Showing posts with label காங்கிரஸ். Show all posts
Showing posts with label காங்கிரஸ். Show all posts

Saturday, September 19, 2009

காங்கிரசுக்கு உயிர் கொடுக்க திருநாவுக்கரசர்


சு.திருநாவுக்கரசர், தமிழக அரசியலில் ஒரு சில திருப்புமுனைகள் ஏற்படுவதற்கு முக்கிய காரணகர்த்தாவாக இருந்தார் என்றால் அது மிகையாகாது. 1977 -முதல் அதிமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்து தனது தொகுதிக்கு(அறந்தாங்கி) சிறப்பாகப் பணியாற்றி நல்ல பெயர் எடுத்திருக்கும் ஓர் அபூர்வமான அரசியல்வாதி என்றே சொல்லலாம்.

1977 -முதல் முறையே துணை சபாநாயகர், மாநில தொழில் அமைச்சர், உணவு அமைச்சர், எதிர்க்கட்சித் துணைத்தலைவர், புதுக்கோட்டை நாடாளுமன்றத் தொகுதி எம்.பி, மத்திய தொலை தொடர்புத் துறை இணை அமைச்சர், ராஜ்யசபை உறுப்பினர் என்று பல்வேறு பொறுப்புகளில் இருந்து திறமப்பட பணியாற்றியவர். இவர் மீது சில விமர்சனங்களும் உண்டு. அதையும் தாண்டி ஓரளவிற்கு நல்ல அரசியல்வாதி என்று பெயரெடுத்துக் கொண்டிருப்பவர்.

எம்.ஜி.ஆர் இளைஞர் அணித் தலைவர் பதவி எம்.ஜி.ஆரால் வழங்கப்பட்டு பணியாற்றினார். எம்.ஜி.ஆர் மறைவிற்குப் பின்னர் இரண்டாம் இடத்தில் இருந்த நாவலர் இரா.நெடுஞ்செழியனை முதல்வர் பதவிக்கு வரவிடக்கூடாது என்கிற நோக்கத்திலும், ஜானகி எம்.ஜி.ஆர் முதல்வராக வந்தால் தான் நினைத்தை நடத்தலாம் என்கிற நோக்கத்திலும் திரு.இராம.வீரப்பன் அவர்கள் எம்.எல்.ஏக்களை ஜானகிக்கு ஆதரவாக வைட்டமின் சி யுடன் கடத்திய போது திரு. திருநாவுக்கரசு அவர்கள் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக எம்.எல்.ஏக்களை தடுத்துவைத்துத் தக்கவைத்துக் கொண்டிருந்தார். அப்போது திருநாவுக்கரசரோடு தோளோடு தோள் நின்று உறுதுணையாக இருந்தவர் தற்போதைய அமைச்சர் சாத்தூர் இராமச்சந்திரன் என்பதை அனைவரும் அறிவர். இவர்கள் இருவரையும் அப்போது இரட்டையர்கள் என்று அழைப்பார்கள்.

பெரும்பான்மையான வைட்டமின் சி மாத்திரைகளை இராம வீரப்பன் கோஷ்டி வைத்திருந்ததால் பெரும்பான்மையான எம்.எல்.ஏக்களை மயங்க வைக்க முடிந்தது. வீரப்பன் கோஷ்டியும் ஜெயலலிதா கோஷ்டியும் வைட்டமின் சி மாத்திரை பெட்டியோடு மோதியதால் திராவிட இயக்கத்தின் மூத்த தலைவர் நடமாடும் பல்கலைக்கழகம் டாக்டர் நாவலர் இரா.நெடுஞ்செழியன் அணி அடையாளம் தெரியாமல் போய் ஜெயலலிதா கோஷ்டியுடன் சேர்ந்து கொள்ளும் அவல நிலைக்கு ஆளானது அனைவருக்கும் தெரியும்.

அண்ணாவிற்கு அடுத்த இடத்தில் இருந்த நாவலர், கருணாநிதிக்கு அடுத்த இடத்தில் இருந்த நாவலர், எம்.ஜி.ஆருக்கு அடுத்த இடத்தில் இருந்த நாவலர், இறுதியாக ஜெயலலிதாவிற்கு அடுத்த இடத்தில் இருக்கும் நிலைக்கு ஆளானார். அவருக்கு திமுகவில் சேரும் எண்ணம் ஒரு போதும் வந்ததில்லை. அதற்கு பல காரணங்கள் உண்டு.

ஜெயலலிதா அரசியலுக்கு வந்த காலத்தில் அவரை பகிரங்கமாக எதிர்த்து, அதனால் எம்.ஜி.ஆரிடமே பகைத்துக் கொண்டு அதிமுகவை விட்டு வெளியேறி நமது கழகம் என்ற கட்சியை ஆரம்பித்த எஸ்.டி.எஸ்,மற்றும் பண்ருட்டி எஸ்.இராமச்சந்திரன் உள்ளிட்ட திராவிட இயக்கத்தின் மூத்த தலைவர்கள் ஜெயலலிதாவின் தலைமையை ஏற்று அவருக்காக தமிழகமெங்கும் ஆதரவு திரட்டினார்கள்.

இந்த சூழ்நிலையில் கே.எ.கிருஷ்ணசாமி,க.இராசாராம்,ப.உ.சண்முகம் உள்ளிட்ட திராவிட இயக்கத்தின் மூத்த தலைவர்கள் ஜானகி அம்மாளுக்கு உறுதுணையாக இருந்து அவரை முதலமைச்சராக்கி மகிழ்ந்தார்கள். ஒரு மாதம் கூட நீடிக்க விடாமல் ஜானகி அம்மையாரின் ஆட்சியை முதுகில் குத்தி வீட்டுக்கு அனுப்பிய பெருமை அப்போதைய காங்கிரஸ் பேரியக்கத்தையே சாரும்.

இந்த நிலையில் திருநாவுக்கரசர், சாத்தூர் இராமச்சந்திரன் உள்ளிட்ட அப்போதைய இளம் தலைவர்கள் ஜெயலலிதாவை தமிழகம் எங்கும் அழைத்துச் சென்று கூட்டங்கள் போட்டு பிற்காலத்தில் தமிழகத்திற்கு ஜெயலலிதா முதல்வராக ஒரு காரணமாக அமைந்து விட்டார்கள் . ஆனால் ஜெயலலிதா முதல்வராகும் தருணத்தில் திரு. திருநாவுக்கரசர் அவர்களை அதிமுகவை விட்டு நீக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜ்ய சபையில் ஈழத் தமிழர்களுக்காக, இலங்கையில் மீறப்படும் மனித உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் தமிழகத் தலைவர்களுள் முக்கியமானவர் திரு.திருநாவுக்கரசர். இன்று ஈழத்தமிழர்களின் படுகொலையையும், அவர்கள் மீதான மனித உரிமை மீறலையும் திட்டமிட்டு நிறைவேற்றிவிட்டு, அதாவது இதை நிகழ்த்த சிங்கள அரசுக்கு எல்லா வகையிலும் உடந்தையாய் இருந்து உதவிகள் செய்துவிட்டு, மூன்று இலட்சம் ஈழத் தமிழர்களை முள்கம்பி வேலிக்குள் அடைத்து வைத்து, வீடு,வாசல், சொத்து, நில புலன்களை இழந்து நிற்கதியாக நிற்க வைத்து ஒன்றும் தெரியாத பாப்பா மாதிரி வேடிக்கை பார்க்கும் இந்திய தேசிய காங்கிரசில் சேரப்போகிறார் என்கிற செய்தி வேதனை அளித்தாலும், இவரை வைத்து தமிழகத்தில் பிழைப்பு நடத்தத் துடிக்கும் காங்கிரஸ், ஏன் எம் தமிழர்களுக்கு நல்ல பொழுது விடியவிட்டு பிழைப்பை தொடரக்கூடாது அல்லது மாறு வேடம் போட்டு பிழைப்பு நடத்துவதற்கு பதிலாக வேறு ஏதும் செய்து பிழைத்தால் என்ன?
காங்கிரஸ்காரர்களின் அழைப்பை ஏற்று திரு திருநாவுக்கரசர் காங்கிரசில் சேர்ந்தால், அவரும் சராசரி அரசியல் பிழைப்புவாதிகளின் வரிசையில் சேர்ந்து கொள்கிறார் என்பது திண்ணம்.

Friday, May 8, 2009

காங்கிரஸ் சுதர்சனத்திடம் கொள்ளிமலை குப்பு சரமாரி கேள்வி பதில்


ராமர் பாலத்தைக் காப்போம் என கூறி வரும் அதிமுக மதச்சார்பற்ற கட்சி அல்ல.
உங்க மத சார்பின்மையை நினைச்சு நாடே சிரிக்குது சாமியோவ்!
நீங்க இன சார்பின்மையும் கடை பிடிப்பதாகக் கேள்விப் படுறோம். அதான்...! தமிழின சார்பின்மை.

அக்கட்சியுடன் உறவு வைப்போம் என காங்கிரஸ் தலைவர்கள் யாரும் சொல்லவில்லை என்று தமிழக சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் சுதர்சனம் கூறியுள்ளார்.

அப்படியா?
நிறைய வாசியுங்கள்!
சுய நினைவோடு தான் சொல்றேளா? இல்ல உங்களுக்கு செலக்டிவ் அம்னீசியாவா?

சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தமிழகத்தில் ஜனநாயக முற்போக்கு கூட்டணி 40 இடங்களிலும் வெற்றி பெறும் என்று மிகத் தெளிவாக ராகுல்காந்தி கூறியுள்ளார்.

கண்டிப்பா வெற்றிபெறும். வரும் உள்ளாட்சி தேர்தலிளில் காங்கிரசை உள்ளடக்கிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி எதிர்க்கட்சிகளைத் தோற்கடித்து 40 கவுன்சிலர்களை வென்றெடுக்கும் என்பது திண்ணம். வேட்பாளர்கள் தங்களது சொந்த செல்வாக்கால் வெற்றி பெறுவார்கள். காங்கிரசால் அல்ல. எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.
இதை வட நாட்டுக்காரன் ராகுல் சொன்னா நம்புவிய. நீங்க தமிழ் நாட்டுக் காரர் தானே உங்களுக்குத் தெரியாதா? இல்ல தெரியாத மாதிரி நடிக்கிறியளா?
பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விக்கு அவர் பதிலளித்து பேசியபோதுதான், மதச்சார்பற்ற கட்சிகளுக்கு காங்கிரஸ் கட்சியின் கதவுகள் திறந்தே இருக்கிறது என்று குறிப்பிட்டாரே தவிர, அ.தி.மு.க.வுடன் உறவு வைப்போம் என்று சொல்லவில்லை.
நீங்க யாரோடு வேணும்னாலும் உறவு வைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு என்ன கணக்கா இருக்கு . ஆப்ட்ரால் நீங்க அரசியல் பிழைப்பு தானே நடத்துரிய!? உங்க கதவு திறந்து தான் இருக்கும்.

அதிமுக மதச்சார்பற்ற கட்சி என்று சொல்கிறார்கள். ராமர் பாலத்தை பாதுகாப்போம், சேது சமுத்திர திட்டத்தை நிறுத்துவோம் என்று ஜெயலலிதா கூறிவருகிறார். இதில் இருந்தே அ.தி.மு.க. மதசார்பற்ற கட்சி இல்லை என்பது நிரூபணமாகியுள்ளது.
உண்மையில் நீங்கதான் சாமி மத சார்புள்ள கட்சி. எங்களுக்கு செலெக்டிவ் அம்னீசியா கிடையாது. காங்கிரஸ் ஆட்சியில் நரசிமராவ் தலைமையில் எஸ்.பி.சவான் முன்னிலையில் பாபர் மசூதி இடிக்கப் பட்டது என்பது எல்லோருக்கும் தெரியும். அதை மறைக்காதீர்கள். பா.ச.க ஆட்சியில் பாபர் மசூதியும் இடிக்கப் படவில்லை. ராமர் கோவிலும் கட்டப் படவில்லை. இப்ப சொல்லுங்க யார் மதசார்புள்ளவர்கள்?அப்படியும் நாங்கள் மதசார்பற்றவர் என்று சொல்லிக் கொள்கிறீர்களா? ஏற்றுக் கொள்கிறோம். நீங்க கையாலாகாதவர்கள் என்று நீங்களே ஏற்றுக் கொள்ளுங்கள். பாபர் மசூதி இடிக்கப் படுவதை உங்களால் தடுக்க முடியவில்லையே?. உங்களால் முடியாது. உங்களுக்கு ஆட்சியெல்லாம் லாயக்கு பட்டு வராது சாமியோவ்!?

16 ஆண்டு பிரதமராக இருந்த நேருவுக்கே டெல்லியில் சொந்தமாக வீடு கிடையாது. இந்திரா காந்தி, சோனியா காந்தி, ராஜீவ்காந்திக்கும் டெல்லியில் சொந்த வீடு கிடையாது. சோனியா காந்தி அரசு வீட்டில் தான் இருக்கிறார்.
அவரது சொத்து கணக்கும் வெளியிடப்பட்டது.
அப்படியா?
நீங்கெல்லாம் ரொம்ப ஏழை என்று எங்கெளுக்கெல்லாம் தெரியும். பாவம் நீங்கள். அதை எங்க கையில சொல்லாதீங்க. சொல்லும் போது நீங்க வெக்கப் படுறது தெரியுது.
நீங்க சொல்றபடி நீங்க எல்லாம் தொடர்ந்து மக்கள் வரிப்பணத்தில் அரசாங்கத்து சொத்தில் தான் வாழுறிய! ஒத்துக்கிட்டதுக்கு நன்றி சாமியோவ்!

ஆனால், அதிமுக. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவோ, தேர்தல் பிரசாரத்தின்போது, எனக்கு எதுவும் இல்லை என்று கூறிவருகிறார். அவரது சொத்து கணக்கு எவ்வளவு என்பதை உங்கள் பார்வைக்கே விட்டுவிடுகிறேன்.
இதைக் கூட மக்களுக்கு எடுத்துச் சொல்ல உங்களுக்கு அலுப்பா? அதையும் மக்கள் தான் கண்டு பிடிக்கனுமா? இவ்வளவு அலுப்புப் படும் உங்களுக்கு எதுக்கு பதவி? மக்கள் பணி? பேசாம வூட்டாண்ட இருங்க சாமியோவ்!

அ.தி.மு.க.வில் வலுவான பிரசாரக்காரர்கள் இல்லை. அதனால், சினிமாக்காரர்களை வாடகைக்கு பிடித்து பிரசாரத்தில் ஈடுபடவைக்கிறார்கள்.
ஆமாமா! நீங்க சொல்றது சரிதான். காங்கிரசில் கூட நீங்க தொண்டர்களை வாடகைக்குதானே எடுக்குரிய! உங்கள்ட்ட ஏது தொண்டர்கள்?

அது மக்களிடம் எடுபடாது. தமிழர்கள் புத்திசாலிகள். யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது அவர்களுக்கு தெரியும்.
கண்டிப்பா! தமிழர்கள் நல்லா தெரிஞ்சு வச்சுருக்காங்க! நீங்க பண்ணுன இனப் படுகொலையையும்,துரோகத்தையும்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் 5 ஆண்டு கால சாதனைகளையும், தி.மு.க.வின் 3 ஆண்டுகால சாதனைகளையும் மனதில் வைத்து மக்கள் வாக்களிப்பார்கள் என்றார் சுதர்சனம்.
ஆம்...! நல்ல சாதனைகள் எல்லாம் மனசுல நிக்குது,
இலங்கை இனப் படுகொலை.
பீகார் கலவரம்,
மகாராட்டிர கலவரம்,
அசாம் கலவரம்

கர்நாடக கலவரம் பிளஸ் காவிரி துரோகம்.
பெரியாறு துரோகம்
ஒகனேக்கல் துரோகம்

அணு ஒப்பந்தம் என்ற பெயரில் இந்தியாவை அமெரிக்காவிடம் அடகு வைத்தது,

இலங்கை அரசுடன் கள்ள உறவு கொண்டு ஒட்டுமொத்த தமிழினத்துக்குத் துரோகம்.

இப்படி நிறைய இருக்கு சாமியோவ்!



நன்றி: கொள்ளிமலை குப்பு



Monday, May 4, 2009

இந்தியா போர்நிறுத்தம் செய்யச் சொல்லவில்லை - கோத்தாபய ராஜபக்ஷே சொல்கிறார்

இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தவில்லை என்று அந் நாட்டு பாதுகாப்புத் துறை செயலாளரும் அதிபர் ராஜபக்சவின் சகோதரருமான கோதபய மீண்டும் தெரிவித்துள்ளார்.


இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், வெளியுறவுத் துறைச் செயலாளர் சிவசங்கர் மேனன் ஆகிய இருவரும் கடந்த மாதம் இலங்கைக்கு திடீர் பயணம் மேற்கொண்டனர். அதிபருடன் அவர்கள் பேச்சு நடத்தினர். அவருடன் நடத்திய பேச்சு குறித்து விவரம் எதுவும் அப்போது தெரிவிக்கப்படவில்லை.

இந்நிலையில் ஒரு ஆங்கில நாளிதழுக்கு கோதபய பேட்டி அளித்துள்ளார்.

அதில், கூட்டணிக் கட்சியான திமுகவின் நிர்பந்தம் காரணமாகவே இந்திய அரசு இலங்கைக்கு நெருக்குதல் அளித்து வருவதாக செய்திகள் வெளியாவது குறித்த கேளிவிக்கு பதிலளித்த அவர்,

சண்டை நிறுத்தம் தொடர்பாகவோ அல்லது விடுதலைப் புலிகளுக்கு எதிரான ராணுவ தாக்குதலை நிறுத்துவது குறித்தோ இந்திய அதிகாரிகள் எங்களை வற்புறுத்தவில்லை. அரசின் கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு இடம்பெயர்ந்த தமிழர்களுக்கு மனிதாபிமான உதவிகள் வழங்குவது தொடர்பாகவே அவர்கள் பேச்சு நடத்தினர்

விடுதலைப் புலிகள் மீதான ராணுவ நடவடிக்கையை நிறுத்துவது தொடர்பாக இலங்கைக்கு இந்திய அதிகாரிகள் எவ்வித நெருக்குதலும் தரவில்லை. விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டில் உள்ள அப்பாவி மக்களை பத்திரமாக மீட்பது தொடர்பாகவே அவர்கள் ஆலோசனை நடத்தினர்.

போர் பகுதியிலிருந்து, அரசு கட்டுப்பாட்டுப் பகுதிக்கு தஞ்சம் புகுந்த தமிழர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள வசதிகள் குறித்து இந்திய அதிகாரிகள் இருவரும் அப்போது திருப்தி தெரிவித்தனர். மேலும் இந்தியா சார்பில் நிவாரண உதவியாக ரூ.200 கோடி அளிக்கப்படும் என்று உறுதியளித்தனர் என்றார்.

அமெரிக்கா, பிரிட்டன், கனடா மற்றும் பிரான்ஸ் ஆகிய மேற்கத்திய நாடுகளும் புலம்பெயர்ந்த தமிழர்களின் வாக்குகளை கருத்தில் கொண்டே போர் நிறுத்தம் செய்யுமாறு இலங்கைக்கு நெருக்குதல் அளிக்கின்றன. புலம்பெயர்ந்த மக்கள் அளிக்கும் நிதியை அந்நாட்டு அரசியல் கட்சிகள் பெற்றுக் கொள்கின்றன. விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை காப்பாற்ற வேண்டும் என்பதே அவர்களது குறிக்கோள் என்றார் கோதபய.

இதன்மூலம் நாராயணன், மேனன் ஆகியோரை வைத்துக் கொண்டு மத்திய அரசு போர் நிறுத்த விஷயத்தில் தமிழகத்தை ஏமாற்றி வருவது மீண்டும் தெள்ளத் தெளிவாகிறது.


நன்றி: தட்ஸ் தமிழ்

Saturday, May 2, 2009

கொடுமையை நிறுத்துங்கடா, பாவிகளா!

துயரத்தில் இருக்கும் ஈழத் தமிழரை துடைத்தொழிக்க வஞ்சக இந்திய காங்கிரஸ் அரசு, கள்ளத்தனமாக அனுப்பி வந்த ராணுவத் தளவாடங்களை இப்போதெல்லாம் வெளிப்படையாக அனுப்பத் தொடங்கிவிட்டது. 80 லாரிகளில் இலங்கைக்கு அனுப்புவதற்காக கொச்சி துறைமுகத்துக்கு அனுப்பப் பட்ட ஆயுதங்களை பவானி அருகே பொதுமக்கள் வழி மறித்திருக்கிறார்கள்.

உணர்வுள்ள ஒரே திராவிடர்கழகம் பெரியார் திராவிடர் கழகம் தனது எதிர்ப்பைக் காட்டியிருக்கிறது. அதன் தலைவர்களில் ஒருவரான திரு இராமகிருட்டிணன் உள்ளிட்ட 30 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப் பட்டிருக்கின்றனர். சன் தொலைக் காட்சியின் செய்தியாளரும், மற்ற செய்தியாளர்களும் தாக்கப் பட்டிருக்கின்றனர்.

இது பற்றிய செய்தி.

Friday, May 1, 2009

இனப்படுகொலை நடத்தியது நாங்கள் தான், பிரணாப் ஒப்புதல் வாக்குமூலம்

சிங்கள ராணுவத்திற்கும், தனி நாடு கேட்டு போராடும் விடுதலை புலிகளுக்கும் கடந்த 30 வருடங்களாக நடந்து வரும் போரில் சில சமயம் ராணுவத்திற்கு பின்னடைவும் சில சமயம், விடுதலைபுலிகளுக்கு
பின்னடைவும் ஏற்பட்டு கொண்டு இருந்தது. ஆனால் கடந்த வருடம் ஆரம்பத்தில் சிங்கள அரசாங்கம், ஒரு தலை பட்சமாக போர் நிறுத்த அறிவிக்கையை ரத்து செய்துவிட்டு விடுதலை புலிகளின் மீது போர் தொடுத்தது,
கடந்த வருடம் ஜனவரியில் ஆரம்பித்த இந்த போர் நடவடிக்கை இரண்டு தரப்பிற்கு கடுமையான இழப்புகளை அடுத்து, விடுதலை புலிகளின் பெருவாரியான இடங்களை சிங்கள ராணுவம் கைப்பற்றியது. சிங்கள ராணுவத்தினை வழி நடத்துவது இந்தியாதான், அதற்கு பொருளாதார உதவி, ஆயுதம், போர் நுணுக்கம், உளவுத்துறை உதவி, போர் வீரர்கள் என பல விதத்தில் சிங்கள அரசுக்கு இந்திய உதவி செய்ததாக பத்திரிக்கையிலும், தமிழக அரசியல்வாதிகளும் கூறிவந்தனர்.
ஆனால் இதை டில்லி வாலாக்களும் தமிழக காங்கிரஸ் தலைவர்களும் மறுத்து வந்தனர். சில சமயங்களில் இந்தியாவின் பாதுகாப்பு மந்திரியான எ.கே.அந்தொனியும் இந்தியா சிங்கள ராணுவத்திற்கு உதவில்லை என்று கூறியிருந்தார். மேலும் இராணுவ அதிகாரிகள் தமிழகம் வரும் போதெல்லாம், ராணுவத்தை கொடுத்து உதவவில்லை என்று அறிக்கைவிட்டு சென்றனர். இந்த நிலையில் சிங்கள ராணுவத்தில் இந்திய வீரர்கள் உள்ள தகவலை பல ஆங்கில பத்திரிக்கைகள் வெளியிட்டன.
இதனை அடுத்து வெளியுறவு துறையும், பாதுகாப்பு துறையும் சேர்ந்து ஒப்பந்தபடி நாங்கள் ஆலொசனைகள் தான் வழங்கினோம், கனரக ஆயுதங்கள் எதுவும் கொடுக்கவில்லை என்று சொல்லி வந்தது. தற்சமயம் புலிகளை மிகவும் குறைந்த பரப்பளவிற்கு நெருக்கிவிட்டது. மேலும் உலக அளவில் நெருக்கடிக்கு இந்தியா, சிங்கள அரசாங்கம் இரண்டுமே ஆளாகிவிட்டது. இந்த ஒரு சூழ்நிலையில் சிங்கள் ராணுவத்தில் இந்தியாவின் பங்கு பற்றி என்.டி.டி.விக்கு மத்திய வெளியுறவுத்துறை மந்திரி பிரணாப் முகர்ஜி பேட்டி ஒன்று அளித்தார். அதில் அவர் கூறியதாவது:-
சிங்கள அரசாங்கம் எங்களது நண்பர்கள், அவர்களுக்கு உதவ வேண்டியது எங்களது கடமை, மேலும் தெற்காசியாவில் தீவிரவாத செயல்களை அடக்கும் பணியில் நாங்களும் இணைந்து செயல்பட வேண்டிய கட்டாயம் இந்தியாவிற்கு உண்டு. போராளிகளால் இந்தியாவிற்கும் அச்சுறுத்தல்கள் உண்டு இதன் காரணமாக நாங்கள், ஆயுத உதவிகள் வழங்கி வந்தோம்.
இதனிடையில் புலிகளுக்கு சில அமைப்புகள் பெரிய அளவில் கனரக ஆயுதங்கள், மற்றும் தொழில் நுட்ப உதவிகள் வழங்குவது பற்றி எங்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனால் சிங்களராணுவத்திற்கு பெரும் இழப்பு ஏற்பட்டு வருவதோடு, எங்களுக்கு(இந்தியாவிற்கும்) எதிர்காலத்தில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புண்டு. இந்த காரணத்தினால் இந்தியா நேரடியாக போராளிகளுடன் போரிடவேண்டிய தேவை ஏற்பட்டு விட்டது.
நாங்கள் தீவிரவாத செயல்களை முடக்க ஒரு நடவடிக்கையாகத்தான் இந்த போரை வழிநடத்தினோம். ஆப்கான் மற்றும் ஈராக்கில் அமேரிக்க ராணுவம் மூக்கை நுழைக்கும் என்றால் நாங்கள் எங்கள் அருகில் உள்ள நட்பு நாட்டின் தீவிரவாத செயல்களை நிறுத்த தீவிர நடவடிக்கைகளில் ஏன் ஈடுபடக்கூடாது?
இவ்வாறு என்.டி.டி.விக்கு அளித்த ஒரு பேட்டியில் பிரணாப் முகர்ஜி சிங்கள போரில் இந்திய பங்கு பற்றி கூறினார்.

பிரணாப் முகர்ஜி ஐயா!

உங்களுக்கு ஒரு பூ..................................................................................!


உங்கள நம்பிகிட்டு ஜால்சாப்பு பண்ணுனவங்களுக்கு

ஓர் ஆயிரம்

பூ..................................................................................!


இந்த வெண்ணைகளை இந்தத் தேர்தலில்

திண்ணையை விட்டு காலி செய்யுங்கள்!


பொய் சொல்லிப் பிழைப்பவர்களுக்கு போசனம்

கிடைக்காது என்பது எங்கள் தமிழ் பழமொழி!

ஓட்டுக்காக போர்நிறுத்தம்

செய்தேன் என்று பேசும்

வெக்கங்கெட்டவர்களை

என்னவென்று சொல்வது..........?









Friday, April 24, 2009

படுகொலை செய்தவர்களுக்கு எளவு வீட்டில் என்ன வேலை?

இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய உத்தரவிடாமல், காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியாகாந்தி, பிரதமர் மன்மோகன், அயலுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி ஆகியோர் தேர்தலில் வாக்குக்கேட்டு தமிழகம் வரக்கூடாது என்று எச்சரிக்கை விடுத்துள்ள தமிழ் திரையுலகம், தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் தங்கபாலு, மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோருக்கு பொதுமக்கள் வாக்களிக்கக் கூடாது என்றும் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.


இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் படுகொலையை செய்யப்படுவதை கண்டித்து போராடுவதற்காக, தமிழ் திரையுலகினர் சார்பில் திரையுலக தமிழீழ ஆதரவு இயக்கம் என்ற அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. இதன் சார்பில் சென்னை பிலிம் சேம்பர் வளாகத்தில் இன்று 'தொடர் முழக்க போராட்டம் நடைபெற்றது. காலை 9 மணிக்கு தொடங்கிய இந்த போராட்டம் இன்று இரவு 7 மணிவரை நடைபெற்றது.

இப்போராட்டத்தில் இயக்குனர்கள் பாரதிராஜா, பாலச்சந்தர், சசிகுமார், வி.சி.குகநாதன், முருகதாஸ், அமீர், வசந்த், மனோஜ்குமார், ஹரி, ஜீவன், வசந்தபாலன், மனோபாலா, ஆர்.சுந்தர்ராஜன், ஆதி, சிவா, பாலுமகேந்திரா, வி.சேகர், வெற்றிமாறன், கே.எஸ்.அதியமான், எழில், கதிர். தங்கர்பச்சான், கிருஷ்ண குமார், தயாரிப்பாளர்கள் டி.ஜி. தியாகராஜன், சோழா பொன்னுரங்கம், புலவர் புலமைபித்தன், நடிகர்கள் சத்யராஜ், வடிவேலு, பார்த்திபன், எஸ்.ஜே.சூர்யா, சேரன், மணிவண்ணன், கஞ்சா கருப்பு, கவிஞர்கள் மேத்தா, சினேகன், வசனகர்த்தா பிரபாகர், நடிகைகள் ரோகினி, புவனேஸ்வரி உள்ளிட்ட ஏராளமான திரையுலகினர் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில் சென்னை உயர்நீதி மன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் பால் கனகராஜ், தமிழக வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் பிரபாகரன், மூத்த வழக்கறிஞர் கருப்பன் உள்ளிட்ட ஏராளமான வழக்கறிஞர்கள், இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் அமைப்பாளர் பழ.நெடுமாறன் மற்றும் தமிழருவி மணியன், இலங்கை எம்.பி. சிவாஜிலிங்கம் மற்றும் திரையுலகினர், தமிழ் ஆர்வலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் கலந்துக்கொண்டனர்.

இக்கூட்டத்தின் முடிவில் இயக்குனர்கள் சங்கத் தலைவர் பாரதிராஜா உரையாற்றினார். அப்போது, 'திரையுலக தமிழீழ ஆதரவு இயக்கம்' சார்பில் இரண்டு தீர்மானங்களை அவர் வெளியிட்டார்.

தீர்மானம் 1 :
மத்தியில் உள்ள ஆளும் கட்சியினர் இலங்கையில் நடைபெற்றுவரும் போரை நிறுத்த உத்தரவிட்ட பின்னர், தமிழகத்தில் வந்து வாக்கு கேட்பது தான் நியாயமானது. எனவே, இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய உத்தரவிடாமல், காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியாகாந்தி, பிரதமர் மன்மோகன், அயலுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி ஆகியோர் தேர்தலில் வாக்குக்கேட்டு தமிழகம் வரக்கூடாது. அதையும் மீறிவந்தால் எங்களது முழு எதிர்ப்பை காட்டுவோம். அப்போது, அவர்களது நிழல் கூட துணையாக நிற்காது விலகி விடும் என்று அவர்களுக்கு அறிவுறுத்துகிறோம். எனவே, எங்களது உணர்வுகளை புரிந்துகொண்டு இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய உடனடியாக உத்தரவிட வேண்டும்.

தீர்மானம் 2 :
மத்தியில் ஆட்சியில் இருக்கும் அரசின் தமிழகத் தலைவர் தங்கபாலு போட்டியிடும் சேலம் தொகுதியிலும், உயர் பதவியில் போதுமான அதிகாரத்தில் இருந்தும் எதுவும் செய்யாமல் மவுனம் காத்த மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் போட்டியிடும் சிவகங்கை தொகுதியிலும், தமிழனப் படுகொலையை நியாயப்படுத்தி வரும் மற்றொரு மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிடும் ஈரோடு தொகுதியிலும் உள்ள பொதுமக்கள், தங்களது எதிர்ப்புகளை வெளிப்படுத்தும் விதமாக இவர்களுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.

இந்த தொகுதிகளில் தமிழ் திரையுலகின் இன உணர்வுள்ள அத்தனை கலைஞர்களும் தங்கள் சொந்த பொறுப்பில் மக்களை சந்தித்து, இந்த 3 பேருக்கும் வாக்களிக்க வேண்டாம் என்று மக்களை கேட்டுக்கொள்வார்கள். இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Saturday, April 18, 2009

காங்கிரஸ்காரர்களால் தங்கபாலு மருவாதி செய்யப்பட்டார் - படம்


படம் :தினபூமி

காங்கிரஸ்காரர்களால் தங்கபாலு மருவாதி செய்யப்பட்டார்
சிவகாசியில் நடந்த நிகழ்வு
தொண்டர் தலைவருக்காற்றுங்கடன் வானுறையும்
வையத்துள் வைக்கப்படும்




Thursday, April 16, 2009

தோல்வியுறப்போகும் தமிழக காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு

தமிழகம் மற்றும் புதுவையில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 16 தொகுதிகளில் 15 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.

ஆனால், காஞ்சிபுரத்துக்கு வேட்பாளரை இறுதி செய்வதில் சிக்கல்(சிக்கலுக்கு காங்கிரசில் குறைவா என்ன?) நிலவுவதால் அந்தத் தொகுதிக்கு மட்டும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.

வேட்பாளர்கள் விவரம்..

1. சேலம் - கே.வி. தங்கபாலு.
2. சிவகங்கை - ப.சிதம்பரம்.
3. ஈரோடு - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்
4. திண்டுக்கல் - என்.எஸ்.வி.சித்தன்.
5. கோவை - ஆர்.பிரபு.
6. திருப்பூர் - கார்வேந்தன்.
7. ஆரணி- எம். கிருஷ்ணசாமி.
8. திருச்சி - சாருபாலா தொண்டைமான்.
9. தேனி - ஜே.எம். ஆரூண்.
10. மயிலாடுதுறை - மணிசங்கர அய்யர்.
11 நெல்லை - ராமசுப்பு.
12 விருதுநகர் - சுந்தர வடிவேல்.
13 தென்காசி - வெள்ளைப்பாண்டி.
14. கடலூர் - கே.எஸ்.அழகிரி.
15.புதுச்சேரி - நாராயணசாமி.

காஞ்சிபுரத்துக்கு வேட்பாளர் பின்னர் அறிவிக்கப்படுவார் என்று கூறப்பட்டுள்ளது.

Saturday, April 4, 2009

திருநாவுக்கரசர் காங்கிரசிலா? -பிழைப்புவாதத்தின் இன்னொரு உச்சம்



சு.திருநாவுக்கரசர், தமிழாக அரசியலில் ஒரு சில திருப்புமுனைகள் ஏற்படுவதற்கு முக்கிய காரணகர்த்தாவாக இருந்தார் என்றால் அது மிகையாகாது. 1977 -முதல் அதிமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்து தனது தொகுதிக்கு(அறந்தாங்கி) சிறப்பாகப் பணியாற்றி நல்ல பெயர் எடுத்திருக்கும் ஓர் அபூர்வமான அரசியல்வாதி என்றே சொல்லலாம்.

1977 -முதல் முறையே துணை சபாநாயகர், மாநில தொழில் அமைச்சர், உணவு அமைச்சர், எதிர்க்கட்சித் துணைத்தலைவர், புதுக்கோட்டை நாடாளுமன்றத் தொகுதி எம்.பி, மத்திய தொலை தொடர்புத் துறை இணை அமைச்சர், ராஜ்யசபை உறுப்பினர் என்று பல்வேறு பொறுப்புகளில் இருந்து திறமப்பட பணியாற்றியவர். இவர் மீது சில விமர்சனங்களும் உண்டு. அதையும் தாண்டி ஓரளவிற்கு நல்ல அரசியல்வாதி என்று பெயரெடுத்துக் கொண்டிருபபவர்.

எம்.ஜி.ஆர் இளைஞர் அணித் தலைவர் பதவியை எம்.ஜி.ஆரால் வழங்கப்பட்டு பணியாற்றினார். எம்.ஜி.ஆர் மறைவிற்குப் பின்னர் இரண்டாம் இடத்தில் இருந்த நாவலர் இரா.நெடுஞ்செழியனை முதல்வர் பதவிக்கு வரவிடக்கூடாது என்கிற நோக்கத்திலும், ஜானகி எம்.ஜி.ஆர் முதல்வராக வந்தால் தான் நினைத்தை நடத்தலாம் என்கிற நோக்கத்தில் திரு.இராம.வீரப்பன் அவர்கள் எம்.எல்.ஏக்களை ஜானகிக்கு ஆதரவாக வைட்டமின் சி யுடன் கடத்திய பொது திரு. திருநாவுக்கரசு அவர்கள் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக எம்.எல்.ஏக்களை தடுத்துவைத்துத் தக்கவைத்துக் கொண்டிருந்தார். அப்போது திருநாவுக்கரசரோடு தோளோடு தோள் நின்று உறுதுணையாக இருந்தவர் தற்போதைய அமைச்சர் சாத்தூர் இராமச்சந்திரன் என்பதை அனைவரும் அறிவர். இவைகள் இருவரையும் அப்போது இரட்டையர்கள் என்று அழைப்பார்கள்.

பெரும்பான்மையான வைட்டமின் சி மாத்திரைகளை இராம வீரப்பன் கோஷ்டி வைத்திருந்ததால் பெரும்பான்மையான எம்.எல்.ஏக்களை மயங்க வைக்க முடிந்தது. வீரப்பன் கோஸ்டியும் ஜெயலலிதா கோஸ்டியும் பணப்பெட்டியோடு மோதியதால் திராவிட இயக்கத்தின் மூத்த தலைவர் நடமாடும் பல்கலைக்கழகம் டாக்டர் நாவலர் இரா.நெடுஞ்செழியன் அணி அடையாளம் தெரியாமல் போய் ஜெயலலிதா கோஷ்டியுடன் சேர்ந்து கொள்ளும் அவல நிலைக்கு ஆளானது.

அண்ணாவிற்கு அடுத்த இடத்தில் இருந்த நாவலர், கருணாநிதிக்கு அடுத்த இடத்தில் இருந்த நாவலர், எம்.ஜி.ஆருக்கு அடுத்த இடத்தில் இருந்த நாவலர், இறுதியாக ஜெயலலிதாவிற்கு அடுத்த இடத்தில் இருக்கும் நிலைக்கு ஆளானார். அவருக்கு திமுகவில் சேரும் எண்ணம் ஒரு போதும் வந்ததில்லை. அதற்கு பல காரணங்கள் உண்டு.

ஜெயலலிதா அரசியலுக்கு வந்த காலத்தில் அவரை பகிரங்கமாக எதிர்த்து, அதனால் எம்.ஜி.ஆரிடமே பகைத்துக் கொண்டு அதிமுகவை விட்டு வெளியேறி நமது கழகம் என்ற கட்சியை ஆரம்பித்த எஸ்.டி.எஸ்,மற்றும் பண்ருட்டி எஸ்.இராமச்சந்திரன் உள்ளிட்ட திராவிட இயக்கத்தின் மூத்த தலைவர்கள் ஜெயலலிதாவின் தலைமையை ஏற்று அவருக்காக தமிழகமெங்கும் ஆதரவு திரட்டினார்கள்.

இந்த சூழ்நிலையில் கே.எ.கிருஷ்ணசாமி,க.இராசாராம்,ப.உ.சண்முகம் உள்ளிட்ட திராவிட இயக்கத்தின் மூத்த தலைவர்கள் ஜானகி அம்மாளுக்கு உறுதுணையாக இருந்து அவரை முதலமைச்சராக்கி மகிழ்ந்தார்கள். ஒரு மாதம் கூட நீடிக்க விடாமல் ஜானகி அம்மையாரின் ஆட்சியை முதுகில் குத்தி வீட்டுக்கு அனுப்பிய பெருமை அப்போதைய காங்கிரஸ் பேரியக்கத்தையே சாரும்.

இந்த நிலையில் திருநாவுக்கரசர், சாத்தூர் இராமச்சந்திரன் உள்ளிட்ட அப்போதைய இளம் தலைவர்கள் ஜெயலலிதாவை தமிழகம் எங்கும் அழைத்துச் சென்று கூட்டங்கள் போட்டு பிற்காலத்தில் தமிழகத்திற்கு ஜெயலலிதா முதல்வராக ஒரு காரணமாக அமைந்து விட்டார்கள் . ஆனால் ஜெயலலிதா முதல்வராகும் தருணத்தில் திரு. திருநாவுக்கரசர் அவர்களை அதிமுகவை விட்டு நீக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜ்ய சபையில் ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுக்கும் தமிழகத் தலைவர்களுள் முக்கியமானவர் திரு.திருநாவுக்கரசர். இன்று ஈழத்தமிழர்களின் படுகொலையையும், அவர்கள் மீதான மனித உரிமை மீறலையும் திட்டமிட்டு நிறைவேற்றிவிட்டு, அதாவது இதை நிகழ்த்த சிங்கள அரசுக்கு எல்லா வகையிலும் உடந்தையாய் இருந்து உதவிகள் செய்துவிட்டு, மூன்று இலட்சம் ஈழத் தமிழர்களை முள்கம்பி வேலிக்குள் அடைத்து வைத்து, வீடு,வாசல், சொத்து, நில புலன்களை இழந்து நிற்கதியாக நிற்க வைத்து ஒன்றும் தெரியாத பாப்பா மாதிரி வேடிக்கை பார்க்கும் இந்திய தேசிய காங்கிரசில் சேரப்போகிறார் என்கிற செய்தி வேதனை அளித்தாலும், இவரை வைத்து தமிழகத்தில் பிழைப்பு நடத்தத் துடிக்கும் காங்கிரஸ், ஏன் எம் தமிழர்களுக்கு நல்ல பொழுது விடியவிட்டு பிழைப்பை தொடரக்கூடாது அல்லது மாறு வேடம் போட்டு பிழைப்பு நடத்துவதற்கு பதிலாக வேறு ஏதும் செய்து பிழைத்தால் என்ன?

Friday, April 3, 2009

காங்கிரசிடம் திருமாவளவன் வருத்தம் தெரிவித்தாரா?




இலங்கை விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி குறித்தும் மத்திய அரசு குறித்தும் கடுமையாக தாக்கிப் பேசியதற்காக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், தனிப்பட்ட முறையில் வருத்தம் தெரிவித்ததாக தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு கூறியுள்ளார்.இதையடுத்து விடுதலைச் சிறுத்தைகளுடன் சமரசம் ஏற்பட்டுவிட்டதாகவும் அவர் கூறினார்.

நிருபர்களிடம் பேசிய தங்கபாலு, காங்கிரஸ் கட்சி குறித்தும் மத்திய அரசு குறித்தும் இலங்கைப் பிரச்னை தொடர்பாகத் தாக்கிப் பேசியதற்காக திருமாவளவன், தனிப்பட்ட முறையில் வருத்தம் தெரிவித்ததார்.

அந்த சம்பவங்களை மறந்து விடவேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார். அதை ஏற்றுக் கொண்டோம். அந்த கட்சி எங்களுடன் கூட்டணியில் உள்ளது. எனவே, அவர்களை உதாசீனப்படுத்தக் கூடாது. கூட்டணியில் தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளுக்கு இடமில்லை. திருமாவளவனை கூட்டணியில் முழுமையாக ஏற்றுக் கொண்டுள்ளோம். எங்கள் கூட்டணி வெற்றி பெற நாங்கள் அனைவரும் சிறப்பாக பணியாற்றுவோம் என்றார் தங்கபாலு.




கொல்லிமலை குப்பு : ஐயகோ! வாங்க, எல்லாரும் வருசையா நின்னு பண்ணையார் க(வு)ச்சி காரவுக கிட்ட மாப்பு (வருத்தம்) தெரிவிச்சுக்குங்க.


முத்துக்குமாரின் மரண அறிக்கையைப் படிக்க இங்கு சொடுக்கவும்

முத்துக்குமார் -மானமுள்ள தமிழன் பூசிய கரி!












Monday, February 9, 2009

பள்ளம்-உள்ளம்,எகனை-மொகனை, கலைஞர் உருக்கம்

பள்ளம்-உள்ளம்,எகனை-மொகனை, கலைஞர் உருக்கம்

தாங்கொணா வலியுடன் வேதனைப்பட்டு கொண்டிருக்கும் நான் தொலைக்காட்சி செய்திகளில் இலங்கை தமிழர் உரிமைப் போர் குறித்து; நமது தமிழகத்தில் கட்சிகள் இரு பிரிவாக நின்று குரல் கொடுப்பதை கேட்டுக்கொண்டுதான் இருக்கிறேன் என்று கூறியுள்ளார் முதல்வர் கருணாநிதி.

பத்துக்கு மேற்பட்ட டாக்டர்களின் மேற்பார்வையுடன், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டு, தாங்கொணா வலியுடன் வேதனைப்பட்டு கொண்டிருக்கும் நான் தொலைக்காட்சி செய்திகளில் இலங்கை தமிழர் உரிமைப் போர் குறித்து; நமது தமிழகத்தில் கட்சிகள் இரு பிரிவாக நின்று குரல் கொடுப்பதை கேட்டுக்கொண்டுதான் இருக்கிறேன்.

அந்த பேரணிகளிலும், கூட்டங்களிலும் நானும் கலந்துகொள்ள முடியாமல் உடல் நலிவுக்கு ஆளாகியிருக்கிறேனே என்ற கவலை என்னை வாட்டுவதை விட; நான் 2 நாளைக்கு முன்பு; ``ஒன்றுபட்டால் உண்டு வாழ்வே!'' என்ற தலைப்பில் எல்லா கட்சிகளிலும் உள்ள உடன்பிறப்புகளுக்கும் விடுவித்த வேண்டுகோளை அலட்சியப்படுத்தியது மட்டுமல்ல; பிறிதோர் அணியின் கூட்டங்களில் பேசியோரும், பேட்டி கொடுத்தோரும் என்னை மிக இழிவுபடுத்தித் தூற்றியிருக்கிறார்கள்.அதனால் எனக்கு அணுவளவு வருத்தமும் இல்லை. அவர்கள் பேசுவது அவர்கள் மனச்சாட்சிக்கே சரியென்று பட்டால் அதில் எனக்கு மகிழ்ச்சி தான்.என்னையும், இலங்கை தமிழர் நல உரிமைப் பேரவையில் உள்ள பல்வேறு கட்சிகளின் முன்னணியினரையும்; இப்படி ஒரு சிலர் தூற்றுகிறார்கள், மேடையில் நின்று நமது அணுகுமுறையை அசிங்கப்படுத்துகிறார்கள் என்பதற்காக, இந்தப் பேரவையில் உள்ள யாரும் அவர்களுக்கு பதில் சொல்லத் தேவையில்லை; பதில் சொல்ல வேண்டாம் என்றும் மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன்.எதையும் தாங்கும் இதயம் வேண்டும் - அண்ணாவின் அறிவுரை இது! இன்றைய நிலையில் என் உடல் தாங்குகிறதோ - இல்லையோ; உள்ளம் தாங்கித் தானே ஆக வேண்டும் - இலங்கை தமிழர் வாழ்வில் பள்ளம் ஏற்படாமலிருக்க என்று கூறியுள்ளார் கருணாநிதி.

இதற்கிடையே திமுக அமைத்த பேரவையில் சட்டசபை காங்கிரஸ் தலைவர் சுதர்சனம் கலந்து கொண்டார். இந்தப் பேரவையில் காங்கிரசும் இடம்பெறும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு அறிவித்திருக்கிறார். பேரவையின் தலைவர் மானமிகு கி.வீரமணி என்பது குறிப்பிடத்தக்கது.

வட மொழி - தமிழ் மொழி

பின் நவீனத்துவம் - பின் புதுமையியல்

அகங்காரம் - செருக்கு,இறுமாப்பு,முனைப்பு,யானெனல்

அகடவிகடம் - குறும்பு,மாற்று,மாறுபட்டது

அகதி - அறவை,வறியன்,எதிலி,புகலிலான்,யாருமற்றவன்,ஏழை

அகந்தை - இறுமாப்பு,செருக்கு

அகம் - உள்ளே,உயிர்,நான்,மனம்,மனநிலை,எண்ணம்

அகம்பாவம் - தற்பெருமை,செருக்கு

அகராதி - அகரமுதலி,அகரவரிசை,அகரநிரல்,அகரமுதல்

அகிம்சை - இன்னா செய்யாமை,கொல்லாமை

அஹிம்சை - இன்னா செய்யாமை,கொல்லாமை

அகோரம் - அழகின்மை,கொடுமை,நடுக்கம்

அக்கணம் - அப்பொழுது,அந்நொடி

அக்கரம் - எழுத்து

அட்சரம் - அழிவில்லாதது

அக்கியாணி - அறிவிலான்

அஞ்ஞானி - புல்லறிவாளன்

அக்கிரகாரம் - பார்ப்பனச் சேரி

அக்கிரமம் - ஒழுன்கின்மை,முறைகேடு

அக்கிராசனம் - முதலிருக்கை,தலைமை

அக்கினி,அக்நி - நெருப்பு,தீ,அனல்,எரி

அங்கப்பிரதட்சணம் - உடல் வலமுருளல், வலம் புரளல்

அங்கீகாரம்,அங்கீகரணம் - உடன்,செப்பு

அங்குலம் - விறக்கட்டை,விரலளவு

அசத்தை,அசத்தியம் - பொய்

அசரம்- அசைவில்லாதது,இயங்காதது,நிலையியல்

அசரீரி - வானொலி,உருவற்றது

அசித்து - பயனின்மை

அஜீரணம்,அசீரணம்- செரியாமை,பசியின்மை,அழிவுபடாமை

அசுத்தம் - அழுக்கு,துப்புரவின்மை,தூய்மையின்மை

அசேதனம் - அறிவில்லாதது,அறிவிலி,அறிவில் பொருள்

அசெளரியம் - நலமின்மை,இடைஞ்சல்

அஞ்சலி - கும்பிடல்,வணக்கம்

அஞ்சனம் - மை,கறுப்பு,இருள்

அஞ்சிட்டம் - கதிரவன்

அஞ்ஞாதம் - மறைவு,அறியப்படாதது

அஞ்ஞாத வாசஸ்தலம் - மறைந்துறைவிடம்

அட்சயப் பாத்திரம் - திருவோடு,ஏற்போடு,அள்ள அள்ளக் குறையாதது

அட்டதிக்கு பாலகர் - எண்புறக்காவலர்

அட்டபந்தனம் - எண்புறக்கட்டு

அண்டம் - முட்டை,உலகம்,வித்து,மூலம்

அதமம் - கீழ்மை,கடைத்திரம்

அதர்மம்,அதருமம் - தீவினை,அறமின்மை,மறம்

அதிகப்பிரசங்கம் - மிகுபேச்சு,தன் மேம்பாட்டுரை,மற்றொன்று விரித்தல்

அதிகாரி - அலுவலர்,தலைவன்,முதல்வன்,உடையவன்

அதிகாலம் - விடியற்காலம்

அதிகாலை - விடியற்காலம்,புலரிக்காலை

அதிஷ்டவசம் - நல்வினைப்பயன், நல்வினை வயம்

அநந்தகோடி - எண்ணத்தொலையாதன

அநந்தம் - அளவின்மை,முடிவில்லது

அநாதை - யாருமற்றவன்,தாய்தந்தையிலான்

அநித்தம்,அநித்தியம் - அழிவு,நிலையற்றது,நிலையாமை

அநீதி - முறைகேடு

அநுக்கிரகம் - அருளிரக்கம்,அருள்

அநுசரணை - சார்பு,சார்பு நிலை

அநுசிதம் - பொய்,தகாதது

அனுபவம் - பழக்கம்,வழக்கம்,நுகர்ச்சி

அனுமினம் - ஐயம்,வழியளவை,கருதலளவை

அனுமானப் புரமானம் - கருதலளவை

அநேகர் - பலர்

அந்தகன் - அழிப்போன்,குருடன்

அந்தகாரம் - இருள்,அறியாமை

அந்தக்கரணங்கள் - அகக்கருவிகள்

அந்தஸ்து - நிலைமை,ஒழுங்கு,நிலை

அந்தரம் - வான்வெளி,இடைவெளி,துணையின்மை,காலம்

அந்தி - முடிவு,மாலைக்காலம்

அந்திய கிரியை - இறுதிச் சடங்கு

அந்நியர் - பிறர்,அயலார்

அந்நியோந்நியம் - நெருக்கம்,ஒற்றுமை,ஒருவொருக்கொருவர்

அபயம் - அடைக்கலம்,அச்சமின்மை,புகலிடம்,அஞ்சேலெனல்

அபாயம் - பேரிடர்,அழிவு,கேடு,துன்பம்,இடுக்கண்,இக்கட்டு

அபாரம் - சிறப்பு,அளவின்மை,கேடு

அபிதானம் - பெயர்

அபிநயம் - நடிப்பு,கூத்து,கைமைய்காட்டல்,உள்ளக் குறிகாட்டல்

அபிப்பிராயம் - நோக்கம்,எண்ணம்,உட்கருத்து,உள்ளப்போக்கு

அபிமானம் - பற்று,நேயம்,செருக்கு

அபூர்வம் - அரிது,அருமை,அரிய பொருள்

அபேச்சை -அவா,விருப்பம்

அபேதம் - ஒற்றுமை,வேற்றுமையின்மை,வேறன்மை

அப்பியாசம் -பழக்கம்,பயிற்சி

அப்பிரதட்சிணம் - இடப்புறச் சுற்று, இடப்பக்கச் சுற்று

அமரத்துவம் - அழிவின்மை

அமலன் - துயோன்,கடவுள்,வாலறிவன்

அந்நியர் - பிறர்,அயலார்

அதிகம் - மிகுதி,அளவின்மை

அமிர்தம்,அமிருதம் - இனிமை,அருமருந்து,சாவா மருந்து,அழிவினமை

அமச்ம் - வகை,பங்கு,காலம்,எண்,அன்னப்புள்

அம்பாரம் - குவியல்

அயோக்கியம் - தகுதியினமை,தகாதது

அயோக்க்கியன் - தகுதியற்றவன்,தகவிலான்,கெட்டவன்

அரணியம் - காடு

அருச்சனை,அர்ச்சனை - வழிபாடு, பூ வழிபாடு,மலர் வழிபாடு

அருத்தம்,அர்த்தம் -பொருள்,பாதி

அருவம் - உருவின்மை,அழகின்மை

அர்த்தநாசம் - பேரழிவு,பொருளழிவு

அர்ப்பணம் - உரிமை கொடுத்தல், ஒப்புவித்தல், நீரோடு கொடுத்தல்

அலங்காரம் - அழகு,ஒப்பனை,அணி,புனைவு

அலச்சியம் - பாராமுகம்,பொருட்படுத்தாமை,கருத்தின்மை

அவகீர்த்தி - இழிவு,புகழின்மை

அவக்கியாதி - வசை,இகழ்ச்சி

அவசரம் - விரைவு,பரபரப்பு,சுருக்கு,பதைப்பு

அவசியம் - முதன்மை,கட்டாயம்,இன்றியமையாமை

அவதரித்தல் - பிறத்தல்

அவதாரம் - பிறப்பு,இறங்குகை

அவதானம் - எச்சரிக்கை,ஒழிவு,நினைவு,விரித்தல்,மறப்பின்மை

அவநம்பிக்கை - நம்ப்பிக்கைக்குறை

அவமரியாதை - முறைதவறல்,வணக்கமின்மை,தீயமுறை

அவமானம் - மானக்கேடு,இழிவு,குறைவு,இளிவரவு

அவயவம்,அவையவம் - உறுப்பு

அவலன் - உடற்குறையன்,வீணன்

அவசு,ஹவிசு - தூய உணவு,சோறு,நெய்,

அற்பம்,அல்பம் - சிறுமை,அணு,புன்மை,இழிவு

அனங்கன் - உடலிலான்,கடவுள்,காமவேள்

அனாதி - கடவுள்,தனியன்,பழமை,தொன்மை

அனுதாபம் - இரக்கம்

அனுபவம் - பழக்கம்,வழக்கம்,அழுந்தியறிதல்,பட்டறிவு

அனுமானம் - உய்த்துணர்தல்,கருதல்ளவை,வழியளவை

அனேகம் - பல,எல்லாம்

அன்னதானம் - சோற்றறம்,சோற்றுக்கொடை,உணாக்கொடை

அன்னம் - சோறு,உணவு,அடிசில்

அன்னியன் - பிறர்,அயலார்

அன்னியோன்னியம் - ஒற்றுமை,நெருக்கம்,ஒருவர்க்கொருவர்

ஆகம் -உடல்,மார்பு

ஆகரு(ர்)ஷண சக்தி - இழுப்பாற்றல்,இழுவழி,சேர்வழி

ஆகாசம்,ஆகாயம் - விண்,வெளி,வான்,விசும்பு,வர்னம்

ஆகாய விமானம் - வான ஊர்தி

ஆகாரம் - உணவு,அடிசில்,உடம்பு,வடிவு

ஆக்கியாபித்தல்,ஆஞ்ஞாபித்தல் - கட்டளையிடல்

ஆக்கிரமித்தல் - வலிந்து கவர்தல்,வலிமை காட்டல்

ஆட்சேபம் - மறுமொழி,மறுத்துக்கூறல்,தடைமொழி

ஆங்காரம் - இறுமாப்பு,செருக்கு,தருக்கு

ஆச சங்கை -ஐயம்

ஆசாபாசம் -அன்பு,பற்று,அவா

ஆசாரம் - ஒழுக்கம்,வழக்கம்,நன்னடை,வழிபாடு,துப்புரவு

ஆசியம்,ஹாசியம் - எள்ளல்,நகை,சிரிப்பு

ஆசீர்வாதம் - வாழ்த்துரை

ஆசுவாசம் - இளைப்பாறுகை

ஆசை - விருப்பம்,அவா,பற்று,வேட்கை,விழைவு

ஆச்சரியம் - புதுமை,வியப்பு,இறும்பூது

ஆ(ச்)சிரமம் - இலைக்குடில்,பாழி,முனிவருறயுள்

ஆஸ்திகம் - கடவுளுண்டெனுங்கொள்கை

ஆஸ்பத்திரி - மருத்துவச்சாலை

ஆஞ்ஞாபித்தல் -கட்டளையிடல்

ஆஞ்ஞை -ஆணை,கட்டளை

ஆடம்பரம் - ஆரவாரம்,பகட்டு

ஆட்சேபம்,ஆட்சேபனம் - தடைமொழி,மறுமொழி,எதிர்மொழி,மறுப்பு

ஆதங்கம் - ஆற்றாமை,அச்சம்,நோய்

அந்நியர் - பிறர்,அயலார்

ஆதவ(ப)ன் - பகலோன்,கதிரோன்

ஆதரவு - துணை,உதவி,சார்பு,பற்றுக்கொடு

ஆதி - முதல்,பழமை,அடி,தொடக்கம்,காரணம்,எழுவாய்,கடவுள்

ஆப்தம்,ஆத்தம் - அன்பு,நட்பு

ஆத்தானம்,ஆஸ்தானம் - நகரவாயில்,அறமன்றம்,கொடிமுடிவாயில்

ஆத்திரம்,ஆத்திரியம்,ஆத்திரவம் - உளக்கொதிப்பு,விரைவு,பரபரப்பு

ஆத்துமா,ஆன்மா - உயிர்

ஆந்ந்தம் - இன்பம்

ஆபத்து -இடர்,துன்பம்,இக்கெட்டு,ஊறுபாடு,இடுக்கண்

ஆபரணம் - அணிகலம்,இழை,நகை,அணி,பூண்

ஆபாசம் - அருவருப்பு,சிதைவு,கெடுதல்,பொய்,அளவைப்பொலி

அபூர்வம் - வினைப்பயன்

ஆமோதித்தல் - உடன்படல்,வழிமொழிதல்,மகிழ்தல்

ஆயக்கட்டு(துளுவம்) - மொத்த நஞ்சை நிலம்,களப்புரவு

ஆயத்தம்(இந்தி) - முயற்சி,எத்தனம்,முன்னேற்பாடு

ஆயா(போர்ச்சுக்கீஸ்) - செவலித்தாய்,கைத்தாய்

ஆயாசம்,ஆயாஸம் - களைப்பு,இளைப்பு,சோர்வு,அயர்வு,மயக்கம்

ஆயுசு,ஆயுள் - வாழ்நாள்,ஆண்டு

ஆயுதம் - கருவு,படைக்கலம்,படை,வாள்

ஆரணியம்,ஆரண்ணியம் - காடு

ஆரம்,ஹாரம் - பூமாலை,தொடையல்

ஆரம்பம் - தொடக்கம்

ஆரம்பித்தல் - தொடங்கல்

ஆராதனம் - வணக்கம்,மகிழ்வித்தல்

ஆரோகம்,ஆரோபம்,ஆரோக்கியஸ்நானம் - நல முழுக்கு,நோய் தீர்ந்தபின் முழுகல்

ஆரோக்கியம் - நலம்,நோயின்மை

ஆரோபணம்- நாட்டுதல்,ஏற்றுதல்

ஆரோபித்தல் - ஏற்றுதல்

ஆர்ச்சிதம் - தேட்டம்,தேடிய பொருள்

ஆர்மோனியம் - இசைக்கருவி

ஆர்வம் - அன்பு,விருப்பம்

ஆலகண்டண் - சிவன்,நஞ்சுமிடற்றன்,கறைமிடற்றன்

ஆலகம்- நெல்லிமரம்

ஆலம் - நஞ்சு

ஆலயம் - கோயில்

ஆலாபம்,ஆலாபனம் - அலப்பு,பேச்சு,உரையாடல்

ஆலோசனை - சூழ்தல்,சூழ்ச்சி,ஓர்வு,எண்ணம்,ஆராய்ச்சி

ஆவசியம் - கட்டாயம்,முதன்மை,இன்றியமையாமை

ஆவத்து,ஆபத்து - இக்கெட்டு,இடர்,பொல்லாங்கு

ஆவர்த்தி,ஆவருத்தம்,ஆவிருத்தி - தடவை,வரிசை,சுற்று,வழக்கம்

ஆவாகனம் - அழைத்தல்,உட்புகல்

ஆனந்தபரவசம் - இன்பக்களிப்பு,பேரின்பக்களிப்பு

ஆனந்தம் - இன்பம்,பேரின்பம்

ஆன்மா - உயிர்

இகம் - இவ்வுலகம்,இவ்விடம்,இப்பிறப்பு

இங்கிதம் - இனிமை,அடையாளம்,கருத்து,இடம் பொருள்

இச்சகம் - முகமன்

இச்சை - விருப்பம்,அவா,விழைவு,வேட்கை

இடபம்,ரிஷபம் - எருது,காளை,ஏறு,விடை

இட்டசித்தி - விருப்பப்பேறு

இதம்,ஹிதம் - இனிமை,நன்மை,அன்பு,அறம்

இதயம்,இதையம்,ஹிருதயம் - நெஞ்சம்,உள்ளம்

இதரம் - வேறு,இயல்,அழிவு,பகைமை

இதிகாசம் - பண்டை வரலாறு,பழங்கதை

இந்திர ஜாலம் - இமயவர்கோன்,வானவர் தலைவன்

இந்து - நிலா,திங்கள்,அம்புலி

இமாலயம்,ஹிமாலயம் - பனிமலை

இரகசியம் - மறைபொருள்,மறை,அற்றம்

இராசாபாசம் - அருவருப்பு,ஒழுங்கின்மை

இரசாயனம் - பொருளியைபு

இரட்சகம் - பாதுகாப்பு,மீட்பு

இரட்சை - காப்பு

இரணம்,ரணம் - புண்

இரதம்,ரதம் - தேர்

இரத்தம் - குருதி,செந்நீர்

இரத்தினம்,ரத்தினம் - மாமணி,செம்மணி

இரம்பம்,ரம்பம் - ஈர்வாள்

இராகம்,ராகம் - இசை,பண்,அவா,விருப்பு

இராகு - கருங்கோள்

இராக்கதர் - அரக்கர்

இராசசூயம் - அரசர் வேள்வி

இராசா - அரையன்,மன்னன்,அரசன்

இராச்சியம் - நாடு,அரசியல்

இராத்திரி - இரவு,கங்குல்

இருஷி,இருடி - முனிவன்,தவசி,துறவி

இதய கமலம் - நெஞ்சத்தாமரை

இருது - பருவம்,மகளிர் முதற்பூப்பு

இரேகை - வரி,எழுத்து,கையிறை,நிறை,தொடர்

இலகிரி,லகிரி,லாகிரி - வெறி,மயக்கம்

இலகு,லகு - எளிது,நொய்மை,நுண்மை,ஈரம்,பலா மரம்

இலங்கணம் - பட்டினி

இலஞ்சம் - கைக்கூலி,கையூட்டு,கையுறை

இலட்சணம்,லட்சணம் - அழகு,பார்வை

இலயித்தல் - ஒடுங்குதல்,சேர்ந்தொன்றித்தல்

இலெளகீகம்,இலவுகீகம் - உலகியல்,உலகப்போக்கு

இலாஞ்சனம்,இலாஞ்சனை - புகழ்,அடியாளம்,கறை

இலாபம்,லாபம் - ஊதியம்,மிச்சம்,பேறு

இலீலை,லீலை - விளையாட்டு

யுகம்,உகம் - உலக முடிவு,இரண்டு

உக்கிராணம் -களஞ்சியம்,சரக்கறை

உஷ்ணம் - வெப்பம்,சூடு

உசிதம் - உயர்வு,சிறப்பு,மேன்மை,தகுதி,ஒழுங்கு

உசிதன் - தக்கோன்

உச்சம் - உயர்ச்சி,சிறப்பு

உச்சரித்தல் - சொல்லுதல்,ஒலித்தல்,ஓதல்

உச்சரிப்பு - எழுத்தோசை

உச்சாட்டியம் - பேய கற்றல்,ஒட்டுதல்

உச்சி - மேடு,முகடு

உச்சிக்காலம்,உச்சிச்சமயம் - நண் பகல், நடுப் பகல்

உதயன் - பகலோன்

உதாரணம்,திருட்டாந்தம் - எடுத்துக்காட்டு,சான்று

உத்தமம் - உண்மை,மேன்மை

உத்தரியம்,உத்தரீயம் - மேலாடை

உத்தரவு - கட்டளை

உத்தி,யுத்தி - அறிவு,இணக்கம்,இசைவு,சூழ்ச்சி,சொல்

உத்தேசம்,உத்தேகம் - கருத்து,மதிப்பு,ஏறக்குறைய

உபகரணம் - கொடுத்தல்,உதபிபொருள்கள்,கருவி,துணைக்காரணம்

உபதேசம் - அருண்மொழி,அறிவுரை

உபயம் - உதவி,நன்கொடை,இரண்டு

உபாசநம்,உபாசநை,உபாசனை - வழிபாடு,வணக்கம்

உபாதி,உபாதை - நோய்,துன்பம்,வருத்தம்

உபாத்தியாயன் - கணக்காயன்,ஆசிரியன்,கற்பிப்போன்

உபாயம் - சூழ்ச்சி,நொய்மை,எளிது,சிறிது

உயுக்கம்,உயுத்தம்,யுத்தம் - போர்,தகுதி

உருசி,ருசி - சுவை

உருத்திராக்கம் - சிவமணி,சுக்குமணி

உரூபம்,ரூபம் - உருவம்,வடிவம்

உரொக்கம்,ரொக்கம் - கைப்பணம்,இருப்பு,கையிருப்பு

உரோமம்,ரோமம் - மயிர்,முடி,குஞ்சி

உல்லாசம் - மகிழ்ச்சி,விளையாட்டு,களிப்பு,உள்ளக்களிப்பு

உவதி,யுவதி, - மங்கை,பதினாறாண்டுப் பெண்

ஊகம் - கருதல்,ஓர்தல்,கருத்து,நினைவு

ஊர்ச்சிதம்,ஊர்ஜ்ஜிதம் - உட்பொருளுணர்தல், நிலைப்படுதல்,உறுதி,கருங்குரங்கு

எசமானன்,எஜமான் - தலைவன்,முதல்வன்,முதலாளி

எந்திரம் - பொறி

எமன் - கூற்றுவன்,மறலி

ஏகதேசம் - ஒருபால்,ஒருபுடை,சிறுபான்மை

ஏகம் - ஒன்று,தனிமை

ஏகாந்தம் - தனிமை,ஒரு முடிவு

ஏகோபித்தல் - ஒன்றுபடுதல்

ஏடணை,ஏஷணை - விருப்பம்

ஐது,ஹேது - காரணம்

ஏக்கம்,ஐக்கியம் - ஒற்றுமை

ஐஸ்வர்யம்,ஐச்வரியம் - செல்வம்,பொருள்,திரு

ஐதீகம்,ஐதிகம் - உலகுரை

ஐம் பூதம்,பஞ்ச பூதம் - ஐந்து முதற்பொருள்

ஓமம்,ஹோமம் - வேள்வி

ஒளடதம்,ஒளஷதம்- மருந்து

களோகம் - வான் வட்டம்,வளி மண்டலம்

கடகம் - கைவளை,வளையம்

கடம் - கடம்,யானைக்கதுப்பு

கடாட்சித்தல் - அருளல்

கடாரம் - கொப்பரை,தேங்காய்

கடிகாரம் - நாழிகை வட்டில்,பொழுது காட்டுங்கருவி

கடிகை - நாழிகை,தாழ்க்கோல்

கடினசித்தம் - வன்னெஞ்சம்

கடினம் - வன்மை,கடுமை,வருத்தம்,கொடுமை

கடூரம்,கொடூரம் - கொடுமை

கட்டம்,கஷ்டம் - துன்பம்,வருத்தம்

கணம்,ஹணம் - குழாம்,கூட்டம்,தொகுதி,நொடிப்பொழுது

கணி - கோள் நூல், கோல் நூல் வல்லான்

கணிகை - பொதுமகள்

கணிசம் - அளவு,மேம்பாடு

கணிதம் - கணக்கு

கண்டம் - நிலப்பிரிவு,துண்டு,கட்டி,மிடறு,கழுத்து

கண்திட்டி,கண்திருஷ்டி - கண்ணேறு

கதம்பகம்,கதம்பம் - கூட்டம்,மணப்பொருட் கூட்டு,சேர்ந்தது,இணைத்தது

கதலி - வாழை

கதி - நடை,செலவு,வழி,புகலிடம்,பற்றுக்கோடு,நிலை

கனகம்,கநகம் - பொன்

கனவான்,கநவான் - பெரியோன்,பெருமையாளன்,பெருந்தகை

கனிஷ்டை,கநிஷ்டை - பின்னோள்,தங்கை

கன்னிகை,கந்நிகை - மணமாகாதவள்,இளம்பெண்

கந்மம்,கருமம் - தொழில்,வினை

கபடம்,கவடம்,கபடு - கரவு,படிறு,வஞ்சகம்,மோசம்,சூது,ஒளிப்பு

கபாலம் - தலையோடு,மண்டையோடு

கபோதி - குருடன்

கப்பம் - இறை

கமண்டலம் - நீர்க்குடுவை

கமலம் - தாமரை,நீர்

கம்பீரம் - உயர்தோற்றம்,பெருமை,ஆழம்,செருக்கு

கயம்,ஹயம் - குளம்,ஆழம்,யானை

கரகம் - வட்டில்,நீர்க்குடுவை

கரகோசம்,கரகோஷம் - கைதட்டுதல்

கரணம் - கருவி,ஐம்பொறி

கரம் - கை

கருச் சித்தல் - முழங்கல்,இரைதல்

கருணை - அருள்,இரக்கம்

கர்த்தா,கருத்தா - தலைவன்,வினைமுதல்,ஆக்கியோன்,நூலாசிரியன்,முதல்வன்,கடவுள்

கர்ப்பவதி - சூலி

கர்ப்பாசயம் - கருப்பை

கர்வம் - செருக்கு,இறுமாப்பு

கலாபம்,கலபம் - மயில்,மயிற்றோகை

கலி - வறுமை,துன்பம்

கலியாணம் - மனம்,மன்றல்,பொன்,மகிழ்ச்சி

கவளீகரித்தல்,கபளீகரம்,கபளீகரித்தல் - முற்றிலும் விழுங்குதல்,விழுங்குதல்

கவனம் - கருத்து நோக்கம்,உன்னித்தல்

கவாத்து - படைக்கலப் பயிற்சி,வெட்டி விடுதல்

கவி - செய்யுள்,புலவன்,பாட்டு

கவுளி,கெளளி - பல்லி

களேபரம் - குழப்பம்,உடல்,பிணம்

கற்பம் - ஊழிக்காலம்,நெடுவாழ்க்கை மருந்து

கனம் - சுமை,பளு,பளுவு

காசம் - ஈளை,ஈளைநோய்,இருமல் நோய்

கசாயம்,கஷாயம் - காவி

காஞ்சிரம் - எட்டி மரம்

காட்டம்,காஷ்டம் - விறகு,வெகுளி

காதகன் - கொலையாளி

காயசித்தி - நீடுவாழ்ப் பேறு

காயம் - உடல்,யாக்கை,வான்

காரிய கர்த்தா - வினைமுதல்வன்

காரியதரிசி - அமைச்சன்,செயலாளன்

கலாட்சேபம் - பொழுதுபோக்கல்,நாட்கழித்தல்,வாழ்க்கை

கால நியமம் - காலமுறை,காலக்கடன்,கால்,ஒழுங்கு

கிஸ்தி - திறை,வரி

கிரகணம்,கிராணம் - பற்றுதல்,பிடித்தல்

கிரகஸ்தம் - இல்லற நிலை

கிரகம் - வீடு,கோள்,பற்றுதல்,பிடிப்பு

கிரணம் - ஒளி,கதிர்

கிரந்தம் - நூல்,எழுத்து

கிரமம் - ஒழுங்கு,முறைமை

கிரயம் - விலை

கிராதன் - குறவன்,வேட்டுவன்

கிரி - மலை,பன்றி

கிரிகை - தொழில்,செயல்,வினை,சடங்கு

கிரிமி,கிருமி - உயிரி,பூச்சி,புழு

கிரீடம் - முடி

கிருஷி - பயிர்,உழவு,பயிர் செய்கை

கிலம் - கழிவு,அழிவு,சிறுமை

கிலேசம் - அச்சம்,கவலை,துன்பம்

கீதம் - இசை,பாட்டு,பாடல்,இசைப்பாட்டு

கீர்த்தனம்,கீர்த்தனை - புகழ்ச்சி,புகழ்ப்பா

கீலகம் - ஆணி,பொருத்து

குஞ்சரம் - யானை

குஷ்டம் - தொழு நோய்,பெரு நோய்

குணஷ்டை - தொல்லை,துன்பம்

குதர்க்கம் - அழிவழக்கு

குதூகலம்,குதுகலம் - பெருங்களிப்பு,பெருமகிழ்வு

குபேரன் - பெருஞ்செல்வன்,செல்வக்கடவுள்

குமரி,குமாரி - நங்கை,மணமாகாப்பெண்,புதல்வி,மகள்

கும்பம் - குடம்

குருகடாட்சம் - ஆசிரியனருட்பார்வை

குரோதம் - உட்பகை

குலாலன் - குயவன்

குலிசம் - வேற்படை

குன்மம் - சூலை,வயிற்று வலி

கேதம் - துன்பம்,இடர்,குற்றம்

கேவலம் - சிறுமை,தனிமை

கோகிலம் - குயில்

கோடம்,கோஷம்,கோஷ்டம் - முழக்கம்,பேரோசை

கோஷ்டி - கூட்டம்

கோடி - நூறு நூறாயிரம்

கோதண்டம் - வில்

கோளகை,கோளம் - உருண்டை,வட்டம்

கெளரவம் - மேன்மை,பெருமை

சக - கூட,உடன்

சகசம்,ஸகஸம் - இயற்கை,ஒற்றுமை

சகஸ்ரநாமம் - ஆயிரந்திருமொழி,ஆயிரந்திருப்பெயர்

சகமார்க்கம் - தோழமை நெறி

சகலம் - எல்லாம்

சகவாசம் - கூடவிருத்தல்,உடனுரைதல்,பழக்கம்,சேர்க்கை,நட்பு

சகா - தோழன்,துணை

சகாப்தம் - ஆண்டு,நூறாண்டு

சகாயம் - நயம்,நன்மை,மலிவு,பயன்,உதவி,துணை

சகி,சகீ - தோழி

சகிதம் - உடன்

சகுணம் - குணத்தோடு கூடியது

சகுந்தம் - கழுகு,பறவை

சகுனம் - குறி

சகோதரம் - உடன்பிறப்பு

சகோதரி - உடன்பிறந்தாள்

சக்கரம் - உருளை,வட்டம்

சக்தி - ஆற்றல்,வல்லமை,வலி

சங்கடம்,சங்கட்டம் - இக்கெட்டு,நெருக்கடி,இடர்,கண்மூடுதல்

சங்கிதை - தொகுதி,வரலாறு

சடுதி,சடிதி - விரைவு

சஷ்டியப்த பூர்த்தி - அறுபதாமாண்டு நிறைவு

சண்டப்பிரசண்டம் - மிகு விரைவு

சண்டமாருதம் - பெருங்காற்று,கடியகாற்று,புயற்காற்று

சண்டாளம் - தீமை,புலைத்தன்மை,நம்பிக்கை கேடு

சண்டாளர் - தீவினையாளர்,இழிஞர்

சண்டித்தனம் - முருட்டுத்தன்மை,முரட்டுத்தன்மை

சதகோடி - நூறு கோடி

சதசு - அவை

சதம் - நூறு நிலை

சதானந்தம் - இடையறா வின்பம்

சதி - இறைவி,அழிவு,வஞ்சனை,சூழ்ச்சி

சந்தகம் - எப்பொழுதும்

சந்தானம் - வழி,வழித்தொடர்பு

சந்தித்தல் - எதிர்படுதல்,கூடுதல்

சந்திரலோகம் - திங்கள் உலகு,அம்புலியுலகம்

சந்திரன் - பிறை,கலையோன்,இரவோன்,அலவன்,அல்லோன்

சந்து - முடுக்கு,இயங்கும் உயிர்,தூது,பிளப்பு,பொருத்து

சந்துட்டம்,சந்துஷ்டி,சந்தோஷம் - மகிழ்ச்சி

சந்தேகம் - ஐயம்,ஐயுறவு

சந்தோஷம் - மகிழ்ச்சி,உவகை,களிப்பு

சன்னதி,சந்நதி,சந்நிதானம் - திருமுன்

சந்நியாசம் - துறவு,துறவறம்

சபதம் - ஆணை,உறுதிமொழி,வஞ்சினம்

சபம்,ஜெபம் - உருவேற்றல்

சபலம் - நிறைவேறல்,வெற்றி,நடுக்கம்,ஏக்கம்,இச்சை,அவா

சபா,சபை - அவை,மன்றம்,கழகம்,அரங்கம்

சபித்தல் - தீமொழி கூறல்,சினந்துரைத்தல்

சமஷ்டி - தொகுதி,எல்லாம்

சமதை - ஒப்பு

சமர்த்தன்,சமத்தன் - வல்லான்,வல்லவன்,திறமையாளன்

சமஸ்தானம்,சமத்தானம் - அரசவை,தலை நகர்

சமம் - இணை,ஈடு,மட்டம்,போர்,நடு,ஓர்மை

சமரச தத்துவம் - பொதுநிலையுண்மை

சமரசம் - பொது,வேறுபாடின்மை,ஒற்றுமை

சமர்ப்பணம் - ஒப்பித்தல்,உயர்ந்தோர்க்குக் கொடுத்தல்

சமாதானம் - அமைதி,இணக்கம்,தணிவு,உடன்பாடு,தக்கவிடை

சமாதி - அமைதி,பிணக்குழி,பேசாதிருத்தல்,இறப்பு,மரித்தல்

சமாப்தம்,சமாப்தி - முற்றுப்பெற்றது

சமாராதனை - உளநிறைவு

சமி,ஷமி - பொறு

சமிதை - வேள்வி விறகு,உலர்ந்த குச்சி

சமீபம் - அருகு,அணமை,மருங்கு

சமீன்தார்,ஜமீந்தார் - நிலக்காரன்,பெருநிலக்கிழார்

சமுதாயம் - குமுகம்,கூட்டம்

சமுத்திரம் - கடல்

சமை,ஷமை - பொறுமை

சம்சாரம்,சம்ஸாரம் - குடும்பம்,இல்லாள்,இல்லத்தரசி

சம்பத்து - செல்வம்,பொருள்

சம்பந்தம -உறவு,பற்று,இயைபு,சார்பு,தொடர்பு,பொருத்தம்

சம்பிரதாயம் - தொல்வழக்கு,முன்னோர் முறை,பண்டை முறை

சம்பு ரேட்சணம் - தெளித்தல்

சம்பூரணம் - நிறைவு

சம்மதம் - உடன்பாடு,ஒப்புமை,இயைபு

சம்ரஷணை - பாதுகாப்பு

சயம்,ஜெயம் - வெற்றி

சரணம்,சரண் -அடைக்கலம்,வணக்கம்,கால்,திருவடி

சரணாகதி - புகலடைதல்,அடைக்கலம்

சராசரம்,ஜங்கமா - இயங்கியற் பொருள், நிலையியற் பொருள்

சரிதம்,சரிதை,சரித்திரம் - வரலாறு

சரீரம் - உடல்,யாக்கை,மெய்

சருமம்,சர்மம் - தோல்

சர்ப்பம் - பாம்பு

சர்வகலாசாலை -

பல்கழைக் கழகம்

சலதளம்- அரசமரம்

சலதாரை - நீர்க்கால்,நீரோட்டம்,மதகு

சலதோசம் - நீர்க்கோர்வை,தடுமம், நீர்க்கோவை

சல்லாபம் - உரையாடல்

சவம் - பிணம்

சவுகரியம்,செளக்கியம்,செளகரியம் -நலம்

சவுந்தரியம்,செளந்தரியம்,சவுந்தரம் - அழகு

செளபாக்கியம்,சவுபாக்கியம் - செல்வம்

சற்காரியம் - உற்பொருளினின்று தோன்றும் வினை

சற்குணம் - நல்லியல்பு

சனனம்,ஜனனம்,சனிப்பு,சன்மம் - பிறப்பு

சாகசம் - ஆற்றல்,துணிவு,நெருக்கிடை

சாகரம் - கடல்

சாகுபடி - பயிர் செய்தல்

சாகை,ஜாகை(உருது) - தங்குமிடம்

சாக்கிரதை,ஜாக்கிரதை - விழிப்பு,உன்னிப்பு,எச்சரிக்கை