர்வம் - வினைப்பயன்

ஆமோதித்தல் - உடன்படல்,வழிமொழிதல்,மகிழ்தல்

ஆயக்கட்டு(துளுவம்) - மொத்த நஞ்சை நிலம்,களப்புரவு

ஆயத்தம்(இந்தி) - முயற்சி,எத்தனம்,முன்னேற்பாடு

ஆயா(போர்ச்சுக்கீஸ்) - செவலித்தாய்,கைத்தாய்

ஆயாசம்,ஆயாஸம் - களைப்பு,இளைப்பு,சோர்வு,அயர்வு,மயக்கம்

ஆயுசு,ஆயுள் - வாழ்நாள்,ஆண்டு

ஆயுதம் - கருவு,படைக்கலம்,படை,வாள்

ஆரணியம்,ஆரண்ணியம் - காடு

ஆரம்,ஹாரம் - பூமாலை,தொடையல்

ஆரம்பம் - தொடக்கம்

ஆரம்பித்தல் - தொடங்கல்

ஆராதனம் - வணக்கம்,மகிழ்வித்தல்

ஆரோகம்,ஆரோபம்,ஆரோக்கியஸ்நானம் - நல முழுக்கு,நோய் தீர்ந்தபின் முழுகல்

ஆரோக்கியம் - நலம்,நோயின்மை

ஆரோபணம்- நாட்டுதல்,ஏற்றுதல்

ஆரோபித்தல் - ஏற்றுதல்

ஆர்ச்சிதம் - தேட்டம்,தேடிய பொருள்

ஆர்மோனியம் - இசைக்கருவி

ஆர்வம் - அன்பு,விருப்பம்

ஆலகண்டண் - சிவன்,நஞ்சுமிடற்றன்,கறைமிடற்றன்

ஆலகம்- நெல்லிமரம்

ஆலம் - நஞ்சு

ஆலயம் - கோயில்

ஆலாபம்,ஆலாபனம் - அலப்பு,பேச்சு,உரையாடல்

ஆலோசனை - சூழ்தல்,சூழ்ச்சி,ஓர்வு,எண்ணம்,ஆராய்ச்சி

ஆவசியம் - கட்டாயம்,முதன்மை,இன்றியமையாமை

ஆவத்து,ஆபத்து - இக்கெட்டு,இடர்,பொல்லாங்கு

ஆவர்த்தி,ஆவருத்தம்,ஆவிருத்தி - தடவை,வரிசை,சுற்று,வழக்கம்

ஆவாகனம் - அழைத்தல்,உட்புகல்

ஆனந்தபரவசம் - இன்பக்களிப்பு,பேரின்பக்களிப்பு

ஆனந்தம் - இன்பம்,பேரின்பம்

ஆன்மா - உயிர்

இகம் - இவ்வுலகம்,இவ்விடம்,இப்பிறப்பு

இங்கிதம் - இனிமை,அடையாளம்,கருத்து,இடம் பொருள்

இச்சகம் - முகமன்

இச்சை - விருப்பம்,அவா,விழைவு,வேட்கை

இடபம்,ரிஷபம் - எருது,காளை,ஏறு,விடை

இட்டசித்தி - விருப்பப்பேறு

இதம்,ஹிதம் - இனிமை,நன்மை,அன்பு,அறம்

இதயம்,இதையம்,ஹிருதயம் - நெஞ்சம்,உள்ளம்

இதரம் - வேறு,இயல்,அழிவு,பகைமை

இதிகாசம் - பண்டை வரலாறு,பழங்கதை

இந்திர ஜாலம் - இமயவர்கோன்,வானவர் தலைவன்

இந்து - நிலா,திங்கள்,அம்புலி

இமாலயம்,ஹிமாலயம் - பனிமலை

இரகசியம் - மறைபொருள்,மறை,அற்றம்

இராசாபாசம் - அருவருப்பு,ஒழுங்கின்மை

இரசாயனம் - பொருளியைபு

இரட்சகம் - பாதுகாப்பு,மீட்பு

இரட்சை - காப்பு

இரணம்,ரணம் - புண்

இரதம்,ரதம் - தேர்

இரத்தம் - குருதி,செந்நீர்

இரத்தினம்,ரத்தினம் - மாமணி,செம்மணி

இரம்பம்,ரம்பம் - ஈர்வாள்

இராகம்,ராகம் - இசை,பண்,அவா,விருப்பு

இராகு - கருங்கோள்

இராக்கதர் - அரக்கர்

இராசசூயம் - அரசர் வேள்வி

இராசா - அரையன்,மன்னன்,அரசன்

இராச்சியம் - நாடு,அரசியல்

இராத்திரி - இரவு,கங்குல்

இருஷி,இருடி - முனிவன்,தவசி,துறவி

இதய கமலம் - நெஞ்சத்தாமரை

இருது - பருவம்,மகளிர் முதற்பூப்பு

இரேகை - வரி,எழுத்து,கையிறை,நிறை,தொடர்

இலகிரி,லகிரி,லாகிரி - வெறி,மயக்கம்

இலகு,லகு - எளிது,நொய்மை,நுண்மை,ஈரம்,பலா மரம்

இலங்கணம் - பட்டினி

இலஞ்சம் - கைக்கூலி,கையூட்டு,கையுறை

இலட்சணம்,லட்சணம் - அழகு,பார்வை

இலயித்தல் - ஒடுங்குதல்,சேர்ந்தொன்றித்தல்

இலெளகீகம்,இலவுகீகம் - உலகியல்,உலகப்போக்கு

இலாஞ்சனம்,இலாஞ்சனை - புகழ்,அடியாளம்,கறை

இலாபம்,லாபம் - ஊதியம்,மிச்சம்,பேறு

இலீலை,லீலை - விளையாட்டு

யுகம்,உகம் - உலக முடிவு,இரண்டு

உக்கிராணம் -களஞ்சியம்,சரக்கறை

உஷ்ணம் - வெப்பம்,சூடு

உசிதம் - உயர்வு,சிறப்பு,மேன்மை,தகுதி,ஒழுங்கு

உசிதன் - தக்கோன்

உச்சம் - உயர்ச்சி,சிறப்பு

உச்சரித்தல் - சொல்லுதல்,ஒலித்தல்,ஓதல்

உச்சரிப்பு - எழுத்தோசை

உச்சாட்டியம் - பேய கற்றல்,ஒட்டுதல்

உச்சி - மேடு,முகடு

உச்சிக்காலம்,உச்சிச்சமயம் - நண் பகல், நடுப் பகல்

உதயன் - பகலோன்

உதாரணம்,திருட்டாந்தம் - எடுத்துக்காட்டு,சான்று

உத்தமம் - உண்மை,மேன்மை

உத்தரியம்,உத்தரீயம் - மேலாடை

உத்தரவு - கட்டளை

உத்தி,யுத்தி - அறிவு,இணக்கம்,இசைவு,சூழ்ச்சி,சொல்

உத்தேசம்,உத்தேகம் - கருத்து,மதிப்பு,ஏறக்குறைய

உபகரணம் - கொடுத்தல்,உதபிபொருள்கள்,கருவி,துணைக்காரணம்

உபதேசம் - அருண்மொழி,அறிவுரை

உபயம் - உதவி,நன்கொடை,இரண்டு

உபாசநம்,உபாசநை,உபாசனை - வழிபாடு,வணக்கம்

உபாதி,உபாதை - நோய்,துன்பம்,வருத்தம்

உபாத்தியாயன் - கணக்காயன்,ஆசிரியன்,கற்பிப்போன்

உபாயம் - சூழ்ச்சி,நொய்மை,எளிது,சிறிது

உயுக்கம்,உயுத்தம்,யுத்தம் - போர்,தகுதி

உருசி,ருசி - சுவை

உருத்திராக்கம் - சிவமணி,சுக்குமணி

உரூபம்,ரூபம் - உருவம்,வடிவம்

உரொக்கம்,ரொக்கம் - கைப்பணம்,இருப்பு,கையிருப்பு

உரோமம்,ரோமம் - மயிர்,முடி,குஞ்சி

உல்லாசம் - மகிழ்ச்சி,விளையாட்டு,களிப்பு,உள்ளக்களிப்பு

உவதி,யுவதி, - மங்கை,பதினாறாண்டுப் பெண்

ஊகம் - கருதல்,ஓர்தல்,கருத்து,நினைவு

ஊர்ச்சிதம்,ஊர்ஜ்ஜிதம் - உட்பொருளுணர்தல், நிலைப்படுதல்,உறுதி,கருங்குரங்கு

எசமானன்,எஜமான் - தலைவன்,முதல்வன்,முதலாளி

எந்திரம் - பொறி

எமன் - கூற்றுவன்,மறலி

ஏகதேசம் - ஒருபால்,ஒருபுடை,சிறுபான்மை

ஏகம் - ஒன்று,தனிமை

ஏகாந்தம் - தனிமை,ஒரு முடிவு

ஏகோபித்தல் - ஒன்றுபடுதல்

ஏடணை,ஏஷணை - விருப்பம்

ஐது,ஹேது - காரணம்

ஏக்கம்,ஐக்கியம் - ஒற்றுமை

ஐஸ்வர்யம்,ஐச்வரியம் - செல்வம்,பொருள்,திரு

ஐதீகம்,ஐதிகம் - உலகுரை

ஐம் பூதம்,பஞ்ச பூதம் - ஐந்து முதற்பொருள்

ஓமம்,ஹோமம் - வேள்வி

ஒளடதம்,ஒளஷதம்- மருந்து

களோகம் - வான் வட்டம்,வளி மண்டலம்

கடகம் - கைவளை,வளையம்

கடம் - கடம்,யானைக்கதுப்பு

கடாட்சித்தல் - அருளல்

கடாரம் - கொப்பரை,தேங்காய்

கடிகாரம் - நாழிகை வட்டில்,பொழுது காட்டுங்கருவி

கடிகை - நாழிகை,தாழ்க்கோல்

கடினசித்தம் - வன்னெஞ்சம்

கடினம் - வன்மை,கடுமை,வருத்தம்,கொடுமை

கடூரம்,கொடூரம் - கொடுமை

கட்டம்,கஷ்டம் - துன்பம்,வருத்தம்

கணம்,ஹணம் - குழாம்,கூட்டம்,தொகுதி,நொடிப்பொழுது

கணி - கோள் நூல், கோல் நூல் வல்லான்

கணிகை - பொதுமகள்

கணிசம் - அளவு,மேம்பாடு

கணிதம் - கணக்கு

கண்டம் - நிலப்பிரிவு,துண்டு,கட்டி,மிடறு,கழுத்து

கண்திட்டி,கண்திருஷ்டி - கண்ணேறு

கதம்பகம்,கதம்பம் - கூட்டம்,மணப்பொருட் கூட்டு,சேர்ந்தது,இணைத்தது

கதலி - வாழை

கதி - நடை,செலவு,வழி,புகலிடம்,பற்றுக்கோடு,நிலை

கனகம்,கநகம் - பொன்

கனவான்,கநவான் - பெரியோன்,பெருமையாளன்,பெருந்தகை

கனிஷ்டை,கநிஷ்டை - பின்னோள்,தங்கை

கன்னிகை,கந்நிகை - மணமாகாதவள்,இளம்பெண்

கந்மம்,கருமம் - தொழில்,வினை

கபடம்,கவடம்,கபடு - கரவு,படிறு,வஞ்சகம்,மோசம்,சூது,ஒளிப்பு

கபாலம் - தலையோடு,மண்டையோடு

கபோதி - குருடன்

கப்பம் - இறை

கமண்டலம் - நீர்க்குடுவை

கமலம் - தாமரை,நீர்

கம்பீரம் - உயர்தோற்றம்,பெருமை,ஆழம்,செருக்கு

கயம்,ஹயம் - குளம்,ஆழம்,யானை

கரகம் - வட்டில்,நீர்க்குடுவை

கரகோசம்,கரகோஷம் - கைதட்டுதல்

கரணம் - கருவி,ஐம்பொறி

கரம் - கை

கருச் சித்தல் - முழங்கல்,இரைதல்

கருணை - அருள்,இரக்கம்

கர்த்தா,கருத்தா - தலைவன்,வினைமுதல்,ஆக்கியோன்,நூலாசிரியன்,முதல்வன்,கடவுள்

கர்ப்பவதி - சூலி

கர்ப்பாசயம் - கருப்பை

கர்வம் - செருக்கு,இறுமாப்பு

கலாபம்,கலபம் - மயில்,மயிற்றோகை

கலி - வறுமை,துன்பம்

கலியாணம் - மனம்,மன்றல்,பொன்,மகிழ்ச்சி

கவளீகரித்தல்,கபளீகரம்,கபளீகரித்தல் - முற்றிலும் விழுங்குதல்,விழுங்குதல்

கவனம் - கருத்து நோக்கம்,உன்னித்தல்

கவாத்து - படைக்கலப் பயிற்சி,வெட்டி விடுதல்

கவி - செய்யுள்,புலவன்,பாட்டு

கவுளி,கெளளி - பல்லி

களேபரம் - குழப்பம்,உடல்,பிணம்

கற்பம் - ஊழிக்காலம்,நெடுவாழ்க்கை மருந்து

கனம் - சுமை,பளு,பளுவு

காசம் - ஈளை,ஈளைநோய்,இருமல் நோய்

கசாயம்,கஷாயம் - காவி

காஞ்சிரம் - எட்டி மரம்

காட்டம்,காஷ்டம் - விறகு,வெகுளி

காதகன் - கொலையாளி

காயசித்தி - நீடுவாழ்ப் பேறு

காயம் - உடல்,யாக்கை,வான்

காரிய கர்த்தா - வினைமுதல்வன்

காரியதரிசி - அமைச்சன்,செயலாளன்

கலாட்சேபம் - பொழுதுபோக்கல்,நாட்கழித்தல்,வாழ்க்கை

கால நியமம் - காலமுறை,காலக்கடன்,கால்,ஒழுங்கு

கிஸ்தி - திறை,வரி

கிரகணம்,கிராணம் - பற்றுதல்,பிடித்தல்

கிரகஸ்தம் - இல்லற நிலை

கிரகம் - வீடு,கோள்,பற்றுதல்,பிடிப்பு

கிரணம் - ஒளி,கதிர்

கிரந்தம் - நூல்,எழுத்து

கிரமம் - ஒழுங்கு,முறைமை

கிரயம் - விலை

கிராதன் - குறவன்,வேட்டுவன்

கிரி - மலை,பன்றி

கிரிகை - தொழில்,செயல்,வினை,சடங்கு

கிரிமி,கிருமி - உயிரி,பூச்சி,புழு

கிரீடம் - முடி

கிருஷி - பயிர்,உழவு,பயிர் செய்கை

கிலம் - கழிவு,அழிவு,சிறுமை

கிலேசம் - அச்சம்,கவலை,துன்பம்

கீதம் - இசை,பாட்டு,பாடல்,இசைப்பாட்டு

கீர்த்தனம்,கீர்த்தனை - புகழ்ச்சி,புகழ்ப்பா

கீலகம் - ஆணி,பொருத்து

குஞ்சரம் - யானை

குஷ்டம் - தொழு நோய்,பெரு நோய்

குணஷ்டை - தொல்லை,துன்பம்

குதர்க்கம் - அழிவழக்கு

குதூகலம்,குதுகலம் - பெருங்களிப்பு,பெருமகிழ்வு

குபேரன் - பெருஞ்செல்வன்,செல்வக்கடவுள்

குமரி,குமாரி - நங்கை,மணமாகாப்பெண்,புதல்வி,மகள்

கும்பம் - குடம்

குருகடாட்சம் - ஆசிரியனருட்பார்வை

குரோதம் - உட்பகை

குலாலன் - குயவன்

குலிசம் - வேற்படை

குன்மம் - சூலை,வயிற்று வலி

கேதம் - துன்பம்,இடர்,குற்றம்

கேவலம் - சிறுமை,தனிமை

கோகிலம் - குயில்

கோடம்,கோஷம்,கோஷ்டம் - முழக்கம்,பேரோசை

கோஷ்டி - கூட்டம்

கோடி - நூறு நூறாயிரம்

கோதண்டம் - வில்

கோளகை,கோளம் - உருண்டை,வட்டம்

கெளரவம் - மேன்மை,பெருமை

சக - கூட,உடன்

சகசம்,ஸகஸம் - இயற்கை,ஒற்றுமை

சகஸ்ரநாமம் - ஆயிரந்திருமொழி,ஆயிரந்திருப்பெயர்

சகமார்க்கம் - தோழமை நெறி

சகலம் - எல்லாம்

சகவாசம் - கூடவிருத்தல்,உடனுரைதல்,பழக்கம்,சேர்க்கை,நட்பு

சகா - தோழன்,துணை

சகாப்தம் - ஆண்டு,நூறாண்டு

சகாயம் - நயம்,நன்மை,மலிவு,பயன்,உதவி,துணை

சகி,சகீ - தோழி

சகிதம் - உடன்

சகுணம் - குணத்தோடு கூடியது

சகுந்தம் - கழுகு,பறவை

சகுனம் - குறி

சகோதரம் - உடன்பிறப்பு

சகோதரி - உடன்பிறந்தாள்

சக்கரம் - உருளை,வட்டம்

சக்தி - ஆற்றல்,வல்லமை,வலி

சங்கடம்,சங்கட்டம் - இக்கெட்டு,நெருக்கடி,இடர்,கண்மூடுதல்

சங்கிதை - தொகுதி,வரலாறு

சடுதி,சடிதி - விரைவு

சஷ்டியப்த பூர்த்தி - அறுபதாமாண்டு நிறைவு

சண்டப்பிரசண்டம் - மிகு விரைவு

சண்டமாருதம் - பெருங்காற்று,கடியகாற்று,புயற்காற்று

சண்டாளம் - தீமை,புலைத்தன்மை,நம்பிக்கை கேடு

சண்டாளர் - தீவினையாளர்,இழிஞர்

சண்டித்தனம் - முருட்டுத்தன்மை,முரட்டுத்தன்மை

சதகோடி - நூறு கோடி

சதசு - அவை

சதம் - நூறு நிலை

சதானந்தம் - இடையறா வின்பம்

சதி - இறைவி,அழிவு,வஞ்சனை,சூழ்ச்சி

சந்தகம் - எப்பொழுதும்

சந்தானம் - வழி,வழித்தொடர்பு

சந்தித்தல் - எதிர்படுதல்,கூடுதல்

சந்திரலோகம் - திங்கள் உலகு,அம்புலியுலகம்

சந்திரன் - பிறை,கலையோன்,இரவோன்,அலவன்,அல்லோன்

சந்து - முடுக்கு,இயங்கும் உயிர்,தூது,பிளப்பு,பொருத்து

சந்துட்டம்,சந்துஷ்டி,சந்தோஷம் - மகிழ்ச்சி

சந்தேகம் - ஐயம்,ஐயுறவு

சந்தோஷம் - மகிழ்ச்சி,உவகை,களிப்பு

சன்னதி,சந்நதி,சந்நிதானம் - திருமுன்

சந்நியாசம் - துறவு,துறவறம்

சபதம் - ஆணை,உறுதிமொழி,வஞ்சினம்

சபம்,ஜெபம் - உருவேற்றல்

சபலம் - நிறைவேறல்,வெற்றி,நடுக்கம்,ஏக்கம்,இச்சை,அவா

சபா,சபை - அவை,மன்றம்,கழகம்,அரங்கம்

சபித்தல் - தீமொழி கூறல்,சினந்துரைத்தல்

சமஷ்டி - தொகுதி,எல்லாம்

சமதை - ஒப்பு

சமர்த்தன்,சமத்தன் - வல்லான்,வல்லவன்,திறமையாளன்

சமஸ்தானம்,சமத்தானம் - அரசவை,தலை நகர்

சமம் - இணை,ஈடு,மட்டம்,போர்,நடு,ஓர்மை

சமரச தத்துவம் - பொதுநிலையுண்மை

சமரசம் - பொது,வேறுபாடின்மை,ஒற்றுமை

சமர்ப்பணம் - ஒப்பித்தல்,உயர்ந்தோர்க்குக் கொடுத்தல்

சமாதானம் - அமைதி,இணக்கம்,தணிவு,உடன்பாடு,தக்கவிடை

சமாதி - அமைதி,பிணக்குழி,பேசாதிருத்தல்,இறப்பு,மரித்தல்

சமாப்தம்,சமாப்தி - முற்றுப்பெற்றது

சமாராதனை - உளநிறைவு

சமி,ஷமி - பொறு

சமிதை - வேள்வி விறகு,உலர்ந்த குச்சி

சமீபம் - அருகு,அணமை,மருங்கு

சமீன்தார்,ஜமீந்தார் - நிலக்காரன்,பெருநிலக்கிழார்

சமுதாயம் - குமுகம்,கூட்டம்

சமுத்திரம் - கடல்

சமை,ஷமை - பொறுமை

சம்சாரம்,சம்ஸாரம் - குடும்பம்,இல்லாள்,இல்லத்தரசி

சம்பத்து - செல்வம்,பொருள்

சம்பந்தம -உறவு,பற்று,இயைபு,சார்பு,தொடர்பு,பொருத்தம்

சம்பிரதாயம் - தொல்வழக்கு,முன்னோர் முறை,பண்டை முறை

சம்பு ரேட்சணம் - தெளித்தல்

சம்பூரணம் - நிறைவு

சம்மதம் - உடன்பாடு,ஒப்புமை,இயைபு

சம்ரஷணை - பாதுகாப்பு

சயம்,ஜெயம் - வெற்றி

சரணம்,சரண் -அடைக்கலம்,வணக்கம்,கால்,திருவடி

சரணாகதி - புகலடைதல்,அடைக்கலம்

சராசரம்,ஜங்கமா - இயங்கியற் பொருள், நிலையியற் பொருள்

சரிதம்,சரிதை,சரித்திரம் - வரலாறு

சரீரம் - உடல்,யாக்கை,மெய்

சருமம்,சர்மம் - தோல்

சர்ப்பம் - பாம்பு

சர்வகலாசாலை -

பல்கழைக் கழகம்

சலதளம்- அரசமரம்

சலதாரை - நீர்க்கால்,நீரோட்டம்,மதகு

சலதோசம் - நீர்க்கோர்வை,தடுமம், நீர்க்கோவை

சல்லாபம் - உரையாடல்

சவம் - பிணம்

சவுகரியம்,செளக்கியம்,செளகரியம் -நலம்

சவுந்தரியம்,செளந்தரியம்,சவுந்தரம் - அழகு

செளபாக்கியம்,சவுபாக்கியம் - செல்வம்

சற்காரியம் - உற்பொருளினின்று தோன்றும் வினை

சற்குணம் - நல்லியல்பு

சனனம்,ஜனனம்,சனிப்பு,சன்மம் - பிறப்பு

சாகசம் - ஆற்றல்,துணிவு,நெருக்கிடை

சாகரம் - கடல்

சாகுபடி - பயிர் செய்தல்

சாகை,ஜாகை(உருது) - தங்குமிடம்

சாக்கிரதை,ஜாக்கிரதை - விழிப்பு,உன்னிப்பு,எச்சரிக்கை